என் மலர்tooltip icon

    பாகிஸ்தான்

    • 10-வது பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 லீக் தொடர் நேற்று தொடங்கியது
    • தீ விபத்து தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இந்தியா ஐபிஎல் டி20 லீக் தொடரை நடத்துவது போல் பாகிஸ்தானும் பிஎஸ்எல் (பாகிஸ்தான் சூப்பர் லீக்) என்ற பெயரில் டி20 தொடரை நடத்துகிறது.

    இந்த வருடம் 10-வது பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 லீக் தொடர் நேற்று தொடங்கியது. இந்நிலையில், இஸ்லாமாபாத்தில் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் விளையாடும் வீரர்கள் தங்கியிருந்த ஓட்டலில் தீ விபத்து ஏற்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால், கிரிக்கெட் வீரர்கள் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.

    • அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட ராணா, இந்தியா கொண்டு வரப்பட்டுள்ளார்.
    • பாகிஸ்தான் நாட்டில் பிறந்த ராணா, கனடா நாட்டின் குடியுரிமை பெற்றவர்.

    இந்தியாவின் வர்த்தக மையமாக திகழும் மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் 26-ந்தேதி தாஜ்ஓட்டல், ரெயில் நிலையம் உள்ளிட்ட பகுதியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 166 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர்.

    இந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர்களில் பாகிஸ்தான் வம்சாவளியை சேர்ந்த அமெரிக்கரான டேவிட் கோல்மேன் ஹட்லியும் ஒருவர். லஷ்கர் இ தொய்பா என்ற பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய இவரும், பாகிஸ்தான் வம்சாவளியை சேர்ந்த கனடா நாட்டு தொழில் அதிபரான தஹாவூர் ராணாவும் மும்பை தாக்குதலில் கூட்டு சதியில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டது.

    இந்த வழக்கில் தஹாவூர் ராணாவை இந்தியா தேடிவந்தது. இந்த நிலையில் அவர் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டார். 2014-ம் ஆண்டு அவருக்கு 14 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் லாஸ் ஏஞ்சல்சில் உள்ள தடுப்பு மையத்தில் அடைக்கப்பட்டார்.

    தஹாவூர் ராணாவை தங்களிடம் ஒப்படைக்குமாறு இந்தியா பல ஆண்டுகளாக கோரி வந்தது. அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவி ஏற்றதும் இதற்கு ஒரு விடிவு காலம் பிறந்தது. ராணா இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவார் என அறிவித்தார்.

    தன்னை நாடு கடத்தக்கூடாது என தஹாவூர் ராணா அமெரிக்க கோர்ட்டுகளில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டது. அவரது கடைசி கட்ட முயற்சிக்கும் பலன் கிடைக்கவில்லை. இதனைத் தொடர்ந்து ராணா இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளார். என்.ஐ.ஏ. அவரை கைது செய்து திகார் சிறையில் அடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில் ராணா குறித்து பாகிஸ்தான் கருத்து தெரிவித்துள்ளது. ராணா விசயத்தில் பாகிஸ்தான் விலகியே இருக்கும் பாகிஸ்தான் வெளியுறுத்துறை செய்தி தொடர்பாகளர் ஷஃப்கத் அலிகான் தெரிவித்துள்ளார்.

    மேலும் இது தொடர்பாக ஷஃப்கத் அலிகான் கூறியதாவது:-

    தஹாவூர் ராணா கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக பாகிஸ்தான் ஆவணங்களை புதுப்பிக்கவில்லை. கனடாவுக்கு குடிபெயர்ந்தவர்களுக்கு பாகிஸ்தான் இரட்டை குடியுரிமை வழங்காது. அவருடைய கனடா குடியுரிமை தெளிவாக உள்ளது.

    இவ்வாறு ஷஃப்கத் அலிகான் தெரிவித்துள்ளார்.

    ராணா மீது குற்றச்சதி, இந்தியாவுக்கு எதிராக போர் தொடுத்தல், கொலை உள்ளிட்ட வழக்குகள் போடப்பட்டுள்ளன.

    • பாகிஸ்தானின் கைபர் பக்துங்வா மாகாணத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளதாக தகவல் கிடைத்தது.
    • அதன் பேரில் ராணுவ வீரர்கள் அங்கு விரைந்து சென்று தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானின் கைபர் பக்துங்வா மாகாணத்தில் பயங்கரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாக ராணுவ வீரர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் ராணுவ வீரர்கள் அங்கு விரைந்து சென்று தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    வடக்கு வசிரிஸ்தான் பகுதியில் பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் ராணுவ வீரர்களை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். அதை தொடர்ந்து ராணுவ வீரர்கள் பதில் தாக்குதல் நடத்தினர்.

    இந்தத் துப்பாக்கி சண்டையில் 8 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும், 4 பயங்கரவாதிகள் காயமடைந்தனர்.

    விசாரணையில், துப்பாக்கி சண்டையில் பலியான பயங்கரவாதிகள் தெஹ்ரிக்-தலிபான் பாகிஸ்தான் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்தது.

    • பாகிஸ்தான் செய்தி சேனலுக்கு பாகிஸ்தான் வீரர் சஜித் கான் பேட்டி அளித்தார்.
    • 12 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள சஜித் கான் 59 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்

    கிரிக்கெட் வீரர் ஆகவில்லை என்றால் தான் ஒரு கேங்ஸ்டராக ஆகியிருப்பேன் என்று பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் சஜித் கான் தெரிவித்துள்ளார்.

    நீங்கள் கிரிக்கெட் வீரராக ஆகவில்லை என்றால் என்னவாக இருந்திருப்பீர்கள் என்று பாகிஸ்தான் செய்தி சேனலில் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் இவ்வாறு பதில் அளித்துள்ளார்.

    பாகிஸ்தான் அணிக்காக 12 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள சஜித் கான் 59 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • தெற்காசியாவில் அமைதியை மேம்படுத்துவதற்கான முயற்சிகளுக்காக இம்ரான் கான் அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டார்.
    • கடந்த ஜனவரியில் அவருக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.

    மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகத்திற்கான பங்களிப்புகளுக்காக பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

    நார்வே நாட்டின் அரசியல் கட்சியான பார்ட்டியேட் சென்ட்ரம் உடன் இணைந்த ஒரு வழக்கறிஞர் குழுவான பாகிஸ்தான் வேர்ல்ட் அலையன்ஸ் அமைப்பினர் இம்ரான் கானின் பெயரை பரிந்துரைத்துள்ளனர்.

    இதுதொடர்பாக பார்ட்டியேட் சென்ட்ரம் கட்சி தனது அதிகாரபூர்வ எக்ஸ் பதவில், பாகிஸ்தானில் ஜனநாயகத்தை மேம்படுத்துவதில் இம்ரான் கான் ஆற்றிய பணிக்காக அவர் அங்கீகரிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது.

    2019 ஆம் ஆண்டில், தெற்காசியாவில் அமைதியை மேம்படுத்துவதற்கான முயற்சிகளுக்காக இம்ரான் கான் அமைதிக்கான நோபல் பரிசுக்கு முதன்முதலில் பரிந்துரைக்கப்பட்டார். தற்போது இரண்டாவது முறையாக அந்த பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

    ஆனால் ஒவ்வொரு ஆண்டும், நார்வே நோபல் குழு நூற்றுக்கணக்கான பரிந்துரைகளைப் பெறுகிறது, அதன் பிறகு அவர்கள் எட்டு மாத கால செயல்முறைக்கு பிறகு வெற்றியாளரைத் தேர்ந்தெடுக்கிறார்கள்

    முன்னாள் கிரிக்கெட் வீரரான இம்ரான் கான் 1996 இல் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (PTI) கட்சியை தொடங்கினார். கடந்த 2018 முதல் 2022 வரை பாகிஸ்தான் பிரதமராக இருந்தார்.

    அவரது பதவிக்காலத்தில் நடைபெற்ற ஊழல் தொடர்பான வழக்குகளில் கடந்த 2023 முதல் சிறையில் உள்ளார். கடந்த ஜனவரியில் அவருக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. 

    • இரு தரப்பினருக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை.
    • தீவிரவாதிகளிடம் இருந்து வெடிபொருட்கள் மற்றும் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.

    இஸ்லாமாபாத்:

    ஆப்கானிஸ்தானில் கடந்த 2021-ம் ஆண்டு தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றினார்கள். அன்றில் இருந்து பாகிஸ்தானுக்கு அவர்கள் தலைவலியாக மாறி உள்ளனர்.

    ஆப்கானிஸ்தானை சேர்ந்த பயங்கர வாதிகள் பாகிஸ்தானின் சைபர் பக்துன்க்வா மற்றும் பலுசிஸ்தான் மாகாண எல்லைப்பகுதியில் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதலில் பொதுமக்கள், பாதுகாப்பு படை வீரர்கள் பலர் பலியாகி வருகின்றனர்.

    தீவிரவாதிகள் தாக்குதல் அதிகரித்து வருவதைதொடர்ந்து அவர்களை ஒழிக்கும் நடவடிக்கையில் பாகிஸ்தான் அரசு இறங்கி உள்ளது. அவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

    இந்த நிலையில் கைபர் பக்துன்க்வா தேரா இஸ்மாயில்கான் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாகிஸ்தான் உளவு துறைக்கு ரகசிய தகவல் வந்தது.

    இதையடுத்து பாகிஸ்தான் ராணுவத்தினர் அந்த பகுதியை சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு மறைந்து இருந்த தீவிரவாதிகள் ராணுவ வீரர்கள் மீது துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர்.

    பாகிஸ்தான் ராணுவத்தினரும் திருப்பி சுட்டனர். இரு தரப்பினருக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் 10 தீவிரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர். ராணுவ அதிகாரி ஒருவரும் உயிர் இழந்தார்.

    தீவிரவாதிகளிடம் இருந்து ஏராளமான வெடிபொருட்கள் மற்றும் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டது.

    • தற்கொலைப் படையைச் சேர்ந்த பயங்கரவாதி, தனது வாகனத்தில் இருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்ததில், பாதுகாப்பு படையினரின் வாகனமும் வெடித்து சிதறியது.
    • பலுச் விடுதலை படை நடத்திய ரெயில் கடத்தலில் 90 வீரர்கள் கொல்லப்பட்டதாக அவ்வமைப்பு கூறியிருந்தது.

    பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் கடந்த வாரம் ரெயிலை கடத்திய பிரிவினைவாத பலுச் விடுதலை படை, நேற்று பாதுகாப்புப் படையினர் சென்ற ராணுவ வாகனத்தின் மீது தற்கொலை தாக்குதல் நடத்தியது.

    இந்த தாக்குதலில் 5 வீரர்கள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலின் பரபரப்பூட்டும் வீடியோவை பலுச் விடுதலை படை தற்போது வெளியிட்டுள்ளது.

    நேற்று காலையில் நோஷிகி பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் துணை ராணுவப் படையினர் வாகனங்களில் சென்றபோது, கான்வாயில் புகுந்த ஒரு வாகனம் திடீரென வெடித்தது. தற்கொலைப் படையைச் சேர்ந்த பயங்கரவாதி, தனது வாகனத்தில் இருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்ததில், பாதுகாப்பு படையினரின் வாகனமும் வெடித்து சிதறியது. 5 பேர் உயிரிழந்த நிலையில் 10 பேர் படுகாயமடைந்தனர்.

    அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முன்னதாக பலுச் விடுதலை படை நடத்திய ரெயில் கடத்தலில் 90 வீரர்கள் கொல்லப்பட்டதாக அவ்வமைப்பு கூறியிருந்தது.  

    கடந்த வாரம் இதே மாகாணத்தில், பலுச் விடுதலை படையினர், கூடலார் மற்றும் பிரு குன்ரி மலைப்பகுதிக்கு அருகே 440 பயணிகளை ஏற்றி சென்ற ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரெயில் மீது தாக்குதல் நடத்தி பயணிகளை சிறைபிடித்தனர்.

    அதில் பெரும்பாலானோர் பாதுகாப்பு ஊழியர்கள் ஆவர். மறுநாள் ராணுவம் நடத்திய மீட்பு நடவடிக்கையில் 33 பயங்கரவாதிகளையும் கொல்லப்பட்டனர். அதற்கு முன்பு, 21 பயணிகளையும் நான்கு துணை ராணுவ வீரர்களையும் பயங்கரவாதிகள் கொன்றனர் என்று அரசு தரப்பில் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

    • மர்ம நபர் சுட்டு கொன்றுவிட்டு தப்பி சென்றார்.
    • காஷ்மீரில் பெரிய தாக்குதல்களை நடத்தினார்.

    பாகிஸ்தானில் லஷ்கர்-இ-தொய்பா உள்பட பல பயங்கரவாத அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. அவை இந்தியாவில் தாக்குதல் நடத்த திட்டமிடுகின்றன. குறிப்பாக ஜம்மு-காஷ்மீரில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் முயற்சித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் பாகிஸ்தானில் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் முக்கிய பயங்கரவாதியான அபு கத்தால் மர்ம நபரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். பாகிஸ்தானின் ஜீலம் மாவட்டத்தில் உள்ள தினா பகுதியில் அபு கத்தால் இருந்தபோது அவரை மர்ம நபர் சுட்டு கொன்றுவிட்டு தப்பி சென்றார்.

    சுட்டுக் கொல்லப்பட்ட அபு கத்தால், லஷ்கர்-இ-தொய்பா நிறுவனர்களில் ஒருவராகவும், மும்பை பயங்கரவாதத் தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்ட ஹஃபீஸ் சயீத்தின் நெருங்கிய உதவியாளர் ஆவார். மேலும் அவரை லஷ்கரின் தலைமை செயல்பாட்டுத் தளபதியாக நியமித்தார். ஹஃபீஸ் சயீத்தின் உத்தரவுகளை பெற்று அபு கத்தால் காஷ்மீரில் பெரிய தாக்குதல்களை நடத்தினார்.

    ஜம்மு-காஷ்மீரில் பல தாக்குதலுக்கு அபு கத்தால் தலைமை தாங்கியுள்ளார். காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் உள்ள ஷிவ் கோரி கோவிலில் இருந்து திரும்பிய யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற பேருந்து மீது நடத்தப்பட்ட தாக்குதலில் முக்கிய பங்கு வகித்தார்.

    2023-ம் ஆண்டு ரஜோரியின் தங்ரி கிராமத்தில் பொது மக்களை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் 7 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதல் தொடர்பான வழக்கில் தேசிய புலனாய்வு முகமையின் குற்றப்பத்திரிகையில் அபு கத்தால் பெயர் இடம்பெற்றுள்ளது.

    அதில் அபு கத்தால் உள்பட 3 பயங்கரவாதிகள் பாகிஸ்தானில் இருந்து பயங்கரவாதிகளை ஆள் சேர்ப்பு செய்து அனுப்பும் பணியில் ஈடுபட்டனர் என்றும் காஷ்மீரில் பொது மக்களை குறிவைத்து தாக்குதல் நடத்தினர் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்தியாவால் தேடப்படும் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்ட அபு கத்தால் பாகிஸ்தானில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

    • 214 பேரும் தூக்கிலிடப்பட்டதாக பிஎல்ஏ கிளர்ச்சி படையை சேர்ந்த செய்தி தொடர்பாளர் அறிவித்துள்ளார்.
    • 33 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் பாகிஸ்தான் ராணும் தெரிவித்துள்ளது.

    பாகிஸ்தான் ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரெயில் கடத்தல் விவகாரத்தில், பணைய கைதிகளாக பிடித்து வைக்கப்பட்ட ராணுவ வீரர்கள் 214 பேரும் தூக்கிலிடப்பட்டதாக பிஎல்ஏ கிளர்ச்சி படையை சேர்ந்த செய்தி தொடர்பாளர் ஜீயாந்த் பலோச் அறிவித்துள்ளார்.

    இதற்கிடையே, கிளர்ச்சிப்படை மிகைப்படுத்தப்பட்ட கூற்றுகளை வெளியிடுவதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது.

    354 பணைய கைதிகள் விடுவிக்கப்பட்டதாகவும், 33 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் பாகிஸ்தான் ராணும் தெரிவித்துள்ளது.

    மேலும், கிளர்ச்சி படையால் வேறு எந்த பணைய கைதிகளும் கொல்லப்பட்டதற்கோ, அழைத்து செல்லப்பட்டதற்கோ எந்த ஆதாரமும் இல்லை எனவும் கூறப்படுகிறது.

    • ஐ.பி.எல். தொடரில் உலகின் அனைத்து முன்னணி வீரர்களும் கலந்து கொள்கிறார்கள்.
    • இந்திய வீரர்கள் மற்ற நாடுகளில் நடக்கும் டி20 லீக் போட்டிக்கு சென்று விளையாடுவதில்லை.

    இஸ்லாமாபாத்:

    இந்திய வீரர்களைப் பொறுத்தவரை கிரிக்கெட்டில் இருந்து முழுமையாக ஓய்வுபெற்ற பிறகே வெளிநாட்டு லீக் தொடரில் பங்கேற்க பி.சி.சி.ஐ. அனுமதி அளித்து வருகிறது.

    இந்நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக் அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:

    ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட்டில் உலகின் அனைத்து முன்னணி வீரர்களும் கலந்து கொள்கிறார்கள். ஆனால் இந்திய வீரர்கள் மற்ற நாடுகளில் நடக்கும் 20 ஓவர் லீக் போட்டிக்கு சென்று விளையாடுவதில்லை.

    எனவே எல்லா நாட்டு கிரிக்கெட் வாரியங்களும் ஐ.பி.எல். போட்டிக்கு தங்களது வீரர்களை அனுப்புவதை நிறுத்த வேண்டும்.

    நீங்கள் (இந்தியா) உங்களது வீரர்களை வெளிநாட்டு போட்டிகளில் விளையாடுவதற்கு விடுவிக்காவிட்டால் மற்ற நாட்டு கிரிக்கெட் வாரியங்களும் ஏன் அதே மாதிரியான நிலைப்பாட்டை எடுக்கக் கூடாது? என கேள்வி எழுப்பியுள்ளார்.

    • கராச்சியில் இருந்து உள்நாட்டு விமானம் புறப்பட்டு லாகூர் சென்றடைந்தது.
    • லாகூரில் தரையிறங்கும்போது லேண்டிங் கியரின் பின்புற சக்கரம் காணாமல் போனது தெரியவந்தது.

    பாகிஸ்தான் சர்வதேச ஏர்லைன்ஸ்க்கு சொந்தமான உள்ளாட்டு விமானம் லாகூர் விமான நிலையத்தில் லேண்டிங் கியரின் பின்புற சக்கரங்களில் ஒன்று இல்லாத நிலையில் தரையிறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. என்றபோதிலும் பயணிகளுக்கு எந்தவித அசாம்பாவிதம் ஏற்படாத வகையில் விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியது.

    பாகிஸ்தான் சர்வதேச ஏர்லைன்ஸ்க்கு சொந்தமான உள்நாட்டு விமானம் கராச்சியில் இருந்து லாகூருக்கு புறப்பட்டுச் சென்றது.

    பயணிகளுடன் லாகூர் விமான நிலையத்தில் தரையிறங்கியது. அதன்பின்னர்தான் லேண்டிங் கியரில் உள்ள 6 சச்கரங்கில் பின்புறம் இருக்கும் சக்கரங்களில் ஒன்று காணாமல் போனது தெரியவந்தது. விமானம் காராச்சியில் இருந்து புறப்படும்போது கழன்று விழுந்ததா? அல்லது லாகூர் விமான நிலையத்தில் தரையிறங்கும்போது கழன்று விழுந்ததா? எனத் தெரியவில்லை.

    இது தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. விமானம் கராச்சியில் இருந்து புறப்படும்போது ஒரு சக்கரம் பழுதடைந்த நிலையில் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • ஜாபர் எக்ஸ்பிரஸ் ரெயிலை பயங்கரவாதிகள் வழிமறித்து கடத்தினர்.
    • ராணுவத்தை சேர்ந்த 28 வீரர்கள் உயிரிழந்தனர்.

    பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் கடத்திய பயணிகள் ரெயிலில் சிக்கியிருந்த பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். கடத்தப்பட்ட ரெயிலில் இருந்து பயணிகளை மீட்கும் பணியின் போது பாகிஸ்தான் ராணுவத்தை சேர்ந்த 28 வீரர்கள் உயிரிழந்ததாகவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

    முன்னதாக பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் உள்ள பலுசிஸ்தான் மாகாணம், குவெட்டாவில் இருந்து கைபர் பதுன்கவா மாகாணத்தின் பெஷாவர் பகுதிக்கு சென்று கொண்டிருந்த ஜாபர் எக்ஸ்பிரஸ் ரெயிலை பயங்கரவாதிகள் வழிமறித்து கடத்தினர்.

    பாகிஸ்தானிடமிருந்து பலுசிஸ்தானுக்கு சுதந்திரம் கோரும் பலுச் விடுதலை இராணுவம் (BLA) என்ற பிரிவினைவாத அமைப்பு இந்த கடத்தலை அரங்கேற்றியது. ரெயில் பிரு குன்றி மலைப்பகுதியின் அருகில் உள்ள சுரங்கப்பாதையில் சென்றுக் கொண்டிருந்த போது ஆயுதம் ஏந்திய நபர்கள் ரெயிலை வழிமறித்தனர்.

    இதையடுத்து ரெயிலில் இருந்த பயணிகளை மீட்கும் பணியில் பாதுகாப்பு படையினர் மற்றும் அந்நாட்டு ராணுவத்தினர் ஈடுபட்டு இருந்தனர். அதன்படி ரெயிலில் சிக்கி பணயக்கைதிகளாக வைக்கப்பட்ட பயணிகள் அனைவரும் மீட்கப்பட்டுள்ளனர்.

    "இந்த நடவடிக்கையின் போது 346 பணயக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர் மற்றும் 30க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்," என்று ஒரு ராணுவ அதிகாரி ஏ.எஃப்.பி. (AFP) நிறுவனத்திடம் தெரிவித்தார்.

    இந்தத் சம்பவத்துக்கு பலூச் விடுதலைப் படை (BLA) உரிமை கோரியது. தண்டவாளத்தில் வெடிப்பு நிகழ்ந்து, மலைகளில் மறைந்திருந்த இடங்களில் இருந்து டஜன் கணக்கான துப்பாக்கி ஏந்தியவர்கள் வெளியே வருவது போன்ற வீடியோவை அது வெளியிட்டது.

    ×