என் மலர்tooltip icon

    அமெரிக்கா

    • அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட பிரிடேட்டர் டிரோன்களை வாங்குவதற்கான ஒப்பந்தம் பலஆண்டுகளாக செயல்பாட்டில் உள்ளது.
    • நவீன டிரோன்களை வாங்க இந்தியா முடிவு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் நட்பு நாடாக இந்தியா இருந்து வருகிறது. இரு நாடுகள் இடையே பல்வேறு துறைகளில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    இந்நிலையில் அமெரிக்காவிடம் இருந்து நவீன டிரோன்களை (ஆளில்லா விமானம்) வாங்குவது தொடர்பாக இந்தியா இன்று முடிவு செய்ய உள்ளது.

    அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட பிரிடேட்டர் டிரோன்களை வாங்குவதற்கான ஒப்பந்தம் பலஆண்டுகளாக செயல்பாட்டில் உள்ளது. ஆனால் மேக் இன் இந்தியா திட்டத்திற்கு ஊக்கம் அளிக்கும் வகையில் அந்த ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

    இதற்கிடையே அமெரிக்காவின் பிரிடேட்டர் டிரோன்களை வாங்குவதற்கான ஒப்பந்தம் குறித்து இந்திய பாதுகாப்பு அமைச்சகம் இன்று முடிவு செய்ய உள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

    இன்று நடைபெறும் கூட்டத்தில் ஒப்பந்தம் குறித்து இறுதி செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி வருகிற 21-ந் தேதி அமெரிக்காவுக்கு அரசு முறை பயணமாக செல்வதற்கு முன்பாக பாதுகாப்பு அமைச்சக கூட்டம் நடைபெறுகிறது.

    பிரதமர் மோடியின் அமெரிக்க வருகைக்கு முன்பாக இந்த ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளிக்க மத்திய அரசை அமெரிக்க அதிபர் ஜோபைடன் நிர்வாகம் வலியுறுத்தியதாக தகவல் வெளியாகின.

    அமெரிக்க வெளியுறவுத் துறை, பென்டகன் மற்றும் வெள்ளை மாளிகை ஆகியவை இந்த ஒப்பந்தத்தை மேற்கொள்ள இந்தியாவிடம் கேட்டு கொண்டன. இதையடுத்து அமெரிக்க நவீன டிரோன்களை வாங்க இந்தியா முடிவு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த டிரோன்கள் அதிக உயரத்தில் பறக்கும் திறன் கொண்டது. ஏவுகனைகளை ஏந்தி சென்று இலக்குகளை அதிக துல்லியத்துடன் தாக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்தியா தற்போது ஒரு அமெரிக்க நிறுவனத்திடம் இருந்து டிரோன்களை குத்தகைக்கு எடுத்து இயக்கி வருகிறது. அந்த டிரோன்கள் இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் கண்காணிக்க கடற்படைக்கு உதவுகின்றன.

    • நண்பர்களைப் போன்ற வாழ்க்கை முறையைப் பெறுவதே பணக்காரர்களாக உணர வைப்பதாக பாதிக்கும் மேற்பட்டவர்கள் கூறியிருக்கின்றனர்.
    • மக்கள் செல்வநிலைக்கான அளவுகோலை தங்களுக்கும் பிறருக்கும் வித்தியாசமாக வைத்திருக்கின்றனர்.

    அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல நிதி சேவை நிறுவனமான சார்லஸ் ஷ்வாப் நிறுவனம், அமெரிக்காவில் பணக்காரர்களுக்கான சொத்து மதிப்பு தொடர்பாகவும், பணக்காரர்கள் பட்டியலில் இணைய வேண்டுமானால் அதற்கு தேவைப்படும் நிகர சொத்து மதிப்பு குறித்தும் கணக்கெடுப்பு நடத்தியது. உங்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? நீங்கள் பணக்காரரா, இல்லையா? உங்களைப் பணக்காரராகக் கருதுவதற்கு எவ்வளவு பணம் தேவைப்படும்? என்பது போன்ற கேள்விகள் கேட்கப்பட்டு அவர்கள் அளிக்கும் பதில்கள் தொகுக்கப்பட்டு வெளியிடப்பட்டன.

    இந்த கணக்கெடுப்பில், பெரும்பாலானோர் அமெரிக்காவில் பணக்காரர் என்ற அந்தஸ்தை பெறுவதற்கு 2.2 மில்லியன் டாலர்கள் மதிப்பிலான சொத்து இருக்க வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளனர். எனினும், இந்த கேள்விகளுக்கு பதில் அளித்தவர்களில் 48% பேர் தங்களிடம் சராசரி நிகர சொத்து மதிப்பு 5,60,000 டாலர் என்ற அளவில் இருக்கும்போதே தாங்கள் ஏற்கனவே செல்வந்தர்களாக உணர்கிறோம் என கூறியிருக்கிறார்கள்.

    இந்த ஆய்வறிக்கையில் கேட்கப்பட்ட கேள்விகளில் சில சுவையான தகவல்கள் வெளியாகியுள்ளது.

    அமெரிக்காவில் 1981லிருந்து 1996க்குட்பட்ட காலத்தில் பிறந்தவர்கள் "மில்லேனியல்ஸ்" எனவும், 1996லிருந்து 2010க்குட்பட்ட காலத்தில் பிறந்தவர்கள் "ஜென் இசட்" எனவும், 1965லிருந்து 1981க்குட்பட்ட காலத்தில் பிறந்தவர்கள் "ஜென் எக்ஸ்" எனவும், மற்றும் 1946லிருந்து 1964க்குட்பட்ட காலத்தில் பிறந்தவர்கள் "பேபி பூமர்ஸ்" எனவும் அழைக்கப்படுவர்.

    இளம் தலைமுறையினர் பணத்திற்காக போராடுகின்றனர் எனும் பரவலான கருத்து உள்ளது. இந்த கருத்துக்கு மாறாக மில்லேனியல்களும், ஜென் இசட் பிரிவினரும் தங்களை பணக்காரர்களாக உணர்கிறார்கள். அதிலும் 57% மில்லேனியல்ஸ் பிரிவினரும், 46% ஜென் இசட் பிரிவினரும் தாங்கள் வசதியாக இருப்பதாக கருத்துக் கணிப்பில் தெரிவித்திருக்கின்றனர். ஆனால், 41% ஜென் எக்ஸ் பிரிவினரும், 40% பேபி பூமர் பிரிவினரும் மட்டுமே தாங்கள் வசதியாக இருப்பதாக தெரிவித்திருக்கின்றனர்.

    இது அமெரிக்காவில் ஒருவரை செல்வந்தர் என கூறுவதற்கான குறியீடுகள் என்ன என்பதை கண்டறிவதில் உள்ள சிக்கலை காட்டுகிறது.

    அமெரிக்காவில் உயர்ந்து வரும் விலைவாசியையும், வீடுகளின் விலையையும் கணக்கில் கொண்டால் வாழ்க்கை நடத்த இதற்கு முன்பில்லாத அளவிற்கு பெரும் தொகை தேவைப்படுகிறது. நகரங்களில் இது மேலும் அதிகரிக்கும். ஆறு இலக்க சம்பளம் வாங்குவோர்களின் வாங்கும் திறன் நாட்டின் சில பகுதிகளில் மற்றவர்களை விட அதிகமாக இருக்கலாம். அதே சமயம் வீட்டில் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை, சொந்த வீடு வைத்திருக்கிறார்களா, இல்லையா என்பது, அவரவர் வாங்கியிருக்கும் கடன் போன்ற சூழ்நிலைகள், ஒருவரின் நிதி ஆரோக்கியத்தில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தலாம்.

    சார்லஸ் ஷ்வாப் நிறுவனத்தின் நிதி திட்டமிடல் மற்றும் செல்வ மேலாண்மை அமைப்பின் நிர்வாக இயக்குனர் ராப் வில்லியம்ஸ் கூறுகையில், "மக்கள் செல்வநிலைக்கான அளவுகோலை தங்களுக்கும் பிறருக்கும் வித்தியாசமாக வைத்திருக்கின்றனர். இது ஒரு முரண்பாடான நிலை. நீங்கள் ஒருவரிடம் ஒரு டாலர் தொகையைக் கேட்டால், அவர்கள் அதை மீதமுள்ள தங்கள் வாழ்நாளில் மீதமுள்ள நாட்களின் அடிப்படையிலோ அல்லது நிதி ஆரோக்கியத்தின் அடிப்படையிலோ அர்த்தப்படுத்திக் கொள்வதில்லை" என தெரிவித்தார்.

    தங்களின் செல்வநிலை குறித்து எப்படி உணர்கிறார்கள் என்பதற்கு பதிலளிக்கும்போது தங்களுக்கு ஒப்பானவர்கள் குறித்து அவர்கள் கொண்டுள்ள எண்ணங்களும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

    கணக்கெடுப்பில் பதிலளித்தவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் தங்கள் நண்பர்களைப் போன்ற வாழ்க்கை முறையைப் பெறுவதே தங்களை பணக்காரர்களாக உணர வைக்கிறது என்று கூறியிருக்கின்றனர்.

    சமூக ஊடகங்களைப் பயன்படுத்துபவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர், தங்கள் குடும்பம் மற்றும் நண்பர்கள் ஆன்லைனில் பதிவு செய்யும் வாழ்க்கைமுறையை ஒப்பிடுவதாக கூறியிருக்கின்றனர். குறிப்பாக, மில்லினியல்கள் மற்றும் ஜென் இசட் பிரிவினரிடையே இந்த கருத்து வெளிப்படுகிறது. கணக்கெடுப்பில் பதிலளித்தவர்களில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கினர், தங்கள் அன்புக்குரியவர்களுடன் ஒரு ஆரோக்கியமான உறவைக் கொண்டிருப்பதையே, நிறைய பணத்தை வைத்திருப்பதை விட மேலான செல்வநிலையாக கருதுவதாக கூறியுள்ளனர்.

    மேலும் 70% பேர் பெரிய வங்கிக் கணக்கை விட, பணத்தைப் பற்றி கவலைப்படாமல் இருக்கும் நிலையே செல்வம் என்று கூறியுள்ளனர்.

    • பயணி ஒருவர் எதிர்பாராதவிதமாக விமானத்தின் கதவை அடைத்த போது அது உள்பக்கமாக லாக் ஆகிவிட்டது.
    • புகைப்படங்கள் வேகமாக பரவி வரும் நிலையில், பைலட்டுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

    அமெரிக்காவில் சாண்டியாகோ சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சாக்ரமெண்டோவுக்கு செல்ல தயாராக நின்ற ஒரு விமானத்தில் ஜன்னல் வழியாக 'பைலட்' ஏறிக்குதித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    இந்த படத்தை எடுத்த மேக்ஸ் ரெக்ஸ்ரோட் என்ற பயணி, இது ஜோக் இல்லை, பயணி ஒருவர் எதிர்பாராதவிதமாக விமானத்தின் கதவை அடைத்த போது அது உள்பக்கமாக லாக் ஆகிவிட்டது. எனவே வேறு வழியின்றி 'பைலட்' ஜன்னல் வழியாக விமானி அறைக்குள் ஏறிக் குதித்தார் என பதிவிட்டுள்ளார்.

    இந்த புகைப்படங்கள் வேகமாக பரவி வரும் நிலையில், பைலட்டுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

    • டொனால்ட் டிரம்ப் மீது மியாமி கோர்ட்டில் கிரிமினல் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.
    • இந்த வழக்கு விசாரணைக்காக இன்று மியாமி கோர்ட்டில் டொனால்டு டிரம்ப் ஆஜரானார்.

    வாஷிங்டன்:

    அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், அரசின் ரகசிய ஆவணங்களை தன்னுடன் எடுத்துச் சென்றதாக புகார் எழுந்தது. 2016-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு வரை பதவியில் இருந்த காலகட்டத்திலான ஆவணங்களை டிரம்ப் அரசிடம் ஒப்படைக்காமல் எடுத்துச் சென்றதாக தெரிவிக்கப்பட்டது.

    கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் புளோரிடாவில் உள்ள டிரம்ப் வீட்டில் சோதனை நடத்தப்பட்டு ரகசிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இந்த விவகாரம் தொடர்பாக டிரம்ப் மீது மியாமி கோர்ட்டில் கிரிமினல் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. கோர்ட்டில் பதிவு செய்யப்பட்ட குற்றப்பத்திரிக்கையில், அரசின் அணு ஆயுத திட்டங்கள், ராணுவம் உள்ளிட்ட ரகசிய ஆவணங்கள் டிரம்ப் வீட்டின் குளியலறை மற்றும் ஹாலில் அடுக்கி வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டது.

    இந்த வழக்கு விசாரணைக்காக இன்று மியாமி கோர்ட்டில் டொனால்டு டிரம்ப் ஆஜரானார்.

    இந்நிலையில், அரசு ஆவணங்களை பதுக்கிய வழக்கில் டொனால்டு டிரம்ப், அவரது உதவியாளர் வால்ட் நவுடா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

    வழக்கு விசாரணையின் போது டிரம்ப் கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

    ஏற்கனவே, ஆபாச நடிகைக்கு தேர்தல் பிரசார நிதியில் இருந்து பணம் கொடுத்த விவகாரத்தில் டிரம்ப் கடந்த ஏப்ரல் மாதம் நியூயார்க் கோர்ட்டில் ஆஜராகி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பல்வேறு நாடுகளின் பங்களிப்பில் விண்வெளியில் சர்வதேச விண்வெளி நிலையம் அமைக்கப்பட்டது.
    • ஆரஞ்சு வண்ணத்தில் மலர்ந்த இந்த ஜின்னியாதான் பூமிக்கு அப்பால் மலர்ந்த முதல் மலராகும்.

    வாஷிங்டன்:

    பல்வேறு நாடுகளின் பங்களிப்பில் விண்வெளியில் சர்வதேச விண்வெளி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு ஜின்னியா ரக செடியை நாசா விஞ்ஞானிகள் நட்டு வளர்த்தனர். ஆரஞ்சு வண்ணத்தில் மலர்ந்துள்ள இந்த ஜின்னியாதான் பூமிக்கு அப்பால் மலர்ந்த முதல் மலர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்தக் குறிப்பிட்ட பரிசோதனையானது 2015-ல் நாசா விண்வெளி வீரர் ஜெல் லிண்ட்கிரெனால் தொடங்கப்பட்டது.

    மைக்ரோகிராவிட்டி எனப்படும் நுண்ஈர்ப்பு விசையில் தாவரங்களும் மலர்களும் எப்படி வளர்கின்றன என்பதை விஞ்ஞானிகள் புரிந்துகொள்ள வாய்ப்பாக நாசா விஞ்ஞானிகள் இந்த மலர்ச்செடியை சர்வதேச விண்வெளி நிலையத்தில் வளர்த்துள்ளனர். இந்த மலரை மலரச் செய்ததன் மூலம் விண்வெளியில் அதிக தாவரங்களை வளர்க்க முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது.

    இந்நிலையில், விண்வெளி நிலையத்தில் வளர்ந்துள்ள ஜின்னியா பூவின் படத்தை நாசா தனது டுவிட்டரில் பகிர்ந்துள்ளது.

    இதுதொடர்பாக நாசா வெளியிட்டுள்ள அறிக்கையில், செவ்வாய் கிரகத்திற்குச் செல்வது போன்ற எதிர்கால நீண்ட தூர பயணங்கள், மனிதர்கள் தங்கள் சொந்த உணவைப் பயிரிட வேண்டும். எனவே விண்வெளியில் தாவரங்கள் எவ்வாறு வளர்கின்றன என்பதைப் புரிந்துகொள்வது அவசியம்.

    இந்த ஜின்னியா சர்வதேச விண்வெளி நிலையத்தில் காய்கறி வசதியின் ஒரு பகுதியாக சுற்றுப்பாதையில் வளர்க்கப்பட்டது. விஞ்ஞானிகள் 1970-களில் இருந்து விண்வெளியில் தாவரங்களை ஆய்வு செய்து வருகின்றனர்.

    மேலும், சுற்றுப்பாதையில் தாவரங்கள் எவ்வாறு உருவாகின்றன என்பதைக் கற்றுக்கொள்வது பூமியிலிருந்து பயிர்களை எவ்வாறு வளர்ப்பது என்பதைப் புரிந்துகொள்ள உதவுகிறது. சந்திரன், செவ்வாய் மற்றும் அதற்கு அப்பால் நீண்டகால பயணங்களில் புதிய உணவின் மதிப்புமிக்க ஆதாரத்தை வழங்குகிறது என தெரிவித்துள்ளது.

    • வழக்கு விசாரணைக்காக இன்று மியாமி கோர்ட்டில் டொனால்டு டிரம்ப் ஆஜரானார்.
    • இதையடுத்து, அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    வாஷிங்டன்:

    அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், அரசின் ரகசிய ஆவணங்களை தன்னுடன் எடுத்துச் சென்றதாக புகார் எழுந்தது. 2016-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு வரை பதவியில் இருந்த காலகட்டத்திலான ஆவணங்களை டிரம்ப் அரசிடம் ஒப்படைக்காமல் எடுத்துச் சென்றதாக தெரிவிக்கப்பட்டது.

    கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் புளோரிடாவில் உள்ள டிரம்ப் வீட்டில் சோதனை நடத்தப்பட்டு ரகசிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இந்த விவகாரம் தொடர்பாக டிரம்ப் மீது மியாமி கோர்ட்டில் கிரிமினல் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. கோர்ட்டில் பதிவு செய்யப்பட்ட குற்றப்பத்திரிக்கையில், அரசின் அணு ஆயுத திட்டங்கள், ராணுவம் உள்ளிட்ட ரகசிய ஆவணங்கள் டிரம்ப் வீட்டின் குளியலறை மற்றும் ஹாலில் அடுக்கி வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், இந்த வழக்கு விசாரணைக்காக இன்று மியாமி கோர்ட்டில் டொனால்டு டிரம்ப் ஆஜரானார். இதையடுத்து, அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    • எரிக் ரிச்சின்ஸ் இறப்பிற்கு காரணம் பெண்டனில் எனப்படும் சக்திவாய்ந்த வலிநிவாரணி மருந்துதான் காரணம் என தெரியவந்தது.
    • கணவருக்கு ஓட்கா மதுபானம் அளித்ததாகவும், அதன் பிறகு அவர் மூர்ச்சையானதாகவும் மனைவி கோரி ரிச்சின்ஸ் கூறியிருந்தார்.

    அமெரிக்காவில் உள்ள உட்டா மாநிலத்தில், சம்மிட் கவுண்டியில் வசித்தவர், கோரி டார்டன் ரிச்சின்ஸ் (33). இவரது கணவர் எரிக் ரிச்சின்ஸ். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், கடந்த ஆண்டு மார்ச் மாதம் எரிக் ரிச்சின்ஸ் திடீரென காலமானார்.

    இதனையடுத்து சில நாட்கள் கழித்து, கோரி ரிச்சின்ஸ் தனது கணவரின் மரணத்திற்கு பிறகு தாம் அனுபவித்து வந்த சோகத்தை பற்றி குழந்தைகளுக்கு, "என்னோடு இருக்கிறீர்களா?" (Are You With Me?), என்ற தலைப்பில் ஒரு புத்தகம் எழுதி பிரபலமானார். தனக்கும், தன் குழந்தைகளுக்கும் நிம்மதி கிடைக்க வேண்டியே இந்த புத்தகத்தை தாம் எழுதியிருப்பதாக பேட்டி அளித்திருந்தார். இவருக்கு பலரும் தமது அனுதாபங்களை தெரிவித்திருந்தனர்.

    இந்நிலையில், இந்த வழக்கில் திடுக்கிடும் திருப்பமாக, எரிக் இறப்பிற்கு காரணம் அதிக அளவு அவர் உடலில் காணப்பட்ட, 'ஃபெண்டனில்' (Fentanyl) எனப்படும் சக்திவாய்ந்த வலிநிவாரணி மருந்துதான் என்றும், அதை அளவுக்கதிகமாக அவருக்கு கொடுத்தது அவர் மனைவி, கோரி ரிச்சின்ஸ் தான் என்றும் காவல்துறை ஆதாரத்துடன் கண்டுபிடித்து அவரை கைது செய்திருக்கிறது.

    செய்திகளின் அடிப்படையில், மூன்று குழந்தைகளின் தாய் கோரி, தனது கணவர் எரிக் ரிச்சின்ஸுக்கு, மார்ச் 2022ல் ஃபெண்டனில் என்ற வலி நிவாரணி மருந்தை அளவுக்கதிகமாக கொடுத்ததாகக் குற்றம் சாட்டப்பட்டார். விசாரணையில், அவர் கூகுள் தளத்தில் குற்றச்செயல் தொடர்பான அதிர்ச்சிகரமான தகவல்களை தேடியது தெரியவந்துள்ளது.

    அதாவது, உட்டாவில் உள்ள நீண்ட கால சிறைதண்டனை கைதிகளுக்கான சிறைச்சாலைகள் மற்றும் அமெரிக்காவில் உள்ள பணக்காரர்களுக்கான சொகுசு சிறைச்சாலைகள் பற்றிய தகவல்களை அவர் இணையத்தில் தேடியிருக்கிறார்.

    மேலும் தான் தேடும் செய்திகளை நீக்கிவிட்டாலும், நீக்கப்பட்ட செய்திகளை புலனாய்வாளர்களால் பார்க்க முடியுமா? ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள் இழப்பீட்டு உரிமை கோருபவர்களுக்கு பணம் செலுத்த எவ்வளவு நேரம் எடுக்கும்? உண்மை கண்டறியும் சோதனைக்கு போலீசார் ஒருவரை கட்டாயப்படுத்த முடியுமா? மற்றும் இறப்பு சான்றிதழில் மரணத்திற்கான காரணத்தை மாற்ற முடியுமா? என்றெல்லாம் அவர் வலைதளங்களில் தேடியுள்ளார்.

    விசாரணையின்போது வெளியான இந்த தகவல்களால், அவரால் சமூகத்திற்கு கணிசமான ஆபத்து என நீதிபதி குறிப்பிட்டார். அத்துடன், அவரை சிறையில் அடைக்குமாறு உத்தரவிட்டார்.

    "புலனாய்வு விசாரணையின் கீழ் இருப்பதற்கான அறிகுறிகள்" மற்றும் "இறப்புக்கான காரணத்துடன் நிலுவையில் உள்ள மரணச் சான்றிதழுக்கான இழப்பீடு வழங்குவதில் தாமதம்" என்று தலைப்பிடப்பட்ட கட்டுரைகளை கோரி படித்ததாக ஊடக செய்தி தெரிவித்துள்ளது.

    இதேபோல் "நலோக்சோன் ஹெராயின் போன்றதா?", "இயற்கைக்கு மாறான மரணம் என்று கருதப்படுவது என்ன?" மற்றும் "கோரி ரிச்சின்ஸ் கமாஸின் நிகர மதிப்பு" ஆகிய தகவல்களை தேடியதாகவும் அச்செய்தி தெரிவிக்கிறது.

    இதுபற்றி அவரது தரப்பு வழக்கறிஞர் கிளேட்டன் சிம்ஸ் கூறும்போது, ஆதாரங்கள் எவ்வாறு சேகரிக்கப்படுகின்றன என்பதைப் பார்ப்பதற்கு வெறுமனே தனது வழக்கு குறித்து ஆராய்ந்ததாகவும், "அவர் குற்றவாளி என சுட்டிக்காட்டும் எதுவும் அங்கு இல்லை" என்றும் தெரிவித்தார்.

    எரிக் ரிச்சின்ஸின் சகோதரி ஏமி ரிச்சின்ஸ் அளித்த வாக்குமூலத்தில், "எரிக் பயங்கரமான சூழ்நிலையில் இறந்தார். அவர் என்னவெல்லாம் சகித்து கொண்டிருக்கிறார் என்பதை நினைத்து நான் வேதனைப்படுகிறேன்" என கூறியிருக்கிறார். ஒரு புறம் எனது சகோதரனின் இறப்பிலிருந்து ஆதாயம் தேடிக் கொண்டு, மறுபுறம் துக்கத்தில் இருக்கும் விதவையாகவும், பாதிக்கப்பட்டவராகவும் கோரி தன்னை காட்டிக்கொண்டிருக்கிறார் எனவும் ஏமி ரிச்சின்ஸ் கூறியுள்ளார்.

    மார்ச் 2022ல் ஒருநாள் நள்ளிரவில் கோரி ரிச்சின்ஸ், காவல்துறையை தொடர்புகொண்டு தனது கணவர் அசைவற்று கிடப்பதாகவும், உடல் குளிர்ச்சியாக இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். தனது கணவருக்கு ஓட்கா பான கலவை அளித்ததாகவும், அதன் பிறகு சில மணி நேரத்தில் அவர் மூர்ச்சையாகி கிடந்ததாகவும் அதிகாரிகளிடம் கோரி ரிச்சின்ஸ் கூறியிருந்தார்.

    ஆனால், எரிக் ரிச்சின்ஸ் உடலை பரிசோதித்த மருத்துவர், அவர் ஃபெண்டனில் எனப்படும் மருந்தை வழக்கமாக உட்கொள்வதைவிட ஆபத்தை விளைவிக்கும் வகையில் 5 மடங்கு அதிகமாக உட்கொண்டதால் இறந்திருப்பதாக தெரிவித்தார்.

    நீதிமன்றத்தில் தாக்கல் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையின்படி, டிசம்பர் 2021 மற்றும் பிப்ரவரி 2022க்கு இடைப்பட்ட காலத்தில், எரிக் ரிச்சின்ஸ், போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஒரு நபருக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். அதில், முதுகு வலிக்காக ஒரு முதலீட்டாளருக்கு பரிந்துரைக்கப்பட்ட வலி மருந்துகள் தேவைப்படுவதால், அதன் பெயரை அனுப்புமாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

    இந்த காலத்தில் கோரி ஹைட்ரோகோடோன் மாத்திரைகளை பெற்றுள்ளார். அதற்கு பிறகு அதை விட வீரியமிக்க ஒரு மருந்தை கேட்டுள்ளார். மூன்று நாட்களுக்குப் பிறகு அந்த மருந்துகளைப் பெற்றுள்ளார். பிறகு கணவன்-மனைவி இருவரும் காதலர் தின விருந்து சாப்பிட்டுள்ளனர். அதற்கு பிறகு எரிக் ரிச்சின்ஸ் நோய்வாய்ப்பட்டார். இரண்டு வாரங்களுக்குப் பிறகு, கோரி ரிச்சின்ஸ் மேலும் அதிக ஃபெண்டனிலை பெற்றிருக்கிறார்.

    இந்த வழக்கு அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் புளோரிடாவில் உள்ள டிரம்ப் வீட்டில் சோதனை நடத்தப்பட்டு ரகசிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
    • டிரம்ப் மீது மியாமி கோர்ட்டில் கிரிமினல் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.

    புளோரிடா:

    அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், அரசின் ரகசிய ஆவணங்களை தன்னுடன் எடுத்து சென்றதாக புகார் எழுந்தது.

    2016-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு வரை பதவியில் இருந்த கால கட்டத்திலான ஆவணங்களை டிரம்ப் அரசிடம் ஒப்படைக்காமல் எடுத்து சென்றதாக தெரிவிக்கப்பட்டது.

    கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் புளோரிடாவில் உள்ள டிரம்ப் வீட்டில் சோதனை நடத்தப்பட்டு ரகசிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

    இதற்கிடையே இவ்விவகாரம் தொடர்பாக டிரம்ப் மீது மியாமி கோர்ட்டில் கிரிமினல் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.

    கோர்ட்டில் பதிவு செய்யப்பட்ட குற்றப்பத்திரிக்கையில், "அரசின் அணு ஆயுத திட்டங்கள், ராணுவம் உள்ளிட்ட ரகசிய ஆவணங்கள் டிரம்ப் வீட்டின் குளியலறை மற்றும் ஹாலில் அடுக்கி வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டது.

    இந்த வழக்கு விசாரணைக்காக இன்று மியாமி கோர்ட்டில் அஜராகும்படி டிரம்புக்கு உத்தரவிடப்பட்டது. இதையடுத்து கோர்ட்டில் டிரம்ப் ஆஜராவார் என்று அவரது தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில் ரகசிய ஆவணங்களை எடுத்து சென்ற விவகாரத்தில் கோர்ட்டில் ஆஜராவதற்கு நேற்று இரவு புளோரிடாவுக்கு டிரம்ப் வந்தார். தனி விமானத்தில் அங்கு வந்த அவர் இன்று மியாமி கோர்ட்டில் ஆஜராக உள்ளார்.

    அப்போது தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்து வாக்குமூலம் கொடுக்க உள்ளார். வழக்கு விசாரணையின் போது டிரம்ப் கைதாகி ஜாமீனில் விடுவிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

    ஏற்கனவே ஆபாச நடிகைக்கு தேர்தல் பிரசார நிதியில் இருந்து பணம் கொடுத்த விவகாரத்தில் டிரம்ப் கடந்த ஏப்ரல் மாதம் நியூயார்க் கோர்ட்டில் ஆஜராகி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    டிரம்ப், கோர்ட்டில் ஆஜராவதால் அவரது ஆதரவாளர்கள் மியாமியில் திரளுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் டிரம்ப் கூறும்போது, "என் மீதான குற்றப்பத்திரிகை, அடுத்த ஆண்டு நடைபெறும் அதிபர் தேர்தலில் இருந்து விலக என்னை கட்டாயப்படுத்தாது" என்றார்.

    • நாற்காலியில் ஏதோ சிறப்பு இருப்பதாக உணர்ந்த ஜஸ்டின் மில்லர் அதனை 50 டாலருக்கு வாங்கி உள்ளார்.
    • பழம்பொருட்களை விற்பனை செய்யும் ஏல நிறுவனத்தில் நாற்காலியை கொண்டு சென்றுள்ளார்.

    அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியை சேர்ந்தவர் ஜஸ்டின் மில்லர். டிக்டாக் பிரபலமான இவர் பழம்பொருட்கள் மீது ஆர்வம் கொண்டவர். பழம்பொருட்கள் தொடர்பாக ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளை தொடர்ந்து பார்த்து வந்த இவருக்கு பழம்பொருட்கள் பற்றிய அருமைகள் புரிந்தது.

    இந்நிலையில் எதேச்சையாக அவர் ஆன்லைன் தளமான பேஸ்புக் மார்க்கெட்டில் ஒரு பழமையான நாற்காலியை பார்த்துள்ளார். அப்போது அந்த நாற்காலியில் ஏதோ சிறப்பு இருப்பதாக உணர்ந்த அவர் அதனை 50 டாலருக்கு (இந்திய மதிப்பில் சுமார் ரூ.4 ஆயிரம்) வாங்கி உள்ளார்.

    பின்னர் அந்த நாற்காலியை சீரமைக்க ரூ.2.5 லட்சம் வரை செலவு செய்துள்ளார். அதன்பிறகு பழம்பொருட்களை விற்பனை செய்யும் ஏல நிறுவனத்தில் நாற்காலியை கொண்டு சென்றுள்ளார். பழமையான அந்த நாற்காலியை வாங்க கடும் போட்டி ஏற்பட்டது. கடைசியில் அந்த நாற்காலி 1 லட்சம் டாலருக்கு (இந்திய மதிப்பில் ரூ.82 லட்சம்) ஏலம் போனது. இதனால் மகிழ்ச்சியில் திளைத்த அவர் இதுகுறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • காரின் பின்புற பகுதியில் பலகை மூலம் ரகசிய அறை அமைக்கப்பட்டு இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.
    • ரகசிய அறையில் பண்டல், பண்டலாக கொகைன் என்ற போதைப் பொருள் மறைத்து வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.

    ஹூஸ்டன்:

    அமெரிக்காவை சேர்ந்தவர் ரக்குவெல் டொலொ ரஸ் அன்டியோலா (வயது 34) சிறந்த ராக் இசை பாடகியான இவர் சமூகவலை தளங்களிலும் பிரபலமாக உள்ளார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவரை 1 லட்சத்து 19 ஆயிரம் பேர் பின் தொடர்கின்றனர்.

    இதேபோல அமெரிக்காவில் மாடல் அழகியாக இருந்து வருபவர் மெலிசா டுபோர் (30) இவர் டிசைனர் தொழிலிலும் ஈடுபட்டு வருகிறார். இன்ஸ்டாகிராம் பக்கம் மூலம் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

    சம்பவத்தன்று டொலொ ரஸ் அன்டியோலாவும், மெலிசா டுபோரும் விலை உயர்ந்த காரில் ஒரு விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு ஹூஸ்டன் நகரில் இருந்து அலபாமா நகருக்கு சென்று கொண்டு இருந்தனர். 2 பேரும் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது.

    அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்கள் சென்ற காரை வழிமறித்து சோதனை நடத்தினார்கள்.

    இந்த சோதனையின் போது காரின் பின்புற பகுதியில் பலகை மூலம் ரகசிய அறை அமைக்கப்பட்டு இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். அந்த ரகசிய அறையில் பண்டல், பண்டலாக கொகைன் என்ற போதைப் பொருள் மறைத்து வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.

    அதனை போலீசார் பறிமுதல் செய்தனர். அதன் மொத்த மதிப்பு ரூ.24 கோடியே 73 லட்சம் ஆகும். இது தொடர்பாக போலீசார் 2 பேரையும் கைது செய்தனர்.

    • பொதுமக்களுக்கு மேலும் அச்சுறுத்தல் இல்லை என அன்னாபோலிஸ் போலீசார் தெரிவித்தனர்.
    • சந்தேகத்திற்குரிய ஒரு நபர் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டிருக்கிறார்.

    அன்னாபோலிஸ்:

    அமெரிக்காவின் மேரிலாண்ட் மாநிலத்திலுள்ள, அன்னபோலிஸ் பிராந்தியத்தில் உள்ள ஒரு இல்லத்தில் நேற்று துப்பாக்கிச் சூடு நடந்தது. இதில், குறைந்தது 3 பேர் கொல்லப்பட்டனர் என்றும் மேலும் 3 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்து.

    அமெரிக்காவின் பிரபலமான மற்றும் முக்கியமான கேபிட்டல் ஹில் பகுதியிலிருந்து அன்னாபோலிஸ் 30 மைல் தொலைவில் அமைந்துள்ளது.

    அன்னபோலிஸ் காவல்துறைத் தலைவர் எட் ஜாக்சன் கூறுகையில், மாநிலத்தின் தலைநகரான பேடிங்டன் பிளேஸ் பகுதியின் 1000வது பிளாக்கில், துப்பாக்கிச் சூடு நடைபெற்றதாகவும், இது தொடர்பாக ஒரு நபர் சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

    குறைந்தபட்சம் ஒருவர் இறந்ததாக முதற்கட்ட தகவல் வெளியான நிலையில், குறைந்தது மூன்று பேர் இறந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். பாதிக்கப்பட்டவர்களின் நிலைமை குறித்து தற்பொழுது எதுவும் தெரியவில்லை என்றும், பலத்த காயமடைந்த ஒருவர் தலைக்காய சிகிச்சை மையத்திற்கு விரைந்து எடுத்துச் செல்லப்பட்டதாகவும் செய்தி வெளியாகி உள்ளது.

    இருப்பினும் அன்னாபோலிஸ் போலீசார் கூறும்போது, 'பொதுமக்களுக்கு மேலும் அச்சுறுத்தல் இல்லை' என சம்பவ இடத்திலும், இணையத்தின் வாயிலாகவும் தெரிவித்தனர்.

    துப்பாக்கிச் சூடு நடந்த பகுதியில் பல போலீஸ் கார்கள் தென்பட்டன. இந்த இடம் நகரின் மையத்திற்கு தெற்கே, நீர்நிலைக்கு அருகே உள்ளது.

    'சமூகத்திற்கு எனது செய்தி இதுதான். இது ஒரு தற்செயலான வன்முறைச் செயல் அல்ல' என காவல்துறை தலைமை அதிகாரி ஜாக்சன், சம்பவ இடத்தில் செய்தியாளர்களிடம் கூறினார்.

    மேலும், இந்த துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு தொடர்பிருக்கலாம் என சந்தேகத்திற்குரிய ஒரு நபர் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டிருப்பதாகவும், சம்பவ இடத்தில் இருந்து ஒரு ஆயுதம் கைப்பற்றப்பட்டதாகவும், காவல்துறை தலைவர் கூறியிருக்கிறார்.

    துப்பாக்கிச் சூடு குறித்து முகநூலில் கருத்து பதிவேற்றம் செய்திருக்கும் மாநில செனட்டர் சாரா எல்ஃப்ரெத், இந்த சம்பவத்தை "வார்த்தைகளால் விவரிக்க முடியாத சோகம்" என குறிப்பிட்டுள்ளார்.

    இச்சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு அருகில் ஒரு பட்டமளிப்பு விழா நடந்ததாகவும், இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் இதனுடன் தொடர்புடையதா என்பது தெளிவாகத் தெரியவில்லை என்றும் அப்பகுதி மக்கள் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்திருக்கின்றனர்.

    • காயம் அடைந்தவர்களில் பலர் 20-க்கும் குறைந்த வயதுடையோர்.
    • சமூக ஊடகங்களில் விளம்பரப்படுத்தப்பட்ட ஒரு விருந்துக்காக மக்கள் கூடியிருந்த நிலையில் சம்பவம் நடைபெற்றுள்ளது.

    வாஷிங்டன் நகரின் மேற்கு பகுதியில் உள்ள டேவிஸ் தெருவின் 100-வது ப்ளாக் பகுதியில், நள்ளிரவு 12:22 மணிக்கு (உள்ளூர் நேரம்), நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டிருந்த நிலையில் துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டதாக சைராக்யூஸ் காவல்துறை செய்தித் தொடர்பாளர் லெப்டினென்ட் மேத்யூ மேலினோவ்ஸ்கி தெரிவித்தார்.

    காவல்துறையின் தகவலை மேற்கோள்காட்டி பிரபல அமெரிக்க பத்திரிகை, இந்த நிகழ்வில் நான்கு பேர் சுடப்பட்டதாகவும், ஆறு பேர் கத்தியால் குத்தப்பட்டதாகவும், மேலும் மூன்று பேர் அந்த களேபரத்திலிருந்து வேகமாக வெளியேறிய வாகனங்களால் மோதப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.

    காயமடைந்தவர்களில் 17-25 வயதுக்குட்பட்ட 3 பேர் ஆண்கள் என்றும், 10 பேர் பெண்கள் என்றும், காயமடைந்தவர்கள் உயிருக்கு ஆபத்து ஏதும் இல்லை என்றும் மெலினோவ்ஸ்கி கூறினார். மேலும் அவர், பாதிக்கப்பட்டவர்கள் சம்பவம் நடைபெற்ற இடத்தில் காணப்பட்டதாகவும், அப்பகுதியிலுள்ள மருத்துவமனையில் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

    சுடப்பட்டவர்களில் 20 வயதுக்கு கீழ் உள்ள இளம்பெண்கள் மூவர் ஆவார்கள்.

    சமூக ஊடகங்களில் விளம்பரப்படுத்தப்பட்ட ஒரு விருந்துக்காக மக்கள் கூடியிருந்தனர். ஒரு சிறிய கைகலப்பு தொடங்கி சற்று நேரத்தில் முடிவுக்கு வந்ததாகவும், அதன் பின்னர் 20 நிமிடங்களுக்குப் பிறகு மற்றொரு கைகலப்பு வெடித்ததாகவும், இதனைத் தொடர்ந்து டஜன் கணக்கான துப்பாக்கிச்சூடு சத்தங்கள் எழுந்ததாகவும் அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர்.

    ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்ட உடனேயே சம்பவ இடத்துக்கு விரைந்ததாகவும் மிகப்பெரிய அளவில் நடைபெற இருந்த அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

    ×