என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    • டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட்டில் இருந்து கோலி ஓய்வு பெற்றுவிட்டார்.
    • தற்போது ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டும் தான் கோலி விளையாடி வருகிறார்.

    சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்தது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஏற்கனவே டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்ட கோலி தற்போது ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டும் தான் விளையாடி வருகிறார்.

    இந்நிலையில், கோலியின் பேட்டிங்கை தாலிபன்கள் கூட ரசித்து பார்ப்பதாக ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய எமிரேட் மற்றும் தாலிபான் இயக்கத்தின் தலைவரான அனஸ் ஹக்கானி தெரிவித்தார்.

    கோலி குறித்து பேசிய ஹக்கானி, "விராட் கோலி தனது 50 வயதாகும் வரை விளையாட வேண்டும். அவருடைய பேட்டிங்கை தாலிபான்கள் கூட ரசித்து பார்க்கின்றனர். டெஸ்டில் இருந்து சீக்கிரம் ஓய்வு பெற்றுவிட்டார்" என்று தெரிவித்தார்.

    • இன்று துபாயில் நடக்கும் 6-வது லீக் ஆட்டத்தில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
    • பாகிஸ்தானுடன் இந்தியா கிரிக்கெட் விளையாடுவதற்கு இந்தியாவில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது

    17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது.

    போட்டியின் 6-வது நாளான இன்று துபாயில் நடக்கும் 6-வது லீக் ஆட்டத்தில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

    பாகிஸ்தானுக்கு எதிராக கடைசியாக மோதிய 16 சர்வதேச போட்டிகளை (வெள்ளை நிற பந்து) எடுத்துக் கொண்டால், அதில் இந்தியாவின் ஆதிக்கமே மேலோங்கி நிற்கிறது. இதில் 13-ல் இந்தியாவும், 3-ல் பாகிஸ்தானும் வென்றுள்ளன.

    பஹல்காம் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் உறவில் விரிசல் விழுந்தது. இதனால் பாகிஸ்தானுடன் இந்தியா கிரிக்கெட் விளையாடுவதற்கு இந்தியாவில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

    பாகிஸ்தான் உடனான போட்டியை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என்று இணையத்தில் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், இணையத்தில் பரவும் செய்திகள் இந்திய வீரர்களை கலக்கமடைய செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இதனால்இந்த சூழ்நிலையை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து ட்ரெஸ்ஸிங் ரூமில் வீரர்களிடையே தலைமை பயிற்சியாளர் கம்பீரிடம் வீரர்கள் ஆலோசனை கேட்டதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் வெளியில் நடக்கும் விஷயங்களுக்கு கவனம் கொடுக்காமல் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் மட்டுமே வீரர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்று காம்பீர் கூறியதாக அணியின் பீல்டிங் பயிற்சியாளர் ரியான் டென் டொஸ்சாட் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    இந்திய அணி பாகிஸ்தானுக்கு எதிராக விளையாட வேண்டுமா அல்லது புறக்கணிக்க வேண்டுமா என்பது மிகவும் கவனமாக கையாளப்பட வேண்டிய விஷயம். மக்களின் உணர்வுகளை வீரர்கள் அறிவார்கள். இது தொடர்பாக அணி நிர்வாகத்தின் ஆலோசனைக் கூட்டங்களில் பேசினோம். வீரர்கள் கிரிக்கெட் விளையாடுவதற்காக இங்கு வந்துள்ளனர். நாங்கள் அரசாங்கத்தின் வழிகாட்டுதல்களை பின்பற்றுகிறோம்.

    அரசியல் வேறு விளை யாட்டு வேறு. இந்த விஷயத்தில் மற்றவர்களின் உணர்வுகளை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் நாங்கள் பி.சி.சி.ஐ. மற்றும் அரசாங்கத்தின் வழிகாட்டுதல்களையே பின்பற்றுகிறோம். காம்பீர் வீரர்களுக்கு கொடுத்த அறிவுரை இது தான். உங்களது கட்டுப்பாட்டில் இல்லாத விஷயங்களில் கவனம் செலுத்தாதீர்கள். கிரிக்கெட்டில் மட்டும் கவனம் செலுத்துங்கள்.

    இவ்வாறு டென் டொஸ்சாட் கூறினார்.

    • இந்தியா - பாகிஸ்தான் உறவில் விரிசல் விழுந்தது.
    • பாகிஸ்தானுடன் இந்தியா கிரிக்கெட் விளையாடுவதற்கு இந்தியாவில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

    17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது.

    போட்டியின் 6-வது நாளான இன்று துபாயில் நடக்கும் 6-வது லீக் ஆட்டத்தில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

    பாகிஸ்தானுக்கு எதிராக கடைசியாக மோதிய 16 சர்வதேச போட்டிகளை (வெள்ளை நிற பந்து) எடுத்துக் கொண்டால், அதில் இந்தியாவின் ஆதிக்கமே மேலோங்கி நிற்கிறது. இதில் 13-ல் இந்தியாவும், 3-ல் பாகிஸ்தானும் வென்றுள்ளன.

    பஹல்காம் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் உறவில் விரிசல் விழுந்தது. இதனால் பாகிஸ்தானுடன் இந்தியா கிரிக்கெட் விளையாடுவதற்கு இந்தியாவில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

    இந்நிலையில், பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா வெற்றி பெறவேண்டி உத்தரபிரதேச மாநிலத்தில் ரசிகர்கள் சிறப்பு பூஜை செய்தனர்.

    • இவ்விரு அணிகளும் 20 ஓவர் கிரிக்கெட்டில் இதுவரை 13 முறை நேருக்கு நேர் சந்தித்து இருக்கின்றன.
    • 10-ல் இந்தியாவும், 3-ல் பாகிஸ்தானும் வென்று இருக்கின்றன.

    17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஓமன், ஐக்கிய அரபு அமீரகம் அணிகளும், 'பி' பிரிவில் ஆப்கானிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், ஹாங்காங் அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்4 சுற்றுக்கு தகுதி பெறும்.

    போட்டியின் 6-வது நாளான இன்று துபாயில் நடக்கும் 6-வது லீக் ஆட்டத்தில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

    இந்திய அணி தனது தொடக்க லீக் ஆட்டத்தில் 9 விக்கெட் வித்தியாசத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தை பந்தாடியது. ஒருதலைபட்சமாக அமைந்த அந்த ஆட்டத்தில் 57 ரன்னில் அமீரகத்தை சுருட்டிய இந்திய அணி இலக்கை வெறும் 4.3 ஓவர்களில் எட்டிப்பிடித்து அசத்தியது. 20 ஓவர் போட்டியில் இந்திய அணியின் அதிவேக சேசிங் இதுவாகும். பந்து வீச்சில் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டும், வேகப்பந்து வீசும் ஆல்-ரவுண்டர் ஷிவம் துபே 3 விக்கெட்டும் வீழ்த்தி மிரட்டினர்.

    அட்டகாசமான வெற்றியுடன் போட்டியை தொடங்கி இருக்கும் இந்திய அணி அந்த உத்வேகத்தை தொடரும் முனைப்புடன் உள்ளது. இந்திய அணி பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் வலுவாக திகழ்கிறது. பேட்டிங்கில் 'நம்பர் ஒன்' வீரர் அபிஷேக் ஷர்மா, சுப்மன் கில், கேப்டன் சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, சஞ்சு சாம்சன் என்று பெரிய பட்டாளமே அணிவகுத்து நிற்கிறது. ஆல்-ரவுண்டர்களாக ஷிவம் துபே, ஹர்திக் பாண்ட்யா, அக்ஷர் பட்டேல் அசத்தக்கூடியவர்கள். பந்து வீச்சில் பும்ரா, குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி வலுசேர்க்கிறார்கள்.

    சல்மான் ஆஹா தலைமையிலான பாகிஸ்தான் அணி தனது முதல் ஆட்டத்தில் ஓமனை 93 ரன் வித்தியாசத்தில் புரட்டியெடுத்த கையோடு களம் இறங்குகிறது. அந்த அணியில் பேட்டிங்கில் கேப்டன் சல்மான் ஆஹா, விக்கெட் கீப்பர் முகமது ஹாரிஸ், பஹர் ஜமான், பந்து வீச்சில் ஷகீன் ஷா அப்ரிடி, அப்ரார் அகமது, பஹீம் அஷ்ரப் நல்ல நிலையில் உள்ளனர். ஆல்-ரவுண்டர்களாக முகமது நவாஸ், சைம் அயூப் ஜொலிக்கிறார்கள்.

    கடந்த ஏப்ரல் மாதம் பஹல்காமில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதல், அதைத்தொடர்ந்து ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் மூலம் இந்திய ராணுவம் கொடுத்த பதிலடி காரணமாக இரு நாட்டு உறவில் மேலும் விரிசல் ஏற்பட்டு இருக்கிறது. அதன் பிறகு இரு அணிகளும் சந்திப்பது இதுவே முதல்முறையாகும். இத்தகைய உணர்வுபூர்வமான சூழலில் பரம எதிரிகளான இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மல்லுகட்டுவது கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமின்றி எல்லா தரப்பினர் மத்தியிலும் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. எனவே களத்தில் அனல் பறக்கும் என்று நம்பலாம்.

    இவ்விரு அணிகளும் 20 ஓவர் கிரிக்கெட்டில் இதுவரை 13 முறை நேருக்கு நேர் சந்தித்து இருக்கின்றன. இதில் 10-ல் இந்தியாவும், 3-ல் பாகிஸ்தானும் வென்று இருக்கின்றன. 20 ஓவர் போட்டியை பொறுத்தமட்டில் இரு அணிகளும் கடைசியாக கடந்த ஆண்டு ஜூன் மாதம் 20 ஓவர் உலகக் கோப்பையின் லீக் ஆட்டத்தில் நியூயார்க்கில் சந்தித்தன. அதில் இந்திய அணி 6 ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது. இதே போல் ஒரு நாள் கிரிக்கெட்டில் கடைசியாக பிப்ரவரி மாதம் துபாயில் நடந்த ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பையின் லீக் ஆட்டத்தில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை தெறிக்க விட்டது.

    அதுமட்டுமின்றி பாகிஸ்தானுக்கு எதிராக கடைசியாக மோதிய 16 சர்வதேச போட்டிகளை (வெள்ளை நிற பந்து) எடுத்துக் கொண்டால், அதில் இந்தியாவின் ஆதிக்கமே மேலோங்கி நிற்கிறது. இதில் 13-ல் இந்தியாவும், 3-ல் பாகிஸ்தானும் வென்றுள்ளன.

    கடந்த கால வரலாறுகள் எப்படி இருந்தாலும் 20 ஓவர் கிரிக்கெட்டை பொறுத்தமட்டில் குறிப்பிட்ட நாளில் நெருக்கடியை திறம்பட கையாளும் அணியின் கையே ஓங்கும். ஆடுகளம் மெதுவான தன்மை கொண்டதால் சுழலின் தாக்கம் சற்று அதிகமாக இருக்கும்.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    இந்தியா: அபிஷேக் ஷர்மா, சுப்மன் கில், சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), திலக் வர்மா, சஞ்சு சாம்சன், ஷிவம் துபே, ஹர்திக் பாண்ட்யா, அக்ஷர் பட்டேல், குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா.

    பாகிஸ்தான்: சகிப்சதா பர்ஹான், சைம் அயூப், முகமது ஹாரிஸ், பஹர் ஜமான், சல்மான் ஆஹா (கேப்டன்), ஹசன் நவாஸ், முகமது நவாஸ், பஹீம் அஷ்ரப், ஷகீன் ஷா அப்ரிடி, சுபியான் முகீம், அப்ரார் அகமது.

    இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை சோனி ஸ்போர்ட்ஸ் 1, 4, 5 சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

    • முதலில் ஆடிய ஹாம்ப்ஷையர் அணி 194 ரன்கள் குவித்தது.
    • அடுத்து ஆடிய சாமர்செட் அணி 19 ஓவரில் வெற்றி பெற்றது.

    லண்டன்:

    இங்கிலாந்தில் நடத்தப்படும் டி20 லீக் தொடரில் டி20 பிளாஸ்ட் தொடரும் ஒன்று.

    இந்நிலையில், டி20 பிளாஸ்ட் தொடரின் இறுதிப்போட்டி நடைபெற்றது. இதில் சாமர்செட் மற்றும் ஹாம்ப்ஷையர் அணிகள் மோதின. டாஸ் வென்ற சாமர்செட் அணி பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய ஹாம்ப்ஷையர் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 194 ரன்கள் குவித்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டகாரர் டோபி ஆல்பர்ட் அரை சதமடித்து 85 ரன்கள் எடுத்தார். கேப்டன் ஜே.வின்ஸ் 52 ரன்கள் எடுத்தார்.

    இதையடுத்து, 195 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் சாமர்செட் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் வில் ஸ்மீட் அதிரடியாக ஆடி அரை சதம் கடந்து 94 ரன் குவித்தார்.

    இறுதியில், 19 ஓவரில் சாமர்செட் அணி 4 விக்கெட்டுக்கு 195 ரன்கள் எடுத்து வென்றதுடன், கோப்பையையும் கைப்பற்றி அசத்தியது. ஆட்ட நாயகன் விருது வில் ஸ்மீடுக்கு வழங்கப்பட்டது.

    • இந்தியா, பாகிஸ்தான் ஆட்டம் இன்று நடைபெற இருக்கிறது.
    • இதில் இந்தியா வெல்லும் என்பதே பலரது கணிப்பாக உள்ளது.

    லாகூர்:

    17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் நடைபெற்று வருகிறது.

    கிரிக்கெட் ரசிகர்களை மிகுந்த எதிர்பார்ப்புக்கு உள்ளாக்கிய இந்தியா, பாகிஸ்தான் ஆட்டம் இன்று (14-ம் தேதி) நடைபெற உள்ளது.

    இந்தப் போட்டியில் பாகிஸ்தானை தோற்கடித்து இந்தியா வெல்லும் என்பதே பலரது கணிப்பாக இருக்கிறது.

    நட்சத்திர வீரர்களைக் கொண்ட இந்திய அணி இந்தப் போட்டியில் எளிதில் வெற்றி பெறும் என பாகிஸ்தானை சேர்ந்த முன்னாள் வீரர்களே கூறிவருகின்றனர். இதேபோல், இந்தப் போட்டி குறித்து பல முன்னாள் வீரர்கள் தங்களது கருத்துகளை கூறிவருகின்றனர்.

    இந்நிலையில், பாகிஸ்தான் முன்னாள் வீரரான தன்வீர் அகமது இந்தப் போட்டி குறித்து கூறுகையில், இந்த ஆசிய கோப்பை போட்டியில் பும்ரா பந்துவீச்சில் சைம் அயூப் 6 சிக்சர்கள் அடிப்பாரென நினைக்கிறேன் என தெரிவித்தார்.

    • முதலில் ஆடிய வங்கதேசம் 139 ரன்கள் எடுத்தது.
    • அடுத்து ஆடிய இலங்கை 140 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

    அபுதாபி:

    ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன.

    இன்று நடைபெற்ற 5-வது லீக் ஆட்டத்தில் 'பி' பிரிவில் இடம்பெற்றுள்ள இலங்கை, வங்கதேசம் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற இலங்கை பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் களமிறங்கிய வங்கதேசம் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 139 ரன்கள் எடுத்தது. முன்னணி வீரர்கள் விரைவில் வெளியேறினர். ஜேகர் அலி 41ரன்னும், ஷமிம் ஹொசைன் 42 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    இலங்கை அணி அணி ஹசரங்கா 2 விக்கெட் கைப்பற்றினார்.

    இதையடுத்து, 140 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. பதும் நிசங்கா அதிரடியாக ஆடி அரை சதம் கடந்து அவுட்டானார்.

    கமில் மிஷாரா 46 ரன்கள் எடுத்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.

    இறுதியில், இலங்கை அணி 14.4 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 140 ரன்கள் எடுத்து முதல் வெற்றியைப் பதிவுசெய்தது.

    • வங்க தேச அணி 53 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து திணறியது.
    • இலங்கை தரப்பில் ஹசரங்கா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    அபுதாபி:

    17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் (20 ஓவர்) ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் நடைபெற்று வருகிறது.

    இதில் அபுதாபியில் இன்று நடைபெறும் 5-வது லீக் ஆட்டத்தில் 'பி' பிரிவில் இடம்பெற்றுள்ள வங்காளதேசம் - இலங்கை அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் அசலன்கா பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

    அதன்படி வங்கதேச அணியின் தொடக்க வீரர்களாக டான்சித் ஹசன் தமீம் மற்றும் பர்வேஸ் ஹொசைன் எமோன் ஆகியோர் களமிறங்கினர். இருவரும் 0 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    அடுத்து வந்த டோஹித் ஹிரிடோய் (8) தேவையில்லாமல் ரன் அவுட் ஆனார். அதனை தொடர்ந்து மஹேதி ஹசன் 9 ரன்னில் ஆட்டமிழந்தார். ஒரு முனையில் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்திய கேப்டன் லிட்டன் தாஸ் 28 ரன்னில் ஆட்டமிழந்தார். இதனால் வங்க தேச அணி 53 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து திணறியது.

    இதனையடுத்து ஷமிம் ஹொசைன் மற்றும் ஜாக்கர் அலி ஜோடி சேர்ந்து பொறுப்புடன் விளையாடி ரன்களை உயர்த்தினர். கடைசி வரை ஆட்டமிழக்காமல் விளையாடிய ஷமிம் ஹொசைன் (42) ஜாக்கர் அலி (41) ரன்கள் எடுத்தனர்.

    இதனால் வங்கதேசம் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 139 ரன்கள் எடுத்தது. இலங்கை தரப்பில் ஹசரங்கா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    • டான்சித் ஹசன், பர்வேஸ் ஆகியோர் ரன்கள் ஏதும் எடுக்கவில்லை.
    • டோஹித் ஹிரிடோய் 8 ரன்களும் மஹேதி ஹசன் 9 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

    அபுதாபி:

    17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் (20 ஓவர்) ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் நடைபெற்று வருகிறது.

    இதில் அபுதாபியில் இன்று நடைபெறும் 5-வது லீக் ஆட்டத்தில் 'பி' பிரிவில் இடம்பெற்றுள்ள வங்காளதேசம் - இலங்கை அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் அசலன்கா பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

    அதன்படி வங்கதேச அணியின் தொடக்க வீரர்களாக டான்சித் ஹசன் தமீம் மற்றும் பர்வேஸ் ஹொசைன் எமோன் ஆகியோர் களமிறங்கினர்.

    முதல் 5 பந்துகளை டாட் செய்த டான்சித் ஹசன் (0) 6-வது பந்தில் அவுட் ஆனார். அடுத்த ஓவரில் பர்வேஸ் (0) 3 பந்துகளை டாட் செய்து 4-வது பந்தில் வெளியேறினார். அடுத்து வந்த டோஹித் ஹிரிடோய் (8) தேவையில்லாமல் ரன் அவுட் ஆனார்.

    பவர் பிளேயில் வங்கதேசம் அணி 30 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதனை தொடர்ந்து மஹேதி ஹசன் 9 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    இதனால் வங்கதேசம் அணி 38 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது.

    • வங்கதேச அணி தனது முதல் ஆட்டத்தில் ஹாங் காங்கை வீழ்த்தி இருந்தது.
    • இலங்கை அணி தொடரை வெற்றியுடன் தொடங்க கடுமையாக போராடும்.

    துபாய்:

    17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. இந்த தொடரில் இதுவரை 4 லீக் ஆட்டங்கள் முடிந்துள்ளன.

    இந்நிலையில், இந்த தொடரில் இன்று நடைபெறும் 5-வது லீக் ஆட்டத்தில் இலங்கை - வங்காளதேசம் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற இலங்கை பந்து வீச்சை தேர்வு செய்தது.

    வங்கதேச அணி தனது முதல் ஆட்டத்தில் ஹாங் காங்கை வீழ்த்தி இருந்தது. அதே வெற்றியப்பயணத்தை தொடரை வங்காளதேச அணி முயற்சிக்கும்.

    இலங்கை அணி தொடரை வெற்றியுடன் தொடங்க கடுமையாக போராடும். இதனால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. 

    • இந்தியாவின் பி அணி இந்த பாகிஸ்தான் அணியையும் தோற்கடிக்கும்.
    • 90- களில் நாங்கள் விளையாடியபோது, ​​அவர்கள் மிகச் சிறந்த அணியாக இருந்தனர்.

    17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக் ஆட்டத்தில் மோதி வருகிறது.

    இந்த தொடரில் நாளை இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளது. இந்த போட்டியை ரசிகர்கள் அனைவரும் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

    இந்நிலையில் இந்திய பி அணி, தற்போது உள்ள பாகிஸ்தான் அணியை வீழ்த்தும் அளவுக்கு திறன் கொண்டது என இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளார் அதுல் வாசன் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    இந்தியாவின் பி அணி இந்த பாகிஸ்தான் அணியையும் தோற்கடிக்கும். ஏனென்றால் நிலைமை மாறிவிட்டது. 90- களில் நாங்கள் விளையாடியபோது, அவர்கள் மிகச் சிறந்த அணியாக இருந்தனர். இப்போது அவர்களை விட நாம் மிகச் சிறந்த அணியாக இருக்கிறோம்.

    இவ்வாறு அதுல் வாசன் கூறினார்.

    • எங்களது பேட்டிங்கில் இன்னும் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.
    • நாங்கள் எங்களுடைய திட்டங்களை வெளிப்படுத்த முடியும் என்றால் வெற்றி நிச்சயம்.

    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் முதல் போட்டியில் ஓமன் அணியை 93 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இது பாகிஸ்தானுக்கு நம்பிக்கையை கொடுத்துள்ளது.

    பாகிஸ்தான் நாளை இந்தியாவை எதிர்கொள்கிறது. இந்தியாவை எதிர்கொள்வது தொடர்பாக பாகிஸ்தான் கேப்டன் சல்மான் ஆகா கூறியதாவது:-

    நாங்கள் கடந்த இரண்டு மூன்று மாதங்களாக நல்ல கிரிக்கெட் விளையாடியுள்ளோம். நாங்கள் நல்ல கிரிக்கெட் விளையாட வேண்டும். நாங்கள் எங்களுடைய திட்டங்களை நீண்ட காலத்திற்கு வெளிப்படுத்த முடியும் என்றால், எந்தவொரு அணியையும் வீழ்த்த முடியும் திறமை எங்களிடம் உள்ளது.

    எங்களது பேட்டிங்கில் இன்னும் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. பந்து வீச்சு சிறப்பாக உள்ளது. குறிப்பாக சுழற்பந்து வீச்சாளர்கள் ஓமனுக்கு எதிராக சிறப்பாக பந்து வீசினார்கள்.

    நாங்கள் மூன்று சுழற்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். மூன்று பேரும் மாறுபட்ட ஸ்பின்னர்கள். நாங்கள் சைம் என்பவரையும் கொணடுள்ளோம். இவர் புதிய மற்றும் பழைய பந்தில் சிறப்பாக பந்து வீசிக் கொண்டிருக்கிறார். ஐக்கிய அரபு அமீரகம் என வரும்போது, ஏராளமான ஸ்பின்னர்கள் தேவை.

    இவ்வாறு சல்மான் ஆகா தெரிவித்தார்.

    ×