என் மலர்tooltip icon

    அமெரிக்கா

    • காட்டுத் தீயில் சிக்கி ஏராளமான வீடுகள், வாகனங்கள் நாசமாகின.
    • தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகிறார்கள்.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியாவில் கடுமையான காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. இந்த காட்டுத்தீ லாஸ் ஏஞ்சல்சின் மலைப்பகுதிகளுக்கு வேகமாக பரவி வருகிறது. இதனால் அங்கு கடும் புகைமூட்டம் நிலவி வருகிறது.

    காட்டுத் தீயில் சிக்கி ஏராளமான வீடுகள், வாகனங்கள் நாசமாகின. காட்டுத் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகிறார்கள்.

    அப்பகுதி வீடுகளில் வசித்து வந்த 26 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தீயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சுமார் 30 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர் என தீயணைப்புத்துறை தெரிவித்துள்ளது.

    லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டியில் 46 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மின்சாரம் இல்லாமல் தவித்து வருகிறார்கள்.

    இந்நிலையில், கலிபோர்னியாவில் ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கி 2 பேர் உடல் கருகி பலியாகினர் என்றும், மேலும் பலர் படுகாயம்

    அடைந்துள்ளனர் என உள்ளூர் செய்தி ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

    • விமானத்தின் பராமரிப்பு ஆய்வின் போது இந்த சடலங்களை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
    • தெற்கு புளோரிடா விமான நிலையத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

    அமெரிக்காவில் தெற்கு புளோரிடா விமான நிலையத்தில் ஜெட் ப்ளூ விமானத்தின் தரையிறங்கும் கியர் பெட்டியில் இரண்டு அடையாளம் தெரியாத சடலங்களை கண்டுபிடிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    நியூயார்க்கில் உள்ள ஜான் எஃப். கென்னடி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு இரவு 11 மணிக்குப் பிறகு இந்த விமானம் தெற்கு புளோரிடா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது.

    இந்த விமானத்தின் பராமரிப்பு ஆய்வின் போது இந்த சடலங்களை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். சடலங்களின் அடையாளங்கள் தெரியாத நிலையில், அவர்கள் இருவரும் எப்படித் தரையிறங்கும் சாதனம் உள்ள பகுதியினுள் நுழைந்தனர் என்பது தெரியவரவில்லை.

    • ஆபாச பட நடிகைக்கு 11 கோடி ரூபாய் கொடுத்ததை மறைத்ததாக குற்றச்சாட்டு.
    • நியூயார்க் நீதிமன்றம் தண்டனை அறிவிப்புக்கு தடைவிதிக்க மறுப்பு தெரிவித்தது.

    2016-ம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபா் தோ்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளா் ஹிலாரி கிளிண்டனை எதிா்த்து குடியரசுக் கட்சி சாா்பில் டொனால்டு டிரம்ப் போட்டியிட்டாா். அப்போது, ஆபாச பட நடிகை ஸ்டாா்மி டேனியல்ஸ் டொனால்டு டிரம்ப் தன்னுடன் தொடர்பு வைத்திருந்தார் எனத் தெரிவித்தார்.

    இது தொடர்பாக ஸ்டாா்மி டேனியல்ஸ் மேலும் வாய் திறந்தால் தேர்தலில் பாதிப்பு ஏற்படும் எனக் கருதிய டொனால்டு டிரம்ப், தன்னுடன் இருந்த தொடா்பு குறித்து வெளியே சொல்லாமல் இருப்பதற்காக நடிகைக்கு 1.3 லட்சம் டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமாா் ரூ.11 கோடி) வழங்கியதாக கூறப்படுகிறது. இந்த பண பரிமாற்றத்தை மறைப்பதற்காக, தனது நிறுவன கணக்குகளில் டிரம்ப் முறைகேடு செய்ததாக குற்றம்சாட்டப்பட்டது.

    இதுதவிர, தோ்தல் முடிவுகளில் தவறான தாக்கத்தை ஏற்படுத்த ஆதரவாளா்களிடம் இருந்து வசூலிக்கப்பட்ட பிரசார நிதியை டிரம்ப் முறைகேடாகப் பயன்படுத்தியதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக டொனால்டு டிரம்ப் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை நியூயாா்க்-இல் உள்ள மேன்ஹாட்டன் குற்றவியல் நீதிமன்றம் கடந்த ஆண்டு உறுதி செய்தது.

    அமெரிக்க அதிபராக இருந்த ஒருவா் மீது குற்றவியல் வழக்கில் குற்றச்சாட்டு உறுதி செய்யட்டது அதுவே முதல்முறை ஆகும். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற அதிபா் தோ்தலில் டிரம்ப் மீண்டும் வெற்றி பெற்று அதிபராக பொறுப்பேற்க இருக்கிறார். இந்த நிலையில், குற்ற வழக்கில் டொனால்டு டிரம்புக்கான தண்டனை வருகிற வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட உள்ளது. மேன்ஹாட்டன் நீதிபதி ஜுவான் எம். மொ்சன் தண்டனையை அறிவிக்க இருக்கிறார்.

    நீதிபதி ஜுவான் எம். மொ்சன் தண்டனையை அறிவிக்க தடைவிதிக்க வேண்டும் என நியூயார்க் நீதிமன்றத்தில் டொனால்டு டிரம்ப் சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டிருந்தது. ஆனால் நியூயார்க் நீதிமன்றம் டொனால்டு டிரம்ப் மனுவை தள்ளுபடி செய்துள்ளது.

    இந்த தண்டனை அறிவிக்க தடை விதிக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் டொனால்டு டிரம்ப் மனுத்தாக்கல் செய்துள்ளார். இதற்கு அரசு தரப்பில் நாளை காலை பதில் மனுதாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    நீதிபதி ஜுவான் எம். மொ்சன், டிரம்பிற்கு சிறைத் தண்டனை வழங்கப்படாது. அபராதம் போன்றவை வழங்கப்படும் எனத்தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

    • இரு நாடுகளின் ஒருங்கிணைந்த வரைபடத்தையும் அவர் பகிர்ந்துள்ளார்.
    • கனடா பிரதமராக கடந்த 9 ஆண்டுகள் பதவி வகித்து வந்தவர் ஜஸ்டின் ட்ரூடோ

    அமெரிக்க அதிபராக வரும் ஜனவரி 20 ஆம் தேதி டொனால்டு டிரம்ப் பதவி ஏற்கிறார். கனடாவை அமெரிக்காவின் 51 வது மாகாணமாக இணைக்க முனைப்பு காட்டி வரும் டிரம்ப் அதற்காக அந்நாட்டின் மீது பொருளாதார அழுத்தத்தை கொடுப்பேன் என்றும் அச்சுறுத்தியுள்ளார். அமெரிக்கக் கொடியால் வரையப்பட்ட இரு நாடுகளின் ஒருங்கிணைந்த வரைபடத்தையும் அவர் பகிர்ந்துள்ளார்.

     

    டிரம்ப் தனது புளோரிடா மார்-ஏ லாகோ தோட்டத்தில் செய்தியாளர் கூட்டத்தில், கனடாவை அமெரிக்காவுடன் இணைக்க "பொருளாதார சக்தியை" பயன்படுத்துவேன் என்று தெரிவித்தார்.

    பனாமா கால்வாய் மற்றும் கிரீன்லாந்து இரண்டும் அமெரிக்காவுடன் இருக்க வேண்டிய பகுதிகள். அவற்றை கைப்பற்ற படைகளை கூட அனுப்புவேன்.தேவைப்பட்டால் மொத்த ராணுவத்தை கூட அனுப்புவேன்.

    அதேபோல் கனடாவுக்கு பொருளாதார அழுத்தம் தருவேன். மெக்சிகோவும் அமெரிக்காவின் அங்கமாக இருக்க வேண்டும். செஸ் விளையாடுவது போலத்தான். இவர்களுக்கும் பொருளாதார தடை உள்ளிட்ட அழுத்தங்களை கொடுப்பேன் என்று தெரிவித்தார்.

    இந்நிலையில் இதற்கு பதிலடி கொடுத்துள்ள கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, கனடாவை அமெரிக்காவுடன் இணைக்க வாய்ப்பில்லை என தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    கனடா பிரதமராக கடந்த 9 ஆண்டுகள் பதவி வகித்து வந்த ஜஸ்டின் ட்ரூடோ தனது பிரதமர் பதவியை ராஜிநாமா செய்யப்போவதாக ஜன. 6-ல் அறிவித்தார். புதிய லிபரல் கட்சித் தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் போது பதவியை ராஜிநாமா செய்வதாக அவர் அறிவித்திருக்கிறார்.  

    • மக்கள் தங்களது கார்களை ஆங்காங்கே நிறுத்தி விட்டு வேறு இடங்களுக்கு குடிபெயர்ந்து வருகின்றனர்.
    • லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டியில் 46 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மின்சாரம் இல்லாமல் தவித்து வருகிறார்கள்.

    அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியாவில் கடுமையான காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. இந்த காட்டுத்தீ லாஸ் ஏஞ்சல்சின் மலைப்பகுதிகளுக்கு வேகமாக பரவி வருகிறது. இதனால் அங்கு கடும் புகைமூட்டம் நிலவி வருகிறது. ஏராளமான வீடுகள், வாகனங்கள் தீயில் எரிந்து நாசமாகின. காட்டுத்தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் கடுமையாக போராடி வருகிறார்கள்.

    ஹெலிகாப்டர்கள் மூலம் தண்ணீர் ஊற்றப்பட்டு வருகிறது. 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் வசித்துவந்த 26 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தீயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சுமார் 30 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் தீயணைப்புத்துறை தெரிவித்துள்ளது. மக்கள் தங்களது கார்களை ஆங்காங்கே நிறுத்தி விட்டு வேறு இடங்களுக்கு குடிபெயர்ந்து வருகின்றனர்.

    காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் வேகமாக பரவி வருகிறது. இதனால் தீயை கட்டுப்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டியில் 46 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மின்சாரம் இல்லாமல் தவித்து வருகிறார்கள்.

    இதுகுறித்து கலிபோர்னியா கவர்னர் கவின் நியூசோம் கூறும்போது, காட்டுத்தீயில் பல கட்டமைப்புகள் அழிந்துள்ளன. ஆனால் சரியான எண்ணிக்கை கொடுக்கப்படவில்லை. 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் 13 ஆயிரம் கட்டிடங்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் என்றார். இன்று இரவு காற்று வேகம் மேலும் அதிகரிக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் காட்டுத்தீ இன்னும் வேகமாக பரவும் அபாயம் உள்ளது.

    • புளோரிடா தோட்டமான மார்-ஏ-லாகோவில் ஒரு மணிநேர உரையாற்றினார்
    • கிரீன்லாந்தை கைப்பற்ற ராணுவத்தை பயன்படுத்துவதையும் டிரம்ப் நிராகரிக்கவில்லை.

    அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்டு டிரம்ப் வரும் ஜனவரி 20 ஆம் தேதி பதவி ஏற்க உள்ளார். தான் பதவி ஏற்பதற்குள் காசாவில் வைத்திருக்கும் பணயக்கைதிகளை ஹமாஸ் விடுவிக்காவிட்டால், மத்திய கிழக்கில் மோதல் வெடிக்கும் என்று டிரம்ப் எச்சரித்துள்ளார்

    செவ்வாயன்று தனது புளோரிடா தோட்டமான மார்-ஏ-லாகோவில் ஒரு மணிநேர செய்தி மாநாட்டில் உரையாற்றிய டொனால்டு டிரம்ப், நான் பதவியேற்கும் நேரத்தில் அவர்கள் திரும்பி வரவில்லை என்றால், மத்திய கிழக்கில் அனைத்து நரகங்களும் வெடிக்கும், இது ஹமாஸுக்கு நல்லதல்ல, வெளிப்படையாக யாருக்கும் நல்லது அல்ல. இஸ்ரேல் மீது ஹமாஸ் ஒருபோதும் தாக்குதல் நடத்தி இருந்திருக்கக் கூடாது என்று தெரிவித்துள்ளார்.

    மேலும் டென்மார்க்கில் உள்ள கிரீன்லாந்தை கைப்பற்ற ராணுவத்தை பயன்படுத்துவதையும் டிரம்ப் நிராகரிக்கவில்லை. மேலும் பதவியேற்றதும் மெக்சிகோ வளைகுடா, அமெரிக்க வளைகுடா என்று மாற்றப்படும் என்றும் தாங்கள் அவர்களுக்கு உதவிகளை வழங்குவதால் அந்த பெயரே பொருத்தமாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

    • பிஷ்ஷர் ஒரு கையில் கைத்தடியும் மற்றொரு கையில் பைபிளுடன் நிற்கிறார்.
    • வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதை தொடர்ந்து பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்ட இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் டொனால்ட் டிரம்ப்-விடம் தோல்வியை தழுவினார். பலராலும் வெற்றி பெறுவர் என எதிர்பார்க்கப்பட்ட கமலா ஹாரிஸ் தோல்வியை சந்தித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில், குடியரசுக் கட்சியின் செனட்டர் டெப் பிஷ்ஷரின் கணவர் கமலா ஹாரிசுக்கு கை குலுக்க மறுத்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்க செனட்டர்களின் பதவியேற்பு விழாவில் துணை அதிபராக உள்ள கமலா ஹாரிஸ் பங்கேற்று இருந்தார். அப்போது, டெப் பிஷ்ஷர் அருகில் அவரது கணவர் பிஷ்ஷர் ஒரு கையில் கைத்தடியும் மற்றொரு கையில் பைபிளுடன் நிற்கிறார்.

    அப்போது கமலா ஹாரிஸ் பக்கத்தில் நிற்பதற்கு தயங்குகிறார் பிஷ்ஷர். பின்னர் பதவியேற்பு முடிந்தவுடன் டெப் பிஷ்ஷர்-க்கு கை கொடுத்து வாழ்த்து தெரிவிக்கும் கமலா ஹாரிஸ் பின்னர் பிஷ்ஷரிடம் கை கொடுக்குகிறார். ஆனால் அவர் கை குலுக்க மறுக்கிறார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதை தொடர்ந்து பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    கமலா ஹாரிசின் பதவிக்காலம் இம்மாதத்துடன் முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.



    • ஸ்டாா்மி டேனியல்ஸ், டிரம்ப் இடையே தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது.
    • கணக்குகளில் டிரம்ப் முறைகேடு செய்ததாக குற்றம்சாட்டப்பட்டது.

    ஆபாச பட நடிகைக்கு முறைகேடாக பணம் அளித்த வழக்கில் தனக்கு தண்டனை அறிவிக்கப்படுவதை நிறுத்திவைக்க கோரி டொனால்ட் டிரம்ப் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

    2016 ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபா் தோ்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளா் ஹிலாரி கிளிண்டனை எதிா்த்து குடியரசுக் கட்சி சாா்பில் டொனால்டு டிரம்ப் போட்டியிட்டாா். அப்போது, ஆபாச பட நடிகை ஸ்டாா்மி டேனியல்ஸ் மற்றும் டிரம்ப் இடையே தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது.

    மேலும், நடிகையுடன் இருந்த தொடா்பு குறித்து வெளியே சொல்லாமல் இருப்பதற்காக டொனால்டு டிரம்ப் நடிகைக்கு 1.3 லட்சம் டாலா்கள் (இந்திய மதிப்பில் சுமாா் ரூ.11 கோடி) டிரம்ப் வழங்கியதாக கூறப்படுகிறது. இந்த பண பரிமாற்றத்தை மறைப்பதற்காக, தனது நிறுவன கணக்குகளில் டிரம்ப் முறைகேடு செய்ததாக குற்றம்சாட்டப்பட்டது.

    இதுதவிர, தோ்தல் முடிவுகளில் தவறான தாக்கத்தை ஏற்படுத்த ஆதரவாளா்களிடம் இருந்து வசூலிக்கப்பட்ட பிரசார நிதியை டிரம்ப் முறைகேடாகப் பயன்படுத்தியதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக டொனல்டு டிரம்ப் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை நியூயாா்க்-இல் உள்ள மேன்ஹாட்டன் குற்றவியல் நீதிமன்றம் கடந்த ஆண்டு உறுதி செய்தது.

    அமெரிக்க அதிபராக இருந்த ஒருவா் மீது குற்றவியல் வழக்கில் குற்றச்சாட்டு உறுதி செய்யட்டது அதுவே முதல்முறை ஆகும். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற அதிபா் தோ்தலில் டிரம்ப் மீண்டும் வெற்றி பெற்று அதிபராக பொறுப்பேற்க இருக்கிறார். இந்த நிலையில், குற்ற வழக்கில் டொனால்டு டிரம்ப்புக்கான தண்டனை வருகிற வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட உள்ளது.

    எனினும், அதனை எதிா்த்து டிரம்ப் சாா்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதை பரிசீலித்த மேன்ஹாட்டன் நீதிபதி ஜுவான் எம். மொ்சன், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதையடுத்து, வழக்கில் டிரம்ப்புக்கான தண்டனை அறிவிக்கப்படுவது உறுதியாகி விட்டது. எனினும், இதை எதிர்த்து மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் டிரம்ப் மனு தாக்கல் செய்ய முடியும் என்றும் கூறப்படுகிறது.

    • அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு, உறுப்பினர்கள் பதவி பிரமாணம் எடுத்து கொள்ளும் நிகழ்ச்சியும் நடந்து வருகிறது.
    • உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட தகவலை தாயாரிடம் முதலில் தெரிவிக்கும்போது, நம்ப முடியாதவராக அவர் காணப்பட்டார்.

    வாஷிங்டன்:

    அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் கடந்த நவம்பர் 5-ந்தேதி நடந்து முடிந்தது. இதில், பெரும்பான்மையான இடங்களில் டிரம்ப் சார்ந்த குடியரசு கட்சி கைப்பற்றியது. டிரம்ப் வருகிற 20-ந்தேதி அடுத்த ஜனாதிபதியாக பதவியேற்க இருக்கிறார்.

    இந்நிலையில் அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு, உறுப்பினர்கள் பதவி பிரமாணம் எடுத்து கொள்ளும் நிகழ்ச்சியும் நடந்து வருகிறது.

    இதில் கிழக்கு கடற்கரையில் இருந்து சென்று பகவத் கீதை மீது பதவி பிரமாணம் எடுத்த முதல் இந்திய-அமெரிக்க பிரதிநிதி என்ற பெருமையை சுஹாஷ் சுப்ரமணியம் பெற்றுள்ளார்.

    இதனை காண்பதற்காக அவருடைய தாயார் நேரில் சென்றார். இதுபற்றி சுப்ரமணியம் கூறும்போது, அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு விர்ஜீனியாவில் இருந்து உறுப்பினராக பதவி பிரமாணம் எடுத்து கொண்ட முதல் இந்திய-அமெரிக்க பிரதிநிதி மற்றும் தெற்காசிய உறுப்பினராக என்னுடைய தாயார் பெருமை பொங்க என்னை பார்த்தார்.

    உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட தகவலை தாயாரிடம் முதலில் தெரிவிக்கும்போது, நம்ப முடியாதவராக அவர் காணப்பட்டார். ஆனால், விர்ஜீனியாவின் முதல் உறுப்பினராக நான் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளேன். இது நிச்சயம் கடைசி அல்ல. இதற்காக நான் அதிக பெருமை கொள்கிறேன் என சுப்ரமணியம் கூறினார்.

    • ஹோண்டா மற்றும் சோனி நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் முதல் எலெக்ட்ரிக் கார் ஆகும்.
    • இந்த காரின் தொடக்க விலையாக 77 லட்ச ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    ஹோண்டா நிறுவனத்துடன் இணைந்து, ஜப்பானின் சோனி தயாரிக்கும் அஃபீலா ஏ1 எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு முன்பதிவு தொடங்கியுள்ளது.

    இந்தமுன்பதிவு கலிபோர்னியாவில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே தற்போது திறக்கப்பட்டுள்ளது. இது 2026 முதல் அமெரிக்கா மற்றும் ஜப்பான் போன்ற உலகளாவிய சந்தைகளில் விற்பனைக்கு வரவுள்ளது.

    இது ஹோண்டா மற்றும் சோனி நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் முதல் எலெக்ட்ரிக் கார் ஆகும்.

    இந்த காரின் தொடக்க விலையாக 77 லட்ச ரூபாயும், ப்ரீமியம் ரக கார் 88 லட்ச ரூபாயாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    இந்த எலெக்ட்ரிக் காரில் 482 bhp ஆற்றலை வழங்கும் இரட்டை மின்சார மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இதில் 91kWh லித்தியம் அயன் பேட்டரி பேக் பொருத்தப்பட்டுள்ளது. இந்த பேட்டரியில் 150kW வேகத்தில் வேகமாக சார்ஜ் செய்யலாம். இதில் ஒருமுறை சார்ஜ் செய்தால் 483 கிமீ தூரம் வரை செல்லலாம்.

    • தனக்கு சொந்தமான ட்ரூத் சமூக வலைத்தளத்தில் டிரம்ப் பதிவிட்டுள்ளார்.
    • ஜஸ்டின் ட்ரூடோ இதை அறிந்திருந்தார், ராஜினாமா செய்தார்

    கனடா பிரதமர் பதவியில் இருந்து ஜஸ்டின் ட்ரூடோ ராஜினாமா செய்வதாக நேற்று அறிவித்தார். மேலும் லிபரல் கட்சியின் தலைவர் பதவியையும் ராஜினாமா செய்தார்.

    அவரது பொருளாதார நடவடிக்கைகளுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. மேலும் சொந்த கட்சியிலேயே எதிர்ப்பை சந்தித்தார். அவருக்கு எதிராக பெரும்பாலான எம்.பி.க்கள் உள்ளனர். இதையடுத்து பதவி விலகுவதாக ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில் நிலைமையை சாதகமாக பயன்படுத்தி டிரம்ப் ஒரு கருத்தை தெரிவித்துள்ளார். கனடா பிரதமர் பதவி விலகல் குறித்து தனக்கு சொந்தமான ட்ரூத் சமூக வலைத்தளத்தில் டிரம்ப் பதிவிட்டுள்ளார்.

    அதில், கனடாவில் உள்ள பலர் தங்கள் நாடு அமெரிக்காவின் 51வது மாகாணமாக இருப்பதை விரும்புகிறார்கள்.

    கனடா அமெரிக்காவின் தயவில்தான் இருக்கிறது. நாம் அவர்களுக்கு நிதி உதவி கொடுக்கிறோம். நிறைய சலுகைகள் கொடுக்கிறோம். ஏற்றுமதி, இறக்குமதி வாய்ப்பு தருகிறோம்.

    இனி அப்படி எல்லாம் வழங்க முடியாது. ஜஸ்டின் ட்ரூடோ இதை அறிந்திருந்தார், ராஜினாமா செய்தார். கனடா அமெரிக்காவுடன் இணைந்தால், வரிகள் இருக்காது, வரிகள் வெகுவாகக் குறையும், மேலும் அவர்களைச் சுற்றி தொடர்ந்து இருக்கும் ரிஷிய மற்றும் சீனக் கப்பல்களின் அச்சுறுத்தலிலிருந்து அவர்கள் முற்றிலும் பாதுகாப்பாக இருப்பார்கள்.

    ஒன்றாகச் சேர்ந்தால், அது எவ்வளவு சிறந்த தேசமாக இருக்கும் என்று பதிவிட்டுள்ளார். சமீப காலமாகவே அமெரிக்காவுடன் கனடா இணைய வேண்டும் என்ற வாதத்தை டிரம்ப் முன்வைத்து வருகிறார். கடந்த நவம்பரில் நடந்த அதிபர் தேர்தலில் வென்ற டிரம்ப் வரும் ஜனவரி 20 ஆம் தேதி பதவி ஏற்க உள்ளது குறிப்பிடத்தக்கது. 

    • சமீபத்தில் பறவை காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது.
    • மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    அமெரிக்காவில் பறவை காய்ச்சல் பாதிப்பு காரணமாக ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அந்நாட்டில் பறவை காய்ச்சலுக்கு ஒருவர் உயிரிழந்தது இதுவே முதல்முறை ஆகும்.

    அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தை சேர்ந்த 65 வயது முதியவருக்கு சமீபத்தில் பறவை காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    அதிக தொற்று தன்மை கொண்ட எச்5.என்1. ரக வைரஸ் மூலம் பாதிக்கப்பட்ட முதியவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டார். இதனை லூசியானா மாகாண சுகாதார துறை தெரிவித்து உள்ளது. காட்டு பறவைகள் மற்றும் வளர்ப்பு பறவைகள் ஆகியவற்றுடன் தொடர்பில் இருந்ததால் அவருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

    இவர் தவிர, அமெரிக்காவில் வேறு யாருக்கும் இந்த தொற்று ஏற்படவில்லை என்று லூசியானா மாகாண சுகாதார துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. மேலும், அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கலும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    அமெரிக்காவில் முதன்முறையாக பறவை காய்ச்சல் பாதிப்புக்கு ஒருவர் உயிரிழந்திருப்பதாக லூசியானா மாகாண சுகாதார துறை தெரிவித்துள்ளது.

    ×