என் மலர்tooltip icon

    உலகம்

    • மொஹமத் முய்சு, அடுத்த மாதம் அதிபராக முறைப்படி பதவியேற்கிறார்.
    • அதிபராக பதவியேற்ற முதல் வாரத்தில் மாலத்தீவில் இருந்து இந்திய ராணுவ வீரர்கள் வெளியேற்றப்படுவார்கள்.

    மாலத்தீவில் சமீபத்தில் நடந்த அதிபர் தேர்தலில் மொஹமத் முய்சு வெற்றி பெற்றார். இவர் சீன ஆதரவாளர் ஆவார். அவர் தனது தேர்தல் பிரசாரத்தின்போது மாலத்தீவில் இருந்து இந்திய ராணுவ படைகள் வெளியேற்றப்படும் என்று வாக்குறுதி அளித்தார். மொஹமத் முய்சு, அடுத்த மாதம் அதிபராக முறைப்படி பதவியேற்கிறார்.

    இந்த நிலையில் தான் அதிபராக பதவியேற்ற முதல் வாரத்தில் மாலத்தீவில் இருந்து இந்திய ராணுவ வீரர்கள் வெளியேற்றப்படுவார்கள். இது தூதரக வழிகளில் மேற்கொள்ளப்படும் என்று மொஹமத் முய்சு தெரிவித்தார். மேலும், அவர் கூறும்போது, அதிபராக பதவியேற்ற பிறகு முதல் நாளில் இந்தியாவிடம் தனது படைகளை அகற்றுமாறு கோரப்படும். இதுவே எனது முதன்மையான முன்னுரிமைகளில் ஒன்றாகும். சில நாட்களுக்கு முன்பு இந்திய தூதரை சந்தித்தேன். அப்போது இந்திய படைகள் வெளியேற்றத்தை வலியுறுத்தினேன் என்றார்.

    • சாலை விதிமீறல் அமெரிக்காவில் குற்றமாக கருதப்படுகிறது
    • சிகப்பு விளக்கு எரிவதை கண்டும் சாலையை அப்பெண் கடந்தார்

    அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள பினெல்லஸ் கவுன்டி (Pinellas County) பகுதியில் உள்ளது க்ளியர்வாட்டர் (Clearwater) நகரம்.

    கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை இங்குள்ள கடற்கரை பகுதியில் உள்ள ஒரு டிராபிக் சிக்னல் அருகே 32 வயதான ஒரு பெண் சுற்றுலா பயணி சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு பாதசாரிகள் சாலையை கடக்க முயல்வதை தடுக்கும் சிகப்பு விளக்கு எரிந்து கொண்டிருந்தது. ஆனால் அப்பெண் அதை பொருட்படுத்தாமல் சாலையை கடக்க முயற்சித்தார்.

    சாலை விதிமுறைகளை மக்கள் பின்பற்றுவதை தீவிரமாக வலியுறுத்தும் அமெரிக்காவில் இந்த விதிமீறல் குற்றமாக கருதப்படுவதால், அங்குள்ள டிராபிக் காவல் அதிகாரி நிகோலஸ் பலோமா (29) அப்பெண்ணை தடுத்து நிறுத்தினார்.

    அப்பெண்ணிடம் பேச்சு வார்த்தை நடத்திய நிகோலஸ், அப்பெண்ணை தனது காரில் ஏற சொன்னார். தயங்கிய அப்பெண்ணிடம், சாலை விதிமீறலுக்கான தண்டனையிலிருந்து தப்பிக்க தனது பாலியல் ஆசைகளுக்கு இணங்க வேண்டும் என வற்புறுத்தியுள்ளார். அவரிடம் சிக்கி கொண்ட அப்பெண்ணை தனது காரில் 30 நிமிடங்களுக்கும் மேலாக பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்று தகாத முறையில் நடந்து கொண்டார். பிறகு அப்பெண் தங்கியிருந்த ஓட்டலில் அவரை இறக்கி விட்டு சென்று விட்டார். குற்றம் செய்தவர் காவல்துறையை சேர்ந்தவர் என்பதால் அப்பெண் தனக்கு நேர்ந்த சம்பவம் குறித்து புகார் அளிக்கவில்லை.

    இந்நிலையில் அப்பெண்ணுக்கும் அவரது நண்பருக்கும் இடையே நடந்த ஒரு மோதலை தீர்க்க காவல்துறையினர் சென்றிருந்தனர். அப்போது நடைபெற்ற விசாரணையில் அப்பெண் தனக்கு நேர்ந்ததை தெரிவித்தார்.

    தங்கள் துறையை சேர்ந்த ஒருவரே பெருங்குற்றம் புரிந்ததை கேட்டு அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் நிகோலஸை வலைவீசி தேடி வந்தனர்.

    இறுதியாக நேற்று அவரை கைது செய்தனர். இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கடந்த மாதம் வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் ரஷியா சென்றிருந்தார்
    • ஏற்கனவே ரஷியாவின் ராணுவ மந்திரி வடகொரியா சென்றிருந்தார்

    உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்தி வரும் நிலையில், போரை தொடர்ந்து நடத்த ரஷியாவுக்கு ஆயுதம், வெடிப்பொருட்கள் தேவைப்படுகிறது. இதனால் வடகொரியாவுடன் நட்பை வளர்த்து வருகிறது.

    கடந்த ஜூலை மாதம் ரஷியாவின் ராணுவ மந்திரி செர்கெய் ஷோய்கு வடகொரியா சென்றிருந்தார். கடந்த மாதம் வடகொரியா அதிபர் கிம் ஜான் உன் ரஷியா சென்றிருந்தார். அப்போது புதினை சந்தித்து பேசினார்.

    மேலும், ஆயுத தொழிற்சாலைகள், போர் விமானங்களை ஆய்வு செய்தார் கிம் ஜாங் உன். இதனால் ரஷியா ராணுவ தொழில்நுட்பத்தை வடகொரியாவுக்கு வழங்க இருப்பதாக அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் கவலை தெரிவித்தன.

    இருநாடுகளுக்கும் இடையில் ஆயுத ஒப்பந்தம் ஏற்பட்டால், உக்ரைன் போரில் அது தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் தெரிவித்தனர்.

    இந்த நிலையில் இன்று ரஷியாவின் வெளியுறவுத்துறை மந்திரி செர்கெய் லாவ்ரோவ், வடகொரியா சென்றுள்ளார். இருநாடுகளுக்கு இடையிலான ராஜாங்க ரீதியிலான நட்பில் இது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

    ஏற்கனவே, வடகொரியா ஆயிரத்திற்கும் மேற்பட்ட கன்டெய்னரில் ராணுவ பொருட்களை ரஷியாவுக்கு வடகொரியா வழங்கியுள்ளது என்று வெள்ளை மாளிகை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தகுந்தது.

    வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன், ரஷியா அதிபர் புதினை தங்கள் நாட்டிற்கு அழைத்துள்ளார். இதை புதினும் ஏற்றுள்ளார். ஆனால், தேதி இன்னும் முடிவாகவில்லை. இந்த வாரத்தின் தொடக்கத்தில்தான் புதின் சீனா சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இத்தம்பதியினருக்கு ஏற்கெனவே 3-வயது மகள் உள்ளார்
    • இதற்கு சாத்தியக்கூறுகள் 10 லட்சத்தில் ஒன்று அல்லது 20 கோடியில் ஒன்று

    அமெரிக்காவின் லூசியானா மாநிலத்தில் வசித்து வருபவர்கள் ஹேலி கோர்டாரோ மற்றும் மேத்யூ கோர்டாரோ தம்பதியினர். இத்தம்பதியினருக்கு 3-வயது மகள் உள்ளார்.

    மீண்டும் கர்ப்பமடைந்திருந்த ஹேலி அம்மாநிலத்தின் ஷ்ரெவ்போர்ட் பகுதியில் உள்ள தெற்கு வில்லிஸ்-நைட்டன் பெண்கள் உடல்நல மையத்தில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார்.

    ஹேலி கர்ப்பமுற்று 31 வாரங்கள் கடந்திருந்த நிலையில் அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு மருத்துவ நிபுணர்கள் மேற்பார்வையில் பிரசவம் நடைபெற்றது. அவருக்கு ஒரே நேரத்தில் 3 குழந்தைகள் பிறந்தன. இதில் கோர்டாரோ தம்பதியினர் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    குழந்தைகளை அந்த மருத்துவமனையின் டாக்டர். ஜெரால்டு பிரென்ட் விட்டன் கண்காணித்து வருகிறார்.

    இது போன்ற கருத்தரிப்புகள் "தன்னிச்சையான கருத்தரிப்பு" (spontaneous triplets) என மருத்துவ மொழியில் அழைக்கப்படுகிறது. இத்தகைய கருத்தரித்தல் ஏற்படும் சாத்தியக்கூறுகள் 10 லட்சத்தில் ஒன்றாகவோ அல்லது 20 கோடியில் ஒன்றாகவோதான் ஏற்படும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

    க்ளேர், எல்லா மற்றும் லில்லி என பெயரிடப்பட்டுள்ள அந்த 3 பெண் குழந்தைகளும் நல்ல உடல்நலத்துடன் இருக்கின்றனர்.

    • ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் எம்ஐ5 தலைவர் உரையாற்றினார்
    • உலகையே மாற்றும் கண்டுபிடிப்புகளை சொந்தமாக்கி கொள்ள முயல்கின்றனர்

    அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய 5 நாடுகளின் உளவு அமைப்புகளின் கூட்டமைப்பு, ஐந்து கண்கள் எனப்படும் "ஃபை ஐஸ்" (Five Eyes).

    இந்த 5 நாடுகளில் உள்ள பெருவணிக நிறுவனங்களின் வியாபார தந்திரங்கள், தொழில் ரகசியங்கள் மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் குறித்த மென்பொருள் தரவுகளை சீனா மறைமுகமாக கைப்பற்றி வருவதாக "ஃபை ஐஸ்" குற்றம் சாட்டியுள்ளது.

    அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் (Stanford University) நடைபெற்ற ஒரு சந்திப்பில் இங்கிலாந்தின் உளவு பிரிவான எம்ஐ5 (MI5) அமைப்பின் தலைவர் கென் மெக்கல்லம் (Ken McCallum) உரையாற்றினார்.

    அப்போது அவர் தெரிவித்ததாவது:

    மிக பரந்த அளவில் மிக மிக முக்கிய தொழில்நுட்பங்கள் களவாடப்படுகின்றன. அரசாங்கத்தின் ரகசியங்களை உளவாளிகள் கைப்பற்றுவதுதான் இதுவரை நடந்து வந்தது. ஆனால் தற்போது சிறு மற்றும் "ஸ்டார்ட் அப்" நிறுவனங்கள் மற்றும் பெரும் பல்கலைகழகங்கள் ஆகியவை மேற்கொண்டு வரும் ஆராய்ச்சிகளும் கண்டுபிடிப்புகளும் திருடப்படுகின்றன. சமூக வலைதளங்களில் இங்கிலாந்தில் உள்ள மக்களை 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சீன உளவாளிகள் குறி வைத்து அவர்களிடம் நட்பை வளர்த்து செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட நுட்பமான நுண்ணிய முக்கிய தகவல்களை கேட்டு பெறுகிறார்கள். கண்டறிய கடினமான முறையில் தங்கள் செயல்பாட்டை மறைத்து கொண்டு சீனர்கள் செயல்படுகின்றனர். உலகையே மாற்றும் சாத்தியம் உள்ள இத்தகைய கண்டுபிடிப்புகளை தங்களுக்கே சொந்தமாக்கி கொள்ள மிகவும் கூர்மையாக கண்காணித்து வருகின்றன. இவ்வாறு அவர்கள் பெறும் தகவல்களை கொண்டு நாடுகளுக்கு இடையேயான அரசியல்களிலும் ஒவ்வொரு நாட்டின் உள்நாட்டு அரசியலிலும் அவர்கள் விரும்பும் அழிவை கொண்டு வரவும் முடியும்.

    இவ்வாறு கென் தெரிவித்தார்.

    ஃபை ஐஸ் அமைப்பின் மற்ற தலைவர்களும் இதே கருத்தை வலியுறுத்தினர்.

    • போர் சூழலிலும் அமெரிக்க அதிபர் இஸ்ரேல் வந்தததற்கு இஸ்ரேல் மக்கள் சார்பில் நன்றி தெரிவிக்கிறேன்.
    • இஸ்ரேல் மக்களுக்கு அமெரிக்கா தற்போது உற்றநண்பனாக துணை நிற்கிறது.

    ஹமாஸ் பயங்கரவாதிகள் கடந்த 7ம் தேதி திடீரென யாரும் எதிர்பாராத வகையில் இஸ்ரேல் மீது கொடூர தாக்குதல் நடத்தியது. மேலும், 100-க்கும் மேற்பட்டோரை பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றனர்.

    இதனால் இஸ்ரேல் ஹமாஸ் மீது போர் அறிவித்து, காசா மீது தாக்குதல் நடத்தி வருகிறது. எந்தவித தொய்வும் இன்றி தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை ஏவுகணை தாக்குதல் மட்டுமே நடத்தி வரும் இஸ்ரேல், தரைவழியாகவும் தாக்குதல் நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இன்று இஸ்ரேல் சென்று அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவை சந்தித்தார். ஹமாஸ் பயங்கரவாத தாக்குதலின்போது இஸ்ரேலுக்கு அமெரிக்கா துணை நிற்கும் என பைடன் தெரிவித்திருந்தார். அதை உறுதிப்படுத்தும் விதமாக இன்று இஸ்ரேல் வந்துள்ளார்.

    இருவரின் சந்திப்பின்போது, இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு கூறுகையில்," அக்டோர்பர் 7ம் தேதி ஹமாஸ் 1,400 இஸ்ரேல் மக்களை கொன்றுள்ளது. ஹமாஸ் அமைப்பு குழந்தைகளை கூட கொன்றுள்ளது. ஹமாஸ் அமைப்பு ஐஎஸ்ஐஎஸ்ஐ-யை விட மோசமானது.

    இந்த சூழலிலும் அமெரிக்க அதிபர் இஸ்ரேல் வந்தததற்கு இஸ்ரேல் மக்கள் சார்பில் நன்றி தெரிவிக்கிறேன். இஸ்ரேல் மக்களுக்கு அமெரிக்கா தற்போது உற்றநண்பனாக துணை நிற்கிறது.

    காசாவில் மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்காக மிகவும் வேதனை அடைந்தேன். ஆனால், இப்போது அதை பார்க்கும்போது அந்த தாக்குதல் வேறு சிலரால் நடத்தப்பட்டதாக அறிகிறேன். ஹமாஸை வீழ்த்த உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டும்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

    இந்நிலையில், "இஸ்ரேலுடன் அமெரிக்கா துணை நிற்கும்" என்று ஜோ பைடன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    மேலும், ஜோ பைடன் மேலும் கூறுகையில்," ஹமாஸ் தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களும், 31 அமெரிக்கர்களும் கொல்லப்பட்டுள்ளனர். ஹமாஸ் பிணைக் கைதிகளாக பொது மக்களையும், குழந்தைகளையும் கூட வைத்துள்ளனர்" என்றார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பாகிஸ்தான் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது.
    • சில விமானங்கள் புறப்படும் நேரம் மாற்றியமைக்கப்பட்டு உள்ளது.

    பாகிஸ்தான் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது.

    இந்த நிலையில் பாகிஸ்தானில் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இன்று 48 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. தேசிய விமான நிறுவனமான பாகிஸ்தான் இன்டர்நேசனல் ஏர்லைன்ஸ், எரிபொருள் கிடைக்காததால் 48 உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களை ரத்து செய்துள்ளது.

    தினசரி விமானங்களுக்கான குறைந்த எரிபொருள் விநியோகம் மற்றும் செயல்பாட்டு சிக்கல்கள் காரணமாக விமானங்கள், ரத்து செய்யப்பட்டு உள்ளதாகவும், சில விமானங்கள் புறப்படும் நேரம் மாற்றியமைக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • காசா மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தியது யார்?
    • இஸ்ரேல் ராணுவம்- பாலஸ்தீன அமைப்பு பரஸ்பர குற்றச்சாட்டு

    ஹமாஸ் அமைப்பின் தாக்குதலுக்கு இஸ்ரேல் மிகப்பெரிய அளவில் பதிலடி கொடுத்து வருகிறது. நேற்றிரவு காசாவில் உள்ள மருத்துவமனை மீது பயங்கர தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் சுமார் 500 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தாக்குதலுக்கு உலகத் தலைவர்களால் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

    காசாவின் வடக்கு பகுதியில் இருந்து தென்பகுதிக்கு செல்ல வேண்டும் என இஸ்ரேல் ராணுவத்தால் கேட்டுக்கொள்ளப்பட்டனர். இதனால் பெரும்பாலான மக்கள் மருத்துவமனையில் அகதிகளாக தங்கியிருந்ததாக கூறப்படுகிறது. இதனால் நோயாளிகளுடன் அப்பாவி மக்களும் உயிரிழந்துள்ளனர்.

    இந்த தாக்குதலை இஸ்ரேல் ராணுவம்தான் நடத்தியது என்று பாலஸ்தீனம் மற்றும் பாலஸ்தீனத்திற்கு ஆதரவான நாடுகள் குற்றம்சாட்டி வருகின்றன. ஆனால், நாங்கள் இந்த தாக்குதலை நடத்தவில்லை. பாலஸ்தீனத்தின் இஸ்லாமிக் ஜிகாத் (Islamic Jihad) அமைப்புதான் ஏவுகணை தாக்குதலின்போது தவறாக கையாண்டு தாக்கு நடத்தப்பட்டுள்ளது என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது. அதேவேளையில் இஸ்லாமிக் ஜிகாத் அமைப்பு பொறுப்பு ஏற்கவில்லை. இஸ்ரேல் குற்றச்சாட்டை மறுத்துள்ளது.

    இந்த நிலையில், டிரோன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள இஸ்ரேல் ராணுவம், எங்கள் தாக்குதல் இதுபோன்று சேதத்தை ஏற்படுத்தாது என்று தெரிவித்துள்ளது.

    அந்த வீடியோவை சுட்டிக்காட்டிய இஸ்ரேல் ராணுவம், நாங்கள் ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தியிருந்தால் அந்த இடத்தில் மிகப்பெரிய அளவில் பள்ளம் ஏற்பட்டிருக்கும். ஆனால், மருத்துவமனையில் அப்படி பள்ளம் ஏற்படவில்லை.

    எங்கள் தாக்குதலில், மிகப்பெரிய அளவில் தீப்பற்றி எரியும் சம்பவம் இருக்காது. ஆனால், மருத்துவமனையின் வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் அதிக அளவில் தீப்பற்றி எரிந்துள்ளது.

    எங்கள் தாக்குதலின்போது துண்டு துண்டான கூரைகள் அப்படியே தொங்கிக் கொண்டிருக்கும். அதுபோன்று இல்லாமல் பக்கத்து கட்டங்களில் பெரிய பெரிய துண்டுகளாக அப்படியே உள்ளன.

    இவ்வாறு இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ள நிலையில், இருவரின் உரையாடலை இடைமறித்த ஆடியோவையும் வெளியிட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஜோர்டானில் பேச்சவார்த்தை ரத்து செய்யப்பட்ட போதிலும் இஸ்ரேல் சென்றுள்ளார்
    • இஸ்ரேல் பிரதமருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுகிறார்

    ஹமாஸ் பயங்கரவாதிகள் கடந்த 7-ந்தேதி திடீரென யாரும் எதிர்பாராத வகையில் இஸ்ரேல் மீது கொடூர தாக்குதல் நடத்தியது. மேலும், 100-க்கும் மேற்பட்டோரை பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றனர்.

    இதனால் இஸ்ரேல் ஹமாஸ் மீது போர் அறிவித்து, காசா மீது தாக்குதல் நடத்தி வருகிறது. எந்தவித தொய்வும் இன்றி தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை ஏவுகணை தாக்குதல் மட்டுமே நடத்தி வரும் இஸ்ரேல், தரைவழியாகவும் தாக்குதல் நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளது.

    காசாவை ஆக்கிரமிக்கும் வகையில் இஸ்ரேல் தாக்குதல் இருப்பதால், இது நல்லதல்ல என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரித்திருந்தார்.

    அரபு நாட்டு தலைவர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு சண்டையை முடிவுக்கு கொண்டு வர முயற்சி மேற்கொண்டு வருகிறார்கள். இதன் ஒரு கட்டமாக ஜோர்டானில் இன்று அரபு நாட்டு தலைவர்களுடன் ஜோ பைடன் பேச்சுவார்த்தை நடத்த இருந்தார்.

    இஸ்ரேல் சென்று, அந்நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவை சந்தித்த பின், இந்த பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    இந்த நிலையில்தான் காசாவில் உள்ள மருத்துவமனை மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 500 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

    இதனால், அரபு நாட்டு தலைவர்கள் ஜோ பைடன் உடன் பேச்சுவார்த்தை நடத்த விரும்பவில்லை என்ற செய்தி வெளியானது. எங்களால் போரை முடிவுக்கு கொண்டுவர இயலாது என்பதால் பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டதாக ஜோர்டான் தெரிவித்தது.

    இருந்தாலும், திட்டமிட்டபடி அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இஸ்ரேல் சென்றடைந்துள்ளார். அவரை பெஞ்சமின் நேதன்யாகு கட்டித்தழுவி வரவேற்றார்.

    ஹமாஸ் பயங்கரவாத தாக்குதலின்போது இஸ்ரேலுக்கு அமெரிக்கா துணை நிற்கும் என பைடன் தெரிவித்திருந்தார். அதை உறுதிப்படுத்தும் விதமாக இன்று இஸ்ரேல் வந்துள்ளார்.

    என்றபோதிலும், இஸ்ரேலிடம் காசா மீதான கண்மூடித்தனமான தாக்குதலை குறைக்க வலியுறுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    காசாவில் பாதிப்படைந்துள்ள மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவியை ஊக்குவிக்கவும் பைடன் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    • ஏற்கனவே 2018-ம் ஆண்டு தொடக்கப்பள்ளிகளில் ஆங்கிலம் கற்பிக்க தடை விதிக்கப்பட்டது.
    • ஆங்கிலம் நடுநிலைப் பள்ளியில் இருந்து கற்பிக்கப்படுகிறது.

    ஈரானில் மழலையர் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளிகளில் ஆங்கிலம், அரபு உள்ளிட்ட அனைத்து வெளிநாட்டு மொழிகளை குழந்தைகளுக்கு கற்பிக்க அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.

    இதுதொடர்பாக கல்வி அமைச்சக அதிகாரி மசூத் தெஹ்ரானி பர்ஜாத் கூறும்போது, "மழலையர் பள்ளிகள், நர்சரி பள்ளிகள், தொடக்கப் பள்ளிகளில் வெளிநாட்டு மொழிகளை கற்பிப்பது தடை செய்யப்பட்டுள்ளது. ஏனென்றால் இந்த வயதில் குழந்தையின் ஈரானிய அடையாளம் உருவாகிறது" என்றார்.

    ஏற்கனவே 2018-ம் ஆண்டு தொடக்கப்பள்ளிகளில் ஆங்கிலம் கற்பிக்க தடை விதிக்கப்பட்டது. ஆனாலும் ஆங்கிலம் நடுநிலைப் பள்ளியில் இருந்து கற்பிக்கப்படுகிறது. கடந்த மாதம், மாணவர்கள் சர்வதேச பள்ளிகளில் சேருவதற்கு அரசு தடை விதித்தது.

    ஈரானிய குழந்தைகள் நாட்டின் பள்ளி பாடத்திட்டத்தை பின்பற்ற வேண்டிய கடமை இருப்பதாக அரசு தெரிவித்தது.

    • பாகிஸ்தான் அரசு ராணுவத்துக்கு எதிராக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.
    • பாகிஸ்தான் அரசாங்கம், ராணுவ அதிகாரிகள் வெளியேற வேண்டும் என்று கோஷம் எழுப்பினர்.

    பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் அந்நாட்டு அரசு மற்றும் ராணுவத்துக்கு எதிராக போராட்டங்கள் நடந்து வருகிறது.

    மின்சார கட்டணம், எரிபொருள், உணவு பொருள் விலை உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு, தீவிரவாத குழுக்கள் சுதந்திரமாக சுற்றி திரிவது ஆகியவற்றால் போராட்டங்கள் நடக்கிறது.

    இந்த நிலையில் பாகிஸ்தான் அரசு ராணுவத்துக்கு எதிராக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். அங்கிருந்து பாகிஸ்தான் அரசாங்கம், ராணுவ அதிகாரிகள் வெளியேற வேண்டும் என்று கோஷம் எழுப்பினர்.

    பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பலர் அப்பகுதியை இந்தியாவுடன் இணைக்க விரும்புவதாக தகவல் வெளியாகி உள்ளது. 

    • ஜிம் ஜோர்டான் 200 வாக்குகளை பெற்றார். அவருக்கு சொந்த கட்சி உறுப்பினர்கள் 20 பேர் வாக்களிக்க மறுத்து விட்டனர்.
    • தனக்கு எதிராக வாக்களித்த சில குடியரசு கட்சி உறுப்பினர்களை ஜிம் ஜோர்டான் சந்தித்து பேசினார்.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் ஜனநாயக கட்சி ஆட்சி நடந்து வருகிறது. ஆனால் அமெரிக்க பாராளுமன்ற பிரதிநிதிகள் சபையில் குடியரசு கட்சி பெரும்பான்மையுடன் உள்ளது. இதற்கிடையே பாராளுமன்ற சபாநாயகராக இருந்த குடியரசு கட்சியின் கெவின் மெக்கார்த்திக்கு சொந்த கட்சியிலேயே எதிர்ப்பு கிளம்பியது.

    ஆளுங்கட்சியுடன் இணைக்கமாக இருப்பதாக கூறி அவரை பதவியில் இருந்து நீக்கும் தீர்மானத்தை குடியரசு கட்சி உறுப்பினர்கள் கொண்டு வந்தனர். இந்த தீர்மானம் வெற்றி பெற்றதையடுத்து கெவின் மெக்கார்த்தி பதவி நீக்கம் செய்யப்பட்டார். இதையடுத்து பாராளுமன்ற பிரதிநிதிகள் சபையின் புதிய சபாநாயகரை தேர்ந்தெடுப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டன.

    இதில் குடியரசு கட்சி சார்பில் ஜிம் ஜோர்டன் களம் இறங்கினார். ஆனால் அவருக்கும் சொந்த கட்சி உறுப்பினர்களிடம் எதிர்ப்பு இருந்தது.

    இந்த நிலையில் நேற்று பாராளுமன்ற பிரதிநிதிகள் சபை சபாநாயகரை தேர்ந்தெடுப்பதற்கான முதல் சுற்று ஓட்டெடுப்பு நடந்தது. சபாநாயகர் பதவியை பெற 217 வாக்குகள் பெற வேண்டும்.

    இதில் ஜிம் ஜோர்டன் 200 வாக்குகளை பெற்றார். அவருக்கு சொந்த கட்சி உறுப்பினர்கள் 20 பேர் வாக்களிக்க மறுத்து விட்டனர்.

    ஜனநாயக கட்சி வேட்பாளரான ஹக்கீம் ஜெப்ரிஸ் 212 வாக்குகளை பெற்றார். ஆனால் அக்கட்சி பிரதிநிதிகள் சபையில் சிறுபான்மை கட்சியாகும். எனவே அந்த வாக்குகள் போதுமானதாக இல்லை. இதனால் அமெரிக்க பாராளுமன்ற பிரதிநிதிகள் சபையின் சபாநாயகரை தேர்ந்தெடுப்பதில் இழுபறி நீடிக்கிறது.

    ஜிம் ஜோர்டன் தனக்கு 221 உறுப்பினர்கள் ஆதரவு தெரிவிப்பார்கள் என்று நம்பிக்கையுடன் இருந்தார். 4 வாக்குகள் மட்டுமே இழக்கலாம் என்று கருதினார். ஆனால் அவருக்கு எதிராக 20 வாக்குகள் விழுந்துள்ளது.

    தனக்கு எதிராக வாக்களித்த சில குடியரசு கட்சி உறுப்பினர்களை ஜிம் ஜோர்டன் சந்தித்து பேசினார். ஆனாலும் ஜிம் ஜோர்டனுக்கு எதிரான நிலைப்பாட்டில் சில உறுப்பினர்கள் தீவிரமாகவே உள்ளனர். அவருக்கு தொடர்ந்து ஆதரவு கிடைக்கவில்லை. இதையொட்டி அடுத்த சபாநாயகர் வேட்பாளராக டாம் எம்மர் போட்டியிட வாய்ப்பு உள்ளது. இந்த நிலையில் இன்று 2-வது சுற்று வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.

    ×