என் மலர்
நீங்கள் தேடியது "ஐஎஸ்ஐ தலைவர்"
- பாகிஸ்தானுக்கு எதிராக பல அதிரடி நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது.
- அசீம் மாலிக் தற்போது பாகிஸ்தானின் உளவுப்பிரிவாக உள்ள ஐஎஸ்ஐ-யின் தலைவராக செயல்பட்டு வருகிறார்.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் கடந்த 22-ந்தேதி 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர்.
இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தானில் செயல்படும் லஷ்கா்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பின் நிழல் அமைப்பான 'தி ரெசிஸ்டன்ஸ் பிரண்ட்' பொறுப்பு ஏற்றது.
இதையடுத்து, பாகிஸ்தானுக்கு எதிராக பல அதிரடி நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது.
பாகிஸ்தான் விமானங்கள் இந்திய வான்வெளியை பயன்படுத்த தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டது.
புதிய நடவடிக்கையாக பாகிஸ்தான் விமான நிறுவனங்களின் விமானங்களுக்கு இந்தியா தனது வான்வழியை மூடியது.
காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் எதிரொலியாக பாகிஸ்தானுடனான உறவில் பெரும் விரிசல் ஏற்பட்டுள்ளது. இருநாட்டு எல்லையில் போர் பதற்றமும் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் பாகிஸ்தானின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக அசீம் மாலிக் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தற்போது பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ தலைவராக இருக்கும் நிலையில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவி என்பது கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.
இவர் தற்போது பாகிஸ்தானின் உளவுப்பிரிவாக உள்ள ஐஎஸ்ஐ-யின் தலைவராக செயல்பட்டு வருகிறார். இந்த பொறுப்புடன் அசீம் மாலிக்கிற்கு அந்த நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் என்ற பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் நாட்டின் உளவுத்துறையான ஐ.எஸ்.ஐ. அமைப்பின் தலைவராக முன்னாள் ராணுவ உளவுத்துறை தலைவர் அசிம் முனிர் நியமிக்கப்பட்டுள்ளார்.
பாகிஸ்தானில் இருந்து இந்தியா மீது நடத்தப்படும் எல்லை தாண்டிய பயங்ரவாதத்தை அந்நாட்டின் உளவுத்துறையான ஐ.எஸ்.ஐ. திட்டமிட்டு செயல்படுத்தி வருகிறது. இந்த அமைப்பின் தலைவராக இருக்கும் லெப்டினன்ட் ஜெனரல் நவீத் முக்தாரின் பதவிக்காலம் விரைவில் முடிவடைகிறது.
இதைதொடர்ந்து, அந்த பதவியில் ராணுவ உளவுத்துறை தலைவராக பணியாற்றிய லெப்டினன்ட் ஜெனரல் அசிம் முனிர் நியமிக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் ராணுவ தலைமையகம் இன்று அறிவித்துள்ளது. #LtGenAsimMunir #PakistanISI #ISIhead






