என் மலர்
அமெரிக்கா
- வெள்ளை மாளிகை சுருக்கமான அறிக்கையில் தெரிவித்துள்ளது.
- இஸ்ரேல் - ஹிஸ்புல்லா இடையில் சண்டையை ஏற்படுத்தியது.
லெபனான் மற்றும் இஸ்ரேல் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம் பிப்ரவரி 18-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. இஸ்ரேல் தனது துருப்புக்களை திரும்பப் பெறுவதற்கான முந்தைய காலக்கெடுவைத் தவறவிட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
"அமெரிக்காவால் கண்காணிக்கப்படும் லெபனான் மற்றும் இஸ்ரேல் இடையேயான ஒப்பந்தம் பிப்ரவரி 18, 2025 வரை தொடர்ந்து அமலில் இருக்கும்" என்று வெள்ளை மாளிகை ஒரு சுருக்கமான அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கடந்த அக்டோபர் 7, 2023 அன்று இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலுக்குப் பிறகு பிடிபட்ட லெபனான் கைதிகளை திருப்பி அனுப்புவது தொடர்பாக இஸ்ரேல் மற்றும் லெபனானுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தும் என்றும் டொனால்டு டிரம்பின் வெள்ளை மாளிகை கூறியது. இது இஸ்ரேல் மற்றும் லெபனானின் ஹிஸ்புல்லா இடையில் சிறிய அளவில் சண்டையை ஏற்படுத்தியது.
தற்போது அமெரிக்கா வெளியிட்டுள்ள அறிக்கையில் போர்நிறுத்தம் குறித்து வெளிப்படையாக எதுவும் குறிப்பிடப்படவில்லை. நேற்றும் இஸ்ரேல் படைகள் 22 பேரை கொன்ற நிலையில் போர் நிறுத்தம் என்பது சந்தேகத்திற்குரிய ஒன்றாகவே இருக்கிறது என லெபனான் சுகாதார துறை தெரிவித்தது.
- ஜார்ஜ் புஷ்ஷின் நிர்வாகத்தின் கீழ் இந்த திட்டம் தொடங்கப்பட்டு இதுவரை செயல்பட்டு வந்தது.
- மத்திய கிழக்கில் அமெரிக்காவின் ஸ்திரத்தன்மையை இவ்விரு நாடுகளும் உறுதி செய்வதால் அவரின் நிதியில் டிரம்ப் கைவைக்கவில்லை
அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் கடந்த 20-ந்தேதி பதவியேற்றுக்கொண்டார். பல தடாலடி உத்தரவுகளை வெளியிட்டு வரும் டிரம்ப் உலகின் பல்வேறு நாடுகளுக்கு அளித்து வந்த யுஎஸ்-எய்ட் நிதி உதவியை நிறுத்த உத்தரவிட்டுள்ளார்.
சுகாதாரம், கல்வி, மேம்பாடு, வேலைவாய்ப்பு பயிற்சி, ஊழல் எதிர்ப்பு, பாதுகாப்பு, ஊட்டச்சத்துக் குறைபாடு போக்குதல், நோய் பாதிப்பைத்த் தடுக்க உதவுதல் உள்ளிட்டவற்றில் வளர்ச்சியில் பின்தங்கிய மற்றும் வளரும் நாடுகளுக்கு உலக வல்லரசான அமெரிக்காவின் நிதி உதவி கிடைத்து வந்தது.
யுஎஸ்-எய்ட் [USAID] என்ற சுயாதீன அமைப்பு இதற்காக உருவாக்கப்பட்டது. அமெரிக்க முன்னாள் அதிபர்ஜார்ஜ் புஷ்ஷின் நிர்வாகத்தின் கீழ் 2003-ல் இந்த திட்டம் தொடங்கப்பட்டு இதுவரை செயல்பட்டு வந்தது.

இந்நிலையில் மனிதாபிமான அடிப்படையில் மேற்கொள்ளப்படும் இத்தகைய உதவிகளுக்கான நிதியை 90 நாட்களுக்கு முடக்குவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. மேலும் புதிதாக இனிமேல் ஏதும் நிதி வழங்கப்படாது என்றும் டிரம்ப் அறிவித்துள்ளார்.
சூடான் உள்ளிட்ட கடும் பஞ்சத்தால் வாடும் நாடுகளுக்கு உணவு வழங்குவதற்கான திட்டங்களுக்கு மட்டுமே விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இஸ்ரேல் மற்றும் எகிப்து நாடுகளுக்கு இதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் ஆண்டுதோறும் அமெரிக்காவிடமிருந்து ராணுவ உதவியாக 3.3 பில்லியின் டாலர் பெறுகிறது, எகிப்து 1.3 பில்லியின் டாலர் பெறுகிறது.
மத்திய கிழக்கில் அமெரிக்காவின் ஸ்திரத்தன்மையை இவ்விரு நாடுகளும் உறுதி செய்வதால் அவரின் நிதியில் டிரம்ப் கைவைக்கவில்லை என்று அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர். நிதியுதவி அளிக்கத் தடை அமலில் உள்ள 90 நாட்களுக்குப் பின் உத்தரவை நீடிப்பதா அல்லது விலக்கிக்கொள்வதா என்று முடிவெடுக்கப்படும் என்று தெரிகிறது.

இதற்கிடையே பிராந்திய சிக்கல்களுக்கு அமெரிக்காவைப் பெரிதும் நம்பியுள்ள உக்ரைன், தைவான் மற்றும் எஸ்டோனியா, லிதுவேனியா, லாட்வியாவை உள்ளடக்கிய பால்டிக் நாடுகளை இந்த தடை மிகவும் பாதிக்கும்.
ரஷியாவுடனான போரில் உக்ரைனுக்கு ஜோ பைடன் அதிக உதவிகளை அளித்து வந்த நிலையில் டிரம்ப்பின் நிதி நிறுத்தம் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் தற்போதைக்கு போர்க்கால உதவிகள் ஏதும் நிறுத்தப்படவில்லை, கடவுளுக்கு நன்றி என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தனது எக்ஸ் பக்கத்தில் ஆறுதல் அடைந்துள்ளார்.
அமெரிக்காவின் இரக்கமற்ற இந்த முடிவின் விளைவு கொடூரமானதாக இருக்கும் என யுஎஸ் எய்ட் அமைப்பு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். எய்ட்ஸ் நிவாரணத்திற்கான அமெரிக்க அதிபரின் அவசர நிதியுதவி திட்டமும் யுஎஸ் - எய்ட் நிதி முடக்கத்தால் பாதிக்கப்படும்.

அமெரிக்க உதவியை நிறுத்துவது, சீனா மற்றும் ரஷ்யா போன்ற போட்டியாளர்களிடம் இருந்து நிதியுதவி பெறும் நிர்பந்தத்துக்கு சர்வதேச நாடுகளை உட்படுத்தும் யுஎஸ் காங்கிரசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். உலக சுகாதர அமைப்பில் இருந்தும் அமெரிக்கா விளங்கியுள்ளதும் விமர்சனத்தை ஏற்படுத்தி வருகிறது.
இதுகுறித்து பேசியுள்ள உலக சுகாதர அமைப்பின் முன்னாள் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் கூறுகியில், ஒரு நாடு எவ்வளவு வளமானதாக இருக்கிறதோ அதற்கேற்ப அந்த நாடு பிறநாடுகளின் மேம்பாட்டுக்காக நிதியுதவி செலுத்தும்.
ஒரு நாட்டின் ஜிடிபியில் இருந்து ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை அந்நாடு ஒதுக்கும். மிக முக்கியத்துவம் வாய்ந்த, மிகப்பெரிய நாடான அமெரிக்கா உலக சுகாதார நிறுவனத்தில் இருந்து வெளியேறிய முடிவு நல்லது அல்ல என்று தெரிவித்துள்ளார்.

- சிறிய இடைவெளியிலேயே கமலா ஹாரிஸை டிரம்ப் வென்றுள்ளார்.
- 2020 தேர்தலில் மோசடி செய்திருக்காவிட்டால் நான் வென்றிருப்பேன்.
கடந்த திங்கள்கிழமை அமெரிக்க அதிபராகப் பதவியேற்ற டிரம்ப் கடந்த 5 நாட்களில் சொன்ன பல விஷயங்கள் பொய்யானவை என்று தெரியவந்துள்ளது.
ஜனவரி 20 [திங்கள்கிழமை] அவர் பதவியேற்ற பின் அவர் பங்கேற்ற நிகழ்ச்சிகள், செய்தியாளர்கள் சந்திப்புகள் பலவற்றில் ஆதரமற்ற வகையில் டிரம்ப் வாய்க்கு வந்ததை பேசியுள்ளார் என்று கூறப்படுகிறது.
தாவோஸில் நடைபெற்ற உலக பொருளாதாரக் கூட்டமைப்புக் கூட்டத்தில் பேசிய டொனால்டு டிரம்ப், 2024 அதிபர் தேர்தலில் அவர் கமலா ஹாரிஸை விட பல லட்சம் வாக்கு வித்தியாசத்தில் தான் வெற்றி பெற்றதாக தன்னைத் தானே பாராட்டிக் கொண்டார். அமெரிக்க மக்கள் தனக்கு மாபெரும் வெற்றியை வழங்கியுள்ளனர் என்று கூறினார்.

ஆனால் அசோசியேட் பிரஸ் வெளியிட்டிருக்கும் வாக்குப் பதிவு தரவுகளின்படி, டிரம்ப் பெற்ற எலெக்டோரல் வாக்குகள் 312. கமலா ஹாரிஸ் பெற்ற எலெக்டோரல் வாக்குகள் 226. அதாவது, டிரம்ப் 49.9 சதவீத வாக்குகளும், கமலா ஹாரிஸ் 48.4 சதவீத வாக்குகளும் பெற்றிருந்தனர்.
இதன்படி சிறிய இடைவெளியிலேயே கமலா ஹாரிஸை டிரம்ப் வென்றுள்ளார். இது அவர் குறிப்பிடும் மகத்தான வெற்றிக்கு முற்றிலும் முரணானது. அதே சமயத்தில் கடந்த 2020 தேர்தலில் ஜோ பைடன் 51.3% வாக்குகள் பெற்றிருந்த நிலையில் டிரம்ப் 46.8% பெற்று அதிக இடைவெளியில் தோற்றதும் கவனிக்கத்தக்கது.
அடுத்ததாக செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், 2024 தேர்தலில் தனக்கு இளைஞர்கள் அதிக வாக்கு செலுத்தியுள்ளதாக டிரம்ப் கூறினார்.
ஆனால் அசோசியேட் பிரஸ் தரவின்படி, 18 - 29 வயதுடையவர்களிடையே 4 சதவீத புள்ளிகளும் 30 - 44 வயதுடையவர்களிடையே 3 சதவீதப் புள்ளிகளும் கமலா ஹாரிஸ்க்கு கிடைத்துள்ளது. 45 வயதுக்கு மேற்பட்டவர்களின் புள்ளிகளே டிரம்புக்குக் கிடைத்துள்ளது என தெரியவருகிறது.

இதேபோல பென்சில்வேனியா, ப்ளோரிடா ஆகிய மாகாணங்களில் பெற்ற வெற்றியை டிரம்ப் மிகைப்படுத்திக் கூறியுள்ளார். மேலும் 2020 தேர்தலில் மோசடி செய்திருக்காவிட்டால் நான் வென்றிருப்பேன் என டிரம்ப் தற்போது பேசியுள்ளார்.
ஆனால் இதுதொடர்பான வழக்கில் மோசடி நடைபெறவில்லை என ஏற்கனவே தீர்ப்பளிக்கப்பட்டிருந்தது. முன்னதாக தேர்தல் பிரசார சமயத்தில், சட்டவிரோதமாகப் புலம்பெயர்ந்தவர்கள் நாய் உள்ளிட்ட அமெரிக்கர்களின் செல்லப்பிராணிகளை கொன்று சாப்பிடுவதாக டிரம்ப் ஆதாரமற்ற கருத்தை தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

- உலக சுகாதார அமைப்பில் இருந்து அமெரிக்கா விலகுவதாகவும் அறிவித்தார்.
- அந்தந்த நாடுகளில் உள்ள அமெரிக்க தூதரகங்களுக்கு நேற்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் கடந்த 20-ந்தேதி பதவியேற்றுக்கொண்டார். அவர் பதவியேற்றதும் எரிசக்தி பயன்பாடு, குற்றவாளிகளுக்கு பொது மன்னிப்பு, அமெரிக்க குடியேற்ற கொள்கையில் மாற்றம் என பல்வேறு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்தார். மேலும், சட்டவிரோத குடியேற்றத்தை தடுக்க அமெரிக்கா-மெக்சிகோ எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்படும் எனவும் உலக சுகாதார அமைப்பில் இருந்து அமெரிக்கா விலகுவதாகவும் அறிவித்தார்.
இந்த நிலையில், உலகின் பல்வேறு நாடுகளில் கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு பயிற்சி உள்ளிட்ட திட்டங்களுக்காக அமெரிக்கா அளித்து வந்த நிதி உதவியை நிறுத்த டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
இதை நடைமுறைப்படுத்த அந்தந்த நாடுகளில் உள்ள அமெரிக்க தூதரகங்களுக்கு நேற்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்காக கடந்த 2023-ம் ஆண்டு சுமார் 60 பில்லியன் (அந்நாட்டின் பட்ஜெட்டில் 1%) ஒதுக்கப்பட்டது.
- இந்தப் பணம் அனைத்தும் ஏஐ தொழில்நுட்பத்தை வளர்ப்பதற்கு அல்ல
- ஆனால் மைக்ரோசாஃப்ட், ஓபன் ஏஐ... என்று டிரம்ப் அவர்களை சீண்டும் விதமாக பதிவிட்டிருந்தார்.
அமெரிக்க அதிபராக பதவியேற்ற டொனால்டு ட்ரம்ப் கடந்த செவ்வாய்க்கிழமை ஸ்டார்கேட் என்ற ஏ.ஐ. திட்டத்தை அறிவித்தார்.
ஓபன் ஏஐ, ஜப்பானிய நிறுவனமான SoftBank மற்றும் மைக்ரோசாஃப்டின் கிளவுட் நிறுவனமான Oracle ஆகியவற்றின் பங்களிப்பில் செயற்கை நுண்ணறிவு உள்கட்டமைப்பை உருவாக்கும் திட்டமே ஸ்டார்கேட்.
ஸ்டார்கேட் திட்டம் மூலம் மேற்கூறிய நிறுவனங்கள் உதவியுடன் அமெரிக்காவில் ஏஐ உள்கட்டமைப்பு உருவாக்கத்துக்கு 500 பில்லியன் டாலர்கள் முதலீடு செய்யப்படும் என்று டிரம்ப் கூறினார்.
ஆனால் எக்ஸ், ஸ்பெஸ் எக்ஸ், டெஸ்லா ஆகியவற்றின் உரிமையாளரும் டிரம்பின் கூட்டாளியுமான எலான் மஸ்க், அவர்களிடம் [அந்த நிறுவனங்களிடம்] அவ்வளவு பணம் இல்லை என்று எக்ஸ் பதவில் தெரிவித்திருந்தார். SoftBank நிறுவனம் 10 பில்லியன் வரை தரும், ஆனால் மைக்ரோசாஃப்ட், ஓபன் ஏஐ... என்று மஸ்க் அவர்களை சீண்டும் விதமாக பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் CNBC செய்தி நிறுவன நேர்காணலின் போது, மஸ்க்கின் கூற்றுகளுக்கு பதிலளித்த மைக்ரோசாஃப்ட் நிறுவனர் சத்ய நாதெல்லா, என்னால் 80 பில்லியன் டாலர்கள் வரை [ஸ்டார்கேட் திட்டத்தில்]செலவழிக்க முடியும் என்று தெரிவித்தார்.
மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தை நம்பலாம். இந்தப் பணம் அனைத்தும் ஏஐ தொழில்நுட்பத்தை வளர்ப்பதற்கு அல்ல, ஆனால் நிஜ உலகத்திற்காக பயனுள்ள விஷயங்களை உருவாக்குவதே என்றும் அவர் தெரிவித்தார்.
அவர்களிடம் பணம் இல்லை என எலான் மஸ்க் கருத்தை ஓபன் ஏஐ சிஇஓ சால்ம் ஆல்ட்மேனும் நிராகரித்துள்ளார். ஸ்டார்கேட் திட்டத்திற்கான ஏஐ பரிசோதனையை வேலைகள் ஏற்கனவே தாங்கள் தொடங்கிவிட்டதாகவும், அதை மஸ்க் வந்து பார்க்கலாம் என்று கூறியுள்ளார்.
- ராணா அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார்.
- இந்தியாவுக்கு நாடு கடத்தப்படாமல் இருக்க ராணாவின் கடைசி முயற்சியும் தோல்வி அடைந்தது.
வாஷிங்டன்:
கடந்த 2008-ம் ஆண்டு மும்பையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 166 பேர் பலியானார்கள்.
இச்சம்பவத்தில் தொடர்புடைய பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்தவரும் கனடா குடியுரிமை பெற்றவருமான தஹாவூர் ராணா என்பவர், கடந்த 2009-ம் ஆண்டு அமெரிக்க போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவர் மீது அமெரிக்க கோர்ட்டில் விசாரணை நடந்து வந்தது.
இதற்கிடையே ராணாவை நாடு கடத்த இந்தியா கோரிக்கை விடுத்து மனு தாக்கல் செய்தது. இதையடுத்து லாஸ் ஏஞ்சல்சில் உள்ள அமெரிக்க மாவட்ட நீதிமன்றம் ராணாவை இந்தியாவுக்கு நாடு கடத்த அனுமதி அளித்தது.
இதை எதிர்த்து ராணா அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீது விசாரணை நடந்து வந்தது.
இந்த நிலையில் ராணாவை இந்தியாவுக்கு நாடு கடத்த அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது. இந்த வழக்கில் ராணாவுக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு எதிரான மறு ஆய்வு மனுவை தள்ளுபடி செய்தது. இந்தியாவுக்கு நாடு கடத்தப்படாமல் இருக்க ராணாவின் கடைசி முயற்சியும் தோல்வி அடைந்தது.
அவர் விரைவில் இந்தியாவுக்கு அழைத்து வரப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது ராணா, லாஸ் ஏஞ்சல்சில் உள்ள பெரு நகர தடுப்பு மையத்தில் உள்ளார்.
- 538 பேரை கைது செய்துள்ளது டொனால்டு டிரம்ப் நிர்வாகம்.
- 100-க்கும் அதிகமானோரை ராணுவ விமானம் மூலம் அமெரிக்காவில் இருந்து வெளியேற்றியுள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற குடியரசு கட்சியைச் சேர்ந்த டொனால்டு டிரம்ப், அமெரிக்காவில் சட்ட விரோதமாக தங்கியுள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியிருந்தார்.
டொனால்டு டிரம்ப் கடந்த திங்கட்கிழமை (20-ந்தேதி) அதிபராக பதவி ஏற்றுக் கொண்டார். அதில் இருந்து அதிகாரிகள் சட்ட விரோதமாக குடியேறியவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் வெள்ளை மாளிகை ஊடக செயலாளர் கரோலின் லீவிட் கூறுகையில் "அமெரிக்க அதிகாரிகள் சட்டவிரோதமாக குடியேறிய குற்றவாளிகள் 538 பேரை கைது செய்துள்ளனர்.
பயங்கரவாதிகள் என சந்தேகப்படும் உள்ளிட்ட 538 சட்டவிரோதமாக குடிபெயர்ந்த குற்றவாளிகளை டிரம்ப் நிர்வாகம் கைது செய்துள்ளது. டிரென் டி அராகுவா குரூப்பை சேர்ந்த 4 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். பலர் சிறார்களுக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டுக்காக தண்டிக்கப்பட்டுள்ளனர்.

ராணுவ விமானம் மூலம் சட்ட விரோதமாக குடிபெயர்ந்த குற்றவாளிகளை வெளியேற்றியுள்ளது. வரலாற்றில் மிகப்பெரிய நாடுகடத்தல் நடவடிக்கை சிறப்பாக நடைபெற்று வருகிறது. வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன. வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டன" எனத் தெரிவித்தார்.
- பிறப்பின் அடிப்படையிலான குடியுரிமையை அதிபர் டொனால்டு டிரம்ப் ரத்து செய்தார்.
- அமெரிக்க அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணான அதிபரின் உத்தரவை அமல்படுத்த வேண்டாம்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டிரம்ப் கடந்த திங்கள்கிழமை பதவியேற்றார். அவர் பதவியேற்றவுடன் பல்வேறு அதிரடி உத்தரவுகளில் கையெழுத்திட்டார்.
குறிப்பாக அமெரிக்க குடியுரிமை பெறாத பெற்றோருக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வந்த பிறப்பின் அடிப்படையிலான குடியுரிமையை அதிபர் டொனால்டு டிரம்ப் ரத்து செய்தார்.
இந்த உத்தரவு பிப்ரவரி 19 முதல் நடைமுறைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டது. இதற்கு எதிராக வாஷிங்டன், அரிசோனா, இலினாயிஸ் மற்றும் ஓரிகான் உள்ளிட்ட 22 ஜனநாயக கட்சி தலைமை வகிக்கும் மாகாண நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டன.

இந்நிலையில் டிரம்பின் உத்தரவுக்கு வாஷிங்டன் நீதிமன்றம் இடைக்கால தடை பிறப்பித்துள்ளது.
மேலும் அமெரிக்க அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணான அதிபரின் உத்தரவை அமல்படுத்த வேண்டாம் என்றும் அமெரிக்க அரசுக்கு அறிவுறுத்தி உள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்த அதிபர் டிரம்ப் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் போவதாக அறிவித்துள்ளார்.
- ரவிதேஜா முதுநிலை பட்டப்படிப்பு முடித்துவிட்டு வேலை தேடும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
- இந்தியர்கள் 3000 பேர் துப்பாக்கி சூட்டில் பலியான ரவி தேஜாவின் குடும்பத்தினருக்கு உதவ முன்வந்தனர்.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தை சேர்ந்தவர் சந்திரமவுலி. இவருடைய மனைவி சுவர்ணா. தம்பதியின் மகன் ரவி தேஜா (வயது 26) மகள் ஸ்ரேயா.
நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த சந்திரமவுலி தனது சொத்துக்களை விற்பனை செய்து மகன், மகளை வெளிநாட்டில் படிக்க வைக்க முடிவு செய்தார்.
அதன்படி கடந்த 2022-ம் ஆண்டு தனது வீடு உள்பட சொத்துக்களை விற்பனை செய்து ரவி தேஜா, மகள் ஸ்ரேயா ஆகியோரை அமெரிக்காவிற்கு படிக்க அனுப்பினார்.
ரவி தேஜா முதுநிலை பட்டப்படிப்பு முடித்துவிட்டு வேலை தேடும் பணியில் ஈடுபட்டிருந்தார். பகுதி நேர வேலையாக அங்குள்ள ஒரு உணவகத்தில் உணவு சப்ளை செய்யும் வேலை செய்தார்.
கடந்த 19-ந் தேதி நியூ ஹேவன் என்ற இடத்தில் உணவு வாகனத்தில் ரவி தேஜா சென்று கொண்டிருந்தார்.
அப்போது நடத்தப்பட்ட திடீர் துப்பாக்கி சூட்டில் அவர் குண்டு பாய்ந்து பரிதாபமாக இறந்தார்.
இந்த சம்பவம் அமெரிக்கா மற்றும் தெலுங்கானா மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனை கேட்டு குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
இந்த நிலையில் துப்பாக்கி சூட்டில் பலியான ரவி தேஜாவின் சகோதரி ஸ்ரேயா GoFundMe.com என்ற ஆன்லைன் முகவரி மூலம் தனது குடும்பத்திற்கு உதவுமாறு வேண்டுகோள் விடுத்தார்.
அதில் எனது சகோதரர் இறந்ததன் மூலம் எங்கள் குடும்பத்தினர் மிகவும் மன உளைச்சலில் தவிக்கிறோம். என்னுடைய தாய் குடும்பத் தலைவியாக உள்ளார். தந்தையால் தற்போது வேலைக்கு செல்ல முடியவில்லை.
எங்களை படிக்க வைப்பதற்காக எங்கள் வீடு உட்பட அனைத்தையும் விற்பனை செய்து விட்டோம். மேலும் என்னுடைய கல்விக்கடன், சகோதரர் இறுதிச்சடங்கு போன்ற செலவுக்காகக்காக நிதிச் சுமை ஏற்பட்டுள்ளது.
தயவுசெய்து அன்பு உள்ளம் கொண்டவர்கள் உதவி செய்யுங்கள் என உருக்கமாக அதில் பதிவிட்டிருந்தார்.
இதனை பார்த்து அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள் 3000 பேர் துப்பாக்கி சூட்டில் பலியான ரவி தேஜாவின் குடும்பத்தினருக்கு உதவ முன்வந்தனர்.
அவர்கள் இதுவரை 97 ஆயிரம் டாலர் அதாவது ரூ. 83 லட்சத்து 88 ஆயிரத்து 560 வழங்கி உதவி செய்துள்ளனர். ரூ.1.29 கோடி வரை நிதி திரட்ட முடியும் என தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் அமெரிக்காவில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
- பிறப்பின் அடிப்படையிலான குடியுரிமையை அதிபர் டொனால்டு டிரம்ப் ரத்து செய்தார்.
- இந்த உத்தரவு அமெரிக்காவில் பிப்ரவரி 19 முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டிரம்ப் சமீபத்தில் பதவியேற்றார். அவர் பதவியேற்றவுடன் பல்வேறு அதிரடி உத்தரவுகளில் கையெழுத்திட்டார்.
குறிப்பாக அமெரிக்க குடியுரிமை பெறாத பெற்றோருக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வந்த பிறப்பின் அடிப்படையிலான குடியுரிமையை அதிபர் டொனால்டு டிரம்ப் ரத்து செய்தார். இந்த உத்தரவு பிப்ரவரி 19 முதல் நடைமுறைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிரம்பின் இந்த உத்தரவுக்கு அமெரிக்காவின் இந்திய வம்சாவளி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இது தொடர்பாக பேசிய அமெரிக்க எம்.பி. பிரமிளா ஜெயபால், "இந்த உத்தரவு அரசியலமைப்புக்கு விரோதமானது. பேனாவைக் கொண்டு இதை மாற்றிவிட முடியாது. ட்ரம்ப் என்ன சொன்னாலும் சரி, பிறப்புரிமை குடியுரிமை நாட்டின் சட்டமாகும். எந்த விலை கொடுத்தேனும் அதைப் பாதுகாக்க நான் போராடுவேன்" என்று தெரிவித்தார்.
இந்நிலையில், பிப்ரவரி 19ம் தேதி வரை அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகளுக்கு மட்டுமே 'அமெரிக்க குடியுரிமை' கிடைக்கும் என்பதால் அதற்குள் குழந்தையை (C-SECTION) அறுவை சிகிச்சை மூலம் பெற்றெடுக்க அமெரிக்க வாழ் இந்திய தம்பதிகள் அவசரம் காட்டி வருகின்றனர்.
- 2500 வீரர்களுடன் இணைந்து எல்லையில் ரோந்து பணிகளில் ஈடுபடுவார்கள்.
- புலம்பெயர்ந்தோரை நாடு கடத்த ஏற்பாடு.
சட்டவிரோத குடியேற்றத்தை தடுக்க அமெரிக்கா-மெக்சிகோ எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்படும் என்று டிரம்ப் அறிவித்தார்.

இந்த நிலையில் அமெரிக்கா-மெக்சிகோ எல்லைக்கு கூடுதலாக 1000 ராணுவ வீரர்களும், 500 கடற்படையினரையும் அனுப்ப தொடங்கியுள்ளதாக பென்டகன் தெரிவித்துள்ளது. இவர்கள் ஏற்கனவே பணியில் உள்ள 2500 வீரர்களுடன் இணைந்து எல்லையில் ரோந்து உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுவார்கள்.
மேலும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தடுத்து வைக்கப்பட்டுள்ள புலம்பெயர்ந்தோரை நாடு கடத்துவதற்கான உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையின் விமானங்களுக்கு உதவ ராணுவ விமானங்கள், ஹெலிகாப்டர்கள் அனுப்பப்படுகின்றன.
- எலான் மஸ்க்-இன் செயல்பாடுகள் பேசு பொருளாகின.
- டிரம்ப்-இன் இரவு விருந்தில் கலந்து கொண்டுள்ளார்.
அமெரிக்காவின் 47-வது அதிபராக டொனால்டு டிரம்ப் கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் பதவியேற்றார். இதையொட்டி, டொனால்டு டிரம்ப் பிரமாண்ட இரவு விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார். இந்த விருந்தில், உலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். டொனால்டு டிரம்ப் பதவியேற்பு விழாவை ஒட்டி, எலான் மஸ்க்-இன் செயல்பாடுகள் பேசு பொருளாகின.
நாஜி சல்யூட் அடித்தது, தனது மகன் எக்ஸ்-ஐ மேடைக்கு அழைத்து வந்தது என எலான் மஸ்க்-இன் பல்வேறு காரணங்களுக்காக பேசப்பட்டது. இந்த நிலையில், டிரம்ப் கொடுத்த இரவு விருந்தில் எலான் மஸ்க்-இன் ரகசிய காதலி கலந்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. எலான் மஸ்க் உடன் மூன்று குழந்தைகளை பெற்றெடுத்துள்ள ஷிவோன் சிலிஸ் டிரம்ப்-இன் இரவு விருந்தில் கலந்து கொண்டுள்ளார்.
ஷிவோன் மற்றும் எலான் இடையிலான உறவு பற்றி தெளிவான தகவல்கள் மர்மமாகவே உள்ளன. எனினும், அவர் இதுபோன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் இருந்தார். சமீபத்திய இரவு விருந்தில் கலந்து கொண்ட ஷிவோன் எலிஸ் டெஸ்லா தலைமை செயல் அதிகாரியுடன் பேசிக் கொண்டிருக்கும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.
எலான் மஸ்க் மட்டுமின்றி இரவு விருந்தில் கலந்து கொண்ட ஜெஃப் பெசோஸ் மற்றும் அவர் திருமணம் செய்து கொள்ள இருக்கும் லாரென் சான்செஸ், இவாங்கா டிரம்ப் மற்றும் ஜாரெட் குஷ்னர் ஆகியோருடனும் ஷிவோன் எலிஸ் உரையாடினார். இத்தனை பெரும் நிகழ்வில் ஷிவோன் எலிஸ் பொதுப்படையாக கலந்து கொள்வது இதுவே முதல் முறை ஆகும்.
முன்னதாக கடந்த 2024-ம் ஆண்டு நடைபெற்ற பிளாக்-டை நிகழ்வில் ஷிவோன் கலந்து கொண்டார். எனினும், அவர் பொது வெளியில் தோன்றுவதை தவிர்த்தார். இவரது மகள் அஸ்யூர் எலான் மஸ்க் உடன் நிகழ்வில் தோன்றினார்.






