என் மலர்tooltip icon

    விளையாட்டு

    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம் பிடித்திருந்த ரிங்கி சிங், காயம் காரணமாக இந்த சீசன் முழுவதிலும் இருந்து விலகியுள்ளார்.
    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம் பிடித்திருந்தவர் ரிங்கு சிங். கடந்த 2017-ம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட்டில் அறிமுகமானார். இதுவரை 11 போட்டிகளில் விளையாடியுள்ளார். வருகிற 9-ந்தேதி தொடங்கும் 2021 சீசனில் விளையாட ஆர்வமாக இருந்தார்.

    ரிங்கு சிங்

    ஆனால் கால்மூட்டில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்த சீசனில் இருந்து விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக 30 வயதான குர்கீரத் சிங் மான்-ஐ கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஒப்பந்தம் செய்துள்ளது. இவர் கடந்த சீசனில் ஆர்சிபி அணிக்காக விளையாடினார். அவரை ஆர்சிபி விடுவித்தது. மற்ற அணிகள் ஏலத்தில் எடுக்கவில்லை.
    டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க இருந்த 5 இந்திய வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க இருந்த தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் உள்பட இந்திய வீரர்கள் 5 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

    பாட்டியாலாவில் கடந்த மாதம் நடந்த 24 வது தேசிய கூட்டமைப்பு கோப்பை தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்ற 313 பேருக்கு கொரோனா தொற்றுக்கான பரிசோதனை நடத்தப்பட்டதாகவும், அவர்களில் 26 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதாகவும் இந்திய விளையாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.

    இவர்களில் 5 பேர் ஜப்பானில் நடக்க உள்ள ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க இருந்ததாகவும், இதில் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவரும், கேரளாவைச் சேர்ந்த ஒருவரும் அடங்குவர் என்றும் கூறப்பட்டுள்ளது. அவர்களைப் பற்றிய விபரங்கள் வெளியிடப்படாத நிலையில் தொற்று ஏற்பட்ட அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
    ஐபிஎல் 2021 சீசன் வருகிற 9-ந்தேதி தொடங்குகிறது. 10-ந்தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
    ஐபிஎல் 2021 சீசன் வருகிற 9-ந்தேதி தொடங்குகிறது. 10-ந்தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

    சென்னை அணி வீரர்கள் மும்பையில் தங்கியுள்ளனர். சில வீரர்கள் அணியுடன் இணைந்து வருகிறார்கள். சிலர் தங்களை பயணம் தொடர்பாக தனிமைப்படுத்தியுள்ளனர். அதன்பின் பயோ-செக்யூர் வளையத்திற்குள் செல்வார்கள்.

    இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஸ்டாப் (content team) ஒருவருக்கு இன்று கொரோனா பரிசோதனையில் பாசிட்டிவ் என வந்துள்ளது. இதனால் மற்றவர்களிடம் இருந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். வீரர்கள் மற்றும் சப்போர்ட் ஸ்டாப்கள் அவர் அருகில் செல்லவில்லை என்பதால், சென்ன சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் தொடர்ந்து பயிற்சியை மேற்கொள்வார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

    சென்னை  அணி வீரர்கள்

    டெல்லி அணியைச் சேர்ந்த அக்சார் பட்டேலுக்கும், வான்கடே மைதான ஸ்டாப்கள் 8 பேருக்கும் கொரோனா பரிசோதனையில் பாசிட்டிவ் முடிவு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் நிதிஷ் ராணா கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, அதில் இருந்து குணமடைந்துள்ளார்.
    ரிஷப் பண்ட் முழுமையான மேட்ச் வின்னர். அவரது ஆட்டத்தை வெறித்தனமாக ரசிப்பேன் என பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார்.
    இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக சவுரவ் கங்குலி உள்ளார். அவரிடம் உங்களுக்கு பிடித்தமான வீரர் யார்? என கேள்வி எழுப்பப்பட்டது.

    அதற்கு சவுரவ் கங்குலி பதில் அளிக்கையில் ‘‘இந்திய அணியில் சிறந்த வீரர்கள் சிலர் உள்ளனர். பிசிசிஐ தலைவராக இருந்து கொண்டு சிறந்த வீரர் யார் என்பதை நான் கூறக்கூடாது என்று நினைக்கிறேன். எனக்கு எல்லா வீரர்களும் பிடித்தமானவர்கள்தான். ஆனால், விராட் கோலி, ரோகித் சர்மா ஆட்டத்தை ரசிப்பேன்.

    நான் ரிஷப் பண்ட் ஆட்டத்தை வெறித்தனமாக பார்ப்பேன். ஏனென்றால், அவர் முழுமையான மேட்ச்-வின்னர் என நினைக்கிறேன். பும்ரா சிறந்த வீரர், முகமது ஷமி சிறந்த வீரர். ஷர்துல் தாகூரை மிகப்பெரிய அளவில் பிடிக்கும். ஏனென்றால், அவர் தைரியமானவர்.

    ரோகித் சர்மா,விராட் கோலி

    இந்தியாவில் மகத்தான கிரிக்கெட் திறமை உள்ளவர்கள் இருக்கின்றனர். சுனில் கவாஸ்கருக்குப்பின் யார் அவர் போன்று வரப்போகிறார்கள் என்று ரசிகர்கள் நினைத்தார்கள். அப்போது சச்சின் தெண்டுல்கர், ராகுல் டிராவிட், அனில் கும்ப்ளே வந்தார்கள். தெண்டுல்கர், டிராவிட் சென்ற பின் விராட் கோலி, ரோகித் சர்மா, ரிஷப் பண்ட் வந்துள்ளனர். ஒவ்வொரு தலைமுறையிலும் உலகத்தை வெல்லக்கூடிய அளவிற்கு சிறந்த வீரர்கள் இந்தியா உருவாக்கும்’ என்றார்.
    ஆறு மைதாங்களில் ஏதாவது இரண்டிற்கு பிரச்சினை வந்தால் மாற்று மைதானம் தேவைப்படுவதால் ஐதாராபாத்தை தேர்வு செய்துள்ளது ஐபிஎல் நிர்வாகம்.
    ஐபிஎல் 2020 சீசன் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. ஆனால் 2021 சீசன் இந்தியாவில்தான் நடைபெறும். கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சென்னை, மும்பை, டெல்லி, பெங்களூரு, கொல்கத்தா, அகமதாபாத் ஆகிய நகரங்களில் போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

    கடந்த இரண்டு மாதங்களாக கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் தினந்தோறும் எண்ணிக்கை வெகுவாக குறைந்ததால் போட்டி சிரமமின்றி நடைபெறும் என ஐபிஎல் நிர்வாகம் உற்சாகத்தில் இருந்தது.

    ஆனால் கடந்த இரண்டு வாரங்களாக இந்தியாவில் மின்னல் வேகத்தில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரிக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக மகாராஷ்டிரா மாநிலத்தில் அதிகமாக உள்ளது. 

    இந்தியாவில் இன்று காலை நிலவரப்படி கொரோனா தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 81 ஆயிரத்தை தாண்டியுள்ளது. மகாராஷ்டிராவில் 30 ஆயிரத்தை நெருங்கிய வண்ணமும், அதைவிட கூடிய வண்ணமும் உள்ளது.

    கோப்புப்படம்

    மகாராஷ்டிரா மாநிலத்தில் எப்போது வேண்டுமென்றாலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படலாம் என்ற செய்தி வந்த வண்ணம் உள்ளது. மகாராஷ்டிரா மாநிலதத்தில் முதலில் மும்பை நகரம்தான் அதற்கு உள்ளே வரும். ஊரடங்கு அமல்படுத்தப்பட்டால் வான்கடே மைதானத்தில் போட்டியை நடத்த முடியாத நிலை ஏற்படும்.

    மேலும், மும்பையை போன்று ஆறு நகரங்களில் வேறு ஏதாவது ஒன்றிற்கும் ஏற்பட்டால் மிகப்பெரிய சிக்கலை சந்திக்க வேண்டியிருக்கும். இதனால் ஐதராபாத் கிரிக்கெட் மைதானத்தை மாற்று மைதானமாக வைத்துக்கொள்ள ஐபிஎல் நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
    டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளர் அக்சார் பட்டேலுக்கு எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில் பாசிட்டிவ் முடிவு வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
    ஐபிஎல் 2021 சீசன் வருகிற 9-ந்தேதி மும்பை, பெங்களூரு, சென்னை உள்ளிட்ட முக்கியமான ஆறு இடங்களில் நடக்கிறது. இந்தியாவில் போட்டி நடைபெறும் என அறிவிக்கப்படும்போது கொரோனா தொற்று குறைவாக இருந்தது.

    தற்போது கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் நிதிஷ் ராணாவுக்கு கடந்த மாதம் 22-ந்தேதி கொரோனா தொற்று உறுதியானது. இருந்தாலும் நேற்று முன்தினம் வியாழக்கிழமை எடுக்கப்பட்ட முடிவில் நெகட்டிவ் வந்துள்ளது.

    இந்த நிலையில் இன்று டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளர் அக்சார் பட்டேலுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அவருக்கு எடுக்கப்பட்ட பரிசோதனையில் பாசிட்டிவ் என வந்துள்ளதால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

    ‘‘துரதிருஷ்டவசமாக அக்சார் பட்டேலுக்கு பாசிட்டிவ் முடிவு வந்துள்ளது. அவர் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். அனைத்து நடைமுறைகளும் பின்பற்றப்படுகின்றன’’ என டெல்லி அணி தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    அக்சார்  பட்டேல்

    பிசிசிஐ வழிகாட்டுதல் நெறிமுறைப்படி பாசிட்டிவ் முடிவு வந்த வீரர் பயோ-செக்யூருக்கு வெளியே 10 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். 10 நாட்களில் அந்த வீரர் நன்றாக ஓய்வு எடுக்க வேண்டும். எந்த உடற்பயிற்சியும் மேற்கொள்ளக்கூடாது, அணி மருத்துவர் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். அறிகுறி மோசமாக சென்றால், உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்படவேண்டும்.

    மும்பை வான்கடே மைதான ஸ்டாப்கள் 8 பேருக்கு ஏற்கனவே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
    ஐ.பி.எல். நடைபெறும் போது சர்வதேச போட்டிகள் நடத்த வேண்டாம் என்று இங்கிலாந்து முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    லண்டன்:

    14-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 9-ந் தேதி சென்னையில் தொடங்குகிறது. மே 30-ந் தேதி வரை இந்த போட்டி மும்பை, பெங்களூர், கொல்கத்தா, அகமதாபாத், டெல்லி ஆகிய நகரங்களில் நடக்கிறது.

    ஐ.பி.எல். போட்டிக்காக அனைத்து வீரர்களும் தயாராகி வருகின்றனர். ஐ.பி.எல். தொடர் நடைபெறும் அதே நேரத்தில் சில அணிகள் சர்வதேச போட்டிகளில் விளையாடுகின்றன. இதனால் முன்ணனி வீரர்களில் சிலர் ஐ.பி.எல். போட்டியில் பாதியிலேயே விலக நேரிடும்.

    இந்த நிலையில் ஐ.பி.எல். நடைபெறும் போது சர்வதேச போட்டிகள் நடத்த வேண்டாம் என்று இங்கிலாந்து முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

    இருநாடுகள் இடையேயான தொடர் நடைபெறுகிறபோது ஐ.பி.எல். போட்டியில் பங்கேற்கும் வீரர்களால் ஒன்று இறுதிப்போட்டியில் விளையாட முடியாமல் போகும். அல்லது தாய் நாட்டிற்காக விளையாடுவதை தவிர்க்க வேண்டிய நிலை ஏற்படும்.

    ஐ.பி.எல். கிரிக்கெட் மிகப்பெரிய திருவிழா போன்று நடத்தப்படுகிறது. எனவே ஐ.பி.எல். நடைபெறுகிற காலக்கட்டத்தில் சர்வதேச தொடர்கள் எதையும் நடத்தக்கூடாது என்பதை கிரிக்கெட் வாரியங்கள் உணர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஐ.பி.எல். போட்டியில் 14 இங்கிலாந்து வீரர்கள் விளையாடுகிறார்கள். ஐ.பி.எல். போட்டி முடிந்த பிறகு இங்கிலாந்து அணி நியூசிலாந்துடன் டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதனால் சில வீரர்கள் ஐ.பி.எல்.லில் விளையாடலாமா? வேண்டாமா? என்று தவித்து வருகிறார்கள்.

    ஐ.பி.எல்.லில் விளையாடும் வீரர்களை இங்கிலாந்து அணிக்காக கட்டாயம் ஆட வேண்டும் என்பதை நிர்பந்திக்க மாட்டோம் என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. 

    பேட்ஸ்மேன்களின் நிதான ஆட்டத்தினால் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டை டிரா செய்தது இலங்கை அணி.
    ஆன்டிகுவா:

    வெஸ்ட் இண்டீஸ் இலங்கை அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஆன்டிகுவாவில் உள்ள விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றறது.
     
    முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 354 ரன் குவித்து ஆல்அவுட் ஆனது. கேப்டன் பிராத்வெயிட் 126 ரன்னும், ரகீம் கார்ன்வால் 73 ரன்னும் எடுத்தனர்.

    இலங்கை சார்பில் லக்மல் 4 விக்கெட்டும் , சமீரா 3 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

    அடுத்து ஆடிய இலங்கை அணி முதல் இன்னிங்சில் 258 ரன்னில் ஆட்டமிழந்தது. திரிமானே 55 ரன் எடுத்தார். நிசாங்கா அரை சதமடித்து 51 ரன்னில் அவுட்டானார். சண்டிமால் 44 ரன்னும், தனஞ்செய டி சில்வா 39 ரன்னும் எடுத்தனர்.

    வெஸ்ட் இண்டீஸ் சார்பில் கேமர் ரோச் 3 விக்கெட்டும், அல் ஜாரி ஜோசப் , ஜேசன் ஹோல்டர் தலா 2 விக்கெட்டும், கேப்ரியல், கெய்ல் மேயர்ஸ், பிளாக்வுட் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

    96 ரன்கள் முன்னிலை பெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டாவது இன்னிங்சை ஆடியது. கேம்ப்பெல் 10 ரன்னிலும், பிளாக்வுட்18 ரன்னிலும் அவுட்டாகினர்.

    கேப்டன் பிராத்வெயிட் அரை சதம் கடந்தார். அவர் 85 ரன்னில் ஆட்டமிழந்தார். கைல் மேயர்ஸ் அரை சதமடித்து 55 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய ஜேசன் ஹோல்டர் அரை சதம் அடித்தார். வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டாவது இன்னிங்சில் 4 விக்கெட்டுக்கு 280 ரன்கள் எடுத்தபோது டிக்ளேர் செய்வதாக அறிவித்தது. ஹோல்டர் 71 ரன்னும், ஜோஷ்வா டி சில்வா20 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    இதையடுத்து, 377 ரன்களை இலக்காக கொண்டு இலங்கை அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் நிதானமான தொடக்கத்தைத் தந்தனர்.

    திரிமன்னே 39 ரன்னில் அவுட்டானார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் கருணரத்னே 75 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து இறங்கிய ஒஷாடோ பெர்னாண்டோ அரை சதம் கடந்தார். 

    இறுதியில், ஐந்தாம் நாள் இறுதியில் இலங்கை அணி 2 விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் எடுத்திருந்த போது ஆட்டம் முடித்துக் கொள்வதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் 0-0 என சமனில் முடிந்தது.

    ஆட்ட நாயகன் விருது கிரெய்க் பிராத்வெயிட்டுக்கும், தொடர் நாயகன் விருது சுரங்கா லக்மலுக்கும் வழங்கப்பட்டது.  
    பாகிஸ்தான் அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 4 டி 20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
    சென்சூரியன்:

    பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி செஞ்சூரியனில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி தென்ஆப்பிரிக்கா அணி முதலில் களமிறங்கியது. அந்த அணி 55 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.

    வான் டர் டுசன் பொறுப்புடன் ஆடி சதமடித்தார். அவருக்கு மில்லர் ஒத்துழைப்பு கொடுத்தார். மில்லர் 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    இறுதியில், தென்ஆப்பிரிக்கா அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 273 ரன்கள் எடுத்தது. டுசன் 123 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இதையடுத்து, 274 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் பகர் சமான் 8 ரன்னில் அவுட்டானார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் இமாம் உல் ஹக் அரை சதமடித்து 70 ரன்னில் அவுட்டானார்.
     
    அடுத்து இறங்கிய பாபர் அசாம் சிறப்பாக ஆடி சதமடித்தார். அவர் 103 ரன்னில் வெளியேறினார். விக்கெட் கீப்பர் மொகமது ரிஸ்வான் 40 ரன்னில் அவுட்டானார்.

    கடைசி கட்டத்தில் சிறப்பாக ஆடிய ஷதாப் கான் 50வது ஓவரின் முதல் பந்தில் 29 ரன்னில் ஆட்டமிழந்தார். இதனால் பாகிஸ்தான் வெற்றி பெற கடைசி 5 பந்தில் 3 ரன்கள் தேவைப்பட்டது.

    விக்கெட் வீழ்த்திய நூர்ஜேவை பாராட்டும் சக வீரர்கள்

    அடுத்த 3 பந்துகளில் தென்ஆப்பிரிக்கா ரன் எதுவும் கொடுக்கவில்லை. இதனால் கடைசி 2 பந்தில் 3 ரன்கள் தேவைப்பட்டது. பஹீம் அஷ்ரப் வெற்றிக்கு தேவையான 3 ரன்களை எடுக்க பாகிஸ்தான் அணி த்ரில் வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் பாகிஸ்தான் அணி 1-0 என தொடரில் முன்னிலை பெற்றுள்ளது.

    தென் ஆப்பிரிக்கா சார்பில் ஆன்ரிச் நூர்ஜே 4 விக்கெட்டும், பெலுகுவாயோ 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    சிறப்பாக ஆடி சதமடித்த பாகிஸ்தானின் பாபர் அசாம் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.
    கொரோனா பாதிப்பு ஏற்பட்ட 6 நாட்களுக்கு பிறகு தெண்டுல்கர் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    மும்பை:

    கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. இது தொடர்பாக அவர் கடந்த 27-ந்தேதி தனது டுவிட்டரில் எனக்கு சிறிய அறிகுறியுடன் கொரோனா பாதிப்பு இருப்பது பரிசோதனையில் உறுதியானது.

    இதனால் வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டுள்ளேன். டாக்டர்கள் கூறிய அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றி வருகிறேன் என்று தெரிவித்தார். மேலும் தனது குடும்பத்தினருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்றும் தெரிவித்தனர்.

    இதையடுத்து தெண்டுல்கர் தன்னை வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டு சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்த நிலையில் கொரோனா பாதிப்பு ஏற்பட்ட 6 நாட்களுக்கு பிறகு தெண்டுல்கர் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    இது தொடர்பாக அவர் இன்று டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-

    உங்களின் வாழ்த்துக்களுக்கும், பிரார்த்தனைகளுக்கும் நன்றி. மருத்துவ ஆலோசனையின்படி முன்எச்சரிக்கையாக நான் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். சில நாட்களில் வீடு திரும்புவேன் என்று நம்புகிறேன். அனைவரும் தங்களது நலனில் கவனம் செலுத்தி பாதுகாப்பாக இருங்கள் என்று கூறியுள்ளார்.

    மேலும் 2011-ம் ஆண்டு உலக கோப்பையை வென்ற 10-வது ஆண்டு தினத்தையொட்டி இந்தியர்களுக்கும் மற்றும் எனது அணியினருக்கும் வாழ்த்துக்கள் என்றும் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

    சமீபத்தில் ராய்ப்பூரில் நடந்த சாலை பாதுகாப்பு உலக சீரிஸ் போட்டியில் தெண்டுல்கர் பங்கேற்று விளையாடினார். அதன்பின் அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அதே போல் அவருடன் இந்திய லெஜன்ட்ஸ் அணியில் இடம் பெற்று இருந்த யூசுப் பதான், இர்பான்பதான், பத்ரிநாத் ஆகியோரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பிடித்து உள்ள தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் லுங்கி நிகிடி முதல் சில ஆட்டங்களில் விளையாட மாட்டார் என்று தெரியவந்துள்ளது.

    சென்னை:

    14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி வருகிற 9-ந் தேதி தொடங்குகிறது. டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முதல் ஆட்டத்தில் 10-ந் தேதி டெல்லியுடன் மோதுகிறது. இப்போட்டி மும்பையில் நடக்கிறது.

    இதற்கிடையே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்று இருந்த ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஹாசலிவுட் இந்த ஐ.பி.எல். தொடரில் இருந்து விலகுவதாக நேற்று திடீரென அறிவித்தார்.

    ஆ‌ஷஸ் தொடர் முந்திய சர்வதேச போட்டிகளை கருத்தில் கொண்டு ஐ.பி.எல். தொடரில் இருந்து விலகுவதாக ஹாசலிவுட் தெரிவித்தார்.

    இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பிடித்து உள்ள தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் லுங்கி நிகிடி முதல் சில ஆட்டங்களில் விளையாட மாட்டார் என்று தெரியவந்துள்ளது.

    இதுகுறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் சி.இ.ஓ. கே.எஸ்.விஸ்வநாதன் கூறும்போது, லுங்கி நிகிடி அவரது சொந்த மண்ணில் (தென் ஆப்பிரிக்கா) நடக்கும் போட்டி தொடரில் பங்கேற்கிறார். அதன்பின் அவர் தனிமைப்படுத்துதலை பின்பற்ற வேண்டும்.

    இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் 3-வது ஆட்டத்தில் இருந்துதான் அவர் விளையாட முடியும் என்றார்.

    ஏற்கனவே ஹாசலிவுட் விலகியுள்ள நிலையில் தற்போது நிகிடியும் முதல் 2 ஆட்டங்களில் விளையாட மாட்டார் என்பது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.

    அணியில் சில புதிய வீரர்கள் வந்துள்ள நிலையில் ஐபிஎல் கோப்பையை பெங்களூர் அணி வெல்ல வாய்ப்பு அதிகமாக உள்ளதாக அந்த அணியின் கேப்டர் விராட் கோலி கூறியுள்ளார்.

    சென்னை:

    ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி வருகிற 9-ந் தேதி சென்னையில் தொடங்குகிறது.

    முதல் ஆட்டத்தில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்சும், விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ்- பெங்களூர் அணியும் மோதுகின்றன.

    இதற்காக இரு அணி வீரர்களும் சென்னை வந்துள்ளனர். பெங்களூர் அணி கேப்டன் விராட்கோலி நேற்று சென்னை வந்தார். அவர் ஓட்டலில் தன்னை 7 நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்ட பிறகு பயிற்சியில் ஈடுபடுகிறார்.

    ஏற்கனவே வந்த பெங்களூர் அணி வீரர்கள் தனிமைப்படுத்துதல் நடைமுறையை முடிந்த பிறகு பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்த நிலையில் விராட்கோலி பெங்களூர் அணியின் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட வீடியோவில் கூறியதாவது:-

    நாங்கள் மீண்டும் இந்தியாவில் விளையாடுகிறோம் என்பதில் மிகவும் உற்சாகமாக இருக்கிறோம். வேறுபட்ட அமைப்பில் இருந்தாலும், வேறு வழியில் இருந்தாலும் நான் மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறேன். இந்த நேரத்தில் எனக்கு ஒரு நல்ல உணர்வு இருக்கிறது.

    இது ஒரு நீண்ட பயணம்- பெங்களூர் அணிக்கு திரும்பி வருவது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. கடந்த ஐ.பி.எல். போட்டியை நேற்றுதான் நாங்கள் முடித்தது போல் உணர்கிறோம். கடந்த போட்டியின் உத்வேகத்தை நாங்கள் பெற்றுள்ளோம்.

    அணியில் சில புதிய வீரர்கள் வந்துள்ளனர். பழைய வீரர் பெயர்களும் உள்ளன. அவர்களை நான் பல ஆண்டுகளாக அறிந்து இருக்கிறேன்.

    டேனியல் கிறிஸ்டியன் இதற்கு முன்பு பெங்களூர் அணியில் இருந்திருக்கிறார். மேக்ஸ்வெல், முதல் முறையாக இடம் பெற்றுள்ளார். ஆனால் அவரை நாம் அனைவரும் அடிக்கடி ஐ.பி.எல். போட்டியில் பார்த்து இருக்கிறோம்.

    நாங்கள் ஒன்றாக இணைந்து நிறயை ஆட்டங்களில் வெற்றி பெறுவோம் என்று நம்புகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×