search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சச்சின் தெண்டுல்கர்
    X
    சச்சின் தெண்டுல்கர்

    என்னை தொடக்க வீரராக களம் இறக்க அசாருதீனிடம் கூறிய ஒரே வார்த்தை இதுதான்: சச்சின்

    நியூசிலாந்து தொடரின்போது சித்து விளையாட முடியாத நிலை ஏற்பட்டதால், சச்சின் தொடக்க வீரராக களம் இறங்கினார். இது அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது.
    இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவன் சச்சின் தெண்டுல்கர். தொடக்க காலத்தில் சச்சின் தொடக்க வீரராக களம் இறங்கவில்லை. இளம் வீரராக இருந்ததனாலும் அவரை யாரும் தொடக்க வீரர்களாகவும் பார்க்கவில்லை.

    1990-ம் ஆண்டு இந்தியா நியூசிலாந்து சென்றது. அப்போது சச்சினுக்கு தொடக்க வீரராக களம் இறங்க ஆசை இருந்தது. தன் மீது நம்பிக்கை வைத்து கேப்டன் அசாருதீனிடம் தைரியமாக சென்று தொடக்க வீரராக களம் இறங்க ஆசை என்று கேட்டு வாங்கியது குறித்து சச்சின் தெண்டுல்கர் நினைவு கூர்ந்துள்ளார்.

    அந்த சம்பவம் குறித்து சச்சின் தெண்டுல்கர் கூறுகையில் ‘‘அசாருதீன் கேப்டன், அஜித் வடேகர் பயிற்சியாளர். நவ்ஜோத் சிங் எங்களிடம், கழுத்து பகுதியில் வலி இருப்பதால் விளையாட முடியாது என்று கூறினார். நான் அஜித் வடேகரிடம், என்னை தொடக்க வீரராக களம் இறக்க ஆலோசனை செய்யலாம், ஏனென்றால் என்னுடைய ஷாட் மீது அதிக நம்பிக்கை வைத்துள்ளேன் என்று கூறினேன். அசாருதீனிடம் நான் ஏமாற்றம் அடைந்தால், அதன்பின் ஒருபோதும் உங்களிடம் வந்து நிற்கமாட்டுன் என்றேன்.

    நான் அவரிடம், ஒரு வாய்ப்பு போதும் என்றேன். ஏனென்றால், மைதானம் சென்று தொடக்கத்தில் என்னால் அதிரடியாக விளையாட முடியும் என்று நினைத்தேன். அதைவிட, பார்ட்னர்ஷிப் அமைத்து தொடக்கத்தில் விக்கெட் இழக்கவில்லை என்றால், என்னால் அதிரடியாக விளையாடி நியூசிலாந்துக்கு நெருக்கடி கொடுக்க முடியும் என்று நினைத்தேன். இருவரும் ஒத்துக் கொண்டனர். நீங்கள் நம்பிக்கை வைத்தால், என்னை மீண்டும் அழைக்கலாம் என்றேன்’’ என்றார்.

    இந்த ஆட்டத்தில் சச்சின் தெண்டுல்கர் 49 பந்தில் 82 ரன்கள் விளாசினார்.
    Next Story
    ×