என் மலர்
அமெரிக்கா
- எவ்வித ராணுவ உத்தரவுகளையும் பிறப்பிக்கவில்லை.
- இதனை தீர்க்க வேண்டியது அவசியம் ஆகும்.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கிரீன்லாந்தை வாங்க முன்வந்த விவகாரம் நகைச்சுவை இல்லை என்று வெளியுறவுத் துறை செயலாளர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார். எனினும், கிரீன்லாந்தை கையகப்படுத்துவது அமெரிக்காவின் தேசிய நலனாக இருந்ததாக அவர் தெரிவித்தார்.
ஆர்க்டிக் பகுதியில் தனது இருப்பைத் தக்கவைத்துக் கொள்ள சீனா முயற்சிக்கலாம் என்று மார்கோ ரூபியோ எச்சரிக்கை விடுத்தார். தி மெக்கின் கெல்லி நிகழ்ச்சியில் பேசிய ரூபியோ, டிரம்ப் கிரீன்லாந்தை வாங்க விரும்புகிறார், கிரீன்லாந்தை கையகப்படுத்த அதிபர் எவ்வித ராணுவ உத்தரவுகளையும் பிறப்பிக்கவில்லை என்று தெரிவித்தார்.
"இது ஒன்றும் ஜோக் இல்லை. இது நிலத்தை கையகப்படுத்த வேண்டும் என்பதற்காக கையகப்படுத்தும் விஷயம் இல்லை. இது நம் தேசிய நலனுக்கானது. இதனை தீர்க்க வேண்டியது அவசியம் ஆகும்," என்று மார்கோ ரூபியோ தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "இது அதிபரின் முக்கிய பணிகளில் ஒன்றாக இருக்கிறது. இதை எப்படி தந்திரமாக கையாள வேண்டும் என்பது பற்றி ஆலோசிக்கும் நிலையில் நாங்கள் இல்லை. இன்று முதல் நான்கு ஆண்டுகளுக்கு நீங்கள் ஆர்க்டிக் பகுதி எங்கள் கண்காணிப்பில் மிக பாதுகாப்பாக இருக்கும் என்பதை உறுதியாக நம்பலாம்," என்று தெரிவித்தார்.
ஆர்க்டிக் பகுதி அமெரிக்கா பாதுகாக்க வேண்டிய மிக முக்கிய கப்பல் போக்குவரத்து தளமாக உருவெடுக்கும். சீனா இந்த பகுதியில் தனது இருப்பை வளர்த்துக் கொள்ள முயற்சிக்கும் என்று ரூபியோ எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்க ராணுவத்திற்கு வடமேற்கு கிரீன்லாந்தில் நிரந்தர ராணுவ தளம் உள்ளது குறிப்பிடத்தக்கது.
டென்மார்க்-இடம் இருந்து சுதந்திரம் பெற முயற்சித்து வரும் கிரீன்லாந்து பிரதமர் மியூட் எகெட், தங்களது தீவு விற்பனைக்கு அல்ல என்றும், மக்கள் தங்கள் எதிர்காலத்தை தீர்மானிக்க வேண்டும் என்று தொடர்ச்சியாக கூறி வருகிறார்.
- அவர்களில் ஒருவர் கூட உயிர்பிழைக்காதது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- மற்ற உடல்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
அமெரிக்காவில் நடு வானில் ராணுவ ஹெலிகாப்டர் பயணிகள் விமானத்தில் மீது மோதி விபத்துக்குள்ளானதில் 67 பேர் உயிரிழந்தனர்.
கடந்த புதன்கிழமை இரவு தலைநகர் வாஷிங்டனில் ரொனால்ட் ரீகன் தேசிய விமான நிலையத்தில் ஹெலிகாப்டர் தரையிறங்கும் போது ஜெட் விமானத்தின் பாதையில் பறந்து சென்றபோது விபத்து ஏற்பட்டது. விமானத்தில் 60 பயணிகள் மற்றும் நான்கு பணியாளர்கள் இருந்தனர். ஹெலிகாப்டரில் மூன்று வீரர்கள் இருந்தனர். அவர்களில் ஒருவர் கூட உயிர்பிழைக்காதது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விபத்துக்கு சற்றுமுன் வரை ராணுவ விமானியின் நடவடிக்கைகளை ஆராய்ந்த அதிகாரிகள், இந்த விமான பேரழிவு ஏற்பட்ட நேரத்தில் விமான நிலையத்தின் தரை கட்டுப்பாட்டு ஊழியர்கள் வழக்கத்தை விட குறைவான எண்ணிக்கையில் இருந்ததாக தெரிவித்தனர்.

ஃபெடரல் ஏவியேஷன் அறிக்கையின்படி, மோதல் நடந்தபோது, ரீகன் நேஷனலில் உள்ள கோபுரத்தில் இரண்டு பேருக்கு ஒதுக்கப்பட்ட பணியை ஒரு விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர் மட்டுமே செய்து கொண்டிருந்தார் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
2001 ஆம் ஆண்டுக்குப் பிறகு அமெரிக்காவில் நடந்த மிக மோசமான விமான விபத்து இதுவாகும். மோதலுக்கான காரணம் குறித்து உடனடி தகவல் எதுவும் வெளியாகவில்லை.
இந்நிலையில் இந்த விபத்துக்கு முன்னாள் அதிபர்கள் ஜோ பைடன் மற்றும் பராக் ஒபாமாவே காரணம் என தற்போதைய அதிபர் டொனல்டு டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளார்.
விமான விபத்து குறித்து வெள்ளை மாளிகையில் நேற்று [வியாழக்கிழமை] செய்தியாளர்களைச் சந்தித்த டிரம்ப், ஒபாமாவும் பைடனும் குடிமக்களின் பாதுகாப்புக்குப் பதிலாக இடதுசாரி பன்முகத்தன்மை கொள்கைக்கு முன்னுரிமை கொடுத்தனர்.
அதனால் விமானப் போக்குவரத்துத் துறையில் இருந்த திறமையானவர்கள் வெளியேற்றப்பட்டனர். 2016 இல் நான் அதிபரானபோது, அறிவுத்திறன் மற்றும் உளவியல் ரீதியாக மேம்பட்டவர்களை மட்டுமே விமான கட்டுப்பாட்டாளர்களாக தேர்ந்தெடுக்க அனுமதித்தேன்.

ஆனால் 2020 இல் ஜோ பைடன் அதிபரான பிறகு விமான துறையை முன்பைவிட தரம் குறைந்ததாக மாற்றினார். இந்த விபத்து குறித்த விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளேன்.
விபத்தில் உயிரிழந்தவர் குடும்பங்களுக்கு அனைத்து விதமான உதவிகளும் செய்து தரப்படும் என்று தெரிவித்துள்ளார். இந்த விபத்தில் இதுவரை 28 உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில் மற்ற உடல்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
- டிரம்பின் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகளை பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா முடக்கியது.
- டிரம்ப் தொடர்ந்த அவதூறு வழக்கில் அவருடன் சமரசம் செய்ய மெட்டா நிறுவனம் முன்வந்துள்ளது.
அமெரிக்காவில் கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடனிடம் குடியரசு கட்சி வேட்பாளர் டிரம்ப் தோல்வி அடைந்தார்.
ஆனால் தனது தோல்வியை ஏற்க மறுத்த டிரம்ப், தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்றதாக குற்றம் சாட்டினார். அதோடு வன்முறையை தூண்டும் வகையில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் உள்ளிட்ட சமூகவலைத்தளங்களில் தொடர்ந்து பதிவுகளை வெளியிட்டு வந்தார்.
இதன் விளைவாக கடந்த 2021-ம் ஆண்டு ஜனவரி 6-ந்தேதி டிரம்பின் ஆதரவாளர்கள் நூற்றுக்கணக்கானோர் பாராளுமன்றத்துக்குள் புகுந்து பெரும் வன்முறையில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, வன்முறையை தூண்டியதாக குற்றம் சாட்டி டிரம்பின் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகளை பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா முடக்கியது.
இதனால் கோபமடைந்த டிரம்ப், தன் மீது அவதூறு சுமத்தி பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகளை முடக்கியதாக கூறி மெட்டா நிறுவனத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில் மீண்டும் ஜனாதிபதி ஆகியுள்ள டிரம்ப், கடந்த காலங்களில் தன்னை விமர்சித்தவர்கள் மற்றும் தனக்கு எதிராக செயல்பட்டவர்களை பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடலாம் என்கிற அச்சம் நிலவுகிறது.
இதனிடையே மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜூக்கர்பெர்க் தொழிலை சுமூகமாக நடத்துவதற்கு டிரம்ப் நிர்வாகத்துடன் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளார்.
இதன்காரணமாக டிரம்ப் தொடர்ந்த அவதூறு வழக்கில் அவருடன் சமரசம் செய்ய மெட்டா நிறுவனம் முன்வந்துள்ளது. அதன்படி வழக்கை முடித்துக் கொள்ள டிரம்புக்கு 25 மில்லியன் டாலர் (ரூ.216 கோடி) வழங்குவதாக மெட்டா நிறுவனம் கோர்ட்டில் தெரிவித்துள்ளது.
- ஊழியர்கள் வழக்கத்தை விட குறைவான எண்ணிக்கையில் இருந்ததாக தெரிவித்தனர்.
- ஹெலிகாப்டரில் மூன்று வீரர்கள் இருந்தனர்.
ராணுவ ஹெலிகாப்டர் மற்றும் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானமும் நடுவானில் மோதிய விபத்தில் 67 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டர் மற்றும் விமானத்தில் இருந்த ஒருவர்கூட உயிர்பிழைக்காதது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
விபத்துக்கு சற்றுமுன் வரை ராணுவ விமானியின் நடவடிக்கைகளை ஆராய்ந்த அதிகாரிகள், இந்த விமான பேரழிவு ஏற்பட்ட நேரத்தில் விமான நிலையத்தின் தரை கட்டுப்பாட்டு ஊழியர்கள் வழக்கத்தை விட குறைவான எண்ணிக்கையில் இருந்ததாக தெரிவித்தனர்.
கடந்த புதன்கிழமை இரவு வாஷிங்டனுக்கு எதிரே உள்ள ரொனால்ட் ரீகன் தேசிய விமான நிலையத்தில் ஹெலிகாப்டர் தரையிறங்கும் போது ஜெட் விமானத்தின் பாதையில் பறந்து சென்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர். விமானத்தில் 60 பயணிகள் மற்றும் நான்கு பணியாளர்கள் இருந்தனர். ஹெலிகாப்டரில் மூன்று வீரர்கள் இருந்தனர்.
ஃபெடரல் ஏவியேஷன் அறிக்கையின்படி, மோதல் நடந்தபோது, ரீகன் நேஷனலில் உள்ள கோபுரத்தில் இரண்டு பேருக்கு ஒதுக்கப்பட்ட பணியை ஒரு விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர் மட்டுமே செய்து கொண்டிருந்தார் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
2001 ஆம் ஆண்டுக்குப் பிறகு அமெரிக்காவில் நடந்த மிக மோசமான விமான விபத்து இதுவாகும். மோதலுக்கான காரணம் குறித்து உடனடி தகவல் எதுவும் வெளியாகவில்லை.
- படகுகளில் சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டனர்.
- நீச்சல் வீரர்களும் ஆற்றுக்குள் இறங்கி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
வாஷிங்டன்:
அமெரிக்காவின் கன்சாஸ் மாகாணம் விச்சிட்டாவில் இருந்து பயணிகள் விமானம் ஒன்று தலைநகர் வாஷிங்டனில் உள்ள ரீகன் தேசிய விமான நிலையத்திற்கு புறப்பட்டு சென்றது.
அமெரிக்கன் ஏர்லைன்சுக்கு சொந்தமான அந்த விமானத்தில் 60 பயணிகள், 4 ஊழியர்கள் என 64 பேர் இருந்தனர். விமானம் ரீகன் விமான நிலையத்தில் தரையிறங்க முயற்சித்தது. விமானம் போடோமாக் நதியின் மேல் பறந்து கொண்டிருந்தபோது அமெரிக்க ராணுவத்தின் பிளாக்ஹாக் ஹெலிகாப்டர் அருகே பறந்து கொண்டிருந்தது.
அப்போது ஹெலிகாப்டருடன் பயணிகள் விமானம் எதிர்பாராதவிதமாக நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் தீப்பிழம்பு ஏற்பட்டு பயணிகள் விமானம் ஆற்றில் விழுந்தது. இதையடுத்து மீட்புப்படையினர் அங்கு விரைந்து சென்றனர்.

அமெரிக்க பாதுகாப்புப் படை மற்றும் தீயணைப்புப் படையினர் ஆற்றில் தேடுதல் பணியை தொடங்கினர். படகுகளில் சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டனர். நீச்சல் வீரர்களும் ஆற்றுக்குள் இறங்கி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ஆம்புலன்சுகள், மருத்துவக் குழு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்தில் சிக்கிய 64 பேரை மீட்கும் பணி தீவிரமாக நடந்தது. ஆனால் 19 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. மற்றவர்களை தேடும் பணி நடந்து வருகிறது. அவர்கள் கதி என்ன என்பது தெரியாததால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது
அதேபோல் பயிற்சியில் ஈடுபட்டு இருந்த 3 ராணுவ வீரர்கள் ஹெலிகாப்டரில் இருந்தனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்தைதொடர்ந்து ரீகன் விமான நிலையம் மூடப்பட்டது. அங்கு அனைத்து விமானங்கள் புறப்படுதல் மற்றும் தரையிறங்குதல்களை நிறுத்தி வைத்துள்ளதாக விமான நிலைய இயக்குநர் தெரிவித்தார். விமான நிலையத்துக்கு வந்த விமானங்கள் திருப்பிவிடப்பட்டன.
விபத்து குறித்த தகவல்கள் அதிபர் டொனால்டு டிரம்புக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. இதுகுறித்து டிரம்ப் கூறும்போது, விமான விபத்து குறித்து எனக்கு முழுமையாகத் தெரிவிக்கப்பட்டது. நிலைமையை கண்காணித்து வருகிறேன் என்றார்.
மேலும், விபத்துக்கான காரணம் குறித்து அமெரிக்க போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் தலைமையில் விசாரணை தொடங்கிஉள்ளது. இதற்கிடையே அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் கூறும்போது , விமானத்தில் உள்ள பயணிகள் மற்றும் பணியாளர்கள் மீது எங்களுக்கு கவலை உள்ளது. நாங்கள் அதிகாரிகளுடன் தொடர்பில் இருக்கிறோம். அவசரகால மீட்பு முயற்சிகளுக்கு உதவுகிறோம் என்று தெரிவித்துள்ளது.
ஹெலிகாப்டருடன் விமானம் நடுவானில் மோதிய வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
- ராணுவ ஹெலிகாப்டரில் எத்தனை பேர் இருந்தனர் என்பது குறித்து உறுதியான தகவல் வெளியாகவில்லை.
- விபத்து குறித்த தகவல்கள் அதிபர் டொனால்டு டிரம்புக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் கன்சாஸ் மாகாணம் விச்சிட்டாவில் இருந்து பயணிகள் விமானம் ஒன்று தலைநகர் வாஷிங்டனில் உள்ள ரீகன் தேசிய விமான நிலையத்திற்கு புறப்பட்டு சென்றது.
அமெரிக்கன் ஏர்லைன்சுக்கு சொந்தமான அந்த விமானத்தில் 60 பயணிகள், 4 ஊழியர்கள் என 64 பேர் இருந்தனர். விமானம் ரீகன் விமான நிலையத்தில் தரையிறங்க முயற்சித்தது. விமானம் போடோமேக் நதியின் மேல் பறந்து கொண்டிருந்தபோது அமெரிக்க ராணுவத்தின் பிளாக்ஹாக் ஹெலிகாப்டர் அருகே பறந்து கொண் டிருந்தது.
அப்போது ஹெலிகாப்டருடன் பயணிகள் விமானம் எதிர்பாராதவிதமாக நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் தீப்பிழம்பு ஏற்பட்டு பயணிகள் விமானம் ஆற்றில் விழுந்தது. இதையடுத்து மீட்புப்படையினர் அங்கு விரைந்து சென்றனர். அமெரிக்க பாதுகாப்புப் படை மற்றும் தீயணைப்புப் படையினர் ஆற்றில் தேடுதல் பணியை தொடங்கினர்.
படகுகளில் சென்று மீட்புப் பணியில் ஈடுபட்ட னர். நீச்சல் வீரர்களும் ஆற்றுக்குள் இறங்கி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ஆம்புலனஸ்சுகள், மருத்துவக் குழு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தில் சிக்கிய 64 பேர் கதி என்ன என்பது தெரியவில்லை. தொடர்ந்து மீட்புப்பணி தீவிரமாக நடந்து வருகிறது.
இதற்கிடையே 2 பேர் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது. அதேபோல் ராணுவ ஹெலிகாப்டரில் எத்தனை பேர் இருந்தனர் என்பது குறித்து உறுதியான தகவல் வெளியாகவில்லை.
விபத்தை தொடர்ந்து ரீகன் விமான நிலையம் மூடப்பட்டது. அங்கு அனைத்து விமானங்கள் புறப்படுதல் மற்றும் தரையிறங்குதல்களை நிறுத்தி வைத்துள்ளதாக விமான நிலைய இயக்குநர் தெரிவித்தார்.
விபத்து குறித்த தகவல்கள் அதிபர் டொனால்டு டிரம்புக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து டிரம்ப் கூறும்போது, விமான விபத்து குறித்து எனக்கு முழுமையாகத் தெரிவிக்கப்பட்டது. நிலைமையை கண்காணித்து வருகிறேன் என்றார்.
மேலும், விபத்துக்கான காரணம் குறித்து அமெரிக்க போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் தலைமையில் விசாரணை தொடங்கியுள்ளது. ஹெலிகாப்டருடன் விமானம் நடுவானில் மோதி வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
- F-35 Lightning II போர் விமானம் பயிற்சியின் போது விபத்துக்குள்ளானது.
- F-35 ஒரே நேரத்தில் 12 மணி நேரத்திற்கும் மேலாகப் பறக்கும் திறனுடையது
அமெரிக்காவில் விமானப்படை ஜெட் விமானம் ஒன்று பயிற்சியின்போது கீழே விழுந்து விபத்துக்களாகியுள்ளது.
நேற்று (ஜனவரி 28) மதியம் அலாஸ்காவின் ஃபேர்பேங்க்ஸ் அருகே அமைந்துள்ள எய்ல்சன் விமானப்படைத் தளத்தில் F-35 Lightning II போர் விமானம் பயிற்சியின் போது விபத்துக்குள்ளானது.
விமானத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக விபத்து ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
பயிற்சியின் போது தரையிறங்கும் சமயத்தில் விபத்து நேர்ந்ததாக எய்ல்சன் விமானப்படை அறிக்கை கூறுகிறது.
இதனால் விமானம் கடுமையான சேதத்தைச் சந்தித்துள்ளது. விமானம் கீழே விழுவதற்கு முன் விமானி அதிலிருந்து எட்ஜெக்ட் ஆகி வெளியே வெளியேறிய குதித்ததால் பாதுகாப்பாக இருப்பதாகவும், பாசெட் ராணுவ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
F-35 ஒரே நேரத்தில் 12 மணி நேரத்திற்கும் மேலாகப் பறக்கும் திறனுடையது என்பது குறிப்பிடத்தக்கது.
- ஏற்பாடுகளை செய்யுமாறு வலியுறுத்தி இருப்பதாக தெரிவித்துள்ளார்.
- சிக்கி தவிப்பது கொடூரமானது என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க தொழிலதிபரும், உலக பணக்காரர்களில் ஒருவருமான எலான் மஸ்க் அதிபர் டொனால்டு டிரம்ப் தன்னிடம் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து பூமிக்கு திரும்ப முடியாமல் தவிக்கும் இரண்டு விண்வெளி வீரர்கள் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பட்ச் வில்மோர் ஆகியோரை மீட்க தேவையான ஏற்பாடுகளை செய்யுமாறு வலியுறுத்தி இருப்பதாக தெரிவித்துள்ளார்.
முன்னாள் அதிபர் ஜோ பைடனின் நிர்வாகத்தால் இரண்டு விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் நீண்ட காலமாக சிக்கி தவித்து வருவது கொடூரமானது என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
"விண்வெளி ஆய்வு மையத்தில் சிக்கித் தவிக்கும் இரண்டு விண்வெளி வீரர்களை விரைவில் வீட்டிற்கு அழைத்து வர டொனால்டு டிரம்ப் ஸ்பேஸ் எக்ஸ்-ஐ கேட்டுள்ளார். நாங்கள் அவ்வாறு செய்வோம். பைடன் இவர்களை நீண்ட காலம் தவிக்க செய்தது கொடூரமானது," என்று மஸ்க் எக்ஸ் தள பதிவில் கூறினார்.
கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக விண்வெளி ஆய்வு மையத்தில் வீரர்கள் சிக்கித் தவிக்கும் நிலையில், அவர்கள் சிக்கி தவிக்கவில்லை, நலமுடன் இருக்கிறார்கள் என்று அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா தொடர்ச்சியாக தெரிவித்து வருகிறது.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் விண்வெளி ஆய்வு மையத்திற்கு சென்ற சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் பத்து நாட்களில் பூமிக்க திரும்ப திட்டமிடப்பட்டு இருந்தது. எனினும், அவர்கள் இன்றுவரை பூமிக்கு திரும்ப முடியாத சூழல்தான் நிலவுகிறது.
- அமெரிக்காவில் பெடரல் அரசும் மாகாண அரசும் தனித்தனியாக வருமான வரி விதிக்கின்றன.
- பெடரல் அரசின் வருமான வரியை ரத்து செய்யும் திட்டம் உள்ளதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் கடந்த 20-ந்தேதி பதவியேற்றுக்கொண்டதில் இருந்து பல தடாலடி உத்தரவுகளை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், அமெரிக்க மக்களுக்கான வருமான வரியை ரத்து செய்யும் திட்டம் தன்னிடம் இருப்பதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
வருமான வரிக்கு பதிலாக வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீதான வரிகளை உயர்த்த போவதாகவும் இதன் மூலம் அமெரிக்க மக்களைப் பணக்காரர்களாக ஆக்க முடியும் என்று டிரம்ப் கூறியுள்ளார்.
அமெரிக்காவில் பெடரல் அரசும் மாகாண அரசும் தனித்தனியாக வருமான வரி விதிக்கின்றன. அவ்வகையில் பெடரல் அரசின் வருமான வரியை ரத்து செய்யும் திட்டம் உள்ளதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். அதே சமயம் மாகாண அரசுகளின் வருமான வரி குறித்து சம்பந்தப்பட்ட மாகாண அரசுகளே முடிவெடுக்கும்.
பொதுமக்களின் வருமான வரியை டிரம்ப் ரத்து செய்தால் பணவீக்கம் அதிகரிக்கும் ஆபத்து இருப்பதாகவும் அதிகரித்த இறக்குமதி செலவுகள் காரணமாக அதிக வட்டி விகிதம் ஏற்படும் என்று சில பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கிறார்கள்.
- கைவிலங்கிட்டு கீழ்த்தரமாக அமெரிக்கா நடத்தியுள்ளது என அந்நாடு குற்றம் சாட்டியது.
- கடந்த சில நாட்களில் 956 பேர் வரை கைது செய்துள்ளனர்.
அமெரிக்க அதிபராக பதவியேற்றுள்ள டொனால்டு டிரம்ப் அந்நாட்டில் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களை வெளியேற்றத் தீவிரமும் கடுமையும் காட்டி வருகிறார்.
முதற்கட்டமாக பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்டவர்களை அமெரிக்க அதிகாரிகள் கைது செய்து விமானப்படை விமானங்கள் மூலம் அனுப்பி வைத்தனர். மெக்சிகோ, கொலம்பியா, பிரேசில் ஆகிய நாடுகளைச் சேர்த்தவர்கள் இவ்வாறு நாடுகடத்தப்பட்டுள்ளனர்.

இதற்கு முதலில் எதிர்ப்பு தெரிவித்த தென் அமெரிக்க நாடான கொலம்பியா, டிரம்ப்பின் 25 சதவீத ஏற்றுமதி வரி உயர்வு, விசா ரத்து உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு அஞ்சி தங்கள் நாட்டு அகதிகளை ஏற்றுக்கொள்வதாகத் தெரிவித்தது.
மேலும் பிரேசிலுக்கு இவ்வாறு அனுப்பி வைக்கப்பட்ட அகதிகளுக்கு குடிக்க தண்ணீர் கொடுக்காமல், விமானத்தில் ஏசி இல்லாமல், கைவிலங்கிட்டு கீழ்த்தரமாக அமெரிக்கா நடத்தியுள்ளது என அந்நாடு குற்றம் சாட்டியது.

ஆனால் எதையும் காதில் வாங்காத அமெரிக்கா, தொடர்ந்து தங்கள் நாட்டில் சட்டவிரோதமாகத் தங்கியுள்ளவர்களைக் கண்டறிவதில் தீவிரம் காட்டி வருகிறது. அமெரிக்க குடிவரவு [கஸ்டம்ஸ்] அதிகாரிகள் கடந்த சில நாட்களில் 956 பேர் வரை கைது செய்துள்ளனர்.


இந்தநிலையில்தான் உலகப் புகழ் பெற்ற பாடகி செலினா கோம்ஸ் தனது இன்ஸ்டாகிராம் சமூக வலைதள பதிவில், "என் மக்கள் அனைவரும் தாக்கப்படுகிறார்கள், குழந்தைகள் உட்பட. எனக்கு எதுவும் புரியவில்லை. இதற்கு நான் ஏதாவது செய்ய விரும்புகிறேன், ஆனால் என்னால் முடியவில்லை. எல்லா வழிகளிலும் நான் முயற்சி செய்வேன் என்று வாக்கு கொடுக்கிறேன் " என்று தேம்பித் தேம்பி அழுதபடி வீடியோ ஒன்றை பதிவிட்டார்.
நேற்று அவர் வெளியிட்ட இந்த பதிவை சில மணி நேரம் கழித்து அவர் நீக்கிவிட்டார். ஆனால் அவரின் இந்த வீடியோ இணையத்தில் பேசுபொருளாகி வருகிறது. தனது ஆதரவை வெளிப்படையாக கூற கூட உரிமை இல்லாத சூழல் அமெரிக்காவில் வந்துவிட்டது என பலர் கூறி வருகின்றனர்.
ஆனால் டிரம்ப் ஆதரவாளர்கள் செலினா தேம்பி அழும் வீடியோவை கிண்டலடித்து சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். முந்தைய காலங்களிலும் செலினா கோம்ஸ் அமெரிக்காவுக்கு புலம்பெயர்ந்தவர்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை வெளிப்படுத்தி வந்தார்.
2019 இல் புலம்பெயர்ந்தவர்களின் இன்னல்களை பற்றி பேசும் 'லிவ்விங் அண்டாக்குமெண்டட்' என்ற ஆவணப்படத்தை நெட்பிளிக்ஸ் உடன் இணைந்து தயாரித்தார். அமெரிக்கரான செலினா கோம்ஸ் உடைய தந்தை மெக்சிகோ நாட்டை சேர்த்தவர், தாய் இத்தாலி நாட்டின் வழி வந்தவர் ஆவார்.
- ஏர் போர்ஸ் ஒன் விமான பயணத்தின்போது பேசிய டிரம்ப் செய்தியாளர்களிடம் பேசினார்.
- அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறிய 18,000 இந்தியர்களைத் திரும்பப்பெறுவதாக இந்தியாவும் உடன்பட்டுள்ளது.
நரேந்திர மோடி பிப்ரவரி மாதம் வெள்ளை மாளிகையில் வைத்து தன்னை சந்திப்பார் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார்.
நேற்று ஏர் போர்ஸ் ஒன் விமான பயணத்தின்போது பேசிய டிரம்ப் நேற்று காலை மோடியுடன் நீண்டநேரம் போனில் பேசியதாக தெரிவித்தார். அநேகமாகப் பிப்ரவரியில் வெள்ளை மாளிகைக்கு மோடி வரப்போகிறார் என்றும் இந்தியாவுடன் அமெரிக்காவுக்கு நல்ல உறவு உள்ளது என்றும் தெரிவித்தார்.

மேலும் தங்களது உரையாடலில் இரு நாட்டு உறவை வலுப்படுத்துவது, இந்தோ-பசிபிக், மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பாவில் பாதுகாப்பு உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து விவாதித்துள்ளனர்.
மோடியுடன் சட்டவிரோத குடியேற்றப் பிரச்சனை குறித்து விவாதித்ததாக டிரம்ப் குறிப்பிட்டார். சட்டவிரோதமாக அமெரிக்காவிற்கு வந்த இந்தியக் குடியேறிகளை திரும்பப் பெறும் விஷயத்தில் பிரதமர் மோடி "சரியானதைச் செய்வார்" என்றும் டிரம்ப் தெரிவித்தார். அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறிய 18,000 இந்தியர்களைத் திரும்பப்பெறுவதாக இந்தியாவும் உடன்பட்டுள்ளது. அமெரிக்காவில் சட்டவிரோத குடியேறிகளுக்கு புகலிடம் வழங்குவதாக பல்வேறு குருத்துவாராக்களில் எப்.பி.ஐ சோதனைகளை தொடங்கியள்ளது.
அமெரிக்காவில் சட்டவிரோத குடியேறிகளை வெளியேற்றுவதில் டிரம்ப் தீவிரம் காட்டி வருகிறார். முன்னதாக பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்டவர்களை அமெரிக்க அதிகாரிகள் கைது செய்து விமானப்படை விமானங்கள் மூலம் அனுப்பி வைத்தனர்.
தங்கள் நாட்டு அகதிகளை ஏற்க கொலம்பியா முதலில் மறுத்த நிலையில் அந்நாட்டின் ஏற்றுமதி பொருட்களுக்கு 25 சதவீத வரி உயர்வு, அரசு அதிகாரிகள் அவர்களை சார்ந்தோர்களின் விசா ரத்து உள்ளிட்ட கெடுபிடி உத்தரவுகளை டிரம்ப் பிறப்பித்தார்.
இதனால் பணிந்த கொலம்பியா தங்கள் நாட்டவரை ஏற்பதாக தெரிவித்தது. தொடர்ந்து தனது வரி உயர்வு, விசா ரத்து உத்தரவுகளை டிரம்ப் திரும்பப்பெற்றார். அதேபோல் பிரேசில் நாடும் தங்கள் அகதிகளை திரும்பப்பெற்றுள்ள நிலையில், தங்கள் நாட்டவரை விமானத்தில் தண்ணீர் கொடுக்கால், ஏசி இல்லாமல், கைவிலங்கிட்டு அமெரிக்கா கீழ்த்தரமாக நடத்தியுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே டிரம்ப் - மோடி டெலிபோன் உரையாடல் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள வெள்ளை மாளிகை, இந்தியா-அமெரிக்கா இடையேயான ஒத்துழைப்பை மேலும் ஆழமாக மேற்கொள்ளுதல், நியாயமான இருதரப்பு வர்த்தக உறவை உறுதிசெய்தல் என்பது குறித்து இருதலைவர்களும் உரையாடினர் என குறிப்பிட்டுள்ளது.
- அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் மாபெரும் வெற்றி பெற்றார்.
- இஸ்ரேல் பிரதமர் அதிபர் டிரம்ப்-ஐ சந்திப்பார் என்று தகவல்.
பிரதமர் நரேந்திர மோடி பிப்ரவரி மாதம் வெள்ளை மாளிகையில் வைத்து தன்னை சந்திப்பார் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார்.
"இன்று காலை அவருடன் நீண்ட நேரம் பேசினேன். அவர் அடுத்த மாதம், அநேகமாக பிப்ரவரியில் வெள்ளை மாளிகைக்கு வருவார். இந்தியாவுடன் எங்களுக்கு நல்ல உறவு இருக்கிறது," என்று டிரம்ப் கூறினார்.
முதல் முறை அதிபராக பதவி வகித்த போது, டொனால்டு டிரம்ப் கடைசியாக இந்தியாவுக்கு தான் வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிபர் டிரம்ப் மற்றும் பிரதமர் மோடியும் இடையே நல்ல நட்புறவு நீடிக்கிறது. இருவரும் கடந்த செப்டம்பர் 2019-ல் ஹூஸ்டனில் நடந்த இரண்டு வெவ்வேறு பேரணிகள் மற்றும் கடந்த பிப்ரவரி 2020-ல் அகமதாபாத்தில் ஆயிரக்கணக்கான மக்களிடம் உரையாற்றினர்.
2024 நவம்பர் மாதம் அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றதும் அவருடன் பேசிய முதல் மூன்று உலகத் தலைவர்களில் பிரதமர் மோடியும் ஒருவர் ஆவார்.






