என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • மும்பை அணி தரப்பில் டெவால்ட் ப்ரீவிஸ் 46 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
    • குஜராத் அணி தரப்பில் ஓமர்சாய், ஸ்பென்சர் ஜான்சன், மோகித் சர்மா, உமேஷ் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    ஐபிஎல் தொடரின் 5-வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ்- குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய குஜராத் அணி 168 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சாய் சுதர்சன் 45 ரன்கள் எடுத்தார்.

    இதனையடுத்து மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித்- இஷான் கிஷன் களமிறங்கினர். இஷான் 0 ரன்னில் வெளியேறினார். அடுத்து வந்த நமன் அதிரடியாக விளையாடி 20 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து ரோகித்- ப்ரீவிஸ் ஜோடி அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோகித் 43 ரன்களிலும் ப்ரீவிஸ் 46 ரன்களிலும் அவுட் ஆகினர்.

    இதனையடுத்து திலக் வர்மா 25, டிம் டேவிட் 11, ஜெரால்ட் கோட்ஸி 1 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். கடைசி ஓவரில் 19 ரன்கள் தேவைப்பட்டது. முதல் பந்தை பாண்ட்யா சிக்சருக்கும் 2-வது பந்தை பவுண்டரிக்கும் விரட்டினார். 3-வது பந்தில் ஆட்டமிழந்தார்.

    இறுதியில் குஜராத் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. குஜராத் அணி தரப்பில் ஓமர்சாய், ஸ்பென்சர் ஜான்சன், மோகித் சர்மா, உமேஷ் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் மும்பை தோல்வியடைவது தொடர்கிறது.

    • வங்காளதேச வீரர் கலீட் அஹ்மத் விக்கெட் கிடைக்காத விரக்தியில் மெண்டிஸை மன்கட் முறையில் ரன் அவுட் செய்ய முயற்சித்தார்.
    • இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    வங்காளதேசம் மற்றும் இலங்கை கிரிக்கெட் அணிகள் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றன. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் இந்த தொடரின் முதல் போட்டி மார்ச் 22-ம் தேதி தொடங்கியது. அதில் டாஸ் வென்ற வங்காளதேசம் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

    அதை தொடர்ந்து களமிறங்கிய இலங்கை முதல் இன்னிங்சில் 280 ரன்கள் சேர்த்தது. குறிப்பாக அந்த அணிக்கு மதுசங்கா 2, கருணரத்னே 17, குசால் மெண்டிஸ் 16, ஏஞ்சலோ மேத்யூஸ் 5, சந்திமால் 9 என முக்கிய பேட்ஸ்மேன்கள் குறைந்த ரன்களில் அவுட்யாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். ஆனால் மிடில் ஆர்டரில் ஜோடி சேர்ந்து அசத்திய கேப்டன் தனஞ்செயா டீ சில்வா சதமடித்து 102 ரன்களும் கமிண்டு மெண்டிஸ் சதமடித்து அதே 102 ரன்களும் எடுத்தனர்.வங்காளதேசம் சார்பில் நகித் ராணா, கலிட் அகமது தலா 3 விக்கெட்டுகள் எடுத்தனர்.

    அதைத் தொடர்ந்து களமிறங்கிய வங்கதேசம் முதல் இன்னிங்சில் 188 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதைத்தொடர்ந்து 92 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கிய இலங்கை தங்களுடைய இரண்டாவது இன்னிங்சில் 418 ரன்கள் குவித்தது. மிடில் ஆர்டரில் அசத்திய கேப்டன் டீசல் வா சதமடித்து 108 ரன்களும் கமிண்டு மெண்டிஸ் 164 ரன்களும் குவித்து காப்பாற்றினர்.

    இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நிலையில் வங்காளதேச வீரர் கலீட் அஹ்மத் விக்கெட் கிடைக்காத விரக்தியில் மெண்டிஸை மன்கட் முறையில் ரன் அவுட் செய்ய முயற்சித்தார். ஆனால் பந்து ஸ்டெம்பில் படவில்லை. இதை ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக கடந்த 2020-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து முகமது அமீர் ஓய்வை அறிவித்தார்.
    • பாகிஸ்தான் அணிக்காக முகமது அமீர் கடந்த 2009-ம் ஆண்டு அறிமுகமானார்.

    2024-ம் ஆண்டு ஐசிசி டி20 உலக கோப்பை வரும் ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு 20 அணிகள் இந்த டி20 உலக கோப்பையில் பங்கேற்கிறது.

    இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த சில பாகிஸ்தான் வீரர்கள் தங்களது ஓய்வுமுடிவை திரும்பப்பெற்று பாகிஸ்தான் அணிக்காக விளையாட ஆர்வம் காட்டி வருகின்றன. அந்தவகையில் நடைபெற்று முடிந்த பிஎஸ்எல் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இஸ்லாமாபாத் யுனைடெட் அணிக்காக விளையாடிய இமாத் வசிம் தனது ஓய்வு முடிவை திரும்பப்பேற்று உலகக்கோப்பை தொடரில் விளையாட விருப்பம் தெரிவித்துள்ளார்.

    அவரைப் தொடர்ந்து நடப்பாண்டு பிஎஸ்எல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பாகிஸ்தான் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் முகமது அமீரும் தனது ஓய்வு முடிவை திரும்பப்பெற்று டி20 உலகக்கோப்பை தொடரில் விளையாட விருப்பம் தெரிவித்துள்ளார்.

    முன்னதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக கடந்த 2020-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து முகமது அமீர் ஓய்வை அறிவித்தார்.

    அதன்பின் அவர் இங்கிலாந்தில் குடியேறி உலகின் பல்வேறு டி20 லீக்குகளில் பங்கேற்று வந்தார். இந்நிலையில் அவர் தனது ஓய்வு முடிவை திரும்பப்பெற்றுள்ளதால் நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பை தொடருக்கான பாகிஸ்தான் அணியில் இடம்பிடிப்பார் என்ற எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.

    பாகிஸ்தான் அணிக்காக கடந்த 2009-ம் ஆண்டு அறிமுகமான முகமது அமீர் 36 டெஸ்ட், 61 ஒருநாள் மற்றும் 50 டி20 போட்டிகளில் விளையாடி 259 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • லக்னோ அணிக்கு எதிராக ராஜஸ்தான் 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    • சந்தீப் சர்மா அந்த 3 ஓவர்களை சிறப்பாக பந்து வீசாமல் போயிருந்தால் நான் ஆட்டநாயகனாக வந்திருக்க மாட்டேன்.

    ஐபிஎல் தொடரின் 4-வது லீக் போட்டியில் ராஜஸ்தான் - லக்னோ அணிகள் மோதின. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 193 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் சஞ்சு சாம்சன் 82 ரன்கள் எடுத்தார். லக்னோ சார்பில் அதிகபட்சமாக நவீன்-உல்-ஹக் 2 விக்கெட்டுகள் சாய்த்தார்.

    அதைத்தொடர்ந்து ஆடிய லக்னோ 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்கள் சேர்த்தது. கடைசி வரை போராடிய பூரான் 64* (41) ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ராஜஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக ட்ரெண்ட் போல்ட் 2 விக்கெட்டுகள் எடுத்தார். இந்த போட்டியில் ஆட்டநாயகனாக சஞ்சு சாம்சன் தேர்வு செய்யப்பட்டார்.

    இந்நிலையில் டெத் ஓவரில் சிறப்பாக பந்து வீசி சந்தீப் சர்மா தான் ஆட்டநாயகன் விருதுக்கு தகுதியானவர் என்று சஞ்சு சாம்சன் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    எப்போதும் களத்தில் நேரத்தை செலவிடுவது வேடிக்கையாக இருக்கும். அதில் வெற்றி பெறுவது இன்னும் ஸ்பெஷலாக இருக்கும்.

    எங்களிடம் சற்று வித்தியாசமான கலவை இருப்பதால் இம்முறை எனக்கு வித்தியாசமான வேலை கொடுக்கப்பட்டுள்ளது. சங்ககாரா சில பரிந்துரைகளை பின்பற்றுவதற்கு கொடுத்தார். 10 வருடங்களாக ஐபிஎல் தொடரில் விளையாடும் எனக்கு சில அனுபவங்கள் வந்துள்ளது. தற்போது சூழ்நிலைகளை புரிந்து கொள்ள நான் அதிக நேரம் செலவிட வேண்டும் என்று கருதுகிறேன். ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடியதும் எனக்கு உதவியது.

    இவை அனைத்தும் உங்களுடைய பலம் பலவீனத்தை புரிந்து கொள்வதாகும். நான் எப்போதும் பந்தை பார்த்து ரியாக்சன் கொடுக்கும் பேட்ஸ்மேன். அது முதல் பந்தாக இருந்தாலும் கடைசி பந்தாக இருந்தாலும் கவலையில்லை. இந்த விருதை நான் சந்தீப்புக்கு கொடுக்க வேண்டும். அவர் அந்த 3 ஓவர்களை சிறப்பாக பந்து வீசாமல் போயிருந்தால் நான் ஆட்டநாயகனாக வந்திருக்க மாட்டேன். அழுத்தமான நேரங்களில் திறமை மட்டுமல்ல கேரக்டரரும் முக்கியம் என்று அஸ்வின் பாய் சொல்லி கேட்டுள்ளேன்.

    இவ்வாறு சாம்சன் கூறினார்.

    • குஜராத் தரப்பில் அதிகபட்சமாக சுதர்சன் 45 ரன்கள் எடுத்தார்.
    • மும்பை தரப்பில் பும்ரா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    ஐபிஎல் தொடரின் 5-வது லீக் போட்டியில் மும்பை- குஜராத் அணிகள் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி குஜராத் அணியின் தொடக்க வீரர்களாக சுப்மன் கில் - சகா களமிறங்கினர். 15 ரன்களில் சகா பும்ரா பந்து வீச்சில் போல்ட் ஆனார். அவர் அவுட் ஆன சிறிது நேரத்தில் கில் 31 ரன்னில் வெளியேறினார்.

    நிதானமாக விளையாடிய சுதர்சன் 45 ரன்னிலும் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஓமர்சாய் 17, மில்லர் 12, தெவாட்டியா 22 என வெளியேற இறுதியில் குஜராத் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 168 ரன்கள் சேர்த்தது. மும்பை தரப்பில் பும்ரா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    • லக்னோ அணி தரப்பில் கேஎல் ராகுல், பூரான் அரை சதம் விளாசினர்.
    • ராஜஸ்தான் தரப்பில் போல்ட் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 4-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் - லக்னோ அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

    அதன்படி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க ஆட்டகாரர்களாக ஜெய்ஸ்வால் - ஜாஸ் பட்லர் களமிறங்கினர். பட்லர் 11 ரன்னிலும் ஜெய்ஸ்வால் 24 ரன்னிலும் அவுட் ஆகினர். இதனையடுத்து கேப்டன் சாம்சன் மற்றும் பராக் ஜோடி அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர்.

    சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சாம்சன் அரை சதம் விளாசினார். மறுமுனையில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய பராக் 29 பந்தில் 43 ரன்கள் எடுத்து வெளியேறினார். அடுத்து வந்த ஹெட்மயர் 5 ரன்களில் ஆட்டமிழந்தார்.

    இறுதியில் ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 193 ரன்கள் எடுத்தது. சாம்சன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 82 ரன்கள் சேர்த்தார்.

    இதனையடுத்து லக்னோ அணியின் தொடக்க ஆட்டகாரர்களாக டிகாக்- கேஎல் ராகுல் களமிறங்கினர். அதிரடியுடன் தொடங்கிய டிகாக் (4) முதல் ஓவரிலேயே விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்து வந்த படிக்கல் 0, பதோனி 1, ஹூடா 26 என வெளியேறினர்.

    இதனையடுத்து கேஎல் ராகுல் மற்றும் பூரான் இருவரும் ஜோடி சேர்ந்து பொறுப்புடன் ஆடி ரன்களை சேர்ந்தனர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேஎல் ராகுல் (58) அரை சதம் விளாசி வெளியேறினார். கடைசி வரை போராடிய பூரான் 64 ரன்கள் எடுத்து இறுதி வரை களத்தில் இருந்தார்.

    இறுதியில் லக்னோ அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்கள் எடுத்தது. இதனால் ராஜஸ்தான் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ராஜஸ்தான் தரப்பில் போல்ட் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    • அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இப்போட்டி நடைபெறுகிறது
    • குஜராத் அணிக்கு கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்ட்யா, இந்த முறை மும்பை அணி கேப்டனாக களமிறங்குகிறார்

    17-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெற உள்ளது. அதன்படி, 2-வது ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் இன்று இரவு 7.30 மணிக்கு மோதுகினறன.

    குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இப்போட்டி நடைபெறுகிறது.

    கடந்த இரண்டு சீசன்களாக குஜராத் அணிக்கு கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்ட்யா, இந்த முறை மும்பை அணி கேப்டனாக களமிறங்குகிறார். அதேநேரம், குஜராத் அணி கேப்டன் சுப்மன் கில் தலைமையில் இன்று முதல்முறையாக களமிறங்க உள்ளது. இதனால், இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

    அகமதாபாத் மைதானம் கடந்த தொடரில் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருந்ததால், பல போட்டிகளில் ரன் மழை பொழிந்தது. இன்றைய போட்டியிலும் ஆடுகளம் அதேநிலையில் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில், இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில், டாஸ் வென்ற மும்பை ராயல்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

    அதன்படி, குஜராத் டைட்டன்ஸ் அணி பேட்டிங் செய்ய முதலில் களமிறங்குகிறது.

    • கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    • இந்த போட்டியில் அகர்வால் விக்கெட்டை ராணா கைப்பற்றினார்.

    ஐபிஎல் 2024 சீசனின் 3-வது போட்டி ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ்- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின.

    முதலில் விளையாடிய கொல்கத்தா நைட்ரைடர்ஸ் 7 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்கள் குவித்தது. பின்னர் 209 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி களம் இறங்கியது. பரபரப்பான ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 204 ரன்கள் எடுத்தது. இதனால் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 4 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

    இந்த போட்டியில் ஐதரபாத் அணி பேட்டிங் செய்த போது அகர்வாலை விக்கெட் வீழ்த்திய கொல்கத்தா வீரர் ராணா அகர்வால் முகத்து முன்னாள் கேலி செய்யும் விதத்தில் சைகை காட்டினார். இதனால் அவருக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 60 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    • லக்னோ அணி தரப்பில் நவீன் உல் ஹக் 2 விக்கெட்டுக்கெடுகளை கைப்பற்றினார்.
    • ராஜஸ்தான் வீரர் சாம்சன் 80 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    17-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய முதல் ஆட்டத்தில் ராஜஸ்தான் - லக்னோ அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

    அதன்படி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க ஆட்டகாரர்களாக ஜெய்ஸ்வால் - ஜாஸ் பட்லர் களமிறங்கினர். பட்லர் 11 ரன்னிலும் ஜெய்ஸ்வால் 24 ரன்னிலும் அவுட் ஆகினர். இதனையடுத்து கேப்டன் சாம்சன் மற்றும் பராக் ஜோடி அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர்.

    சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சாம்சன் அரை சதம் விளாசினார். மறுமுனையில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய பராக் 29 பந்தில் 43 ரன்கள் எடுத்து வெளியேறினார். அடுத்து வந்த ஹெட்மயர் 5 ரன்களில் ஆட்டமிழந்தார்.

    இறுதியில் ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 193 ரன்கள் எடுத்தது. சாம்சன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 82 ரன்கள் சேர்த்தார்.

    • 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா உக்ரைனின் அன்ஹெலினா கலினினா உடன் மோதினார்.
    • முதல் செட்டை 4-6 என்ற புள்ளி கணக்கில் இழந்த சபலென்கா அடுத்த செட்டை 6-1 என்ற கணக்கில் கைப்பற்றினார்.

    மியாமி:

    அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள மியாமி நகரில் 1000 தரவரிசை புள்ளிகளை கொண்ட மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது.

    இதில் மகளிர் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா உக்ரைனின் அன்ஹெலினா கலினினா உடன் மோதினார்.

    இந்த ஆட்டத்தில் முதல் செட்டை 4-6 என்ற புள்ளி கணக்கில் இழந்த சபலென்கா அடுத்த செட்டை 6-1 என்ற கணக்கில் கைப்பற்றினார். இதையடுத்து 3-வது செட்டை கைப்பற்றி அடுத்த சுற்றுக்கு முன்னேறுவார் என எதிர்பார்க்கப்பட்ட சபலென்கா 1-6 என்ற புள்ளிக்கணக்கில் இழந்து அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார்.

    • ஐபிஎல் போட்டியில் இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெற உள்ளன.
    • லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் கேப்டன் லோகேஷ் ராகுல் அணியை வழிநடத்துகிறார்.

    17-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெற உள்ளது. அதன்படி, முதல் ஆட்டத்தில் ராஜஸ்தான் - லக்னோ அணிகள் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு மோத உள்ளன.

    கடந்த ஆண்டு 5-வது இடம் பெற்று ஏமாற்றம் அளித்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தனது முதல் ஆட்டத்தை வெற்றியுடன் தொடங்கும் முனைப்புடன் களம் இறங்குகிறது.

    கடந்த இரண்டு ஆண்டுகளும் தொடர்ச்சியாக 'பிளே-ஆப்' சுற்றுக்குள் நுழைந்த லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் கேப்டன் லோகேஷ் ராகுல் அணியை வழிநடத்துகிறார்.

    இந்நிலையில், இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில், டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

    அதன்படி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேட்டிங் செய்ய முதலில் களமிறங்குகிறது.

    • மார்ச் 26-ந் தேதி சென்னையில் நடைபெறும் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை சென்னை அணி எதிர்கொள்கிறது
    • மலையாள சினிமாவில் 200 கோடி வசூல் செய்த முதல் படம் என்ற சாதனையை மஞ்சும்மல் பாய்ஸ் படைத்துள்ளது

    இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் கடந்த வெள்ளிக்கிழமை சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் கலைநிகழ்ச்சிகளுடன் தொடங்கியது. அன்றைய தினம் நடைபெற்ற முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதின.

    டோனி கேப்டன் பொறுப்பில் இருந்து விலகியதால் ருத்துராஜ் கெய்க்வாட் கேப்டனாக தன்னுடைய முதல் போட்டியில் களமிறங்கினார். இப்போட்டியில் பெங்களூரை வீழ்த்தி சென்னை அணி வெற்றி பெற்றது.

    இதனையடுத்து, மார்ச் 26-ந் தேதி சென்னையில் நடைபெறும் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை சென்னை அணி எதிர்கொள்கிறது. இதனால் சென்னை அணி வீரர்கள் சென்னையில் ஊர் சுற்றி பொழுது போக்கினர்.

    இந்நிலையில், சென்னை அணியின் முன்னாள் கேப்டானான எம்.எஸ்.டோனி நேற்று இரவு மஞ்சும்மல் பாய்ஸ் படத்தை பார்த்து ரசித்திருக்கிறார். பந்துவீச்சாளர் தீபக் சஹார் உடன் சென்று சென்னை சத்யம் திரையரங்கில் அவர் இப்படத்தை கண்டுகளித்துள்ளார். அப்போது படம் முடிந்து வெளியே வந்த டோனியை பார்த்ததும் ரசிகர்கள் விசிலடித்து ஆரவாரம் செய்துள்ளனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    மலையாள சினிமாவில் 200 கோடி வசூல் செய்த முதல் படம் என்ற சாதனையை மஞ்சும்மல் பாய்ஸ் படைத்துள்ளது. அது மட்டுமில்லாமல், தமிழ்நாட்டில் மட்டும் இப்படம் ஐம்பது கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. இந்நிலையில் தமிழில் பல முன்னணி ஹீரோக்கள் மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படத்தை பார்த்து பாராட்டிய நிலையில் பிரபல கிரிக்கெட் வீரர் தோனியும் மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படத்தை திரையில் பார்த்துள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×