என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 149 ஓவரில் 556 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    • இந்த டெஸ்ட் போட்டியில் 310 பந்துகளில் முச்சதத்தை கடந்து ஹாரி புரூக் சாதனை படைத்துள்ளார்

    பாகிஸ்தான், இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி முல்தானில் நடந்து வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 149 ஓவரில் 556 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பாகிஸ்தான் தரப்பில் ஷபீக் 102 ரன், ஷான் மசூத் 151 ரன், ஆகா சல்மான் 104 ரன்கள் எடுத்தனர்.

    தொடர்ந்து முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து மூன்றாம் நாள் முடிவில் 7 விக்கெட்டுக்கு 823 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. ஹாரி புரூக் 317 ரன்னும் ஜோ ரூட் 262 ரன்னும் அடித்து ஆட்டமிழந்தனர்.

    இந்த டெஸ்ட் போட்டியில் 310 பந்துகளில் முச்சதத்தை கடந்து ஹாரி புரூக் சாதனை படைத்துள்ளார். இது டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக அடிக்கப்பட்ட 2 ஆவது டெஸ்ட் முச்சதமாகும். 278 பந்துகளில் வீரேந்திர சேவாக் அடித்த முச்சதம் தான் அதிவேகமாக அடிக்கப்பட்ட டெஸ்ட் முச்சதமாகும்.

    இப்போட்டியில் 823 ரன்களை குவித்துள்ள இங்கிலாந்து அணி டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் தனது 3 ஆவது அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்துள்ளது.

    இதற்கு முன்னதாக இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 903 ரன்களும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் 849 ரன்களும் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 823 ரன்கள் குவித்து ஆடி வருகிறது.
    • இப்போட்டியில் ஹாரி புரூக் 317 ரன்னும் ஜோ ரூட் 262 ரன்னும் அடித்து ஆட்டமிழந்தனர்.

    பாகிஸ்தான், இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி முல்தானில் நடந்து வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 149 ஓவரில் 556 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பாகிஸ்தான் தரப்பில் ஷபீக் 102 ரன், ஷான் மசூத் 151 ரன், ஆகா சல்மான் 104 ரன்கள் எடுத்தனர்.

    தொடர்ந்து முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து மூன்றாம் நாள் முடிவில் 7 விக்கெட்டுக்கு 823 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. ஹாரி புரூக் 317 ரன்னும் ஜோ ரூட் 262 ரன்னும் அடித்து ஆட்டமிழந்தனர்.

    பாகிஸ்தானுக்கு டெஸ்ட் போட்டியில் இரட்டை சத்தம் அடித்ததன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் 20,000 ரன்கள் என்ற மைல்கல்லை ஜோ ரூட் கடந்துள்ளார்.

    இதன்மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் 20,000 ரன்களை கடந்த முதல் இங்கிலாந்து வீரர் என்ற சாதனையை ஜோ ரூட் படைத்துள்ளார்.

    மேலும், இந்த போட்டியில் இரட்டை சதம் விளாசியதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 6 இரட்டை சதம் விளாசிய சச்சினின் சாதனையை ஜோ ரூட் சமன் செய்துள்ளார்.

    • 2-வது டி20 போட்டியில் இந்தியா 86 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
    • இரு அணிகளுக்கும் இடையேயான கடைசி டி20 போட்டி சனிக்கிழமை நடக்கிறது.

    இந்தியா- வங்கதேச அணிகளுக்கு இடையேயான 2-வது டி20 போட்டி நேற்று டெல்லியில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவரில் 221 ரன்கள் குவித்தது. இதனையடுத்து விளையாடிய வங்கதேச அணி 20 ஓவர்களில் 135 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் இந்தியா 86 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்நிலையில் வெற்றி பெற்றதன் மூலம் இந்திய அணி பல சாதனைகளை படைத்துள்ளது. அதன்படி சர்வதேச டி20 கிரிக்கெட்டில் வங்கதேசத்துக்கு எதிராக முதல் முறையாக 200 ரன்கள் அடித்துள்ளது. மேலும் அந்த அணிக்கு எதிராக தங்களுடைய அதிகபட்ச ஸ்கோரையும் பதிவு செய்து சாதனை படைத்துள்ளது.

    இதற்கு முன் கடந்த 2024 டி20 உலகக் கோப்பையில் வங்கதேசத்துக்கு எதிராக 196 ரன்கள் அடித்ததே முந்தைய அதிகபட்ச ஸ்கோர்.

    மேலும் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் வங்கதேசத்துக்கு எதிராக இந்தியா தங்களுடைய மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்து சாதனை படைத்தது. இதற்கு முன் 2024 டி20 உலகக் கோப்பையில் 50 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதே முந்தைய பெரிய வெற்றியாகும். 

    • இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராக பி.டி. உஷா உள்ளார்.
    • இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கு ரூ.24 கோடி இழப்பு ஏற்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

    புதுடெல்லி:

    இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராக பி.டி. உஷா உள்ளார். முன்னாள் தடகள வீராங்கனையான இவர் ஒலிம்பிக் ஒப்பந்தம் தொடர்பாக ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு சலுகைகள் வழங்கியதாகவும், இதனால் இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கு ரூ.24 கோடி இழப்பு ஏற்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இதை பி.டி. உஷா மறுத்தார்.

    இது தொடர்பாக அவருக்கும் நிர்வாக குழுவுக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டது. இந்த நிலையில் பி.டி. உஷா மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படுகிறது. வருகிற 25-ந்தேதி நடைபெறும் சிறப்பு பொதுக்குழுவில் அவர் இதை எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது.

    • தங்கள் இன்னுயிரை தியாகம் செய்த அனைத்து மாணவர்களுக்கும் எனது அஞ்சலியை தெரிவித்துக் கொள்கிறேன்.
    • யாருடைய கைதட்டல் என்னை சிறப்பாக விளையாட நிர்ப்பந்தித்ததோ அவர்களுடன் நான் கைகுலுக்க விரும்புகிறேன்.

    ஜூலை மாதம் வங்கதேசத்தில் நடந்த கலவரத்தில் நூற்றுக்கணக்கானோர் மரணமடைந்தனர். அந்த போராட்டத்தின் போது நடந்த கலவரத்தில் ரபிகுல் இஸ்லாம் என்பவரின் மகன் ஆகஸ்ட் 5-ம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தக் கொலை வழக்கில் சுமார் 150-க்கு மேற்பட்ட நபர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். அதில் ஷகிப் அல் ஹசன் பெயரும் இடம் பெற்றுள்ளது.

    மாணவர்கள் போராட்டத்திற்கு முன்பு வரை வங்கதேசத்தை ஆண்ட அவாமி லீக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராக ஷகிப் அல் ஹசன் இருந்தார். பின்பு ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்பு அவர் வங்கதேசத்திற்கு திரும்பவில்லை.

    கலவரத்தின்போது கனடாவில் நடந்த குளோபல் டி20 லீக்கில் ஷகிப் அல் ஹசன் விளையாடி கொண்டிருநதார். ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்பு வெளிநாடுகளில் நடக்கும் கிரிக்கெட் போட்டிகளில் மட்டுமே விளையாடி வரும் அவர் சொந்த நாட்டிற்கு திரும்பவில்லை. .

    இந்நிலையில் மாணவர்களின் போராட்டத்தின் போது அமைதி இருந்ததற்காக வங்கதேச மக்களிடம் மன்னிப்பு கேட்பதாக ஷகிப் அல் ஹசன் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    முதலாவதாக, தங்கள் இன்னுயிரை தியாகம் செய்த அனைத்து மாணவர்களுக்கும் எனது அஞ்சலியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    அவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    நேசிப்பவரின் இழப்பை எந்த தியாகமும் ஈடுசெய்ய முடியாது என்றாலும், எனது மௌனத்தால் பாதிக்கப்பட்ட உங்களுக்கு ஒரு குழந்தையையோ அல்லது சகோதரனையோ இழந்த வெற்றிடத்தை யாராலும் நிரப்ப முடியாது. இந்த இக்கட்டான காலகட்டத்தில், உங்கள் உணர்வுகளை நான் மதிக்கிறேன். உங்கள் இடத்தில் நான் இருந்திருந்தால், நானும் வருத்தப்பட்டிருக்கலாம்.

    எனது கடைசி போட்டியில் நான் விரைவில் விளையாடுவேன் என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். நான் விடைபெறும் தருனத்தில் நீங்கள் அனைவரும் சுற்றியிருக் விரும்புகிறேன். யாருடைய கைதட்டல் என்னை சிறப்பாக விளையாட நிர்ப்பந்தித்ததோ அவர்களுடன் நான் கைகுலுக்க விரும்புகிறேன். நான் சந்திக்க விரும்புகிறேன்.

    நான் நன்றாக விளையாடியபோது மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தவர்களின் கண்களை நான் சந்திக்க விரும்புகிறேன். நான் விளையாடாதபோது அவர்களின் கண்கள் கண்ணீர் வழிந்தன. இந்த விடைபெறும் தருணத்தில் நீங்கள் அனைவரும் என்னுடன் இருப்பீர்கள் என்று நம்புகிறேன். உண்மையில், நட்சத்திரம் நான் அல்ல, நீங்கள் அனைவரும்.

    என்று கூறினார்.

    • வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் இந்தியா வென்றது.
    • இரு அணிகளுக்கும் இடையேயான கடைசி டி20 போட்டி வருகிற 12-ந் தேதி நடைபெறுகிறது.

    வங்கதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்றிய நிலையில் டி20 தொடரையும் இந்திய அணி கைப்பற்றி உள்ளது. முதல் டி20 போட்டியில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான 2-வது டி20 போட்டி நேற்று டெல்லியில் நடைபெற்றது. இதில் இந்தியா 86 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்நிலையில் தொடரை வென்ற இந்திய அணிக்கு பாராட்டுகளை 7 என்ற டோனியின் ஜெர்சி நம்பரை வைத்து ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். இதற்கு டோனி ரசிகர்கள் thala for a reason என கொண்டாடி வருகின்றனர்.

    அதன்படி இந்திய முதல் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2-வது டி20 போட்டியில் இந்தியா 7 பந்து வீச்சாளர்களை பயன்படுத்தி உள்ளது. இந்த 7 பந்து வீச்சாளர்களும் விக்கெட்டுகளை வீழ்த்தினர். மேலும் இந்தியாவில் தொடர்ச்சியாக 7 தொடர்களை இந்தியா கைப்பற்றி உள்ளது என கூறி 7 for some reason என கூறி வருகின்றனர். இது டோனி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

    • நாங்கள் தொடக்கத்தில் சிறப்பாக செயல்பட்டு அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்தினோம்.
    • 6-7 ஓவர்களுக்குப் பிறகு அவர்கள் நன்றாக பேட்டிங் செய்தனர்.

    இந்தியா- வங்கதேசத்துக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

    இந்நிலையில் இந்த ஆட்டத்திலும் நாங்கள் கடந்த போட்டியில் செய்த அதே தவறுகளைச் செய்தோம் என்று நினைக்கிறேன் என்று வங்கதேச அணி கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    இந்த ஆட்டத்திலும் நாங்கள் கடந்த போட்டியில் செய்த அதே தவறுகளைச் செய்தோம் என்று நினைக்கிறேன். ஒரு அணியாக இது எங்களுக்கு நல்ல விஷயம் அல்ல. நாங்கள் மேம்பட வேண்டும். இந்த போட்டியில் நாங்கள் பந்துவீசுவதாக எடுத்த முடிவானது நல்லது என்று நான் நினைக்கிறேன். அந்த வகையில் நாங்கள் தொடக்கத்தில் சிறப்பாக செயல்பட்டு அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்தினோம்.

    ஆனால் 6-7 ஓவர்களுக்குப் பிறகு அவர்கள் நன்றாக பேட்டிங் செய்தனர். அதன் பிறகு நாங்கள் எங்கள் திட்டங்களைச் செயல்படுத்தவில்லை. அதேசமயம் இந்த தோல்விக்கு பேட்ஸ்மேன்களும் பொறுப்பேற்க வேண்டும். நம் மீது நாம் நம்பிக்கை கொள்ள வேண்டும். எங்கள் பந்துவீச்சாளர்கள் பந்துவீசிய விதம் அவர்கள் சுவாரஸ்யமாக இருந்தது. ஆனால் நான் சொன்னது போல் எங்களால் மிடில் ஓவர்களில் விக்கெட்டுகளை எடுக்க முடியவில்லை.

    இவ்வாறு நஜ்முல் கூறினார்.

    • சூழ்நிலைக்கு தகுந்தார் போல் நான் பயிற்சி செய்கிறேன்.
    • இது பற்றி நான் மஹி பாயிடம் நிறைய பேசியது உதவியது.

    வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா 86 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் துவக்க வீரர்கள் சஞ்சு சாம்சன் 10, அபிஷேக் சர்மா 15, கேப்டன் சூர்யகுமார் 8 ரன்களில் அவுட்டானார். அதனால் 41-3 என இந்திய அணி ஆரம்பத்திலேயே தடுமாறியது.

    அப்போது ஜோடி சேர்ந்த இளம் வீரர்கள் ரிங்கு சிங் மற்றும் நிதிஷ் ரெட்டி ஆகியோர் 108 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து சரிவிலிருந்து இந்தியாவை மீட்டெடுத்து வெற்றியில் முக்கிய பங்காற்றினர். இந்நிலையில் ஆரம்பத்திலேயே விக்கெட்களை விழும் போது தன்னம்பிக்கையுடன் விளையாடி அணியை மீட்டெடுக்க வேண்டும் என்று எம்எஸ் டோனி சொன்னது உதவியதாக ரிங்கு சிங் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    கடினமான நேரங்களில் அமைதியாக இருக்க வேண்டும் என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டதே செயல் முறையாகும். இந்த இடத்தில் நீண்ட காலமாக விளையாடி வருவதால் அது எனக்கு இயற்கையாகவே வரக்கூடிய ஒன்றாகும். சூழ்நிலைக்கு தகுந்தார் போல் நான் பயிற்சி செய்கிறேன்.

    இது பற்றி நான் மஹி பாயிடம் நிறைய பேசியது உதவியது. ஆரம்பத்திலேயே 3 - 4 விட்கெட்டுகள் விழும் போது நீங்கள் தன்னம்பிக்கையுடன் விளையாட வேண்டும். பிட்ச் கொஞ்சம் மெதுவாக இருந்த நிலையில் நிதிஷ் ரெட்டியும் நானும் பார்ட்னர்ஷிப் அமைக்க முயற்சித்தோம். முகமதுல்லா வீசிய நோபாலுக்கு பின் போட்டியின் வேகம் எங்கள் பக்கம் திரும்பியது. அந்தப் பந்துக்குப்பின் நித்திஷ் ரெட்டி தன்னம்பிக்கையை பெற்று அதிரடியாக விளையாடினார்.

    என்று ரிங்கு சிங் கூறினார். 

    • 41-3 என தடுமாறும் போது மிடில் ஆர்டர் எப்படி செயல்படுகிறது என்பதை பார்க்க விரும்பினேன்.
    • 170 - 175 ரன்களை கட்டுப்படுத்தும் போது பவுலர்களால் என்ன செய்ய முடியும் என்பதை பார்க்க விரும்பினேன்.

    வங்கதேசத்துக்கு எதிராக நடைபெற்ற 2-வது டி20 கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 221 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக நித்திஷ் ரெட்டி 74, ரிங்கு சிங் 53 ரன்கள் எடுத்தனர். பின்னர் விளையாடிய வங்கதேசம் 20 ஓவரில் 135 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது. அதிகபட்சமாக முகமதுல்லா 41 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்தியா 2 - 0 (3) என்ற கணக்கில் வென்றுள்ளது.

    41-3 என தடுமாறும் போது மிடில் ஆர்டர் எப்படி செயல்படுகிறது என்பதை பார்க்க விரும்பினேன் என இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    இது போன்ற சூழ்நிலையை நான் பார்க்க விரும்பினேன். 41-3 என தடுமாறும் போது மிடில் ஆர்டர் எப்படி செயல்படுகிறது என்பதை பார்க்க விரும்பினேன். ஐபிஎல் அணிக்காகவும் வலைப்பயிற்சியிலும் என்ன செய்கிறீர்களோ அதை இந்திய அணிக்காக செய்யுங்கள் என்று வீரர்களிடம் கூறியுள்ளேன். ஜெர்ஸி மட்டுமே மாறும். மற்ற அனைத்தும் ஒன்றாக இருக்க வேண்டும் என்று அவர்களிடம் கூறியுள்ளேன்.

    சில நேரங்களில் ஹர்திக் பாண்டியா, வாஷிங்டன் சுந்தரால் பந்து வீச முடியாது. அதனால் 170 - 175 ரன்களை கட்டுப்படுத்தும் போது பவுலர்களால் என்ன செய்ய முடியும் என்பதை பார்க்க விரும்பினேன். எனவே ஹர்திக் பாண்டியா இல்லாமல் அதிகமான பவுலர்களை பயன்படுத்தினேன். இது நித்திஷ் ரெட்டியின் நாள். எனவே அவருக்கும் வாய்ப்பு கொடுக்க விரும்பினேன்.

    என்று சூர்யகுமார் கூறினார். 

    • இளம் வயதில் அரை சதம் விளாசிய இந்தியர்களில் ரோகித் முதல் இடத்தில் உள்ளார்.
    • அடுத்த 2 இடங்களில் திலக் வர்மா, ரிஷப் பண்ட் உள்ளனர்.

    இந்தியா - வங்கதேசம் அணிகள் மோதிய 2-வது டி20 கிரிக்கெட் போட்டி டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 221 ரன்கள் குவித்தது. இதனையடுத்து களமிறங்கிய வங்கதேச அணி 135 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.

    இந்த போட்டியில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய நிதிஷ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். அவர் 34 பந்தில் 74 ரன்கள் குவித்து அசத்தினார். இதன் வாயிலாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இளம் வயதில் அரை சதமடித்த இந்திய வீரர் என்ற ஜெய்ஸ்வால் (21 வருடம் 227 நாட்கள்) சாதனையையும் நிதிஷ் ரெட்டி (21 வருடம் 136 நாட்கள்) முறியடித்துள்ளார்.

    இந்த பட்டியலில் முதல் 3 இடங்களில் ரோகித் சர்மா (20 வருடம் 143 நாட்கள்), திலக் வர்மா (20 வருடம் 271 நாட்கள்), ரிஷப் பண்ட் (21 வருடம் 38 நாட்கள்) உள்ளனர்.

    • காயங்கள் மட்டுமே அவரை சாதனையை உடைப்பதிலிருந்து நிறுத்த முடியும்.
    • 2025 ஆஷஸ் தொடர் மட்டுமே ரூட்டுக்கு சவாலாக இருக்கும்.

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் 200 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 15921 ரன்களை குவித்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த வீரராக சச்சின் உலக சாதனை படைத்துள்ளார்.

    ஆனால் இங்கிலாந்தின் நம்பிக்கை நட்சத்திரம் ஜோ ரூட் அந்த சாதனையை உடைப்பதற்காக வந்து கொண்டிருக்கிறார் என்றே சொல்லலாம். ஏனெனில் இதுவரை 146 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 12500 ரன்களை கடந்துள்ளார். தற்போது 33 வயது மட்டுமே நிரம்பியுள்ள ரூட் இன்னும் குறைந்தது 4 வருடங்கள் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே அந்த 4 வருடங்களில் 3000 - 4000 ரன்களை அடித்து சச்சின் டெண்டுல்கரை முந்தி எளிதாக அவர் உலக சாதனை படைக்க வாய்ப்புள்ளது.

    பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஜோ ரூட் சதமடித்துள்ளார். அதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த இங்கிலாந்து வீரர் என்ற முன்னாள் கேப்டன் அலெஸ்டர் குக் வாழ்நாள் சாதனையை உடைத்து ரூட் புதிய சாதனை படைத்துள்ளார்.

    இந்நிலையில் அட்டகாசமாக விளையாடி வரும் ரூட்டை காயம் மட்டுமே தடுக்க முடியும் என்றும் அலெஸ்டர் குக் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    சச்சின் டெண்டுல்கரின் சாதனையை அவர் முந்துவதை என்னால் பார்க்க முடியும். நான் ஓய்வு பெற்ற போது என் சாதனையை அவர் உடைக்க அனைத்து வாய்ப்புகளும் இருப்பதாக கருதினேன். கேப்டன்ஷிப் மட்டுமே அவருடைய ஆட்டத்தில் பாதிப்பை ஏற்படுத்தியது.

    அப்போது பென் ஸ்டோக்ஸ் பொறுப்பை ஏற்றுக்கொண்டது ரூட்டுக்கு பெரிய உதவியை செய்தது. இப்போதும் அந்த சாதனையை உடைக்க முடியாது என்று நீங்கள் சொல்லலாம். ஆனால் அதற்கு வாய்ப்புள்ளது. அனைத்து மகத்தான வீரர்களும் காயங்களை கடந்து நீண்ட காலம் விளையாடுவதற்கு அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும். அதே போல ரூட் கேரியரில் அடுத்ததாக என்ன நடக்கும் என்பது உங்களுக்குத் தெரியாது.

    ஆனால் அது போன்ற காயங்கள் மட்டுமே அவரை சாதனையை உடைப்பதிலிருந்து நிறுத்த முடியும். இருப்பினும் இப்போதும் பசியுடன் விளையாடும் அவர் இன்னும் சில வருடங்கள் இப்படியே விளையாடுவதை நான் பார்ப்பேன். 2025 ஆஷஸ் தொடர் மட்டுமே ரூட்டுக்கு சவாலாக இருக்கும். தற்போதைய நிலையில் அந்த சாதனைக்கு சொந்தக்காரராக சச்சின் 51%, ரூட் 49% இருப்பார்கள் என்று சொல்வேன். ஆனாலும் ரூட் அதை உடைப்பார் என்று நான் பந்தையம் கட்டுவேன்.

    இவ்வாறு குக் கூறினார்.

    • பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 556 ரன்கள் குவித்தது.
    • ஷபீக், ஷான் மசூத், ஆகா சல்மான் ஆகியோர் சதமடித்தனர்.

    கராச்சி:

    பாகிஸ்தான், இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி முல்தானில் நடந்து வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 149 ஓவரில் 556 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பாகிஸ்தான் தரப்பில் ஷபீக் 102 ரன், ஷான் மசூத் 151 ரன், ஆகா சல்மான் 104 ரன்கள் எடுத்தனர்.

    தொடர்ந்து முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து மூன்றாம் நாள் முடிவில் 3 விக்கெட்டுக்கு 492 ரன்கள் குவித்துள்ளது. ஜோ ரூட் 172 ரன்னும், ஹாரி புரூக் 141 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    இந்நிலையில், இங்கிலாந்தின் ஜோ ரூட் சிறப்பாக விளையாடி 167 பந்துகளில் சதம் விளாசினார். இதில் 7 பவுண்டரிகள் அடங்கும். இதன்மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜோ ரூட் 35 வது சதத்தை விளாசி அசத்தியுள்ளார்.

    இதையடுத்து, சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதம் அடித்தவர்கள் பட்டியலில் இந்திய வீரர் சுனில் கவாஸ்கர், வெஸ்ட் இண்டீஸ் வீரர் பிரையன் லாரா, பாகிஸ்தான் வீரர் யூனிஸ் கான், இலங்கை வீரர் ஜெயவர்த்தனே ஆகியோரை பின்னுக்குத் தள்ளி ஜோ ரூட் தற்போது 6-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

    இந்தப் பட்டியலில் சச்சின் (51), முதலிடத்திலும், காலிஸ் (45) 2வது இடத்திலும், ரிக்கி பாண்டிங் (41) மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.

    ×