என் மலர்tooltip icon

    விளையாட்டு

    ஜாஃப்ரா ஆர்சர் அதிவேகத்தை எதிர்த்து மீண்டும் ஒரு அசத்தலான ஆட்டத்தை கேஎல் ராகுல் வெளிப்படுத்துவார் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
    13-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாய், அபுதாபி, சார்ஜாவில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறும்.

    9-வது லீக் ஆட்டம் சார்ஜாவில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கிறது. இதில் ஸ்டீவ் சுமித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் - லோகேஷ் ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன.

    இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவரும், பஞ்சாப் அணி கேப்டனுமான லோகேஷ் ராகுல் பெங்களூரு அணிக்கு எதிராக அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

    அவர் 69 பந்தில் 132 ரன் எடுத்தார். இந்த சீசனில் செஞ்சுரி அடித்த ஒரே வீரர் ஆவார். ராகுலின் அதிரடியை ராஜஸ்தான் இன்று சமாளிக்குமா என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    மேலும் மேக்ஸ்வெல், மயங் அகர்வால் நிக்கோலஸ் பூரன் போன்ற சிறந்த பேட்ஸ்மேன்களும் முகமது சமி, காட்ரெல், ரவி பிஷ்னோய், முருகன் அஸ்வின் போன்ற சிறந்த பந்து வீச்சாளர்களும் அந்த அணியில் உள்ளனர்.

    பஞ்சாப் அணி தொடக்க ஆட்டத்தில் சூப்பர் ஓவரில் டெல்லியிடம் தோற்றது. 2-வது போட்டியில் 97 ரன் வித்தியாசத்தில் பெங்களூர் அணியை அபாரமாக வீழ்த்தியது. அந்த அணி இன்று ராஜஸ்தானை வீழ்த்தி 2-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது.

    ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தொடக்க ஆட்டத்தில் 16 ரன் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்சை வீழ்த்தியது. அந்த அணி இன்று 2-வது வெற்றிக்காக காத்திருக்கிறது.

    பஞ்சாப் அணியில் ராகுல் எப்படி அதிரடி வீரராக இருக்கிறாரோ அதேபோல ராஜஸ்தான் அணியில் சஞ்சு சாம்சன் அபாரமாக ஆட கூடியவர். அவர் சென்னை அணிக்கு எதிராக 32 பந்தில் 70 ரன்களுக்கு மேல் விளாசினார்.

    கேப்டன் ஸ்டீவ் சுமித், டேவிட் மில்லர், ஜாஃப்ரா ஆர்ச்சர், ராகுல் திவேதியா போன்ற சிறந்த வீரர்களும் அந்த அணியில் உள்ளனர். இங்கிலாந்தை சேர்ந்த பட்லர் அணிக்கு திரும்பியுள்ளார். அவர் இன்றைய ஆட்டத்தில் தொடக்க வீரராக களம் இறங்கலாம். அவரது வருகை ராஜஸ்தான் அணிக்கு கூடுதல் பலமாகும்.

    இரு அணிகளும் 19 முறை மோதியுள்ளன. இதில் ராஜஸ்தான் 10-ல், பஞ்சாப் 9-ல் வெற்றி பெற்றுள்ளன.
    மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் சஞ்சு சாம்சனை சேர்க்காதது அதிர்ச்சி அளிக்கிறது என வார்னே தெரிவித்துள்ளார்.
    ஆஸ்திரேலியாவை சேர்ந்த முன்னாள் பிரபல சுழற்பந்து வீரர் வார்னே ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஆலோசகராக உள்ளார். சென்னை அணிக்கு எதிராக அபாரமாக ஆடிய ராஜஸ்தான் வீரர் சஞ்சு சாம்சனை அவர் பாராட்டி உள்ளார். இது தொடர்பாக வார்னே கூறியதாவது:-

    சஞ்சு சாம்சன் ஒரு சிறந்த பேட்ஸ்மேன். அவரை இந்திய அணியில் 3 வடிவிலான போட்டிகளிலும் சேர்க்காதது அதிர்ச்சி அளிக்கிறது. அவரது ஆட்ட ஸ்டைல் அபாரமாக இருக்கிறது. அவர் தொடர்ந்து சிறப்பாக விளையாடி ராஜஸ்தான் அணிக்கு ஐ.பி.எல். கோப்பையை பெற்றுக் கொடுப்பார் என்று நம்புகிறேன்.

    இவ்வாறு அவர் கூறி யுள்ளார்.

    அறிமுக ஐ.பி.எல் போட்டியில் (2008) வார்னர் தலைமையில் ராஜஸ்தான் அணி சாம்பியன் பட்டம் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
    முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அமீரகம் புறப்பட்ட போது கிட்டத்தட்ட 9 பேட்டுகளை உடன் எடுத்து வந்ததாக மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறியுள்ளார்.
    துபாய்:

    மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா அளித்த ஒரு பேட்டியில், ‘20 ஓவர் கிரிக்கெட்டில் விளையாடும் போது பேட்டிங்கில் அதிகமான அதிரடி காட்ட வேண்டியது அவசியமாகும். இதே போல் புதுமையான ஷாட்டுகளை அடிப்பதற்கு நிறைய பயிற்சியும் தேவை. இதனால் பேட் சீக்கிரமாகவே உடைந்து விடுவதற்கு வாய்ப்பு உண்டு. ஐ.பி.எல். மற்றும் 20 ஓவர் போட்டிகளின் போது எனது பேட் ஒன்று அல்லது 2 மாதங்கள் தாக்குப்பிடிக்கும். ஆனால் தற்போதைய கடினமான காலக்கட்டத்தில் கொரியர் சேவை எந்த அளவுக்கு இருக்கிறது என்பது தெரியவில்லை. அதனால் முன்னெச்சரிக்கையாக அமீரகம் புறப்பட்ட போது, கிட்டத்தட்ட 9 பேட்டுகளை உடன் எடுத்து வந்தேன்’ என்றார்.

    மேலும் அவர் கூறுகையில், ‘ஆடும் லெவனில் இடம் பெறும் வீரர்கள் மற்றும் வெளியில் இருக்கும் வீரர்கள் அணிக்கு எவ்வளவு முக்கியமானவர்கள் என்பதை அவர்களுக்குள் உணரச் செய்யும் வகையில் கேப்டன் பேச வேண்டும். இது ரிக்கிபாண்டிங்கிடம் (மும்பை அணியின் முன்னாள் பயிற்சியாளர்) இருந்து நான் கற்றுக்கொண்ட பாடம்’ என்றார்.
    பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி இன்று தொடங்குகிறது. இதில் நடப்பு சாம்பியன் ஸ்பெயினின் நடால் 13-வது முறையாக பட்டம் வெல்வாரா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
    பாரீஸ்:

    ‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கி 11-ந்தேதி வரை நடக்கிறது. மே மாதத்தில் நடக்க இருந்த இந்த போட்டி கொரோனா அச்சுறுத்தலால் தள்ளிவைக்கப்பட்டு இப்போது நடக்க உள்ளது. தினமும் குறைந்த எண்ணிக்கையில் ரசிகர்களை ஸ்டேடியத்தில் அனுமதிக்கவும் முடிவு செய்யப்பட்டு இருக்கிறது.

    ‘களிமண்’ தரையில் நடக்கும் பிரெஞ்ச் ஓபனில் 2-ம் நிலை வீரரான ரபெல் நடால் (ஸ்பெயின்) சக்ரவர்த்தியாக திகழ்கிறார். இங்கு 12 முறை பட்டம் வென்று சரித்திரம் படைத்திருக்கும் நடால் மறுபடியும் வெற்றிக்கொடி நாட்டும் முனைப்புடன் உள்ளார். இந்த முறையும் மகுடம் சூடினால் அதிக கிராண்ட்ஸ்லாம் வென்றவரான சுவிட்சர்லாந்து ஜாம்பவான் ரோஜர் பெடரரின் (20 கிராண்ட்ஸ்லாம்) சாதனையை சமன் செய்து விடுவார். ஆனால் வழக்கமாக வெயிலுடன் வறண்ட வேகமான ஆடுகளத்தில் விளையாடி பழக்கப்பட்ட நடால், தற்போதைய குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை, புதிய வகை பந்து பயன்படுத்தப்பட இருப்பது போன்றவை எல்லாம் முன்பு எப்போதும் இல்லாததை விட கடும் சவாலாக இருக்கும் என்று கூறியிருக்கிறார். அவர் தனது முதல் சுற்றில் இகோர் ஜெராசிமோவை (பெலாரஸ்) சந்திக்கிறார். காயம் காரணமாக பெடரர் இந்த போட்டியில் பங்கேற்கவில்லை.

    நடாலுக்கு, ‘நம்பர் ஒன்’ வீரர் நோவக் ஜோகோவிச் (செர்பியா), சமீபத்தில் அமெரிக்க ஓபனை கைப்பற்றிய டொமினிக் திம் (ஆஸ்திரியா), ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ், ரஷியாவின் டேனில் மெட்விடேவ், பாவ்டிஸ்டா அகுட் (ஸ்பெயின்), சிட்சிபாஸ் (கிரீஸ்) ஆகியோர் கடும் குடைச்சல் கொடுப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.

    ஜோகோவிச் முதல் சுற்றில் தரவரிசையில் 80-வது இடம் வகிக்கும் மிகைல் மிர்ரை (சுவீடன்) எதிர்கொள்கிறார். அமெரிக்க ஓபனில் பந்தை நடுவர் மீது அடித்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட ஜோகோவிச், அதற்கு பிரெஞ்ச் ஓபனில் பரிகாரம் தேட முயற்சிப்பார். பிரெஞ்ச் ஓபனுக்கு முன்னோட்டமாக நடந்த இத்தாலி ஓபனில் அவர் கோப்பையை சொந்தமாக்கியதால் மிகுந்த நம்பிக்கையுடன் களம் இறங்குவார்.

    கடந்த ஆண்டு பிரெஞ்ச் ஓபனில் இறுதிப்போட்டிக்கு முன்னேறியவரான டொமினிக் திம்முக்கு முதல் சுற்று கொஞ்சம் கடினமாக அமைந்துள்ளது. அவர் முன்னணி வீரர் குரோஷியாவின் மரின் சிலிச்சுடன் மோதுகிறார்.

    பெண்கள் பிரிவில் காயம் மற்றும் கொரோனா பீதியால் அமெரிக்க ஓபன் சாம்பியனான நவோமி ஒசாகா (ஜப்பான்), நம்பர் ஒன் வீராங்கனையும், நடப்பு பிரெஞ்ச் ஓபன் சாம்பியனுமான ஆஷ்லி பார்ட்டி (ஆஸ்திரேலியா) ஆகியோர் விலகியுள்ளனர். இதனால் 2-ம் நிலை வீராங்கனை சிமோனா ஹாலெப் (ருமேனியா), முன்னாள் சாம்பியன் செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா), பிளிஸ்கோவா, கிவிடோவா (இருவரும் செக்குடியரசு), ஸ்விடோலினா (உக்ரைன்), அஸரென்கா (பெலாரஸ்), முகுருஜா (ஸ்பெயின்), சோபியா கெனின் (அமெரிக்கா) உள்ளிட்ட நட்சத்திரங்கள் இடையே பட்டம் வெல்வதில் பலத்த போட்டி நிலவுகிறது. ஹாலெப் முதல் சுற்றில் 78-ம் நிலை வீராங்கனை சோரிப்ஸ் டோர்மோவுடன் (ஸ்பெனின்) களம் காணுகிறார்.

    இந்த போட்டிக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.325 கோடியாகும். இதில் ஒற்றையரில் சாம்பியன் பட்டம் வெல்வோருக்கு ரூ.14 கோடியும், 2-வது இடத்தை பிடிப்போருக்கு ஏறக்குறைய ரூ.7 கோடியும் வழங்கப்படும். முதல் சுற்றில் வெற்றி பெற்றாலே ரூ.52 லட்சம் கிடைக்கும்.

    இந்திய நேரப்படி பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ்2 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
    ஷுப்மான் கில் அதிரடியில் ஐதராபாத் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி முதல் வெற்றியைப் பதிவு செய்தது கொல்கத்தா அணி.
    அபுதாபி:

    13-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெற்று வருகிறது.

    இந்த போட்டியின் 8-வது லீக் ஆட்டத்தில் தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர்கொண்டது.
     
    டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.

    அந்த அணியின் தொடக்க வீரர் டேவிட் வார்னர் 36 ரன்னிலும், ஜான் பிரிஷ்டோ 5 ரன்னிலும் அவுட் ஆகினர்.

    மனீஷ் பாண்டே பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். அவர் 51 ரன்னிலும், சகா 30 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

    இறுதியாக, சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டு இழப்புக்கு 142 ரன்கள் எடுத்தது.

    கொல்கத்தா அணி தரப்பில் பேட் கம்மின்ஸ், வருண் சக்ரவர்த்தி, ஆண்டே ரசல் தலா 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    இதையடுத்து, 143 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ஷுப்மான் கில் பொறுப்புடனும், அதிரடியாகவும் ஆடினார்.

    அவருக்கு இயான் மார்கன் நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார். இருவரும் கொல்கத்தா அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர்.

    கொல்கத்தா அணி 18 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 145 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஷுப்மான் கில் 70 ரன்னும், மார்கன் 42 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர். இதன்மூலம் கொல்கத்தா அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.
    கொல்கத்தா அணியின் சிறப்பான பந்து வீச்சால் ஐதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 142 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.
    அபுதாபி:

    13-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெற்று வருகிறது.

    இந்த போட்டியின் 8-வது லீக் ஆட்டத்தில் தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர்கொண்டுள்ளது.

    டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.

    இதையடுத்து, தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர் மற்றும் ஜானி பிரிஷ்டோ ஆகியோர் களமிறங்கினர். தொடக்கத்திலேயே ரன் எடுக்க முடியாமல் தடுமாறிய பிரிஷ்டோ 10 பந்துகளில் 5 ரன்கள் எடுத்திருந்த நிலையில் பேட் கம்மின்ஸ் பந்து வீச்சில் அவுட் ஆகி வெளியேறினார்.

    அடுத்து களமிறங்கிய மனீஷ் பாண்டே கேப்டன் வார்னருடன் ஜோடி சேர்ந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். ஆனால், 30 பந்துகளில் 36 ரன்கள் எடுத்திருந்த ஐதராபத் கேப்டன் வார்னர் சக்ரவர்த்தி வீசிய பந்தில் அவரிடமே சுலபமான கேட்ச் கொடுத்து அவுட் ஆகி வெளியேறினார்.

    ஐதராபாத் அணி 10 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 61 ரன்கள் எடுத்து நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. பின்னர் சற்று அதிரடியாக ஆடிய மனீஷ் பாண்டே 38 பந்துகளில் 2 சிக்சர்கள் உள்பட 51 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

    அதன்பின் வந்த முகமது நபியுடன் ஜோடி சேர்ந்த விர்திமன் சஹா ரன் எடுக்க முடியாமல் மிகவும் திணறினார். 31 பந்துகளை சந்தித்த விர்திமன் சஹா 1 பவுண்டரி, 1 சிக்சர் உள்பட 30 ரன்கள் மட்டுமே எடுத்து ரன் அவுட் ஆகி வெளியேறினார்.

    இறுதியாக, கொல்கத்தா அணியின் சிறப்பான பந்து வீச்சால் 20 ஓவர்கள் முடிவில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 142 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. கொல்கத்தா அணி தரப்பில் பேட் கம்மின்ஸ், வருண் சக்ரவர்த்தி, ஆண்டே ரசல் தலா 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    143 ரன்கள் என்ற சற்று எளிய இலக்கை எட்டி ஐபிஎல் 2020 தொடரில் கொல்கத்தா அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்வதில் தீவிரம் காட்டும் என்பதில் சந்தேகம் இல்லை.

    கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் ஐதராபாத் அணி 10 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 61 ரன்கள் எடுத்துள்ளது.
    அபுதாபி:

    13-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெற்று வருகிறது.

    இந்த போட்டியின் 8-வது லீக் ஆட்டத்தில் தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர்கொண்டுள்ளது.

    டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.

    இதையடுத்து, தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர் மற்றும் ஜானி பிரிஷ்டோ ஆகியோர் களமிறங்கினர். தொடக்கத்திலேயே ரன் எடுக்க முடியாமல் தடுமாறிய பிரிஷ்டோ 10 பந்துகளில் 5 ரன்கள் எடுத்திருந்த நிலையில் பேட் கம்மின்ஸ் பந்து வீச்சில் அவுட் ஆகி வெளியேறினார்.

    அடுத்து களமிறங்கிய மனீஷ் பாண்டே கேப்டன் வார்னருடன் ஜோடி சேர்ந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். ஆனால், 30 பந்துகளில் 36 ரன்கள் எடுத்திருந்த ஐதராபத் கேப்டன் வார்னர் சக்ரவர்த்தி வீசிய பந்தில் அவரிடமே சுலபமான கேட்ச் கொடுத்து அவுட் ஆகி வெளியேறினார்.

    தற்போது ஐதராபாத் அணி 10 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 61 ரன்கள் எடுத்து நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. அந்த அணியின் மனீஷ் பாண்டே 19 ரன்களுடனும், விர்திமன் சஹா 1 ரன்னிலும் களத்தில் உள்ளனர்.

    ஐதராபாத் தரப்பில் பேட் கம்மின்ஸ் மற்றும் வருண் சக்ரவர்த்தி தலா 1 விக்கெட்டை வீழ்த்தியுள்ளனர்.

      
    ஐபிஎல் கிரிக்கெட்டில் கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
    அபுதாபி:

    13-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெற்று வருகிறது.

    இந்த போட்டியின் 8-வது லீக் ஆட்டத்தில் தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.

    இந்த போட்டிக்கான டாஸ் தற்போது சுண்டப்பட்டது. டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.

    முன்னதாக ஐதராபாத் அணி தனது தொடக்க ஆட்டத்தில் பெங்களூரிடமும், கொல்கத்தா அணி தனது தொடக்க ஆட்டத்தில் மும்பையிடமும் தோல்வியடைந்துள்ளது.

    இந்த தொடரில் இரு அணிகளும் இதுவரை தங்கள் முதல் வெற்றியை பதிவு செய்யவில்லை.இதனால் இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் தங்கள் முதல் வெற்றியை பதிவு செய்ய இரு அணிகளும் தீவிரமாக முயற்சி மேற்கொள்ளும் என்பதால் இப்போட்டியில் பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது.

    இரு அணி வீரர்கள் விவரம்:-

    கொல்கத்தா:

    சுக்மன் கில், சுனில் நரேன், நிதிஷ் ரானா, தினேஷ் கார்த்திக், இயன் மோர்கன், ஆண்டே ரசல், பேட் கம்மின்ஸ், ஷிவம் மாவி, குல்தீப் யாதவ், நாகர்கோட்டி, வி சக்ரவர்த்தி

    ஐதராபாத்:-

    டேவிட் வார்னர், ஜானி பிரிஷ்டோ, மணீஷ் பாண்டே, பிரியம் ஹர்ஹ், சஹா, முகமது நபி, அபிஷேக் சர்மா, ரஷீத் கான், புவனேஷ்வர் குமார், கலீல் அகமது, டி நடராஜன்.   

    பாடகர் எஸ்பிபி மறைவிற்கு பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கர் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.
    பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மறைவு தமிழகத்தை மட்டுமின்றி இந்தியாவை மட்டுமின்றி உலகம் முழுவதிலும் உள்ள இசை ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது பாடலுக்கு ரசிகராக இல்லாதவர்களே இல்லை என கூறலாம். அந்த வகையில் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கர் அவர்கள் எஸ்பிபி மறைவு குறித்து கூறியதாவது:

    சச்சின் பதிவு

    ’எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்களின் இசையைக் கேட்பது எப்போதும் எனக்கு பிடிக்கும். அவரது மறைவால் ஆழ்ந்த வருத்தம். சாகர் திரைப்படத்தில் இடம்பெற்ற அவருடைய ‘சச் மேரே யார் ஹை’ பாடல் எனது பிளேலிஸ்ட்டில் நான் எப்போதும் வைத்திருக்கும் எனக்கு பிடித்த பாடல்களில் ஒன்று. அவரது ஆத்மா நிம்மதியாக ஓய்வெடுக்கட்டும். அவரது குடும்பம் மற்றும் நண்பர்களுக்காக நான் பிரார்த்தனை செய்கிறேன். இவ்வாறு சச்சின் தெண்டுல்கர் குறிப்பிட்டுள்ளார்.
    தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் இன்று மோதுகின்றன.

    அபுதாபி:

    13-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெற்று வருகிறது.

    இந்த போட்டியின் 8-வது லீக் ஆட்டம் இன்று இரவு 7.30 மணிக்கு அபுதாபில் நடக்கிறது. இதில் தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் -வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.

    இரு அணிகளும் வெற்றி பெறவில்லை. இதனால் எந்த அணி முதல் வெற்றியை பெறப்போகிறது என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    ஐதராபாத் அணி தொடக்க ஆட்டத்தில் பெங்களூரிடமும், கொல்கத்தா அணி மும்பையிடமும் தோற்று இருந்தது.

    இரு அணிகளும் இதுவரை 17 ஆட்டத்தில் மோதி உள்ளன. இதில் கொல்கத்தா 10 போட்டியிலும், ஐதராபாத் 7 ஆட்டத்திலும் வெற்றி பெற்றுள்ளன.

    வெற்றிக்காக இரு அணிகளும் கடுமையாக போராடும் என்பதால் இன்றைய ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


    துபாயில் நேற்று நடந்த டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி தோல்வி குறித்து கேப்டன் டோனி கருத்து தெரிவித்துள்ளார்.

    துபாய்:

    ஐ.பி.எல். போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டெல்லியிடம் வீழ்ந்து மீண்டும் தோல்வியை தழுவியது.

    துபாயில் நடந்த 7வது லீக் ஆட்டத்தில் முதலில் விளையாடிய டெல்லி கேப்பிடல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 175 ரன் எடுத்தது.

    பிரித்வி ஷா 43 பந்தில் 64 ரன்னும் (9 பவுண்டரி, 1 சிக்சர்) ரி‌ஷப்பண்ட் 25 பந்தில் 37 ரன்னும் (5 பவுண்டரி), தவான் 27 பந்தில் 35 ரன்னும் (3 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர். பியூஸ் சாவ்லா 2 விக்கெட்டும், சாம்கரண் 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

    பின்னர் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 131 ரன்னே எடுக்க முடிந்தது. இதனால் சி.எஸ்.கே. அணி 44 ரன் வித்தியாசத்தில் மோசமாக தோற்றது.

    டுபெலிசிஸ் அதிகபட்சமாக 35 பந்தில் 43 ரன் (4 பவுண்டரி) எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டம் இழந்தனர். ரபடா 3 விக்கெட்டும், ஆன்ரிச் நோட்ஜே 2 விக்கெட்டும், அக் ‌ஷர் படேல் 1 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    சென்னை அணி 2-வது தோல்வியை தழுவியது. தொடக்க ஆட்டத்தில் மும்பை இந்தியன்சை வீழ்த்தி இருந்தது. 2-வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்சிடம் 16 ரன்னில் தோற்று இருந்தது.

    டெல்லியிடம் ஏற்பட்ட தோல்வி குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் டோனி கூறியதாவது:-

    இந்த ஆட்டம் எங்களுக்கு நன்றாக அமையவில்லை. பனித்துளி இல்லை. ஆனால் ஆடுகளம் மெதுவாக இருந்தது. எங்களது பேட்டிங்கில் உத்வேகம் இல்லை. தொடக்கம் முதலே நன்றாக அமையவில்லை. இதனால் கூடுதல் நெருக்கடி ஏற்பட்டது.

    பேட்டிங்கில் உத்வேகம் இல்லாதது அணியை மிகவும் காயப்படுத்தியது.

    ஒரு வேகப்பந்து வீச்சாளரையோ, சுழற்பந்து வீரர்ரையோ சேர்த்தால் அது பேட்ஸ்மேனுக்கு அது கூடுதல் நெருக்கடியை ஏற்படுத்தும்.

    அடுத்த போட்டிக்கு அம்பதி ராய்டு வந்து விடுவார். அப்போது எல்லாம் சரியாகி விடும். அணி சமநிலை பெற்று விடும்.

    பந்து வீச்சை பொறுத்த வரை நேர்த்தியாக அமைய வில்லை. பவுலர்களை மாற்றி விட்டால் பிரச்சினை சரியாகி விடாது. அடுத்த 7 நாட்களுக்கு எங்களுக்கு நல்ல இடைவெளி கிடைத்துள்ளது. இதை வீரர்கள் சரியாக பயன்படுத்திக் கொள்வார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    டெல்லி அணி தொடர்ந்து 2-வது வெற்றியை பெற்றது. தொடக்க ஆட்டத்தில் அந்த அணி சூப்பர் ஓவரில் பஞ்சாப்பை வீழ்த்தி இருந்தது.

    டெல்லி அணியின் வெற்றி குறித்து கேப்டன் ஸ்ரேயாஷ் அய்யர் கூறியதாவது:-

    வீரர்களின் ஆட்டத்திறன் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இதனால் அணி பலன் அடைந்துள்ளது என்பதில் எந்த சந்தேகம் இல்லை. ரபடாவும், ஆன்ரிச் நோட்ஜே எங்கள் அணிக்கு கிடைத்த அதிர்ஷ்டமே. இருவரும் எங்கள் அணிக்கு முக்கியமானவர்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சென்னை அணி 4-வது ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்தை வருகிற 2-ந் தேதி துபாயில் சந்திக்கிறது. டெல்லி கேப்பிடல்ஸ் அடுத்த போட்டியில் ஐதராபாத்தை 29-ந் தேதி எதிர்கொள்கிறது.

    விராட் கோலியின் மோசமான ஆட்டத்துக்கு அனுஷ்கா சர்மாவை நான் குறை கூறவில்லை என்று காவஸ்கர் விளக்கம் அளித்துள்ளார்.
    புதுடெல்லி:

    ஐ.பி.எல். போட்டியில் பெங்களூர் அணியின் கேப்டனாக இருக்கும் கோலி இதுவரை நடந்த 2 ஆட்டத்திலும் சிறப்பாக ஆடவில்லை.

    ஐதராபாத் எதிராக 14 ரன்னும், பஞ்சாப் அணிக்கு எதிராக 1 ரன்னும் கோலி எடுத்தார். அதோடு பஞ்சாப்புக்கு எதிராக அவரது பீல்டிங்கு மோசமாக இருந்தது. லோகேஷ் ராகுலின் 2 கேட்ச்களை விராட் கோலி தவற விட்டார்.

    இந்த ஆட்டத்தை வர்ணனை செய்த முன்னாள் கேப்டன் காவஸ்கர், விராட் கோலியின் ஆட்டம் குறித்து விமர்சித்தார். அதோடு அவரது மனைவியான அனுஷ்கா சர்மாவையும் வம்புக்கு இழுந்தார்.

    ஊரடங்கு காலத்தில் விராட் கோலி தனது மனைவி அனுஷ்கா சர்மாவின் பவுலிங்கில் மட்டுமே பயிற்சி எடுத்து இருக்கிறார். அந்த வீடியோ காட்சியை (கோலியும், அனுஷ்காவும் வீட்டில் ஜாலியாக கிரிக்கெட் ஆடிய வீடியோ) நானும் பார்த்தேன்.

    ஆனால் இது அவருக்கு பெரிய அளவில் உதவப் போவதில்லை. சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த கோலி இன்னும் நிறைய பயிற்சி மேற்கொள்ள வேண்டும். இது அவருக்கே தெரியும் என்று காவஸ்கர் சிரித்தபடி தெரிவித்து இருந்தார்.

    இதற்கு அனுஷ்கா சர்மா கண்டனம் தெரிவித்து இருந்தார். கோலியின் ஆட்டத்தை விமர்சிக்க எனது பெயரை இழுப்பதா? என்று அவர் சாடியிருந்தார்.

    இந்த நிலையில் அனுஷ்கா சர்மாவை நான் குறை கூறவில்லை என்று காவஸ்கர் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    நான் மீண்டும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். நான் எங்கே அனுஷ்கா குறை கூறுகிறேன். நான் அவரை குற்றம் சாட்டவில்லை. அவர் விராட் கோலிக்கு பந்து வீசிய வீடியோவை பார்த்து மட்டும்தான் பேசினேன்.

    ஊரடங்கு காலத்தில் டென்னிஸ் பந்தில் விளையாடியதை வேடிக்கையான விளையாட்டு என்றுதான் கூறினேன். விராட் கோலியின் தோல்விக்கு நான் அவரை எந்த இடத்திலும் குற்றம் சாட்டவில்லை.

    எனது கருத்து என்ன வென்றால் ஊரடங்கு காலத்தில் விராட் கோலி உள்பட எந்தவித ஒரு வீரருமே பயிற்சியை மேற்கொள்ளவில்லை. நான் பாலியல் ரீதியாக எதுவும் தெரிவிக்கவில்லை. எந்த உள்நோக்கத்துடனும் பேசவில்லை. யாராவது அதை விளக்கி இருந்தால் அதற்கு நான் என்ன செய்ய முடியும்.

    இவ்வாறு காவஸ்கர் கூறியுள்ளார்.
    ×