search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Saurav Ghosal"

    • 3 சுற்றுகளில் வெற்றி பெற்று சவுரவ் கோசல் வெண்கலம் வென்றார்.
    • இந்தியா இதுவரை 15 பதக்கங்களை வென்றுள்ளது.

    பர்மிங்காம்:

    22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடந்து வருகிறது.

    இந்நிலையில், இன்று நடைபெற்ற ஸ்குவாஷ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவு வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் இந்தியாவின் சவுரவ் கோசல், இங்கிலாந்தின் ஜேம்ஸ் வில்ஸ்ட்ரோவுடன் மோதினார்.

    இதில், சவுரவ் கோசல் 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். அவர் 11-6, 11-1, 11-4 என்ற கணக்கில் மொத்தம் 3 சுற்றுகளில் வெற்றி பெற்று வெண்கலம் வென்றார்.

    இதன்மூலம் இந்தியா 5 தங்கம், 5 வெள்ளி, 5 வெண்கலம் என மொத்தம் 15 பதக்கங்களைப் பெற்றுள்ளது.

    ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற மூன்று பேருக்கு தலா ரூ. 20 லட்சம் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். #AsianGames2018 #EPS
    இந்தோனேசியாவின் ஜகார்த்தா மற்றும் பலெம்பாங்சில் ஆசிய விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பல வீரர்கள் வீராங்கனைகள் இந்தியா சார்பில் கலந்து கொண்டனர்.

    ஸ்குவாஷ் பிரிவில் முன்னணி வீராங்கனைகளான தீபிகா பல்லிகல், ஜோஸ்னா சின்னப்பா ஆகியோர் அரையிறுதிக்கு முன்னேறினார். ஆனால் அரையிறுதியில் தோல்வியடைந்ததால் வெண்கல பதக்கத்தோடு திருப்பியடைந்தார்கள்.



    இந்நிலையில் பதக்கம் வென்ற இருவருக்கும் வாழ்த்துக்கள் தெரிவித்ததோடு, இருவரும் தலா 20 லட்சம் ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.



    ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் காலிறுதியில் தோல்வியடைந்த சவுரவ் கோஷலுக்கு 20 லட்சம் ரூபாய் பரிசுத் தொகையாக அளித்ததுடன் வாழ்த்துக்களும் தெரிவித்துள்ளார்.



    10 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் தமிழக வீரர் லட்சுமணன் வெண்கல பதக்கம் வென்றார். ஆனால், வழித்தடம் மாறி ஓடியதால் பதக்கத்தை இழந்தார்.
    ×