என் மலர்
உக்ரைன்
- துருக்கியில் முதற்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது.
- முதற்கட்ட பேச்சுவார்த்தைக்குப்பின் மிகப்பெரிய அளவில் கைதிகள் பரிமாற்றம் நடைபெற்றது.
உக்ரைன்- ரஷியா இடையில் அமைதி ஏற்படுத்துவதற்கான முதற்கட்ட நேரடி அமைதி பேச்சுவார்த்தை துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகரில் நடைபெற்றது. இதில் இருநாட்டு அதிகாரிகளும் நேருக்குநேர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். 2 மணி நேரத்திற்கும் குறைவாக நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் முக்கிய முடிவுகள் ஏதும் எடுக்கப்படவில்லை. இருநாடுகளும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைதிகளை பரிமாற்றிக்கொள்ள ஏற்றுக்கொண்டன. இதனைத் தொடர்ந்து கைதிகள் பரிமாற்றம் நடைபெற்றது.
இந்த நிலையில் வருகிற திங்கட்கிழமை 2ஆம் கட்ட பேச்சுவார்த்தைக்கு ரஷியா பரிந்துரைத்துள்ளது. இந்த பரிந்துரையை உக்ரைன் ஏற்றுக்கொள்ளுமா? என்பது தெரியவில்லை. இந்த நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் டாப் ஆலோசகர், நாங்கள் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறோம் எனத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் டாப் ஆலோசகர் ஆண்ட்ரிய் யெர்மக் கூறியதவாது:-
அடுத்த பேச்சுவார்த்தை கூட்டத்தில் கலந்து கொள்ள உக்ரைன் தயாராக இருக்கிறது. ஆனால், நாங்கள் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தையில் ஈடுபட விரும்புகிறோம். இதன் அர்த்தம், ரஷியாவின் நிபந்தனையை பெறுவது முக்கியமானது. இன்னும் மூன்று நாட்கள் உள்ளது. நிபந்தனைக்கான வரைவை தயாரித்து அனுப்புவதற்கு போதுமான நேரம் உள்ளது.
இவ்வாறு யெர்மார்க் தெரிவித்துள்ளார்.
3 வருடத்திற்கு மேலாக நடைபெற்று வரும் ரஷியா- உக்ரைன் இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் விரும்புகிறார். முதற்கட்டமாக 30 நாள் போர் நிறுத்தத்திற்கான பரிந்துரையை அமெரிக்கா வழங்கியது.
மேற்கத்திய நாடுகளிடம் இருந்து ஆயுதங்கள் பெறுவதை உக்ரைன் நிறுத்த வேண்டும் என ரஷியா முக்கிய நிபந்தனையாக முன் வைக்கிறது. அதேவேளையில் ரஷியா போர் நிறுத்தத்திற்கான பேச்சுவார்த்தையை தாமதப்படுத்த விரும்புகிறது. உக்ரைன் நாட்டின் பகுதிகளை மேலும் கைப்பற்ற விரும்புகிறது என மேற்கத்திய நாடுகள் ரஷியாவை குற்றம்சாட்டி வருகின்றன.
- உக்ரைனால் கைப்பற்றப்பட்டு மீண்டும் ரஷியாவால் மீட்கப்பட்ட குர்ஸ்க் பகுதி சுமியை ஒட்டியே அமைத்துள்ளது.
- பாதுகாப்பு இடையக மண்டலத்தை (buffer zone) உருவாக்குமாறு உத்தரவிட்டார்.
உக்ரைன் எல்லை கிராமங்களை ரஷியா கைப்பற்றியுள்ளது. உக்ரைனின் வடகிழக்கு சுமி பகுதியில் உள்ள நான்கு எல்லை கிராமங்களை ரஷிய படைகள் கைப்பற்றியுள்ளன என்று உள்ளூர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். உக்ரைனால் கைப்பற்றப்பட்டு மீண்டும் ரஷியாவால் மீட்கப்பட்ட குர்ஸ்க் பகுதி சுமியை ஒட்டியே அமைத்துள்ளது.
கடந்த வாரம் குர்ஸ்க் பகுதியை பார்வையிட்ட ரஷிய அதிபர் புதின், நீண்ட எல்லை உக்ரேனிய ஊடுருவல்களுக்கு ஆளாகக்கூடியதாக உள்ளது என்று கூறினார். எனவே எல்லையில் ஒரு "பாதுகாப்பு இடையக மண்டலத்தை" (buffer zone) உருவாக்குமாறு ரஷிய இராணுவத்திடம் கூறியதாக அவர் தெரிவித்தார்.
இந்த நிலையில்தான் சுமியில் உள்ள கிராமங்களை ரஷிய படைகள் கைப்பற்றி உள்ளன. கிராமங்களைக் கைப்பற்றிய பிறகு ரஷிய படைகள் உக்ரைனுக்குள் முன்னேற முயற்சிக்கின்றன என்று சுமி பிராந்திய இராணுவ நிர்வாகத்தின் தலைவர் ஓலே ஹ்ரிஹோரோவ் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
கைப்பற்றப்பட்ட கிராமங்களில் வசிப்பவர்கள் முன்னதாகவே வெளியேற்றப்பட்டனர். மேலும் பொதுமக்களுக்கு உடனடி அச்சுறுத்தல் இல்லை என்று ஹ்ரிஹோரோவ் கூறினார்.

ரஷியா - உக்ரைன் போர் நிலவரம்
மூன்று ஆண்டுகளில் முதல் நேரடிப் பேச்சுவார்த்தைக்காக இந்த மாத தொடக்கத்தில் துருக்கியில் ரஷிய மற்றும் உக்ரைன் பிரதிநிதிகள் சந்தித்தனர். இதில் கைதிகள் பரிமாற்றம் மட்டுமே முடிவு செய்யப்பட்டது.
கடந்த வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைக்கு இடையில், ரஷியா உக்ரைனில் சுமார் 900 ட்ரோன்களை ஏவியது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். ஞாயிற்றுக்கிழமை இரவு, ரஷியா உக்ரைனுக்கு எதிரான 355 டிரோன்களை ஏவி 3 ஆண்டுகாலப் போரில் மிகப்பெரிய டிரோன் தாக்குதலை நடத்தியது
இந்த திங்கள் முதல் செவ்வாய் வரை, ரஷியா உக்ரைனில் 60 டிரோன்களை வீசியதாக உக்ரைன் விமானப்படை இன்று தெரிவித்துள்ளது.
அதேநிறத்தில் ஏழு ரஷிய பிராந்தியங்களில் ஒரே இரவில் அதன் வான் பாதுகாப்பு 99 உக்ரேனிய டிரோன்களை வீழ்த்தியதாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
- உக்ரைன் மீது ரஷியா ஏவிய டிரோன் தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டனர்.
- ரஷியாவின் டிரோன் தாக்குதலுக்கு அதிபர் ஜெலன்ஸ்கி கண்டனம் தெரிவித்தார்.
கீவ்:
உக்ரைன் மீது மொத்தம் 69 ஏவுகணைகள் மற்றும் 298 டிரோன்களை ரஷியா நள்ளிரவில் ஏவி மிகப்பெரிய தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டனர். பலர் படுகாயம் அடைந்தனர்.
ரஷியா உடனான போர் தொடங்கியதிலிருந்து உக்ரைனில் நடத்தப்பட்ட மிகப்பெரிய தாக்குதல் இது என அந்நாட்டு விமானப்படை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
இந்நிலையில், ரஷியாவின் டிரோன் தாக்குதலை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, அதிபர் ஜெலன்ஸ்கி டெலிகிராம் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், ரஷியாவின் இதுபோன்ற ஒவ்வொரு பயங்கரவாதத் தாக்குதலும் அந்நாட்டுக்கு எதிரான புதிய தடைகளுக்கு போதுமான காரணமாகும். ரஷியா இந்தப் போரை இழுத்துக்கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு நாளும் கொலைகளைத் தொடர்கிறது.
உலகம் விடுமுறையில் செல்லலாம், ஆனால் வார இறுதி நாட்கள் மற்றும் வார நாட்கள் இருந்தபோதிலும் போர் தொடர்கிறது. இதைப் புறக்கணிக்க முடியாது.
அமெரிக்காவின் மவுனமும், உலகில் உள்ள மற்றவர்களின் மவுனமும் புதினை ஊக்குவிக்கிறது என காட்டமாகப் பதிவிட்டுள்ளார்.
- பல பகுதிகளில் தீ விபத்து ஏற்பட்டது. மார்கலிவ்கா கிராமத்தில் பல வீடுகள் தரைமட்டமாயின.
- சாதாரண நகரங்கள் மீது வேண்டுமென்றே தாக்குதல்களை நடத்தியுள்ளது ரஷியா.
ரஷியா மொத்தம் 69 ஏவுகணைகள் மற்றும் 298 டிரோன்களை நள்ளிரவில் ஏவி உக்ரைன் மீது மிகப்பெரிய தாக்குதலை நடத்தியுள்ளது. இந்த தாக்குதல்களில் 12 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர்.
2022 ஆம் ஆண்டு போர் தொடங்கியதிலிருந்து இவ்வளவு உக்ரைன் பிரதேசத்தில் நடத்தப்பட்ட மிகப்பெரிய தாக்குதல் இது என்று உக்ரைன் விமானப்படை செய்தித் தொடர்பாளர் யூரி இக்னாட் கூறினார்.
கீவ் நகரத்திலேயே நான்கு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 16 பேர் காயமடைந்தனர். டிரோன் பாகங்கள் குடியிருப்பு கட்டிடங்களையும் ஒரு தங்குமிடத்தையும் சேதப்படுத்தின.

சைட்டோமிர் பகுதியில் இறந்தவர்களில் 8, 12 மற்றும் 17 வயதுடைய மூன்று சிறார்கள் அடங்குவர். க்மெல்னிட்ஸ்கியில் நான்கு பேரும், மைக்கோலைவில் ஒருவரும் இறந்ததாக அவசர சேவை அதிகாரிகள் தெரிவித்தனர். பல பகுதிகளில் தீ விபத்து ஏற்பட்டது. மார்கலிவ்கா கிராமத்தில் பல வீடுகள் தரைமட்டமாயின.
ரஷியாவின் நடவடிக்கைகள் குறித்து உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி கோபத்தை வெளிப்படுத்தினார். "சாதாரண நகரங்கள் மீது வேண்டுமென்றே தாக்குதல்களை நடத்தியுள்ளது ரஷியா. அந்நாட்டின் மீது உண்மையிலேயே வலுவான அழுத்தம் கொடுக்கப்படாவிட்டால் இந்த மிருகத்தனத்தை நிறுத்த முடியாது" என்று கூறினார். ரஷியா மீது கடுமையான தடைகளை விதிக்க சர்வதேச சமூகத்தை அவர் கேட்டுக்கொண்டார்..
- இதனால் அங்குள்ள விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டது.
- ஆயிரம் கைதிகளை பரிமாற்றம் செய்து கொள்ள ரஷியாவும், உக்ரைனும் ஒப்பு கொண்டன.
ரஷியா-உக்ரைன் இடை யேயான போர் 3 ஆண்டு களுக்கு மேலாக நடந்து கொண்டிருக்கிறது. இப் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் முயற்சித்து வருகிறார். இதற்கிடையே சமீபத்தில் ரஷியா-உக்ரைன் இடையே முதல் முறையாக போர் நிறுத்தம் தொடர்பாக நேரடி பேச்சு வார்த்தை துருக்கியில் நடந்தது.
ஆனால் பேச்சு வார்த்தைக்கு மத்தியிலும் இருதரப்பும் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. நேற்று ரஷிய தலைநகர் மாஸ்கோவில் டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் அங்குள்ள விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டது.
இந்த நிலையில் உக்ரைன் தலைநகர் கீவ்வில் ரஷியா மிகப்பெரிய அளவில் டிரோன்-ஏவுகணை தாக்கு தல்களை நடத்தியது. நகரின் பல்வேறு இடங்களில் தாக்கு தல்கள் நடத்தப்பட்டது. இதனால் மக்கள் நிலத்தடி சுரங்கப்பாதை நிலையங்ளில் தஞ்சம் அடைந்தனர். கீவ்வின் ஒபோலோன் மாவட்டத்தில் உள்ள ஒரு வணிக வளாகம் மற்றும் ஒரு குடியிருப்பு கட்டிடம் மீது டிரோன் விழுந்து வெடித்தது.
சோலோமியன்ஸ்கி மாவட்டத்தில் 2 இடங்களில் தாக்குதல் காரணமாக பெரிய அளவில் தீப்பிடித்து எரிந்தது. இந்த தாக்குதல்களில் பொதுமக்கள் 8 பேர் காயம் அடைந்தனர்.
இந்த நிலையில் துருக்கியில் நடந்த நேரடி பேச்சு வார்த்தையின்போது ஆயிரம் கைதிகளை பரிமாற்றம் செய்து கொள்ள ரஷியாவும், உக்ரைனும் ஒப்பு கொண்டன. அதன்படி முதல் கட்டமாக கைதிகள் பரிமாற்றம் வடக்கு உக்ரைனில் உள்ள பெலாரஸ் எல்லையில் நடந்தது. இதில் இரு தரப்பில் இருந்தும் தலா 390 கைதிகள் பரிமாற்றம் செய் யப்பட்டனர்.
இது தொடர்பாக உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி கூறும்போது, முதல் கட்டமாக 390 உக்ரேனியர்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர். வார இறுதியில் மேலும் பலர் விடுவிக்கப்படுவார்கள். இது போரின் மிகப்பெரிய பரிமாற்றமாக மாறும் என்றார்.
- துருக்கியில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது கைதிகள் பரிமாற்றத்திற்கு இரு நாடுகளும் சம்மதம்.
- அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கைதிகள் பரிமாற்றம் நடைபெற்றதாக அறிவித்திருந்தார்.
உக்ரைன் மீது ரஷியா கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் திடீரென படையெடுத்தது. தரைவழி மற்றும் வான்வழியாக தாக்குதல் நடத்தி இருநாட்டு எல்லையில் உள்ள உக்ரைன் பகுதிகளை ரஷியா கைப்பற்றியது. பின்னர் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் உதவியுடன் உக்ரைன் பதிலடி கொடுத்தது. இதனால் சில இடங்களில் இருந்து ரஷியப் படைகள் வெளியேறியது.
போர் தொடங்கி 3 வருடங்களுக்கு மேலாகியும் இன்னும் சண்டை நிறுத்தப்படவில்லை. ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழப்பதை விரும்பவில்லை. இருநாட்டிற்கும் இடையில் சண்டையை நிறுத்த முயற்சிப்பேன் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்தார்.
அதனடிப்படையில் 30 நாட்கள் போர் நிறுத்தத்திற்கான அமைதி ஒப்பந்தத்தை அமெரிக்கா பரிந்துரை செய்தது. அத்துடன் ரஷியா மற்றும் உக்ரைனுடன் தனித்தனியாக பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் ரஷியா பரிந்துரைகளில் பல்வேறு மாற்றங்களை செய்ய நிபந்தனை விதித்தது.
இதற்கிடையே சண்டை தொடங்கிய பின்னர் முதன்முறையாக கடந்த வாரம் துருக்கியில் ரஷியா மற்றும் உக்ரைன் அதிகாரிகள் நேருக்நேர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்த பேச்சுவார்த்தை 2 மணி நேரம் கூட நீடிக்கவில்லை. இருந்த போதிலும் சுமார் ஆயிரம் கைதிகளை பரிமாற்றம் செய்ய இருநாட்டு அதிகாரிகளும் ஒப்புக்கொண்டதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில் போரின்போது கைது செய்யப்பட்டவர்களை இரு தரப்பிலும் இருந்து தலா ஆயிரம் பேரை விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகள் நடைபெற்று வருகிறது. ஆனால் முழுமையாக இந்த நடவடிக்கை முடியவில்லை என பெயர் குறிப்பிட விரும்பாத உக்ரைன் அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
ரஷியா உக்ரைன் இடையே மிகப்பெரிய கைதிகள் பரிமாற்றம் நடைபெற்றன என டொனால்டு டிரம்ப் தெரிவித்த நிலையில், உக்ரைன் அதிகாரி ஒருவர் அதை உறுதிப்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்துள்ளார்.
- ரஷியா- உக்ரைன் அதிகாரிகள் இடையே நேருக்குநேர் பேச்சுவார்த்தை நேற்று நடைபெற்று.
- 2 மணி நேரம் கூட இந்த பேச்சுவார்த்தை நீடிக்கவில்லை.
ரஷியாவுக்கும் உக்ரைனுக்கும் இடையில் 3 ஆண்டுகளுக்கு மேலாக போர் நடைபெற்று வருகிறது. உலக நாடுகள் போரை முடிவுக்கு கொண்டு வர பல்வேறு முயற்சிகள் எடுத்தன. ஆனால் ரஷியா மற்றும் உக்ரைன் நேரடி பேச்சுவார்த்தையில் ஈடுபட மறுத்தன.
அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவி ஏற்றதும் இரு நாடுகளுக்கும் இடையில் போர் நிறுத்தம் ஏற்பட முயற்சி மேற்கொள்வேன் எனத் தெரிவித்தார். 30 நாட்கள் போர் நிறத்த பரிந்துரையை தயார் செய்தது. அதன்பின் ரஷியாவுடன் தனியாக பேச்சுவார்த்தை நடத்தியது. பின்னர் உக்ரைனுடன் மேற்கத்திய நாடுகளான பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்துடன் சேர்ந்து பேச்சுவார்த்தை நடத்தியது.
முதலில் இரு நாடுகளும் 30 நாட்கள் போர் நிறுத்த பரிந்துரையை ஏற்றுக்கொண்டதாக தகவல் வெளியானது. பின்னர் அதை ஏற்றுக்கொள்ளவில்லை.
இந்த நிலையில்தான் நேற்று ரஷியா மற்றும் உக்ரைன் அதிகாரிகள் துருக்கியில் உள்ள இஸ்தான்புல்லில் நேருக்குநேர் பேச்சுவார்த்தை நடத்தினர். 3 வருடத்திற்கு மேலாக சண்டை நடைபெற்று வரும் நிலையில் முதன்முறையாக நேருக்குநேர் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தை 2 மணி நேரம் கூட நீடிக்கவில்லை.
இந்த நிலையில் ரஷியா உக்ரைனின் வடகிழக்கு சுமி பிராந்தியத்தில் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் 9 பேர் உயிரிழந்த நிலையில, 4 பேர் காயம் அடைந்துள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
ரஷியா எல்லையில் இருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சுமியின் பிலோபிலியா நகர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான பாடத்தை வெளியிட்டு சுமி நிர்வாகம், பொதுமக்கள் வாகனம் மீது வேண்டுமென்று ரஷியா தாக்குதல் நடத்தியுள்ளது மற்றொரு போர் குற்றம் எனச் சாடியுள்ளது.
உக்ரைன்- ரஷியா இடையிலான பேச்சுவார்த்தை நேற்று நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் முக்கிய முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை. இரு தரப்பிலும் மிகப்பெரிய அளவில் கைதிகள் பரிமாற்றத்திற்கு சம்மதம் தெரிவிதுள்ளதாக தெரிகிறது.
அதேவேளையில் இருநாட்டு தலைவர்களும் பேச்சுவார்ச்சை நடத்த வேண்டும் என உக்ரைன் விரும்புவதாக தெரிகிறது. அதேவேளையில் ரஷியா இருதரப்பிலும் போர் நிறுத்தத்திற்கான பரிந்துரையை வழங்க சம்மதம் தெரிவித்துள்ளது. ஆனால் தலைவர்கள் சந்திப்பு பரிசீலனையில்தான் உள்ளது எனத் தெரிவித்துள்ளது.
- ரஷியா- உக்ரைன் இடையே 30 நாள் போர் நிறுத்தம் ஏற்பட அமெரிக்கா முயற்சி மேற்கொண்டு வருகிறது.
- அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தம் பரிந்துரையை ஆதரவாக இருப்பதாக ஜெர்மனி, இங்கிலாந்து தகவல்.
உக்ரைன் ரஷியா போர் தொடுத்து 3 வருடங்கள் நிறைவடைந்து 4ஆவது வருடமாக நடைபெற்று வருகிறது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் போர் நிறுத்தத்திற்கு முயற்சி மேற்கொண்டன. ஆனால் ரஷியாவும், உக்ரைனும் பேச்சுவார்த்தைக்கு முன்வர சம்மதிக்கவில்லை.
கடந்த ஜனவரி மாதம் அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவி ஏற்றதும் உக்ரைன்- ரஷியா இடையே 30 நாட்கள் போர் நிறுத்தத்திற்கான பரிந்துரையை வழங்கியது. இதனால் உக்ரைன் ஏற்றுக்கொண்டது. ஆனால் ரஷியா ஏற்றுக்கொள்ளவில்லை.
கடந்த சில வாரங்களாக அமெரிக்கா பிரான்ஸ், இங்கிலாந்து உளிட்ட ஐரோப்பிய நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. இந்த நிலையில் ரஷியாவுக்கு போர் நிறுத்தம் அழுத்தத்தை கொடுக்கும் வகையில் பிரான்ஸ், ஜெர்மனி, போலந்து மற்றும் இங்கிலாந்து அதிகாரிகள் உக்ரைன் சென்றுள்ளனர்.
அவர்கள் உக்ரைன் அதிபரை சந்தித்து பேசினர். அப்போது வருகிற திங்கிட்கிழமையில் இருந்து 30 நாள் போர் நிறுத்தத்திற்கு வலியுறுத்தியதாக தெரிகிறது. இதை உக்ரைன் அதிபர் ஏற்றுக்கொண்டதாக தெரிகிறது.
இது தொடர்பாக உக்ரைன் நிதியமைச்சர் அந்த்ரி சிபிஹா "ரஷியாவோ முழுமையான, நிபந்தனையற்ற போர் நிறுத்தத்திற்கு உக்ரைன் மற்றும் அதன் நட்பு நாடுகள் தயாராக உள்ளனர்" எனத் தெரிவித்தார்.
உக்ரைன் போர் நிறுத்தத்தை ஏற்றுக்கொண்ட நிலையில், ரஷியாவுக்கு மேற்கத்திய நாடுகள் அழுத்தம் கொடுக்கும் எனத் தெரிகிறது. ஆனால் ரஷியா போர் நிறுத்தத்தை ஏற்றுக்கொள்ளுமா? எனத் தெரியவில்லை.
இரண்டாம் உலகப் போர் முடிவடைந்த 80ஆவது ஆண்டு விழாவை கொண்டாடும் வகையில் ரஷியா 3 நாள் போர் நிறுத்த அறிவிப்பை வெளியிட்டது. ஆனால், 700-க்கும் மேற்படட முறை அதை மீறியதாக உக்ரைன் குற்றம்சாட்டியுள்ளது.
- உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்தி வருவதால் ரஷியாவின் சொத்துகளை ஐரோப்பிய யூனியன் முடக்கியுள்ளது.
- ஐரோப்பிய யூனியன் 1.9 பில்லியன் யூரோஸ் ஆயுதங்கள் கொள்முதல் செய்ய உக்ரைனுக்கு வழங்க இருக்கிறது.
ஐரோப்பிய யூனியனால் முடக்கப்பட்ட ரஷியாவின் சொத்துகளை பயன்படுத்தி நாங்கள் ஆயுதங்கள் கொள்முதல் செய்ய 1.9 பில்லியன் யூரோஸ் உதவி செய்ய இருப்பதாக உக்ரைன் பிரதமர் டெனிஸ் ஷ்மிஹால் தெரிவித்துள்ளார்.
சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள தகவலில் டெனிஸ் ஷ்மியால் கூறியிருப்பதாவது:-
உக்ரைனில் ஆயுதங்கள் தயாரிக்கும் நிறுவனங்களிடம் இருந்து நேரடியாக ஆயுதங்கள் கொள்முதல் செய்ய சுமார் ஒரு பில்லியன் யூரோஸ் உதவியாக கிடைக்க இருக்கிறது.
600 மில்லியன் யூரோஸ் வெடிப்பொருட்கள் வாங்குவதற்கும், 200 மில்லியன் உக்ரைனின் பாதுகாப்பு சிஸ்டத்தை பலப்படுத்துவதற்கும் பயன்படுத்தப்படும்.
டென்மார்க், பிரான்ஸ், நெதர்லாந்து, இத்தாலி ஆகிய நாடுகள் 1 பில்லியன் யூரோக்கள் மதிப்பில் ஆயுதம் வாங்க உதவி செய்ய இருப்பதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ராணுவ உதவி வரலாற்று சிறப்புமிக்கது. ஏனென்றால் ஆயுதங்கள் ரஷியாவின் முடக்கப்பட்ட சொத்துகளில் இருந்து பெறப்பட்ட வருமானம் மூலம் கொள்முதல் செய்யப்ட இருக்கிறது என உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- உக்ரைனில் இருந்து அரிய கனிமங்களை எடுக்க அமெரிக்கா ஒப்பந்தம்.
- இந்த ஒப்பந்தத்தை உக்ரைன் பாராளுமன்றம் அங்கீகரித்துள்ளது.
உக்ரைன் மீது ரஷியா கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி படையெடுத்தது. முதலில் உக்ரைன் பின்வாங்கிய நிலையில் ரஷியா ஏராளமான பகுதிகளை பிடித்தது. பின்னர் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் ஆதரவுடன் உக்ரைன் பதிலடி கொடுத்து பல பகுதிகளை மீட்டது. மூன்று ஆண்டுகள் நிறைவடைந்து 4ஆவது வருடமாக இரு நாடுகளுக்கும் இடையில் போர் நடைபெற்று வருகிறது.
இந்த போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முயற்சி மேற்கொண்டு வருகிறார். அமெரிக்கா உக்ரைன் மற்றும் ரஷியா உடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதற்கிடையே உக்ரைனில் உள்ள அரிய கனிமங்களை எடுத்துக் கொள்ள உக்ரைனுடன் ஒப்பந்தும் போட்டுக்கொள்ள டிரம்ப் விரும்பினார். முதலில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சம்மதம் தெரிவிக்கவில்லை. பின்னர் ஒப்புக்கொண்டார்.
இந்த நிலையில் இந்த ஒப்பந்தத்தை அங்கீகரிப்பதற்கான வாக்கெடுப்பு உக்ரைன் பாராளுமன்றத்தில் நடைபெற்றது. அப்போது ஒருமனதாக ஒப்பந்தத்திற்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டது. வாக்கெடுப்பு வெற்றிபெற 226 வாக்குகள் தேவை என்ற நிலையில், 338 வாக்குகள் ஆதரவாக விழுந்தன. எந்தவொரு உறுப்பினரும் எதிர்த்து வாக்களிக்கவில்லை அல்லது புறக்கணிக்கவில்லை என உக்ரைன் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
- இந்த வெற்றி அணிவகுப்புக்கு பிரதமர் மோடி உட்பட பல்வேறு உலகத் தலைவர்கள் அழைக்கப்பட்டனர்.
- நாங்கள் உங்களுக்கு எந்த உத்தரவாதமும் அளிக்கவில்லை என்று ஜெலென்ஸ்கி கூறினார்.
உக்ரைன் - ரஷியா போர் கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து முடிவின்றி நடைபெற்று வருகிறது. கடந்த ஈஸ்டர் ஞாயிறு அன்று முதல் முறையாக 1 நாள் மட்டும் தாற்காலிக போர் நிறுத்தம் ஏற்பட்டது.
இதற்கிடையே இரண்டாம் உலகப் போரில் சோவியத் யூனியன் மற்றும் அதன் நட்பு நாடுகளின் வெற்றியின் 80வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் இந்த மாதம் ரஷியாவில் வெற்றி அணிவகுப்பு நடைபெற உள்ளது. இந்த வெற்றி அணிவகுப்புக்கு பிரதமர் மோடி உட்பட பல்வேறு உலகத் தலைவர்கள் அழைக்கப்பட்டனர்.
எனவே இதனை முன்னிட்டு மே 8 ஆம் தேதி தொடக்கத்தில் இருந்து மே 10 ஆம் தேதி இறுதி வரை 72 மணி நேர போர்நிறுத்தத்தை ரஷிய அதிபர் புதின் அறிவித்தார். மேலும் உக்ரைன் இந்த போர் நிறுத்தத்தை ஏற்க வலியுறுத்தப்பட்டது.
இந்நிலையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ரஷியாவின் போர் நிறுத்தத்தை நிராகரித்துள்ளார்.
ரஷியாவின் அழைப்பின் பேரில் வரும் 9 ஆம் தேதி ரெட் சதுக்க அணிவகுப்பைக் காண வரும் வெளிநாட்டுத் தலைவர்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் கொடுக்க முடியாது என்று ஜெலன்ஸ்கி எச்சரித்துள்ளார்.
ரஷிய பிரதேசத்தில் நிகழும் நிகழ்வுகளுக்கு நாங்கள் பொறுப்பல்ல, அவர்கள் உங்களைப் பாதுகாப்பார்கள். நாங்கள் உங்களுக்கு எந்த உத்தரவாதமும் அளிக்கவில்லை என்று ஜெலன்ஸ்கி கூறினார்.
இதற்கிடையில், உக்ரைனில் ரஷிய ஆளில்லா விமானம் மற்றும் டிரோன்கள் நடத்திய தாக்குதலில் 47 பேர் காயமடைந்தனர். உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவின் 12 பகுதிகளில் வெள்ளிக்கிழமை இரவு தாக்குதல்கள் நடந்தன.
இந்த தாக்குதலில் கட்டிடங்கள், பொது உள்கட்டமைப்பு மற்றும் வாகனங்கள் சேதமடைந்தன. உக்ரைன் அமெரிக்காவுடன் கனிம ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிறகு இந்தத் தாக்குதல் நடந்தது குறிப்பிடத்தக்கது.
- வான் பாதுகாப்புப் படையினர் ஒரே இரவில் 170 உக்ரேனிய ட்ரோன்களை சுட்டு வீழ்த்தினர்.
- உக்ரைன் கனிம வளங்களை அமெரிக்கா வெட்டி எடுக்க அனுமதிக்கும் ஒப்பந்தம் கையெழுத்தானது.
உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ் மீது ரஷியா டிரோன் தாக்குதலில் 47 பேர் காயமடைந்தனர்.
வெள்ளிக்கிழமை பிற்பகுதியில் நகரின் 12 இடங்களை ட்ரோன்கள் தாக்கின. தாக்குதலில் குடியிருப்பு கட்டிடங்கள், பொதுமக்கள் உள்கட்டமைப்பு மற்றும் வாகனங்கள் சேதமடைந்ததாக கார்கிவ் பிராந்திய ஆளுநர் ஓலே சினிஹுபோவ் தெரிவித்தார்.
இரவு முழுவதும் ரஷ்யா 183 வெடிக்கும் டிரோன்களை ஏவியதாக உக்ரைன் விமானப்படை தெரிவித்துள்ளது. அவற்றில், 77 உக்ரேனிய பாதுகாப்புப் படையினரால் இடைமறிக்கப்பட்டன. மேலும் 73 தொலைந்து போயின. ரஷ்யா இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியதாகவும் விமானப்படை தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் தனது வான் பாதுகாப்புப் படையினர் ஒரே இரவில் 170 உக்ரேனிய டிரோன்களை சுட்டு வீழ்த்தியதாகக் கூறியது. எட்டு க்ரூஸ் ஏவுகணைகள் மற்றும் மூன்று ஏவுகணைகளும் இடைமறிக்கப்பட்டதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
"உக்ரைனில் ஒவ்வொரு இரவும் ஒரு கொடுங்கனவாக மாறி, உயிர்களை பலிவாங்குகிறது. உக்ரைனுக்கு பலத்த வான் பாதுகாப்பு தேவை. எங்கள் அமைதியை விரும்பும் அனைத்து நாடுகளிடமிருந்தும் வலுவான மற்றும் உண்மையான முடிவுகள் தேவை" என்று இன்று அதிகாலையில் X இல் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பதிவிட்டுள்ளார்.
கடந்த புதன்கிழமை உக்ரைன் கனிம வளங்களை அமெரிக்கா வெட்டி எடுக்க அனுமதிக்கும் ஒப்பந்தம் கையெழுத்தானது. இதனால் உக்ரைனுக்கு ராணுவ உதவிகளை அமெரிக்கா மேலும் வழங்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து ரஷியாவின் தாக்குதல் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.






