என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • விராட் கோலியின் பிராண்ட் மதிப்பு 227.9 மில்லியன் அமெரிக்க டாலராகும்.
    • பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கின் பிராண்ட் மதிப்பு 203.1 மில்லியன் டாலராகும்.

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன் விராட் கோலி. இந்திய அணியின் முன்னாள் கேப்டனான இவர் விளம்பரம், கிரிக்கெட் வருமானம் மூலம் அதிக அகளவில் சம்பாதிக்கிறார். இதனால் அவரின் பிராண்ட் மதிப்பு எப்போதுதும் உயர்ந்ததாகவே இருந்து வருகிறது.

    தற்போது மிகவும் மதிப்புமிக்க பிரபலங்கள் பட்டியலில் ரன்வீர்சிங், ஷாருக்கான் ஆகியோரை பின்னுக்குத் தள்ளியுள்ளார்.

    இந்த வருடம் அவருடைய பிராண்ட் மதிப்பு 29 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. இதற்கு காரணம் இந்தியாவில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சிறப்பாக விளையாடியது. ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஆர்சிபி அணிக்காக சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியது முக்கிய காரணம் ஆகும்.

    க்ரோல் (Kroll) நிறுவனம் வெளியிட்டுள்ள தகவல்படி, 2023-ம் ஆண்டு விராட் கோலியின் பிராண்ட் மதிப்பு 227.9 மில்லியன் அமெரிக்க டாலராகும். 2020-ல் விராட் கோலியின் பிராண்ட் மதிப்பு 237.7 மில்லியான இருந்தது.

    பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கின் பிராண்ட் மதிப்பு 203.1 மில்லியன் டாலராகும். ஷாருக்கானின் பிராண்ட் மதிப்பு 120.7 மில்லியன் டாலராகும்.

    இந்த பட்டியலில் சச்சின் தெண்டுல்கர், எம்.எஸ். டோனியும் இடம் பிடித்துள்ளனர். எம்.எஸ்.டோனியின் பிராண்ட் மதிப்பு 95.8 மில்லியன் ஆகும். சச்சின் தெண்டுல்கரின் பிராண்ட் மதிப்பு 91.3 மில்லியன் ஆகும்.

    • டி20 உலகக் கோப்பை தொடரில் இருந்து பாகிஸ்தான் லீக் சுற்றுடன் வெளியேறியது.
    • இதனால் பாகிஸ்தான் வீரர்கள் சில கடுமையான விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ளனர்.

    புளோரிடாவில் உள்ள ஒரு நகரத்தில் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹரிஸ் ராஃப் தனது மனைவியுடன் பேசியவாறு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு சென்ற ஒருவர் ஹரிஸ் ராஃப்பை பார்த்து ஏதோ சொல்ல உடனே கோபமடைந்த ராஃப், அந்த நபரை தாக்குவதற்காக செருப்பை கூட கழற்றி விட்டு ஓடினார்.

    இதனை பார்த்த அவரது மனைவி ஹரிசை சமாதானம் படுத்த முயற்சித்தார். ஆனால் ஹரிஸ் அந்த நபரிடம் சென்று வார்த்தை போரில் ஈடுப்பட்டார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    அந்த வீடியோவில் ஹரிஸ், டிரோல் செய்தவர் ஒரு இந்தியராக இருக்க வேண்டும். என்றும் குறிப்பிட்டு இருந்தார். உடனே அந்த நபர் நான் பாகிஸ்தானை சேர்ந்தவர் என பதிலளித்தார்.

    வாக்குவாதம் தொடர்ந்ததால் ரஃப்பின் மனைவி அவரை அமைதிப்படுத்த முயன்றார். ஆனால் ஹரிஸ் அந்த நபருடன் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுப்பட்டார். இது ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

    டி20 உலகக் கோப்பை தொடரில் இருந்து பாகிஸ்தான் அணி லீக் சுற்றுடன் வெளியேறிய பிறகு, பாகிஸ்தான் வீரர்கள் சில கடுமையான விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ளனர்.

    • ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக 30 பந்துகளில் டி20 சதம் விளாசினார் கெயில்.
    • அதிக சிக்ஸர்கள் அடித்தவர்கள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தார் சௌஹான்.

    மேற்கிந்தியத் தீவுகளின் முன்னாள் வீரர் கிறிஸ் கெய்லின் அதிவேக டி20 சதம் என்ற சாதனையை இந்திய வம்சாவளி வீரர் சாஹில் சவுகான் முறியடித்துள்ளார்.

    ஐபிஎல் 2013ல் புனே வாரியர்ஸ் இந்தியாவுக்கு எதிராக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக 30 பந்துகளில் டி20 சதம் விளாசினார் கெயில்.

    27 பந்துகளில் சதம் அடித்து கெய்லின் சாதனையை எஸ்டோனியா வீரர் சாஹில் சவுகான் முறியடித்துள்ளார். எபிஸ்கோபியில் நடைபெற்ற சைப்ரஸுக்கு எதிரான சர்வதேச ஆட்டத்தில் அவர் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

    பிப்ரவரி 2024 இல் நேபாளத்திற்கு எதிராக தனது டி20 சதத்தை எட்ட 33 பந்துகளை எடுத்த நமீபிய ஜான்-நிகோல் லோஃப்டி ஈட்டனின் சாதனையை சௌஹான் முறியடித்தார் .

    எஸ்டோனியா மற்றும் சைப்ரஸ் அணிகளுக்கு இடையிலான ஆறு போட்டிகள் கொண்ட தொடரின் இரண்டாவது ஆட்டத்தில், எபிஸ்கோபியில் ஆரடவர்கள் முதலில் பேட் செய்து 191/7 ரன்கள் எடுத்தனர், தரன்ஜித் சிங் வெறும் 17 பந்துகளில் 44 ரன்கள் எடுத்தார். சைப்ரஸ் தரப்பில் சமல் சதுன் 28 ஓட்டங்களையும், எஸ்தோனியா தரப்பில் பிரனய் கீவாலா மற்றும் அர்ஸ்லான் அம்ஜத் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

    இதையடுத்து களமிறங்கிய எஸ்டோனியா அணி ஆறு விக்கெட்டுகள் மற்றும் 7 ஓவர்கள் மீதமுள்ள நிலையில் வெற்றி பெற்றது.

    இந்த போட்டியில் மொத்தமாக 18 சிக்ஸர்களை அடித்து ஆடவர் டி20யில் இன்னிங்ஸில் அதிக சிக்ஸர்கள் அடித்தவர்கள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தார் சௌஹான்.

    ஆடவர் டி20யில் இன்னிங்ஸில் இரண்டாவது அதிக சிக்ஸர்களை அடித்தவர் ஆப்கானிஸ்தானின் ஹஸ்ரதுல்லா ஜசாய், அயர்லாந்துக்கு எதிராக 16 சிக்ஸர்களை அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி பவர் பிளேயில் அதிக ரன்கள் விளாசியுள்ளனர்.
    • 91 ரன்கள் எடுத்ததே சாதனையாக இருந்தது. அதனை வெஸ்ட் இண்டீஸ் முறியடித்துள்ளது.

    செயிண்ட் லூசியா:

    டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. லீக் சுற்றின் கடைசி ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் - ஆப்கானிஸ்தான் அணிகள் இன்று மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி நிக்கோலஸ் பூரனின் அதிரடி ஆட்டத்தால் 20 ஓவர்களில் 5 விக்கெட்டை மட்டும் இழந்து 218 ரன்கள் குவித்தது.

    இதையடுத்து களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 16.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 114 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 104 ரன் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அபார வெற்றி பெற்றது.

    இந்நிலையில் இந்த ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி பவர் பிளேயில் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது. முதல் ஆறு ஓவர்களில் 1 விக்கெட்டை மட்டும் இழந்து 92 ரன்களை வெஸ்ட் இண்டீஸ் குவித்தது.

    இதன் மூலம் டி20 உலகக்கோப்பை வரலாற்றில் பவர்பிளேயில் அதிக ரன்கள் அடித்த அணி என்ற சாதனையை வெஸ்ட் இண்டீஸ் படைத்துள்ளது.

    டி20 உலகக்கோப்பை வரலாற்றில் முதல் ஆறு ஓவர்களில் அதிக ரன்கள் அடித்த அணிகள் விவரம்:-

    வெஸ்ட் இண்டீஸ் - 92 ரன் (ஆப்கானிஸ்தானுக்கு எதிராக, 2024)

    நெதர்லாந்து - 91 ரன் (அயர்லாந்துக்கு எதிராக, 2014)

    இங்கிலாந்து - 89 ரன் (தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக, 2016)

    தென் ஆப்பிரிக்கா - 83 ரன் (இங்கிலாந்துக்கு எதிராக, 2016)

    இந்தியா - 82 ரன் (ஸ்காட்லாந்துக்கு எதிராக, 2021)

    மேலும் இந்த போட்டியில் நிக்கோளஸ் பூரன் மற்றும் சார்லஸ் இணைந்து ஒரு ஓவரில் 36 ரன்கள் குவித்து சாதனை படைத்துள்ளனர். உமர்சாயின் ஓவரில் 10 எக்ஸ்ட்ராக்கள் (5 வைடுகள், ஒரு நோ-பால் மற்றும் நான்கு லெக்-பைகள்) அடங்கும்.

    ஒரே ஓவரில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள்:-

    36 - யுவராஜ் சிங் (இந்தியா) எதிராக ஸ்டூவர்ட் பிராட் (இங்கிலாந்து), டர்பன், 2007

    36 - கீரன் பொல்லார்ட் (வெஸ்ட் இண்டீஸ்) எதிராக அகிலா தனஞ்சய (இலங்கை), கூலிட்ஜ், 2021

    36 - ரோஹித் சர்மா & ரிங்கு சிங் (இந்தியா) எதிராக கரீம் ஜனத் (ஆப்கானிஸ்தான்), பெங்களூரு, 2024

    36 - திபேந்திர சிங் ஐரி (நெதர்லாந்து) எதிராக கம்ரன் கான் (குவைத்), அல் அமேரத், 2024

    36 - நிக்கோலஸ் பூரன் & ஜான்சன் சார்லஸ் (வெஸ்ட் இண்டீஸ்) எதிராக அஸ்மத்துல்லா ஓமர்சாய் (ஆப்கானிஸ்தான்), செயின்ட் லூசியா, 2024

    • நிக்கோலஸ் பூரன் 53 பந்துகளில் 8 சிக்சர்கள், 6 பவுண்டரிகள் உள்பட 98 ரன்கள் குவித்தார்.
    • கிறிஸ் கெயில்ஸ் 124 சிக்சர்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

    செயிண்ட் லூசியா:

    டி20 உலகக் கோப்பை தொடரின் 40-வது போட்டியில் ஆப்கானிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 218 ரன்களை குவித்தது. நிக்கோலஸ் பூரன் அதிரடியாக ஆடி 53 பந்துகளில் 8 சிக்சர்கள், 6 பவுண்டரிகள் உள்பட 98 ரன்களை குவித்தார்.

    அடுத்து ஆடிய ஆப்கானிஸ்தான் 114 ரன்களில் ஆல் அவுட்டானது. இதன்மூலம் 104 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அபார வெற்றி பெற்றது.

    இந்நிலையில், இந்தப் போட்டியில் 8 சிக்சர்களை விளாசியதன் மூலம் நிக்கோலஸ் பூரன் 128 சிக்சர்களை விளாசி அதிக சிக்சர்களை அடித்த வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.

    இதன்மூலம் சர்வதேச டி20 போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக அதிக சிக்சர்களை விளாசிய கிறிஸ் கெயிலின் சாதனையை நிக்கோலஸ் பூரன் முறியடித்துள்ளார்.

    கிறிஸ் கெயில்ஸ் 124 சிக்சர்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

    • தென்ஆப்பிரிக்கா அணி லீக் சுற்றில் நான்கு ஆட்டங்களிலும் வெற்றி பெற்றது.
    • தென்ஆப்பிரிக்காவுக்கு அதிர்ச்சி அளித்து வெற்றி பெறும் ஆர்வத்தில் அமெரிக்கா உள்ளது.

    வாஷிங்டன்:

    20 ஓவர் உலக கோப்பை போட்டி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் கடந்த 2-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது.

    20 நாடுகள் இந்த தொடரில் பங்கேற்றன. அவை நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டன. லீக் சுற்று ஆட்டங்கள் இன்றுடன் முடிந்தது.

    சூப்பர்-8 சுற்றுக்கு இந்தியா, அமெரிக்கா (குரூப் ஏ) ஆஸ்திரேலியா, இங்கிலாந்து (பி), ஆப்கானிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் (சி), தென் ஆப்பிரிக்கா, வங்காளதேசம் (டி) ஆகிய அணிகள் தகுதி பெற்றன. முன்னாள் சாம்பியன்களான பாகிஸ்தான், இலங்கை மற்றும் நியூசிலாந்து, நெதர்லாந்து, அயர்லாந்து, கனடா, ஸ்காட்லாந்து, நமீபியா, ஓமன், உகாண்டா, பப்புவா நியூ கினியா, நேபாளம் ஆகிய அணிகள் வெளியேற்றப்பட்டன.

    சூப்பர்-8 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு உள்ளன. குரூப் 1-ல் இந்தியா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் ஆகிய அணிகளும், குரூப் 2-ல் இங்கிலாந்து, வெஸ்ட்இண்டீஸ், தென் ஆப்பிரிக்கா, அமெரிக்கா ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன.

    ஒவ்வொரு பிரிவிலும் உள்ள அணிகள் தங்களுக்குள் தலா ஒரு முறை மோதும். இதன் முடிவில் இரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு முன்னேறும்.


    சூப்பர்-8 சுற்று நாளை தொடங்குகிறது. இதில் நாளை இரவு 8 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா-அமெரிக்கா அணிகள் மோதுகின்றன. தென் ஆப்பிரிக்கா அணி லீக் சுற்றில் நான்கு ஆட்டங்களிலும் வெற்றி பெற்றது.

    அந்த அணி பேட்டிங்கில் டி காக்,ஹென்ரிக்ஸ், கேப்டன் மார்க்ரம், கிளாசன், ஸ்டெப்ஸ், டேவிட் மில்லர் ஆகியோர் உள்ளனர். பந்துவீச்சில் நார்ஜே, ரபடா, மார்கோ ஜேனசன் ஆகியோர் உள்ளனர். தென் ஆப்பிரிக்கா தனது வெற்றி உத்வேகத்தை தொடரும் முனைப்பில் உள்ளது.

    முதல் முறையாக உலக கோப்பையில் விளையாடும் அமெரிக்கா அணி, அடுத்த சுற்றுக்கு முன்னேறி அசத்தி உள்ளது. லீக் சுற்றில் பாகிஸ்தான், கனடா ஆகிய அணிகளை வீழ்த்தியது. இந்தியாவிடம் தோற்றது. அயர்லாந்துக்கு எதிரான ஆட்டம் மழையால் ரத்து ஆனது.

    அந்த அணியில் ஸ்டீவன் டெய்லர், ஆரோன் ஜோன்ஸ், ஆண்ட்ரிஸ் கவுஸ், மோனாத் பட்டேல், நிதிஷ்குமார், கோரி ஆண்டர்சன், அலிகான், சவுரவ் நேத்ராவல்கர் ஆகிய வீரர்கள் உள்ளனர்.

    தென்ஆப்பிரிக்காவுக்கு அதிர்ச்சி அளித்து வெற்றி பெறும் ஆர்வத்தில் அமெரிக்கா உள்ளது.

    • நிக்கோலஸ் பூரன் அதிரடியாக ஆடி 53 பந்துகளில் 98 ரன்களை குவித்தார்.
    • 114 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

    டி20 உலகக் கோப்பை தொடரின் 40-வது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது.

    அதன்படி முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு துவக்க வீரர் பிரெண்டன் கிங் 7 ரன்களில் ஆட்டமிழந்தார். இவருடன் களமிறங்கிய ஜான்சன் சார்லஸ் 27 பந்துகளில் 43 ரன்களை சேர்த்தார். அடுத்து வந்த நிக்கோலஸ் பூரன் அதிரடியாக ஆடி 53 பந்துகளில் 98 ரன்களை குவித்தார்.

    இதன் மூலம் அந்த அணியின் ஸ்கோர் அதிகரித்தது. இவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஷாய் ஹோப் மற்றும் கேப்டன் பொவெல் முறையே 25 மற்றும் 26 ரன்களை அடித்தனர். போட்டி முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 218 ரன்களை குவித்தது. ஆப்கானிஸ்தான் சார்பில் குலாப்தின் நயிப் விக்கெட்டுகளையும், ஒமர்சாய் மற்றும் நவீன் உல் ஹக் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

    கடின இலக்கை துரத்திய ஆப்கானிஸ்தான் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் குர்பாஸ் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். இவருடன் களமிறங்கிய இப்ராகிம் 38 ரன்களை சேர்த்தார். அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

    இதனால் அந்த அணி ரன் குவிக்க முடியாமல் திணறியது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் அபார பந்துவீச்சு காரணமாக ஆப்கானிஸ்தான் அணி 16.2 ஓவர்களில் 114 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி 104 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ஒபெட் மெக்காய் 3 விக்கெட்டுகளையும், அகெயில் ஹொசைன் மற்றும் குடகேஷ் மோட்டி தலா 2 விக்கெட்டுகளையும், ஆண்ட்ரே ரசல் மற்றும் அல்சாரி ஜோசப் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

    • ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான யூரோ கோப்பை கால்பந்து போட்டி ஜெர்மனியில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
    • ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் என 6 பிரிவுகளாக பிரித்து லீக் போட்டி நடைபெறுகிறது.

    ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான யூரோ கோப்பை கால்பந்து போட்டி ஜெர்மனியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. சுமார் 3 ஆயிரம் கோடி ரூபாய் பரிசுத்தொகை கொண்ட இந்தப் போட்டியில் ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ் உள்ளிட்ட 24 அணிகள் பங்கேற்றுள்ளன.

    ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் என 6 பிரிவுகளாக பிரித்து லீக் போட்டி நடைபெறுகிறது. இதில் க்ரூப் இ பிரிவில் பெல்ஜியம் மற்றும் ஸ்லோவாகியா அணி மோதின. போட்டியில் முதல் கோலை ஸ்லோவேகியா அணி 56 நிமிடத்தில் அடித்தது.

    இதையடுத்து பெல்ஜியம் அணியால் எவ்வளவு போராடியும் கோல் அடிக்க இயலவில்லை. இதனால் இந்த போட்டியில் ஸ்லோவேகியா அணி 1-0 என்ற அடிப்படையில் வெற்றி பெற்றது.

    இந்த வெற்றியின் மூலம் க்ரூப் இ பிரிவில் ஸ்லோவேகியா முதலிடம் பிடித்து அசத்தியுள்ளது. இது யாரும் எதிர்பார்க்காத வெற்றியாகும்.ஸ்டனீஸ்லாவ்  ரொபொட் ஆட்ட நாய்கனாக் தேர்வு செய்யப்பட்டார்.

    • ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான யூரோ கோப்பை கால்பந்து போட்டி ஜெர்மனியில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
    • கோலோ காண்ட் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

    ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான யூரோ கோப்பை கால்பந்து போட்டி ஜெர்மனியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. சுமார் 3 ஆயிரம் கோடி ரூபாய் பரிசுத்தொகை கொண்ட இந்தப் போட்டியில் ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ் உள்ளிட்ட 24 அணிகள் பங்கேற்றுள்ளன.

    ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் என 6 பிரிவுகளாக பிரித்து லீக் போட்டி நடைபெறுகிறது. இதில் க்ரூப் டி பிரிவில் ஆஸ்டிரியா மற்றும் ஃப்ரான்ஸ் மோதின. முதல் பாதியில் எந்த அணியும் கோலை அடிக்கவில்லை. இரண்டாம் பாதியில் ஆட்டம் சூடுப்பிடித்து 1-0 என்ற கோல் கணக்கில் ஆஸ்டிரியாவை வீழ்த்தியது பிரான்ஸ்.

    கோலோ காண்ட் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

    • டி20 உலகக் கோப்பை தொடரில் இருந்து வெற்றியுடன் விடைபெற்றது.
    • பெர்குசன் டி20 கிரிக்கெட்டில் அபார சாதனை படைத்தார்.

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்றிரவு நடைபெற்ற போட்டியில் நியூசிலாந்து மற்றும் பப்புவா நியூ கினியா அணிகள் மோதின. இரு அணிகளும் ஏற்கனவே தொடரில் இருந்து வெளியேறி விட்டன. அந்த வகையில், இந்த போட்டி தொடரில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை.

    சம்பிரதாய அடிப்படையில் நடைபெற்ற இந்த போட்டியில் நியூசிலாந்து அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் அந்த அணி டி20 உலகக் கோப்பை தொடரில் இருந்து வெற்றியுடன் விடைபெற்றது.

     


    இந்த போட்டியில் நியூசிலாந்து அணியின் லாக்கி பெர்குசன் டி20 கிரிக்கெட்டில் அபார சாதனை படைத்துள்ளார். நேற்றைய போட்டியில் நான்கு ஓவர்கள் பந்துவீசிய பெர்குசன் அவை அனைத்தையும் மெய்டென்களாக (ரன் ஏதும் கொடுக்காமல்) வீசினார். நான்கு ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

    முன்னதாக கனடா அணி கேப்டன் சாத் பின் சஃபார் டி20 கிரிக்கெட்டில் தான் வீசிய நான்கு ஓவர்களில் ரன் ஏதும் விட்டுக்கொடுக்காமல் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். அந்த வகையில், டி20 கிரிக்கெட்டில் நான்கு ஓவர்களையும் மெய்டென்களாக வீசிய இரண்டாவது வீரர் என்ற பெருமையை பெர்குசன் பெற்றிருக்கிறார். 

    • பெர்குசன் நான்கு ஓவர்களை மெய்டென்களாக வீசி 3 விக்கெட்டுகளை எடுத்தார்.
    • டெவான் கான்வே அதிகபட்சமாக 35 ரன்களை எடுத்தார்.

    டி20 உலகக் கோப்பை தொடரின் 39-வது போட்டி நேற்றிரவு நடைபெற்றது. மழை காரணமாக இந்த போட்டி தாமதமாக துவங்கியது.இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது.

    பப்புவா நியூ கினியா அணிக்கு துவக்க வீரர்கள் டோனி உரா (1) மற்றும் கேப்டன் அசாத் வாலா (6) சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். அடுத்து களமிறங்கிய சார்லெஸ் அமினி மற்றும் சீஸ் பௌ முறையே 17 மற்றும் 12 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த வீரர்களும் சொற்ப ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தனர்.

    இதன் மூலம் அந்த அணி 19.4 ஓவர்களில் வெறும் 78 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. நியூசிலாந்து சார்பில் அபாரமாக பந்துவீசிய பெர்குசன் நான்கு ஓவர்களை மெய்டென்களாக வீசி 3 விக்கெட்டுகளை எடுத்தார். இவர் தவிர டிரெண்ட் பௌல்ட், டிம் சவுதி மற்றும் இஷ் சோதி தலா 2 விக்கெட்டுகளையும், மிட்செல் சாண்ட்னர் 1 விக்கெட் வீழ்த்தினர்.

    எளிய இலக்கை துரத்திய நியூசிலாந்து அணி 12.3 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை இழந்து 79 ரன்களை எடுத்தது. நியூசிலாந்து சார்பில் டெவான் கான்வே அதிகபட்சமாக 35 ரன்களை எடுத்தார். இதன் மூலம் அந்த அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பப்புவா நியூ கினியா சார்பில் கபுவா மொரி 2 விக்கெட்டுகளையும், செமோ கமியா 1 விக்கெட் வீழ்த்தினர். 

    • நான் இந்தியாவுக்காக விளையாட விரும்பினேன், அது இறுதியாக தற்போது நடந்துள்ளது.
    • 33 வயதில் நான் ஒருநாள் அணிக்காக அறிமுகமாகியுள்ளேன் என்பதால் இதை அதிசயம் என்று சொல்வேன்.

    தென் ஆப்பிரிக்க மகளிர் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களிலும், ஒரே ஒரு டெஸ்ட் போட்டியிலும் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி நேற்று பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது.

    இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிர் அணி ஸ்மிருதி மந்தனாவின் அபாரமான சதத்தின் மூலம் 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 265 ரன்களைச் சேர்த்தது.

    அதன்பின் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க மகளிர் அணியானது 37.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்ததுடன் வெறும் 122 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணி தரப்பில் அறிமுக வீராங்கனை ஆஷா சோபனா 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர்.

    33 வயதில் நான் ஒருநாள் அணிக்காக அறிமுகமாகியுள்ளேன் என்பதால் இதை அதிசயம் என்று சொல்வேன் என ஆஷா சோபனா கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    என்னிடம் தற்போது பேச வார்த்தைகளே கிடையாது. ஏனேனில் நான் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்த போது ஒருநாள் கிரிக்கெட்டை இதுநாள் வரை டிவியில் மட்டுமே பார்த்திருக்கிறேன். அப்போது நான் இந்தியாவுக்காக விளையாட விரும்பினேன், அது இறுதியாக தற்போது நடந்துள்ளது.

    இந்தியாவுக்காக ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடுவது எனக்கு ஒரு கனவு. அந்த கனவு தற்போது நனவாகியுள்ளது. 33 வயதில் நான் ஒருநாள் அணிக்காக அறிமுகமாகியுள்ளேன் என்பதால் இதை அதிசயம் என்று சொல்வேன். எனது முதல் சர்வதேச விக்கெட்டாக மரிஸான் கேப்பின் விக்கெட்டை வீழ்த்தியது சிறப்பு வாய்ந்த தருணம். ஏனெனில், சில நாள்களுக்கு முன் நான் என்சியாவில் இருந்த போது ஜெமிமாவிடம் உரையாடிக்கொண்டிருந்தேன்.

    அப்போது நான் அவரிடம், எனது அறிமுக விக்கெட்டாக மரிஸான் கேப்பின் விக்கெட் இருக்க வேண்டும் என்று கூறினேன். நீங்கள் எந்தப் போட்டியில் விளையாடினாலும், மரிஸான் கேப்பின் விக்கெட்டைப் பெறுவது எப்போதும் சிறப்பு வாய்ந்தது. ஏனெனில் அவர் சர்வதேச கிரிக்கெட்டில் பல சாதனைகளை படைத்துள்ளதுடன், தற்போது விளையாடி வரும் அனுபவ வாய்ந்த வீராங்கனைகளில் ஒருவரும் கூட. அவரைது விக்கெட்டை வீழ்த்த கடவுள் கருணை காட்டியுள்ளார்.

    இவ்வாறு ஆஷா கூறினார்.

    ×