என் மலர்
கிரிக்கெட் (Cricket)

ரன்களை குவித்த துஷார் ரஹேஜா- திருப்பூர் அணி அபார வெற்றி
- திருப்பூர் அணி தரப்பில் மோகன் பிரசாத் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
- 165 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கியது திருப்பூர் அணி.
8 அணிகள் இடையிலான 9-வது டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர் கோவையில் கடந்த 5-ந் தேதி தொடங்கியது. இந்த தொடரின் முதற்கட்ட லீக் ஆட்டங்கள் கோவையில் நடந்து முடிந்தன. இதனையடுத்து இந்த தொடரின் 2-வது கட்ட லீக் ஆட்டங்கள் சேலத்தில் நடந்து வருகிறது.
இதில் இன்று தொடங்கிய முதல் ஆட்டத்தில் திருச்சி கிராண்ட் சோழாஸ்- ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றனர். இதில் டாஸ் வென்ற திருப்பூர் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி திருச்சி அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியில் சுஜய் மற்றும் சஞ்சய் யாதவ் ஆகியோரின் ஆட்டத்தால் அந்த அணி 20 ஓவர் முடிவில் 164 ரன்கள் எடுத்தது.
அதிகபட்சமாக சஞ்சய் யாதவ் 60 ரன்கள் குவித்தார். திருப்பூர் அணி தரப்பில் மோகன் பிரசாத் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதனையடுத்து 165 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கியது திருப்பூர் அணி.
தொடக்க ஆட்டக்காரரான இறங்கிய அமித் சாத்விக் 5 ரன்களிலும், டேரில் பெராரியோ ஒரு ரன்னிலும் அவுட்டாகினர்.
இருப்பினும் மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ஆன துஷார் ரஹேஜா அதிரடியாக விளையாடி அணிக்கு ரன்களை குவித்தார்.
வெறும், 36 பந்துகளில் 80 ரன்கள் குவித்த நிலையில் துஷார் ரஹேஜா ஆட்டமிழந்தார்.
இறுதியாக, பிரதோஷ் ரஞ்சன் பால் 42 ரன்களும், முகமது அலி 25 ரன்களும் அடித்து அணிக்கு வெற்றியை உறுதி செய்தனர்.
இதில், 18.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு, 165 ரன்கள் அடித்து திருப்பூர் அணி வெற்றி பெற்றது.