என் மலர்tooltip icon

    ஐக்கிய அரபு அமீரகம்

    • டாஸ் வென்ற வங்கதேசம் பேட்டிங் தேர்வு செய்தது.
    • அதன்படி, முதலில் ஆடிய வங்கதேசம் 154 ரன்கள் எடுத்தது.

    அபுதாபி:

    ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன.

    இன்று நடைபெற்ற 9-வது லீக் ஆட்டத்தில் 'பி' பிரிவில் இடம்பெற்றுள்ள ஆப்கானிஸ்தான், வங்கதேசம் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற வங்கதேசம் பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, தொடக்க ஆட்டக்காரர் தன்ஜித் ஹசன் அதிரடியாக ஆடி அரை சதம் கடந்தார். அவர் 31 பந்தில் 52 ரன்கள் குவித்தார். சைப் ஹசன் 30 ரன்கள் எடுத்தார். தவ்ஹிக் ஹிருதோய் 26 ரன்கள் எடுத்தார்.

    இறுதியில், வங்கதேசம் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 154 ரன்கள் எடுத்தது.

    ஆப்கானிஸ்தானின் ரஷித் கான், நூர் அகமது தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் களமிறங்குகிறது.

    • முதலில் ஆடிய வங்கதேசம் 139 ரன்கள் எடுத்தது.
    • அடுத்து ஆடிய இலங்கை 140 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

    அபுதாபி:

    ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன.

    இன்று நடைபெற்ற 5-வது லீக் ஆட்டத்தில் 'பி' பிரிவில் இடம்பெற்றுள்ள இலங்கை, வங்கதேசம் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற இலங்கை பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் களமிறங்கிய வங்கதேசம் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 139 ரன்கள் எடுத்தது. முன்னணி வீரர்கள் விரைவில் வெளியேறினர். ஜேகர் அலி 41ரன்னும், ஷமிம் ஹொசைன் 42 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    இலங்கை அணி அணி ஹசரங்கா 2 விக்கெட் கைப்பற்றினார்.

    இதையடுத்து, 140 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. பதும் நிசங்கா அதிரடியாக ஆடி அரை சதம் கடந்து அவுட்டானார்.

    கமில் மிஷாரா 46 ரன்கள் எடுத்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.

    இறுதியில், இலங்கை அணி 14.4 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 140 ரன்கள் எடுத்து முதல் வெற்றியைப் பதிவுசெய்தது.

    • முதலில் ஆடிய பாகிஸ்தான் 160 ரன்கள் எடுத்தது.
    • அடுத்து ஆடிய ஓமன் 67 ரன்களில் சுருண்டு தோல்வி அடைந்தது.

    அபுதாபி:

    ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன.

    இன்று நடைபெற்ற 4-வது லீக் ஆட்டத்தில் 'ஏ' பிரிவில் இடம்பெற்றுள்ள பாகிஸ்தான், ஓமன் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 160 ரன்கள் எடுத்தது. முகமது ஹாரிஸ் பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்து 66 ரன்னில் வெளியேறினார்.

    ஓமன் அணி சார்பில் ஷா பைசல், ஆமிர் கலீம் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

    இதையடுத்து, 161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஓமன் அணி களமிறங்கியது. பாகிஸ்தான் அணியினரின் துல்லியமான பந்து வீச்சில் ஓமன் அணி விரைவில் விக்கெட்களை இழந்தது.

    இறுதியில், ஓமன் அணி 67 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 93 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அபார வெற்றி பெற்றது.

    பாகிஸ்தான் சார்பில் சயீம் அயூப், சுபியான் முகீம், பாஹிம் அஷ்ரப் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    • முதலில் களமிறங்கிய ஹாங்காங் அணி 20 ஓவரில் 143 ரன்கள் எடுத்தது.
    • அடுத்து ஆடிய வங்கதேசம் 144 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

    அபுதாபி:

    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் 3-வது லீக் போட்டி அபுதாபியில் நடைபெற்றது. இதில் வங்கதேசம், ஹாங்காங் அணிகள் மோதின. டாஸ் வென்ற வங்கதேசம் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் களமிறங்கிய ஹாங்காங் அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 143 ரன்கள் எடுத்தது. நிசாகத் கான் 42 ரன்னும், ஜீஷன் அலி 30 ரன்னும், யாசிம் முர்தசா 28 ரன்னும் எடுத்தனர்.

    வங்கதேசம் சார்பில் தஸ்கின் அகமது, ரிஷாத் ஹொசைன், தன்ஷிம் ஹசன் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 144 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்கதேசம் களமிறங்கியது. பர்வேஸ் ஹொசைன் 19 ரன்னும், தன்சித் ஹசன் 14 ரன்னும் எடுத்தனர்.

    3-வது விக்கெட்டுக்கு லிட்டன் தாஸ், தவ்ஹித் ஹிருதோய் ஜோடி இணைந்தது. இந்த ஜோடி பொறுப்புடன் ஆடி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றது.

    அதிரடியாக ஆடிய லிட்டன் தாஸ் அரை சதம் கடந்து 59 ரன்னில் அவுட்டானார்.

    இறுதியில், வங்கதேசம் 17.4 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 144 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. தவ்ஹித் ஹிருதோய் 35 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    • ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடந்து வருகிறது.
    • இந்தியா, பாகிஸ்தான் மோதும் போட்டி செப்டம்பர் 14ம் தேதி நடைபெற உள்ளது.

    அபுதாபி:

    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெற்று வருகிறது.

    இந்திய அணி துபாயில் இன்று நடைபெறும் முதல் லீக் போட்டியில் ஐக்கிய அரபு எமிரேட்சை சந்திக்கிறது.

    இந்தியா, பாகிஸ்தான் மோதும் போட்டி செப்டம்பர் 14-ம் தேதி நடைபெற உள்ளது. இந்தியா, ஓமன் அணிகள் மோதும் போட்டி செப்டம்பர் 19-ம் தேதி நடைபெறுகிறது.

    ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஓமன் அணிகள் இடம்பிடித்துள்ளன.

    இந்நிலையில், ஆசிய கோப்பை தொடர் குறித்து ஓமன் அணியின் சாமேய் ஸ்ரீவத்சவா கூறியதாவது:

    மற்ற எல்லா கிரிக்கெட் வீரர்களையும் போல இந்தியாவுக்காக விளையாட வேண்டும் என்ற கனவு எனக்கும் இருந்தது. ஆனால் சில சூழ்நிலைகளால் அது சாத்தியமாகவில்லை. இந்தியாவுக்கு எதிராக விளையாடுவது சுவாரசியமாக இருக்கும்.

    இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடுவது தானே ஒரு பெரிய விஷயமாக இருக்கும். எங்கள் முழு அணியும் அனைத்துப் போட்டிகளிலும் சிறப்பாக செயல்படவும், நல்ல போட்டியை கொடுக்கவும் தயாராக இருக்கும் என தெரிவித்தார்.

    • முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 20 ஓவரில் 207 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    • அடுத்து ஆடிய ஐக்கிய அரபு அமீரகம் 176 ரன்கள் மட்டுமே எடுத்து தோற்றது.

    துபாய்:

    ஆசிய கோப்பை தொடருக்கு தயாராகும் பொருட்டு பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ) அணிகள் இடையே முத்தரப்பு டி20 தொடர் நடைபெறுகிறது. முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை பாகிஸ்தான் 39 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

    இந்நிலையில், 2வது லீக் போட்டியில் பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம் அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் பேட் செய்த பாகிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 207 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தொடக்க ஆட்டக்காரர் சயீம் அயூப் 69 ரன்னும், ஹசன் நவாஸ் 56 ரன்னும் எடுத்தனர்.

    இதையடுத்து, 208 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஐக்கிய அரபு அமீரகம் 176 ரன்கள் மட்டுமே எடுத்தது.

    அந்த அணியின் ஆசிப் கான் தனியாக போராடினார். அதிரடியாக ஆடிய அவர் 35 பந்தில் 6 சிக்சர், 6 பவுண்டரி உள்பட77 ரன்கள் குவித்தார். மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை. இதன்மூலம் பாகிஸ்தான் அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    பாகிஸ்தான் சார்பில் ஹசல் அலி 3 விக்கெட்டும், முகமது நவாஸ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    • இந்திய அணி முதல் ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தை செப்டம்பர் 10-ம் தேதி சந்திக்கிறது.
    • இந்திய அணி பரம எதிரியான பாகிஸ்தானை செப்டம்பர் 14-ம் தேதி துபாயில் சந்திக்கிறது.

    மும்பை:

    17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 9-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது.

    இந்த தொடரில் பங்கேற்றுள்ள 8 அணிகள் 2 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அதன்படி ஏ பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் அணிகளும், பி பிரிவில் ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், இலங்கை, ஹாங்காங் அணிகளும் இடம் பெற்றுள்ளன.

    இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தை செப்டம்பர் 10-ம் தேதி துபாயில் சந்திக்கிறது. பரம எதிரியான பாகிஸ்தானை செப்டம்பர் 14-ம் தேதி துபாயிலும், ஓமனை செப்டம்பர் 19-ம் தேதி அபுதாபியிலும் எதிர்கொள்கிறது. இறுதிப்போட்டி செப்டம்பர் 28-ம் தேதி துபாயில் அரங்கேறுகிறது.

    இந்நிலையில், ஆசிய கோப்பை போட்டி தொடங்கும் நேரத்தில் மாற்றம் செய்யப்படுவதாக ஐக்கிய அரபு நாடுகள் வாரியம் அறிவித்துள்ளது.

    உள்ளூர் நேரப்படி ஆசிய கோப்பை போட்டிகள் மாலை 6 மணிக்கு (இந்திய நேரப்படி இரவு 7.30) தொடங்குவதாக இருந்தன. அந்த நேரத்தில் அங்கு அதிகப்படியான வெப்பம் இருப்பது வழக்கம் என்பதால் வீரர்கள் பெரிய சிரமத்தை சந்திப்பதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.

    எனவே, இதை கருத்தில் கொண்டு ஆசிய கோப்பை போட்டிகள் அரை மணி நேரம் தாமதமாக மாலை 6.30 மணிக்கு தொடங்கும் என ஐக்கிய அரபு நாடுகள் வாரியம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி இந்திய நேரத்தில் இரவு 8 மணிக்கு போட்டி தொடங்க உள்ளது.

    • சம்பத்தப்பட்ட நபர் மீது கடை உரிமையாளர் வழக்கு தொடர்ந்திருந்தார்.
    • தனது தவறுக்காக இளைஞர் மன்னிப்புக் கோரினார்.

    ஐக்கிய அரபு அமீரகம் நாட்டில் இணையதளத்தில் நெகடிவ் ரிவ்யூ பதிவிட்ட இளைஞருக்கு இந்திய மதிப்பில் ரூ.16 லட்சம் அபராதம் விதித்து அந்நாட்டு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது.

    அபராதம் விதிக்கப்பட்ட நபரின் ரிவ்யூவால் தனது கடையின் விற்பனை பாதிப்பு அடைந்துள்ளதாக தொழிலதிபர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

    இந்த வழக்கின் விசாரணையில், தனது தவறுக்காக இளைஞர் மன்னிப்புக் கோரிய நிலையிலும், கடை உரிமையாளருக்கு இந்திய மதிப்பில் ரூ.16 லட்சம் நஷ்டஈடு வழங்க வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டது.

    • முதல் இரு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றன.
    • 3வது டி20 போட்டியில் ஐக்கிய அரபு அமீரகம் வெற்றி பெற்றது.

    ஷார்ஜா:

    வங்கதேச கிரிக்கெட் அணி ஐக்கிய அரபு அமீரகத்தில் (யு.ஏ.இ.) சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இதில் நடைபெற்ற முதல் இரு போட்டிகளில் இரு அணியும் தலா ஒரு வெற்றி பெற்றன.

    இந்நிலையில், வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது டி20 போட்டி ஷார்ஜாவில் நடைபெற்றது. டாஸ் வென்ற யு.ஏ.இ. பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய வங்கதேச அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 162 ரன்களை எடுத்தது. ஜாக்கர் அலி 41 ரன்னும், தன்ஜித் ஹசன் 40 ரன்னும் எடுத்தனர்.

    யு.ஏ.இ. சார்பில் ஹைதர் அலி 3 விக்கெட்டும், மைதுல்லா கான், சாகிர் கான் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    தொடர்ந்து ஆடிய யு.ஏ.இ. அணி 19.1 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. அலிஷான் ஷராபு பொறுப்புடன் ஆடி அரை சதமடித்து 68 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். இந்த வெற்றியின் மூலம் யு.ஏ.இ. அணி டி20 தொடரை 2-1 என கைப்பற்றி அசத்தியது.

    ஆட்ட நாயகன் விருது அலிஷான் ஷராபுவுக்கும், தொடர் நாயகன் விருது முகமது வசீமுக்கும் வழங்கப்பட்டது.

    • விமானப்படையின் ஜெட் விமானங்கள் இருபுறமும் சூழ பாதுகாப்புடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.
    • பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை பெறுவதற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டது.

    அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தான் பொறுப்பேற்ற பிறகு வளைகுடா நாடுகளில் கடந்த 13-ந் தேதி சுற்றுப்பயணம் மேற்கொள்ள தொடங்கினார்.

    அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தனி விமானம் மூலம் இன்று மாலை கத்தார் நாட்டில் இருந்து அபுதாபிக்கு சென்றுள்ளார்.

    அங்கு, சர்வதேச விமான நிலையத்தில் டிரம்பிற்கு அமீரக அதிபர் மேதகு ஷேக் முகம்மது பின் ஜாயித் அல் நஹ்யான் நேரில் வரவேற்பு அளித்தார்.

    முன்னதாக அமீரக எல்லையில் இருந்து விமானப்படையின் ஜெட் விமானங்கள் இருபுறமும் சூழ பாதுகாப்புடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.

    அதனை தொடர்ந்து அவருக்கு 21 குண்டுகள் முழங்க முப்படை ராணுவ அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. இதில் இருநாடுகளின் தேசிய கீதங்கள் இசைக்கப்பட்டது.

    பிறகு நடந்த சந்திப்பு நிகழ்ச்சியில் அமீரக அதிபர் மேதகு ஷேக் முகம்மது பின் ஜாயித் அல் நஹ்யான் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் ஆகியோர் இருதரப்பு அமைச்சர்கள், உயர் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அதனை தொடர்ந்து இரு தலைவர்கள் முன்னிலையில் பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை பெறுவதற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டது.

    தனது சுற்றுப்பயணத்தை நிறைவு செய்து டிரம்ப் நாளை மறுநாள் (சனிக்கிழமை) அமெரிக்கா திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • டீசல் விலை கடந்த மாதம் லிட்டர் ஒன்றுக்கு 2.63 திர்ஹாமாக விற்பனை செய்யப்பட்டு வந்தது.
    • புதிய விலைகள் அனைத்தும் இன்று முதல் அமல்படுத்தப்படுகிறது.

    அமீரக எரிசக்தி அமைச்சகத்தின் எரிபொருள் விலைக்குழுவுக்கான கமிட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    அமீரகத்தில் பெட்ரோல், டீசல் ஆகியவற்றுக்காக அரசு வழங்கி வந்த மானியம் ரத்து செய்யப்பட்டதால், ஒவ்வொரு மாதமும் பெட்ரோல், டீசல் விலை சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் அமீரக எரிசக்தி அமைச்சகம், அமீரக எண்ணெய் நிறுவனங்களின் அதிகாரிகள் பேசி இந்த விலை முடிவு செய்யப்பட்டது. இதன்படி இந்த மாதத்திற்கான விலை நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    அமீரகத்தில் சூப்பர் 98 ரக பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு 2.58 திர்ஹாமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது கடந்த மாதம் லிட்டர் ஒன்றுக்கு 2.57 திர்ஹாமாக இருந்தது. இதில் கடந்த மாதத்தை விட 1 பில்ஸ் அதிகரித்துள்ளது. ஸ்பெஷல் 95 ரக பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு 2.47 திர்ஹாமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது கடந்த மாதம் லிட்டர் ஒன்றுக்கு 2.46 திர்ஹாமாக இருந்தது. இதில் 1 பில்ஸ் விலை அதிகரித்துள்ளது.

    இ-பிளஸ் பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றுக்கு 2.38 திர்ஹாமில் இருந்து 2.39 திர்ஹாம் ஆக அதிகரித்துள்ளது. இந்த ரக பெட்ரோலின் விலை கடந்த மாதத்தை விட 1 பில்ஸ் அதிகரித்துள்ளது.

    அதேபோல் டீசல் விலை கடந்த மாதம் லிட்டர் ஒன்றுக்கு 2.63 திர்ஹாமாக விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த விலையில் 11 பில்ஸ் குறைக்கப்பட்டு நடப்பு மாதம் லிட்டர் ஒன்றுக்கு 2.52 திர்ஹாம் ஆக நிர்ணயம் செய்யப்படுகிறது.

    இந்த புதிய விலைகள் அனைத்தும் 5 சதவீத வாட் வரி விதிப்பிற்கு உட்படுத்தப்பட்டுள்ளது. எனவே அந்த வரி உட்பட அறிவிக்கப்பட்டுள்ள புதிய விலையில் பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்படும். இந்த புதிய விலைகள் அனைத்தும் இன்று முதல் அமல்படுத்தப்படுகிறது.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ஐக்கிய அரபு அமீரக சிறைகளில் உள்ள 2,000-க்கும் மேற்பட்ட கைதிகளை விடுவிக்க அதிபர், பிரதமர் உத்தரவிட்டுள்ளனர்.
    • பிரதமர் ஷேக் முகமது பின் ரஷீத் 1,518 கைதிகளை விடுவிக்க உத்தரவிட்டார்.

    புனித ரம்ஜான் மாதத்தை முன்னிட்டு ஐக்கிய அரபு அமீரக சிறைகளில் உள்ள 500-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் கருணை அடிப்படையில் விடுவிக்கப்படுகின்றனர்.

    ரம்ஜானை ஒட்டி கருணை அடிப்படையில் ஐக்கிய அரபு அமீரக சிறைகளில் உள்ள 2,000-க்கும் மேற்பட்ட கைதிகளை விடுவிக்க அதிபர் ஷேக் முகமது பின் சயீத், பிரதமர் ஷேக் முகமது பின் ரஷீத் உத்தரவிட்டுள்ளனர்.

    அதிபர் ஷேக் முகமது பின் சயீத் 1,295 கைதிகளை விடுவிக்கவும், பிரதமர் ஷேக் முகமது பின் ரஷீத் 1,518 கைதிகளை விடுவிக்கவும் உத்தரவிட்டார்.

    கருணை அடிப்படையில் விடுவிக்கப்படுபவர்களில் இந்திய நாட்டினர் 500-க்கும் மேற்பட்டவர்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த உத்தரவுகள் பிப்ரவரி மாத இறுதியில் செயல்படுத்தப்பட்டன.

    ஐக்கிய அரபு அமீரகத்தின் நீண்டகால பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக, வருடாந்திர ரமலான் மன்னிப்புகள் நாட்டின் கருணை மற்றும் இரண்டாவது வாய்ப்புகளுக்கான உறுதிப்பாட்டை பிரதிபலிக்கின்றன.

    புனித மாதத்தின் மதிப்புகளுடன் இணைந்து, இந்த நடவடிக்கை மன்னிப்பு, இரக்கம் மற்றும் மறுவாழ்வு ஆகியவற்றை வலியுறுத்துகிறது. கூடுதலாக, பெருமளவிலான விடுதலை சிறைவாசிகளின் எண்ணிக்கையைக் குறைக்க உதவுகிறது.

    ×