என் மலர்
உலகம்
- உலகம் முழுவதும் 252 கர்தினால்கள் உள்ள நிலையில், போப் தேர்வு செய்வதற்கான வாக்களிக்கும் தகுதி உடையவர்கள் 135 கர்தினால்கள் ஆவர்.
- ரகசிய வாக்கெடுப்பில 3-ல் 2 பங்கு பெரும்பான்மை பெறுபவர் புதிய போப்பாக அறிவிக்கப்படுவார்.
வாடிகன் சிட்டி:
கத்தோலிக்க திருச்சபை தலைவர் போப் பிரான்சிஸ் (வயது 88) உடல் நலக்குறைவால் நேற்று முன்தினம் மரணமடைந்தார். அவரது உடலுக்கு வாடிகனில் வருகிற 26-ந்தேதி இறுதிச்சடங்குகள் நடக்கின்றன.
போப் பிரான்சிஸ் மரணமடைந்ததை தொடர்ந்து புதிய போப் தேர்வு எப்போது? என்ற எதிர்பார்ப்பு உலகம் முழுவதும் ஏற்பட்டு உள்ளது.
குறிப்பாக, போப் என்பவர் கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் ஆன்மிக தலைவர் மட்டுமின்றி உலகின் சிறிய நாடான வாடிகனின் ஆட்சித்தலைவரும் என்பதால் புதிய போப் யார் என்பதை அறிய அகில உலகமும் ஆவலுடன் உள்ளது.
ஒரு போப் மரணம் அடைந்தாலோ அல்லது பதவி விலகினாலோ புதிய போப்பை தேர்வு செய்வதற்கு கத்தோலிக்க திருச்சபையில் நூற்றாண்டு பாரம்பரியம் கொண்ட நடைமுறை உள்ளது. சிக்கலான இந்த செயல்பாடுகள் சுவாரஸ்யம் வாய்ந்ததும் கூட.
தற்போது போப் பிரான்சிஸ் மரணமடைந்துள்ள நிலையில், அவரது உடல் நல்லடக்கத்துக்குப்பின் 9 நாட்கள் வாடிகனில் துக்கம் (நோவன்டியலி) அனுசரிக்கப்படுகிறது. இந்த நாட்களில் கார்டினல்கள் எனப்படும் கர்தினால்கள் தலைமையில் போப் ஆன்ம இளைப்பாறுதலுக்காக சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படும்.
அதேநேரம் புதிய போப் தேர்வு செய்வதற்காக இந்த நாட்களில் உலகெங்கிலும் உள்ள கர்தினால்கள் வாடிகனில் திரளுகிறார்கள். இதற்காக ஒவ்வொருவருக்கும் போதிய நேரம் வழங்கப்படும்.
பின்னர் புதிய போப் தேர்வு செய்வதற்காக 80 வயதுக்கு உட்பட்ட கர்தினால்களின் கான்கிளேவ் (மாநாடு) தொடங்கும். போப் இருக்கை காலியாக (செடே வேக்கண்டே) இருப்பதாக அறிவிக்கப்பட்ட 15 முதல் 20 நாட்களுக்குள் இந்த கான்கிளேவ் தொடங்க வேண்டும்.
உலகம் முழுவதும் 252 கர்தினால்கள் உள்ள நிலையில், போப் தேர்வு செய்வதற்கான வாக்களிக்கும் தகுதி உடையவர்கள் 135 கர்தினால்கள் ஆவர். இதில் பெரும்பாலானவர்கள் (108 பேர்) மறைந்த போப் பிரான்சிசால் நியமிக்கப்பட்டவர்கள்.
இவர்கள் வாடிகனில் உள்ள சிஸ்டைன் சிற்றாலயத்தில் கூடி புதிய போப்பை தேர்வு செய்வர். இதற்காக சிற்றாலயத்துக்குள் நுழைந்தபிறகு வெளி உலகத்துடனான தொடர்பு அனைத்தும் துண்டிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்படுவர். புதிய போப் தேர்வு செய்யும் வரை அவர்கள் வெளியே வரமாட்டார்கள்.
இந்த கான்கிளேவ் தொடங்கிய பிறகு தங்களுக்கு உள்ளேயிருந்து ஒருவரை புதிய போப்பாக தேர்வு செய்வார்கள். இதற்காக தினமும் 4 முறை வரை ரகசியமாக வாக்களிப்பார்கள்.
இதில் பெரும்பான்மை கிடக்காவிட்டால் அந்த வாக்குச்சீட்டுகளை பிரத்யேக ஸ்டவ் மூலம் எரிக்கப்படும். அத்துடன் புகை போக்கி மூலம் கரும்புகை வெளியிடப்படும்.
இதன் மூலம் புதிய போப் இதுவரை தேர்வாகவில்லை என்பதை அந்த சிற்றாலயத்துக்கு வெளியே கூடியிருக்கும் ஆயிரக்கணக்கான மக்களும், உலகம் முழுவதும் உள்ள மக்களும் அறிந்து கொள்ள முடியும்.
ரகசிய வாக்கெடுப்பில 3-ல் 2 பங்கு பெரும்பான்மை பெறுபவர் புதிய போப்பாக அறிவிக்கப்படுவார். அந்த பெரும்பான்மை கிடைக்கும் வரை ஓட்டெடுப்பு தொடர்ந்து நடக்கும். இதனால் இந்த வாக்கெடுப்பு ஒரு வாரம் வரை நீடிக்கலாம்.
அதேநேரம் கடைசியாக தேர்ந்தெடுக்கப்பட்ட 3 போப்களும் ஓரிரு நாட்களிலேயே தேர்வாகி இருந்தனர்.
இறுதியில் அதிக பெரும்பான்மை பெறும் கர்தினாலிடம் போப் பதவியில் அமர விருப்பம் குறித்து கேட்கப்படும்.
அவர் ஏற்றுக்கொண்டால், புகை போக்கியில் வெண் புகை வெளிவரும். அதன் மூலம் புதிய போப் தேர்வானது உறுதியாகி விடும். அப்போது ஆலய மணிகள் ஒலித்து மகிழ்ச்சியை பிரதிபலிக்கும்.
அதேநேரம் செயின்ட் பீட்டர்ஸ் பேராலய பால்கனியில் கர்தினால் ஒருவர் தோன்றி 'ஹேபிமஸ் பாப்பம்' என அறிவிப்பார். இந்த லத்தீன் வார்த்தைக்கு 'நம்மிடம் ஒரு போப் இருக்கிறார்' என்பது அர்த்தம். அதைத்தொடர்ந்து புதிய போப் பால்கனியில் தோன்றி அங்கே கூடியிருக்கும் மக்களுக்கு ஆசி வழங்குவார்.
பின்னர் அவர் போப் பதவியேற்று கத்தோலிக்க திருச்சபையின் நிர்வாகத்தை வழிநடத்துவார்.
- பக்கவாதம் மற்றும் மாரடைப்பால் அவர் உயிர் பிரிந்ததாக மருத்துவ அறிக்கை தெரிவிக்கிறது.
- சாண்டா மார்ட்டா இல்லத்தின் தேவாலயத்தில் சவப்பெட்டியில் வைக்கப்பட்டுள்ளது.
கத்தோலிக்க திருச்சபை தலைவர் போப் பிரான்சிஸ் நேற்று காலை 7.35 மணிக்கு உயிரிழந்தார். 88 வயதான அவர் கல்லீரல் ஆழற்சி நோய்க்கு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் பக்கவாதம் மற்றும் மாரடைப்பால் அவர் உயிர் பிரிந்ததாக மருத்துவ அறிக்கை தெரிவிக்கிறது. கடந்த 2012 முதல் போப் ஆண்டவராக இருந்த பிரான்சிஸ் தனது எளிமை மற்றும் ஏழைகளிடம் காட்டிய இரக்க சிந்தைக்காக போற்றப்படுகிறார்.
இந்நிலையில் போப் பிரான்சிஸ் இறுதிச் சடங்கு குறித்து விவாதிக்க இன்று ரோமில் உள்ள அனைத்து கார்டினல்களும் பங்கேற்ற கூட்டம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து போப் பிரான்சிஸ் உடைய இறுதிச் சடங்கு வரும் சனிக்கிழமை காலை 10:00 மணிக்கு (08:00 GMT) நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரது இறுதிச் சடங்கு செயிண்ட் பீட்டர்ஸ் பசிலிக்காவிற்கு முன்னால் நடைபெறும். கார்டினல்கள் கல்லூரியின் டீன் ஜியோவானி பாட்டிஸ்டா ரே வழிபாட்டிற்கு தலைமை தாங்குவார். பின்னர் போப்பின் உடல் ரோமில் உள்ள செயிண்ட் மேரி மேஜர் பசிலிக்காவிற்கு எடுத்துச் செல்லப்பட்டு அடக்கம் செய்யப்படும்.
போப்பாண்டவரின் உடல் நாளை (புதன்கிழமை) காலை 07:00 GMT மணிக்கு செயிண்ட் பீட்டர்ஸ் பசிலிக்காவிற்கு பொதுமக்களின் பார்வைக்காக எடுத்துச் செல்லப்படும் என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
போப் பிரான்சிஸ் உடைய உடல் தற்போது அவர் 12 ஆண்டுகாலமாக போப்பாண்டவராக இருந்த காலத்தில் வாழ்ந்த சாண்டா மார்ட்டா இல்லத்தின் தேவாலயத்தில் சவப்பெட்டியில் வைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான புகைப்படங்களை வாடிகன் வெளியிட்டுள்ளது.

- பிரதமர் மோடி தனி விமானம் மூலம் சவுதி அரேபியா சென்றடைந்தார்.
- அங்கு 21 குண்டுகள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஜெட்டா:
பிரதமர் மோடி 2 நாள் அரசுமுறை பயணமாக இன்று டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் பிரதமர் மோடி சவுதி அரேபியா புறப்பட்டார்.
பிரதமர் மோடியின் விமானம் சவுதி அரேபியா எல்லையில் நுழைந்தபோது அந்நாட்டு அரசு சார்பில், எப்-15 ரக போர் விமானம் மூலம் பாதுகாப்பு வழங்கப்பட்டது.
இந்நிலையில், பிரதமர் மோடி சவுதி அரேபியா சென்றடைந்தார். அவரை அந்நாட்டு பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் வரவேற்றார். அப்போது 21 குண்டுகள் முழங்க பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதன்மூலம் கடந்த 40 ஆண்டுகளில் ஜெட்டா நகரம் சென்ற முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையையும் பெற்றார்.
இருநாட்டு உறவு, வர்த்தகம், பொருளாதாரம், மூதலீடு உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளது. இரு நாடுகளுக்கு இடையே முக்கிய ஒப்பந்தங்களும் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- தாங்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டால், அத்தகைய வீட்டை தான் வாங்குவேன் என்று அதில் எழுதியுள்ளார்.
- அந்தக் கடிதம் குழந்தைத்தனமானது என்று அமலியா நினைத்தார்.
கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் உடைய இயற்பெயர் ஜார்ஜ் மரியோ பெர்கோக்லியோ. 22 வயதில் இறை சேவைக்கு தன்னை அர்ப்பணித்த அவரால் கத்தோலிக்க திருச்சபையில் பல சீர்திருத்தங்கள் நிகழ்ந்தன எனலாம்.
டிசம்பர் 17, 1936 அன்று அர்ஜென்டினாவின் பியூனஸ் அயர்ஸில் ஜார்ஜ் மரியோ பெர்கோக்லியோ பிறந்தார். அவரது தந்தை, மரியோ ஜோஸ் பெர்கோக்லியோ, ரயில்வேயில் பணிபுரிந்தார், அவரது தாயார், ரெஜினா சிவோரி, வீட்டை நிர்வகித்தார்.
ஜார்ஜ் குழந்தைப் பருவத்தில் அவருடைய குடும்பம் பியூனஸ் அயர்ஸில் உள்ள மெம்ப்ரில்லர் தெருவில் வசித்து. அங்கு ஜார்ஜ், அமலியா டாமோன்டே என்ற தனது அண்டை வீட்டுப் பெண் மீது காதல் வயப்பட்டார்.
12 வயதில், ஜார்ஜ் அமலியாவுக்கு ஒரு காதல் கடிதம் எழுதினார். அதில் சிவப்பு கூரையுடன் கூடிய ஒரு சிறிய வெள்ளை வீட்டின் ஓவியத்தை வரைந்திருந்தார்.
தாங்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டால், அத்தகைய வீட்டை தான் வாங்குவேன் என்று அதில் எழுதியுள்ளார். மேலும், "நான் உன்னை திருமணம் செய்து கொள்ளாவிட்டால், நான் ஒரு பாதிரியாராகிவிடுவேன்" என்றும் அவர் அந்த கடிதத்தில் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதம் குழந்தைத்தனமானது என்று அமலியா நினைத்தார். ஜார்ஜ் எதிர்பார்த்தபடி அவர் பதிலளிக்கவில்லை. அமலியாவின் கண்டிப்பான பெற்றோரும் இந்தக் கடிதத்தைக் கண்டுபிடித்தனர்.
அதைத் தொடர்ந்து அவர்கள் தலையிட்டு இருவரையும் பிரித்து வைத்தனர். சிறிது காலத்திலேயே ஜார்ஜ் பெர்கோக்லியோ குடும்பம் அங்கிருந்து வேறு இடத்துக்கு குடிபெயர்ந்தது. அமலியா இறுதியில் வேறொருவரை மணந்தார். பல ஆண்டுகள் கழித்து ஏபி செய்தி நிறுவனத்துக்கு அமலியா டாமோன்டே அளித்த நேர்காணலில், ஜார்ஜ் அளித்த கடிதத்தை நினைவு கூர்ந்தார்.

உயர்நிலைப் பள்ளிப் படிப்பை முடித்த பிறகு, ஜார்ஜ் பியூனஸ் அயர்ஸ் பல்கலைக்கழகத்தில் பயின்று வேதியியலில் முதுகலைப் பட்டம் பெற்றார். பின்னர், அவர் ஒரு பாதிரியாராக மாற முடிவு செய்தார்.
அவர் 1969 இல் திருச்சபையில் திருச்சபைப் பொறுப்பேற்றார், இறுதியில் பியூனஸ் அயர்ஸின் பேராயரானார். மார்ச் 13, 2013 அன்று, அவர் 266 வது போப்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அசிசியின் புனித பிரான்சிஸால் ஈர்க்கப்பட்டு பிரான்சிஸ் என்ற பெயரைப் பெற்றார்.
போப் பிரான்சிஸ் ஏழைகளுக்கான தனது பணிவு மற்றும் அர்ப்பணிப்புக்காக உலகளவில் அறியப்படுகிறார். 88 வயதில் நுரையீரல் அழற்சி நோயால் அவதிப்பட்டு வந்த போப் பிரான்சிஸ், நேற்று (ஏப்ரல் 21) காலை உயிரிழந்தாக வாடிகன் அறிவித்தது.
- மாறாக நகரின் புறநகரில் உள்ள ஒரு சிறிய வீட்டில் வசித்துவந்தார்.
- ஆயிரக்கணக்கான அர்ஜென்டினா நாட்டு மக்கள் ரோமிற்கு செல்ல திட்டமிட்டிருந்தனர்.
அர்ஜென்டினா நாட்டை சேர்ந்த போப் பிரான்சிஸ் 1936-ம் ஆண்டு பிறந்தார். தனது பெற்றோரின் 5 குழந்தைகளில் ஒருவராக பிறந்த அவருக்கு ஜார்ஜ் மரியோ பெர்கோக்லியோ என்று பெயரிட்டனர். தனது சிறுவயதிலேயே இத்தாலி மற்றும் ஸ்பானிஷ் மொழிகளை கற்றுக்கொண்டார்.
சிறு வயதிலேயே சமூக உணர்வு உள்ளவராக இருந்திருக்கிறார். மேலும் தனது வாழ்நாளில் எளிமையை கடைபிடிப்பவராக இருந்து வந்துள்ளார். மேலும் எளிமையை கடை பிடிக்குமாறு அனைவருக்கும் போதித்துள்ளார். பியூனஸ் அயர்சின் பேராயராக இருந்தபோது, அவர் அதகாரபூர்வ இல்லத்தில் வசிக்கவில்லை.
மாறாக நகரின் புறநகரில் உள்ள ஒரு சிறிய வீட்டில் வசித்துவந்தார். பேராயருக்கான அதிகாரபூர்வ வாகனத்தையும் பயன்படுத்த வில்லை. சாதாரண மக்களுடன் பேருந்து மற்றும் ரெயில்களில் பயணம் செய்தார். ரோமிற்கு செல்ல வேண்டியிருந்தபோது விமானத்தில் எகானமி வகுப்பில் பயணித்து சென்றிருக்கிறார்.
அவர் பேராயராக இருந்த போது தான், 2013-ம் ஆண்டு போப் பிரான்சிசாக பதவியேற்றார். அவரது பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வதற்காக ஆயிரக்கணக்கான அர்ஜென்டினா நாட்டு மக்கள் ரோமிற்கு செல்ல திட்டமிட்டிருந்தனர்.
இதனையறிந்த போப் பிரான்சிஸ், அவர்கள் அதிக செலவு செய்து ரோமிற்கு வருவதை ஊக்குவிக்கவில்லை. அவர்களை விமான டிக்கெட்டுகளுக்கு செலவழித்த பணத்தை ஏழைகளுக்கு கொடுங்கள் என்று கூறினார்.
போப் பிரான்சிசாக மாறியபோதும் அவரிடமிருந்த எளிமை மாறவில்லை. மேலும் அனைவரிடமும் அன்பு காட்டுவதிலும் இறைவனுக்கு நிகராக திகழ்ந்து வந்தார் என்றால் மிகை ஆகாது.
- உடல் நாளை காலை வாடிகனில் உள்ள புனித பீட்டர்ஸ் ஆலயத்துக்கு எடுத்து செல்லப்படும்.
- 75-க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் நல்லடக்க நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளனர்.
வாடிகன்சிட்டி:
உலகம் முழுக்க சுமார் 250 கோடி கிறிஸ்தவர்கள் வாழ்கிறார்கள். இவர்களில் சுமார் 140 கோடி கிறிஸ்தவர்கள் கத்தோ லிக்க திருச்சபையை பின்பற்றுபவர்கள்.
கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக போப் ஆண்டவர் இருந்து வருகிறார். 266-வது போப் ஆண்டவராக அர்ஜென்டினா நாட்டை சேர்ந்த போப் பிரான்சிஸ் இருந்து வந்தார்.
88 வயதான போப் பிரான்சிஸ் வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த சில ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்தார். சிறு வயதிலேயே அவருக்கு நிமோனியா தாக்குதல் ஏற்பட்டு கடுமையாக உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்தது. இதனால் சிறு வயதில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்து அவரது நுரையீரலின் ஒரு பகுதி அகற்றப்பட்டது.
போப் ஆண்டவராக பதவி ஏற்ற பிறகு அதற்காக சிகிச்சையும் பெற்று வந்தார். கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு அவரது உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டது. அவரது மூச்சு குழாயில் அலர்ஜி உருவானது. இதையடுத்து அவர் ரோம் நகரில் ஜெமிலி மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டார்.
சிகிச்சைக்கு பிறகு அவர் உடல்நிலை சற்று தேறியதால் வீடு திரும்பி இருந்தார். நேற்று முன்தினம் ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு வாடிகன் புனித பீட்டர்ஸ் சதுக்கத்தில் தோன்றி சுமார் 40 ஆயிரம் பேருக்கு ஆசியும், வாழ்த்தும் தெரிவித்தார்.
இந்த நிலையில் நேற்று காலை அவரது உடல்நிலை மோசமானது. காலை 7.35 மணிக்கு அவர் உயிர் பிரிந்தது.
போப் ஆண்டவர் பிரான்சிசுக்கு நேற்று அதிகாலை திடீர் பக்கவாதம் தாக்கியதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து அவரது இதயம் செயலிழந்தது. அந்த செயலிழப்பு மீட்கப்பட முடி யாத அளவுக்கு இருந்ததாக கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து அவ ருக்கு கோமா ஏற்பட்டது. கோமாவில் இருந்தபடியே அவர் உயிர் பிரிந்ததாக கத்தோலிக்க மத குருக்கள் தெரிவித்து உள்ளனர்.
போப் ஆண்டவர் மரணம் குறித்து தகவல் அறிந்ததும் உலகம் முழுக்க வாழும் தலைவர்கள், மத தலைவர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் இரங்கல் செய்தி வெளியிட்டன. கத்தோலிக்க திருச்சபை அமைப்பில் 252 கார்டி னல்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் வாடிகன் நோக்கி சென்று கொண்டு இருக்கிறார்கள்.
அதுபோல கத்தோலிக்க மதத்தின் மூத்த நிர்வாகிகள் உலகம் முழுவதும் இருந்து ரோமுக்கு புறப்பட்டு சென்றுள்ளனர். இதனால் ரோம் நகரில் கட்டுக் கடங்காத கூட்டம் ஏற்பட்டு உள்ளது. வாடிகனில் திரண்டு உள்ள மத குருக்கள், பொதுமக்கள் போப் ஆண்டவருக்கு இறுதி விடை கொடுக்கத் தயாராகி வருகிறார்கள்.
போப் ஆண்டவர் பிரான்சிஸ் உடல் நேற்று பதப்படுத்தப்பட்டது. நேற்று இரவு அவரது உடல் காசா சந்தாமர்தா ஆலயத்தில் பெட்டிக்குள் வைக்கப்பட்டது. அப்போது சிறப்பு ஆராதனைகள் செய்யப்பட்டன. பெண் கத்தோலிக்க மத குரு இந்த ஆராதனையை தலைமையேற்று நடத்தினார்.
போப் ஆண்டவரின் உடல் நாளை (புதன்கிழமை) காலை வாடிகனில் உள்ள புனித பீட்டர்ஸ் ஆலயத்துக்கு எடுத்து செல்லப்படும். அங்கு போப் ஆண்டவருக்கு பொதுமக்கள் மற்றும் கத்தோலிக்க மத குருக்கள் இறுதி அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்படுவார்கள்.
அதன் பிறகு போப் ஆண்டவர் உடல் இறுதி ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்படும்.
போப் ஆண்டவர் பிரான்சிஸ் உடலை அவரது விருப்பப்படி மிக மிக எளிய முறையில் வாடிகன் நகருக்கு வெளியே நல்லடக்கம் செய்ய கத்தோலிக்க மூத்த மத குருக்கள் முடிவு செய்து உள்ளனர். இந்த நல்லடக்கத்தை எப்போது எப்படி, எந்த நேரத்தில் நடத்துவது என்று முடிவு செய்ய இன்று (செவ்வாய்க்கிழமை) கூடி ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் போப் ஆண்டவர் இறுதி ஊர்வலம் தேதி முடிவு செய்து அறிவிக்கப்படும். அதன் பிறகு போப் ஆண்டவர் பிரான்சிஸ் உடலுக்கு இறுதி சடங்கு ஏற்பாடுகள் தொடங்கும்.
போப் ஆண்டவர் பிரான்சிஸ் இறுதி ஊர்வலத்தில் உலகத் தலைவர்கள் பெரும்பாலானவர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது மனைவியுடன் ரோம் நகருக்கு சென்று போப் ஆண்டவர் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்க இருப்பதாக அறிவித்துள்ளார்.
75-க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் போப் ஆண்டவர் இறுதி ஊர்வலம் மற்றும் நல்லடக்க நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளனர். இதை கருத்தில் கொண்டு ரோம் நகரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
பொதுவாக போப் ஆண்டவர் மரணம் அடைந்து விட்டால் 4 முதல் 6 நாட்களுக்குள் நல்லடக்கம் செய்வது பாரம்பரிய வழக்கமாக உள்ளது. அதன்படி போப் ஆண்டவர் பிரான்சிஸ் உடலும் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.
அடக்கம் முடிந்த பிறகு 9 நாட்கள் அரசு துக்கம் கடைபிடிக்கப்படும். இந்த நிகழ்ச்சிகள் முடிந்த பிறகு புதிய போப் ஆண்டவர் தேர்வு செய்யும் பணிகள் தொடங்கும்.
15 முதல் 20 நாட்கள் கழித்து புதிய போப் ஆண்ட வரை தேர்வு செய்வதற்கான பணிகள் தொடங்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
- ஈஸ்டர் பண்டிகையை ஒட்டி 30 மணி நேர போர் நிறுத்தம் அமல்படுத்தப்பட்டது.
- மாஸ்கோவிடமிருந்து தெளிவான பதிலை நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
2022 இல் தொடங்கிய உக்ரைன்- ரஷியா போர் 4 ஆண்டுகளை கடந்தும் நீடித்து வருகிறது. இரு நாடுகளுக்கிடையேயும் போர் நிறுத்தம் ஏற்படுத்தும் அமெரிக்காவின் முயற்சிகளில் இழுபறி நீடித்து வருகிறது.
இந்நிலையில் உக்ரைனுடன் நேரடி போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்குத் தயார் என ரஷிய அதிபர் புதின் முதல்முறையாக அறிவித்துள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் பண்டிகையை ஒட்டி 30 மணி நேர போர் நிறுத்தம் அமல்படுத்தப்பட்டது. நேற்று இந்த போர் நிறுத்தம் முடிவடைந்த நிலையில் போர் நிறுத்தத்தை நீட்டிக்க உக்ரைன் அழைப்பு விடுத்தது.
குறைந்தபட்சம் பொதுமக்கள் வசிக்கும் இலக்குகளைத் தாக்கக்கூடாது என்ற தனது திட்டத்தை உக்ரைன் தொடர்கிறது. மேலும் மாஸ்கோவிடமிருந்து தெளிவான பதிலை நாங்கள் எதிர்பார்க்கிறோம்என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பேசியிருந்தார்.
இந்நிலையில் ரஷிய அரசுத் தொலைக்காட்சியில் பேசிய அதிபர் புதின், போர் நிறுத்தம் குறித்து எங்களுக்கு நேர்மறையான அணுகுமுறை உள்ளது. எந்தவொரு அமைதி முயற்சிகளுக்கும் நாங்கள் திறந்திருக்கிறோம், உக்ரைனும் அதற்கு விரும்புவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்" என்று பேசியுள்ளார். இதற்கிடையே அமெரிக்க, ஐரோப்பிய மற்றும் உக்ரேனிய அதிகாரிகள் அமைதிப் பேச்சுவார்த்தையின் ஒரு பகுதியாக இந்த வாரம் லண்டனில் சந்திக்க உள்ளனர்.
- முந்தைய போப்களின் பிரம்மாண்ட இறுதிச் சடங்குகளைப் போல் அல்லாமல் தனது இறுதிச் சடங்கு மிகவும் எளிமையான முறையில் நடைபெற வேண்டும்.
- வெள்ளைத் தொப்பியையும் மத விழாக்களின் போது அவர் அணியும் கம்பளி போன்றவை அணிவிக்கப்படுகிறது.
கத்தோலிக்க திருசபையின் தலைவர் போப் பிரான்சிஸ் (88 வயது) நுரையீரல் அழற்சி நோயால் அவதிப்பட்டு வந்த நிலையில் நேற்று (ஏப்ரல் 21) காலை உயிரிழந்ததாக வாடிகன் அறிவித்தது.
போப் ஆண்டவர்கள் மறைவுக்குப் பிறகு நல்லடக்க சடங்குகள் மிக விரிவாக நடப்பது வழக்கம்.
ஆனால் முந்தைய போப்களின் பிரம்மாண்ட இறுதிச் சடங்குகளைப் போல் அல்லாமல் தனது இறுதிச் சடங்கு மிகவும் எளிமையான முறையில் நடைபெற வேண்டும் என்று போப் பிரான்சிஸ் விரும்பினார்.
மற்ற போப்ஸ் அடக்கம் செய்யப்பட்ட புனித பீட்டர்ஸ் பசிலிக்காவின் கல்லறையில் அடக்கம் செய்யப்படுவதை விட வாடிகன் நகரத்திற்கு வெளியே உள்ள புனித மேரி மேஜர் பசிலிக்காவில் தன்னை அடக்கம் செய்ய போப் பிரான்சிஸ் விரும்பினார்.
அங்குள்ள கன்னி மரியாளின் உருவத்தின் மீது அவர் கொண்டிருந்த பக்தி காரணமாக இந்த முடிவை அவர் எடுத்தார். பிரான்சிஸ் ஒவ்வொரு முறையும் வெளிநாட்டுப் பயணத்திலிருந்து திரும்பும்போது கன்னி மரியாள் முன்பு பிரார்த்தனை செய்வார். அதே இடத்தில் அவருடைய உடல் அடக்கம் செய்யப்பட உள்ளது.
ஒரு பிஷப் இறுதிச் சடங்குகளில் கடைப்பிடிக்கப்படும் அதே இறுதிச் சடங்குகள் தனக்கும் பொருந்த வேண்டும் என்று பரிந்துரைத்தார்.
அதன்படி இறந்த போப் பிரான்சிஸின் இறுதிச் சடங்கு அவர் விரும்பியபடி 3 கட்டங்களாக நடைபெறும். திங்கள்கிழமை காலை போப்பின் மரணம் உறுதி செய்யப்பட்டது. அவரது உடல் பக்தர்கள் இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக 3 நாட்கள் செயிண்ட்ஸ் பசிலிக்கா தேவாலயத்தில் வைக்கப்படுகிறது.
கடந்த காலத்தில் இறந்த போப்களின் உடல் சைப்ரஸ் ஈயம் மற்றும் ஓக் ஆகியவற்றால் ஆன 3 சவப்பெட்டிகளில் ஒன்றின் உள்ளே மற்றொன்று வைக்கப்பட்டது.
ஆனால் போப் பிரான்சிஸ் உடல் துத்தநாக விளிம்புடன் கூடிய மர சவப்பெட்டியில் பாதுகாக்கப்படுகிறது. அதில் வைக்கப்படுவதற்கு முன்பு போப்பின் உடல் மீது மத நடவடிக்கைகளின் போது அவர் அணியும் பாரம்பரிய சிவப்பு அங்கி மிட்டர் என்று அழைக்கப்படும் வெள்ளைத் தொப்பியையும் மத விழாக்களின் போது அவர் அணியும் கம்பளி போன்றவை அணிவிக்கப்படுகிறது.
பசிலிக்காவில் போப்பின் உடல் புனிதர்களின் வழிபாட்டு பாடலுடன் புனித பீட்டர் பசிலிக்காவிற்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறது.

கடந்த காலத்தில் போப்பின் சவப்பெட்டி உயர்த்தப்பட்ட மேடையில் வைக்கப்பட்டது. இப்போது. அந்த வழக்கம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.தேவாலயத்தில் அமர்ந்திருக்கும் அனைவருக்கும் போப்பின் உடல் தெரியும் வகையில் சவப்பெட்டி வைக்கப்பட்டுள்ளது.
இறுதிச் சடங்கிற்கு முந்தைய இரவு கமெர்லெக்னோ சவப்பெட்டி சீல் வைக்கும் விழாவைச் செய்கிறார்.
இந்த நிகழ்வு மற்ற கார்டினல்கள் முன்னிலையில் நடைபெறும்.
போப்பின் இறுதிச் சடங்ககிற்கு கார்டினல்கள் கல்லூரியின் டீனும் அவரது வாரிசான உச்சப் போப்பாண்டவரும் தலைமை தாங்குகிறார்கள்.
போப் பிரான்சிஸ் அறிமுகப்படுத்திய சீர்திருத்தங்களின்படி அவரது உடல் வாடிகன் நகருக்கு வெளியே அடக்கம் செய்யப்படுகிறது. இந்த நிகழ்விற்கு கமர்லெக்னோ தலைமை தாங்குகிறார்.
கடந்த 100 ஆண்டுகளில் வாடிகன் நகருக்கு வெளியில் நல்லடக்கம் செய்யப்படும் முதல் போப் இவர்தான். இன்று கார்டினல் குழு கூட்டத்தின்பின் நாளை நல்லடக்கம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 2017-ல் போப் பிரான்சிஸ் இந்திய வருகை ரத்தானது.
- 2025-ம் ஆண்டுக்குப் பிறகு தான் இந்தியாவுக்கு வர வாய்ப்புள்ளதாக அவர் தெரிவித்தார்.
இந்தோனேஷியா, பப்புவா நியூ கினியா, கிழக்கு திமோர் மற்றும் சிங்கப்பூர் ஆகியவற்றை விட இந்தியாவில் அதிக கத்தோலிக்கர்கள் இருந்தாலும், 1999-ம் ஆண்டு முதல் நாட்டிற்கு போப் பாண்டவர் வருகை இல்லை.
1964-ம் ஆண்டு போப்பால் IV என்பவர் முதன்முறையாக இந்தியாவிற்கு வந்தார். இதனைத் தொடர்ந்து போப் ஜான் பால் II என்பவர் 1986 மற்றும் 1999-ம் ஆண்டுகளில் இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார்.
இந்தியாவிற்கு வருகை தந்த கடைசி போப் பாண்டவர் ஜான் பால் ஆவார்.
மறைந்த போப் பிரான்சிஸ் இந்தியாவிற்கு வர வேண்டும் என்பதை தனது ஆசையாக கூறியுள்ளார்.
2017-ல் போப் பிரான்சிஸ் இந்திய வருகை ரத்தானது. அவர் வங்காளதேசம் மியான்மாருக்கு சென்றார்.
2025-ம் ஆண்டுக்குப் பிறகு தான் இந்தியாவுக்கு வர வாய்ப்புள்ளதாக அவர் தெரிவித்தார். இருப்பினும் அதற்கு முன்பே அவர் இந்தியா வந்திருக்க வாய்ப்பு இருப்பதாகவும் அவர் கூறினார். ஆனால் போப் பிரான்சிஸ் இந்தியாவிற்கு வரவில்லை.
நம் நாட்டிற்கு வர வேண்டும் என்ற அவரது வாழ்நாள் ஆசை நிறைவேறாமல் அவர் காலமானார்.
- சட்டவிரோதமான நிபந்தனைகளை விதிக்கிறார்கள் என்று ஹார்வர்ட் பல்கலைக்கழகம் குற்றம் சாட்டியது.
- ஹார்வர்ட் பல்கலைக்கழகம், அரசு விதித்த நிபந்தனைகளுக்குக் கட்டுப்பட மறுத்ததால், டிரம்ப் நிர்வாகம் உடனடியாகப் பதிலடி கொடுத்தது.
அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகங்களில் காசா போர் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக மாணவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இதை தடுக்க பல்கலைக்கழக நிர்வாகங்களுக்கு அதிபர் டிரம்ப் உத்தரவிட்டார்.
ஹார்வர்ட் பல்கலைக்கழகம் தனது நிர்வாக முறையை மாற்ற வேண்டும். இல்லையென்றால், வரி விலக்கு ரத்து செய்யப்படும் என்றும் கூறினார்.
பல பல்கலைக்கழகங்கள் அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தன. ஹார்வர்ட் பல்கலைக்கழகம், அரசின் கோரிக்கைகளை ஏற்க மறுத்துவிட்டது. சட்டவிரோதமான நிபந்தனைகளை விதிக்கிறார்கள் என்று ஹார்வர்ட் குற்றம் சாட்டியது.
பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்கள் செயல்பாட்டைக் கட்டுப்படுத்தும் வகையில் டிரம்ப் நிர்வாக உத்தரவுக்கு இணங்கப்போவதில்லை என புகழ்பெற்ற ஹார்வர்ட் பல்கலைக்கழகம் அறிவித்தது.
ஹார்வர்ட் பல்கலைக்கழகம், அரசு விதித்த நிபந்தனைகளுக்குக் கட்டுப்பட மறுத்ததால், டிரம்ப் நிர்வாகம் உடனடியாகப் பதிலடி கொடுத்தது.
சிவில் உரிமைகள் சட்டங்களை நிலைநிறுத்தும் பொறுப்பைக் கடைப்பிடிக்காத பல்கலைக்கழகங்களுக்கு நிதி கிடைக்காது. கடந்த சில ஆண்டுகளாகவே பல்கலைக்கழகங்களில் கற்றல் சீர்குலைவு நடந்து வருகிறது என்று தெரிவித்த டிரம்ப் நிர்வாகம், ஹார்வர்ட் பல்கலைக்கழகத்திற்கான 2.2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.18 ஆயிரம் கோடி) நிதியை நிறுத்தி வைப்பதாக அறிவித்தது.
பல்கலைக்கழகத்திற்கான நிதியை நிறுத்தி வைத்துள்ள நிலையில், ஹார்வர்ட் பல்கலைக்கழகம் டிரம்ப் நிர்வாகத்தின் மீது வழக்கு தொடர்ந்துள்ளது.
- தங்கம் விற்க கொண்டு சென்றால் பல மணிநேரம் காத்திருந்து பணத்தை பெற வேண்டி உள்ளது.
- விண்ணப்பம், கையொப்பம் என்று தேவையும் இல்லை.
தங்கம் விலை தற்போது வரலாறு காணாத வகையில் உயர்ந்தாலும் அதனை வாங்கும் ஆர்வம் மக்களிடையே நிலவுகிறது. ஏன் என்றால் அவசர தேவைக்கு தங்கத்தை வைத்தோ, விற்றோ பயன்படுத்திக்கொள்ளலாம் என்பது நடுத்தர மக்களின் எண்ணம். சரி, தங்கம் விற்க கொண்டு சென்றால் பல மணிநேரம் காத்திருந்து பணத்தை பெற வேண்டி உள்ளது. இதனால் சில நேரங்களில் மக்கள் சிரமத்திற்கு ஆளாக நேரும். இதனை சரி செய்யும் வகையில் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது ஸ்மார்ட் கோல்ட் ஏடிஎம்.
ஆம், தங்க வர்த்தகத்தில் உயர் தொழில்நுட்ப திருப்பமாக, ஷாங்காயில் உள்ள ஒரு மால் பயனர்கள் தங்கள் தங்க நகைகளை விற்று 30 நிமிடங்களுக்குள் பணம் பெற அனுமதிக்கும் ஒரு ATM-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு விண்ணப்பம், கையொப்பம் என்று தேவையும் இல்லை.
சீனாவின் கிங்ஹுட் குழுமத்தால் உருவாக்கப்பட்ட இந்த ஸ்மார்ட் கோல்ட் ஏடிஎம் தங்கப் பொருட்களை பகுப்பாய்வு செய்து, உருக்கி, எடைபோட்டு, அவற்றின் தூய்மையை தீர்மானித்து, அதற்குச் சமமான தொகையை நேரடியாக விற்பனையாளரின் வங்கிக் கணக்கிற்கு மாற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த இயந்திரம் மூன்று கிராமுக்கு மேல் எடையுள்ள தங்கப் பொருட்களை குறைந்தபட்சம் 50 சதவீத தூய்மை நிலையுடன் ஏற்றுக்கொள்கிறது.
40 கிராம் தங்க நெக்லஸ் ஒரு கிராமுக்கு 785 யுவான் (தோராயமாக ரூ. 9,200) விலை போனது. இதனால் அரை மணி நேரத்தில் 36,000 யுவான்களுக்கு மேல் (சுமார் ரூ. 4.2 லட்சம்) பணம் ஒருவருக்கு கிடைத்தது.
- டெல்டா விமானத்தின் எஞ்சினில் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
- இந்த தீ விபத்து தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் ஃபளோரிடா மாகாணத்தில் உள்ள ஆர்லாண்டோ சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்படத் தயாராக இருந்த விமானத்தில் திடீரென தீ பிடித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த தீ விபத்து தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உடனடியாக விமானத்தில் இருந்த 300 பயணிகள் பத்திரமாக வெளியேற்றப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று மத்திய விமான போக்குவரத்து நிர்வாகம் தெரிவித்துள்ளது.






