என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    • சேர மன்னர் தனது மகளின் வயிற்றுவலிக்கு மருத்துவரிடம் தீர்வு காண முடியாததால் ஜோதிடரை அணுகினார்.
    • திருமணத்தடை நீங்க கோவிலுக்கு வந்து வழிபடுகின்றனர்.

    நெல்லை மாவட்டம் சேரன்மாதேவியில் தாமிரபரணி ஆற்றங்கரையில் இயற்கை எழில் சூழ்ந்த நெல் வயல்களுக்கு நடுவே அப்பன் வெங்கடாசலபதி கோவில் அமைந்துள்ளது. கோவில்கள் சூழ்ந்த நகரமாக போற்றப்படும் சேரன்மாதேவியில் பழமைவாய்ந்த 9 பெருமாள் கோவில்கள், சிவன் கோவில்கள், அம்மன் கோவில்கள் உள்ளன.

    தல வரலாறு

    அப்பன் வெங்கடாசலபதி கோவில், விஜயநகர பேரரசு ஆட்சியின்போது கட்டப்பட்டது. இக்கோவில் சுவரில் தமிழ், சமஸ்கிருத எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளன. இங்கு அருள்பாலிக்கும் அப்பன் வெங்கடாசலபதியை திருப்பதியில் வீற்றிருக்கும் ஏழுமலையானுக்கு இணையாக வணங்குகின்றனர். பசுமை போர்த்திய வயல்கள், வாழை தோட்டங்களைக் கடந்து இக்கோவிலுக்கு செல்வோருக்கு மன அமைதி, பேரானந்தம் கிடைக்கிறது.

    சேர மன்னர் தனது மகளின் வயிற்றுவலிக்கு மருத்துவரிடம் தீர்வு காண முடியாததால் ஜோதிடரை அணுகினார். ''மகளுக்கு ஏற்பட்ட வயிற்று வலியை தீர்க்க வேண்டும்'' என்று வேண்டினார். அதற்கு ஜோதிடர், ''தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள அப்பன் வெங்கடாசலபதியை வணங்கி, உன் மகளுக்கு மிளகு ரசம் வைத்து கொடு'' என்று கூறினார். அதன்படியே மன்னர், அப்பன் வெங்கடாசலபதியை வணங்கி தனது மகளுக்கு மிளகு ரசம் வைத்து கொடுத்தார். அப்போது, ஆச்சரியப்படும் விதமாக மன்னர் மகள் குணமடைந்தார். எனவே இக்கோவிலில் தயாராகும் மிளகு ரசம் சிறப்பு வாய்ந்தது.

    நோய்களை தீர்க்கும் தலம்

    இங்குள்ள தாமிரபரணி நதியில் நீராடி அப்பன் வெங்கடாசல பதியை தரிசித்தால் தீராத எந்த கொடிய நோயாக இருந்தாலும் நீங்கும். ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சுவாமியை வணங்கி குணம் பெற்றுள்ளனர். அவ்வாறு நன்மை கிடைக்கப் பெற்றவர்கள், நேர்த்திக்கடனாக மிளகு அதிகமாக போட்டு வெண்பொங்கல் தயாரித்து கோவிலில் படைத்து பக்தர்களுக்கு வழங்குகின்றனர்.

    இதேபோன்று திருமணத்தடை நீங்கவும் கோவிலுக்கு வந்து வழிபடுகின்றனர். குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியர்கள் மாதந்தோறும் திருவோண நட்சத்திர தினத்தன்று கோவிலுக்கு வந்து பெருமாளுக்கு பாயசம் படைத்து வழிபட வேண்டும். அவ்வாறு தொடர்ந்து 9 மாதங்கள் கோவிலுக்கு வந்து பாயசம் படைத்து வழிபட்ட பலரும் குழந்தை பாக்கியம் கிடைத்ததாக தெரிவிக்கின்றனர்.

    கல்வெட்டுகள்

    கோவிலில் மூலவர் அப்பன் வெங்கடாசலபதி கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் காட்சி அளிக்கிறார். கோவிலின் தாயார் அலர்மேல் மங்கை மற்றும் பத்மாவதி தாயார், உற்சவர் சீனிவாசன். கோவிலில் சுமார் 60 பழங்கால கல்வெட்டுகள் உள்ளன. அவற்றில் முதன்மையானது கி.பி. 12-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பாண்டிய மன்னர் ஜடாவர்மன் ஆட்சிக்காலத்தைச் சேர்ந்தது. அதில், மன்னர் ஜடாவர்மன் தனது மைத்துனர் ரவிவர்மாவின் ஆலோசனையின்பேரில், கி.பி 1200-ம் ஆண்டு சேரன்மாதேவி என்ற சதுர்வேதி மங்கலத்தின் கிழக்கு கிராமமான கருங்குளப்பற்று நிலத்தை இறைவனுக்கு தினசரி காணிக்கை செலுத்துவதற்கும், இந்த கோவிலில் வேதங்கள் மற்றும் புராணங்களை ஓதுவதற்கும் முற்றிலும் வரி விலக்கு அளித்து உத்தரவிட்டது பொறிக்கப்பட்டு உள்ளது.

     

    கோவில் தோற்றம்

    திருவிழாக்கள்

    கோவிலில் புரட்டாசி பிரம்மோற்சவம், பங்குனி உத்திரம், மாசி மகம், வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, வைகுண்ட ஏகாதசி, சிரவண தீபம் போன்ற விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடும், கருட சேவையும் நடைபெறுகிறது. திருவோண நட்சத்திர தினம் சிறப்பு வாய்ந்ததாக கொண்டாடப்படுகிறது.

    அமைவிடம்

    இக்கோவில், சேரன்மாதேவி - கல்லூர் - நெல்லை சாலையில் ராமசாமி கோவிலுக்கு வடக்கே சுமார் 1 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. வீரவநல்லூரில் இருந்து 6 கி.மீ., நெல்லையில் இருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ளது.

    • பன்னிரு திருமுறைகளில், முதல் 7 திருமுறைகளை 'தேவாரம்' என்று அழைக்கிறோம்.
    • ஏழாம் திருமுறையை சுந்தரமூர்த்தி சுவாமிகள் பாடியிருக்கிறார்கள்.

    சிவபெருமான் மீது பாடப்பெற்ற பன்னிரு திருமுறைகளில், முதல் 7 திருமுறைகளை 'தேவாரம்' என்று அழைக்கிறோம். இதில் முதல் மூன்று திருமுறைகளை திருஞானசம்பந்தரும், நான்காம் திருமுறை முதல் ஆறாம் திருமுறை வரையான பாடல்களை திருநாவுக்கரசரும், ஏழாம் திருமுறையை சுந்தரமூர்த்தி சுவாமிகளும் பாடியிருக்கிறார்கள்.

    தெய்வத்தின் மீது பாடப்பட்ட ஆரம் (பாமாலை) என்பதால் இது 'தேவாரம்' என்று பெயர் பெற்றதாகவும் கூறுவர்.

    இந்த தேவாரப் பாடலில் இருந்து ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்க்கலாம்.

    பாடல்:-

    பாகமும் தேவியை வைத்துக்கொண்டு பைவிரி துத்திப் பரியபேழ்வாய்

    நாகமும் பூண்டநள் ளாறுடைய

    நம்பெரு மான்இது என்கொல் சொல்லாய்

    போகமும் நின்னை மனத்துவைத்துப்

    புண்ணியர் நண்ணும் புணர்வுபூண்ட

    ஆகம்உ டையவர் சேரும்கூடல்

    ஆலவா யின்கண் அமர்ந்தவாறே.

    - திருஞானசம்பந்தர்

    விளக்கம்:-

    ஒரு பாகத்தில் உமாதேவியை வைத்துக் கொண்டு, நஞ்சினையும், அகன்ற படத்தையும், பிளந்த வாயையும் உடைய நாகத்தை அணிகலனாய் பூண்டு, நள்ளாற்றில் வீற்றிருக்கும் பெருமானே! உன்னை மனதில் நினைத்து, இன்பம் அடையும் புண்ணியர்களான அடியவர்கள் விளங்கும் கூடல் ஆலவாயின்கண் விரும்பி தங்குவதற்கு என்ன காரணமோ? சொல்வாயாக!

    • திருப்பதி ஏழுமலையான் சகஸ்ரகலசாபிஷேகம்.
    • மன்னார்குடி ராஜகோபாலசுவாமி புறப்பாடு.

    இந்த வார விசேஷங்கள்

    7-ந் தேதி (செவ்வாய்)

    * கரூர் தான்தோன்றி கல்யாண வேங்கடேசப் பெருமாள் ஊஞ்சலில் காட்சி.

    * திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஆண்டாளுக்கு அலங்கார திருமஞ்சனம்.

    * தேவகோட்டை ரெங்கநாதர் புறப்பாடு.

    * சமநோக்கு நாள்.

    8-ந் தேதி (புதன்)

    * கரூர் தான்தோன்றி கல்யாண வேங்கடேசப் பெருமாள் ஆடும் பல்லக்கில் பவனி.

    * திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் நரசிம்மருக்கு அலங்கார திருமஞ்சனம்.

    * திருவைகுண்டம் கள்ளபிரானுக்கு பால் அபிஷேகம்.

    * திருப்பதி ஏழுமலையான் சகஸ்ரகலசாபிஷேகம்.

    * சமநோக்கு நாள்.

    9-ந் தேதி (வியாழன்)

    * சுவாமிமலை முருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.

    * திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ராமருக்கு அலங்கார திருமஞ்சனம்.

    * திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை.

    * திருப்போரூர் முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம்.

    * கீழ்நோக்கு நாள்.

    10-ந் தேதி (வெள்ளி)

    * சங்கடஹர சதுர்த்தி.

    * சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம்.

    * ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி தங்கப் பல்லக்கில் பவனி.

    * திருமாலிருஞ்சோலை கள்ளழகர் கோவிலில் சுந்தரவல்லி தாயார் புறப்பாடு.

    * திருப்பரங்குன்றம் ஆண்டவர் தங்க மயில் வாகனத்தில் பவனி.

    11-ந் தேதி (சனி)

    * திருக்குற்றாலம் குற்றாலநாதர் புறப்பாடு.

    * திருவரங்கம் நம்பெருமாள், திருவள்ளூர் வீர ராகவப் பெருமாள், மதுரை கூடலழகர் பெருமாள் ஆகிய தலங்களில் அலங்கார திருமஞ்சனம்.

    * மன்னார்குடி ராஜகோபாலசுவாமி புறப்பாடு.

    * மேல்நோக்கு நாள்.

    12-ந் தேதி (ஞாயிறு)

    * சஷ்டி விரதம்.

    * திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஆஞ்சநேயருக்கு அலங்கார திருமஞ்சனம்.

    * பாபநாசம் சிவபெருமான் பவனி.

    * சமநோக்கு நாள்.

    13-ந் தேதி (திங்கள்)

    * சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.

    * கீழ்திருப்பதி கோவிந்த ராஜப் பெருமாள் சன்னிதியில் கருடாழ்வாருக்கு அலங்கார திருமஞ்சனம்.

    * திருத்தணி முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம்.

    * மேல்நோக்கு நாள்.

    • தேவக்கோட்டை ஸ்ரீ ரங்கநாதர் புறப்பாடு.
    • ஆறுமுக மங்கலம் ஸ்ரீ ஆயிரத்தொன்று விநாயகருக்கு காலையில் அபிஷேகம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு புரட்டாசி-21 (செவ்வாய்க்கிழமை)

    பிறை : வளர்பிறை

    திதி : பவுர்ணமி காலை 9.50 மணி வரை பிறகு பிரதமை

    நட்சத்திரம் : ரேவதி பின்னிரவு 3.41 மணி வரை பிறகு அசுவினி

    யோகம் : சித்தயோகம்

    ராகுகாலம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

    எமகண்டம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

    சூலம் : வடக்கு

    நல்ல நேரம் : காலை 8 மணி முதல் 9 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை முருகர் கோவில்களில் அபிஷேகம்

    சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். கரூர் தான்தோன்றிமலை ஸ்ரீ கல்யாண வேங்கடேச சுவாமி ஊஞ்சலில் காட்சி. தேவக்கோட்டை ஸ்ரீ ரங்கநாதர் புறப்பாடு. திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை முருகர் கோவில்களில் அபிஷேகம். சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம். திருநறையூர் ஸ்ரீ சித்தநாதீசுவரர் திருக்கோவிலில் ஸ்ரீ சண்முகருக்கு சத்ரு சம்ஹார அர்ச்சனை.

    ஆறுமுக மங்கலம் ஸ்ரீ ஆயிரத்தொன்று விநாயகருக்கு காலையில் அபிஷேகம். ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் ரங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல். திருநெல்வேலி சமீபம் 3-ம் நவதிருப்பதி செவ்வாய் பகவானுக்குரிய தலமான ஸ்ரீ குமுதவல்லித் தாயார் சமேத வைத்தமாநிதிப் பெருமாள் கோவிலில் திருமஞ்சனம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-முயற்சி

    ரிஷபம்-புகழ்

    மிதுனம்-இன்பம்

    கடகம்-நேர்மை

    சிம்மம்-நற்செய்தி

    கன்னி-நன்மை

    துலாம்- உயர்வு

    விருச்சிகம்-லாபம்

    தனுசு- செலவு

    மகரம்-வெற்றி

    கும்பம்-தாமதம்

    மீனம்-உழைப்பு

    • இன்றைய ராசிபலன்
    • 12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்...

    மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்

    மேஷம்

    முன்னேற்றம் கூடும் நாள். அதிகாரப் பதவியில் உள்ளவர்களின் ஆதரவு உண்டு. தேக நலனில் அக்கறை செலுத்தவும். சில நேரங்களில் நீங்கள் விட்டுக்கொடுத்து போவது நல்லது.

    ரிஷபம்

    யோகமான நாள். பிரியமானவர்களோடு ஏற்பட்ட பிரச்சனை தீரும். அலைச்சலுக்கேற்ற ஆதாயம் உண்டு. குடும்ப அமைதிக்காக வழிபாடுகளை மேற்கொள்வீர்கள்.

    மிதுனம்

    நெருக்கடி நிலை அகலும் நாள். வாய்ப்புகள் வாயில் தேடி வரும். மக்கள் செல்வங்களால் மகிழ்ச்சி கூடும். இழப்புகளை ஈடுசெய்ய எடுத்த முயற்சி வெற்றி பெறும்.

    கடகம்

    ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும் நாள். விலகி சென்றவர்கள் விரும்பி வந்திணைவர். சேமிப்பு கரையாதிருக்க சிக்கனத்தை கடைப்பிடிப்பீர்கள். வீடு மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள்.

    சிம்மம்

    கவலைகள் தீரக் கடவுள் வழிபாட்டை மேற்கொள்ளவேண்டிய நாள். கடன் சுமை அதிகரிக்கும். உறவினர் வழியில் மனக்கசப்பு உருவாகும். வரவைவிடச் செலவு கூடும்.

    கன்னி

    தடைகள் அகலும் நாள். தனவரவு திருப்தி தரும். வியாபார விருத்திக்கு புதிய கூட்டாளிகள் வந்திணைவர். உத்தியோகத்தில் நீடிப்பதா வேண்டாமா என்ற சிந்தனை அதிகரிக்கும்.

    துலாம்

    எதிரிகளின் பலம் கூடும் நாள். எல்லோரையும் அனுசரித்துச்செல்வது நல்லது. நேற்று எடுத்த முடிவை இன்று மாற்றிக்கொள்வீர்கள். வாங்கல், கொடுக்கல்களில் கவனம் தேவை.

    விருச்சிகம்

    வாயிலைத்தேடி வருமானம் வந்து சேரும் நாள். வழிபாடுகளில் மனதை செலுத்துவீர்கள். நேற்றைய கனவு இன்று பலிதமாகும். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர்.

    தனுசு

    செல்வாக்கு உயரும் நாள். வரவு வந்தாலும் செலவு கூடுதலாகும். முக்கியப் பொறுப்பில் இருப்பவர்கள் கவனமுடன் செயல்படுவது நல்லது. பயணங்களில் தாமதம் ஏற்படும்.

    மகரம்

    சந்தோஷம் அதிகரிக்கும் நாள். பணத்திற்காக செய்திருந்த ஏற்பாடுகள் பலன் தரும். கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. பிள்ளைகளின் உத்தியோக முயற்சி கைகூடும்.

    கும்பம்

    நிம்மதி குறையும் நாள். வரவைவிடச் செலவு கூடும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் தொல்லை உண்டு. வீடு கட்ட அல்லது வாங்க செய்த ஏற்பாடு தாமதப்படும்.

    மீனம்

    எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும் நாள். புதிய மனிதர்களின் அறிமுகத்தால் பொருளாதார வளர்ச்சி கூடும். பெற்றோர்களின் பாசமழையில் நனைவீர்கள்.

    • வீட்டில் ஏற்றிய விளக்குகளை மாற்றக்கூடாது என்று சொல்வார்கள்.
    • பழைய விளக்குகளை என்ன செய்யலாம் என்று கேள்விகளும் எழும்.

    ஒவ்வொரு பண்டிகையின் போது விதவிதமான விளக்குகள் விற்பனைக்கு வருகிறது. அவ்வாறு விளக்குகளை பார்க்கும் பெண்களுக்கு நம் வீட்டில் எவ்வளவுதான் விளக்குகள் இருந்தாலும் அதனை வாங்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள்.

    அதன்படி, புதிய விளக்குகளை வாங்கி பூஜை அறையில் வைத்து ஏற்றி வழிபடுவார்கள். இவ்வாறாக செய்வதால் நிறைய விளக்குகள் வீட்டில் இருக்கும். அந்த விளக்குகளை என்ன செய்யலாம் என்று கேள்விகளும் எழும்.

    வீட்டில் ஏற்றிய விளக்குகளை மாற்றக்கூடாது என்று சொல்வார்கள். இதனால் வீட்டில் இருக்கும் பழைய விளக்குகளை என்ன செய்யலாம் என்று யோசிப்பவர்களுக்கு தான் இந்த பதிவு...

    நம் வீட்டில் இருக்கும் பழைய விளக்கைக் கொண்டு வழிபடுவது எவ்வளவு மங்களகரமானது என்பது தெரியுமா?. பழைய விளக்கை கொண்டு வழிபடுவதால் உங்கள் வீட்டின் அமைதியையும் மகிழ்ச்சியையும் அதிகரிக்கும்.



    பழைய விளக்கை கொண்டு மீண்டும் மீண்டும் நாம் பிரார்த்தனை செய்வதால் வீட்டில் உள்ள எதிர்மறை சக்தி படிப்படியாக குறைந்து நேர்மறை ஆற்றலை அதிகரிக்கும். பழைய விளக்கை கொண்டு உங்கள் பூஜை அறையில் தினமும் பசுந்நெய் ஊற்றி தீபம் ஏற்றினால் உங்கள் தெய்வத்தின் அருள் உங்கள் குடும்பத்தின் மீது படும். இதனால் அனைத்து காரியங்களும் நிறைவேறும் என்று கூறப்படுகிறது. 

    • 63 நாயன்மார்கள் குரு பூஜை செய்தருளிய காட்சி.
    • கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்த ராஜப் பெருமாள் சந்நிதியில் ஸ்ரீ கருடாழ்வாருக்குத் திருமஞ்சன சேவை.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு புரட்டாசி-20 (திங்கட்கிழமை)

    பிறை : வளர்பிறை

    திதி : சதுர்த்தசி காலை 11.42 மணி வரை பிறகு பவுர்ணமி

    நட்சத்திரம் : பூரட்டாதி காலை 6.06 மணி வரை பிறகு உத்திரட்டாதி நாளை விடியற்காலை 5.03 மணி வரை பிறகு ரேவதி

    யோகம் : மரண, சித்தயோகம்

    ராகுகாலம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

    எமகண்டம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

    சூலம் : கிழக்கு

    நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 3 மணி முதல் 4 மணி வரை

    திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட்நகர், திருவிடைமருதூர் சிவன் கோவில்களில் காலை சிறப்பு சோம வார அபிஷேகம்

    இன்று பவுர்ணமி. அவிநாசி ஸ்ரீ அவிநாசி லிங்கேஸ்வரருக்கு பவுர்ணமி பூஜை, சிறப்பு ஆராதனை. 63 நாயன்மார்கள் குரு பூஜை செய்தருளிய காட்சி. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் மைசூர் மண்டபம் எழுந்தருளல். திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பர் கொலு தர்பார் காட்சி. சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்த ராஜப் பெருமாள் சந்நிதியில் ஸ்ரீ கருடாழ்வாருக்குத் திருமஞ்சன சேவை.

    நத்தம் வரகுணவல்லித் தாயார் சமேத ஸ்ரீ விஜயாசனப் பெருமாள் காலை அலங்கார திருமஞ்சன சேவை. திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட்நகர், திருவிடைமருதூர் கோவில்களில் காலை சிறப்பு சோம வார அபிஷேகம். திருச்சேறை ஸ்ரீ சாரநாதர் புறப்பாடு. கோவில்பட்டி ஸ்ரீ செண்பகவல்லி அம்பாள் சமேத ஸ்ரீ பூவண்ணநாதருக்கு காலையில் பால் அபிஷேகம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-மேன்மை

    ரிஷபம்-நிம்மதி

    மிதுனம்-வெற்றி

    கடகம்-ஆசை

    சிம்மம்-வரவு

    கன்னி-சுகம்

    துலாம்- நன்மை

    விருச்சிகம்-பெருமை

    தனுசு- சுபம்

    மகரம்-நிறைவு

    கும்பம்-ஆதரவு

    மீனம்-போட்டி

    • இன்றைய ராசிபலன்
    • 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்

    மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்

    மேஷம்

    ஆலய வழிபாட்டில் ஆர்வம் காட்டும் நாள். இல்லம் தேடி நல்ல தகவல் வரும். அலுவலகப் பணிகள் துரிதமாக நடைபெறும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றி மகிழ்வீர்கள்.

    ரிஷபம்

    முன்னேற்றம் கூடும் நாள். தொல்லை தந்தவர்கள் விலகுவர். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

    மிதுனம்

    மனக்குழப்பம் அதிகரிக்கும் நாள். மறதியால் சில பணிகளை விட்டுவிடுவீர்கள். உடல்நலத்தில் கவனம் தேவை. உத்தியோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.

    கடகம்

    உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வீடு மாற்ற சிந்தனை மேலோங்கும். ஆன்மிகப் பயணமொன்றை மேற்கொள்வீர்கள். செல்வாக்கு மிக்கவர்கள் சிநேகமாவார்கள்.

    சிம்மம்

    மனக்குழப்பம் ஏற்படும் நாள். கூட்டாளிகளால் பிரச்சனை உண்டு. காரியங்கள் கடைசி நேரத்தில் கைநழுவிச் செல்லலாம். உத்தியோகத்தில் சக பணியாளர்களால் தொல்லை உண்டு.

    கன்னி

    பொன்னான நாள். புதிய பாதை புலப்படும். கடிதப் போக்குவரத்து கனிந்த தகவலைத் தரும். புண்ணிய காரியங்களில் நாட்டம் அதிகரிக்கும். எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

    துலாம்

    வியக்கும் செய்திகள் வீடு வந்து சேரும் நாள். வெளிவட்டார பழக்க வழக்கம் விரிவடையும். தொழில் வெற்றி நடைபோடும். வருமானம் எதிர்பார்த்ததைவிட கூடுதலாகவே இருக்கும்.

    விருச்சிகம்

    மலை வலம் வந்து மகத்துவம் காண வேண்டிய நாள். நினைத்தது நிறைவேறும், பிரார்த்தனைகள் பலிக்கும். தொழில் வளர்ச்சி ஏற்படும். ஆரோக்கியம் சீராகும்.

    தனுசு

    இறை வழிபாட்டில் இதயத்தைச் செலுத்தும் நாள். அடிப்படை வசதிகளைப் பெருக்கிக் கொள்வீர்கள். தொழில் சம்பந்தமாகப் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள்.

    மகரம்

    துணிவும், தன்னம்பிக்கையும் கூடும் நாள். பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். நூதனப் பொருள் சேர்க்கை உண்டு.

    கும்பம்

    வி.ஐ.பி.க்களின் சந்திப்பு கிடைத்து மகிழும் நாள். வருமானம் திருப்தி தரும். குழந்தைகளின் எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சி பலன் தரும். உத்தியோகத்தில் வேலைப்பளு கூடும்.

    மீனம்

    யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். எதிலும் அவசரத்தை தவிர்ப்பது நல்லது. தொழில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு குறையும். பயணங்களை மாற்றி அமைப்பீர்கள்.

    • மிதுனம் சோதனைகள் சாதனைகளாக மாறும் வாரம்.
    • துலாம் அனைத்து விதமான தேவைகளும் நிறைவேறிடும் இன்பமான வாரம்.

    மேஷம்

    அதிகமாக உழைக்க வேண்டிய வாரம். ராசி அதிபதி செவ்வாய் 3,6-ம் அதிபதி புதனுடன் இணைந்து ராசியை பார்க்கிறார். தீபாவளிக்கு தேவையான ஆடை ஆபரணங்கள் சேகரிக்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். சிலருக்கு வீடு மாற்றம் வேலை மாற்றம் நடக்கலாம். சிறு சிறு உடல் நல, மனநல பாதிப்புகள் வரலாம். கடன் வாங்குவது, ஜாமீன் போடுவதை தவிர்க்கவும்.புதிய தொழில் வாய்ப்புகள் தேடி வந்தாலும் சிந்தித்து முடிவு செய்ய வேண்டும். பங்குச் சந்தை ஆதாயம் குறையும். குரு பகவான் அதிசாரமாக கடக ராசிக்குள் நுழைகிறார். வீடு வாங்குவது, வீடு கட்டுவது சம்மந்தமான முயற்சிகளை எடுப்பீர்கள். உத்தியோகத்தில் தனித் தன்மையுடன் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டிய காலம். சனியின் வக்ர நிவர்த்திக்குப் பிறகு திருமணம் நடைபெறக்கூடிய சாத்தியக் கூறுகள் உள்ளது. முக்கிய காரியங்கள் நிறை வேற்றுவதில் இடையூறுகள், தடைகள் இழுபறிகள் வந்தாலும் தைரியமும், தன் நம்பிக்கையும் குறையாது. குழந்தை பேறு கிடைக்கும். ராஜா அலங்கார முருகன் வழிபாடு நிம்மதியை அதிகரிக்கும்.

    ரிஷபம்

    நீச்ச பங்க ராஜ யோகம் ஏற்படும் வாரம். ராசி அதிபதி சுக்கிரன் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் நீச்சம் அடைகிறார். புதன். சுக்கிரன் பரிவர்த்த னையில் இருப்பதால் சுக்கிரனுக்கு நீச்ச பங்க ராஜயோகம் கிடைக்கிறது.திட்டமிட்டபடி சுப காரி யங்கள் பிரமாண்டமாக நடந்து முடியும். தீபாவளி போனசில் அழகு ஆடம்பரப் பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். திருமண முயற்சிகள் சாதகமாகும். காதல் திருமணம் நடக்கும். உயர்கல்வி மற்றும் திருமணத்திற்குத் தேவையான கடன், பொருள் உதவி கிடைக்கும். குலதெய்வ பிரார்த்தனை நிறைவேறும். வீடு, வாகனம், சொத்து போன்ற வற்றில் ஏற்பட்ட இழப்பு, விரயங்களை ஈடு செய்வீர்கள். வீட்டிலும் வேலை பார்க்கும் இடத்திலும் நிம்மதியான சூழல் நிலவும். தாய், தந்தையின் ஆரோக்கியம் மகிழ்சியைத் தரும். மனக்கசப்பில் பிரிந்து சென்ற உறவுகள் உங்களை புரிந்து மீண்டும் உறவை புதுப்பிப்பார்கள்.முறையான திட்டமிடுதல் நிரந்தர வெற்றியைக் குவிக்கும்.வெள்ளிக்கிழமை மகாலட்சுமியை வழிபட பொருளாதார மேன்மை உண்டாகும்.

    மிதுனம்

    சோதனைகள் சாதனைகளாக மாறும் வாரம்.ராசி அதிபதி புதன் பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி சுக்கிரனுடன் பரிவர்த்தனை பெற்றுள்ளார். இது நீச்சபங்க ராஜயோகத்தை ஏற்படுத்தும். ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். தான தர்மங்களில் ஆர்வங்கள் கூடும். பூர்வீகம் சார்ந்த இன்னல்கள் சீராகும்.விற்க முடியாமல் கிடந்த பூர்வீக சொத்துக்கள் விற்றுப் பண மாகும். தடைபட்ட சகோதர சகோதரி களின் திருமண முயற்சி வெற்றியாகும். குரு பகவான் அதிசாரமாக தன ஸ்தானத்திற்கு செல்வதால் ஜென்ம குருவால் ஏற்பட்ட இன்னல்கள் குறையும். புதிய திட்டங்கள் மற்றும் எண்ணங்களால் தொழி லில் முன்னேற்றம், லாபம் உருவாகும். தொழிலுக்கு அரசின் ஆதரவு கிடைக்கும். வெளியூர், வெளிநாட்டு வேலை முயற்சிகள் பலன்தரும்.அடகு நகைகளை மீட்கக்கூடிய வகையில் வருமானம் உயரும்.பெண்களுக்கு கணவர் மற்றும் புகுந்த வீட்டாரின் அன்பு மன சஞ்சலத்தைக் குறைக்கும்.தேவைகள் நிறைவேறும்.வீடு மற்றும் பூமி வாங்கும் எண்ணம் நிறைவேறும். வராக் கடனை வசூலிப்பதில் ஆர்வம் கூடும்.மீனாட்சி யம்மன் வழிபாட்டால் சாதகமான பலன்களை பெற முடியும்.

    கடகம்

    விரும்பிய புதிய மாற்றங்கள் உருவாகும் வாரம்.ஜென்ம குருவின் ஆதிக்கம் துவங்கப் போகிறது. குரு பகவான் அதிசாரமாக ராசிக்குள் நுழைந்து உச்சமடைய போகிறார். சுமார் 48 நாட்கள் புதிய மாற்றங்கள் உருவாகலாம்.புதியதாக சுய தொழில் துவங்குவதை விட உத்தியோகமே சிறப்பு. முதலீட்டாளர்கள் புதிய தொழில் ஒப்பந்தத்தில் கவனமாக செயல்பட வேண்டும். தொழில் கூட்டாளிகளிடம் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும்.புதிய தொழில் கூட்டாளிகள், வாடிக்கையாளர்கள் என புதுப்புது மாற்றங்கள் நிகழும். தடைபட்ட வீடு கட்டும் பணி தொடரும். கணவன்-மனைவி ஒற்றுமை, திருமணம், சுப காரியங்கள் நடப்பது போன்ற நற்பலன்கள் நடக்கும். குடும்பத்தி னரின் ஒத்துழைப்பும் உடல் ஆரோக்கியமும் சிறக்கும். இந்த வாரம் தீபாவளிக்கு புதிய ஆடைகள் வாங்குவீர்கள். சிலருக்கு தாயார் மூலம் கணிசமான தொகை கிடைக்கும். 6.10.2025 அன்று காலை 12.45 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் கடன் வாங்குவதையும், கடன் கொடுப்பதையும் தவிர்க்க வேண்டும். திங்கட்கி ழமை சிவ வழிபாடு செய்வதால் உயர்வான நிலையை அடைய முடியும்.

    சிம்மம்

    தெளிவான திட்டமிடுதலும் முயற்சியும் அவசியம். ராசி அதிபதி சூரியன் தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் சுக்கிரனுடன் சேர்ந்துள்ளார். தம்பதிகளின் அன்பு பரிமாற்றம் மன நிறைவாக இருக்கும். ஆரோக்கிய குறைபாடு அகன்று மருத்துவச் செலவு குறையும்.சிலர் நல்ல வசதியான வீட்டிற்கு இடமாற்றம் செய்யலாம். விரய ஸ்தானத்தில் குருபகவான் உச்சம் அடைவது சுபித்துச் சொல்லக்கூடிய பலன் அல்ல. கவனத்துடன் செயல்பட வேண்டிய காலம். வியாபாரத்தில் சிறு சறுக்கல் தோன்றுவது போல் இருந்தாலும் சமாளிக்க முடியும். திருமணத் தடை நீடிக்கும். தம்பதிகள் தொழில் நிமித்தமாக பிரிந்து வாழலாம். தம்பதிகளிடம் ஒற்றுமை உணர்வு மேலோங்கும். தந்தை-மகன் உறவு பலப்படும். வெளிநாட்டில் வாழும் பிள்ளைகளின் வருகை மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும். 6.10.2025 அன்று காைல 12.45 முதல் 8.10.2025 அன்று காைல 1.28 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் சிலருக்கு கை,கால், மூட்டு எலும்பு,நரம்பு, சுகர், பிரஷர் தொடர்பான பிரச்சனைகள் அதிகமாகும். தினமும் சூரிய நமஸ்காரம் செய்வதால் சகல சௌபாக்கிய மும் உண்டாகும்.

    கன்னி

    பொருளாதார மேன்மை உண்டாகும் வாரம்.ராசி அதிபதி புதன் சுக்கிரனுடன் பரிவர்த்தனை பெற்றுள்ளார்.மேலும் லாப ஸ்தானத்தில் குரு பகவான் உச்சமடைய போகிறார். இந்த அமைப்பு அபரிமிதமான சுப பலன்களை வழங்க உள்ள நல்ல நேரமாகும். தொழில், உத்தியோகத்தில் லாபம் சதம் அடிக்கும். புதிய தொழில் ஒப்பந்தம் தேடி வரும். தொழில் கூட்டாளிகளிடம் நிலவிய கருத்து வேற்றுமை மறைந்து ஒற்றுமை ஏற்படும். கைக்கு எட்டி வாய்க்கு எட்டாத நிலை மாறும். தடைபட்ட வாடகை வருமானம் வசூல் ஆகும். விவசாயி களுக்கும் எதிர்பாராத லாபம் உண்டு. வீடு,மனை வாங்க முன்பணம் கொடுப்பீர்கள். வாழ்க்கை துணைக்கு விரும்பிய உத்தியோக மாற்றம் தேடி வரும். திருமணப் பேச்சு வார்த்தை மன நிறைவு தரும்.இந்த வாரம் தீபாவளி போனஸ் கிடைக்கும்.உடல்நிலை சீராகும்.8.10.2025 அன்று காலை 1.28 முதல் 10.10.2025 அன்று காலை 1.23 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் நிதானமற்ற அவரச முடிவுகளைத் தவிர்ப்பது அவசியம்.தினமும் விஷ்ணு சஹஸ்ரநாமம் படிப்பதாலும் கேட்பதாலும் பொருளாதார மேன்மை உண்டாகும்.

    துலாம்

    அனைத்து விதமான தேவைகளும் நிறைவேறிடும் இன்பமான வாரம். ராசி அதிபதி சுக்கிரன் நீச்சபங்க ராஜயோகம் பெற்றுள்ளார். ராசிக்கு பத்தாம் இடத்தில் குரு பகவான் உச்சம் பெற போகிறார். இது துலாம் ராசியி னருக்கு சகல ஐஸ்வர்யங்கள் சவுபாக்கியங்களையும் பெற்றுத் தரும் அமைப்பாகும். துலாம் ராசியினருக்கு தீபாவளி விற்பனை நல்ல லாபம் பெற்று தரும்.தொழில், வேலை, வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகள் உயர்வாக இருக்கும். போட்டி, பொறாமைகள் அகலும். நண்பருக்காக பொறுப்பேற்று வாங்கிக் கொடுத்த ஜாமீன் தொகை வந்து சேரும். விவாகரத்து வழக்கு தீர்ப்பு தள்ளிப்போகும். 4ம் அதிபதி சனி வக்ரமாக இருப்பதால் சொத்தில் ஏதேனும் வில்லங்கம் இருக்கிறதா என்பதை சரிபார்த்து விட்டு புதிய சொத்து வாங்க முன்பணம் கொடுக்கவும். உடல்நிலையில் பாதிப்புகள் குறையும். 10.10.2025 அன்று 1.23 காலை சந்திராஷ்டமம் ஆரம்பிப்பதால் அலைச்சல் மிகுந்த பயணங்களை தவிர்க்கவும். தினமும் கனகதாரா ஸ்தோத்திரம் கேட்பதால் அனைத்து விதமான தேவைகளும் நிறைவேறும்.

    விருச்சிகம்

    உழைப்பும் முயற்சியும் பலன் தரும் சாதகமான வாரம். 2, 5-ம் அதிபதி குரு அதிசாரமாக கடக ராசிக்கு சென்று உச்சம் பெறுகிறார்.வேலை இல்லாதவர்களுக்கு விரும்பிய வேலை கிடைக்கும்.தொழில், உத்தியோக முன்னேற்றம் என அனைத்து விதமான நன்மைகளும் நடைபெறும். நம்பிக்கை யான தொழில் கூட்டாளிகள் கிடைப்பார்கள். சிலர் மன நிம்மதிக்காக வெளியூர், வெளிநாடு சென்று வரலாம். மாணவர்கள் உயர் கல்விக்காக வெளிநாடு செல்லலாம். நோய் பாதிப்புகள் அகலும். எதிரிகள் தொல்லை குறையும்.விருச்சிக ராசி வயோதிகர்களுக்கு பேரன், பேத்தி. யோகம் கிடைக்கும்.சகோதர சகோதரிகளின் ஆதரவு நிம்மதி தரும். குரு பாதக ஸ்தானத்தில் உச்சம் பெறுவதால் பெரிய பாதகங்கள் ஏற்படாது என்பதை உறுதியாக கூறலாம். எனினும் புதிய முயற்சிகளில் கவனம் தேவை. பூர்வீகச் சொத்துக்கள் பணமாக மாறலாம்.பிள்ளைகளால் ஏற்பட்ட மனக்கவலை அகலும். பெண்கள் தங்க நகைகளை அத்தியா வசியமாக இருந்தால் மட்டும் புதுப்பிக்கவும். தினமும் லட்சுமி நரசிம்மர் வழிபாடு செய்வதன் மூலம் ஏற்றமான பலன்களை அடைய முடியும்.

    தனுசு

    புதிய முதலீடுகள் தவிர்க்க வேண்டிய காலம். ராசி அதிபதி குரு பகவான் அதிசாரமாக அஷ்டம ஸ்தானத்திற்கு சென்று உச்சம் பெறப்போகிறார். கடன், வம்பு, வழக்கு,நோய் தாக்கம், உத்தியோ கத்தில் இடையூறு, போட்டித் தேர்வுகள் போன்றவற்றில் ஏமாற்றங்கள் உருவாகலாம். விரயத்தை தவிர்க்க முடியாத நிலை நீடிக்கும்.வீடு கட்டப் போட்ட பட்ஜெட் திட்டமிடுதலை விட எகிறும். சிலருக்கு காது வலி, ஞாபக மறதி போன்ற அசவுகரியங்கள் தலை தூக்கும். சிலர் முக்தியை போதிக்கும் ஆன்மீக இயக்கம், சங்கங்களில் சேர்ந்து பயனடைவார்கள். 2ம் அதிபதி சனி வக்ரமாக இருப்பதால் சாத்தியமற்ற விசயத்திற்கு யாருக்கும் வாக்கு கொடுத்து வம்பில் மாட்டக் கூடாது. பேச்சை மூலதனமாகக் கொண்டு தொழில் செய்பவர்கள் நிதானமாக சிந்தித்து பேச வேண்டும். பங்குச் சந்தை மற்றும் யூக வணிகம் நல்ல பொருள் வரவை பெற்றுத்தரும். தொழில் நிமித்தமாக வெளியூர் அல்லது வெளிநாடு பயணம் செய்ய நேரும். வாரிசுகளின் திருமண முயற்சி வெற்றியாகும். செயற்கை கருத்தரிப் பிற்கான முயற்சியை சிறிது காலம் ஒத்தி வைக்க வும். தினமும் மாலையில் ஸ்ரீ சரபேஸ்வரரை வழிபட இன்னல்கள் விலகும்.

    மகரம்

    சிறிய முயற்சியில் பெரிய வெற்றி கிடைக்கும் வாரம். ராசிக்கு செவ்வாயின் நான்காம் பார்வை உள்ளது. குரு பகவான் அதிசாரமாக கடக ராசியில் சென்று உச்சமடைய போகிறார்.செவ்வாய் சாதகமான இடத்தில் சஞ்சரிப்பதால் பங்கு தாரருடன் இணைந்து தொழிலுக்கு சொந்தமான இடம் வாங்க ஏற்ற நேரம். புதிய வாடிக்கை யாளர்கள் தேடி வருவார்கள். பரம்பரை சொந்தத் தொழிலில் நீங்கள் பங்குதாராக இணையலாம். நீண்ட நாட்களாக விற்க முடியாத சொத்துக்கள் விற்கும்.அரசு வேலைக்கு முயற்சிப்பவர்களுக்கு அப்பாயின்மென்ட் ஆர்டர் வரும். தீபாவளிக்கு தேவையான உடைகளை வாங்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். பொன் பொருள் சேரும்.சிலருக்கு தந்தையின் அரசு வேலை கிடைக்கும். பெண்கள் மாமனார், மாமியாரை அனுசரித்துச் செல்ல வேண்டும். திருமணம் நிச்சயமானவர்கள் போனில் தேவையற்ற விசயங்களை தவிர்க்கவும். வரவிற்கும் செலவிற்கும் சரியாக இருக்கும். பொது வாழ்வில் உள்ளவர்களுக்கு மதிப்பு, மரியாதை உயரும். தினமும் காலபைரவரை வழிபடுவதால் காலத்தால் ஏற்படக்கூடிய துன்பங்கள் விலகும்.

    கும்பம்

    விழிப்புடன் செயல்பட வேண்டிய காலம்.அடுத்து வரும் 48 நாட்களுக்கு ராசியில் பதிந்த குருவின் பார்வை விலகப் போகிறது.ராசியில் தனித்த ராகு நிற்பதால் சம்பந்தம் இல்லாத அறிமுகம் இல்லாத நபர்களால் ஏமாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பணப் பரிவர்த்தனையில் கவனம் தேவை.வரவிற்கு மீறிய செலவு இருக்கும்.வியாபாரத்தில் எதிர்பார்த்த அளவுக்கு லாபம் கிடைக்காது. போட்டிகளைச் சமாளிக்க உழைக்கவேண்டி வரும். கடன், எதிரி தொல்லை அதிகமாகும் என்பதால் புதிய முயற்சிகள் அதிக முதலீடு ஆகியவற்றில் திட்டமிட்டு செயல்பட வேண்டும். முக்கிய பொறுப்புகளை யாரையும் நம்பி ஒப்படைக்க கூடாது. மூத்த சகோதரம், சித்தப்பாவால் வம்பு, வழக்கு, கடன் உண்டு. சகோதர சகோதரிகள் முன்னுக்கு பின் முரணாக பேசி குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்தலாம். உறவுகளிடம் வீண் விவாதங்களைத் தவிர்த்தல் நலம். வழக்கு விசாரணை தள்ளிப்போகும். சிலர் தொழில், வேலைக்காக பூர்வீகத்தை விட்டு வெளியூர், வெளிநாட்டிற்கு இடம் பெயரலாம்.சிறு உடல் உபாதைகள் அவ்வப்போது தோன்றும். ஸ்ரீ ராமரை பட்டாபிஷேக கோலத்தில் வழிபட எடுக்கும் முயற்சிகளில் வெற்றி உண்டாகும்.

    மீனம்

    வெற்றி மேல் வெற்றி தேடிவரும் அற்புதமான வாரம். அடுத்த 48 நாட்களுக்கு ராசி அதிபதி குரு உச்சம் பெற்று ராசியில் உள்ள சனிபகவானை பார்க்க போகிறார். இது தர்மகர்மாதிபதி யோகம் ஆகும். இதனால் இழுபறியாக இருந்த காரியங்கள் கூட துரித வேகத்தில் நடந்து முடியும். கடன் தொல்லை கட்டுக்குள் இருக்கும். திட்டங்கள், எண்ணங்கள் செயலாக்கம் பெறும். எதற்கும் முடிவு காண முடியாமல் தவித்த நிலை மறையும். தடை தாமதங்கள் அகலும்.கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும். ஏற்றுமதி, இறக்குமதி தொழிலில் இருப்பவர்களுக்கு ஏற்றமான பலன் உண்டு. வெளிநாட்டு தொடர்பு அல்லது வேற்று மதத்தினர் ஆதரவால் நல்ல வாய்ப்புகள் கிட்டும். திருமணம் பற்றிய நல்ல முடிவுகள் உங்கள் எண்ணம் போல் நிறைவேறும். குடும்பத்தில் நிம்மதி நீடிக்கும். முன்னோர்களின் நல்லாசியும், குல தெய்வ அருளும் கிடைக்கும். பொது வாழ்வில் உள்ளவர்களுக்கு மதிப்பு, மரியாதை உயரும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பாதிப்புகள் சீராகும்.ஸ்ரீ வல்லப கணபதியை வழிபட வளமான வாழ்க்கை உண்டாகும்.

    • சூரியனார்கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு திருமஞ்சன சேவை.
    • ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ பெரியாழ்வார் புறப்பாடு.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு புரட்டாசி-19 (ஞாயிற்றுக்கிழமை)

    பிறை : வளர்பிறை

    திதி : திரயோதசி நண்பகல் 1.24 மணி வரை பிறகு சதுர்த்தசி

    நட்சத்திரம் : சதயம் காலை 6.58 மணி வரை பிறகு பூரட்டாதி

    யோகம் : சித்தயோகம்

    ராகுகாலம் : மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை

    எமகண்டம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

    சூலம் : மேற்கு

    நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 3 மணி முதல் 4 மணி வரை

    திருத்தணி ஸ்ரீ முருகப்பெருமான், காஞ்சி ஸ்ரீ காமாட்சியம்மனுக்கு பால் அபிஷேகம்

    சூரியனார்கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு திருமஞ்சன சேவை. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதி எதிரில் உள்ள ஸ்ரீ அனுமனுக்கு திருமஞ்சன சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஸ்ரீ ஆஞ்சனேயருக்கு திருமஞ்சன சேவை. திருத்தணி ஸ்ரீ முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம். ராமேசுவரம் ஸ்ரீ பர்வதவர்த்தினியம்மன் ஊஞ்சலில் காட்சி.

    காஞ்சி ஸ்ரீ காமாட்சியம்மன், இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மன், சமயபுரம் ஸ்ரீ மாரியம்மன் கோவில்களில் காலையில் பால் அபிஷேகம். சாத்தூர் ஸ்ரீ வேங்கடேசப் பெருமாள் புறப்பாடு. வைத்தீஸ்வரன் கோவில் ஸ்ரீ அங்காரகருக்கும், ஸ்ரீ செல்வமுத்துக்குமார சுவாமிக்கும் அபிஷேகம், அலங்காரம், வழிபாடு. ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி புறப்பாடு. ஸ்ரீ வாஞ்சியம் வாஞ்சிநாத சுவாமிக்கு அபிஷேகம். ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ பெரியாழ்வார் புறப்பாடு.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-பொறுமை

    ரிஷபம்-அமைதி

    மிதுனம்-போட்டி

    கடகம்-ஆதரவு

    சிம்மம்-உற்சாகம்

    கன்னி-நட்பு

    துலாம்- பெருமை

    விருச்சிகம்-ஆக்கம்

    தனுசு- புகழ்

    மகரம்-அமைதி

    கும்பம்-நன்மை

    மீனம்-பக்தி

    • இன்றைய ராசிபலன்
    • 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்

    மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்

    மேஷம்

    தடைகள் அகலும் நாள். தனவரவு உண்டு. நண்பர்கள் தக்க சமயத்தில் கை கொடுத்து உதவுவர். உத்தியோகத்தில் உங்கள் செயல்பாடு மற்றவர்களின் கவனத்தை ஈர்க்கும்.

    ரிஷபம்

    அதிகாரப் பதவியில் உள்ளவர்களின் ஆதரவு கிட்டும் நாள். எதிர்காலம் இனிமையாகத் திட்டங்கள் தீட்டுவீர்கள். அரசுவழிச் சலுகை எதிர்பார்த்தபடியே கிடைக்கும்.

    மிதுனம்

    புதிய பாதை புலப்படும் நாள். முயற்சிகளில் வெற்றி கிட்டும். தொழிலில் இருந்த மறைமுகப் போட்டிகளை முறியடிப்பீர்கள். உத்தியோகத்தில் சம்பள உயர்வு பற்றிய தகவல் வரலாம்.

    கடகம்

    யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். நினைத்ததை செய்ய தாமதம் ஏற்படும். வந்த வரன்கள் கைநழுவிச் செல்லலாம். உடல்நலக் கோளாறுகளால் மனக்கலக்கம் ஏற்படும்.

    சிம்மம்

    யோகமான நாள். தன்னம்பிக்கையோடு செயல்படுவீர்கள். எடுத்த முயற்சியில் வெற்றி உண்டு. உத்தியோகத்தில் உங்களின் திறமையைக் கண்டு மேலதிகாரிகள் வியப்பர்.

    கன்னி

    நினைத்தது நிறைவேறும் நாள். தக்க சமயத்தில் பிறருக்கு உதவுவதால் பலருடைய அன்பைப் பெறுவீர்கள். வருமானம் எதிர்பார்த்ததை விடக் கூடுதலாகக் கிடைக்கும்.

    துலாம்

    பிரபலமானவர்களால் பிரச்சனை தீரும் நாள். வருமானம் வரும் வழியைக் கண்டு கொள்வீர்கள். தடைபட்ட ஒப்பந்தம் தானாக வந்து சேரும். உத்தியோகத்தில் பதவி உயர்வு வந்து சேரும்.

    விருச்சிகம்

    அன்பு நண்பர்களின் ஆதரவு கூடும் நாள். பிள்ளைகளின் வளர்ச்சி கண்டு பெருமை அடைவீர்கள். வெளிவட்டார பழக்க வழக்கம் சிறப்பாக இருக்கும். உயர் அதிகாரிகளின் ஆதரவு உண்டு.

    தனுசு

    மனக்குழப்பம் அகலும் நாள். மாற்று கருத்துடையோர் மனம் மாறுவர். முக்கிய முடிவெடுக்கும் பொழுது குடும்ப உறுப்பினர்களைக் கலந்து ஆலோசிப்பதே நல்லது.

    மகரம்

    தொட்ட காரியம் துளிர் விடும் நாள். தொழில் வளர்ச்சிக்கு முக்கியப் புள்ளிகளைச் சந்திப்பீர்கள். வீடு வாங்கும் முயற்சியில் ஆர்வம் கூடும். உத்தியோகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும்.

    கும்பம்

    காலையில் கலகலப்பும், மாலையில் சலசலப்பும் ஏற்படும் நாள். சுற்றியிருப்பவர்களால் ஒருசில தொல்லைகள் வந்து சேரலாம். உறவினர் சிலர் பணம் கேட்டு நச்சரிப்பார்கள்.

    மீனம்

    பொறுமையை கடைப்பிடித்து பெருமை காண வேண்டிய நாள். பயணத்தால் அலைச்சல் ஏற்பட்டாலும் ஆதாயம் கிடைக்கும். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களைக் கற்றுக்கொள்வீர்கள்.

    • கிருத்திகை நட்சத்திரம் முருகப்பெருமானுக்கு மிகவும் உகந்த நாளாக கருதப்படுகிறது.
    • மறுநாள் ரோகிணி நட்சத்திரத்தில் நீராடி, உணவு அருந்தி விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.

    கிருத்திகை விரதம் என்பது முருகப்பெருமானை வழிபடுவதற்காக அனுசரிக்கப்படும் ஒரு விரதமாகும். இது முருகனுக்கு உகந்த நாளாக கருதப்படும் கிருத்திகை நட்சத்திரத்தன்று அனுசரிக்கப்படுகிறது. இந்த விரதத்தை மேற்கொள் வதன் மூலம் பாவங்கள் நீங்கும், திருமணத்தடைகள் நீங்கும் மற்றும் முருகனின் அருள் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    முருகப் பெருமானுக்கு உகந்த நாள்: கிருத்திகை நட்சத்திரம் முருகப்பெருமானுக்கு மிகவும் உகந்த நாளாக கருதப்படுகிறது.

    பாவங்கள் நீங்கும்: இந்த விரதத்தை கடைபிடிப்பதால், பாவங்கள் நீங்கி, புண்ணியங்கள் பெருகும் என்பது நம்பிக்கை.

    திருமணத்தடை நீங்கும்: திருமணத்திற்காக காத்திருப்பவர்கள், கிருத்திகை விரதம் இருந்தால், திருமணத்தடை நீங்கும் என்பது ஐதீகம். முருகனின் அருள் கிடைக்கும. இந்த விரதத்தை முறையாக கடைபிடிப்பதால், முருகனின் அருளும், ஆசியும் பரிபூரணமாக கிடைக்கும்.

    கிருத்திகை விரதம் கடை பிடிக்கும் முறை: அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு, முருகனின் படம் அல்லது சிலையை வைத்து, தீபம் ஏற்றி வழிபட வேண்டும். முருகனுக்கு பிடித்தமான மலர்கள் மற்றும் நைவேத்தியங்களை படைத்து வழிபடலாம். விரதம் இருப்பவர்கள், பால், பழம் அல்லது எளிமையான உணவுகளை உட்கொள்ளலாம். முருகனுக்குரிய மந்திரங்கள், பாடல்களை பாராயணம் செய்யலாம். யாருக்காவது அன்னதானம் செய்வது மிகவும் சிறந்தது. மறுநாள் ரோகிணி நட்சத்திரத்தில் நீராடி, உணவு அருந்தி விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.

    சிலர் கிருத்திகை விரதத்தை பரணி நட்சத்திரத்திலிருந்தே தொடங்குகிறார்கள். அன்று பகல் உணவை நிறுத்தி விட்டு, கிருத்திகை அன்று முருகனை வழிபடுகிறார்கள்.

    ஆடி கிருத்திகை, தை கிருத்திகை போன்ற நாட்களும் முருகனுக்கு மிகவும் முக்கியமான நாட்களாகும். இந்த விரதத்தை கடைபிடிப்பதால், குடும்பத்தில் அமைதியும், மகிழ்ச்சியும் நிலவும் என்பது நம்பிக்கை.

    ×