என் மலர்
நீங்கள் தேடியது "சீனா தடை"
- விபத்துகளில் மீட்புப் பணியாளர்கள் கதவைத் திறக்க முடியாமல் திணறல்.
- விபத்தின் போது மெக்கானிக்கல் ஹேண்டில்கள் 98% சரியாக வேலை செய்வதாக ஆய்வில் தகவல்.
கார்களில் உள்ள தானியங்கி அல்லது மறைக்கப்பட்ட பவர் டோர் ஹேண்டில்களை தடை செய்ய சீன அரசு புதிய சட்டங்களைக் கொண்டு வந்துள்ளது.
சமீபகாலமாக எலக்ட்ரிக் கார்களில் (EV) அழகிற்காகவும், காற்றின் வேகத்தைத் தாங்கிச் செல்வதற்காகவும் (Aerodynamics) கதவின் உட்புறமாக மறைந்திருக்கும் ஹேண்டில்கள் பிரபலமாகின. ஆனால், இதில் பல பாதுகாப்பு குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளன.
விபத்து ஏற்பட்டு காரின் மின்சாரம் துண்டிக்கப்படும்போது, கதவுகள் திறக்காமல் பயணிகள் உள்ளேயே சிக்கிக்கொள்ளும் அபாயம் உள்ளது. பல விபத்துகளில் மீட்புப் பணியாளர்கள் கதவைத் திறக்க முடியாமல் திணறிய நிகழ்வுகள் சீனாவில் பதிவாகியுள்ளன.
இதேபோல், கடும் குளிரில் இந்த ஹேண்டில்கள் உறைந்து போவதும், மழையினால் மின் கசிவு ஏற்பட்டு வேலை செய்யாமல் போவதும் வாடிக்கையாளர்களிடையே புகார்களை அதிகரித்தது.
இந்த வகை ஹேண்டில்களில் குழந்தைகளின் விரல்கள் சிக்கி காயமடையும் சம்பவங்கள் சீனாவில் அதிகளவில் பதிவாகியுள்ளன.
ஆய்வுகளின்படி, விபத்தின் போது மெக்கானிக்கல் ஹேண்டில்கள் 98% சரியாக வேலை செய்கின்றன. ஆனால், இந்த எலக்ட்ரானிக் ஹேண்டில்கள் வெறும் 67% மட்டுமே பலன் தருகின்றன என்பது தெரியவந்துள்ளது.
இதுதொடர்பாக, சீனாவின் தொழில் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வெளியிட்டுள்ள வரைவு அறிக்கையின்படி, ஜனவரி 1, 2027 முதல் சீனாவில் விற்பனை செய்யப்படும் 3.5 டன்களுக்கு குறைவான எடைகொண்ட அனைத்து கார்களிலும் மெக்கானிக்கல் எமர்ஜென்சி ஓப்பனிங் வசதி இருக்க வேண்டும்.
காரின் மின்சாரம் முழுமையாக நின்றாலும், எந்தக் கருவியும் இன்றி கைகளால் கதவைத் திறக்கும் வசதி கட்டாயம் இருக்க வேண்டும்.
ஒவ்வொரு கதவிலும் வெளிப்புற ஹேண்டில்கள் கைகளால் பிடித்து இழுக்கும் வகையில் போதிய இடைவெளியுடன் இருக்க வேண்டும்.
இந்த தடை உத்தரவு 2027ம் ஆண்டில் இருந்து அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கடலில் மீன்வளம் பாதிக்கப்பட்டு தங்களது வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும் என மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
- கடல்வகை உணவுகள் சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்படுவது 90 சதவீதம் குறைந்தது.
டோக்கியோ:
ஜப்பானில் உள்ள புகுஷிமா அணுமின் நிலையத்தின் கழிவுநீரானது பசிபிக் பெருங்கடலில் கலக்கப்பட்டு வருகிறது. இதனால் கடலில் மீன்வளம் பாதிக்கப்பட்டு தங்களது வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும் என மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அண்டை நாடுகளான சீனா, தென்கொரியா ஆகிய நாடுகளிலும் இதற்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதற்கிடையே ஜப்பானில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் மீன்களுக்கு தடை விதித்து சீனா உத்தரவிட்டது. இதனால் கடல்வகை உணவுகள் சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்படுவது 90 சதவீதம் குறைந்தது.
இந்தநிலையில் ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா டொயோசுவில் உள்ள மீன்சந்தைக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது சீனாவின் இந்த தடையால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு உதவுவதாக அவர் உறுதியளித்தார். இதற்காக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு ஜப்பானின் கடல் வகை உணவுகளை ஏற்றுமதி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதுவரை கடல் உணவு வகைகளை உள்நாட்டில் மக்கள் அதிகளவில் பயன்படுத்த வேண்டும் என புமியோ கிஷிடா வலியுறுத்தினார்.






