என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • வாழ்க்கையில் இலக்கை நோக்கிப் பயணிக்க வேண்டும்.
    • இளைஞர்கள், வெற்றியோ தோல்வியோ ஒவ்வொரு படியையும் இலக்கை நோக்கிச் செல்லும் படியாகக் கருத வேண்டும்.

    நடப்பு ஆண்டுக்கான ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 22-ம் தேதி ஆரம்பமாகிறது. முதல் போட்டியில் சென்னை-பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன. சென்னையில் நடைபெறும் இந்த போட்டியானது இரவு 8 மணிக்கு நடைபெற உள்ளது.

    இந்நிலையில் என் வாழ்க்கையில் மறக்க முடியாத தருணம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு விளையாடியதுதான் என VIT பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விழாவில் இந்திய கிரிக்கெட் வீரர் சிவம் துபே கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    வாழ்க்கையில் இலக்கை நோக்கிப் பயணிக்க வேண்டும். தாய் தந்தையரை மதிக்க வேண்டும். என் வாழ்க்கையில் மறக்க முடியாத தருணம் சென்னை சூப்பர் கிங்க்ஸ்-க்கு விளையாடியதுதான். இளைஞர்கள், வெற்றியோ தோல்வியோ ஒவ்வொரு படியையும் இலக்கை நோக்கிச் செல்லும் படியாகக் கருத வேண்டும்.

    இவ்வாறு துபே கூறினார்.

    இதுவரை 51 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி சிவம் துபே, 1106 ரன்கள் எடுத்துள்ளார். ஒரு போட்டியில் அதிக பட்சமாக 95 ரன்கள் எடுத்துள்ளார். 2019 முதல் ஐபிஎல் தொடரில் இடம் பிடித்த இவர், பெரிதாக சோபிக்கவில்லை.

    2019 முதல் 2021 வரை 3 ஆண்டுகள் விளையாடிய அவர் 24 போட்டிகள் மட்டுமே விளையாடி உள்ளார். 2022, 2023-ம் ஆண்டில் சென்னை அணியில் இடம் பிடித்த இவர் 27 போட்டிகளில் விளையாடியுள்ளார். மற்ற அணிகள் இவரை பெரிதும் கண்டுகொள்ளாத நிலையில் சென்னை அணியின் கேப்டன் டோனி இவருக்கு அதிக வாய்ப்புகளை கொடுத்தார்.

    அந்த வாய்ப்புகளை அவர் சிறப்பாக பயன்படுத்தி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மேலும் இவரது அதிரடி ஆட்டத்தால் இந்திய அணியில் இடம் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

    • துபாய் சாம்பியன்ஷிப் தொடர் துபாயில் நடைபெற்று வருகிறது.
    • இதில் நேற்று நடந்த போட்டியில் இங்கிலாந்தின் ஆண்டி முர்ரே தோல்வி அடைந்தார்.

    துபாய்:

    துபாய் சாம்பியன்ஷிப் தொடர் துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இங்கிலாந்தின் ஆண்டி முர்ரே, பிரெஞ்சு வீரர் யூகோ ஹம்பர்ட்டுடன் மோதினார்.

    இதில் ஹம்பர்ட் 6-2, 6-4 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார். இதன்மூலம் ஆண்டி முர்ரே தொடரில் இருந்து வெளியேறினார்.

    • லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி, தனது கேப்டன் மற்றும் துணை கேப்டன் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளது.
    • 2024 ஐ.பி.எல். தொடரில் லக்னோ அணியின் கேப்டனாக கே.எல்.ராகுல் தொடர்வார்.

    லக்னோ:

    இந்தியாவில் கடந்த 2008-ம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரானது இதுவரை 16 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. இதன் 17-வது சீசன் இந்த ஆண்டு நடைபெற உள்ளது. இந்த தொடரில் 10 அணிகள் கலந்து கொள்ள உள்ளன.

    நடப்பு ஆண்டுக்கான ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 22-ம் தேதி ஆரம்பமாகிறது. முதல் போட்டியில் சென்னை-பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன. சென்னையில் நடைபெறும் இந்த போட்டியானது இரவு 8 மணிக்கு நடைபெற உள்ளது.

    இந்நிலையில் ஐ.பி.எல். அணிகளில் ஒன்றான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி, தனது கேப்டன் மற்றும் துணை கேப்டன் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி 2024 ஐ.பி.எல். தொடரில் லக்னோ அணியின் கேப்டனாக கே.எல்.ராகுல் தொடர்வார். அவர் லக்னோ அணி ஆரம்பிக்கப்பட்ட சீசனிலிருந்தே அதன் கேப்டனாக செயல்படுகிறார்.

    கடந்த வருட ஐபிஎல் தொடரில் காயம் காரணமாக கேஎல் ராகுல் விலகிய நிலையில் துணை கேப்டனான குர்ணால் பாண்ட்யா அணியை வழிநடத்தினார். அவர் 6 போட்டிகளில் கேப்டனாக பணியாற்றினார். இந்நிலையில் இந்த ஆண்டில் லக்னோ அணியின் துணை கேப்டனாக வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர் நிக்கோலஸ் பூரனும் செயல்படுவார்கள் என அணி நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

    • இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதும் கடைசி டெஸ்ட் போட்டி மார்ச் 7-ந் தேதி தொடங்குகிறது.
    • இந்திய அணி 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி உள்ளது.

    இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் 4 போட்டிகள் முடிவடைந்த நிலையில் 3-1 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை கைப்பற்றி உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி மார்ச் 7-ம் தேதி தர்மசாலாவில் தொடங்குகிறது.

    இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் காயம் காரணமாக கேஎல் ராகுல் விலகியுள்ளார். 4-வது டெஸ்ட்டில் விளையாடத பும்ரா அணிக்கு திரும்பியுள்ளார்.

    வாஷிங்டன் சுந்தர் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். மார்ச் 2-ம் தேதி தொடங்கும் மும்பைக்கு எதிரான ரஞ்சி கோப்பை அரையிறுதிப் போட்டிக்காக அவர் தமிழ்நாடு அணியில் இணைவார். தேவைப்பட்டால் ஐந்தாவது டெஸ்டுக்கான உள்நாட்டுப் போட்டி முடிந்த பிறகு அவர் இந்திய அணியில் இணைவார்.

    5-வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி:

    ரோகித் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில், ரஜத் படிதார், சர்பராஸ் கான், துருவ் ஜூரல், கேஎஸ் பாரத், தேவ்தத் படிக்கல், அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், முகமது. சிராஜ், முகேஷ் குமார், ஆகாஷ் தீப்.

    • ஸ்மித் 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.மார்னஸ் லபுசேன் 1 ரன்னில் ஏமாற்றம் அடைந்தார்.
    • மிட்செல் மார்ஷ் 40 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார்.

    நியூசிலாந்து- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வெலிங்கடனில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் டிம் சவுத்தி பந்து வீச்சை தேர்வு செய்தார்.

    அதன்படி ஸ்டீவ் ஸ்மித், உஸ்மான் கவாஜா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் இணைந்து 61 ரன்கள் சேர்த்த நிலையில் ஸ்மித் 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த மார்னஸ் லபுசேன் 1 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அடைந்தார்.

    3-வது விக்கெட்டுக்கு கவாஜா உடன் கேமரூன் கிரீன் ஜோடி சேர்ந்தார். கிரீன் களம் இறங்கியதும் கவாஜா 33 ரன்கள் எடுத்த நிலையில் க்ளீன் போல்டாகி வெளியேறினார். அடுத்து வந்த டிராவிஸ் ஹெட் ஒரு ரன்னில் வெளியேற ஆஸ்திரேலியா 89 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்தது திணறியது.

    ஐந்தாவது விக்கெட்டுக்கு கேமரூன் க்ரீன் உடன் மிட்செல் மார்ஷ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி தாக்குப்பிடித்து விளையாடியது. மிட்செல் மார்ஷ் 40 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அப்போது ஆஸ்திரேலியா 5 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் எடுத்திருந்தது.

    அதன்பின் ஒருபுறம் சீரான இடைவெளியில் ஆஸ்திரேலியா விக்கெட்டுகளை இழக்க, மறுபக்கம் கேமரூன் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். இவரது சதத்தால் நியூசிலாந்து அணி முதல் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலியாவை ஆல்அவுட் செய்ய முடியவில்லை.

    ஹென்றி

    ஆஸ்திரேலியா முதல் நாள் ஆட்ட முடிவில் 85 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 279 ரன்கள் சேர்த்துள்ளது. கேமரூன் க்ரீன் 103 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார். ஹேசில்வுட் ரன்ஏதும் எடுக்காமல் களத்தில் உள்ளார்.

    அலேக்ஸ் கேரி 10 ரன்னிலும், மிட்செல் ஸ்டார்க் 9 ரன்னிலும், பேட் கம்மின்ஸ் 5 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

    நியூசிலாந்து அணி சார்பில் மேட் ஹென்றி 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். வில்லியம் ஓ'ரூர்கே, ஸ்காட் குக்கெலின் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். ரச்சின் ரவிந்திரா ஒரு விக்கெட் வீழ்த்தினார்.

    • முதல் டெஸ்ட் போட்டிக்குப்பின் கே.எல். ராகுல் விளையாடவில்லை.
    • பும்ராவுக்கு 4-வது டெஸ்டில் ஓய்வு அளிக்கப்பட்டது.

    இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவர் கே.எல்.ராகுல். இங்கிலாந்துக்கு எதிராக ஐதராபாத்தில் நடந்த முதல் டெஸ்டின் முதல் இன்னிங்சில் அவர்தான் அதிகபட்சமாக 86 ரன் எடுத்தார். ஆனால் அந்த டெஸ்டில் இந்தியா தோற்றது.

    அதைத்தொடர்ந்து நடைபெற்ற 2-வது, 3-வது மற்றும் 4-வது டெஸ்ட் போட்டிகளில் ராகுல் விளையாடவில்லை. தொடைப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் விலகினார்.

    இந்த நிலையில் மார்ச் 7-ந்தேதி தரம்சாலாவில் தொடங்கும் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியிலும் ராகுல் விளையாடமாட்டார். காயம் முழுமையாக குணம் அடையாததால் இது தொடர்பாக டாக்டர்களின் ஆலோசனையை பெறுவதற்காக அவர் லண்டன் சென்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    ஐ.பி.எல். மற்றும் 20 ஓவர் உலகக்கோப்பை போட்டிக்கு முன்பு முழு உடல் தகுதி பெற்றுவிட வேண்டும் என்பதில் ராகுல் தீவிரமாக உள்ளார். இதன் காரணமாக அவர் இங்கிலாந்து சென்றுள்ளார்.

    ஐ.பி.எல். போட்டி வருகிற 22-ந்தேதி தொடங்குகிறது. லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் முதல் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்சை 24-ந்தேதி சந்திக்கிறது. இதில் லக்னோ கேப்டனான ராகுல் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    4-வது டெஸ்டுக்கு ஓய்வு அளிக்கப்பட்ட முன்னணி வேகப்பந்து வீச்சாளரான பும்ரா அணிக்கு திரும்புகிறார். 5-வது டெஸ்டில் அவர் விளையாட இருக்கிறார். அவர் 3 டெஸ்டில் 17 விக்கெட் வீழ்த்தியுள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்தியா 3-1 என்ற கணக்கில் கைப்பற்றி உள்ளது.

    • உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியை நடத்தும் ஏலத்தில் இருந்து இத்தாலி பின்வாங்கியது.
    • சீனா விருப்பம் தெரிவித்திருந்த நிலையில், உலக தடகள கவுன்சில் அதற்கு வாய்ப்பு அளித்துள்ளது.

    இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை உலக சாம்பியன்ஷிப் போட்டி நடத்தப்படும். 2025-ல் ஜப்பான் உலக சாம்பியன்ஷிப் போட்டியை நடத்துகிறது. ஜப்பானின் டோக்கியோ நகரில் நடத்தப்படுகிறது.

    2027-ம் போட்டியை நடத்த இத்தாலி, சீனா விருப்பம் தெரிவித்திருந்தன. இத்தாலியில் உலக சாம்பியன்ஷிப் போட்டியை நடத்தும் வாய்ப்பை பெற அதிக வாய்ப்பு இருந்தது. ஆனால், விளையாட்டு போட்டிகளை நடத்த அரசு 92 மில்லியன் அமெரிக்க டாலர் அளவிலான தொகையை ஒதுக்க உத்தரவாதம் அளிக்க மறுத்துவிட்டது. இதனால் இத்தாலி போட்டியை நடத்துவதற்கான விண்ணப்பத்தை திரும்பப் பெற்றது.

    இதனால் சீனா போட்டியை நடத்தும் வாய்ப்பை பெற்றுள்ளது. சீனாவின் பீஜிங் நகரில் 2027 உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடைபெறும். தடகள போட்டிகள் அனைத்தும் இந்த சாம்பியன்ஷிப்பிற்குள் அடங்கும்.

    உலக தடகள கவுன்சில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய வணிக மார்க்கெட்டான சீனாவில் விளையாட்டு மற்றும் ரசிகர்கள் வளர்ச்சிக்கு இது வாய்ப்பாக அமையும் எனத் தெரிவித்துள்ளது.

    கடந்த முறை ஹங்கேரியின் புத்தாபெஸ்ட் நகரில் உலக சாம்பியன்ஷிப் நடைபெற்றது. அதற்கு முன்னதாக அமெரிக்காவில் உள்ள ஒரேகானில் நடைபெற்றது.

    • மும்பை இந்தியன்ஸ் அணியின் ஹெய்லே மேத்யூஸ் 47 பந்தில் 55 ரன்கள் சேர்த்தார்.
    • கிரண் நவ்கிர் 31 பந்தில் 4 சிக்ஸ், 6 பவுண்டரியுடன் 57 ரன்கள் விளாசி வெற்றிக்கு உதவினார்.

    இந்திய கிரிக்கெட் வாரியத்தால் நடத்தப்படும் பெண்களுக்கான பிரீமியர் லீக் 2024 டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.

    நேற்று பெங்களூருவில் நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்- உ.பி. வாரியர்ஸ் அணிகள் மோதின. முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் குவித்தது.

    மும்பை இந்தியன்ஸ் அணியின் ஹெய்லே மேத்யூஸ் 47 பந்தில் 55 ரன்கள் விளாசினார். மற்றொரு தொடக்க வீராங்கனை யாசிகா பாட்டியா 22 பந்தில் 26 ரன்கள் அடித்தார். உ.பி. வாரியர்ஸ் அணி சார்பில் அஞ்சலி சர்வானி, கிரேஸ் ஹாரிஸ், எக்லெஸ்டோன், தீப்தி சர்மா, கயக்வாட் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    பின்னர் 162 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற சற்று கடினமான இலக்குடன் உ.பி. வாரியர்ஸ் அணி களம் இறங்கியது. கேப்டனும், விக்கெட் கீப்பருமான அலிசா ஹீலி 29 பந்தில் 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஆனால், கிரண் நவ்கிர் 31 பந்தில் 4 சிக்ஸ், 6 பவுண்டரியுடன் 57 ரன்கள் விளாசி நெருக்கடியை குறைத்தார்.

     தஹிலா மெக்ராத் 1 ரன்னில் ஏமாற்றம் அளித்தார். அதன்பின் வந்த கிரேஸ் ஹாரிஸ் 17 பந்தில் 38 ரன்களும், தீப் சர்மா 20 பந்தில் 27 ரன்களும் ஆட்டமிழக்காமல் விளாச உ.பி. வாரியர்ஸ் 16.3 பந்தில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 163 ரன்கள் எடுத்து ஏழு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    மும்பை இந்தியன்ஸ் 3 போட்டிகளில் விளையாடி 2-ல் வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது. உ.பி. வாரியர்ஸ் அணிக்கு இது முதல் வெற்றியாகும். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகளில் 2-ல் தோல்வியடைந்து 4-வது இடத்தில் உள்ளது.

    ஆர்சிபி அணி 2 போட்டிகளில் விளையாடி 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று முதல் இடத்தில் உள்ளது. டெல்லி கேப்பிட்டல்ஸ் 3-வது இடத்திலும், குஜராத் டைட்டன்ஸ் கடைசி இடத்திலும் உள்ளது.

    • ஆப்கானிஸ்தான் 54.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 155 ரன்கள் எடுத்தது.
    • அயர்லாந்து தரப்பில் மார்க் அடேர் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    அயர்லாந்து - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் ஒரே ஒரு டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதல் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி தொடக்க வீரர்களாக இப்ராஹிம் சத்ரான்- நூர் அலி சத்ரன் களமிறங்கினர்.

    நூர் அலி சத்ரன் 7 ரன்னிலும் அடுத்து வந்த ரஹமத் 0 ரன்னிலும் அடுத்தடுத்து வெளியேறினார். இதனையடுத்து இப்ராஹிம் சத்ரான் - ஷாஹிதி ஜோடி நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தனர். இந்த ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 50 ரன்கள் பாட்னர்ஷிப் அமைத்து கொடுத்தது.

    20 ரன்கள் எடுத்த போது ஷாஹிதி அவுட் ஆனார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இப்ராஹிம் சத்ரான் அரை சதம் விளாசி ஆட்டமிழந்தார். அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேறினர். கடைசி வரை கரீம் ஜனத் ஆட்டமிழக்காமல் 41 ரன்கள் எடுத்தார்.

    இறுதியில் ஆப்கானிஸ்தான் 54.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 155 ரன்கள் எடுத்தது. அயர்லாந்து தரப்பில் மார்க் அடேர் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    இதனையடுத்து அயர்லாந்து அணி முதல் இன்னிங்சை ஆடியது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் அயர்லாந்து அணி 4 விக்கெட்டுகளை இழந்து 100 ரன்கள் எடுத்தது. ஆப்கானிஸ்தான் தரப்பில் நவீத் சத்ரன், ஜியா-உர்-ரஹ்மான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    • இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கும் இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி மார்ச் 7-ந் தேதி தர்மசாலாவில் நடைபெறவுள்ளது.
    • ராஞ்சியில் உள்ள டோனியின் வீட்டிற்கு இந்திய வீரரும், சிஎஸ்கே வீரருமான ரவீந்திர ஜடேஜா சென்றுள்ளார்.

    இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற்று முடிந்தது. இப்போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, 5 போட்டிகள் கொண்ட தொடரையும் 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

    இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மார்ச் 7-ந் தேதி தர்மசாலாவில் நடைபெறவுள்ளது.

    இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் டோனியின் வீட்டிற்கு இந்திய வீரரும், சிஎஸ்கே வீரருமான ரவீந்திர ஜடேஜா சென்றுள்ளார்.

    அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த பதிவில் ஜாம்பவான் வீட்டின் முன் ஒரு ரசிகனாக போஸ் கொடுப்பது வேடிக்கையாக இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படம் தான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

    • விஹாரியின் அனுபவத்தை மனதில் வைத்து நாங்கள் அவரைத் தக்க வைத்துக் கொண்டோம்.
    • இருப்பினும், விஹாரி சமூக வலைதளங்களில் பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தி வருவது துரதிர்ஷ்டவசமானது.

    நடப்பு சீசன் ரஞ்சி கோப்பை தொடரில் ஆந்திரா அணியின் கேப்டனாக செயல்பட்ட ஹனுமா விஹாரி திடீரென அணியின் கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.

    அதன்பின் அந்த அணி மத்திய பிரதேச அணிக்கெதிரான காலிறுதிப்போட்டியில் தோல்வியடைந்த பின், அந்த அணியின் ஹனுமா விஹாரி தான் கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்டதற்கான காரணத்தையும், இதனால் இனி ஆந்திரா அணிக்காக விளையடப்போவதில்லை என்றும் அடுத்தடுத்து சர்ச்சையை கிளப்பினார். மேலும் ஆளுங்கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதி மகனுக்காக தன்னுடைய கேப்டன்சி பறிக்கப்பட்டதாகவும் கூறினார்.

    அதன்பின் சம்மந்தப்பட்ட அரசியல்வாதியின் மகன் பிரித்வி ராஜ், "நீங்கள் தேடும் வீரர் நான் தான். ஹனுமா விஹாரி கூறிய குற்றச்சாட்டுகள் பொய். இதுபோன்ற அனுதாப விளையாட்டுக்களை நீங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் விளையாடுங்கள்" என்று தனது இன்ஸ்டாகிராமில் பதிவுசெய்திருந்தார். இந்நிலையில்தான் தான் அணியின் கேப்டனாக நீடிக்க வேண்டும் என சக வீரர்கள் கையெழுத்திட்ட கடிதத்தை ஹனுமா விஹாரி வெளியிட்டார்.

    இந்நிலையில் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள ஆந்திரா கிரிக்கெட் சங்கம், "சில வீரர்கள் வந்து செல்வதால் உள்ளூர் வீரர்கள் வாய்ப்புகளை இழக்கின்றனர் என வீரர்களின் பெற்றோர்கள் எங்கள் கவனத்திற்கு பலமுறை கொண்டு வந்துள்ளனர். ஆனால் விஹாரியின் அனுபவத்தை மனதில் வைத்து நாங்கள் அவரைத் தக்க வைத்துக் கொண்டோம். இருப்பினும், விஹாரி சமூக வலைதளங்களில் பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தி வருவது துரதிர்ஷ்டவசமானது.

    கேப்டனாக தொடர அணியில் உள்ள அனைத்து வீரர்களும் ஆதரவு தெரிவித்த போதிலும், தான் பதிவியிலிருந்து நீக்கப்பட்டதாக ஹனுமா விஹாரி குற்றம் சாட்டியுள்ளார். ஆனால். இதுகுறித்து, சம்பந்தப்பட்ட வீரர்கள் விஹாரி மீது ஆந்திர கிரிக்கெட் சங்கத்தில் புகார் அளித்துள்ளனர். அவர்கள் ஹனுமா விஹாரி தங்களை மிரட்டி கையெழுத்து பெற்றதாக புகாரளித்துள்ளார்கள். இந்த புகார்கள் குறித்து விரிவான விசாரணை நடத்தி பிசிசிஐக்கு அறிக்கை தாக்கல் செய்யவுள்ளோம்" என்று தெரிவித்துள்ளது.

    • குல்தீப் மிகச்சிறப்பாக செயல்பட்டும் அதிகமான பாராட்டுகளை பெறுவதில்லை.
    • கடந்த பல வருடங்களாக இந்திய அணிக்காக நன்றாக செயல்பட்டு வருகிறார்.

    புதுடெல்லி:

    இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் 4 போட்டிகள் முடிவடைந்த நிலையில் 3-1 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை கைப்பற்றி உள்ளது.

    இரு அணிகளுக்கும் இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி மார்ச் 7ம் தேதி தர்மசாலாவில் தொடங்குகிறது.

    இந்நிலையில் இந்திய அணியில் இருக்கும் வீரர்களிலேயே குல்தீப் யாதவ் மிகச்சிறப்பாக செயல்பட்டும் அதிகமான பாராட்டுகளை பெறுவதில்லை என்று சேவாக் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    "மிகைப்படுத்துதல் என்று வரும்போது குல்தீப் யாதவ் மிகவும் குறைவாக மிகைப்படுத்தப்படும் வீரர்களில் ஒருவராக திகழ்கிறார். கடந்த பல வருடங்களாக இந்திய அணிக்காக நன்றாக செயல்பட்டு வருகிறார். ஆனாலும் அவருக்கு இப்போதும் ஆன்லைன் பேன்ஸ் கிளப் இல்லை.

    அவர் மிகச்சிறப்பாக செயல்பட்டும் அதிகமான பாராட்டுகளை பெறுவதில்லை. மக்கள் யாரும் இவர்தான் அடுத்த பெரிய ஸ்டார் என்று கொண்டாடியதில்லை. என்னைக் கேட்டால் தற்போது பெறுவதை விட அவர் அதிக பாராட்டு மற்றும் மிகைப்படுத்தலுக்கு தகுதியானவர்.

    என்று சேவாக் கூறினார்.

    ×