என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    • 14-வது லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதுகின்றன.
    • சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியுள்ளது.

    சேலம்:

    9-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த 5-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்றைய 14-வது லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதுகின்றன.

    இதில் டாஸ் வென்ற திண்டுக்கல் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

    இதன்மூலம், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியுள்ளது.

    • முதல் முறையாக கேப்டன் பொறுப்பை வகிக்கும் சுப்மன் கில்லுக்கு இந்த தொடர் அனுபவத்தை அளிக்கும்.
    • 5 டெஸ்ட் போட்டியும் பரபரப்பாக இருக்கும். எல்லாவற்றுக்கும் முடிவு ஏற்படும்.

    புதுடெல்லி:

    சுப்மன்கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக இங்கிலாந்து சென்றுள்ளது.

    இரு அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி வருகிற 20-ந்தேதி லீட்ஸ் மைதானத்தில் தொடங்குகிறது. விராட்கோலி, ரோகித்சர்மா, அஸ்வின் போன்ற சீனியர் வீரர்கள் ஓய்வு பெற்ற பிறகு முதல் முறையாக இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் ஆடுகிறது.

    இந்த நிலையில் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இங்கிலாந்து 3-2 என்ற கணக்கில் கைப்பற்றும் என்று தென்ஆப்பிரிக்க முன்னாள் வேகப்பந்து வீரர் ஸ்டெய்ன் கணித்து உள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    5 டெஸ்ட் போட்டியும் பரபரப்பாக இருக்கும். எல்லாவற்றுக்கும் முடிவு ஏற்படும். இங்கிலாந்து 3-2 என்ற கணக்கில் தொடரை கைப்பற்ற வாய்ப்பு இருக்கிறது. எந்த அணியும் எளிதில் வெற்றி பெற முடியாது. 5 டெஸ்டும் மிகவும் நெருக்கமாக இருக்கும்.

    முதல் முறையாக கேப்டன் பொறுப்பை வகிக்கும் சுப்மன் கில்லுக்கு இந்த தொடர் அனுபவத்தை அளிக்கும். கடினமான சூழலை ஏற்படுத்தும்.

    இவ்வாறு ஸ்டெய்ன் கூறியுள்ளார்.

    அதேநேரத்தில் இங்கிலாந்து அணிக்கு இந்தியா சவால் அளிக்கும் என்று ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் கூறியுள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணியில் அனுபவம் மிகுந்த வீரர்களான விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோர் இல்லை. அணியில் இடம்பெற்றுள்ள பெரும்பாலான வீரர்கள் குறைந்த டெஸ்ட் போட்டியில் விளையாடியவர்கள்.

    அதே நேரத்தில் பந்துவீச்சில் எதிர் அணியை நிலைகுலையச் செய்ய பும்ரா இருக்கிறார். அவர் எப்படி செயல்படபோகிறார் என்பதைப் பார்க்க வேண்டும். அணியில் இளம் வீரர்கள் இருக்கிறார்கள். எனவே இங்கிலாந்துக்கு இந்திய அணி நிச்சயம் சவால் அளிக்கும். சாய் சுதர்ஷன், நிதிஷ் குமார் ரெட்டி, ஜெய்ஸ்வால், அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா, சிராஜ், ஆகாஷ் தீப் ஆகியோர் சறப்பாக செயல்படுவார்கள்.

    இவ்வாறு மைக்கேல் கிளார்க் கூறியுள்ளார்.

    • துண்டுகளின் மூலத்தையும், பந்தை சேதப்படுத்தும் பிற முறைகளையும் ஆராய வேண்டும்.
    • கோவை, மதுரை பலமுறை எச்சரித்த போதும் நடுவர்கள் நடவடிக்கை எடுக்க தவறியது கவலை அளிக்கிறது.

    சென்னை:

    டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் கடந்த 14-ந்தேதி சேலத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் மதுரை பாந்தர்சை தோற்கடித்தது.

    இந்தப் போட்டியில் அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் அணி ரசாயனம் தடவப்பட்ட துண்டுகளை பயன்படுத்தி பந்தை சேதப்படுத்தியதாக மதுரை பாந்தர்ஸ் அணி நிர்வாகம் புகார் அளித்து உள்ளது.

    இது தொடர்பாக விசாரணை நடத்த கோரி மதுரை அணியின் தலைமை செயல் அதிகாரி டி.பூஜா தமிழ்நாடு பிரீமியர் லீக் தலைமை செயல் அதிகாரி பிரசன்னாவுக்கு நேற்று இ.மெயில் அனுப்பியுள்ளார்.

    இதற்கிடையே பந்தை சேதப்படுத்தியது தொடர்பாக அஸ்வின் மற்றும் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி மீது அவசர விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க கோரி டி.என்.பி.எல். தலைமை செயல் அதிகாரி பிரசன்னாவுக்கு மதுரை பாந்தர்ஸ் அணியின் சி.ஒ.ஒ. எஸ்.மகேஷ் கடிதம் எழுதி உள்ளார்.

    அந்த கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    எங்களுக்கு எதிராக சமீபத்தில் நடந்த போட்டியில் ஆர்.அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் அணி பந்தை சேதப்படுத்தியது தொடர்பாக ஒரு தீவிரமான விஷயத்தை உங்கள் கவனத்துக்கு கொண்டு வருவதற்காக இதை நான் எழுதுகிறேன்.

    போட்டிக்கு முன்பு நடுவர்கள் பலமுறை எச்சரிக்கை செய்த போதும் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி ரசாயனங்கள் தடவப்பட்டதாக தோன்றும் துண்டுகளை பயன்படுத்தி பந்தை வெளிப்படையாக சேதப்படுத்தியது.

    இதனால் பந்தின் தன்மை அதிர்ச்சி அளிக்கும் வகையில் கடினமான கல் போல் இருந்தது. பேட்ஸ்மேன்கள் பந்தை அடிக்கும் போது உலோக ஒலியை உருவாக்கியது.

    இது ஆட்டத்தின் முடிவை பாதித்தது மட்டுமல்லாமல் எங்கள் இளம் அணியை மனசோர்வடைய செய்தது. நீங்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    1. துண்டுகளின் மூலத்தையும், பந்தை சேதப்படுத்தும் பிற முறைகளையும் ஆராய வேண்டும். பந்தை சேதப்படுத்த பயன்படுத்தப்பட்ட துண்டுகள் எங்கிருந்து வந்தது, அதை வழங்கியவர்கள் யார் என்பதை டி.என்.பி.எல். நிர்வாகம் கண்டறிய வேண்டும்.

    2. அந்த துண்டுகளில் வேதியியல் மாற்றங்கள் உள்ளதா? என்பதை ஆய்வு செய்ய ஆய்வக சோதனை நடத்த வேண்டும்.

    3. அஸ்வின், திண்டுக்கல் டிராகன்ஸ் அணி மற்றும் இந்த மோசமான விவகாரத்தில் தொடர்புடைய மற்ற அனைவருக்கும் கடுமையான தண்டனையை அளிக்க வேண்டும்.

    பந்து வீச்சாளர்கள் மற்றும் பீல்டர்கள் பந்தை சேதப்படுத்த பயன்படுத்திய பிற சாத்தியமான முறைகள் குறித்தும் எங்கள் தொழில் நுட்ப குழு ஆய்வு செய்து வருகிறது. அதன் விவரங்களை விரிவான அறிக்கையாக நாங்கள் வழங்குவோம். வேண்டுமென்றே சேதப்படுத்துதல் மற்றும் முன் கூட்டியே திட்டமிடப்பட்டது என்பதை ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.

    எனவே விளையாட்டின் நேர்மையை நிலை நிறுத்த நாங்கள் விரிவான நவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

    எங்கள் தலைமை பயிற்சியாளர் சுர்ஜித் சந்திரன், உதவி பயிற்சியாளர் எஸ்.கார்த்திக் ஆகியோரிடம் இருந்து பெறப்பட்ட அறிக்கைகளை எங்கள் அணியின் தலைமை செயல் அதிகாரி டி.பூஜா ஏற்கனவே உங்களுக்கு அனுப்பியுள்ளார். போட்டியின் போது பந்தின் தன்மை வியக்கத்தக்க முறையில் மாறியது என்பது தெளிவாகிறது.

    பவர்பிளேயின் போது பந்து சரியான நிலையில் இருந்தது. மேலும் எங்கள் அணியின் ஸ்கோர் அதை பிரதிபலித்தது. ஆனால் போட்டி தொடர்ந்து செல்லும் போது பந்து ஒரு உலோக ஒலியை உருவாக்க தொடங்கியது. கடினமான உலோக கல் போல் பந்தின் தன்மை இருந்தது.

    திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் பந்து வீச்சாளர்கள் துண்டுகளை பயன்படுத்தியதால் பந்தின் தன்மையில் மாற்றம் ஏற்பட்டது. இதற்கு முக்கிய காரணங்களாக ரசாயனங்கள் பயன்படுத்தப்பட்டதாக நாங்கள் நம்புகிறோம்.

    லைகா கோவை கிங்ஸ், மதுரை பாந்தர்ஸ் பலமுறை எச்சரித்த போதும் மைதான நடுவர்களும், போட்டி நடுவர்களும் நடவடிக்கை எடுக்க தவறியது கவலை அளிக்கிறது.

    இந்த விஷயத்தை நீங்கள் தீவிரமாக எடுத்துக் கொண்டு ஆட்டத்தின் நேர்மையை காப்பதற்கும், மதுரை அணிக்கு தரப்பட வேண்டிய புள்ளிகளை வழங்குவதற்கும் உடனடியாக நடவடிக்கை எடுப்பீர்கள் என்று நம்புகிறேன்.

    இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

    • பாபா அபராஜித் தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி தான் மோதிய 3 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றது.
    • அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் அணி 3 ஆட்டங்களில் விளையாடி 2-ல் வெற்றி பெற்றது.

    சேலம்:

    9-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கோவையில் உள்ள எஸ்.என்.ஆர். கல்லூரி மைதானத்தில் கடந்த 5-ந் தேதி தொடங்கியது. 11-ந் தேதியுடன் அங்கு 8 போட்டிகள் முடிவடைந்தது 13-ந் தேதி முதல் வாடிப்பாடியில் உள்ள சேலம் கிரிக்கெட் பவுண்டேசன் மைதானத்தில் போட்டிகள் நடைபெற்று வருகிறது.

    நேற்றுடன் 13 ஆட்டங் கள் முடிந்துள்ளன. 4 முறை சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 6 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. சேலம் ஸ்பார்டன்ஸ் ( 6 புள்ளி) அதற்கு அடுத்த நிலையில் இருக்கிறது. திருப்பூர் தமிழன்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ் தலா 4 புள்ளிகளுடனும், மதுரை பாந்தர்ஸ் 2 புள்ளிகளுடனும் உள்ளன. திருச்சி கிராண்ட் சோழாஸ், கோவை கிங்ஸ் ஆகியவை 3 போட்டிகளிலும் தோற்று புள்ளி எதுவும் பெறவில்லை. இன்று இரவு 7.15 மணிக்கு நடைபெறும் 14-வது லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதுகின்றன.

    பாபா அபராஜித் தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி தான் மோதிய 3 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றது. திருப்பூரை 8 விக்கெட் வித்தியாசத்திலும், நெல்லையை 41 ரன்கள் வித்தியாசத்திலும், கோவையை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 4-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது.

    அந்த அணியில் கேப்டன் பாபா அபராஜித் (166 ரன்), விஜய்சங்கர் (122 ரன், 4 விக்கெட்), ஆஷிக், அபிஷேக் தன்வர் (9 விக்கெட்), ஸ்வப்னில் சிங் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.

    அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் அணி 3 ஆட்டங்களில் விளையாடி 2-ல் வெற்றி பெற்றது. கோவையை 7 விக்கெட் வித்தியாசத்திலும், மதுரையை 9 விக்கெட் வித்தியாசத்திலும் வீழ்த்தியது. திருப்பூர் அணியிடம் 9 விக்கெட்டில் தோற்றது. அந்த அணி 3-வது வெற்றிக்காக காத்திருக்கிறது. 

    • பாகிஸ்தான் அணி விளையாடும் அனைத்து போட்டிகளும் கொழும்புவில் நடத்தப்படவுள்ளன.
    • மகளிர் உலக கோப்பை இறுதிப் போட்டி பெங்களூருவில் நடைபெறுகிறது.

    இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, இலங்கை, வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் எட்டு அணிகள் பங்கேற்கிறது. இந்தப் போட்டி செப்டம்பர் 30-ந் தொடங்கி நவம்பர் 2 வரை இந்தியா மற்றும் இலங்கையில் உள்ள ஐந்து இடங்களில் நடைபெறுகிறது.

    மகளிர் ஒருநாள் உலக கோப்பை தொடரில் இந்தியா - பாகிஸ்தான் போட்டி அக்டோபர் 5ம் தேதி இலங்கையின் கொழும்பு மைதானத்தில் நடைபெறும் என்று கூறப்படுகிறது.

    இந்தியா மற்றும் இலங்கை இணைந்து நடத்தும் இத்தொடரில் பாகிஸ்தான் அணி விளையாடும் அனைத்து போட்டிகளும் கொழும்புவில் நடத்தப்படவுள்ளன.

    முதல் அரையிறுதிப் போட்டி அக்டோபர் 29-ம் தேதி குவஹாத்தி அல்லது கொழும்பில் நடைபெறும். 2-வது நாக் அவுட் ஆட்டம் மறுநாள் அக்டோபர் 30-ம் தேதி பெங்களூருவில் நடைபெறும். நவம்பர் 2 ஆம் தேதி பெங்களூருவில் இறுதிப் போட்டி நடைபெறும். ஒருவேளை பாகிஸ்தான் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றால், அது கொழும்பில் நடைபெறும்.

    இந்தியா - பாகிஸ்தான் மோதலுக்கு பிறகு பாகிஸ்தானுடன் இந்தியா கிரிக்கெட் போட்டிகள் விளையாடாது என்று பிசிசிஐ அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    • டாஸ் வென்ற அயர்லாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.
    • முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவரில் 256 ரன்கள் குவித்தது.

    டப்ளின்:

    வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடி வருகிறது. இந்த தொடரின் முதல் 2 ஆட்டங்களும் மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி டி20 போட்டி பிரெடியில் நடைபெற்றது. டாஸ் வென்ற அயர்லாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 256 ரன்கள் குவித்தது.

    தொடக்க ஆட்டக்காரர்கள் எவின் லூயிஸ் மற்றும் ஷாய் ஹோப் ஜோடி அதிரடியாக விளையாடியது.

    முதல் விக்கெட்டுக்கு 122 ரன் சேர்த்த நிலையில் ஷாய் ஹோப் 51 ரன்னில் ஆட்டமிழந்தார். சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட எவின் லூயிஸ் 91 ரன்னில் (44 பந்துகள்) ஆட்டமிழந்தார். கடைசி கட்டத்தில் கீசி கார்டி 22 பந்தில் 49 ரன்கள் குவித்தார்.

    அயர்லாந்து சார்பில் மேத்யூ ஹம்ப்ரிஸ் 2 விக்கெட் வீழ்த்தினார்.

    இதையடுத்து, 257 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி அயர்லாந்து களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ரோஸ் அடைர் 48 ரன்னும், ஹாரி டெக்டர் 38 ரன்னும், மார்க் அடைர் 31 ரன்னும் எடுத்தனர். மற்றவர்கள் நிலைத்து நின்று ஆடவில்லை.

    இறுதியில், அயர்லாந்து 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 194 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் வெஸ்ட் இண்டீஸ் 62 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதுடன், டி20 தொடரை 1-0 என கைப்பற்றியது.

    • டாஸ் வென்ற நெல்லை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
    • முதலில் ஆடிய சேலம் அணி 20 ஓவரில் 126 ரன்கள் எடுத்தது.

    சேலம்:

    டிஎன்பிஎல் தொடரின் 13-வது லீக் ஆட்டம் சேலத்தில் நடைபெற்றது. இதில் சேலம் ஸ்பார்டன்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற நெல்லை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய சேலம் ஸ்பார்டன்ஸ் அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்கள் மட்டுமே எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர் ஹரி நிஷாந்த் அரை சதம் அடித்து 50 ரன்னில் அவுட்டானார். முகமது 28 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் நிலைத்து நின்று ஆடவில்லை.

    நெல்லை சச்சின் ராதி 5 விக்கெட்டும், சோனு யாதவ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 127 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் நெல்லை அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் அஜிதேஷ் குருசாமி 3 ரன்னில் அவுட்டானார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் சந்தோஷ்குமார் அதிரடியாக ஆடி அரை சதம் கடந்து73 ரன்னில் அவுட்டானார்.

    2-வது விக்கெட்டுக்கு சந்தோஷ்குமார்-நிர்மல் குமார் ஜோடி பொறுப்புடன் ஆடி 54 ரன்கள் சேர்த்தது. நிர்மல் குமார் 37 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    இறுதியில், நெல்லை அணி 13.4 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 130 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் 8 விக்கெட் வித்தியாசத்தில் நெல்லை அணி வெற்றி பெற்றது. நெல்லை அணி பெற்ற 2-வது வெற்றி இதுவாகும்.

    • திருப்பூர் அணி தரப்பில் மோகன் பிரசாத் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
    • 165 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கியது திருப்பூர் அணி.

    8 அணிகள் இடையிலான 9-வது டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர் கோவையில் கடந்த 5-ந் தேதி தொடங்கியது. இந்த தொடரின் முதற்கட்ட லீக் ஆட்டங்கள் கோவையில் நடந்து முடிந்தன. இதனையடுத்து இந்த தொடரின் 2-வது கட்ட லீக் ஆட்டங்கள் சேலத்தில் நடந்து வருகிறது.

    இதில் இன்று தொடங்கிய முதல் ஆட்டத்தில் திருச்சி கிராண்ட் சோழாஸ்- ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றனர். இதில் டாஸ் வென்ற திருப்பூர் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி திருச்சி அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியில் சுஜய் மற்றும் சஞ்சய் யாதவ் ஆகியோரின் ஆட்டத்தால் அந்த அணி 20 ஓவர் முடிவில் 164 ரன்கள் எடுத்தது.

    அதிகபட்சமாக சஞ்சய் யாதவ் 60 ரன்கள் குவித்தார். திருப்பூர் அணி தரப்பில் மோகன் பிரசாத் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    இதனையடுத்து 165 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கியது திருப்பூர் அணி.

    தொடக்க ஆட்டக்காரரான இறங்கிய அமித் சாத்விக் 5 ரன்களிலும், டேரில் பெராரியோ ஒரு ரன்னிலும் அவுட்டாகினர்.

    இருப்பினும் மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ஆன துஷார் ரஹேஜா அதிரடியாக விளையாடி அணிக்கு ரன்களை குவித்தார்.

    வெறும், 36 பந்துகளில் 80 ரன்கள் குவித்த நிலையில் துஷார் ரஹேஜா ஆட்டமிழந்தார்.

    இறுதியாக, பிரதோஷ் ரஞ்சன் பால் 42 ரன்களும், முகமது அலி 25 ரன்களும் அடித்து அணிக்கு வெற்றியை உறுதி செய்தனர்.

    இதில், 18.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு, 165 ரன்கள் அடித்து திருப்பூர் அணி வெற்றி பெற்றது.

    • முதல் ஆட்டத்தில் திருச்சி கிராண்ட் சோழாஸ் அணியை ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணி வீழ்த்தியது.
    • இரவு 7:15 மணிக்கு இரண்டாவது ஆட்டம் தொடங்கியது.

    9-வது டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடர் கோவையில் ஜூன் 5 ஆம் தேதி தொடங்கியது.

    கோவையில் முதற்கட்ட லீக் ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில், தற்போது சேலத்தில் இரண்டாம் கட்ட லீக் ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

    இன்று (ஜூன் 15) இரண்டு லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. முதல் ஆட்டத்தில் திருச்சி கிராண்ட் சோழாஸ் அணியை ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணி வீழ்த்தியது.

    இதையடுத்து, இன்று இரவு 7:15 மணிக்குத் தொடங்கிய இரண்டாவது ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் அணியும், சேலம் ஸ்பார்டன்ஸ் அணியும் மோதுகின்றன.

     ஆட்டத்தின் தொடக்கத்தில் டாஸ் வென்ற நெல்லை ராயல் கிங்ஸ் அணி டாஸ் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதனால் சேலம் ஸ்பார்டன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்யவுள்ளது.  

    • கிரீன் இறுதிப் போட்டியில் சரியாக விளையாடவில்லை.
    • நம்பர் 3-வது வீரர்களுக்கான இடத்திற்கு அவர் சரியாக வரமாட்டார் என்று நினைக்கின்றேன்.

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா அணி கோப்பையை கைப்பற்றியது.

    இந்நிலையில் கோப்பையை இழந்த ஆஸ்திரேலிய அணி குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் மிட்செல் ஜான்சன் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    ஆஸ்திரேலிய அணியின் பலமே நான்கு வீரர்கள் அடங்கிய பந்துவீச்சு தான். ஸ்டார்க், பேட் கம்மின்ஸ் மற்றும் லயன் ஆகியோர் தங்களுக்கு கிடைக்கும் வாய்ப்பை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது.

    இனி எதிர்காலத்தை ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் யோசிக்க வேண்டும். கடந்த சில காலமாக கம்மின்ஸ் உடல் தகுதி பிரச்சனையில் அவதிப்பட்டு வருகின்றார். அது மட்டுமில்லாமல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியை விட்டுவிட்டு ஐபிஎல் தொடரில் பங்கேற்க அவர் சென்றது பல கேள்விகளை எழுப்பி இருக்கிறது.

    இதே போல் போட்டியின் மூன்றாவது நாளில் லயனும் பெரிய அளவில் பந்துவீச்சில் சாதிக்கவில்லை. இந்த நான்கு வீரர்களும் ஆசஸ் தொடர் விளையாடிவிட்டு பின் ஓய்வு பெறுவது என்பது சரியான அணுகுமுறை தானா? இனி நம் எதிர்காலத்தை நோக்கி அணியை கட்டமைக்க வேண்டும். ஸ்டார்க், ஜோஸ் இங்கிலீஷ், ஸ்காட் போலன்ட் வீரர்கள் வாய்ப்புக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

    இதேபோன்று கிரீன் இறுதிப் போட்டியில் சரியாக விளையாடவில்லை. மொத்தமாகவே 5 பந்துகளை தான் அவர் எதிர்கொண்டு இருக்கிறார். எனவே நம்பர் 3-வது வீரர்களுக்கான இடத்திற்கு அவர் சரியாக வரமாட்டார் என்று நினைக்கின்றேன்.

    இதேபோன்று ஆஸ்திரேலியா டெஸ்ட் அணியின் சரிவுக்கு காரணம் மார்னஸ் சரியாக விளையாடாமல் இருப்பது தான். இதே போன்று ஸ்மித் பேட்டிங் வரிசையில் மாறிக்கொண்டே இருந்து வருகிறார். அவரும் சில போட்டிகளில் தடுமாறி வருகிறார்.

    என்று மிட்செல் ஜான்சன் கூறினார்.

    • அதிகபட்சமாக சஞ்சய் யாதவ் 60 ரன்கள் குவித்தார்.
    • திருப்பூர் அணி தரப்பில் மோகன் பிரசாத் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    சேலம்:

    8 அணிகள் இடையிலான 9-வது டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர் கோவையில் கடந்த 5-ந் தேதி தொடங்கியது. இந்த தொடரின் முதற்கட்ட லீக் ஆட்டங்கள் கோவையில் நடந்து முடிந்தன. இதனையடுத்து இந்த தொடரின் 2-வது கட்ட லீக் ஆட்டங்கள் சேலத்தில் நடந்து வருகிறது.

    இதில் இன்று தொடங்கிய முதல் ஆட்டத்தில் திருச்சி கிராண்ட் சோழாஸ் - ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றனர். இதில் டாஸ் வென்ற திருப்பூர் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி திருச்சி அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியில் சுஜய் மற்றும் சஞ்சய் யாதவ் ஆகியோரின் ஆட்டத்தால் அந்த அணி 20 ஓவர் முடிவில் 164 ரன்கள் எடுத்தது.

    அதிகபட்சமாக சஞ்சய் யாதவ் 60 ரன்கள் குவித்தார். திருப்பூர் அணி தரப்பில் மோகன் பிரசாத் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    • அவர் தனது அணியில் எந்தவொரு நியூசிலாந்து வீரருக்கும் வாய்ப்பு வழங்கவில்லை.
    • கேப்டனாக ரிக்கி பாண்டிங்கை தேர்வு செய்துள்ளார்.

    சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களை உள்ளடக்கி 21ஆம் நூற்றாண்டின் ஆல் டைம் சிறந்த டெஸ்ட் லெவனை நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் கேன் வில்லியம்சன் தேர்ந்தெடுத்துள்ளார்.

    அவர் தனது அணியில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 4 வீரர்கள், இந்தியாவைச் சேர்ந்த 3 வீரர்கள், தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த 2 பேர், இலங்கை மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த தலா 1 வீரரை இந்த அணியில் சேர்த்துள்ளார். அதேசமயம் அவர் தனது அணியில் எந்தவொரு நியூசிலாந்து வீரருக்கும் வாய்ப்பு வழங்கவில்லை.

    அவரது அணியின் தொடக்க வீரர்களாக இந்தியாவின் சேவாக் மற்றும் அஸ்திரேலியாவின் மேத்யூ ஹைடனை தேர்தெடுத்துள்ளார்.

    மூன்றாம் வரிசையில் ரிக்கி பாண்டிங்கை தேர்வு செய்ததுடன் இந்த அணியின் கேப்டனாகவும் நியமித்துள்ளார்.

    4-ம் வரிசையில் சச்சின் டெண்டுகரையும், 5-ம் வரைசயில் ஸ்டீவ் ஸ்மித், 6-ம் இடத்தில் ஏபிடி வில்லியர்ஸ் ஆகியோரைத் தேர்வுசெய்துள்ளார். விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக தோனியை தேர்வு செய்துள்ளார்.

    வேகப்பந்து வீச்சாளராக டேல் ஸ்டெய்ன், கிளென் மெக்ராத், ஷோயப் அக்தர் ஆகியோரையும், சுழற்பந்து வீச்சாளராக முத்தையா முரளிதரனையும் சேர்த்துள்ளார்.

    கேன் வில்லியம்சன் தேர்வு செய்த சிறந்த டெஸ்ட் லெவன்:

    மேத்யூ ஹைடன், வீரேந்தர் சேவாக், ரிக்கி பாண்டிங் (கேப்டன்), சச்சின் டெண்டுல்கர், ஸ்டீவ் ஸ்மித், ஏபி டிவில்லியர்ஸ், எம்எஸ் தோனி (விக்கெட் கீப்பர்), டேல் ஸ்டெயின், ஷோயப் அக்தர், க்ளென் மெக்ராத், முத்தையா முரளிதரன்.

    ×