என் மலர்tooltip icon

    சீனா

    • இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் 4 நாள் அரசுமுறை பயணமாக சீனா சென்றுள்ளார்.
    • 8 ஆண்டுகளுக்கு பிறகு இங்கிலாந்து பிரதமர் ஒருவர் சீனா செல்வது இது முதல் முறை

    பீஜிங்:

    இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் 4 நாள் அரசுமுறை பயணமாக சீனா சென்றுள்ளார். தலைநகர் பிஜீங் சென்ற அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. 8 ஆண்டுகளுக்கு பிறகு இங்கிலாந்து பிரதமர் ஒருவர் சீனாவுக்கு செல்வது இது முதல் முறை ஆகும். ஸ்டார்மர் தன்னுடன் 54 தொழில் அதிபர்களை அழைத்துச் சென்றுள்ளார்.

    இந்நிலையில், இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் நேற்று காலை சீன அதிபர் ஜி ஜின்பிங்கைச் சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தச் சந்திப்பு 1 மணி நேரம் 20 நிமிடங்கள் நடந்தது.

    இதில் வர்த்தகம், பாதுகாப்பு, பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் தொடர்பாக இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.

    சமீபகாலமாக அமெரிக்க அதிபர் டிரம்ப் பல்வேறு நாடுகள் மீது வரிகளை கடுமையாக விதித்து வருகிறார். சீனா, இங்கிலாந்து மீதும் வரிகளை விதித்தார். இதனால் இங்கிலாந்து பிரதமரின் இந்த சீன பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு கனடா பிரதமர் மார்க் கார்னி சீனாவுக்கு பயணம் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பிரிட்டனுக்குப் பொருளாதார ரீதியாகப் பெரும் பலன்களைத் தரும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
    • கனடா பிரதமர் மார்க் கார்னி சீனா சென்று வர்த்தக பேச்சுவார்த்தைகளை நடத்தினார்.

    பிரிட்டன் பிரதமர் கீர் ஸ்டார்மர் மூன்று நாள் அரசுமுறைப் பயணமாகப் நேற்று (புதன்கிழமை) சீனாவிற்கு சென்றுள்ளார்.

    சுமார் எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு பிரிட்டன் பிரதமர் ஒருவர் சீனாவிற்குப் பயணம் மேற்கொள்வது இதுவே முதல் முறையாகும்.

    இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் மற்றும் கலாச்சார உறவுகளைப் புதுப்பிப்பதே இந்தப் பயணத்தின் முக்கிய நோக்கமாகும்.

    இந்தப் பயணம் பிரிட்டனுக்குப் பொருளாதார ரீதியாகப் பெரும் பலன்களைத் தரும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    முன்னதாக கடந்த ஜனவரி 13 முதல் 17 வரை அரசு முறை பயணமாக கனடா பிரதமர் மார்க் கார்னி சீனா சென்று வர்த்தக பேச்சுவார்த்தைகளை நடத்தினார்.

    அமெரிக்க அதிபர் டிரம்ப் உடைய வரி அச்சுறுத்தல்களால் கனடா, பிரிட்டன் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் சீனாவுடன் நெருக்கத்தை அதிகரித்து வருகின்றன. 

    • திரும்பும் வழியில் சாலையோரம் ஒரு பனிச் சிறுத்தையைக் கண்டுள்ளார்.
    • மின்னல் வேகத்தில் அந்தச் சுற்றுலாப் பயணியைத் தாக்கியது.

    சீனாவில் படம் எடுக்கச் சிறுத்தையின் அருகே வந்த சுற்றுலாப் பயணியின் முகத்தை பனிச் சிறுத்தை கடித்துக் குதறிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    சீனாவின் ஷின்ஜியாங் மாகாணத்தில் உள்ள கோக்டோகாய் நகரில் கடந்த வெள்ளிக்கிழமை இந்த சம்பவம் நடந்துள்ளது.

    நண்பர்களுடன் பனிச்சறுக்கு விளையாடச் சென்ற ஒரு சுற்றுலாப் பயணி, திரும்பும் வழியில் சாலையோரம் ஒரு பனிச் சிறுத்தையைக் கண்டுள்ளார்.

    காரில் இருந்து கீழே இறங்கி மிக அருகே சென்று புகைப்படம் எடுக்க முயன்றுள்ளார்.

    ஆத்திரமடைந்த பனிச் சிறுத்தை, மின்னல் வேகத்தில் அந்தச் சுற்றுலாப் பயணியைத் தாக்கியது. இதில் அவரது முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது.

    படுகாயமடைந்து இரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது அவரது உடல்நிலை தேறி வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    அரிய விலகுகளாக கருதப்படும் பனிச்சிறுத்தைகள் உலகம் முழுவதும் மொத்தமே சுமார் 4,000 முதல் 7,000 வரை தான் எஞ்சியுள்ளன.

    • டிராகனும் யானையும் ஒன்றாக நடனமாடுவது என்ற நிலையை அடைவது இரு நாடுகளுக்கும் சரியான தேர்வு.
    • இருநாட்டு உறவு உலக அமைதி மற்றும் செழிப்பைப் பேணுவதற்கும் மேம்படுத்துவதற்கும் பெரும் முக்கியத்துவம் வாய்ந்தது.

    இந்தியாவின் 77-வது குடியரசு தின விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. வெளிநாட்டில் உள்ள இந்தியர்களும் குடியரசு தின விழாவை கொண்டாடி வருகிறார்கள். அதேபோல் பல்வேறு நாடுகள் இந்தியாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    அந்த வகையில் 77-வது குடியரசு தினத்தை முன்னிட்டு தனது இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு சீன அதிபர் ஜி ஜின்பிங் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    மேலும், இது தொடர்பாக அவர் வெளியிட்டு செய்தியில் கூறியிருப்பதாவது:-

    இந்தியா- சீனா உறவுகள் இரு நாடுகளுக்கும் அவற்றின் மக்களுக்கும் உள்ள அடிப்படை நலன்களுக்கு ஏற்ப தொடர்ந்து மேம்பட்டு வளர்ந்து வருகிறது. இது உலக அமைதி மற்றும் செழிப்பைப் பேணுவதற்கும் மேம்படுத்துவதற்கும் பெரும் முக்கியத்துவம் வாய்ந்தது.

    நல்ல அண்டை நாடுகளாகவும், ஒருவருக்கொருவர் வெற்றிபெற உதவும் நண்பர்களாகவும், பங்காளிகளாகவும் இருப்பது, மேலும் 'டிராகனும் யானையும் ஒன்றாக நடனமாடுவது' என்ற நிலையை அடைவது ஆகியவையே சீனா மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளுக்கும் சரியான தேர்வு என்று சீனா எப்போதும் நம்புகிறது.

    இவ்வாறு ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.

    • 2025-ல் 7.92 மில்லியன் குழந்தைகள் பிறந்துள்ளன. இது கடந்த 2024-ம் ஆண்டை விட 1.62 மில்லியன் குறைந்துள்ளது.
    • 2024-ம் ஆண்டைவிட கடந்த ஆண்டு சீனாவில் மக்கள் தொகையில் 3 மில்லியன் குறைந்துள்ளது.

    உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக சீனா இருந்தது. குழந்தை பிறப்பு விகிதம் குறிப்பிட்ட வகையில் குறைந்துவ வந்ததால், ஒரு தம்பதி ஒரு குழந்தைதான் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற கட்டுப்பாட்டை நீக்கியது.

    கடந்த 2015-ம் ஆண்டு இந்த நடவடிக்கையை நீக்கி இரண்டு குழந்தைகள் பெற்றுக்கொள்ளலாம் எனத் தெரிவித்தது. என்றாலும் சீனாவில் குழந்தைகள் பிறப்பு விகிதம் அதிகரிக்கவில்லை. இதனால் இரண்டு குழந்தைகள் பெற்றக்கொள்ளும் தம்பதிக்கு அரசு சலுகைகள் வழங்கும் எனவும் தெரிவித்தது. அதற்கு பலனில்லை.

    இதன்காரணமாக, கடந்த 2023-ம் ஆண்டு அதிக மக்கள் தொகை கொண்ட நாடு பட்டியலில் இந்தியாவைவிட பின்தங்கியது.

    கடந்த 2024-ம் ஆண்டு பிறப்பு விகிதம் சற்று அதிகரித்தது. ஆனால் கடந்த 2025-ம் ஆண்டு முந்தைய ஆண்டைவிட 17 சதவிதம் குழந்தைகள் பிறப்பு குறைந்துள்ளது. 2025-ல் 7.92 மில்லியன் குழந்தைகள் பிறந்துள்ளன. இது கடந்த 2024-ம் ஆண்டை விட 1.62 மில்லியன் குறைந்துள்ளது.

    2024-ம் ஆண்டைவிட கடந்த ஆண்டு சீனாவில் மக்கள் தொகையில் 3 மில்லியன் குறைந்துள்ளது. கடந்த ஆண்டு கணக்கீட்டின்படி சீனாவில் மக்களை தொகை 1.404 பில்லியன் ஆகும்.

    • ஈரானுடன் வர்த்தகம் செய்து கொள்ள மற்ற நாடுகளுக்கு டிரம்ப் கெடுபிடி.
    • மீறி வர்த்தகம் செய்தால் 25 சதவீதம் கூடுதல் வரி விதிக்கப்படும் என எச்சரிக்கை.

    ஈரானில் பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வுக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில் 600-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். போராட்டக்காரர்கள் கொலை செய்யப்பட்டால், ஈரானுக்கு எதிராக அமெரிக்கா அதிரடி நடவடிக்கை எடுக்கும் என டிரம்ப் எச்சரித்திருந்தார். ஆனால், டிரம்பின் எச்சரிக்கைக்கு ஈரான் தக்க பதிலடி கொடுத்துள்ளது.

    இதற்கிடையே, ஈரானுடன் வர்த்தகம் செய்து கொள்ளும் நாடுகளுக்கு கூடுதலாக 25 சதவீதம் வரி விதிக்கப்படும் என டிரம்ப் அறிவித்துள்ளார்.

    இதில் சீனா பெரிதும் பாதிப்புக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. சீனா ரஷியா, வெனிசுலா, ஈரானிடம் ஆகிய நாடுகளிடம் இருந்து மலிவான விலைக்கு கச்சா எண்ணெய் கொள்முதல் செய்தது.

    தற்போது வெனிசுலா அதிபரை கைது செய்து, வெனிசுலா எண்ணெய்யை அமெரிக்கா வசம் எடுத்துக் கொள்ள டிரம்ப் முயற்சி செய்கிறார். இந்த நிலையில் ஈரானிடம் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதால், சீனாவுக்கு பெரிய சிக்கலை ஏற்படுத்தும் எனத் தெரிகிறது.

    இந்த நிலையில் "வர்த்தக வரிப் போரில் வெற்றியாளர்கள் என்று யாருமில்லை. மேலும் சீனா தனது சொந்த நியாயமான மற்றும் சட்டப்பூர்வ உரிமைகளையும் நலன்களையும் உறுதியாகப் பாதுகாக்கும்" என சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

    வெனிசுலா நாட்டில் இருந்து கடந்த ஆண்டு மட்டும் சீனா ஒரு நாளைக்கு 4 லட்சம் பேரல் என்ற வகையில் எண்ணெய் கொள்முதல் செய்துள்ளது.

    ஈரானிடம் இருந்து 1.38 பேரல் கொள்முதல் செய்துள்ளது. இது ஈரானின் எண்ணெயில் இருந்து 80 சதவீதம் எனக் கூறப்படுகிறது.

    • சீனா இந்தப் பள்ளத்தாக்கில் நிரந்தர சாலைகள் மற்றும் ராணுவத் தளவாட கட்டுமானங்களை மேற்கொண்டுள்ளது.
    • பாகிஸ்தான் மற்றும் சீனாவிற்கு இடையே கையெழுத்தான ஒப்பந்தத்தின் படியே இப்பகுதி சீனாவிற்கு வழங்கப்பட்டது.

    பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஷக்ஸ்காம் பள்ளத்தாக்கு அமைந்துள்ளது.

    இது 1963-ஆம் ஆண்டு பாகிஸ்தான் மற்றும் சீனாவிற்கு இடையே ஏற்பட்ட எல்லை ஒப்பந்தத்தின்படி, பாகிஸ்தானால் சட்டவிரோதமாக சீனாவிற்கு வழங்கப்பட்டது.

    இந்த ஒப்பந்தத்தை அங்கீகரிக்காத இந்தியா, இது இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்று கூறி வருகிறது.

    சமீபத்திய செயற்கைக்கோள் புகைப்படங்களின்படி, சீனா இந்தப் பள்ளத்தாக்கில் நிரந்தர சாலைகள் மற்றும் ராணுவத் தளவாட கட்டுமானங்களை மேற்கொண்டுள்ளது.

    இது காரகோரம் மலைத்தொடருக்கு மிக அருகில் அமைந்துள்ளதால், இந்தியாவின் எல்லைப் பாதுகாப்பிற்குப் பெரும் அச்சுறுத்தலாகக் கருதப்படுகிறது.

    இதற்கிடையே இந்திய வெளியுறவு அமைச்சகம் இது குறித்து வெளியிட்ட அறிக்கையில், "எங்கள் நிலப்பரப்பில் மேற்கொள்ளப்படும் எந்தவொரு கட்டுமானத்தையும் நாங்கள் ஏற்க மாட்டோம். ஷக்ஸ்காம் பள்ளத்தாக்கு இந்தியாவின் ஒரு பகுதி. அங்கு சீனா மேற்கொண்டு வரும் மாற்றங்கள் சர்வதேச சட்டங்களுக்கு எதிரானது" என்று தெரிவித்தது.

    இது தொடர்பாகச் சீனாவிடம் தூதரக ரீதியாக இந்தியா தனது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில் ஷக்ஸ்காம் பள்ளத்தாக்கு தங்களுக்கே சொந்தம் என சீனா அதிரடியாக அறிவித்துள்ளது.

    இதுதொடர்பாக பேசிய சீன வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் மாவோ நிங், "சீனா தனது சொந்த நிலப்பரப்பில் உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கு முழு உரிமை உள்ளது. இதில் மற்ற நாடுகள் தலையிட வேண்டிய அவசியம் இல்லை.

    1963-ஆம் ஆண்டு பாகிஸ்தான் மற்றும் சீனாவிற்கு இடையே கையெழுத்தான ஒப்பந்தத்தின் படியே இப்பகுதி சீனாவிற்கு வழங்கப்பட்டது. எனவே அது அது சட்டப்பூர்வமானது. இதற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவிப்பது, வரலாற்று உண்மைகளை மறைக்கும் முயற்சி" என்று தெரிவித்தார்.

    ஏற்கனவே லடாக்கில் எல்லைக் கட்டுப்பாடு கோடு அருகே பாங்காங் ஏறி அருகில் கடந்த சில ஆண்டுகளாக சீனா கட்டுமானங்களை மேற்கொண்டு வரும் நிலையில் தற்போது ஷக்ஸ்காம் பள்ளத்தாக்கில் சீனாவின் கட்டுமானம் இந்தியாவின் பாதுகாப்புக்கு மேலும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது.  

    • உலக இந்தி தினம் ஜனவரி 10-தேதி கொண்டாடப்படுகிறது.
    • சீனாவின் பல்வேறு பல்கலைக்கழகங்களில் இந்தி மொழி கற்பிக்கப்படுகிறது.

    பீஜிங்:

    உலக இந்தி தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 10-தேதி கொண்டாடப்படுகிறது. சீனாவின் பல்வேறு பல்கலைக்கழகங்களில் இந்தி மொழி கற்பிக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், சீனாவின் ஷாங்காய் நகரில் உலக இந்தி தினம் கொண்டாடப்பட்டது. அங்குள்ள இந்திய தூதரக அலுவலகத்தில் நடந்த இந்த விழாவில் ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.

    இந்த விழாவில் சீனாவில் வசிக்கும் இந்தியர்களும் பெருமளவில் கலந்துகொண்டனர். அப்போது பேசிய இந்திய துணைத்தூதர் பிரதிக் மாத்தூர், இந்தி மொழி எல்லைகளைக் கடந்து நம்மை இணைக்கிறது என கூறினார். அவர் பிரதமர் மோடியின் செய்தியையும் வாசித்தார்.

    • அதிபர் மதுரோ கைது செய்யப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்புதான், சீனாவின் சிறப்புத் தூதரை அவர் சந்தித்துப் பேசினார்.
    • வெனிசுலாவின் எண்ணெய் ஏற்றுமதியில் சீனா தோராயமாக 76–80% வாங்குகிறது.

    அமெரிக்க படைகளால் வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ கைது செய்யப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

    சீன வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், வெனிசுலா மீதான அமெரிக்காவின் தாக்குதலைக் கண்டு சீனா மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளது. இதனை கடுமையாக கண்டிக்கிறோம்.

    ஒரு இறையாண்மை கொண்ட நாட்டின் மீது வெளிப்படையாக ராணுவத்தைப் பயன்படுத்துவதும், அந்த நாட்டு அதிபரை அராஜகமாகப் பிடிப்பதும் சர்வதேச சட்டங்களை படுமோசமாக மீறும் செயல்.

    அமெரிக்காவின் இந்தச் செயல் ஐநா சபையின் அடிப்படை விதிகள் மற்றும் கொள்கைகளை மீறுவதாக உள்ளது.

    மற்ற நாடுகளின் பாதுகாப்பையும், இறையாண்மையையும் அமெரிக்கா மதிப்பதில்லை என்பதையே இது காட்டுகிறது.

    அமெரிக்காவின் இத்தகையநடவடிக்கைகள், லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் பிராந்தியத்தின் அமைதிக்கும் பாதுகாப்புக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது என்று சீனா சாடியுள்ளது.

    அதிபர் மதுரோ கைது செய்யப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்புதான், சீனாவின் சிறப்புத் தூதரை அவர் சந்தித்துப் பேசினார். அந்தச் சந்திப்பில் சீனா-வெனிசுலா இடையிலான உறவு குறித்து விவாதிக்கப்பட்டது.

    இந்தச் சூழலில் அமெரிக்காவின் இந்த அதிரடித் தாக்குதல் சீனாவிற்குப் பெரும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.

    எண்ணெய்:

    உலகின் மிகப்பெரிய எண்ணெய் இருப்பு வெனிசுலாவில் உள்ளது. இது தோராயமாக 303 பில்லியன் பீப்பாய்கள் எண்ணெயைக் கொண்டுள்ளது. இது சவுதி அரேபியா மற்றும் அமெரிக்காவை விட அதிகம்.

    வெனிசுலாவின் எண்ணெய் ஏற்றுமதியில் சீனா தோராயமாக 76–80% வாங்குகிறது. நவம்பர் 2025 இல், சீனா ஒரு நாளைக்கு வெனிசுலாவிலிருந்து 613,000 பீப்பாய்கள் கச்சா எண்ணெயை வாங்கியது.

    வெனிசுலாவின் கனரக கச்சா எண்ணெய் சீன சுத்திகரிப்பு நிலையங்களுக்கு மிகவும் மதிப்புமிக்கது மற்றும் குறைந்த விலையில் கிடைக்கிறது.

    வெனிசுலா சீனாவிடம் பல ஆண்டுகளாக வாங்கிய சுமார் 60 பில்லியன் டாலர் கடனை செலுத்த வேண்டியுள்ளது. இந்தக் கடன் எண்ணெய்க்கு ஈடாக திருப்பிச் செலுத்தப்படுகிறது. எனவே வெனிசுலாவின் ஸ்திரத்தன்மை சீனாவிற்கு மிகவும் முக்கியமானது.

    இனி வெனிசுலாவின் எண்ணெய் இருப்பை அமெரிக்காவே நிர்வகிக்கும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளது கவனிக்கத்தக்கது.  

    • விபத்துகளில் மீட்புப் பணியாளர்கள் கதவைத் திறக்க முடியாமல் திணறல்.
    • விபத்தின் போது மெக்கானிக்கல் ஹேண்டில்கள் 98% சரியாக வேலை செய்வதாக ஆய்வில் தகவல்.

    கார்களில் உள்ள தானியங்கி அல்லது மறைக்கப்பட்ட பவர் டோர் ஹேண்டில்களை தடை செய்ய சீன அரசு புதிய சட்டங்களைக் கொண்டு வந்துள்ளது.

    சமீபகாலமாக எலக்ட்ரிக் கார்களில் (EV) அழகிற்காகவும், காற்றின் வேகத்தைத் தாங்கிச் செல்வதற்காகவும் (Aerodynamics) கதவின் உட்புறமாக மறைந்திருக்கும் ஹேண்டில்கள் பிரபலமாகின. ஆனால், இதில் பல பாதுகாப்பு குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளன.

    விபத்து ஏற்பட்டு காரின் மின்சாரம் துண்டிக்கப்படும்போது, கதவுகள் திறக்காமல் பயணிகள் உள்ளேயே சிக்கிக்கொள்ளும் அபாயம் உள்ளது. பல விபத்துகளில் மீட்புப் பணியாளர்கள் கதவைத் திறக்க முடியாமல் திணறிய நிகழ்வுகள் சீனாவில் பதிவாகியுள்ளன.

    இதேபோல், கடும் குளிரில் இந்த ஹேண்டில்கள் உறைந்து போவதும், மழையினால் மின் கசிவு ஏற்பட்டு வேலை செய்யாமல் போவதும் வாடிக்கையாளர்களிடையே புகார்களை அதிகரித்தது.

    இந்த வகை ஹேண்டில்களில் குழந்தைகளின் விரல்கள் சிக்கி காயமடையும் சம்பவங்கள் சீனாவில் அதிகளவில் பதிவாகியுள்ளன.

    ஆய்வுகளின்படி, விபத்தின் போது மெக்கானிக்கல் ஹேண்டில்கள் 98% சரியாக வேலை செய்கின்றன. ஆனால், இந்த எலக்ட்ரானிக் ஹேண்டில்கள் வெறும் 67% மட்டுமே பலன் தருகின்றன என்பது தெரியவந்துள்ளது.

    இதுதொடர்பாக, சீனாவின் தொழில் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வெளியிட்டுள்ள வரைவு அறிக்கையின்படி, ஜனவரி 1, 2027 முதல் சீனாவில் விற்பனை செய்யப்படும் 3.5 டன்களுக்கு குறைவான எடைகொண்ட அனைத்து கார்களிலும் மெக்கானிக்கல் எமர்ஜென்சி ஓப்பனிங் வசதி இருக்க வேண்டும்.

    காரின் மின்சாரம் முழுமையாக நின்றாலும், எந்தக் கருவியும் இன்றி கைகளால் கதவைத் திறக்கும் வசதி கட்டாயம் இருக்க வேண்டும்.

    ஒவ்வொரு கதவிலும் வெளிப்புற ஹேண்டில்கள் கைகளால் பிடித்து இழுக்கும் வகையில் போதிய இடைவெளியுடன் இருக்க வேண்டும்.

    இந்த தடை உத்தரவு 2027ம் ஆண்டில் இருந்து அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • சமூக, பொருளாதார பிரச்சனைக்கு வழிவகுக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.
    • கடந்த ஆண்டு 10 கோடிக்கும் குறைவான குழந்தைகளே அங்கு பிறந்துள்ளன.

    உலகின் இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக சீனாவில் சுமார் 140 கோடி பேர் வசிக்கின்றனர். இதனை கட்டுப்படுத்த கடந்த 1994-ம் ஆண்டு ஒரு குழந்தை கொள்கையை அரசாங்கம் அறிமுகப்படுத்தியது. இதனால் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்து முதியோர் மக்கள் தொகை உயர்ந்தது. இது சமூக, பொருளாதார பிரச்சனைக்கு வழிவகுக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.

    இதனையடுத்து ஒரு குழந்தை கொள்கைக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டது. ஆனால் அங்குள்ள மக்கள் தற்போது ஒரு குழந்தை முறைக்கு பழகி விட்டனர். இதனால் கடந்த ஆண்டு 10 கோடிக்கும் குறைவான குழந்தைகளே அங்கு பிறந்துள்ளன. இந்தநிலையில் குழந்தை பிறப்பை ஊக்குவிக்க தற்போது கருத்தடை சாதனங்கள், மாத்திரைகள் போன்றவற்றுக்கு அரசாங்கம் 13 சதவீதம் வரி விதித்து உள்ளது.

    • கடந்த வாரம் சீனா தைவான் எல்லையைச் சுற்றிலும் கூட்டு ராணுவ பயிற்சியை நடத்தியது.
    • தைவானுடன் வேறு எந்த நாடும் தூதரக உறவு வைத்துக் கொள்ளக்கூடாது என சீனா எச்சரித்தது.

    பீஜிங்:

    சீனாவின் கட்டுப்பாட்டில் இருந்த தைவான் 1949-ல் தனி நாடாகப் பிரிந்தது. ஆனால் தைவானை இன்னும் தனது நாட்டின் ஒரு பகுதியாகவே சீனா கருதி வருகிறது. எனவே அதனை மீண்டும் தன்னுடன் இணைப்பதற்காக சீனா போர்ப்பயிற்சிகளை நடத்தி வருகிறது. இதனால் அப்பகுதியில் சீனா பதற்றத்தைத் தூண்டுகின்றது.

    தைவானுடன் வேறு எந்த நாடுகளும் தூதரக உறவு வைத்துக் கொள்ளக்கூடாது எனவும் சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், தைவான் எல்லைக்குள் போர்க்கப்பல் மற்றும் விமானங்களை அனுப்பி பதற்றத்தையும் தூண்டுகிறது. கடந்த வாரம் சீனா தைவான் எல்லையைச் சுற்றிலும் கூட்டு ராணுவ பயிற்சியை நடத்தியது.

    இந்நிலையில், புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு சீன அதிபர் ஜி ஜின்பிங் நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

    தைவானை தனது நாட்டின் தன்னாட்சி பிராந்தியமாகவே சீனா கருதுகிறது. தற்போது அதனை மீண்டும் சீனாவுடன் இணைக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். எனவே தைவான் விரைவில் சீனாவுடன் இணைவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என தெரிவித்தார்.

    ×