என் மலர்
விளையாட்டு

பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மற்றும் ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் டீன் ஜோன்ஸ் ஆகியோரின் மறைவையொட்டி அனுதாபம் தெரிவிக்கும் வகையில் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் கையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடினர். டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வீரர்களும் கருப்பு பட்டை அணிந்து துக்கத்தில் பங்கெடுத்தனர்.
எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மறைவுக்கு கிரிக்கெட் வீரர்கள் அஸ்வின், தினேஷ் கார்த்திக், ஷிகர் தவான் முன்னாள் வீரர்கள் ஸ்ரீகாந்த், அனில் கும்பிளே, வி.வி.எஸ்.லட்சுமண், கவுதம் கம்பீர் மற்றும் செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்த் உள்ளிட்ட விளையாட்டு பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
‘எனக்கு மிகவும் பிடித்தமான கலைஞர் எஸ்.பி.பி. மறைந்து விட்டார். ஒரு முறை அவரது வீட்டுக்கு சென்றபோது எனக்கு விருப்பமான பாடலின் சில வரிகளை தனியாக பாடி காட்டினார். அந்த நாளை எப்போதும் மறக்க மாட்டேன். அதே போல் இன்னொரு முறை அவரிடம் இருந்து பாடல் கேட்க ஆசை. ஆனால் அந்த ஆசை மட்டும் வாழ்நாள் முழுவதும் நிறைவேறாத கனவாக இருக்கப்போகிறது’ என்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
மும்பை:
கிரிக்கெட் சகாப்தமான சச்சின் தெண்டுல்கரின் மகள் சாரா. இவரும் இந்திய கிரிக்கெட்டின் இளம் வீரர் ஒருவரும் காதலிப்பதாக தகவல்கள் சில நாட்களுக்கு முன்பு வெளியானது.
இந்தநிலையில் சாரா தனது இன்ஸ்டா ஸ்டோரியில் ஒரு புகைப்படத்தை பகிர்ந்திருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
ஐ.பி.எல். போட்டியில் மும்பை-கொல்கத்தா அணிகள் மோதிய ஆட்டத்தில் கொல்கத்தா அணி வீரர் சுப்மான்கில் பீல்டிங்கின் போது டைவ் அடித்து பந்தை பிடித்தார். இந்த புகைப்படத்தை தான் சாரா சமூக வலைதளத்தில் வெளியிட்டார்.
மேலும் அதில் ஹார்ட்டுகளை (இதயம்) பதிவிட்டுள்ளார். இதனால் சாராவும், சுப்மான்கில்லும் காதலித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்கு முன்பும் 2 முறை சாராவும், சுப்மான்கில்லும் கருத்துக்களை பரிமாறிக் கொண்டிருந்தனர்.
இந்தநிலையில் தான் தற்போது மீண்டும் புகைப்படத்தை சாரா வெளியிட்டிருப்பது அவர்கள் இருவரும் காதலில் உள்ளனர் என்பதை உறுதிபடுத்துவதாக உள்ளது என்ற கருத்து நிலவி வருகிறது.
புதுடெல்லி:
அனைவரும் உடற்பயிற்சி பெற ஊக்குவிக்கும் ‘பிட் இந்தியா’ திட்டம் தொடங்கி நேற்றுடன் ஓராண்டு நிறைவு பெற்றது.
இதையொட்டி, காணொலி காட்சி மூலம் நடந்த நிகழ்ச்சியில் நாடு முழுவதும் உள்ள விளையாட்டு வீரர்கள், உடற்பயிற்சியில் சிறந்து விளங்குபவர்கள் பங்கேற்றனர். பிரதமர் மோடி பங்கேற்று வீரர்களுடன் பேசினார்.
அப்போது கிரிக்கெட் வீரர்களுக்கு ‘யோ-யோ’ பயிற்சி அளிக்கப்படுவதாக அறிந்தேன். கேப்டனும் இந்த பயிற்சியில் தேர்ச்சி பெற வேண்டுமா? எப்படி பயிற்சி அளிக்கப்படுகிறது? என்று கேட்டார்.
இதற்கு பதில் அளித்த கோலி, “வீரர்களுக்கான உடல் தகுதிக்கு இந்த தேர்வு மிகவும் முக்கியமானது. உலக தரத்திலான பயிற்சியை ஒப்பிடும் போது நமது அணியின் உடற்பயிற்சி குறைவாகவே இருக்கும். இதை ‘யோ-யோ’ பயிற்சி மூலம் அதிகரிக்கிறோம்” என்று கூறினார்.
இது தவிர, ஓட்டப் பந்தய பயிற்சி குறித்தும் பிரதமரிடம் கோலி விரிவாக எடுத்து கூறினார். அப்போது இது போன்ற பயிற்சிகளில் தோல்வி அடைந்தால் என்னால் கூட இந்திய அணியில் இடம் பெற முடியாது. இதுதான் அனைவரையும், அனைத்து வகையிலும் உடலை வலுவாக வைத்துக்கொள்ள ஊக்குவிக்கிறது.
உடல் வலிமையுடன் இருந்தால்தான் கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெற முடியும் என்று தெரிவித்தார்.
நிகழ்ச்சியில், பாரா ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற தேவேந்திர ஜாஜாரியா, ஜம்மு காஷ்மீரை சேர்ந்த கால்பந்தாட்ட வீராங்கனை அப்ரான் ஆஷிக், மாரத்தான் வீரர் மலிந்த் சோமன் ஆகியோர் பங்கேற்றனர்.
துபாய்:
13-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் நடந்து வருகிறது. நேற்று துபாயில் நடந்த 6-வது லீக் ஆட்டத்தில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியை பஞ்சாப் 97 ரன்னில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
முதலில் விளையாடிய பஞ்சாப் அணி 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 206 ரன் குவித்தது. கேப்டன் லோகேஷ் ராகுல் (132 ரன், 69 பந்து 14 பவுண்டரி 7 சிக்சர்) சதம் அடித்தார்.
பின்னர் விளையாடிய பெங்களூர் அணி 17 ஓவரில் 109 ரன்னில் சுருண்டு படுதோல்வி அடைந்தது. கேப்டன் வீராட்கோலி 1 ரன்னில் ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தார்.
பஞ்சாப் தரப்பில் ரவி பிஷ்னொய், முருகன் அஸ்வின் தலா 3 விக்கெட்டுகள் பெற்றனர். நேற்றைய ஆட்டத்தில் லோகேஷ் ராகுல் கொடுத்த 2 கேட்ச்களை வீராட்கோலி தவறவிட்டது திருப்புமுனையாக அமைந்தன.
தோல்வி குறித்து வீராட் கோலி கூறியதாவது:-
பந்து வீச்சின்போது நடுப் பகுதியில் நாங்கள் நன்றாக இருந்தோம் என்று நினைக்கிறேன். ஆனால் இறுதியில் கூடுதலாக 30 முதல் 40 ரன்னை விட்டுக்கொடுத்து விட்டோம். அவர்களை (பஞ்சாப்) 180 ரன்னுக்குள் கட்டுப் படுத்தியிருந்தால் நாங்கள் முதல் பந்தில் இருந்தே நெருக்கடியுடன் விளையாடி இருக்க மாட்டோம்.
விளையாட்டில் இது போன்று நடக்கும். அதை நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். நமக்கு நல்ல ஆட்டமும் கிடைக்கும், மோசமான ஆட்டமும் கிடைக்கும். தவறுகளில் இருந்து நாம் பாடங்களை கற்றுக்கொள்வதுதான் முக்கியம். நான் 2 கேட்ச்களை தவற விட்டேன். இது எனது நாளாக அமைய வில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
லோகேஷ் ராகுல் கூறும்போது, ‘இந்த வெற்றி முழுமையான அணி செயல் பாட்டால் கிடைத்தது. இதனால் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். உண்மையில் எனது பேட்டிங்கில் முழுமையான கட்டுப்பாடி இருக்கும் என்று நான் நம்பவில்லை.
இதனால் சிறிது பதட்டம் ஏற்பட்டாலும் சில பந்துகளை நான் எதிர்கொண்டு விட்டால் பின்னர் ஆட்டத்தில் நிலைநிறுத்திக் கொள்வேன் என்பதை அறிந்து இருந்தேன். இதனால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினேன்’ என்றார்.






