என் மலர்tooltip icon

    அமெரிக்கா

    • கைது செய்யப்பட்ட மான்ஜியோனுக்கு ஆதரவாக பலர் குரல் கொடுத்து வருகின்றனர்.
    • மான்ஜியோனுக்கு ஆதரவாக வாதாட பெண் வழக்கறிஞர் கேரன் ஆக்னிபிலோ ஆஜரானார்.

    அமெரிக்காவில் மருத்துவத்துறை சார்ந்த முன்னணி நிறுவனம் யுனைடட் ஹெல்த்கேர். இந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி [சிஇஓ] பிரையன் தாம்சன் [50 வயது] கடந்த டிசம்பர் 4 ஆம் தேதி ஹோட்டல் வாசலில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டார்.

     

    இந்த கொலை தொடர்பாக கடந்த டிசம்பர் 10 ஆம் தேதி பென்சில்வேனியாவில் மெக்டோனால்ஸ் கடையில் வைத்து 26 வயதான இன்ஜினீயரிங் பட்டதாரி லூய்கி மான்ஜியோன் என்ற இளைஞரை எப்.பி.ஐ. போலீஸ் கைது செய்தது. வீட்டிலேயே 3டி பிரிண்டர் மூலம் துப்பாக்கியை செய்து அதன்மூலம் இந்த கொலையை அவர் செய்ததாக போலீஸ் தெரிவித்தது.

     

    லைஃப் இன்சூரன்ஸ் சார்ந்த யுனைடட் ஹெல்த்கேர் உள்ளிட்ட நிறுவனங்களின் அணுகுமுறை மக்களின் உயிரை பணமாக பார்ப்பதாக வெகு மக்களிடையே கோபம் இருந்து வந்த நிலையில் இந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட மான்ஜியோனுக்கு ஆதரவாக பலர் குரல் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் தான் அந்த கொலையை செய்யவில்லை என்று மாஞ்சியோன் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

    கொலை, பயங்கரவாத செய்லபாடுகள் உள்ளிட்ட 11 பிரிவுகளின்கீழ் மாஞ்சியோன் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மான்ஹாட்டனில் உள்ள நியூ யார்க் மாகாண குற்றவியல் நீதிமன்றத்தில் நேற்று [திங்கள்கிழமை] மாஞ்சியோன் ஆஜர்படுத்தப்பட்டார்.

     

    மான்ஜியோனுக்கு ஆதரவாக வாதாட பெண் வழக்கறிஞர் கேரன் ஆக்னிபிலோ ஆஜரானார். தனது கட்சிக்காரரை மனித பிங்பாங் பந்துபோல் அதிகாரிகள் நடத்துவதாகத் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய மாஞ்சியோன் தான் குற்றம் செய்யவில்லை [NOT GUILTY] என்று தெரிவித்தார்.

     

    இதனையடுத்து வழக்கு விசாரணை 2025, பிப்ரவரி 21 ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. பொதுமக்கள் மத்தியில் கவனம் பெற்றுவரும் இந்த வழக்கில் மாஞ்சியோன் குற்றத்தை ஒப்புக்கொள்ளாதது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

    முன்னதாக [மருத்துவ] சுகாதாரத் துறை நோயாளிகளின் நலனை விட லாபத்தையே முதன்மை நோக்கமாக வைத்திருப்பதை விமர்சித்து, இதற்கு வன்முறைதான் பதில் என்றும் நான் இதற்காக மன்னிப்பு கேட்கிறேன், ஆனால் இதை செய்தே ஆக வேண்டும், இந்த ஒட்டுண்ணிகளுக்கு இது நடக்க வேண்டியதுதான் [These parasites had it coming] என்று கைது செய்யப்பட்டபோது மான்ஜியோனிடம் இருந்து கைப்பற்றப்பட்ட அறிக்கையில் எழுதியிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

    • ஒருகட்டத்தில் கல்வி கட்டணம் செலுத்த முடியாத நிலையில் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டேன்.
    • வீடியோ இணையத்தில் வைரலாகி விவாதத்திற்குள்ளாகி உள்ளது.

    அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்தவர் சாரா டார். மாடல் அழகியான இவர் ஆபாச தளமான 'ஒன்லி பேன்ஸ்'சில் கணக்கு தொடங்கி வீடியோக்கள் வெளியிட்டு வருகிறார். வலைத்தள பிரபலமான இவரை ஏராளமானவர்கள் பின்தொடர்ந்து வருகின்றனர்.

    யூடியூபில் வீடியோ ஒன்றை வெளியிட்டு தனது வாழ்க்கை அனுபவங்களை ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டார். அப்போது அவர் கூறுகையில், 'படிப்பில் கெட்டிக்காரியான நான் கணினி என்ஜினீயரிங்கில் முனைவர் படிப்புக்காக பிரபல பல்கலைக்கழகத்தில் சேர்ந்தேன்.

    ஒருகட்டத்தில் கல்வி கட்டணம் செலுத்த முடியாதநிலையில் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டேன். பின்னர் என்ன செய்வதென யோசித்தபோது மாடலிங்கில் இணைந்து ஆபாச நடிகையாக முடிவு செய்தேன். முதலில் படிப்பை உதறியதால் வருத்தம் அடைந்தேன். ஆனால் இப்போது கோடிகளில் சம்பாதிக்கிறேன்" என்றார்.

    இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி விவாதத்திற்குள்ளாகி உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நாட்டில் இருக்கும் முட்டாள்தனமான விதிமுறைகள் இங்கு புதுமைகளைத் தடுக்கின்றன.
    • அதிக வரிகள், சிதைந்து வரும் உள்கட்டமைப்பு, மோசமான பொது சேவைகள் மற்றும் மக்கள் விரோத நிகழ்வுகளை மேற்கோள் காட்டினார்

     இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனர் ஒருவரின் ரெட்டிட் சமூக வலைதள பதிவு தற்போது வைரல் ஆகி வருகிறது. இந்தியாவில் தொழில்முனைவோருக்கு இருக்கும் சவால்கள் மற்றும் வளர்ச்சிக்கான தடைகளை மேற்கோள் காட்டி அதிக சம்பளம் வாங்கும் தொழில் வல்லுநர்கள் மற்றும் தொழில்முனைவோரை இந்தியாவை விட்டு வெளியேறுங்கள் என்று அவர் அறைகூவல் விடுத்துள்ளார்.

    தனது அடையாளத்தை வெளிப்படுத்திக்கொள்ளாத இந்த நிறுவனர் u/anonymous_batm_an என்ற ப்ரொபைலில் இந்த பதிவை இட்டுள்ளார். அதில், தான் புகழ்பெற்ற இந்திய பொறியியல் கல்வி நிறுவனத்தில் பட்டம் பெற்றதாகவும், பின்னர் அமெரிக்காவில் முதுகலைப் பட்டம் பெற்றதாகவும் கூறியுள்ளார்.

     

    2018 இல் இந்தியாவுக்குத் திரும்பி நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளார். சராசரியாக ரூ. 15 லட்சம் சம்பளத்தில் கிட்டத்தட்ட 30 பேர் பணிபுரியும் அவரது ஸ்டார்ட்அப் நல்ல வளர்ச்சியை கண்டுள்ளது.

    ஆனால் நாட்டில் இருக்கும் முட்டாள்தனமான விதிமுறைகள் இங்கு புதுமைகளைத் தடுக்கின்றன. எதையும் செய்ய அதிகாரம், அரசியல்வாதிகள் அல்லது பிரபலங்களுடன் தொடர்பு தேவை என்று தனது தற்போதைய பதிவில் ஆதங்கப்பட்டுள்ளார்.

    அதிக வரிகள், சிதைந்து வரும் உள்கட்டமைப்பு, மோசமான பொது சேவைகள் மற்றும் மக்கள் விரோத நிகழ்வுகள் குறித்த புகார்கள் தொடர்ந்து வருகின்றன.

    இந்தியாவின் சமூக-பொருளாதார ஏற்றத்தாழ்வை விமர்சித்துள்ள அவர், மக்கள் சமூக நிலையை செல்வம் மற்றும் தோற்றத்துடன் இணைத்து அதன் அடிப்படையிலேயே ஒருவருக்கு மதிப்பளிக்கும் போக்கு இருப்பதாக தெரிவித்துள்ளார்.

    மேலும் பயங்கரமான பொருளாதாரச் சரிவு மற்றும் ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சியடையும் என்று கணித்துள்ள இந்த நிறுவனர் இந்தியாவுக்கு மாற்றாக தொழில்முனைவோர், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் தாய்லாந்து போன்ற நாடுகளுக்கு செல்ல பரிந்துரைத்துள்ளார்.

    சுருக்கமாக சொன்னால் 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக இந்தியாவை மாற்றும் எண்ணம் இல்லாததால், ஆட்சியாளர்கள் உங்கள் பாப்கார்னுக்கு வரி விதிக்கும் இந்த நாட்டை விட்டு வெளியேறுங்கள்! என்று புலம்பித் தீர்த்துள்ளார்.

     

    கடந்த வாரம் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராம் தலைமையில் நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பாப்கார்னுக்கான வரியை 5 முதல்18 சதவீதம் வரை வரி விதிக்க முடிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • அமெரிக்க அரசியலமைப்பு, ஒரு ஜனாதிபதி இயற்கையாக பிறந்த அமெரிக்க குடிமகனாக இருக்க வேண்டும் என்று கூறுகிறது.
    • டிரம்ப் வெற்றி பெற 277 மில்லியன் டாலர்கள்வரை மஸ்க் பணத்தை வாரி இறைத்துள்ளார்.

    அரிசோனாவின் பீனிக்ஸ் நகரில் நடந்த குடியரசுக் கட்சி மாநாட்டில் நேற்று டொனல்டு டிரம்ப் கலந்துகொண்டார். இந்நிலையில் வரவிருக்கும் டிரம்ப் நிர்வாகத்தில் பெரும் ஆதிக்கம் செலுத்த உள்ள உலகப் பணக்காரர் எலான் மஸ்க் ஒரு நாள் அதிபராக முடியுமா? என்று டிரம்ப் -இடம் கேட்கப்பட்டது.

    அதற்கு டிரம்ப், இல்லை, அது நடக்காது என்று பதிலளித்தார். தொடர்ந்து பேசிய அவர், அவர் ஏன் இருக்க முடியாது என்று உங்களுக்குத் தெரியுமா? அவர் இந்த நாட்டில் பிறக்கவில்லை என்று டிரம்ப் கூறினார்.

    அமெரிக்க அரசியலமைப்பு, ஒரு ஜனாதிபதி இயற்கையாக பிறந்த அமெரிக்க குடிமகனாக இருக்க வேண்டும் என்று கூறுகிறது. டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், எக்ஸ் உள்ளிட்டவற்றின் முதலாளியான உலகின் முதல் பணக்காரர் எலான் மஸ்க் தென் ஆப்பிரிக்காவில் பிறந்தவர் ஆவார்.

     

     

    அவர் சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறியவர் என்று பைடன் நிர்வாகம் சமீபத்தில் குற்றம் சாட்டியிருந்தது. கடந்த நவம்பர் 5 ஆம் தேதி நடைபெற்ற அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற 277 மில்லியன் டாலர்கள்வரை மஸ்க் பணத்தை வாரி இறைத்துள்ளார்.

    இதற்காக அவருக்கு அரசு செயல்திறன் தொடர்பான GOVERNMENT OF EFFICIENCY பதவி வழங்கப்பட்டுள்ளது. எக்ஸ் தளத்தில் 200 மில்லியன் பாலோயர்களை கொண்ட மஸ்க்கை, பிரசிடெண்ட் மஸ்க் என குறிப்பிட்டு ஒரு கூட்டம் சமூக வலைதளத்தில் வைரல் செய்து வந்த நிலையில் இந்த விவகாரம் தற்போது டிரம்ப் காது வரை சென்றுள்ளது.

     

    இதற்கிடையே அரசு நிதியுதவி திட்டத்துக்கு எதிராக மஸ்க் போர்க்கொடி தூக்கியுள்ளதும் டிரம்ப் உடைய ஜனநாயக கட்சியினரிடையே புகைச்சலை ஏற்படுத்தி உள்ளது.

    • அரிசோனாவின் பீனிக்ஸ் நகரில் நடந்த இளம் பழமைவாதிகளுக்கான நிகழ்ச்சியில் அவர் பேசினார்
    • இரு பாலினங்கள் மட்டுமே அமெரிக்க அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ கொள்கையாக இருக்கும்

     பழமைவாதியான டொனல்டு டிரம்ப் கடந்த நவம்பர் 5 ஆம் தேதி நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றார். அடுத்த மாதம் இரண்டாவது முறையாக அதிபர் பதவி ஏற்கும் டிரம்ப் பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.

    கடந்த 2016 முதல் 2020 வரையிலான டிரம்ப்பின் ஆட்சி காலத்தில் மக்கள் கடும் கட்டுப்பாடுகளை சந்தித்த நிலையில் இனி வரும் 4 வருடமும் அப்படியே அமையும் என்பதை அவரது முடிவுகள் வெளிப்படுத்துகின்றன.

    அந்த வகையில் நேற்று அரிசோனாவின் பீனிக்ஸ் நகரில் நடந்த இளம் பழமைவாதிகளுக்கான குடியரசுக் கட்சி மாநாட்டில்  பேசிய டொனால்டு டிரம்ப், அதிபர் பதவி ஏற்கும் நாள் முதல் திருநங்கைகள் என்ற பைத்தியக்காரத்தனத்தை நிறுத்தப்போவதாக தெரிவித்துள்ளார்.

     

    குழந்தைகளின் பாலியல் சிதைவை நிறுத்தவும், திருநங்கைகளை ராணுவத்திலிருந்து வெளியேற்றவும், தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள் மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் இருந்து அவர்களை வெளியேற்றும் நிர்வாக உத்தரவுகளில் கையெழுத்திடுவேன் என்று தெரிவித்துள்ளார்.

    மேலும், ஆண்களை பெண்கள் விளையாட்டுகளில் இருந்து விலக்கி வைப்பதாக அவர் சபதம் செய்தார். ஆண் மற்றும் பெண் என்ற இரு பாலினங்கள் மட்டுமே அமெரிக்க அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ கொள்கையாக இருக்கும் என்று டிரம்ப் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

     

     மூன்றாம் பாலினத்தவரான LGBTQ சமூகத்தினரின் உரிமைகளுக்கு எதிராக அதிக அழுத்தம் கொடுக்கும் வகையில் அவர் பேசியுள்ளார். LGBTQ பிரச்சினைகள் சமீபத்திய ஆண்டுகளில் அமெரிக்க அரசியலை பெரிதும் தாக்கம் செலுத்த வருவது குறிப்பிடத்தக்கது.

    • இந்திய அமெரிக்க தொழிலதிபர் ஸ்ரீராம் கிருஷ்ணனை பரிந்துரை செய்துள்ளார்.
    • ஏ.ஐ. தொழில்நுட்ப துறையின் கொள்கை ஆலோசகராக இருப்பார்.

    அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று விரைவில் அதிபராக பொறுப்பேற்க இருக்கும் டொனால்டு டிரம்ப், செயற்கை நுண்ணறிவு துறைக்கான கொள்கை ஆலோசகர் பதவிக்கு இந்திய அமெரிக்க தொழிலதிபர் ஸ்ரீராம் கிருஷ்ணனை பரிந்துரை செய்துள்ளார்.

    தொழில்நுட்பத் துறையை சேர்ந்தவரான ஸ்ரீராம் கிருஷ்ணன் டேவிட் சாக்ஸ் உடன் இணைந்து பணியாற்ற இருக்கிறார். இவர் டொனால்டு டிரம்ப் தலைமையிலான நிர்வாகத்தில் ஏ.ஐ. தொழில்நுட்ப துறையின் கொள்கை ஆலோசகராக இருப்பார்.

    "ஸ்ரீராம் கிருஷ்ணன் ஏஐ-இல் தொடர்ந்து அமெரிக்கத் தலைமையை உறுதி செய்வதில் கவனம் செலுத்துவார். மேலும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான ஜனாதிபதியின் ஆலோசகர்கள் குழுவுடன் இணைந்து பணியாற்றுவது உட்பட, ஏஐ கொள்கையை வடிவமைக்கவும் ஒருங்கிணைக்கவும் உதவுவார்" என்று டிரம்ப் கூறினார்.

    முன்னதாக ஸ்ரீராம் கிருஷ்ணன் மைக்ரோசாப்ட், டுவிட்டர், யாஹூ, பேஸ்புக் மற்றும் ஸ்னாப் என பல்வேறு முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். டிரம்ப் தலைமையிலான அரசாங்கத்தில் ஸ்ரீராம் கிருஷ்ணன் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பிரிவில் ஆலோசகர்கள் குழுவில் இணைந்து பணியாற்ற இருக்கிறார்.

    புதிய பொறுப்பு குறித்து பேசிய ஸ்ரீராம் கிருஷ்ணன், "ஏ.ஐ. துறையில் அமெரிக்காவை தொடர்ந்து முன்னிலைப்படுத்துவதை உறுதி செய்து, நாட்டிற்கு சேவையாற்ற இருப்பது பெருமையான உணர்வை கொடுக்கிறது," என்று தெரிவித்தார்.

    • கெவின் காஸ்ட்னருக்கு சொந்தமான 160 ஏக்கர் பரப்பளவில் உள்ள டன்பார் ராஞ்ச் -இல் வைத்து நடைபெறுகிறது.
    • he View, KTTV, Fox உள்ளிட்ட பிரபல தொலைக்காட்சி நிறுவனங்களில் தொகுப்பாளராக இருந்தார்

    உலக பணக்காரர் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் எலான் மஸ்க்குக்கு அடுத்தபடியாக இரண்டாம் இடத்தில் 235 பில்லியன் டாலர் சொத்துடன் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் உள்ளார்.60 வயதான ஜெஃப் பெசோஸ் தனது இரண்டாம் திருமணத்துக்குத் தயாராகி வருகிறார்.

    தனது நீண்ட நாள் காதலியான 54 வயதாகும் தொலைக்காட்சி பிரபலம் லாரன் சான்செஸ் உடன் அவரது திருமணம் நடக்க உள்ளது. இருவரும் மே 2023 இல் நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர்.

    இவர்கள் இருவருக்கும் கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி திருமணம் நடைபெற உள்ளது. அமெரிக்காவில் இவர்கள் விடுமுறைக்கு வழக்கமாக ஆஸ்பென் நகருக்கு அடிக்கடி சென்று வருவர்.

     

    இந்நிலையில் அந்த ஆஸ்பென் நகரில் வைத்தே தங்கள் திருமணத்தைப் பிரமாண்டமாக நடத்த உள்ளனர். திருமணமானது ஆஸ்பென் நகரில் நடிகர் கெவின் காஸ்ட்னருக்கு சொந்தமான 160 ஏக்கர் பரப்பளவில் உள்ள டன்பார் ராஞ்ச் -இல் வைத்து நடைபெறுகிறது.

    இந்த திருமண விழாவில் அமெரிக்க பிரபலங்கள் பலர் கலந்துகொள்கின்றனர். வரும் டிசம்பர் 28 [சனிக்கிழமை] இவர்களது திருமணம் நடைபெற இருக்கிறது.

    $600 மில்லியன் (₹5,000 கோடி) செலவில் ஆடம்பரமான திருமணத்தை பெசோஸ் ஏற்பாடு செய்துள்ளார் டெய்லி மெயில் செய்தி வெளியிட்டுள்ளது. இந்திய பணக்காரர் முகேஷ் அம்பானி தனது மகனுக்கு இந்த ஆண்டு தொடக்கத்தில் ரூ.5000 கோடி செலவில் திருமணம் செய்து வைத்தார்.

     

    The View, KTTV, Fox உள்ளிட்ட பிரபல தொலைக்காட்சி நிறுவனங்களில் தொகுப்பாளராக பணியாற்றிய லாரன் சான்செஸ் உடன் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் ஜெஃப் பெசோஸ் டேட்டிங் செய்து வருகிறார். 

    ஜெஃப் பெசோஸ் தனது முதல் மனைவி மெக்கன்சி ஸ்காட் - ஐ கடந்த 2018 ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார். விவாகரத்தின்மூலம் ஜெஃப் பெசோஸ் வைத்திருந்த கணிசமான பங்குகளை பெற்று மெக்கன்சி ஸ்காட் பில்லியனர் ஆனார்.

    • ஒபாமா 2024ம் ஆண்டில் வெளியான திரைப்படங்கள், பாடல்களில் தனக்கு பிடித்தவற்றை பட்டியலிட்டுள்ளார்.
    • கேன்ஸ் திரைப்பட விழாவில் 'ALL WE IMAGINE AS LIGHT' திரைப்படம் விருது வென்றது.

    அமெரிக்காவின் முன்னாள் அதிபரான பராக் ஒபாமா 2024ம் ஆண்டில் வெளியான திரைப்படங்கள், பாடல்கள் மற்றும் புத்தகங்களில் தனக்குப் பிடித்தவற்றை பட்டியலிட்டுள்ளார்.

    இந்த பட்டியலில் பாயல் கபாடியா இயக்கிய 'ALL WE IMAGINE AS LIGHT' என்ற இந்திய திரைப்படம் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

    கேன்ஸ் திரைப்பட விழாவில் விருது வென்ற 'ALL WE IMAGINE AS LIGHT' திரைப்படம் தற்போது கோல்டன் குளோப் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • ஓபன்ஐ (OpneI) கூகுள் தேடுதலுக்கு (Google Search) கடும் அச்சுறுத்தலாக இருக்கும் என கணிப்பு.
    • செயல்திறனை அதிகரிக்கும் வகையில் ஆட்குறைப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூகுள் தகவல்.

    கூகுள் நிறுவனத்தின் செயல்திறனை அதிகப்படுத்தும் நோக்கத்தில் டைரக்டர், துணைத் தலைவர் போன்ற நிர்வாக பணியாளர்கள் 10 சதவீதம் பேரை வேலையில் இருந்து கூகுள் நிர்வாகம் அதிரடியாக நீக்கியுள்ளது. அதன் செயல்திறனை இரட்டிப்பாக்கும் நீண்ட கால நோக்கத்தின் ஒருபகுதியாக இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

    கூகுள் சி.இ.ஓ. சுந்தர் பிச்சை தலைமையில் கடந்த புதன்கிழமை நடைபெற்ற உயர்மட்ட குழுவில் மானேஜர், டைரக்டர், துணைத் தலைவர் போன்ற பணியில் உள்ளவர்கள் நீக்கப்படலாம் என சூசகமாக தெரிவித்திருந்தார். இந்த நிலையில் 10 சதவீதம் பேர் நீக்கப்பட்டுள்ளனர்.

    சில பணியாளர்களின் பதவி குறைக்கப்பட்டு, தனிநபர் பங்களிப்பு பணிகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். சிலர் வேலையை விட்டு நீக்கப்பட்டுள்ளனர் என கூகுள் செய்தி தொடர்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

    கூகுள் நிறுவனம் இந்த வருடம் நான்காவது முறையாக ஆட்குறைப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் உலகளாவிய விளம்பரங்களுக்கான குழுவில் இருந்து சில நூறுபேரை நீக்கியிருந்தது. ஜூன் மாதம் மேலும் 100-க்கும் மேற்பட்டோரை நீக்கியிருந்தது.

    2025 ஜனவரி மாதத்திற்குள் (அதாவது அடுத்த மாதம்) கூகுள் நிறுவனம் 12 பேரை வேலையில் இருந்து நிறுத்தியிருக்கும். இது உலகளவில் கூகுள் நிறுவனத்தில் பணிபுரியும் மொத்த பணியாளர்களில் 6.4 சதவீதம் ஆகும்.

    உலகளவில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் மிகப்பெரிய அளவில் முன்னேறி வருவதாலும், ஓபன்ஏஐ (OpenAI) போன்ற போட்டி நிறுவனங்கள் கூகுள் தேடுதலுக்கு (Google Search) மிகப்பெரிய அளவில் அச்சுறுத்தலாக இருக்கும் என வல்லுனர்கள் எச்சரித்துள்ளதாலும் கூகுள் செயல்திறனை அதிகரிக்கும் வகையில் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. கூகுள் தேடுதல் கடந்த வருடம் 57 சதவீதம் அதிகமாக வருமானம் ஈட்டியிருந்தது. இந்த வருமானம் குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

    கூகுளின் பங்கு வால் ஸ்ட்ரீட்டில் ஏற்கனவே 3.5 சதவீதம் உயர்ந்த நிலையில், இந்த அறிவிப்புக்கு பிறகு 4 சதவீதத்திற்கு மேல் பங்குகள் மதிப்பு உயர்ந்துள்ளது.

    எந்தவொரு நிறுவனமும் இதை கடந்த செல்வது கடினம். 25 வருடத்தில் கூகுள் நிறுவனம் இதுபோன்ற நடவடிக்கையை எடுத்தது கிடையாது. நாங்கள் இந்த நடவடிக்கையை எடுக்கவில்லை என்றால், இது மிகவம் கவலைக்குரியதாகும் என்பது தெளிவானது எனத் தெரிவித்துள்ளார்.

    • அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் அபார வெற்றி பெற்றார்.
    • டிரம்ப் ஜனவரி 12-ம் தேதி அதிபராகப் பதவியேற்க உள்ளார்.

    வாஷிங்டன்:

    சமீபத்தில் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் அபார வெற்றி பெற்றார். டிரம்ப் ஜனவரி 12-ம் தேதி அதிபராகப் பதவியேற்க உள்ளார்.

    இந்நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அடுத்த மாதம் இத்தாலி செல்கிறார் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், போப் பிரான்சிஸ் மற்றும் இத்தாலிய அதிபர் செர்ஜியோ மேட்டரெல்லா, பிரதமர் ஜியார்ஜியா மெலோனி ஆகியோரை சந்திப்பதற்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அடுத்த மாதம் 9-ம் தேதி முதல் ஜனவரி 12-ம் தேதி வரை ரோம் நகருக்குச் செல்கிறார்.

    அதிபர் ஜோ பைடன் ஜனவரி 10-ம் தேதி அன்று போப் பிரான்சிசை சந்திக்கிறார். அப்போது உலகம் முழுவதும் அமைதியை முன்னேற்றுவதற்கான முயற்சிகளைப் பற்றி விவாதிப்பார் என தெரிவித்துள்ளது.

    ஜனவரி 12-ம் தேதி அமெரிக்காவின் 47-வது அதிபராக பதவியேற்க உள்ள டொனால்ட் டிரம்பிடம் அதிகாரத்தை ஒப்படைப்பதற்கு முன் அதிபர் ஜோ பைடன் செல்லும் கடைசி வெளிநாட்டுப் பயணமாக இது இருக்கலாம் என தெரிகிறது.

    • அமெரிக்காவிடம் இருந்த கச்சா எண்ணெய், கியாஸ் வாங்க வேண்டும் என வலியுறுத்தல்.
    • நேட்டோவிற்கு கூடுதலாக வழங்கும் நிதியை நிறுத்துவிடுவோம்.

    அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். அடுத்த மாதம் 20-ந்தேதி அதிபராக பதவி ஏற்க உள்ளார். தற்போது ஒவ்வொரு துறைகளுக்கும் அதிகாரிகளையும், கேபினட் மந்திரிகளையும் நியமித்து வருகிறார்.

    அமெரிக்காவை மீண்டும் சிறந்ததாக்குவது என்பதில் உறுதி பூண்டுள்ளார். இதனால் வர்த்தகம் தொடர்பான வரிவிதிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.

    கனடா, மெக்சிகோ, சீனா ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

    இந்த நிலையில் ஐரோப்பிய யூனியன் அமெரிக்கா உடனான மிகப்பெரிய வர்த்தக இடைவெளியை குறைக்கவில்லை எனில், மிகப்பெரிய விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என மிரட்டல் விடுத்துள்ளார். அமெரிக்காவிடம் இருந்து கியாஸ், கச்சா எண்ணெய் வாங்க வேண்டும் என வலியுறுத்துகிறார்.

    கடந்த முறை அதிபராக தேர்வானபோது, நீண்ட காலமாக ஐரோப்பிய யூனியன் அமெரிக்காவின் முதுகில் பயணம் செய்கிறது. நாங்களும் அதை அனுமதித்துள்ளோம் எனத் தெரிவித்திருந்தார்.

    ஆனால் இந்த முறை நேட்டோ படைகளுக்கு அமெரிக்கா வழங்கும் அனைத்து கூடுதல் நிதிகளையும் நிறுத்துவிடுவோம், ஐரோப்பிய யூனியன் மிகப்பெரிய அளவில் பங்களிக்க வேண்டும் எனத் தெரிவித்திருந்தார்.

    2022 அமெரிக்காவின் தரவுகளின்படி, ஐரோப்பிய யூனியன் உடனான அமெரிக்காவின் வர்த்தக பற்றாக்குறை 202.5 பில்லியனாக இருந்துள்ளது. அமெரிக்கா ஐரோப்பிய யூனியனில் இருந்து 553.3 பில்லியன் டாலர் அளவிற்கு ஏற்றுமதி செய்துள்ளது. அதேவேளையில் ஐரோப்பிய யூனியன் 350.8 பில்லியன் அளவிற்கு அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்துள்ளது.

    இந்த வர்த்தக ஏற்றத்தாழ்வை விரைவாக சரிசெய்ய டிரம்ப் விரும்புகிறார். அவரது அச்சுறுத்தும் அணுகுமுறை அதைச் செய்வதற்கான சிறந்த வழியாக இல்லாவிட்டாலும், அது "அமெரிக்காவை மீண்டும் சிறந்ததாக்க" உதவும் என்று அவர் உறுதியாக நம்புகிறார். அகராதியில் அவருக்கு மிகவும் பிடித்த வார்த்தை வரிகள் என்று அவர் கூறுகிறார்.

    தென் அமெரிக்காவின் நான்கு முக்கிய நாடுகளான பிரேசில், அர்ஜென்டினா, உருகுவே மற்றும் பராகுவே ஆகியவற்றுடன் ஐரோப்பிய ஒன்றியம் ஒரு பெரிய சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதன் மூலம், ஐரோப்பா ஏற்கனவே அமெரிக்காவை தாண்டி தங்களது விருப்பங்களை தேடத் தொடங்கியுள்ளது. இந்த ஒப்பந்தம் ஐரோப்பா மற்றும் தென் அமெரிக்கா முழுவதும் கிட்டத்தட்ட 700 மில்லியன் மக்களுக்கு பயனளிக்கும்.

    • அரசு அதிகாரிகளுக்கு ரூ.2100 கோடி லஞ்சம் கொடுத்துள்ளார்
    • டிரம்ப் அடுத்த மாதம் பதவி ஏற்பதற்கு முன்னர் ஜனவரி 10 ஆம் தேதியோடு தான் பதவி விலகுவதாக அவர் இன்று அறிவித்தார்.

    இந்தியாவின் பிரபல தொழில் அதிபர் அதானி, மத்திய அரசின் நிறுவனத்திடம் இருந்து சூரிய ஒளி மின்சாரத்தைத் தயாரித்து வழங்குவதற்கான ஒப்பந்தத்தை பெற தமிழ்நாடு உட்பட இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களின் மின் வாரிய  அதிகாரிகளுக்கு ரூ.2100 கோடி லஞ்சம் கொடுத்து, அமெரிக்காவில் முதலீடுகளைத் திரட்டியதாக தகவல் வெளியானது.

    இதுதொடர்பாக அமெரிக்க கோர்ட்டில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் அவருக்கு பிடிவாரண்டும் பிறப்பிக்கப்பட்டது.

    இது அரசியளிலும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது. இந்த ஊழல் விவகாரம் குறித்து விவாதிக்க இந்தியா கூட்டணி எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்தில் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன.

     

    இந்நிலையில் நியூயார்க்கின் கிழக்கு மாவட்ட நீதிமன்றத்தில் அதானி வழக்கை விசாரித்த நீதிபதி ப்ரியோன் பீஸ் [breon peace] [53 வயது] தனது பதவி விலகலை அறிவித்துள்ளார்.

    அதானி விவகாரத்தில் இந்தியா சார்பில் அமெரிக்க நீதித்துறைக்கு அழுத்தம் இருந்து வந்த நிலையில் டிரம்ப் அடுத்த மாதம் பதவி ஏற்பதற்கு முன்னர் ஜனவரி 10 ஆம் தேதியோடு தான் பதவி விலகுவதாக அவர் இன்று அறிவித்தார்.

    கடந்த நவம்பர் 5 ஆம் தேதி நடந்த அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்ற நிலையில் அடுத்த மாதம் பதவி ஏற்கிறார்.

     

    இந்நிலையில் தற்போதைய அதிபர் ஜோ பைடனால் நியமிக்கப்பட்ட நீதிபதி அதுவும் அதானி வழக்கு உட்பட பல முக்கிய வழக்குகளை கையாண்ட நீதிபதி திடீர் பதவி விலகலை அறிவித்திருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது. 2021 முதல் அவர் நியூயார்க்கில் நீதிபதியாக பணியாற்றி வந்துள்ளார். 

    ×