என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • மற்றொரு கால்இறுதியில் மராட்டியம்-அரியானா அணிகள் மோதின.
    • அரியானா 5-1 என்ற கோல் கணக்கில் மராட்டியத்தை விரட்டியடித்து அரைஇறுதியை எட்டியது.

    சென்னை:

    14-வது ஹாக்கி இந்தியா தேசிய சீனியர் ஆண்கள் சாம்பியன்ஷிப் போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. 30 மாநில அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் சுற்று முடிவில் 8 அணிகள் கால்இறுதிக்குள் நுழைந்தன.

    நேற்று நடந்த முதலாவது கால்இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பஞ்சாப்-மணிப்பூர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. தொடக்கம் முதலே விறுவிறுப்பாக நகர்ந்த இந்த ஆட்டம் 3-3 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. இதைத்தொடர்ந்து வெற்றி, தோல்வியை நிர்ணயிக்க ஷூட்-அவுட் முறை கடைப்பிடிக்கப்பட்டது. இதில் மணிப்பூர் 4-3 என்ற கோல் கணக்கில் பஞ்சாப்புக்கு அதிர்ச்சி அளித்து அரைஇறுதிக்கு முன்னேறியது.

    மற்றொரு கால்இறுதியில் மராட்டியம்-அரியானா அணிகள் மோதின. 12-வது நிமிடத்தில் மராட்டிய வீரர் அனிகெட் கவுரவ் கோலடித்தார். இதனால் முதல் பாதியில் அந்த அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது. கடைசி 15 நிமிடங்களில் அபாரமாக ஆடிய அரியானா அணி, மராட்டியத்துக்கு கடும் நெருக்கடி அளித்ததுடன் அடுத்தடுத்து 5 கோல்களை அடித்து மிரட்டியது.முடிவில் அரியானா 5-1 என்ற கோல் கணக்கில் மராட்டியத்தை விரட்டியடித்து அரைஇறுதியை எட்டியது. அரியானா தரப்பில் ரஜிந்தர் சிங் (48-வது நிமிடம்), ரோகித் (53-வது, 59-வது, 60-வது நிமிடம்), பங்கஜ் (54-வது நிமிடம்) ஆகியோர் கோல் போட்டனர்.

    இன்னொரு கால்இறுதியில் தமிழக அணி 1-3 என்ற கோல் கணக்கில் உத்தரபிரதேசத்திடம் தோற்று ஏமாற்றம் அளித்தது.

    உத்தரபிரதேச அணியில் சந்தன் சிங் (3-வது நிமிடம்), ராஜ்குமார் பால் (18-வது நிமிடம்), லலித்குமார் உபாத்யாய் (34-வது நிமிடம்) ஆகியோர் கோலடித்தனர். தமிழக அணி தரப்பில் சண்முகவேல் (9-வது நிமிடம்) பதில் கோல் திருப்பினார்.

    கர்நாடகா - ஒடிசா இடையிலான கால்இறுதி ஆட்டம் வழக்கமான நேரத்தில் 3-3 என்ற கோல் கணக்கில் சமனில் முடிய, அதன் பிறகு கொண்டு வரப்பட்ட ஷூட்-அவுட்டில் ஒடிசா அணி 3-1 என்ற கோல் கணக்கில் கர்நாடகாவை வெளியேற்றி அரைஇறுதிக்கு தகுதி பெற்றது.

    நாளை நடைபெறும் அரைஇறுதி ஆட்டங்களில் மணிப்பூர்- ஒடிசா (பிற்பகல் 2 மணி), அரியானா-உத்தரபிரதேசம் (மாலை 4 மணி) அணிகள் மோதுகின்றன.

    • ஐ.பி.எல். கிரிக்கெட்டில் டெல்லி மற்றும் புனே அணிக்காக நாங்கள் இணைந்து விளையாடி இருக்கிறோம்.
    • சுமித்தின் வலை பயிற்சி எப்படி இருக்கும் என்பது எனக்கு தெரியும்.

    பெர்த்:

    ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 'பார்டர்-கவாஸ்கர்' கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பெர்த்தில் வருகிற 22-ந் தேதி தொடங்குகிறது. இந்த போட்டிக்கு தயாராக இந்திய அணியினர் 10 நாட்களுக்கு முன்பாகவே ஆஸ்திரேலியா சென்று பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் ஆர்.அஸ்வின், ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் ஸ்டீவன் சுமித் குறித்து பேசுகையில், 'சுழற்பந்து வீச்சுக்கு எதிராக சிறப்பாக விளையாட கூடிய வீரர்களில் ஸ்டீவன் சுமித்தும் ஒருவர். அதே நேரத்தில் வேகப்பந்து வீச்சை எதிர்கொள்வதிலும் கூட தனித்துவமான தொழில்நுட்பத்தை கடைபிடிக்கிறார். அதிகம் சிந்திக்கக்கூடிய ஒரு வீரர். இந்த முறை சுழற்பந்து வீச்சை எதிர்கொள்ள நிச்சயம் புதிய திட்டத்துடன் தயாராக களம் இறங்குவார் என்று நினைக்கிறேன். அதை ஆடுகளத்தில் செயல்படுத்தும் முனைப்புடன் இருப்பார். டெஸ்டில் அவரது திட்டத்தை உடைத்தெறியும் வழிமுறையை கண்டுபிடித்துள்ளேன்.

    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் டெல்லி மற்றும் புனே அணிக்காக நாங்கள் இணைந்து விளையாடி இருக்கிறோம். சுமித்தின் வலை பயிற்சி எப்படி இருக்கும் என்பது எனக்கு தெரியும். இதனால் அவர் எந்த பந்தை நன்றாக விளையாடுவார், எது அவருக்கு குடைச்சல் கொடுக்கும் என்பது எனக்கு தெரியும்' என்றார்.

    • முதல் நாளான நேற்று 3 சுற்று ஆட்டங்கள் நடந்தன.
    • இந்திய வீராங்கனைகளான கொனேரு ஹம்பி, ஹரிகா, திவ்யா தேஷ்முக் ஆகியோர் தங்களது மூன்று சுற்றையும் டிராவில் முடித்தனர்.

    கொல்கத்தா:

    6-வது டாட்டா ஸ்டீல் இந்தியா ரேபிட் மற்றும் பிளிட்ஸ் சர்வதேச செஸ் போட்டி கொல்கத்தாவில் நேற்று தொடங்கியது. இதில் ஓபன் பிரிவில் 'நம்பர் ஒன்' வீரரும், 5 முறை உலக சாம்பியனுமான மாக்னஸ் கார்ல்சென் (நார்வே), இந்தியாவின் பிரக்ஞானந்தா, அர்ஜூன் எரிகைசி உள்பட 10 வீரர்களும், பெண்கள் பிரிவில் 5 இந்தியர்கள் உள்பட 10 பேரும் பங்கேற்றுள்ளனர். முதல் 3 நாட்களில் ரேபிட் வடிவிலான போட்டி நடைபெறும். இது 9 சுற்று கொண்டது.

    முதல் நாளான நேற்று 3 சுற்று ஆட்டங்கள் நடந்தன. அதிவேகமாக காய்களை நகர்த்தக்கூடிய இந்த போட்டியில் கார்ல்சென், தமிழகத்தின் பிரக்ஞானந்தாவுடன் மோதிய ஆட்டம் டிராவில் முடிந்தது. வெள்ளைநிற காய்களுடன் ஆடிய கார்ல்சென் 35-வது நகர்த்தலில் டிரா கண்டார். இதே போல் நிஹல் சரினுடனும் டிரா செய்த கார்ல்சென், இன்னொரு ஆட்டத்தில் விதித் குஜராத்தியை 69-வது நகர்த்தலில் வீழ்த்தினார்.

    கார்ல்செனுடன் டிரா கண்ட பிரக்ஞானந்தா, டேனில் துபோவுடனும் (ரஷியா) டிரா செய்தார். ஆனால் உஸ்பெகிஸ்தான் வீரர் நோடிர்பெக் அப்துசட்டோரோவிடம் 46-வது நகர்த்தலில் பணிந்தார். அர்ஜூன் எரிகைசி தனது முதல் 3 ஆட்டங்களிலும் டிரா கண்டார். ஓபன் பிரிவில் 3 சுற்று முடிவில் அப்துசட்டோரோவ் 2½ புள்ளிகளுடன் முதலிடம் வகிக்கிறார். இந்தியாவின் எஸ்.எல். நாராயணன் மற்றும் கார்ல்சென், பிலிப்பைன்சின் வெஸ்லி சோ தலா 2 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் இருக்கிறார்கள்.

    பெண்கள் பிரிவில் 3 சுற்று முடிவில் ரஷியாவின் அலெக்சாண்ட்ரா கோரியச்கினா, கேத்ரினா லாக்னோ, இந்தியாவின் வந்திகா அகர்வால் ஆகியோர் தலா ஒரு வெற்றி, 2 டிரா என 2 புள்ளிகளுடன் முதலிடத்தை பகிர்ந்துள்ளனர்.

    அதே சமயம் திவ்யா தேஷ்முக் மற்றும் சுவிட்சர்லாந்தின் கோஸ்ட்னிக் ஆகியோரிடம் டிரா செய்த பிரக்ஞானந்தாவின் சகோதரியான ஆர்.வைஷாலி, ரஷியாவின் வேலன்டினா குனினாவிடம் தோல்வியை தழுவினார். மற்ற இந்திய வீராங்கனைகளான கொனேரு ஹம்பி, ஹரிகா, திவ்யா தேஷ்முக் ஆகியோர் தங்களது மூன்று சுற்றையும் டிராவில் முடித்தனர்.

    இரு பிரிவிலும் இன்று மேலும் 3 சுற்றுகள் நடைபெறும்.

    • என்னிடம் அதிகாரம் இருந்திருந்தால் இந்த முடிவை தைரியமாக எடுத்திருப்பேன்.
    • இந்த விவகாரத்தில் நான் யார் மீதும் குற்றம் சாட்டமாட்டேன்.

    புதுடெல்லி:

    பாகிஸ்தானில் பிப்ரவரி, மார்ச் மாதங்களில், 8 அணிகள் இடையிலான ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி நடக்க உள்ளது. பாதுகாப்பு அச்சுறுத்தலால் 2008-ம் ஆண்டுக்கு பிறகு பாகிஸ்தான் மண்ணில் எந்த கிரிக்கெட் போட்டியிலும் ஆடாத இந்திய அணி இந்த முறையும் அங்கு செல்ல மறுத்து விட்டது. அதற்கு பதிலாக தங்களுக்குரிய ஆட்டங்களை துபாய்க்கு மாற்றும்படி இந்திய கிரிக்கெட் வாரியம் கேட்டுக் கொண்டது.

    ஆனால் இதை ஏற்றுக்கொள்ளாத பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கொதித்து போய் உள்ளது. இந்திய அணி வராவிட்டால் சாம்பியன்ஸ் கோப்பை போட்டியை நடத்தும் முடிவை கைவிடுவது, ஐ.சி.சி. மற்றும் இந்திய கிரிக்கெட் வாரியம் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்வது உள்ளிட்ட பல்வேறு வழிமுறைகளை பாகிஸ்தான் ஆராய்ந்து வருகிறது. இன்னொரு பக்கம் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) இரு நாட்டு கிரிக்கெட் வாரியங்களையும் சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. எதுவும் ஒத்துவராவிட்டால் ஒட்டுமொத்த போட்டியையும் வேறு நாட்டுக்கு மாற்றலாமா? என்றும் ஆலோசிக்கிறது.

    இந்த விவகாரம் குறித்து பாகிஸ்தான் அணிக்காக 203 சர்வதேச போட்டிகளில் ஆடியவரான முன்னாள் விக்கெட் கீப்பர் ரஷித் லத்தீப் கருத்து தெரிவிக்கையில், 'இந்தியாவுக்கு எதிராக கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதை பாகிஸ்தான் முற்றிலும் நிறுத்திக்கொள்ள வாய்ப்புள்ளது. என்னிடம் அதிகாரம் இருந்திருந்தால் இந்த முடிவை தைரியமாக எடுத்திருப்பேன். இந்த விவகாரத்தில் நான் யார் மீதும் குற்றம் சாட்டமாட்டேன்.

    ஆனால் நீங்கள் (இந்தியா) பாகிஸ்தான் மண்ணில் விளையாட விரும்பவில்லை என்றால், அதன் பிறகு நீங்கள் உலகின் எந்த இடத்திலும் எங்களுக்கு எதிராக விளையாடக் கூடாது. இந்த பிரச்சினைக்கு சுமுக முடிவு எட்டப்படாத வரை இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாட்டுக்கும் பெரிய தொடர்களை நடத்தும் வாய்ப்பை வழங்குவதை ஐ.சி.சி. நிறுத்தி வைக்க வேண்டும் என்பதே எனது கருத்து' என்றார்.

    • குமாமோட்டோ மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி ஜப்பானில் நடந்து வருகிறது.
    • இதில் இந்திய வீரர் லக்‌ஷயா சென் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

    குமாமோட்டோ:

    குமாமோட்டோ மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி ஜப்பானில் நடந்து வருகிறது. இந்தியா சார்பில் பி.வி.சிந்து, லக்ஷயா சென் உள்ளிட்ட முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

    இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் லக்ஷயா சென், மலேசியாவின் லியோங் ஜுன் ஹா உடன் மோதினார். இதில் லக்ஷயா சென் 22-20, 17-21, 16-21 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். பெண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் திரிஷா ஜாலி-காயத்ரி கோபிசந்த் ஜோடி முதல் சுற்றில் தோல்வி அடைந்தது.

    • முதலில் ஆடிய இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 219 ரன்களை குவித்தது.
    • அடுத்து ஆடிய தென் ஆப்பிரிக்கா 208 ரன்களை மட்டுமே எடுத்தது.

    செஞ்சூரியன்:

    தென் ஆப்பிரிக்கா, இந்தியா இடையிலான 3வது டி20 போட்டி செஞ்சூரியனில் நடைபெற்றது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 219 ரன்களை குவித்தது. திலக் வர்மா அதிரடியாக ஆடி சதமடித்து 107 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா அரை சதமடித்து ஆட்டமிழந்தார்.

    இதையடுத்து 220 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா 208 ரன்களை எடுத்தது. இதன்மூலம் இந்திய அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்நிலையில், இந்த ஆண்டில் இந்திய அணி 8-வது முறையாக டி20 கிரிக்கெட்டில் 200 ரன்களைக் கடந்து அசத்தியுள்ளது.

    சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை எந்த ஒரு அணியும் ஒரு ஆண்டில் எட்டு முறை 200 ரன்கள் அடித்ததில்லை. இந்திய அணி முதல் முறையாக இந்த சாதனையை படைத்துள்ளது.

    • ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியில் நடைபெறுகிறது.
    • இதில் நம்பர் 3 வீரரான அல்காரஸ் 2வது சுற்றில் வெற்றி பெற்றார்.

    பெல்கிரேட்:

    ஏ.டி.பி. இறுதிச்சுற்று எனப்படும் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியின் துரின் நகரில் கடந்த 10ம் தேதி தொடங்கியது. இந்தப் போட்டி 17-ம் தேதி வரை நடக்கிறது.

    இந்தப் போட்டியில் ஒற்றையரில் தரவரிசையில் முதல் 8 இடத்தில் உள்ள வீரர்களும், இரட்டையர் பிரிவில் டாப்-8 ஜோடியினரும் கலந்து கொள்கிறார்கள்.

    இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 2வது லீக் போட்டியில் 3ம் நிலை வீரரான ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ், 8-வது நிலை வீரரான ரஷியாவின் ஆண்ட்ரே ரூப்லெவ் உடன் மோதினார்.

    இதில் அல்காரஸ் 6-3, 7-6 (10-8) என்ற செட் கணக்கில் அபார வெற்றி பெற்றார்.

    மற்றொரு போட்டியில் இத்தாலியின் சின்னர் அமெரிக்காவின் டெய்லர் பிரிட்சை 6-4, 6-4 என்ற செட் கணக்கில் வென்றார்.

    • குமாமோட்டோ மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி ஜப்பானில் நடந்து வருகிறது.
    • இதில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.

    குமாமோட்டோ:

    குமாமோட்டோ மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி ஜப்பானில் நடந்து வருகிறது. இந்தியா சார்பில் பி.வி.சிந்து, லக்ஷயா சென் உள்ளிட்ட முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் பி.வி.சிந்து, தாய்லாந்தின் புசானன் ஓங்பாம்ருங்பானை 21-12, 21-18 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். இந்தப் போட்டி சுமார் 38 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது.

    பெண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் திரிஷா ஜாலி-காயத்ரி கோபிசந்த் ஜோடி முதல் சுற்றில் தோல்வி அடைந்தது.

    • முதலில் ஆடிய இந்தியா திலக் வர்மா சதத்தால் 219 ரன்களைக் குவித்தது.
    • அடுத்து ஆடிய தென் ஆப்பிரிக்கா 208 ரன்களை எடுத்தது.

    செஞ்சூரியன்:

    தென் ஆப்பிரிக்கா, இந்தியா இடையிலான 3வது டி20 போட்டி செஞ்சூரியனில் நடைபெறுகிறது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 219 ரன்களை குவித்தது. திலக் வர்மா அதிரடியாக ஆடி சதமடித்து 107 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா அரை சதமடித்து ஆட்டமிழந்தார்.

    இதையடுத்து 220 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா களமிறங்கியது. தொடக்கம் முதல் அந்த அணி வீரர்கள் அதிரடியாக ஆடினர். இதனால் விரைவில் விக்கெட்களை இழந்தனர்.

    ரிகலடன் 20 ரன்னும், ஹென்ரிக்ஸ் 21 ரன்னும், மார்கிரம் 29 ரன்னும், ஸ்டப்ஸ் 12 ரன்னும், டேவிட் மில்லர் 18 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். கிளாசன் 41 ரன் எடுத்து வெளியேறினார்.

    கடைசி கட்டத்தில் இறங்கிய மார்கோ ஜேன்சன் சிக்சர், பவுண்டரிகளாக விளாசினார். 19வது ஓவரில் 2 சிக்சர், 3 பவுண்டரி உள்பட 24 ரன்களை குவித்தார்.

    இறுதியில், தென் ஆப்பிரிக்கா 7 விக்கெட் இழப்புக்கு 208 ரன்களை எடுத்தது. இதன்மூலம் இந்திய அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டி20 தொடரில் இந்தியா 2-1 என முன்னிலை வகிக்கிறது.

    இந்தியாவின் அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டும், வருண் சக்கரவர்த்தி 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    • டாஸ் வென்று முதலில் ஆடிய இலங்கை 324 ரன்களைக் குவித்தது.
    • இலங்கையின் குசால் மெண்டிஸ், அவிஷ்கா பெர்ணாண்டோ சதமடித்து அசத்தினர்.

    தம்புல்லா:

    நியூசிலாந்து கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதலில் நடந்த டி20 தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிவடைந்தது.

    இந்நிலையில், இலங்கை-நியூசிலாந்து இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி தம்புல்லா மைதானத்தில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இலங்கை பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

    அதன்படி, இலங்கை அணி முதலில் களமிறங்கியது. பதும் நிசங்கா 12 ரன்னில் அவுட் ஆனார்.

    குசால் மெண்டிசுடன் அவிஷ்கா பெர்ணாண்டோ இணைந்தார். இந்த ஜோடி பொறுப்புடன் ஆடி ரன்கள் சேர்த்தது. இருவரும் சதம் அடித்து அசத்தினர்.

    2வது விக்கெட்டுக்கு 206 ரன்கள் சேர்த்த நிலையில் அவிஷ்கா பெர்ணாண்டோ 100 ரன்னில் அவுட்டானார். சமர விகர்மா 5 ரன்னில் வெளியேறினார். சிறப்பாக ஆடிய குசால் மெண்டிஸ் 143 ரன்னில் ஆட்டமிழந்தார். கடைசி கட்டத்தில் கேப்டன் அசலங்கா அதிரடியாக ஆடி 40 ரன்னில் அவுட்டானார்.

    இறுதியில், இலங்கை அணி 49.2 ஒவரில் 5 விக்கெட்டுக்கு 324 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது மழை பெய்ததால் ஆட்டம் பாதிக்கப்பட்டு இலங்கை இன்னிங்ஸ் முடிக்கப்பட்டது.

    இதையடுத்து, டி. எல்.எஸ் முறைப்படி நியூசிலாந்து அணிக்கு 27 ஓவரில் 221 ரன்கள் எடுக்கவேண்டும் என வெற்றி இலக்கு மாற்றி அமைக்கப்பட்டது.

    அடுத்து இறங்கிய நியூசிலாந்தின் தொடக்க ஆட்டக்காரர்கள் சிறப்பாக ஆடினர். முதல் விக்கெட்டுக்கு 88 ரன்கள் சேர்த்தனர்.

    அரை சதம் கடப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வில் யங் 48 ரன்னில் வெளியேறினார். டிம் ராபின்சன் 35 ரன்னும், பிரேஸ்வெல் 34 ரன்னும் எடுத்தனர். மற்ற வீரர்கள் நிலைத்து நிற்காமல் விரைவில் அவுட்டாகினர்.

    இறுதியில், நியூசிலாந்து 27 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 175 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் 45 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அபார வெற்றி பெற்றதுடன் ஒருநாள் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.

    • புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது.
    • அரியானா அணி 7-வது வெற்றியைப் பதிவு செய்தது.

    நொய்டா:

    11-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த அக்டோபர் 18-ம் தேதி ஐதராபாத்தில் தொடங்கியது. இந்த தொடரின் இரண்டாம் கட்ட லீக் ஆட்டங்கள் உத்தர பிரதேசத்தின் நொய்டாவில் நடந்து வருகிறது.

    இதில் இன்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் குஜராத் ஜெயண்ட்ஸ், பெங்கால் வாரியர்ஸ் அணிகள் மோதின. ஆரம்பம் முதலே குஜராத் அணியினர் அதிரடியாக ஆடினர்.

    இறுதியில், குஜராத் அணி 47-28 என்ற புள்ளிக்கணக்கில் பெங்கால் வாரியர்ஸை வீழ்த்தியது. இது குஜராத் அணி பெற்ற 2-வது வெற்றி ஆகும்.

    மற்றொரு ஆட்டத்தில் பாட்னா பைரேட்ஸ் அணியை 37-32 என்ற புள்ளிக்கணக்கில் அரியானா ஸ்டீலர்ஸ் அணி வீழ்த்தி 7வது வெற்றியைப் பதிவு செய்ததுடன், புள்ளிப்பட்டியலில் முதலிடத்தையும் பிடித்துள்ளது.

    • முதலில் பேட் செய்த இந்தியா 219 ரன்களைக் குவித்தது.
    • இந்திய அணியின் திலக் வர்மா சதமடித்து அசத்தினார்.

    செஞ்சூரியன்:

    தென் ஆப்பிரிக்கா, இந்தியா இடையிலான 3வது டி20 போட்டி செஞ்சூரியனில் நடைபெறுகிறது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, இந்திய அணி முதலில் களமிறங்கியது. முதல் ஓவரின் 2வது பந்தில் சஞ்சு சாம்சன் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.

    மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மாவுடன், திலக் வர்மா ஜோடி சேர்ந்தார். இருவரும் அதிரடியாக ஆடி ரன்குவிப்பில் ஈடுபட்டனர்.

    2வது விக்கெட்டுக்கு 107 ரன்கள் சேர்த்த நிலையில் அபிஷேக் சர்மா அரை சதமடித்து ஆட்டமிழந்தார். அடுத்து இறங்கிய கேப்டன் சூர்யகுமார் யாதவ் ஒரு ரன்னிலும், பாண்ட்யா 18 ரன்னிலும், ரிங்கு சிங் 8 ரன்னிலும் வெளியேறினர்.

    அதிரடியைத் தொடர்ந்த திலக் வர்மா முதல் சதமடித்து அசத்தினார்.

    இறுதியில், இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 219 ரன்களை குவித்தது. திலக் வர்மா 107 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    இதையடுத்து 220 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா களமிறங்குகிறது.

    ×