search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்"

    காலநிலை மாற்றத்தால் ஏற்படும் ஆபத்து குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவேதான் மைதானத்திற்குள் வந்ததாக தெரிவித்தார்.
    பாரிஸ்:

    பாரிஸ் நகரில் நடைபெற்று வரும் பிரெஞ்ச் ஓபன் போட்டியின் நேற்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதி போட்டியில் நார்வே வீரர் காஸ்பர் ரூட், குரோஷிய வீரர் மரின் சிலிச் மோதினர்.

    இந்த போட்டி நடைபெற்றுக்கொண்டிருந்தபோது பெண் ஒருவர் மைதானத்திற்குள் நுழைந்து தனது கழுத்தை, டென்னிஸ் வலையில் கட்டிக்கொண்டார். அவரது ஆடையில் ‘இன்னும் 1028 நாட்கள் மட்டுமே இருக்கிறது’ என ஐநா குறிப்பிட்ட காலநிலை குறித்த எச்சரிக்கை வாசகம் அதில் எழுதியிருந்தது.

    இதையடுத்து அவரை பாதுகாப்பு அதிகாரிகள் அழைத்து சென்றனர். இதுகுறித்து அவரிடம் விசாரித்தபோது காலநிலை மாற்றத்தால் ஏற்படும் ஆபத்து குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவேதான் மைதானத்திற்குள் வந்ததாக தெரிவித்தார். 
    ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரை இறுதி ஆட்டத்தில் ரபேல் நடாலும் அர்ஜென்டினாவின் மார்ட்டின் டெல்போட்ரோவும் பலப்பரீட்சை நடத்துகின்றனர். #FrenchOpen2018 #RafaelNadal #MartindelPotro
    பாரீஸ்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டியான பிரெஞ்ச ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவு கால் இறுதியில் ‘நம்பர் ஒன்’ வீரர் ரபேல் நடால் (ஸ்பெயின்) அர்ஜென்டினாவின் ஸ்வார்ஸ்யினை வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறினார்.

    இன்று ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரை இறுதி ஆட்டங்கள் நடக்கின்றன. இதில் ரபேல் நடால் அர்ஜென்டினாவின் மார்ட்டின் டெல்போட்ரோவும் பலப்பரீட்சை நடத்துகின்றனர்.

    16 கிராண்ட்சிலாம் பட்டம் வென்றவரான நடால் பிரெஞ்ச் ஓபனை 10 முறை கைப்பற்றி உள்ளார். நடப்பு சாம்பியனாக அவர் 11-வது முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவாரா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    களிமண் தரையில் ஆதிக்கம் செலுத்தும் ரபேல் நடாலுக்கு டெல்போட்ரோ கடுமையாக போராட வேண்டியது இருக்கும்.

    மற்றொரு அரை இறுதியில் டொமினிக் திம் (ஆஸ்திரியா)- மார்கோ செச்சினட்டோ (இத்தாலி) மோதுகிறார்கள்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டி நாளை நடக்கிறது. இதில் நம்பர் ஒன் வீராங்கனை ஹால்ப் (ருமேனியா)- ஸ்டீபன்ஸ் (அமெரிக்கா) பலப்பரீட்சை நடத்துகின்றனர். #FrenchOpen2018 #RafaelNadal #MartindelPotr
    ×