என் மலர்
விளையாட்டு
77-வது தேசிய சீனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் பெண்கள் ஒற்றையர் பிரிவில்போட்டியில் ஜோஸ்னா 18-வது முறையாக பட்டம் வென்றார்
சென்னை:
77-வது தேசிய சீனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு பார்க்கில் உள்ள ஸ்குவாஷ் அரங்கில் நடந்து வந்தது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் தமிழக வீராங்கனை ஜோஸ்னா சின்னப்பா, தன்வி கன்னாவை (டெல்லி) எதிர்கொண்டார். முதல் செட்டை இழந்த ஜோஸ்னா அதன் பிறகு சுதாரித்து மீண்டு 8-11, 11-6, 11-4, 11-7 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றினார். சென்னையைச் சேர்ந்த 33 வயதான ஜோஸ்னாவின் 18-வது தேசிய சாம்பியன்ஷிப் பட்டம் இதுவாகும். 2000-ம் ஆண்டு, முதல் முறையாக மகுடம் சூடிய ஜோஸ்னா, அதன் பிறகு இரண்டு முறை மட்டுமே தோற்று இருக்கிறார். அந்த தோல்விகளும் இறுதி ஆட்டத்தில் தழுவியவை ஆகும். தேசிய பட்டத்தை அதிக முறை ருசித்தவர் என்ற சிறப்பு ஜோஸ்னா வசமே உள்ளது. 16 முறை இந்த பட்டத்தை வென்றிருந்த புவனேஸ்வரி குமாரியின் சாதனையை கடந்த ஆண்டே முறியடித்து விட்டார்.
இதன் ஆண்கள் பிரிவில் போட்டித் தரநிலையில் முதலிடம் வகிக்கும் தமிழக வீரர் சவுரவ் கோஷல் 11-6, 11-5, 11-6 என்ற நேர் செட் கணக்கில் அபிஷேக் பிரதனை (மராட்டியம்) தோற்கடித்து தனது ஆதிக்கத்தை நிலை நாட்டினார். சவுரவ் கோஷலுக்கு இது 13-வது தேசிய பட்டமாகும்.
இதன் ஜூனியர் பிரிவில் (19 வயதுக்குட்பட்டோர்) ஆண்கள் பிரிவில் கனாவ் நானாவதியும் (தமிழகம்), பெண்கள் பிரிவில் அபிஷேகா ஷனோனும் (தமிழகம்) பட்டம் வென்றனர்.
77-வது தேசிய சீனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு பார்க்கில் உள்ள ஸ்குவாஷ் அரங்கில் நடந்து வந்தது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் தமிழக வீராங்கனை ஜோஸ்னா சின்னப்பா, தன்வி கன்னாவை (டெல்லி) எதிர்கொண்டார். முதல் செட்டை இழந்த ஜோஸ்னா அதன் பிறகு சுதாரித்து மீண்டு 8-11, 11-6, 11-4, 11-7 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றினார். சென்னையைச் சேர்ந்த 33 வயதான ஜோஸ்னாவின் 18-வது தேசிய சாம்பியன்ஷிப் பட்டம் இதுவாகும். 2000-ம் ஆண்டு, முதல் முறையாக மகுடம் சூடிய ஜோஸ்னா, அதன் பிறகு இரண்டு முறை மட்டுமே தோற்று இருக்கிறார். அந்த தோல்விகளும் இறுதி ஆட்டத்தில் தழுவியவை ஆகும். தேசிய பட்டத்தை அதிக முறை ருசித்தவர் என்ற சிறப்பு ஜோஸ்னா வசமே உள்ளது. 16 முறை இந்த பட்டத்தை வென்றிருந்த புவனேஸ்வரி குமாரியின் சாதனையை கடந்த ஆண்டே முறியடித்து விட்டார்.
இதன் ஆண்கள் பிரிவில் போட்டித் தரநிலையில் முதலிடம் வகிக்கும் தமிழக வீரர் சவுரவ் கோஷல் 11-6, 11-5, 11-6 என்ற நேர் செட் கணக்கில் அபிஷேக் பிரதனை (மராட்டியம்) தோற்கடித்து தனது ஆதிக்கத்தை நிலை நாட்டினார். சவுரவ் கோஷலுக்கு இது 13-வது தேசிய பட்டமாகும்.
இதன் ஜூனியர் பிரிவில் (19 வயதுக்குட்பட்டோர்) ஆண்கள் பிரிவில் கனாவ் நானாவதியும் (தமிழகம்), பெண்கள் பிரிவில் அபிஷேகா ஷனோனும் (தமிழகம்) பட்டம் வென்றனர்.
ஐபிஎல் 2020-க்கான போட்டி அட்டவணை இன்று வெளியிடப்பட்டது. மார்ச் 29-ம் தேதி தொடங்கும் முதல் ஆட்டத்தில் சென்னை - மும்பை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
புதுடெல்லி:
ஐபிஎல் டி 20 கிரிக்கெட் திருவிழாவின் 2020 சீசன் மார்ச் மாதம் 29-ம் தேதி தொடங்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், மும்பையில் முதல் போட்டி மார்ச் 29-ம் தேதி தொடங்குகிறது. இதில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இறுதிப்போட்டி மும்பையில் மே 24ம் தேதி நடைபெற உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பெண்களுக்கான தேசிய 20 கிலோ மீட்டர் நடைபந்தயத்தில் இந்திய வீராங்கனை பாவ்னா ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.
ராஞ்சி:
பெண்களுக்கான தேசிய 20 கிலோ மீட்டர் நடைபந்தயம் ராஞ்சியில் இன்று நடந்தது.
இந்த போட்டியில் பங்கேற்ற ராஜஸ்தானை சேர்ந்த பாவ்னா ஜாட் பந்தய தூரத்தை 1 மணி 29.54 வினாடியில் கடந்தார். இது புதிய தேசிய சாதனையாகும்.
இதற்கு முன்பு அவர் கடந்த அக்டோபர் மாதம் 1 மணி 38.30 நிமிடத்தில் கடந்ததே சிறந்த நிலையாக இருந்தது.
இதன்மூலம் பாவ்னா ஜாட் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார். பிரியங்கா கோஸ்சுவாமி மயிரிழையில் ஒலிம்பிக் வாய்ப்பை தவற விட்டார். அவர் பந்தய தூரத்தை 1 மணி 31.36 நிமிடத்தில் கடந்தார்.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டி ஜூலை 24-ந் தேதி முதல் ஆகஸ்டு 9-ந் தேதி வரை நடக்கிறது. இதுவரை இந்தியா சார்பில் 64 பேர் தகுதி பெற்றுள்ளனர்.
தடகளத்தில் இருந்து 3-வது நபராக பாவ்னா ஜாட் தகுதி பெற்றார். ஏற்கனவே அவினாஷ் (3000 மீட்டர் ஸ்டிபிள் சேஷ்), இர்பான் (20 கிலோமீட்டர் நடை பந்தயம்) ஆகியோர் தகுதி பெற்றிருந்தனர்.
பெண்களுக்கான தேசிய 20 கிலோ மீட்டர் நடைபந்தயம் ராஞ்சியில் இன்று நடந்தது.
இந்த போட்டியில் பங்கேற்ற ராஜஸ்தானை சேர்ந்த பாவ்னா ஜாட் பந்தய தூரத்தை 1 மணி 29.54 வினாடியில் கடந்தார். இது புதிய தேசிய சாதனையாகும்.
இதற்கு முன்பு அவர் கடந்த அக்டோபர் மாதம் 1 மணி 38.30 நிமிடத்தில் கடந்ததே சிறந்த நிலையாக இருந்தது.
இதன்மூலம் பாவ்னா ஜாட் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார். பிரியங்கா கோஸ்சுவாமி மயிரிழையில் ஒலிம்பிக் வாய்ப்பை தவற விட்டார். அவர் பந்தய தூரத்தை 1 மணி 31.36 நிமிடத்தில் கடந்தார்.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டி ஜூலை 24-ந் தேதி முதல் ஆகஸ்டு 9-ந் தேதி வரை நடக்கிறது. இதுவரை இந்தியா சார்பில் 64 பேர் தகுதி பெற்றுள்ளனர்.
தடகளத்தில் இருந்து 3-வது நபராக பாவ்னா ஜாட் தகுதி பெற்றார். ஏற்கனவே அவினாஷ் (3000 மீட்டர் ஸ்டிபிள் சேஷ்), இர்பான் (20 கிலோமீட்டர் நடை பந்தயம்) ஆகியோர் தகுதி பெற்றிருந்தனர்.
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டி20 போட்டியில் பரபரப்பான இறுதிக்கட்டத்தில் 2 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது இங்கிலாந்து.
டர்பன்:
இங்கிலாந்து கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 4 டெஸ்ட் கொண்ட தொடரை இங்கிலாந்து 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தது.
இதையடுத்து, 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா அணி ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி டர்பனில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, இங்கிலாந்து அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ஜேசன் ராய் பொறுப்புடன் ஆடி 40 ரன்னில் அவுட்டானார்.
மொயின் அலி 39 ரன்னிலும், பேர்ஸ்டோவ் 35 ரன்னிலும், மார்கன் 27 ரன்னிலும் அவுட்டாகினர். பென் ஸ்டோக்ஸ் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 47 ரன் எடுத்தார்.
இறுதியில், இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 204 ரன்கள் எடுத்தது.
தென் ஆப்பிரிக்கா சார்பில் நிகிடி 3 விக்கெட்டும், பெலுகுவாயோ 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதைத்தொடர்ந்து, 205 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் டி காக் அதிரடியாக ஆடினார். அவர் 22 பந்தில் 6 சிக்சர், 2 பவுண்டரி என 65 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். பவுமா 31 ரன்னிலும், பிரெடோரியஸ் 25 ரன்னிலும், மில்லர் 21 ரன்னிலும் வெளியேறினார்.
வான் டெர் டுசென் தாக்குப்பிடித்து ஆடினார். அவர் இறுதிவரை போராடி 43 ரன் எடுத்து அவுட்டாகாமல் உள்ளார்.
இறுதி ஓவரில் தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற 15 ரன்கள் தேவைப்பட்டது. 4 பந்தில் 12 ரன்கள் மட்டுமே எடுத்தது, கடைசி 2 பந்தில் 2 விக்கெட் வீழ்ந்தது. இறுதியில், 2 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.
இதன்மூலம் கடந்த போட்டியில் ஒரு ரன் வித்தியாசத்தில் தோற்ற இங்கிலாந்து இந்த போட்டியில் 2 ரன் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இரு அணிகளுக்கு இடையிலான தொடர் 1-1 என சமனிலை வகிக்கிறது. வெற்றியாளரை நிர்ணயிக்கும் இறுதிப் போட்டி நாளை நடைபெற உள்ளது.
77-வது தேசிய சீனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் சவுரவ் கோஷல், பெண்கள் ஒற்றையர் பிரிவில் ஜோஸ்னா சின்னப்பா இருவரும் இறுதி சுற்றில் நுழைந்தனர்.
சென்னை:
77-வது தேசிய சீனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு பார்க்கில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டத்தில் 12 முறை சாம்பியனான சவுரவ் கோஷல் (தமிழகம்) 11-9, 11-1, 11-8 என்ற நேர் செட்டில் சக மாநில வீரரான அபய்சிங்கை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார். மற்றொரு அரையிறுதியில் அபிஷேக் பிரதன் (மகாராஷ்டிரா) 11-6, 12-10, 10-12, 9-11, 11-7 என்ற செட் கணக்கில் போராடி ஹரிந்தர் பால் சிங் சந்துவை (தமிழகம்) தோற்கடித்தார்.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த அரையிறுதி ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியன் ஜோஸ்னா சின்னப்பா (தமிழகம்) 11-9, 11-7, 11-4 என்ற நேர் செட்டில் சன்யா வாட்சை (டெல்லி) சாய்த்து இறுதி சுற்றை எட்டினார். மற்றொரு அரையிறுதியில் தமிழக வீராங்கனை சுனைனா குருவில்லா 6-11, 11-3, 8-11, 11-8, 10-12 என்ற செட் கணக்கில் போராடி தன்வி கன்னாவிடம் (டெல்லி) தோல்வி அடைந்தார்.
77-வது தேசிய சீனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு பார்க்கில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டத்தில் 12 முறை சாம்பியனான சவுரவ் கோஷல் (தமிழகம்) 11-9, 11-1, 11-8 என்ற நேர் செட்டில் சக மாநில வீரரான அபய்சிங்கை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார். மற்றொரு அரையிறுதியில் அபிஷேக் பிரதன் (மகாராஷ்டிரா) 11-6, 12-10, 10-12, 9-11, 11-7 என்ற செட் கணக்கில் போராடி ஹரிந்தர் பால் சிங் சந்துவை (தமிழகம்) தோற்கடித்தார்.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த அரையிறுதி ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியன் ஜோஸ்னா சின்னப்பா (தமிழகம்) 11-9, 11-7, 11-4 என்ற நேர் செட்டில் சன்யா வாட்சை (டெல்லி) சாய்த்து இறுதி சுற்றை எட்டினார். மற்றொரு அரையிறுதியில் தமிழக வீராங்கனை சுனைனா குருவில்லா 6-11, 11-3, 8-11, 11-8, 10-12 என்ற செட் கணக்கில் போராடி தன்வி கன்னாவிடம் (டெல்லி) தோல்வி அடைந்தார்.
புவனேஸ்வரத்தில் நடைபெற்ற ஐ.எஸ்.எல். கால்பந்து லீக் போட்டியில் கவுகாத்தி அணியை 2-1 என்ற கணக்கில் வீழ்த்தி பிளே ஆப் சுற்றை தக்கவைத்துக் கொண்டது ஒடிசா அணி.
புவனேஸ்வர்:
10 அணிகள் இடையிலான 6-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் இன்று இரவு நடந்த லீக் ஆட்டத்தில் ஒடிசா எப்.சி. கவுகாத்தி (நார்த்ஈஸ்ட் யுனைடெட் எப்.சி.) அணிகள் மோதின.
ஆட்டத்தின் முதல் பாதியில் 24-வது நிமிடத்தில் கவுகாத்தி அணி முதல் கோலை அடித்தது. இதனால் முதல் பாதியில் 1-0 என கவுகாத்தி அணி முன்னிலை பெற்றது.
இரண்டாவது பாதியில் ஒடிசா அணி சிறப்பாக ஆடியது. அந்த அணியின் மானுவேல் ஆன்வு 47 வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து ஆட்டத்தை சமனிலைப்படுத்தினார்.
அவரை தொடர்ந்து ஆட்டத்தின் 72-வது நிமிடத்தில் ஒடிசாவின் பெரஸ் குடெஸ் ஒரு கோல் அடித்து தனது அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.
இறுதியில், ஒடிசா அணி 2-1 என்ற கணக்கில் கவுகாத்தி அணியை வீழ்த்தியது. இதன்மூலம் ஒடிசா அணி புள்ளிப்பட்டியலில் ஒரு இடம் முன்னேறி ஐந்தாம் இடத்தில் உள்ளது. இந்த வெற்றியால் ஒடிசா பிளே ஆப் வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டது.
கடைசி லீக் ஆட்டத்தில் வெற்றி பெற்ற பெங்கால் மற்றும் கர்நாடகா அணிகள் ரஞ்சி கோப்பை காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளன.
ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் தற்போது கடைசி லீக் ஆட்டம் நடைபெற்று வருகிறது. ஒரு ஆட்டத்தில் பெங்கால் - பஞ்சாப் அணிகள் மோதின. இந்த போட்டியில் பெங்கால் 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று காலிறுதி போட்டிக்கு முன்னேறியது.
பெங்கால் முதல் இன்னிங்சில் 138 ரன்னில் சுருண்டது. பஞ்சாப் 151 ரன்கள் அடித்தது. பின்னர் பெங்கால் 2-வது இன்னிங்சில் 202 ரன்கள் அடித்தது. பின்னர் 190 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் களம் இறங்கியது. ஆனால் 141 ரன்னில் சுருண்டது.
மற்றொரு ஆட்டத்தில் பரோடா - கர்நாடகா அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் கர்நாடகா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியது. பரோடா முதல் இன்னிங்சில் 85 ரன்களும், கர்நாடகா 233 ரன்களும் சேர்த்தனர். பரோடா 2-வது இன்னிங்சில் 296 ரன்கள் சேர்த்தது. கர்நாடகா 149 இலக்கை 2 விக்கெட்டை மட்டுமே இழந்து வெற்றி பெற்றது.
பெங்கால் முதல் இன்னிங்சில் 138 ரன்னில் சுருண்டது. பஞ்சாப் 151 ரன்கள் அடித்தது. பின்னர் பெங்கால் 2-வது இன்னிங்சில் 202 ரன்கள் அடித்தது. பின்னர் 190 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் களம் இறங்கியது. ஆனால் 141 ரன்னில் சுருண்டது.
மற்றொரு ஆட்டத்தில் பரோடா - கர்நாடகா அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் கர்நாடகா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியது. பரோடா முதல் இன்னிங்சில் 85 ரன்களும், கர்நாடகா 233 ரன்களும் சேர்த்தனர். பரோடா 2-வது இன்னிங்சில் 296 ரன்கள் சேர்த்தது. கர்நாடகா 149 இலக்கை 2 விக்கெட்டை மட்டுமே இழந்து வெற்றி பெற்றது.
நியூசிலாந்து டெஸ்ட் தொடரின்போது, எதிரணி வீரர்களின் ‘ஷாட் பிட்ச்’ பந்து வீச்சு தாக்குதலை சமாளிப்பதை பொறுத்தே வெற்றி வாய்ப்பு அமையும் என்று இந்திய இளம் வீரர் ஷுப்மான் கில் கூறியுள்ளார்.
நியூசிலாந்துக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி அடுத்து 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. முதலாவது டெஸ்ட் போட்டி வருகிற 21-ந்தேதி வெலிங்டனில் தொடங்குகிறது.
ரோகித் சர்மா காயமடைந்து தாயகம் திரும்பி விட்டதால் இந்திய டெஸ்ட் அணியில் தொடக்க வரிசை இடத்துக்கு ஷுப்மான் கில், பிரித்வி ஷா ஆகியோர் இடையே போட்டி நிலவுகிறது. சமீபத்தில் நியூசிலாந்து ‘ஏ’ அணிக்கு எதிரான அதிகாரபூர்வமற்ற 2 டெஸ்டுகளில் இந்திய ‘ஏ’ அணிக்காக களம் கண்ட ஷுப்மான் கில் 83, 204, 136 ரன்கள் வீதம் குவித்தார். இதனால் அவர் டெஸ்டில் அறிமுக வீரராக இடம் பெற வாய்ப்புள்ளது.
இதையொட்டி 20 வயதான சுப்மான் கில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
நானும், பிரித்வி ஷாவும் ஒரே சமயத்தில் கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கினோம். ஆனால் நீங்கள் சொல்வது போல் அணியில் இடத்தை பிடிக்க எங்கள் இடையே நீயா-நானா? போட்டி எல்லாம் கிடையாது. இருவரும் எங்களது வரிசையில் சிறப்பாக ஆடுகிறோம். எனவே ஆடும் லெவன் அணியில் யாரை தேர்வு செய்வது என்பது அணி நிர்வாகத்தின் முடிவை பொறுத்தது.
யாருக்கு வாய்ப்பு கிடைத்தாலும் அதை சரியாக பயன்படுத்திக் கொள்ள முயற்சிப்போம். வாய்ப்பை வீணாக்கி விடக்கூடாது.
நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர்கள் ‘ஷாட் பிட்ச்’ தாக்குதலை தொடுத்து நிறைய விக்கெட்டுகளை கைப்பற்றுகிறார்கள். குறிப்பாக நீல் வாக்னெர் இந்த யுக்தியை அதிகமாக கையாள்கிறார். நியூசிலாந்து அணி கடைசியாக விளையாடிய ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை பார்த்தால், உண்மையிலேயே அவர்கள் ‘ஷாட்பிட்ச்’ பந்துவீச்சை சார்ந்து இருந்தது புலப்படும்.
எனவே ஒரு பேட்ஸ்மேனாக, ஒரு அணியாக நாம் ‘ஷாட் பிட்ச்’ பந்து வீச்சில் விக்கெட்டுகளை இழந்து விடக்கூடாது. இதை சமாளித்து விட்டால், இன்னிங்சில் நல்ல நிலையை எட்ட அது உதவிகரமாக இருக்கும்.
நியூசிலாந்தில் காற்றின் தாக்கம், குறிப்பாக பேட்டிங் செய்யும் போது முக்கிய பங்கு வகிக்கும். காற்று எந்த திசையில் வீசுகிறது என்பதை பார்த்து அதற்கு ஏற்ப பந்து விச்சாளர்கள் வியூகம் வகுப்பார்கள். காற்றின் தாக்கத்துக்கு மத்தியில் தொடர்ந்து புல் மற்றும் ஹுக் ஷாட்டுகளை ஆடுவது எளிதல்ல.
என்னை தொடக்க ஆட்டக்காரராக (இந்திய ஏ அணிக்காக) இறங்க சொன்னபோது அது எனக்கு புதியதாக தோன்றவில்லை. ஏனெனில் எனது மாநில அணிக்காக (பஞ்சாப்) ஏற்கனவே தொடக்க வீரராக விளையாடிய அனுபவம் உண்டு. 4-வது வரிசையில் ஆடும்போது, ஏற்கனவே 2 விக்கெட்டுகள் சரிந்திருக்கும். அது மாறுபட்ட சூழல், வித்தியாசமான அழுத்தம் கொண்டது.
ஆனால் தொடக்க வீரராக இன்னிங்சை தொடங்குவது முற்றிலும் வேறு வகையான சவாலாகும். ஒட்டுமொத்த அணிக்கும் நல்ல அடித்தளத்தை அமைத்து கொடுக்க வேண்டிய பொறுப்பு இருக்கிறது. அவ்வாறு செய்தால், அடுத்து வரும் பேட்ஸ்மேன்களின் பணி எளிதாகி விடும்.
இங்குள்ள ஆடுகளங்கள் பேட்டிங்குக்கு உகந்ததாக உள்ளன. அதுவும் நாங்கள் கிறிஸ்ட்சர்ச் மைதானத்தில் பகலில் விளையாடியபோது, ஆடுகளம் பேட்டிங்குக்கு அருமையாக ஒத்துழைத்தது. ஆனால் பவுன்சர் பந்துகளை எதிர்கொள்வது மட்டுமே ஒரே சவாலாக இருந்தது. அதுவும் நன்கு எழும்பிய பந்துகள், தொடர்ச்சியாக அது போலவே வந்தது.
நல்ல உடல்தகுதியுடன், நம்பிக்கையுடன் இருந்தால் நீண்ட இன்னிங்சை விளையாட முடியும். சோர்வு ஏற்படாது. நான் டெஸ்ட் போட்டியில் விளையாடினால் என்னால் 300 அல்லது 350 பந்துகளை தாக்குப்பிடித்து விளையாட முடியும் என்பதில் உறுதியாக நம்புகிறேன். நீண்ட இன்னிங்ஸ் பேட்டிங் செய்து விட்டு, அதன் பிறகு உடனடியாக களம் இறங்கும்போது, சோர்ந்து விடமாட்டேன். எனது கால்கள் தளராது. ஆனால் இவை எல்லாம் சவாலான விஷயமாகும்.
நான் வளர்ந்து வரும் ஒரு வீரர். கடந்த சில ஆண்டுகளில் நிறைய கற்று இருக்கிறேன். போதுமான பயிற்சி பெற்றுள்ள நான் நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கு தயாராக இருக்கிறேன்.
இவ்வாறு சுப்மான் கில் கூறினார்.
ரோகித் சர்மா காயமடைந்து தாயகம் திரும்பி விட்டதால் இந்திய டெஸ்ட் அணியில் தொடக்க வரிசை இடத்துக்கு ஷுப்மான் கில், பிரித்வி ஷா ஆகியோர் இடையே போட்டி நிலவுகிறது. சமீபத்தில் நியூசிலாந்து ‘ஏ’ அணிக்கு எதிரான அதிகாரபூர்வமற்ற 2 டெஸ்டுகளில் இந்திய ‘ஏ’ அணிக்காக களம் கண்ட ஷுப்மான் கில் 83, 204, 136 ரன்கள் வீதம் குவித்தார். இதனால் அவர் டெஸ்டில் அறிமுக வீரராக இடம் பெற வாய்ப்புள்ளது.
இதையொட்டி 20 வயதான சுப்மான் கில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
நானும், பிரித்வி ஷாவும் ஒரே சமயத்தில் கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கினோம். ஆனால் நீங்கள் சொல்வது போல் அணியில் இடத்தை பிடிக்க எங்கள் இடையே நீயா-நானா? போட்டி எல்லாம் கிடையாது. இருவரும் எங்களது வரிசையில் சிறப்பாக ஆடுகிறோம். எனவே ஆடும் லெவன் அணியில் யாரை தேர்வு செய்வது என்பது அணி நிர்வாகத்தின் முடிவை பொறுத்தது.
யாருக்கு வாய்ப்பு கிடைத்தாலும் அதை சரியாக பயன்படுத்திக் கொள்ள முயற்சிப்போம். வாய்ப்பை வீணாக்கி விடக்கூடாது.
நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர்கள் ‘ஷாட் பிட்ச்’ தாக்குதலை தொடுத்து நிறைய விக்கெட்டுகளை கைப்பற்றுகிறார்கள். குறிப்பாக நீல் வாக்னெர் இந்த யுக்தியை அதிகமாக கையாள்கிறார். நியூசிலாந்து அணி கடைசியாக விளையாடிய ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை பார்த்தால், உண்மையிலேயே அவர்கள் ‘ஷாட்பிட்ச்’ பந்துவீச்சை சார்ந்து இருந்தது புலப்படும்.
எனவே ஒரு பேட்ஸ்மேனாக, ஒரு அணியாக நாம் ‘ஷாட் பிட்ச்’ பந்து வீச்சில் விக்கெட்டுகளை இழந்து விடக்கூடாது. இதை சமாளித்து விட்டால், இன்னிங்சில் நல்ல நிலையை எட்ட அது உதவிகரமாக இருக்கும்.
நியூசிலாந்தில் காற்றின் தாக்கம், குறிப்பாக பேட்டிங் செய்யும் போது முக்கிய பங்கு வகிக்கும். காற்று எந்த திசையில் வீசுகிறது என்பதை பார்த்து அதற்கு ஏற்ப பந்து விச்சாளர்கள் வியூகம் வகுப்பார்கள். காற்றின் தாக்கத்துக்கு மத்தியில் தொடர்ந்து புல் மற்றும் ஹுக் ஷாட்டுகளை ஆடுவது எளிதல்ல.
என்னை தொடக்க ஆட்டக்காரராக (இந்திய ஏ அணிக்காக) இறங்க சொன்னபோது அது எனக்கு புதியதாக தோன்றவில்லை. ஏனெனில் எனது மாநில அணிக்காக (பஞ்சாப்) ஏற்கனவே தொடக்க வீரராக விளையாடிய அனுபவம் உண்டு. 4-வது வரிசையில் ஆடும்போது, ஏற்கனவே 2 விக்கெட்டுகள் சரிந்திருக்கும். அது மாறுபட்ட சூழல், வித்தியாசமான அழுத்தம் கொண்டது.
ஆனால் தொடக்க வீரராக இன்னிங்சை தொடங்குவது முற்றிலும் வேறு வகையான சவாலாகும். ஒட்டுமொத்த அணிக்கும் நல்ல அடித்தளத்தை அமைத்து கொடுக்க வேண்டிய பொறுப்பு இருக்கிறது. அவ்வாறு செய்தால், அடுத்து வரும் பேட்ஸ்மேன்களின் பணி எளிதாகி விடும்.
இங்குள்ள ஆடுகளங்கள் பேட்டிங்குக்கு உகந்ததாக உள்ளன. அதுவும் நாங்கள் கிறிஸ்ட்சர்ச் மைதானத்தில் பகலில் விளையாடியபோது, ஆடுகளம் பேட்டிங்குக்கு அருமையாக ஒத்துழைத்தது. ஆனால் பவுன்சர் பந்துகளை எதிர்கொள்வது மட்டுமே ஒரே சவாலாக இருந்தது. அதுவும் நன்கு எழும்பிய பந்துகள், தொடர்ச்சியாக அது போலவே வந்தது.
நல்ல உடல்தகுதியுடன், நம்பிக்கையுடன் இருந்தால் நீண்ட இன்னிங்சை விளையாட முடியும். சோர்வு ஏற்படாது. நான் டெஸ்ட் போட்டியில் விளையாடினால் என்னால் 300 அல்லது 350 பந்துகளை தாக்குப்பிடித்து விளையாட முடியும் என்பதில் உறுதியாக நம்புகிறேன். நீண்ட இன்னிங்ஸ் பேட்டிங் செய்து விட்டு, அதன் பிறகு உடனடியாக களம் இறங்கும்போது, சோர்ந்து விடமாட்டேன். எனது கால்கள் தளராது. ஆனால் இவை எல்லாம் சவாலான விஷயமாகும்.
நான் வளர்ந்து வரும் ஒரு வீரர். கடந்த சில ஆண்டுகளில் நிறைய கற்று இருக்கிறேன். போதுமான பயிற்சி பெற்றுள்ள நான் நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கு தயாராக இருக்கிறேன்.
இவ்வாறு சுப்மான் கில் கூறினார்.
ஐபிஎல் 2020 சீசன் தொடங்கும் நாளன்று கூட்டம் நடைபெற இருப்பதால், அதை தள்ளி வைக்க வேண்டும் என்ற பிசிசிஐயின் வேண்டுகோளை ஐசிசி நிராகரித்துள்ளது.
ஐசிசி முக்கியமான உயர்மட்ட கூட்டம் மார்ச் மாதம் 27-ந்தேதி முதல் 29-ந்தேதி நடக்கிறது. இந்த கூட்டத்தில் 2023 முதல் 2031 வரையிலான டெஸ்ட் போட்டி அட்டவணையை நான்கு நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டியாக மாற்றுவது குறித்து முடிவு எடுக்கப்பட உள்ளது.
இதேவேளையில் இந்தியாவில் நடத்தப்படும் ஐபிஎல் தொடர் 29-ந்தேதி நடக்கும் என பிசிசிஐ தலைவர் அறிவித்துள்ளார். தொடர் தொடங்கும் நாளில் பிசிசிஐ தலைவர்கள் மற்றும் முக்கிய பொறுப்பில் உள்ளவர்கள் இங்கே இருக்க வேண்டும். அதனால் ஐசிசி கூட்டத்திற்கான தேதியை தள்ளி வையுங்கள் என்று பிசிசிஐ வேண்டுகோள் விடுத்தது.
ஆனால் பிசிசிஐ-யின் வேண்டுகோளை ஐசிசி நிராகரித்துள்ளது. கூட்டத்திற்கான தேதி ஏற்கனவே முடிவு செய்யப்பட்டது. பயணம், அதிகாரிகள் தங்குமிடம் மற்றும் கூட்டம் நடைபெறும் இடம் என அனைத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டு விட்டது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் ஐபிஎல் போட்டியின் தொடக்க நாள் தள்ளிப்போகுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதேவேளையில் இந்தியாவில் நடத்தப்படும் ஐபிஎல் தொடர் 29-ந்தேதி நடக்கும் என பிசிசிஐ தலைவர் அறிவித்துள்ளார். தொடர் தொடங்கும் நாளில் பிசிசிஐ தலைவர்கள் மற்றும் முக்கிய பொறுப்பில் உள்ளவர்கள் இங்கே இருக்க வேண்டும். அதனால் ஐசிசி கூட்டத்திற்கான தேதியை தள்ளி வையுங்கள் என்று பிசிசிஐ வேண்டுகோள் விடுத்தது.
ஆனால் பிசிசிஐ-யின் வேண்டுகோளை ஐசிசி நிராகரித்துள்ளது. கூட்டத்திற்கான தேதி ஏற்கனவே முடிவு செய்யப்பட்டது. பயணம், அதிகாரிகள் தங்குமிடம் மற்றும் கூட்டம் நடைபெறும் இடம் என அனைத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டு விட்டது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் ஐபிஎல் போட்டியின் தொடக்க நாள் தள்ளிப்போகுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
வீரர்கள் வேலைப்பளு காரணமாக பாகிஸ்தான் சென்று விளையாட இருந்த டி20 தொடரை தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் போர்டு தள்ளி வைத்துள்ளது.
பாகிஸ்தான் அணி சொந்த மண்ணில் கிரிக்கெட் தொடர்களை நடத்த முயற்சி எடுத்து வருகிறது. இலங்கை, வங்காளதேசம் அணிகள் அங்கு சென்று விளையாடி விட்டன.
அடுத்ததாக தென்ஆப்பிரிக்கா அணியை வந்து விளையாடுமாறு அழைப்பு விடுத்தது. தென்ஆப்பிரிக்கா அணியும் மார்ச் மாதம் பாகிஸ்தான் வர சம்மதம் தெரிவித்தது. மேலும் பாதுகாப்பு குறித்து ஆராய்வதற்காக ஒரு குழுவை அனுப்பவும் ஏற்பாடு செய்து வந்தது.
இந்நிலையில் வீரர்கள் எங்கள் நாட்டின் கொடைக்காலத்தில் இருந்து தொடர்ந்து கிரிக்கெட் விளையாடி வருகிறார்கள். அவர்களின் வேலைப்பளுவின் காரணமாக மார்ச் மாதம் பாகிஸ்தான் வர இயலாது. தொடரை தள்ளி வைத்துக் கொள்ளலாம் என தென்ஆப்பிரிக்கா சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பாகிஸ்தான் - தென்ஆப்பிரிக்கா இடையிலான தொடர் தள்ளிப்போகிறது.
தென்ஆப்பிரிக்கா அணி தற்போது இங்கிலாந்துக்கு எதிராக விளையாடுகிறது. அதன்பின் தென்ஆப்பிரிக்காவுடன் தலா மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது.
அதற்கு பின் இந்தியாவுடன் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. இந்தத் தொடர் மார்ச் 18-ந்தேதி முடிவடைகிறது. பாகிஸ்தான் சூப்பர் லீக் மார்ச் 22-ந்தேதி முடிவடைகிறது. இரண்டிற்கும் இடையில் நான்கு நாட்கள் இருப்பதால் துபாயில் தங்கிய பின்னர் 22-ந்தேதிக்குப்பின் ராவல்பிண்டிக்கு தென்ஆப்பிரிக்கா அணியை அழைக்கலாம் என பாகிஸ்தான் திட்டமிட்டிருந்தது.
ஆனால் 29-ந்தேதி ஐபிஎல் தொடர் தொடங்கும் என பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார். பெரும்பாலான தென்ஆப்பிரிக்கா வீரர்கள் ஐபிஎல் தொடரில் விளையாடுவதால் வேலைப்பளுவை காரணம் காட்டி பாகிஸ்தான் தொடரை தள்ளிவைத்துள்ளது எனக் கூறப்படுகிறது.
அடுத்ததாக தென்ஆப்பிரிக்கா அணியை வந்து விளையாடுமாறு அழைப்பு விடுத்தது. தென்ஆப்பிரிக்கா அணியும் மார்ச் மாதம் பாகிஸ்தான் வர சம்மதம் தெரிவித்தது. மேலும் பாதுகாப்பு குறித்து ஆராய்வதற்காக ஒரு குழுவை அனுப்பவும் ஏற்பாடு செய்து வந்தது.
இந்நிலையில் வீரர்கள் எங்கள் நாட்டின் கொடைக்காலத்தில் இருந்து தொடர்ந்து கிரிக்கெட் விளையாடி வருகிறார்கள். அவர்களின் வேலைப்பளுவின் காரணமாக மார்ச் மாதம் பாகிஸ்தான் வர இயலாது. தொடரை தள்ளி வைத்துக் கொள்ளலாம் என தென்ஆப்பிரிக்கா சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பாகிஸ்தான் - தென்ஆப்பிரிக்கா இடையிலான தொடர் தள்ளிப்போகிறது.
தென்ஆப்பிரிக்கா அணி தற்போது இங்கிலாந்துக்கு எதிராக விளையாடுகிறது. அதன்பின் தென்ஆப்பிரிக்காவுடன் தலா மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது.
அதற்கு பின் இந்தியாவுடன் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. இந்தத் தொடர் மார்ச் 18-ந்தேதி முடிவடைகிறது. பாகிஸ்தான் சூப்பர் லீக் மார்ச் 22-ந்தேதி முடிவடைகிறது. இரண்டிற்கும் இடையில் நான்கு நாட்கள் இருப்பதால் துபாயில் தங்கிய பின்னர் 22-ந்தேதிக்குப்பின் ராவல்பிண்டிக்கு தென்ஆப்பிரிக்கா அணியை அழைக்கலாம் என பாகிஸ்தான் திட்டமிட்டிருந்தது.
ஆனால் 29-ந்தேதி ஐபிஎல் தொடர் தொடங்கும் என பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார். பெரும்பாலான தென்ஆப்பிரிக்கா வீரர்கள் ஐபிஎல் தொடரில் விளையாடுவதால் வேலைப்பளுவை காரணம் காட்டி பாகிஸ்தான் தொடரை தள்ளிவைத்துள்ளது எனக் கூறப்படுகிறது.
நியூசிலாந்து லெவன் அணிக்கெதிராக சதம் விளாசிய ஹனுமா விஹாரி, அணியின் நலனுக்கான எந்த இடத்திலும் களம் இறங்க தயார் என்று தெரிவித்துள்ளார்.
இந்திய டெஸ்ட் அணியில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக களம் இறங்கி விளையாடி வருபவர் ஹனுமா விஹாரி. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் மேல்போர்னில் தொடக்க வீரராக களம் இறங்கினார். அப்பேர்த ஆஸ்திரேலியாவின் பந்து வீச்சை எளிதாக எதிர்கொண்டார்.
பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் ரன்கள் அடிக்காவிடிலும் சுமார் 15 ஓவர்களுக்கு மேல் தாக்குப்பிடித்தார். வெஸ்ட் இண்டீஸ் தொடரில் மிடில் ஆர்டர் வரிசையில் களம் இறங்கி சதம் அடித்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார்.
ஆனால் இந்தியாவில் நடைபெற்ற நான்கு போட்டிகளிலும் ஒன்றில் மட்டுமே களம் இறங்கினார். இந்தியா ஐந்து பந்து வீச்சாளர்களுடன் விளையாடினால் ஹனுமா விஹாரிக்கு இடம் கிடைப்பது கடினம்.
இந்நிலையில் நியூசிலாந்து லெவன் அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் புஜாராவைத் தவிர மற்ற பேட்ஸ்மேன்கள் திணற 6-வது வீரராக களம் இறங்கிய ஹனுமா விஹாரி சிறப்பாக விளையாடி சதம் அடித்தார்.
இந்நிலையில் அணியின் நலனுக்காக எந்த இடத்திலும் களம் இறங்கி விளையாடத் தயார் என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஹனுமா விஹாரி கூறுகையில் ‘‘ஒரு வீரரான எந்த இடத்திலும் களம் இறங்கி பேட்டிங் செய்ய என்னை தயார்படுத்தியுள்ளேன். தற்போது நான் எதைப் பற்றியும் கூற இயலாது. நாம் முன்னதாகவே சொன்னதுபோல், அணி என்னை எந்த இடத்தில் இறங்கி பேட்டிங் செய்ய சொல்கிறதோ, அந்த இடத்தில் களம் இறங்கி பேட்டிங் செய்ய தயாராக இருக்கிறேன்.
சில நேரங்களில் விளையாட இடம் கிடைக்காத நேரத்தில் அணியின் காம்பினேசனை புரிந்து கொள்ள வேண்டும். அதனால் மனதை தளரவிட முடியாது. இந்திய மண்ணில் இந்தியா விளையாடும்போது ஐந்து பந்து வீச்சாளர்களுடன் விளையாடும் என்பதை நான் புரிந்து கொண்டுள்ளேன். அதனால் ஒரு சிறந்த வீரர் வெளியில் இருக்க வேண்டும். நான் யாருக்காகவும் எதையும் நிரூபிக்க வேண்டிய தேவையில்லை. ஆனால், நடைமுறையை பின்பற்ற வேண்டியுள்ளது’’ என்றார்.
பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் ரன்கள் அடிக்காவிடிலும் சுமார் 15 ஓவர்களுக்கு மேல் தாக்குப்பிடித்தார். வெஸ்ட் இண்டீஸ் தொடரில் மிடில் ஆர்டர் வரிசையில் களம் இறங்கி சதம் அடித்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார்.
ஆனால் இந்தியாவில் நடைபெற்ற நான்கு போட்டிகளிலும் ஒன்றில் மட்டுமே களம் இறங்கினார். இந்தியா ஐந்து பந்து வீச்சாளர்களுடன் விளையாடினால் ஹனுமா விஹாரிக்கு இடம் கிடைப்பது கடினம்.
இந்நிலையில் நியூசிலாந்து லெவன் அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் புஜாராவைத் தவிர மற்ற பேட்ஸ்மேன்கள் திணற 6-வது வீரராக களம் இறங்கிய ஹனுமா விஹாரி சிறப்பாக விளையாடி சதம் அடித்தார்.
இந்நிலையில் அணியின் நலனுக்காக எந்த இடத்திலும் களம் இறங்கி விளையாடத் தயார் என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஹனுமா விஹாரி கூறுகையில் ‘‘ஒரு வீரரான எந்த இடத்திலும் களம் இறங்கி பேட்டிங் செய்ய என்னை தயார்படுத்தியுள்ளேன். தற்போது நான் எதைப் பற்றியும் கூற இயலாது. நாம் முன்னதாகவே சொன்னதுபோல், அணி என்னை எந்த இடத்தில் இறங்கி பேட்டிங் செய்ய சொல்கிறதோ, அந்த இடத்தில் களம் இறங்கி பேட்டிங் செய்ய தயாராக இருக்கிறேன்.
சில நேரங்களில் விளையாட இடம் கிடைக்காத நேரத்தில் அணியின் காம்பினேசனை புரிந்து கொள்ள வேண்டும். அதனால் மனதை தளரவிட முடியாது. இந்திய மண்ணில் இந்தியா விளையாடும்போது ஐந்து பந்து வீச்சாளர்களுடன் விளையாடும் என்பதை நான் புரிந்து கொண்டுள்ளேன். அதனால் ஒரு சிறந்த வீரர் வெளியில் இருக்க வேண்டும். நான் யாருக்காகவும் எதையும் நிரூபிக்க வேண்டிய தேவையில்லை. ஆனால், நடைமுறையை பின்பற்ற வேண்டியுள்ளது’’ என்றார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் கவுகாத்தியில் மூன்று போட்டிகளை நடத்த முடிவு செய்யப்பட்டதை எதிர்த்து கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.
ஐபிஎல் டி20 கிரிக்கெட்டில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பங்கேற்று விளையாடி வருகிறது. அந்த அணி ஜெய்ப்பூரில் உள்ள கிரிக்கெட் மைதானத்தை சொந்த மைதானமாக கொண்டுள்ளது. இதனால் அந்த அணி ஏழு போட்டிகளை ஜெய்ப்பூரில் விளையாடும்.
ஆனால் அடுத்த மாதம் தொடங்கும் ஐபிஎல் 2020 சீசனில் மூன்று போட்டிகளை கவுகாத்தியில் நடத்த முடிவு செய்தது. அதற்கு ஐபிஎல் ஆட்சிமன்றக்குழுவும் சம்மதம் தெரிவித்தது.
இந்நிலையில் அனைத்து போட்டிகளையும் ஜெய்ப்பூரில்தான் நடத்த வேண்டும் என கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான வீசாரணை கோர்ட்டில் நேற்று நடைபெற்றது. அப்போது பிசிசிஐ தரப்பில் ‘‘ராஜஸ்தான் ராயல்ஸ் விதிமுறையை மீறி ஏதும் செய்யவில்லை. ஐபிஎல் விதிப்படி சொந்த போட்டிகளில் மூன்றை மற்றொரு சொந்த மைதானமாக கருதுவதில் நடத்தலாம் என உள்ளது’’ என்று தெரிவிக்கப்பட்டது.
அதேவேளையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சார்பில் ‘‘வருவாய்க்காக இந்த முடிவு எடுக்கப்படவில்லை. ராஜஸ்தானை பூர்விகமாக கொண்ட பெரும்பாலான மக்கள் அசாமில் வாழ்கிறார்கள். அவர்கள் போட்டியை நேரில் கண்டு களிக்க இது ஒருவாய்ப்பாகும்’’ என தெரிவிக்கப்பட்டது.
இதனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு ஆதரவாக தீர்ப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் அடுத்த மாதம் தொடங்கும் ஐபிஎல் 2020 சீசனில் மூன்று போட்டிகளை கவுகாத்தியில் நடத்த முடிவு செய்தது. அதற்கு ஐபிஎல் ஆட்சிமன்றக்குழுவும் சம்மதம் தெரிவித்தது.
இந்நிலையில் அனைத்து போட்டிகளையும் ஜெய்ப்பூரில்தான் நடத்த வேண்டும் என கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான வீசாரணை கோர்ட்டில் நேற்று நடைபெற்றது. அப்போது பிசிசிஐ தரப்பில் ‘‘ராஜஸ்தான் ராயல்ஸ் விதிமுறையை மீறி ஏதும் செய்யவில்லை. ஐபிஎல் விதிப்படி சொந்த போட்டிகளில் மூன்றை மற்றொரு சொந்த மைதானமாக கருதுவதில் நடத்தலாம் என உள்ளது’’ என்று தெரிவிக்கப்பட்டது.
அதேவேளையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சார்பில் ‘‘வருவாய்க்காக இந்த முடிவு எடுக்கப்படவில்லை. ராஜஸ்தானை பூர்விகமாக கொண்ட பெரும்பாலான மக்கள் அசாமில் வாழ்கிறார்கள். அவர்கள் போட்டியை நேரில் கண்டு களிக்க இது ஒருவாய்ப்பாகும்’’ என தெரிவிக்கப்பட்டது.
இதனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு ஆதரவாக தீர்ப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.






