என் மலர்
விளையாட்டு
- முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் அணி 556 ரன்கள் குவித்தது.
- பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 823 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
முல்தான்:
பாகிஸ்தான்- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி முல்தானில் 7-ந் தேதி தொடங்கியது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்த பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 149 ஓவரில் 556 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதனை தொடர்ந்து முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து 823 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
இதையடுத்து, 267 ரன்கள் பின்தங்கிய நிலையில் பாகிஸ்தான் 2-வது இன்னிங்சை தொடங்கியது. ஆகா ஜமான், ஆமீர் ஜமால் ஆகியோரை தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேறினர்.
இதனால் பாகிஸ்தான் அணி 220 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 47 ரன்கள் வித்தியாசத்தி வெற்றி பெற்றது. இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் இங்கிலாந்து முன்னிலை பெற்றுள்ளது.
இந்த டெஸ்ட்டில் தோல்வியடைந்ததன் மூலம் 148 ஆண்டு கால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் பாகிஸ்தான் அணி மோசனமான சாதனையை படைத்துள்ளது. ஒரு அணி முதல் இன்னிங்சில் 500 ரன்கள் மேல் குவித்து தோல்வியடைந்த முதல் அணி பாகிஸ்தான் ஆகும்.
- நியூசிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது.
- இந்த தொடர் வருகிற 16-ந் தேதி தொடங்குகிறது.
சமீபத்தில் நடந்து முடிந்த வங்கதேசதுக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதனை தொடர்ந்து டி20 தொடரில் இந்திய அணி விளையாடுகிறது.
இந்த தொடரை இந்தியா 2-0 என்ற கணக்கில் கைப்பற்றிய நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான கடைசி டி20 போட்டி நாளை நடைபெற உள்ளது.
இதனை தொடர்ந்து நியூசிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது. இந்த தொடர் வருகிற 16-ந் தேதி தொடங்குகிறது.
இந்நிலையில் இந்த தொடருக்காக இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா வலை பயிற்சியில் தீவிரமாக இறங்கி உள்ளார். வங்கதேசதுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. இதனால் நியூசிலாந்து எதிரான தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்ற கட்டாயத்தில் ரோகித் சர்மா உள்ளார்.
இதனால் தீவிர வலைபயிர்ச்சியில் ரோகித் ஈடுப்பட்டு வருகிறார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்கில் வைரலாகி வருகிறது.
- பாகிஸ்தானை இன்னிங்ஸ் மற்றும் 47 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வீழ்த்தியது.
- முச்சதம் விளாசிய ஹாரி ப்ரூக் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
முல்தான்:
பாகிஸ்தான்- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி முல்தானில் 7-ந் தேதி தொடங்கியது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்த பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 149 ஓவரில் 556 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஷான் மசூத் 151 ரன், ஆகா சல்மான் 104 ரன், ஷபீக் 102 ரன்கள் எடுத்தனர்.
அதனை தொடர்ந்து முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து நான்காம் நாளில் 7 விக்கெட்டுக்கு 823 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. ஹாரி புரூக் 317 ரன்னும் ஜோ ரூட் 262 ரன்னும் அடித்து ஆட்டமிழந்தனர்.
இதையடுத்து, 267 ரன்கள் பின்தங்கிய நிலையில் பாகிஸ்தான் 2-வது இன்னிங்சை தொடங்கியது. முன்னணி வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை. இதனால் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்தன. அந்த அணி 82 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து திணறியது.
இதனையடுத்து 7வது விக்கெட்டுக்கு ஆகா ஜமான், ஆமீர் ஜமால் ஜோடி தாக்குப் பிடித்து ஆடியது. இதனால் 4-ம் நாள் ஆட்ட நேர முடிவில் பாகிஸ்தான் 6 விக்கெட் இழப்புக்கு 152 ரன்கள் எடுத்துள்ளது. ஆகா ஜமான் 41 ரன்னும், ஆமீர் ஜமால் 27 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இந்நிலையில் இன்று கடைசி ஆட்டம் தொடங்கியது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரை சதம் விளாசினர். 63 ரன்கள் எடுத்த நிலையில் சல்மான் அவுட் ஆனார். அடுத்து வந்த வீரர்கள் அப்ரிடி, நசீம் ஷா, என அடுத்தடுத்டு வெளியேறினர். அப்ரார் அகமது காயம் காரணமாக வெளியேறினார்.
இதனால் பாகிஸ்தான் அணி 220 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஜாமன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 55 ரன்களுடன் இருந்தார். இதனால் இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 47 ரன்கள் வித்தியாசத்தி வெற்றி பெற்றது. இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் இங்கிலாந்து முன்னிலை பெற்றுள்ளது.
- ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கியது.
- இந்த தொடரில் இந்திய டி20 அணியின் கேப்டன் சூர்யகுமார் விளையாட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
புதுடெல்லி:
இந்தியாவின் பிரபலமான முதல்தர கிரிக்கெட்டான ரஞ்சி கோப்பை போட்டி ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி இந்த சீசனுக்கான 90-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் (4 நாள் ஆட்டம்) டெல்லி, ஜெய்ப்பூர், லக்னோ, நாக்பூர், இந்தூர் உள்பட பல்வேறு நகரங்களில் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. 2 கட்டமாக அடுத்த ஆண்டு மார்ச் 2-ந் தேதி வரை இந்த போட்டி நடக்கிறது.
இதில் மொத்தம் 38 அணிகள் பங்கேற்கின்றன.
இந்த போட்டியில் இஷான் கிஷன் (ஜார்கண்ட்), ஸ்ரேயாஸ் அய்யர், ரஹானே, பிரித்வி ஷா (மும்பை), அபிமன்யு ஈஸ்வரன், விருத்திமான் சஹா (பெங்கால்), ருதுராஜ் கெய்க்வாட் (மராட்டியம்), சாய் சுதர்சன் (தமிழ்நாடு), புஜாரா (சவுராஷ்டிரா), ஹனுமா விஹாரி (ஆந்திரா), மயங்க் அகர்வால் (கர்நாடகா) உள்ளிட்ட முன்னணி வீரர்கள் களம் காணுகிறார்கள். இதனால் இந்த போட்டி மிகுந்த எதிர்பார்ப்புக்கு உள்ளாகி இருக்கிறது. தமிழக ஆல்-ரவுண்டர் பாபா அபராஜித் இந்த சீசனில் கேரளா அணிக்காக ஆடுகிறார்.
இந்நிலையில் இந்திய டி20 அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் இந்த தொடரில் விளையாட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் வங்கதேசம் அணிக்கு எதிரான டி20 தொடர் நாளையுடன் முடிவடைய உள்ளது. இந்த தொடர் முடிந்தவுடன் மும்பை அணிக்காக அவர் விளையாட உள்ளார். அவர் 2-வது போட்டியில் மகாராஷ்டிராவுக்கு எதிரான விளையாட வாய்ப்புள்ளது.
- பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் தொடர் வரும் நவம்பர் மாதம் தொடங்க உள்ளது.
- கடைசியாக ஆஸ்திரேலியாவில் விளையாடிய 2 தொடர்களிலும் இந்தியா முதல் முறையாக வென்று சரித்திரம் படைத்தது.
ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா விளையாடும் 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் தொடர் வரும் நவம்பர் மாதம் தொடங்க உள்ளது. கடைசியாக ஆஸ்திரேலியாவில் விளையாடிய 2 தொடர்களிலும் இந்தியா முதல் முறையாக வென்று சரித்திரம் படைத்தது.
அந்த வரிசையில் இம்முறை ரோகித் சர்மா தலைமையில் களமிறங்கி ஆஸ்திரேலியாவில் ஹாட்ரிக் வெற்றியை பெற இந்தியா தயாராகி வருகிறது. மறுபுறம் கடந்த 2 தோல்விகளுக்கு பதிலடி கொடுத்து இந்தியாவை வீழ்த்த ஆஸ்திரேலியா தயாராகி வருகிறது.
இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதலிரண்டு போட்டிகளில் ஏதேனும் ஒன்றில் கேப்டன் ரோகித் சர்மா விலகுவதற்கு வாய்ப்புள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. குறிப்பாக தம்முடைய சொந்த காரணங்களுக்காக முதலிரண்டு போட்டிகளின் ஒன்றில் விடுப்பு கொடுக்குமாறு பிசிசிஐயிடம் ரோகித் சர்மா இப்போதே அனுமதி கேட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
இது பற்றி பிசிசிஐ நிர்வாகி ஒருவர் கூறியதாவது:-
தனிப்பட்ட விவகாரம் காரணமாக பார்டர் கவாஸ்கர் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் ஒன்றை தவிர்க்க வாய்ப்புள்ளதாக பிசிசிஐயிடம் ரோகித் சர்மா தெரிவித்ததாக தெரிகிறது. ஒருவேளை தொடர் துவங்குவதற்கு முன்பாக அந்த சொந்த காரணம் தீர்க்கப்பட்டால் ரோகித் சர்மா 5 போட்டிகளிலும் விளையாடுவார். அது அடுத்து வரும் நாட்களில் தெரிய வரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- 4-ம் நாள் ஆட்டநேர முடிவில் பாகிஸ்தான் அணியானது 6 விக்கெட்டுகளை இழந்து 152 ரன்களை எடுத்தது.
- இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக ஹாரி புரூக் 317 ரன்களும், ஜோ ரூட் 262 ரன்களையும் சேர்த்தனர்.
பாகிஸ்தான்- இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி முல்தானில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணியானது முதல் இன்னிங்சில் 556 ரன்களைக் குவித்தது.
இதனையடுத்து இங்கிலாந்து அணி 7 விக்கெட் இழப்புக்கு 823 ரன்களை குவித்து இன்னிங்சை டிக்ளர் செய்ததுடன், முதல் இன்னிங்சில் 267 ரன்கள் முன்னிலையும் பெற்றுள்ளது.
இதனையடுத்து 2-வது இன்னிங்சைத் தொடங்கியுள்ள பாகிஸ்தான் அணியானது அடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. இதனால் 4-ம் நாள் ஆட்டநேர முடிவில் பாகிஸ்தான் அணியானது 6 விக்கெட்டுகளை இழந்து 152 ரன்களை மட்டுமே சேர்த்துள்ளது.
முன்னதாக இந்த போட்டியில் ஜோ ரூட் மற்றும் ஹாரி ப்ரூக் ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இந்த ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 450 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர். இதன்மூலம் இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக ஹாரி புரூக் 317 ரன்களும், ஜோ ரூட் 262 ரன்களையும் சேர்த்தனர்.
இதன் வாயிலாக பாகிஸ்தானுக்கு எதிராக ஒரு டெஸ்ட் இன்னிங்சில் எந்த ஒரு விக்கெட்டுக்கும் அதிக ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த ஜோடியாகவும் அவர்கள் உலக சாதனை படைத்துள்ளனர். இதற்கு முன் 1958-ம் ஆண்டு கிங்ஸ்டன் மைதானத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் கேரி சோபர்ஸ் - கோன்ரட் ஹண்டே 446 ரன்கள் அடித்ததே முந்தைய சாதனையாக இருந்தது. அந்த சாதனையை இந்த ஜோடி முறியடித்துள்ளது.
- ஹாரி ப்ரூக் 28 பவுண்டரி 3 சிக்சருடன் 317 (322) ரன்கள் குவித்தார்.
- இங்கிலாந்து 4 விக்கெட்டுகள் வீழ்த்தினால் பாகிஸ்தானை வீழ்த்தி விடும்.
பாகிஸ்தான்- இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அக்டோபர் 7-ம் தேதி துவங்கியது. அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 556 ரன்கள் குவித்து அசத்தியது. அதிகபட்சமாக கேப்டன் ஷான் மசூத் 151, அப்துல்லா ஷபிக் 102, ஆகா சல்மான் 104* ரன்கள் எடுத்தனர்.
இங்கிலாந்துக்கு அதிகபட்சமாக ஜாக் லீச் 3 விக்கெட்டுகள் எடுத்தனர். அதைத் தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து 823-7 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. அதிகபட்சமாக ஹரி ப்ரூக் 317, ஜோ ரூட் 262 ரன்கள் எடுத்தனர். இதனால் பாகிஸ்தானுக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த அணியாக இங்கிலாந்து உலக சாதனை படைத்தது.
பாகிஸ்தானுக்கு அதிகபட்சமாக நாசிம் சா 2, சாய்ம் ஆயுப் 2 விக்கெட்டுகளை எடுத்தனர். பின்னர் 267 ரன்கள் பின்தங்கிய நிலையில் விளையாடும் பாகிஸ்தான் 4-ம் நாள் முடிவில் 152-6 என தோல்வியை தவிர்க்க போராடி வருகிறது. பாபர் அசாம் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் ஏமாற்றத்தை கொடுத்த அந்த அணிக்கு களத்தில் ஆகா சல்மான் 41*, அமீர் ஜமால் 27* ரன்களுடன் போராடி வருகின்றனர்.
முன்னதாக இந்தப் போட்டியில் ஹாரி ப்ரூக் 28 பவுண்டரி 3 சிக்சருடன் 317 (322) ரன்கள் குவித்தார். இதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் பாகிஸ்தானுக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த வீரர் என்ற இந்திய ஜாம்பவான் வீரேந்திர சேவாக் சாதனையை உடைத்துள்ள அவர் புதிய உலக சாதனை படைத்துள்ளார்.
இதற்கு முன் கடந்த 2004-ம் ஆண்டு இதே முல்தான் மைதானத்தில் வீரேந்திர சேவாக் பாகிஸ்தானுக்கு எதிராக 309 ரன்கள் அடித்ததே முந்தைய சாதனையாகும். இது போக 310 பந்துகளில் 300 ரன்கள் அடித்த ஹரி ப்ரூக் டெஸ்ட் கிரிக்கெட்டில் 2-வது அதிவேகமான முச்சதத்தை அடித்த வீரர் என்ற மேத்தியூ ஹைடன் (362 பந்துகள்) சாதனையை உடைத்து புதிய சாதனை படைத்துள்ளார். முதலிடத்தில் இப்போதும் இந்தியாவின் சேவாக் உள்ளார். (278 பந்துகள், தென்னாபிரிக்காவுக்கு எதிராக சென்னை 2008).
- பாகிஸ்தான் அணி ஒரு வெற்றி, ஒரு தோல்வியுடன் 2 புள்ளிகள் பெற்று இருக்கிறது.
- அரைஇறுதி வாய்ப்பில் நீடிக்க இன்றைய ஆட்டத்தில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டிய நெருக்கடியுடன் களம் இறங்குகிறது.
துபாய்:
9-வது மகளிர் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் சார்ஜாவில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.
இந்த நிலையில் துபாயில் இன்று இரவு 7.30 மணிக்கு அரங்கேறும் 14-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலிய அணி, பாகிஸ்தானை (ஏ பிரிவு) எதிர்கொள்கிறது. அலிசா ஹீலி தலைமையிலான ஆஸ்திரேலியா ஏற்கனவே இலங்கை, நியூசிலாந்தை தோற்கடித்துள்ளது. இன்றைய ஆட்டத்திலும் வெற்றி பெற்று அரைஇறுதியை உறுதி செய்யும் வேட்கையுடன் தயாராகிறது.
பாகிஸ்தான் அணி ஒரு வெற்றி, ஒரு தோல்வியுடன் 2 புள்ளிகள் பெற்று இருக்கிறது. அரைஇறுதி வாய்ப்பில் நீடிக்க இன்றைய ஆட்டத்தில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டிய நெருக்கடியுடன் களம் இறங்குகிறது. திடீர் பின்னடைவாக அந்த அணியின் கேப்டன் பாத்திமா சனாவின் தந்தை மரணம் அடைந்து விட்டதால் அவர் அவசரமாக தாயகம் திரும்பியுள்ளார். இதனால் இன்றைய ஆட்டத்தில் பாத்திமாவுக்கு பதிலாக விக்கெட் கீப்பர் முனீபா அலி அணியை வழிநடத்துவார் என்று தெரிகிறது.
சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணி, ஆஸ்திரேலியாவை ஒரு போதும் வென்றதில்லை. இதுவரை அந்த அணிக்கு எதிராக மோதியுள்ள 15 ஆட்டங்களில் 13-ல் தோற்றுள்ளது. 2 ஆட்டத்தில் முடிவில்லை. பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளிக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
இதற்கிடையே சார்ஜாவில் நேற்றிரவு நடந்த பி பிரிவு ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வங்காளதேசத்தை வீழ்த்தியது. இதில் வங்காளதேசம் நிர்ணயித்த 104 ரன் இலக்கை வெஸ்ட் இண்டீஸ் 12.5 ஓவர்களில் எட்டிப்பிடித்தது.
- இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 823 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
- ஹாரி புரூக் முச்சதமும், ஜோ ரூட் இரட்டை சதமும் அடித்து அசத்தினர்.
முல்தான்:
பாகிஸ்தான், இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி முல்தானில் நடந்து வருகிறது.
டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்த பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 149 ஓவரில் 556 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஷான் மசூத் 151 ரன், ஆகா சல்மான் 104 ரன், ஷபீக் 102 ரன்கள் எடுத்தனர்.
தொடர்ந்து முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து நான்காம் நாளில் 7 விக்கெட்டுக்கு 823 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. ஹாரி புரூக் 317 ரன்னும் ஜோ ரூட் 262 ரன்னும் அடித்து ஆட்டமிழந்தனர்.
இதையடுத்து, 267 ரன்கள் பின்தங்கிய நிலையில் பாகிஸ்தான் இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. முன்னணி வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை. இதனால் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்தன. அந்த அணி 82 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து திணறியது.
7வது விக்கெட்டுக்கு ஆகா ஜமான், ஆமீர் ஜமால் ஜோடி தாக்குப் பிடித்து ஆடியது.
நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் பாகிஸ்தான் 6 விக்கெட் இழப்புக்கு 152 ரன்கள் எடுத்துள்ளது. ஆகா ஜமான் 41 ரன்னும், ஆமீர் ஜமால் 27 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
பாகிஸ்தான் அணி இன்னும் 115 ரன்கள் பின் தங்கியுள்ளது. இன்று கடைசி நாள் என்பதால் இங்கிலாந்து அணி மீதமுள்ள 4 விக்கெட்களைக் கைப்பற்றும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
- ஆர்க்டிக் ஓபன் பேட்மிண்டன் தொடர் பின்லாந்தில் நடந்து வருகிறது.
- இதில் இந்திய வீரர் லக்ஷயா சென் தோல்வி அடைந்தார்.
வான்டா:
ஆர்க்டிக் ஓபன் பேட்மிண்டன் தொடர் பின்லாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா சார்பில் பி.வி.சிந்து, லக்ஷயா சென் உள்ளிட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது ஆட்டத்தில் இந்தியாவின் லக்ஷயா சென், சீன தைபே வீரரான சோ டின் சென் உடன் மோதினார்.
இதில் லக்ஷயா சென் 21-19, 18-21, 15-21 என்ற புள்ளிக்கணக்கில் அதிர்ச்சி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.
ஏற்கனவே இந்தியாவின் பி.வி.சிந்து முதல் சுற்றில் தோல்வி அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- முதலில் ஆடிய வங்கதேசம் 103 ரன்கள் எடுத்தது.
- அடுத்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் எளிதில் வெற்றி பெற்றது.
ஷார்ஜா:
9-வது மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் சார்ஜாவில் நடந்து வருகிறது.
இந்நிலையில், இன்று ஷார்ஜாவில் நடைபெற்ற 13-வது லீக் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ், வங்கதேசம் அணிகள் மோதின. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த வங்கதேச அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 103 ரன்கள் மட்டுமே எடுத்தது. நிகர் சுல்தானா அதிகமாக 39 ரன்கள் எடுத்தார்.
வெஸ்ட் இண்டீஸ் சார்பில் கரீஷ்மா 4 விக்கெட்டும், பிளெட்சர் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
தொடர்ந்து, 104 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் 12.5 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 104 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. கேப்டன் ஹெய்லி மேத்யூஸ் 34 ரன்கள் எடுத்தார்.
நடப்பு தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணி பெற்ற இரண்டாவது வெற்றி இதுவாகும்.
- ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி சீனாவில் நடந்து வருகிறது.
- இதில் நம்பர் 5 வீரரான மெத்வதேவ் காலிறுதியில் தோல்வி அடைந்தார்.
பீஜிங்:
பல முன்னணி வீரர்கள் பங்கேற்றுள்ள ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி சீனாவில் நடைபெற்று வருகிறது.
இதில் இன்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் நம்பர் 5 வீரரான ரஷியாவின் டேனில் மெத்வதேவ், நம்பர் 1 வீரரான இத்தாலி வீரர் சின்னருடன் மோதினார்.
இதில் சின்னர் 6-4, 6-1 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார். இதன்மூலம் மெத்வதேவ் தொடரில் இருந்து வெளியேறினார்.
மற்றொரு காலிறுதியில் நம்பர் 3 வீரரான ஸ்பெயின் வீரரான கார்லோஸ் அல்காரஸ், செக் வீரர் தாமஸ் மசாக் உடன் மோதினார்.
இதில் அல்காரஸ் 6-7 (5-7), 5-7 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.






