search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரபெல் நடால்"

    • பார்சிலோனா ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடந்து வருகிறது.
    • இதில் முன்னணி வீரரான ஸ்பெயினின் நடால் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

    மேட்ரிட்:

    பார்சிலோனா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது.

    இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்று ஆட்டத்தில் தரவரிசையில் 11-வது இடத்தில் இருக்கும் ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினார், ஸ்பெயினின் ரபெல் நடாலுடன் மோதினார்.

    இதில் டி மினார் 7-5, 6-1 என்ற செட் கணக்கில் வென்றார். இதன்மூலம் அதிர்ச்சி தோல்வி அடைந்த நடால் தொடரில் இருந்து வெளியேறினார்.

    • காயத்தால் ஏறக்குறைய ஓராண்டு நடால் சர்வதேச டென்னிஸ் போட்டியில் விளையாடவில்லை.
    • மெல்போர்ன் ரசிகர்கள் முன் விளையாட இயலாமல் போவது வருத்தம் அளிக்கிறது என நடால் தெரிவித்தார்.

    மெல்போர்ன்:

    முன்னாள் 'நம்பர் ஒன்' டென்னிஸ் வீரர் ரபெல் நடால் (ஸ்பெயின்) இடுப்பு பகுதியில் ஏற்பட்ட காயத்துக்கு ஆபரேஷன் செய்ததால் ஏறக்குறைய ஓராண்டு சர்வதேச டென்னிஸ் விளையாடவில்லை. பிரிஸ்பேன் டென்னிஸ் மூலம் மறுபிரவேசம் செய்த அவர் கால்இறுதியில் ஆஸ்திரேலிய வீரர் ஜோர்டான் தாம்சனிடம் தோற்று வெளியேறினார்.

    இந்த ஆட்டத்தின் போது 37 வயதான நடால் மீண்டும் காயத்தில் சிக்கினார். பரிசோதனையில் தசைநாரில் மிக நுண்ணிய கிழிவு இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் வருகிற 14-ந்தேதி மெல்போர்னில் தொடங்கும் ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபனில் இருந்து விலகுவதாக அவர் அறிவித்துள்ளார்.

    இது குறித்து நடால் கூறுகையில் 'நல்லவேளையாக ஏற்கனவே காயம் ஏற்பட்ட இடத்தில் பிரச்சினை இல்லை. ஆனாலும் தற்போது 5 செட் வரை தாக்குப்பிடித்து விளையாடும் அளவுக்கு தயாராக முடியாது. அதனால் தாயகம் திரும்பி, எனது டாக்டரை கலந்தாலோசித்து சிகிச்சை மற்றும் ஓய்வு எடுக்க உள்ளேன். உற்சாகமான ஆதரவு அளிக்கும் மெல்போர்ன் ரசிகர்கள் முன் விளையாட இயலாமல் போவது வருத்தம் அளிக்கிறது' என்றார். 22 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவரான நடால், 2009, 2022-ம் ஆண்டுகளில் ஆஸ்திரேலிய ஓபனை வசப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

    • ஜோகோவிச் 7 விம்பிள்டன் பட்டத்தை வென்றுள்ளார்.
    • நடால் காயம் காரணமாக இந்தப் போட்டியிலும் ஆடவில்லை.

    லண்டன்:

    டென்னிஸ் போட்டிகளில் மிகவும் பிரசித்தி பெற்றது கிராண்ட் சிலாமாகும். ஆண்டுதோறும் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் ஆகிய 4 கிராண்ட் சிலாம் போட்டிகள் நடைபெறும்.

    இந்த ஆண்டுக்கான ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன் போட்டிகள் நடந்து முடிந்துவிட்டன. உலகின் 2-ம் நிலை வீரரான ஜோகோவிச் (செர்பியா) இந்த இரண்டு போட்டியிலும் பட்டம் பெற்றார். பிரெஞ்சு ஓபனில் வெற்றி பெற்றபோது அவர் புதிய வரலாறு படைத்தார். ரபெல் நடாலை (ஸ்பெயின்) பின்னுக்கு தள்ளி 23-வது கிராண்ட் சிலாமை கைப்பற்றி முதல் இடத்தை பிடித்தார்.

    பெண்கள் பிரிவில் ஷபலென்கா (பெலாரஸ்) ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தையும், இகா ஸ்வியா டெக் (போலந்து), பிரெஞ்சு ஓபன் பட்டத்தையும் பெற்றனர்.

    3-வது கிராண்ட்சிலாமான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நாளை (திங்கட்கிழமை) தொடங்குகிறது. 16-ந்தேதி வரை இந்தப் போட்டி நடைபெறுகிறது.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் வரிசையில் உள்ள அல்காரஸ் (ஸ்பெயின்), ஜோகோவிச், மெட்வ தேவ் (ரஷியா), கேஸ்பர் ரூட் (நார்வே), ஸ்டெபானோஸ் (கிரீஸ்) போன்ற முன்னணி வீரர்கள் பங்கேற்கிறார்கள்.

    புல் தரை ஆடுகளத்தில் நடைபெறும் போட்டியான விம்பிள்டனில் ரோஜர் பெடரர் அதிகபட்சமாக 8 பட்டத்தை கைப்பற்றியுள்ளார். அவரது சாதனையை ஜோகோவிச் சமன் செய்வாரா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. ஜோகோவிச் 7 விம்பிள்டன் பட்டத்தை வென்றுள்ளார்.

    நடப்பு சாம்பியனான அவர் 2018-ம் ஆண்டில் இருந்து தொடர்ச்சியாக 4 தடவை விம்பிள்டனில் வெற்றி பெற்றார். கொரோனா காரணமாக 2020-ல் போட்டி நடைபெறவில்லை. ஜோகோவிச் 24-வது கிராண்ட் சிலாம் பட்டத்தை வெல்லும் ஆர்வத்தில் இருக்கிறார்.

    அல்காரஸ் மெட்வதேவ் அவருக்கு சவால் கொடுக்கும் வகையில் விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நடால் காயம் காரணமாக இந்தப் போட்டியிலும் ஆடவில்லை.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் நிலையில் உள்ள இகா ஸ்வியாடெக், ஷபலென்கா, எலினாரைபகினா (கஜகஸ்தான்), ஜெசிகா பெகுலா (அமெ ரிக்கா), கரோலின் கார்சியா (பிரான்ஸ்) போன்ற முன்னணி வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள்.

    • ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டி இன்று மாலை 6.30 மணிக்கு நடக்கிறது.
    • நார்வே வீரர் கேஸ்பர் ரூட் முதல் தடவையாக கிராண்ட்சிலாம் பட்டம் வெல்லும் ஆர்வத்தில் உள்ளார்.

    பாரீஸ்:

    கிராண்ட் சிலாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டி இன்று மாலை 6.30 மணிக்கு நடக்கிறது. இதில் 22 கிராண்ட் சிலாம் பட்டம் பெற்றவரும், 3-வது வரிசையில் இருப்பவருமான ஜோகோவிச் (செர்பியா) நான்காம் நிலை வீரரான கேஸ்பர் ரூட் (நார்வே) மோதுகிறார்கள்.

    ஆஸ்திரேலியா ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் ஆகிய 4 டென்னிஸ் போட்டிகள் கிராண்ட் சிலாம் அந்தஸ்து பெற்றவையாகும்.

    ரபேல் நடாலும் (ஸ்பெயின்) ஜோகோவிச்சும் இணைந்து அதிக கிராண்ட் சிலாம் பட்டம் வென்ற வீரர்களாக இருக்கிறார்கள். இருவரும் தலா 22 பட்டத்தை பெற்று உள்ளனர்.

    இன்றைய பிரெஞ்சு ஓபன் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று 23-வது கிராண்ட் சிலாம் பட்டத்தை கைப்பற்றி ஜோகோவிச் புதிய வரலாறு படைப்பாரா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    சாம்ராசின் 14 கிராண்ட்சிலாம் சாதனைனையை பெடரர் முறியடித்தார். பெடரரின் 20 கிராண்ட்சிலாம் சாதனையை ரபெல் நடால் முறியடித்தார். நடாலின் 22 கிராண்ட்சிலாம் சாதனையை ஜோகோவிச்இன்று முறியடிப்பாரா? என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.

    அவர் ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை 10 தடவையும், பிரெஞ்சு ஓபன் பட்டத்தை 2 முறையும், விம்பிள்டன் பட்டத்தை 7 முறையும், அமெரிக்க ஓபனை 3 தடவையும் வென்றார். காயம் காரணமாக நடால் இந்த போட்டியில் ஆடவில்லை.

    நார்வே வீரர் கேஸ்பர் ரூட் முதல் தடவையாக கிராண்ட்சிலாம் பட்டம் வெல்லும் ஆர்வத்தில் உள்ளார்.

    நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவில் இகா ஸ்வியாடெக் (போலந்து) சாம்பியன் பட்டம் பெற்றார். அவர் பிரெஞ்ச் ஓபன் பட்டத்தை 3-வது முறையாக வென்றார். ஒட்டுமொத்தமாக 4-வது கிராண்ட்சிலாம் பட்டம் பெற்றார்.

    • பாதத்தில் ஏற்பட்ட காயத்துடன் தான் பிரெஞ்சு ஒபன் போட்டியில் நடால் ஆடினார். இந்த காயத்துக்கு அவர் அறுவை சிகிச்சை செய்ய திட்டமிட்டுள்ளார்.
    • ஊசி போட்டுக் கொண்டு தன்னால் விம்பிள்டனில் விளையாட இயலாது என்று நடால் தெரிவித்து இருக்கிறார்.

    லண்டன்:

    ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஒபன், விம்பிள்டன், அமெரிக்க ஒபன் ஆகிய 4 கிராண்ட் சிலாம் போட்டிகள் நடைபெறும்.

    டென்னிஸ் போட்டிகளில் இதுதான் மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.

    இந்த ஆண்டு நடந்த ஆஸ்திரேலிய ஒபனிலும், சமீபத்தில் நடந்த பிரெஞ்சு ஒபனிலும் ரபெல் நடால் (ஸ்பெயின்) சாம்பியன் பட்டம் பெற்றார். இதன் மூலம் அவர் 22 கிராண்ட் சிலாம் பட்டம் பெற்று சாதனை படைத்துள்ளார்.

    அடுத்து நடைபெற இருக்கும் விம்பிள்டன் போட்டியிலும் நடால் வெற்றி பெறுவார் என்ற எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

    இந்த நிலையில் காயம் காரணமாக விம்பிள்டன் டென்னிசில் நடால் விளையாட மாட்டார் என்று கூறப்படுகிறது.

    பாதத்தில் ஏற்பட்ட காயத்துடன் தான் பிரெஞ்சு ஒபன் போட்டியில் நடால் ஆடினார். இந்த காயத்துக்கு அவர் அறுவை சிகிச்சை செய்ய திட்டமிட்டுள்ளார்.

    ஊசி போட்டுக் கொண்டு தன்னால் விம்பிள்டனில் விளையாட இயலாது என்று நடால் தெரிவித்து இருக்கிறார். அறுவை சிகிச்சை செய்ய இருப்பதால் விம்பிள்டனில் அவர் பங்கேற்க மாட்டார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

    விம்பிள்டன் போட்டி வருகிற 27-ந்தேதி முதல் ஜூலை 1-ந்தேதி வரை லண்டனில் நடக்கிறது.

    பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் இறுதிப்போட்டியில் இன்று மாலை டொமினிக் தீம்-ஐ எதிர்கொள்ளும் நடப்பு சாம்பியன் ரபெல் நடால், 11-வது முறையாக பட்டம் வெல்வாரா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. #FrenchOpen #RafaelNadal
    பாரீஸ்:

    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் இறுதிப்போட்டி இன்று மாலை நடக்கிறது. இதில் உலகின் முதல் நிலை வீரரும், நடப்பு சாம்பியனுமான ரபெல் நடால் (ஸ்பெயின்)- ஏழாம் நிலை வீரரான டொமினிக் தீம் (ஆஸ்திரியா) மோதுகிறார்கள்.

    இதில் நடால் வென்று பிரெஞ்சு ஓபன் பட்டத்தை 11-வது முறையாக கைப்பற்றுவாரா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. அவர் ஏற்கனவே இந்தப் போட்டியில் 10 முறை பட்டம் வென்று (2005, 2006, 2007, 2008, 2010, 2011, 2012, 2013, 2014, 2017) சாதனை படைத்து இருந்தார்.

    இதில் பட்டம் வென்றால் 2-வது நபர் என்ற பெருமையை நடால் பெறுவார். ஆஸ்திரேலிய வீராங்கனை மார்க்கரெட் கோர்ட் ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை 11 முறை வென்று இருக்கிறார்.


    ஒட்டு மொத்தத்தில் 17-வது கிராண்ட்சிலாம் பட்டம் வெல்லும் ஆர்வத்திலும் நடால் உள்ளார். அவர் அமெரிக்கா ஓபன் பட்டத்தை 3 முறையும் (2010, 2013, 2017), விம்பிள்டனை 2 தடவையும் (2008, 2010), ஆஸ்திரேலிய ஒபனை ஒரு முறையும் (2009) வென்று இருந்தார்.

    ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து) 20 கிராண்ட்சிலாம் பட்டம் வென்று (விம்பிள்டன் 8, ஆஸ்திரேலிய ஓபன் 6, அமெரிக்க ஓபன் 5, பிரெஞ்சு ஓபன் 1) முதலில் உள்ளார். அவருக்கு அடுத்தப்படியாக நடால் 2-வது இடத்தில் உள்ளார்.

    நடாலின் 17-வது பட்டம் மற்றும் 14-வது பிரெஞ்சு ஓபன் பட்டத்தை தடுத்து நிறுத்தும் வேட்கையில் டோமினிக் தீம் உள்ளார். இருவரும் நேருக்கு நேர் மோதிய ஆட்டத்தில் நடால் 6 முறையும், தீம் 3 தடவையும் வெற்றி பெற்றனர்.

    டொமினிக் தீம் இதுவரை கிராண்ட்சிலாம் பட்டம் வென்றது இல்லை. பிரெஞ்சு ஓபனில் இறுதிப் போட்டிக்கு நுழைந்ததே அவரது சிறப்பான நிலையாகும். அவர் நடாலை வீழ்த்தி முதல் கிராண்ட்சிலாம் பட்டம் வெல்லும் ஆர்வத்தில் உள்ளார்.

    இறுதிப் போட்டி இந்திய நேரப்படி 6.30 மணிக்கு தொடங்குகிறது. #FrenchOpen #FrenchOpen2018 #RafaelNadal #DominicThiem
    ×