search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அனுஷ்கா சர்மா - கவாஸ்கர்
    X
    அனுஷ்கா சர்மா - கவாஸ்கர்

    கோலியின் மோசமான ஆட்டத்துக்கு அனுஷ்காவை ஒருபோதும் நான் குறை கூறவில்லை - கவாஸ்கர் விளக்கம்

    விராட் கோலியின் மோசமான ஆட்டத்துக்கு அனுஷ்கா சர்மாவை நான் குறை கூறவில்லை என்று காவஸ்கர் விளக்கம் அளித்துள்ளார்.
    புதுடெல்லி:

    ஐ.பி.எல். போட்டியில் பெங்களூர் அணியின் கேப்டனாக இருக்கும் கோலி இதுவரை நடந்த 2 ஆட்டத்திலும் சிறப்பாக ஆடவில்லை.

    ஐதராபாத் எதிராக 14 ரன்னும், பஞ்சாப் அணிக்கு எதிராக 1 ரன்னும் கோலி எடுத்தார். அதோடு பஞ்சாப்புக்கு எதிராக அவரது பீல்டிங்கு மோசமாக இருந்தது. லோகேஷ் ராகுலின் 2 கேட்ச்களை விராட் கோலி தவற விட்டார்.

    இந்த ஆட்டத்தை வர்ணனை செய்த முன்னாள் கேப்டன் காவஸ்கர், விராட் கோலியின் ஆட்டம் குறித்து விமர்சித்தார். அதோடு அவரது மனைவியான அனுஷ்கா சர்மாவையும் வம்புக்கு இழுந்தார்.

    ஊரடங்கு காலத்தில் விராட் கோலி தனது மனைவி அனுஷ்கா சர்மாவின் பவுலிங்கில் மட்டுமே பயிற்சி எடுத்து இருக்கிறார். அந்த வீடியோ காட்சியை (கோலியும், அனுஷ்காவும் வீட்டில் ஜாலியாக கிரிக்கெட் ஆடிய வீடியோ) நானும் பார்த்தேன்.

    ஆனால் இது அவருக்கு பெரிய அளவில் உதவப் போவதில்லை. சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த கோலி இன்னும் நிறைய பயிற்சி மேற்கொள்ள வேண்டும். இது அவருக்கே தெரியும் என்று காவஸ்கர் சிரித்தபடி தெரிவித்து இருந்தார்.

    இதற்கு அனுஷ்கா சர்மா கண்டனம் தெரிவித்து இருந்தார். கோலியின் ஆட்டத்தை விமர்சிக்க எனது பெயரை இழுப்பதா? என்று அவர் சாடியிருந்தார்.

    இந்த நிலையில் அனுஷ்கா சர்மாவை நான் குறை கூறவில்லை என்று காவஸ்கர் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    நான் மீண்டும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். நான் எங்கே அனுஷ்கா குறை கூறுகிறேன். நான் அவரை குற்றம் சாட்டவில்லை. அவர் விராட் கோலிக்கு பந்து வீசிய வீடியோவை பார்த்து மட்டும்தான் பேசினேன்.

    ஊரடங்கு காலத்தில் டென்னிஸ் பந்தில் விளையாடியதை வேடிக்கையான விளையாட்டு என்றுதான் கூறினேன். விராட் கோலியின் தோல்விக்கு நான் அவரை எந்த இடத்திலும் குற்றம் சாட்டவில்லை.

    எனது கருத்து என்ன வென்றால் ஊரடங்கு காலத்தில் விராட் கோலி உள்பட எந்தவித ஒரு வீரருமே பயிற்சியை மேற்கொள்ளவில்லை. நான் பாலியல் ரீதியாக எதுவும் தெரிவிக்கவில்லை. எந்த உள்நோக்கத்துடனும் பேசவில்லை. யாராவது அதை விளக்கி இருந்தால் அதற்கு நான் என்ன செய்ய முடியும்.

    இவ்வாறு காவஸ்கர் கூறியுள்ளார்.
    Next Story
    ×