என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • முதல் இன்னிங்சில் 270 ரன்கள் என்ற திட்டத்துடன் விளையாட முடியாது.
    • மும்பை அணிக்கு தேவைப்படும்போதெல்லாம் பவுண்டரி, சிக்சர்கள் கிடைத்தன- கம்மின்ஸ்

    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி மும்பை இந்தியன்ஸ்க்கு எதிராக 277 ரன்கள் குவித்து சாதனை படைத்தது. பின்னர் 278 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 246 ரன்கள் அடித்தது. இதனால் ஐதராபாத் அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    போட்டி முடிந்த பிறகு சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி கேப்டன் பேட் கம்மின்ஸ் கூறியதாவது:-

    இது பைத்தியக்காரத்தனமாக இருந்தது. இல்லையா என்ன? என கேட்டுக்கொண்டார். நாங்கள் பந்து வீசி முடிக்கும் வரை, போட்டி மிகவும் நெருக்கமானதாகவே சென்னறது. மும்பை அணிக்கு தேவைப்படும்போதெல்லாம் பவுண்டரி, சிக்சர்கள் கிடைத்தது. பந்து மைதானத்தை சுற்றிக் கொண்டே இருந்தது. ஆனால் நாங்கள் இறுதியாக சிறப்பான வகையில் ஆட்டத்தை முடித்தோம்.

    அபிஷேக் சர்மா ஆட்டம் உண்மையிலேயே ஈர்க்கும் வகையில் இருந்தது. நீங்கள் ஐபிஎல் தொடரில் நெருக்கடியில் விளையாட வேண்டியிருக்கும். ஆனால், அவர் அதிகப்படியான சுதந்திரத்துடன் விளையாடுகிறார். முதல் இன்னிங்சில் 270 ரன்கள் என்ற திட்டத்துடன் விளையாட முடியாது. ஆனால், நாங்கள் நேர்மறையான, ஆக்ரோசமான ஆட்டத்துடன் போட்டியை எடுத்துச் செல்ல விரும்பினோம். சொந்த மைதானத்தில் சூழ்நிலை அற்புதமாக இருந்தது. நம்பமுடியாத வகையில் ரசிகர்களின் ஆரவாரம் இருந்தது.

    இவ்வாறு பேட் கம்மின்ஸ் தெரிவித்தார்.

    தோல்வி குறித்து மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யா கூறியதாவது:-

    டாஸ் சுண்டப்படும்போது சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 277 ரன்கள் அடிக்கும் என்று உண்மையிலான நினைக்கவில்லை. ஆடுகளம் சிறப்பாக இருந்தது. 277 என்பது விசயம் அல்ல, நீங்கள் மோசமாக அல்லது நன்றாக பந்து வீசினாலும், எதிரணி பேட்ஸ்மேன்கள் அதிக ரன்கள் குவித்தால், அவர்கள் சிறப்பாக பேட்டிங் செய்தார்கள், அவ்வளவுதான். அவர்களின் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். 500 ரன்களுக்கு மேல் அடிக்கப்பட்ட நிலையில், ஆடுகளம் பேட்ஸ்மேன்களுக்கு ஆதரவாக இருக்கும்போது, பந்து வீசுவது மிகவும் கஷ்டம்.

    நாங்கள் பந்து வீச்சு மற்றும் பேட்டிங்கில் சில விசயங்கள் செய்திருக்கனும். நாங்கள் இளம் பந்து வீச்சாளர்களை கொண்டுள்ளோம். பாடம் கற்றுக் கொள்வோம்.

    இவ்வாறு ஹர்திப் பாண்ட்யா தெரிவித்தார்.

    • பவுண்டரி மற்றும் சிக்ஸ் அடிக்கப்பட்ட போட்டிகள் பட்டியலில் சிஎஸ்கே-ஆர்ஆர் போட்டியுடன் முதல் இடம் (69).
    • ஆண்களுக்கான டி20 போட்டிகளில் அதிக சிக்ஸ் அடிக்கப்பட்ட போட்டி இதுதான்.

    ஐபிஎல் 2024 சீசனில் நேற்று ஐதராபாத் ராஜிவ் காந்தி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்- மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஐதராபாத் 20 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 277 ரன்கள் குவித்தது.

    பின்னர் 278 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களம் இறங்கிய மும்பை இந்தியன்ஸ் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 246 ரன்கள் அடித்து 31 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

    இந்த போட்டியில் ஏராளமான சாதனைகள் படைக்கப்பட்டன. அதன் விவரம் வருமாறு:-

    1. ஐபிஎல் வரலாற்றில் ஒரு அணியின் அதிகபட்ச ஸ்கோர் ஆகும் (277-3).

    2. பவுண்டரி மற்றும் சிக்ஸ் அடிக்கப்பட்ட போட்டிகள் பட்டியலில் சிஎஸ்கே-ஆர்ஆர் போட்டியுடன் முதல் இடம் (69).

    3. ஒரு இன்னிங்சில அதிக சிக்ஸ் அடித்ததில் மும்பை இந்தியன்ஸ் 20 உடன் 2-வது இடம். ஆர்சிபி 21 சிக்ஸ் உடன் முதல் இடத்தில் உள்ளது. மேலும் ஆர்சிபி, டெக்கான் சார்ஜர்ஸ் ஆகிய அணிகள் 20 சிக்ஸ் அடித்துள்ளன.

    4. ஆண்களுக்கான டி20 போட்டிகளில் அதிக சிக்ஸ் அடிக்கப்பட்ட போட்டி இதுதான். இரண்டு அணிகளும் சேர்த்து 38 சிக்ஸ் அடித்துள்ளன.

    5. ஐபிஎல் போட்டியில் அதிக சிக்ஸ் அடிக்கப்பட்ட போட்டி இதுதான். இரண்டு அணிகளும் சேர்ந்த 38 சிக்ஸ் அடித்துள்ளன. இதற்கு முன்னதாக 2018-ல் ஆர்சிபி-சிஎஸ்கே அணிகள், 2020-ல் ஆர்ஆர்-சிஎஸ்கே அணிகள், 2023-ல் ஆர்சிபி- சிஎஸ்கே அணிகள் விளையாடிய போட்டிகளில் 33 சிக்ஸ் அடிக்கப்பட்டுள்ளது.

    6. இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். மொத்தம் 523 (277+246) ரன் அடிக்கப்பட்டுள்ளது.

    7. ஆண்கள் டி20 போட்டிகளில் அதிகபட்சமாக அடிக்கப்பட்ட ரன்னும் இதுவாகும். இதற்கு முன் தென்ஆப்பிரிக்கா- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் 517 ரன் அடிக்கப்பட்டிருந்தது.

    8. ஐபிஎல் கிரிக்கெட்டில் 2-வது பேட்டிங் செய்த அணி அடித்த அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன்னதாக 2020-ல் பஞ்சாப் அணிக்கெதிராக ஆர்ஆர் 226 ரன் அடித்து வெற்றி பெற்றுள்ளது.

    9. மும்பை இந்தியன்ஸ் அணியின் டாப் 6 பேட்ஸ்மேன்கள் தலா 20 ரன்களுக்கு மேல் அடித்துள்ளனர். ஐபிஎல் வரலாற்றில் இவ்வாறு அடிப்பது இதுதான் முதல் முறையாகும்.

    10. இரு அணிகளிலும் நான்கு பந்து வீச்சாளர்கள் 50 ரன்களுக்கு மேல் அடிக்கப்பட்டது இதுதான் முதல்முறை.

    11. முதல் 10 ஓவரில் ஐதராபாத் அணி 148 ரன்கள் குவித்தது. இதன்மூலம் ஐபிஎல் கிரிக்கெட்டில் முதல் 10 ஓவரில் அதிக ரன் அடித்த அணி என்ற சாதனையை படைத்துள்ளது. மும்பை இந்தியன்ஸ் 141 ரன் அடித்து 2-வது இடத்தில் உள்ளது.

    • மந்தமாக விளையாடிய ஹர்திக் பாண்ட்யா 20 பந்துகளில் 24 ரன்களில் வெளியேறினார்
    • அதிரடியாக விளையாடிய திலக் வர்மா 64 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

    ஐதராபாத்:

    ஐ.பி.எல் தொடரின் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய ஐதராபாத் அணி மும்பை அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் பறக்கவிட்டனர்.

    ஹெட், அபிஷேக் சர்மா, கிளாசென் ஆகியோரின் அரைசதத்தால் இறுதியில் ஐதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 277 ரன்கள் குவித்தது. ஐதராபாத் தரப்பில் கிளாசென் 80 ரன், அபிஷேக் சர்மா 63 ரன், ஹெட் 62 ரன் எடுத்தனர்.

    இதையடுத்து 278 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் மும்பை அணி ஆடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் -இஷான் கிஷன் களமிறங்கினர். இருவரும் தொடக்கம் முதலே அதிரடி காட்டினர். இதனால் 3 ஓவரில் மும்பை 50 ரன்களை கடந்தது.

    அதிரடியாக விளையாடி இஷான் 34 ரன்னிலும் ரோகித் 26 ரன்னிலும் அவுட் ஆகினர். இதனையடுத்து நமன் மற்றும் திலக் வர்மா ஜோடி சேர்ந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 14 பந்தில் 30 ரன்கள் குவித்த நமன் அவுட் ஆனார். அதிரடியாக விளையாடிய திலக் வர்மா 64 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

    மந்தமாக விளையாடிய ஹர்திக் பாண்ட்யா 20 பந்துகளில் 24 ரன்களில் வெளியேறினார். இறுதி கட்டத்தில் ரொமாரியோ ஷெப்பர்ட்- டிம் டேவிட் முடிந்த அளவுக்கு வெற்றிக்கு போராடினர். இறுதியில் ஐதராபாத் அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    • இந்த ஆட்டத்தின் முதல் செட்டை 7-5 என்ற புள்ளிக்கணக்கில் ரைபகினா கைப்பற்றினார்.
    • 2-வது செட்டை 6-7 (4-7) என்ற புள்ளிக்கணக்கில் இழந்தார்.

    மியாமி:

    அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டம் ஒன்றில் கஜகஸ்தானின் எலெனா ரைபாகினா கிரேக்க டென்னிஸ் வீராங்கனையான மரியா சக்காரியை எதிர்கொண்டார்.

    இந்த ஆட்டத்தின் முதல் செட்டை 7-5 என்ற புள்ளிக்கணக்கில் கைப்பற்றிய ரைபகினா 2-வது செட்டை 6-7 (4-7) என்ற புள்ளிக்கணக்கில் இழந்தார். இதையடுத்து வெற்றியாளரை தீர்மானிக்கும் 3-வது செட் பரபரப்பாக நடைபெற்றது.

    இந்த செட்டில் முன்னணி வீராங்கனையான ரைபகினா 6-4 என்ற புள்ளிக்கணக்கில் மரியா சக்காரியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். நாளை நடைபெறும் அரையிறுதி ஆட்டத்தில் ரைபகினா பெலாரசின் விக்டோரியா அசரென்காவை எதிர்கொள்கிறார்.

    • 2021-ல் அபு தாபியில் நடைபெற்ற போட்டியில் மும்பை இந்தியன்ஸ் 131 ரன்கள் அடித்திருந்தது.
    • 2014-ல் பஞ்சாப் கிங்ஸ் அணியும் ஐதராபாத் அணிக்கெதிராக 131 ரன்கள் அடித்திருந்தது.

    சன்ரைசர்ஸ் ஐதராபாத்- மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ஐதராபாத் ராஜிவ் காந்தி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது.

    சன்ரைசர்ஸ் ஐதராபாத் முதல் 2 ஓவரில் 18 ரன்கள் எடுத்திருந்தது. அதன்பின் ருத்ர தாண்டவம் ஆடியது. அறிமுக வீரரான மபாகா 3-வது ஓவரை வீசினார். இந்த ஓவரில் டிராவிட் ஹெட் இரண்டு சிக்ஸ், இரண்டு பவுண்டரி விளாசினார். இந்த ஓவரில் ஐதராபாத் அணிக்கு 22 ரன்கள் கிடைத்தது.

    4-வது ஓவரை பும்ரா வீசினார். இந்த ஓவரில் 5 ரன்கள் மட்டுமே கிடைத்தது. 5-வது ஓவரின் முதல் பந்தில் மயங்க் அகர்வால் 13 பந்தில் 11 ரன்கள் எடுத்து வெளியேறினார். இந்த ஓவரில் டிராவிஸ் ஹெட் 3 பவுண்டரிகள் விளாசினார். ஒரு விக்கெட்டை இழந்தாலும் 13 ரன்கள் எடுத்தது.

    5-வது ஓவரை கோட்சி வீசினார். இந்த ஓவரில் அபிஷேக் சர்மா ஒரு சிக்ஸ், டிராவிஸ் ஹெட் ஒரு சிக்ஸ் மற்றும் இரண்டு பவுண்டரி அடிக்க 23 ரன்கள் கிடைத்தது. இதன்மூலம் பவர்பிளேயில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் 1 விக்கெட் இழப்பிற்கு 81 ரன்கள் குவித்தது.

    7-வது ஓவரை சாவ்லா வீசினார். இந்த ஓவரில் அபிஷேக் சர்மா 3 சிக்ஸ் விளாசினார். இதனால் இந்த ஓவரில் 21 ரன்கள் கிடைத்தது. ஸ்கோர் 100 ரன்னைத் தாண்டியது. 8-வது ஓவரை கோட்சி வீசினார். இந்த ஓவரில் டிராவிஸ் ஹெட் 24 பந்தில் 62 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

    இந்த ஓவரில் இரண்டு பவுண்டரி, ஒரு பைஸ் பவுண்டரியுடன் 15 ரன்கள் கிடைத்தது. 9-வது ஓவரை ஹர்திப் பாண்ட்யா வீசினார். இந்த ஓவரில் ஒரு சிக்ஸ் உடன் 11 ரன்கள் கிடைத்தது. 10-வது ஓவரை மபாகா வீசினார். இந்த ஓவரில் அபிஷேக் சர்மா இரண்டு சிக்ஸ், இரண்டு பவுண்டரி விளாசினார். இதனால் 20 ரன்கள் கிடைத்தது. மொத்தமாக சன்ரைசர்ஸ் ஐதராபாத் 10 ஓவரில் 148 ரன்கள் குவித்தது.

    இதன் மூலம் ஐபிஎல் கிரிக்கெட்டில் வரலாற்றில் முதல் 10 ஓவரில் அதிக ரன்கள் குவித்த அணி என்ற சாதனையைப் படைத்துள்ளது.

    மும்பை இந்தியன்ஸ் இதற்கு முன் 2021-ல் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கெதிராக 131 ரன்கள் குவித்துள்ளது. 2014-ல் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கெதிராக பஞ்சாப் கிங்ஸ் 131 ரன்கள் எடுத்துள்ளது.

    2008-ல் மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிராக டெக்கான் சார்ஜர்ஸ் 130 ரன்கள் எடுத்துள்ளது. 2016-ல் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கெதிராக ஆர்சிபி 129 ரன்கள் எடுத்துள்ளது.

    • திராவிஷ் ஹெட் 18 பந்தில் அரை சதம் விளாசினார்.
    • அபிஷேக் 16 பந்தில் அரை சதம் விளாசினார்.

    ஐபிஎல் தொடரின் 8-வது லீக் போட்டியில் ஐதராபாத் மற்றும் மும்பை அணிகள் இன்று மோதுகிறது. இந்த போட்டியில் ஐதராபாத்தில் உள்ள ராஜூவ் காந்தி மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற மும்பை ஐதராபாத் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக மயங்க் அகர்வால் - திராவிஷ் ஹேட் ஆகியோர் களமிறங்கினார். மயங்க் அகர்வால் 11 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த அபிஷேக் திராவிஷ் ஹேட் உடன் ஜோடி சேர்ந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

    இதனால் பவர்பிளேயில் சன்ரைசர்ஸ் அணி 1 விக்கெட் இழப்பிற்கு 81 ரன்கள் குவித்தது. அதிரடியாக விளையாடிய திராவிஷ் ஹெட் 18 பந்தில் அரை சதம் விளாசினார். அவர் 24 பந்தில் 62 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். மறுபுறம் ருத்ர தாண்டவம் ஆடிய அபிஷேக் 16 பந்தில் அரை சதம் விளாசினார். அவர் 23 பந்தில் 63 ரன்கள் குவித்து அவுட் ஆனார்.

    இதனை தொடர்ந்து வந்த கிளாசனும் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். அவர் 23 பந்தில் அரை சதம் விளாசினார்.

    இறுதியில் சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 277 ரன்கள் குவித்தது. இதன்மூலம் ஐபிஎல் வரலாற்றில் அணியாக அதிக ரன்கள் குவித்த அணி என்ற சாதனையை சன்ரைசர்ஸ் அணி படைத்துள்ளது. இதற்கு முன்பு புனே வாரியர்ஸ் அணிக்கு எதிராக ஆர்சிபி 263 ரன்கள் எடுத்ததே சாதனையாக இருந்தது. அந்த சாதனையை சன்ரைசர்ஸ் முறியடித்துள்ளது.

    • பவர்பிளேயில் சன்ரைசர்ஸ் அணி 1 விக்கெட் இழப்பிற்கு 81 ரன்கள் குவித்தது.
    • ஐபிஎல் தொடரில் அதிகவேக அரைசதம் அடித்த வீரர்களில் ஜெய்ஸ்வால் முதல் இடத்தில் உள்ளார்.

    ஐபிஎல் தொடரின் 8-வது லீக் போட்டியில் ஐதராபாத் மற்றும் மும்பை அணிகள் இன்று மோதுகிறது. இந்த போட்டியில் ஐதராபாத்தில் உள்ள ராஜூவ் காந்தி மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற மும்பை ஐதராபாத் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக மயங்க் அகர்வால் - திராவிஷ் ஹேட் ஆகியோர் களமிறங்கினார். மயங்க் அகர்வால் 11 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த அபிஷேக் திராவிஷ் ஹேட் உடன் ஜோடி சேர்ந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

    இதனால் பவர்பிளேயில் சன்ரைசர்ஸ் அணி 1 விக்கெட் இழப்பிற்கு 81 ரன்கள் குவித்தது. அதிரடியாக விளையாடிய திராவிஷ் ஹெட் 18 பந்தில் அரை சதம் விளாசினார். இதன்மூலம் நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக வேக அரை சதம் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார். அடுத்த சிறிது நேரத்திலேயே இவரது சாதனை இளம் வீரர் அபிஷேக் முறியடித்தார்.

    அபிஷேக் 16 பந்தில் அரை சதம் விளாசி அசத்தினார். இதன்மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிகவேக அரை சதம் விளாசிய 3-வது வீரரானார். முதல் இடத்தில் ஜெய்ஸ்வாலும் (13 பந்தில்) 2-வது இடத்தில் கேஎல் ராகுல் மற்றும் பேட் கம்மின்ஸ் (14) உள்ளனர். 

    • இந்த போட்டியில் ஐதராபாத்தில் உள்ள ராஜூவ் காந்தி மைதானத்தில் நடைபெறுகிறது.
    • ஐதராபாத் அணியில் இடம் பெற்றிருந்த வனிந்து ஹசரங்கா காயம் காரணமாக இந்த போட்டியில் விளையாடவில்லை.

    ஐபிஎல் தொடரின் 8-வது லீக் போட்டியில் ஐதராபாத் மற்றும் மும்பை அணிகள் இன்று மோதுகிறது. இந்த போட்டியில் ஐதராபாத்தில் உள்ள ராஜூவ் காந்தி மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    முதல் போட்டியில் இரு அணிகளும் தோல்வியடைந்த நிலையில் முதல் வெற்றியை எதிர் நோக்கி இரு அணிகளும் களமிறங்குகிறது.

    ஐதராபாத் அணியில் இடம் பெற்றிருந்த வனிந்து ஹசரங்கா காயம் காரணமாக இந்த போட்டியில் விளையாடவில்லை. மேலும் மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிரடி வீரர் சூர்யகுமார் யாதவ் இந்த போட்டியில் விளையாடுவார் என்று எதிர்பார்த்த நிலையில் அவரும் இந்த போட்டியில் களமிறங்கவில்லை.

    • மும்பை மோதிய முதல் போட்டியில் ஹர்திக் பாண்ட்யாவுக்கு எதிராக ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
    • இன்றைய போட்டி தொடங்குவதற்கு முன்பு இருந்தே ஹர்திக் பாண்ட்யாவுக்கு ரசிகர்கள் எதிர்ப்பை தெரிவிக்க ஆரம்பித்து விட்டனர்.

    ஐபிஎல் தொடரின் 8-வது லீக் போட்டியில் ஐதராபாத் மற்றும் மும்பை அணிகள் இன்று மோதுகிறது. இந்த போட்டியில் ஐதராபாத்தில் உள்ள ராஜூவ் காந்தி மைதானத்தில் நடைபெறுகிறது. முதல் போட்டியில் இரு அணிகளும் தோல்வியடைந்த நிலையில் முதல் வெற்றியை எதிர் நோக்கி இரு அணிகளும் களமிறங்குகிறது.

    இந்நிலையில் இந்த போட்டி இன்னும் சிறிது நேரத்தில் தொடங்கவுள்ள நிலையில் ரசிகர்கள் மும்பை கா ராஜா ரோகித் சர்மா என முழக்கமிட்டு வருகின்றனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஹர்திக் பாண்ட்யாவுக்கு எதிராக ரசிகர்கள் இன்றைய போட்டி தொடங்குவதற்கு முன்பு இருந்தே எதிர்ப்பை தெரிவிக்க ஆரம்பித்து விட்டனர்.

    மும்பை இந்தியன்ஸ் அணி முதல் போட்டியில் குஜராத் அணியிடம் மோதியது. இந்த போட்டி அகமதாபாத்தில் நடந்தது. இந்த போட்டியில் ரோகித் சர்மாவுக்கு ஆதரவு ரசிகர்கள் மும்பை கா ராஜா ரோகித் சர்மா என முழக்கமிட்டனர். அதேபோல இந்த போட்டியிலும் முழக்கமிட்டு வருகின்றனர்.

    • 9-வது டி20 உலகக் கோப்பை போட்டி வருகிற ஜூன் 4-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது.
    • இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இடையேயான போட்டி ஜூன் 9-ம் தேதி நியூயார்க் நகரில் நடைபெற இருக்கிறது.

    2024 டி20 உலகக் கோப்பை தொடர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற உள்ளது. இதுவரை 8 டி20 உலகக் கோப்பை தொடர்கள் நடைபெற்றுள்ளன. இதில் இங்கிலாந்து (2010, 2022), வெஸ்ட் இண்டீஸ் (2012, 2016) தலா 2 முறையும், இந்தியா (2007), பாகிஸ்தான் (2009) இலங்கை (2014), ஆஸ்திரேலியா (2021) தலா ஒரு முறையும் உலகக் கோப்பையை வென்றுள்ளன.

    9-வது டி20 உலகக் கோப்பை போட்டி வருகிற ஜூன் 4-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது.

    இந்நிலையில் நடப்பு டி20 உலகக் கோப்பை தொடருக்கான பாகிஸ்தான் அணியின் கேப்டனாக மீண்டும் பாபர் அசாம் தொடர்வார் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த ஆண்டு நடந்து முடிந்த ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தாத நிலையில் பாபர் அசாம் 3 வடிவிலான கேப்டன் பதவியில் இருந்து விலகி இருந்தார்.

    அவருக்கு பதிலாக டி20, ஒருநாள் போட்டிக்கான கேப்டனாக சஹீன் அப்ரிடி நியமிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவரை நீக்கி மீண்டும் பாபர் அசாம் தொடர உள்ளார்.

    இந்த தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இடையேயான போட்டி ஜூன் 9-ம் தேதி நியூயார்க் நகரில் நடைபெற இருக்கிறது.

    • முதல் செட்டை போபண்ணா ஜோடி 3-6 என இழந்தது.
    • 2-வது செட் டை-பிரேக்கர் வரை சென்றது. இறுதியில் போபண்ணா ஜோடி அதை கைப்பற்றியது.

    மியாமி ஒபன் டென்னிஸ் தொடரில் இந்தியாவின் முன்னணி வீரர் ரோகன் போபண்ணா ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டன் இணைந்து விளையாடி வருகிறது.

    இந்த ஜோடி செம் வெர்பீக் (நெதர்லாந்து)- ஜான்-பாட்ரிக் ஸ்மித் (ஆஸ்திரேலியா)யை காலிறுதியில் எதிர்கொண்டது.

    முதல் இடத்தில் இருக்கும் போபண்ணா ஜோடிக்கு செம் வெர்பீக் (நெதர்லாந்து)- ஜான்-பாட்ரிக் ஸ்மித் (ஆஸ்திரேலியா) ஜோடி கடும் நெருக்கடி கொடுத்தது.

    முதல் செட்டை போபண்ணா ஜோடி 3-6 என அதிர்ச்சிகரமாக இழந்தது. 2-வது செட்டில் சுதாரித்துக் கொண்டு விளையாடியது. இருந்தபோதிலும் செம் வெர்பீக் (நெதர்லாந்து)- ஜான்-பாட்ரிக் ஸ்மித் (ஆஸ்திரேலியா) ஜோடி கடும் நெருக்கடி கொடுத்தனர். இதனால் டைபிரேக்கர் வரை சென்றது. இறுதியாக போபண்ணா ஜோடி 7(7)-6(4) என 2-வது செட்டை கைப்பற்றியது.

    3-வது செட்டில் போபண்ணா ஜோடி கை ஓங்கியது. அந்த செட்டை 10-7 எனக் கைப்பற்றி போபண்ணா ஜோடி 3-6, 7(7)-6(4), 10-7 என வெற்றி பெற்றது. இதன் மூலம் போபண்ணா- மேத்யூ எப்டன் ஜோடி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

    காலிறுதிக்கு முந்தைய சுற்றில் போபண்ணா ஜோடி, மொனாக்கோவின் ஹுகோ நிஸ்- போலந்தின் ஜியேலின்ஸ்கி ஜோடியை எதிர்கொண்டது. இதில் நம்பர் ஒன் ஜோடியான போபண்ணா- எப்டன் ஜோடி 7-5, 7(7)-6(3) என வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

    ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதியில் தாமஸ் மகாச்- ஜேனிக் சின்னெர், அலேக்சாண்டர் ஸ்வெரேவ்- பேஃபியன் மரோஸ்சன், நிக்கோலஸ் ஜார்ரி- டேனில் மெட்வதேவ், அல்காரஸ் கார்பியா- டிமிட்ரோவ் பலப்பரீட்சை நடத்துகின்றனர்.

    • சன்ரைசர்ஸ் ஐதராபாத் தனது தொடக்க லீக் ஆட்டத்தில் 4 ரன் வித்தியாசத்தில் கொல்கத்தாவிடம் போராடி தோற்றது.
    • மும்பை இந்தியன்ஸ் அணி தன்னுடைய முதல் ஆட்டத்தில் 6 ரன் வித்தியாசத்தில் குஜராத்திடம் பணிந்தது.

    ஐதராபாத்:

    ஐபிஎல் தொடரின் 8-வது லீக் போட்டியில் இன்று சன்ரைசர்ஸ் ஐதராபாத்- மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகிறது. முன்னாள் சாம்பியனான சன்ரைசர்ஸ் ஐதராபாத் தனது தொடக்க லீக் ஆட்டத்தில் 4 ரன் வித்தியாசத்தில் கொல்கத்தாவிடம் போராடி தோற்றது.

    இதேபோல் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி தன்னுடைய முதல் ஆட்டத்தில் 6 ரன் வித்தியாசத்தில் குஜராத்திடம் பணிந்தது. இதனால் முதல் வெற்றியை பெற இரு அணிகளும் போராடும்.

    இந்நிலையில் இந்த போட்டியில் விளையாடுவதன் மூலம் ரோகித் சர்மா புதிய சாதனை ஒன்றை படைக்கவுள்ளார். அது என்னவென்றால் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 200-வது போட்டியில் களமிறங்க உள்ளார். இதற்கு முன்பு விராட் கோலி மற்றும் டோனி மட்டுமே ஐபிஎல் தொடரில் ஒரு அணிக்காக 200 போட்டியில் விளையாடிய வீரர்கள் ஆவர். அந்த பட்டியலில் ரோகித் சர்மாவும் இணையவுள்ளார்.

    ஐபிஎல் தொடரில் 2008-ம் ஆண்டு அறிமுகமான ரோகித் முதலில் டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்காக விளையாடினார். அந்த அணிக்காக 2008-ம் ஆண்டு முதல் 2010-ம் ஆண்டும் வரை டெக்கான் சார்ஜர்ஸ் அணியில் இருந்தார். 2009-ம் அந்த அணி கோப்பையை வெல்ல ரோகித் சர்மா முக்கிய பங்காற்றினார். அந்த அணிக்காக 45 போட்டியில் விளையாடி 1170 ரன்கள் குவித்தார். அதன் பிறகு 2011-ம் ஆண்டில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைந்து தற்போது வரை விளையாடி வருகிறார்.

    2013-ல் ரிக்கி பாண்டிங்கிடம் இருந்து கேப்டன் பொறுப்பை ஏற்றுக் கொண்ட ரோகித், கடந்த 10 ஆண்டுகளாக மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 5 முறை ஐபிஎல் கோப்பைகளை வென்று கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×