search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிறிஸ் கெய்ல்"

    • இன்று முதல் 20-ந்தேதி வரை நான்கு நகரங்களில் எடுத்துச் செல்லப்படுகிறது.
    • மே 16-ந்தேதி முதல் மே 24-ந்தேதி வரை 2-வது கட்டமாக கயானா, டிரினிடாட் அண்டு டொபாகோ எடுத்துச் செல்லப்படுகிறது.

    ஐசிசி டி20 உலகக் கோப்பை வருகிற ஜூன் மாதம் 1-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடக்கிறது.

    இந்த நிலையில் உலகக் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு வழங்கப்படும் கோப்பையின் (டிராபி) சுற்றுப் பயணம் தொடங்கியுள்ளது. இன்று அமெரிக்க வீரர் அலி கான் மற்றும் இரண்டு முறை டி20 உலகக் கோப்பையை வென்றவரும், யுனிவர்ஸ் பாஸ் என அழைக்கப்படுபவருமான கிறிஸ் கெய்ல் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    இந்த உலகக் கோப்பை வெஸ்ட் இண்டீஸ் போட்டிகளை நடத்தும் ஆறு நகரங்களில் உலா வர இருக்கிறது. அப்போது கிரிக்கெட் பிரபலங்கள் இந்த கோப்பையை ஏந்தி செல்வார்கள். போட்டியின் இறுதிப் போட்டி நடைபெறும் பார்படோஸ் நகரில் முதன்முதலில் வலம் வர இருக்கிறது.

    உலகக் கோப்பை தொடர் தொடங்குவதற்கு முன்னதாக இதுபோன்று கோப்பைகள் எடுத்துச் செல்வது வழக்கம். உலகம் முழுவதும் போட்டிகளில் பங்கேற்கும் நாடுகளில் அல்லது போட்டியை நடத்தும் நாட்டில் இதுபோன்று கோப்பை எடுத்துச் செல்லப்படும். ரசிகர்கள், ஸ்பான்சர்கள் மற்றும் மீடியாக்கள் ஆகியவற்றை ஈர்ப்பதற்கான ஒரு வழி இதுவாகும். போட்டியின் மீது ரசிகர்களுக்கு ஆர்வத்தை தூண்டுவதற்காகவும் இவ்வாறு நடத்தப்படும்.

    ஏப்ரல் 12-ந்தேதி (இன்று) முதல் ஏப்ரல் 20-ந்தேதி வரை பார்படோஸ், ஆன்டிகுவா, பார்புடா, செயின்ட் லூசியா ஆகிய நகரங்களில் உலகக் கோப்பை எடுத்துச் செல்லப்படும். பின்னர் மே 16-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை செயின்ட் வின்செட், கிரேனடைன்ஸ், டிரினிடாட் அண்டு டொபாகோ மற்றும் கயனா ஆகிய இடங்களில் எடுத்துச் செல்லப்படும்.

    • முதலில் பேட்டிங் செய்த பெஷாவர் சல்மி அணி 19.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 154 ரன்கள் எடுத்தது.
    • அதிகபட்சமாக பாபர் அசாம் 72 ரன்கள் குவித்தார்.

    பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் 9-வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற ஆட்டத்தில் கராச்சி கிங்ஸ் - பெஷாவர் சல்மி அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற கராச்சி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய பெஷாவர் சல்மி அணி 19.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 154 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக பாபர் அசாம் 72 ரன்கள் குவித்தார்.

    இதனையடுத்து களமிறங்கிய கராச்சி கிங்ஸ் 16.5 ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்கள் எடுத்தது. இதனால் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த போட்டியில் பாபர் அசாம் அரை சதம் அடித்ததன் மூலம் டி20 அதிவேகமாக 10 ஆயிரம் ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். விராட் கோலி மற்றும் கிறிஸ் கெயிலை பின்னுக்குத் தள்ளி டி20-யில் 10,000 ரன்களைக் கடந்த வீரர் என்ற சாதனையை படைத்தார்.

    பாபர் 271 இன்னிங்ஸ்களில் இந்த சாதனையை நிகழ்த்தினார். இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கோலி 299 இன்னிங்ஸ்களில் 10 ஆயிரம் ரன்களை கடந்தார். கெய்ல் 285 இன்னிங்ஸ்களிலும் டேவிட் வார்னர் 303 இன்னிங்ஸ்களிலும் 10,000 டி20 ரன்களை கடந்தனர்.

    • சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் ஒரு வீரரின் 2-வது அதிவேக சதம் இதுவாகும்.
    • இந்த ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 258 ரன்கள் குவித்தது.

    செஞ்சூரியன்:

    தென்ஆப்பிரிக்கா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி செஞ்சூரியனில் நேற்று நடந்தது. இதில் முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி அதிரடி காட்டியது. பேட்டிங்குக்கு உகந்த இந்த ஆடுகளத்தில் பந்து வீச்சு துளி கூட எடுபடவில்லை.

    மைதானத்தின் நாலாபுறமும் பந்துகளை சிதறடித்த வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஜான்சன் சார்லஸ் 39 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார். சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் ஒரு வீரரின் 2-வது அதிவேக சதம் இதுவாகும். இந்தியாவின் ரோகித் சர்மா, தென்ஆப்பிரிக்காவின் டேவிட் மில்லர், செக்குடியரசின் விக்ரமசேகரா ஆகியோர் தலா 35 பந்துகளில் மூன்று இலக்கத்தை தொட்டதே மின்னல்வேக சதமாக உள்ளது. அதற்கு அடுத்த இடத்தை சார்லஸ் மேலும் இரு வீரர்களுடன் பகிர்ந்துள்ளார்.

    அதே சமயம் வெஸ்ட் இண்டீஸ் வீரர்களில் அதிவேக சதம் கண்டவரான கிறிஸ் கெய்லின் (47 பந்தில் சதம், இங்கிலாந்துக்கு எதிராக) சாதனையையும் அவர் தகர்த்தார். இந்த ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 258 ரன்கள் குவித்தது.

    இருப்பினும் அடுத்து வந்த தென்ஆப்பிரிக்க அணி 18.5 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 259 ரன்கள் என்ற இமாலய இலக்கை எட்டிப் பிடித்து, 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று வரலாறு படைத்தது குறிப்பிடத்தக்கது.

    • விராட் கோலி 2023 புத்தாண்டை தனது மனைவியும், பாலிவுட் முன்னணி நடிகையுமான அனுஷ்கா சர்மாவுடன் கொண்டாடினார்.
    • கிறிஸ் கெயில் தனது ஸ்டைலில் புத்தாண்டை கொண்டாடிய புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    கிரிக்கெட் வீரர் விராட் கோலி 2023 புத்தாண்டை தனது மனைவியும், பாலிவுட் முன்னணி நடிகையுமான அனுஷ்கா சர்மாவுடன் கொண்டாடினார். இருவரும் இடம்பெறும் ஃபோட்டோவை விராட்கோலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதற்கு 6 மில்லியன் அதாவது 60 லட்சத்திற்கும் அதிகமான லைக்ஸ்கள் கிடைத்துள்ளன. விராட் கோலியை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 229 மில்லியன் பேர் பின் தொடர்கின்றனர்.

    முன்னதாக தோனி தனது மகள் ஜிவாவுடன் புத்தாண்டை கொண்டாடினார். இதுதொடர்பான வீடியோவை தோனியின் மனைவி சாக்ஷி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த பதிவும் வைரலாகி வருகிறது.

    தனது மகளை மகிழ்ச்சிப்படுத்தி தந்தையாகவும் தோனி முன் மாதிரியாக இருக்கிறார் என்று ரசிகர்கள் கமென்ட்டில் கூறியுள்ளனர்.

    சமீபத்தில் ஜிவா தோனிக்கு லியோனல் மெஸ்ஸி ஆட்டோகிராஃப் அளித்த டி ஷர்ட் படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின.

    மேலும் தனது நீண்ட நாள் காதலியும், பாலிவுட் நடிகையுமான அதியா ஷெட்டியுடன் இந்திய கிரிக்கெட் வீரர் கே எல் ராகுல் புத்தாண்டு கொண்டாடிய புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    இருவருக்கும் இந்த மாதமோ அல்லது மார்ச் மாதமோ திருமணம் நடக்க இருப்பதாக கூறப்படுகிறது. பாலிவுட் நடிகையுமான அதியா ஷெட்டியும், இந்திய கிரிக்கெட் வீரருமான கே எல் ராகுல் இருவரும் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக காதலித்து வருகின்றனர்.

    தற்போது ஓய்வில் இருக்கும் ரோகித் சர்மா, மனைவி மற்றும் மகளுடன் ஓய்வு நேரத்தை நன்றாக செலவிட்டு வருகிறார். தற்போது மாலத்தீவு சென்றுள்ள ரோகித் சர்மா அங்கு நன்றாகவே என்ஜாய் பண்ணுகிறார்.

    இதேபோன்று சச்சின் டெண்டுல்கரும் வித்திசாயசமான முறையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வாழ்த்து கூறியுள்ளார். இந்த பதிவும் கவனம் ஈர்த்து வருகிறது.

    இந்த நிலையில், யுனிவர்ஸ் பாஸ் என்று அழைக்கப்படும் கிறிஸ் கெயில் தனது ஸ்டைலில் புத்தாண்டை கொண்டாடிய புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


    • 'சூப்பர் 10’ கிரிக்கெட் லீக் டிசம்பர் மாதம் பெங்களூரில் தொடங்கவுள்ளது.
    • இதில் திரை நட்சத்திரங்கள் மற்றும் ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.

    இந்திய முன்னணி நடிகர் கிச்சா சுதீப் மற்றும் வெஸ்ட் இந்தியன் கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெய்ல் இணைந்து, 'சூப்பர் 10' என்ற தனித்துவமான கிரிக்கெட் போட்டியின் முதல் பதிப்பை அறிவித்தனர். இந்த போட்டியில் இந்திய திரை நட்சத்திரங்கள், ஓய்வு பெற்ற சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் மற்றும் கார்ப்பரேட் பணியாளர்கள் இணைந்து 10 ஓவர் கொண்ட போட்டிகளில் பங்கேற்பார்கள். இப்போட்டிகள் இந்த வருடம் டிசம்பர் மாதம் பெங்களூருவில் 2 நாட்களுக்கு நடைபெறும்.


    கிறிஸ் கெய்ல்

    இந்த லீக் போட்டிகளில் தமிழ், பாலிவுட், கன்னடம் மற்றும் தெலுங்கு துறையைச் சேர்ந்த நடிகர்கள் மற்றும் உலகெங்கிலும் உள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் இணைந்து விளையாடவுள்ளனர். இப்போட்டி குறித்து மேற்கிந்திய கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெய்ல் கூறுகையில், "உலகம் முழுவதும் உள்ள எனக்கு பிடித்த கிரிக்கெட் பிரபலங்கள் மற்றும் இந்திய திரைத்துறை பிரபலங்களுடன் இணைந்து கிரிக்கெட் விளையாடுவது மிகப்பெரும் மகிழ்ச்சி. இந்த போட்டி 'டி10' வடிவில் அமைக்கப்பட்டிருப்பதால் மிகப்பெரிய பொழுதுபோக்கை அளிக்குமென்பது உறுதி, டிசம்பர் எப்போது வருமென ஆவலாக உள்ளேன்.


    கிச்சா சுதீப்

    மேலும் இந்த போட்டிகள் குறித்து கிச்சா சுதீப் கூறுகையில்,  "சூப்பர் டி10 லீக் கிரிக்கெட் என்பது திரைத்துறை மற்றும் கார்ப்பரேட் துறையில் உள்ள நண்பர்களுடனும் கிரிக்கெட் வீரர்களுடனும் இணைந்து விளையாடுவதற்கு ஒரு சிறந்த வாய்ப்பாகும். இந்த விளையாட்டுகள் எங்களுள் உள்ள மற்றுமொரு பக்கத்தை எங்கள் ரசிகர்களுக்கும் வெளிப்படுத்தும். இது மிகப்பெரிய பொழுதுபோக்கை ரசிகர்களுக்கு வழங்கும்" என்று கூறியுள்ளார்.

    கிறிஸ் கெய்ல், இம்ரான் தாஹிரைத் தொடர்ந்து டுமினியும் உலகக்கோப்பை தொடருடன் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். #JPDumini #2019WorldCup
    வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் கிறிஸ் கெய்ல். இவர் உலகக்கோப்பை தொடருக்குப்பின் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக தெரிவித்துள்ளார்.

    அதேபோல் தென்ஆப்பிரிக்கா அணியின் சுழற்பந்து வீச்சாளரான இம்ரான் தாஹிரும் உலகக்கோப்பையோடு ஓய்வு பெறுவதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் தென்ஆப்பிரிக்கா அணியின் சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான ஜேபி டுமினியும் உலகக்கோப்பையுடன் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக தெரிவித்துள்ளார்.

    கடந்த 2017-ம் ஆண்டு டெஸ்ட் மற்றும் முதல்தர போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார்.
    கிறிஸ் கெய்ல் போன்று எளிதாக சிக்ஸர் விளாசும் ஒரு வீரரை நான் பார்த்ததே இல்லை என்று பட்லர் புகழாரம் சூட்டியுள்ளார். #WIvENG
    வெஸ்ட் இண்டீஸ் - இங்கிலாந்து இடையிலான 4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேற்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 6 விக்கெட் இழப்பிற்கு 418 ரன்கள் குவித்தது. விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆன ஜோஸ் பட்லர் 77 பந்தில் 13 பவுண்டரி, 12 சிக்சருடன் 150 ரன்கள் குவித்தார்.

    பின்னர் 419 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் களம் இறங்கியது. கிறிஸ் கெய்லின் ருத்ரதாண்டவத்தால் வெஸ்ட் இண்டீஸ் 389 ரன்கள் குவித்து வெற்றியை பறிகொடுத்தது.

    கெய்ல் 97 பந்தில் 11 பவுண்டரி, 14 சிக்சருடன் 162 ரன்கள் குவித்தார். இருவரும் சேர்ந்து 26 சிக்சருடன் தூக்கினர். கிரிக்கெட்டில் சிக்ஸர் மன்னன் என்று அழைக்கப்படும் கிறிஸ் கெய்ல் யுனிவர்ஸ் பாஸ் என்று அழைக்கப்படுகிறது.

    நேற்றைய போட்டியை பார்த்தபின் யார் சிறந்த ஹிட்டர் என்ற விவாதம் கிளம்பியது. இந்நிலையில் ஜோஸ் பட்லர் ‘‘கிறிஸ் கெய்ல் போன்று எளிதாக சிக்ஸர் விளாசும் ஒரு வீரரை நான் பார்த்ததே இல்லை. கிரிக்கெட்டின் லெஜெண்ட் கெய்ல்’’ என்றார்.

    கிறிஸ் கெய்ல் கூறுகையில் ‘‘தற்போதைய நிலையில் உலகின் தலைசிறந்த ஹிட்டர் பேட்ஸ்மேன்களில் ஒருவர் ஜோ பட்லர். ஆனால், அவர் யுனிவர்ஸ் பாஸ் என்ற நிலையை நெருங்கவில்லை’’ என்றார்.
    வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் கிறிஸ் கெய்ல், உலகக்கோப்பைக்குப் பிறகு ஓய்வு பெறுவதாக தெரிவித்துள்ளார். #ChrisGayle
    வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னணி அதிரடி பேட்ஸ்மேன் கிறிஸ் கெய்ல். டி20 கிரிக்கெட்டில் ‘யுனிவர்செல் பாஸ்’ என்று அழைக்கப்படும் இவர், இங்கிலாந்தில் நடைபெற இருக்கும் உலகக்கோப்பைக்குப் பிறகு ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக தெரிவித்துள்ளார்.

    39 வயதாகும் கிறிஸ் கெய்ல் இதுவரை 284 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 23 சதம், 49 அரைசதங்களுடன் 9727 ரன்கள் குவித்துள்ளார். அதிகபட்சமாக ஒரு போட்டியில் 215 ரன்கள் அடித்துள்ளார். நீண்ட நாட்களாக ஒருநாள் போட்டியில் விளையாடாமல் இருந்த கெய்ல், தற்போது இங்கிலாந்து தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியில் இடம்பிடித்துள்ளார்.
    ×