என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பேட்ஸ்மேன்கள் நிதான ஆட்டம் - வெஸ்ட் இண்டீசுடனான 2வது டெஸ்டை டிரா செய்தது இலங்கை
Byமாலை மலர்2 April 2021 9:46 PM GMT (Updated: 2 April 2021 9:46 PM GMT)
பேட்ஸ்மேன்களின் நிதான ஆட்டத்தினால் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டை டிரா செய்தது இலங்கை அணி.
ஆன்டிகுவா:
வெஸ்ட் இண்டீஸ் இலங்கை அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஆன்டிகுவாவில் உள்ள விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றறது.
முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 354 ரன் குவித்து ஆல்அவுட் ஆனது. கேப்டன் பிராத்வெயிட் 126 ரன்னும், ரகீம் கார்ன்வால் 73 ரன்னும் எடுத்தனர்.
இலங்கை சார்பில் லக்மல் 4 விக்கெட்டும் , சமீரா 3 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.
அடுத்து ஆடிய இலங்கை அணி முதல் இன்னிங்சில் 258 ரன்னில் ஆட்டமிழந்தது. திரிமானே 55 ரன் எடுத்தார். நிசாங்கா அரை சதமடித்து 51 ரன்னில் அவுட்டானார். சண்டிமால் 44 ரன்னும், தனஞ்செய டி சில்வா 39 ரன்னும் எடுத்தனர்.
வெஸ்ட் இண்டீஸ் சார்பில் கேமர் ரோச் 3 விக்கெட்டும், அல் ஜாரி ஜோசப் , ஜேசன் ஹோல்டர் தலா 2 விக்கெட்டும், கேப்ரியல், கெய்ல் மேயர்ஸ், பிளாக்வுட் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.
96 ரன்கள் முன்னிலை பெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டாவது இன்னிங்சை ஆடியது. கேம்ப்பெல் 10 ரன்னிலும், பிளாக்வுட்18 ரன்னிலும் அவுட்டாகினர்.
கேப்டன் பிராத்வெயிட் அரை சதம் கடந்தார். அவர் 85 ரன்னில் ஆட்டமிழந்தார். கைல் மேயர்ஸ் அரை சதமடித்து 55 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய ஜேசன் ஹோல்டர் அரை சதம் அடித்தார். வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டாவது இன்னிங்சில் 4 விக்கெட்டுக்கு 280 ரன்கள் எடுத்தபோது டிக்ளேர் செய்வதாக அறிவித்தது. ஹோல்டர் 71 ரன்னும், ஜோஷ்வா டி சில்வா20 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
இதையடுத்து, 377 ரன்களை இலக்காக கொண்டு இலங்கை அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் நிதானமான தொடக்கத்தைத் தந்தனர்.
திரிமன்னே 39 ரன்னில் அவுட்டானார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் கருணரத்னே 75 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து இறங்கிய ஒஷாடோ பெர்னாண்டோ அரை சதம் கடந்தார்.
இறுதியில், ஐந்தாம் நாள் இறுதியில் இலங்கை அணி 2 விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் எடுத்திருந்த போது ஆட்டம் முடித்துக் கொள்வதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் 0-0 என சமனில் முடிந்தது.
ஆட்ட நாயகன் விருது கிரெய்க் பிராத்வெயிட்டுக்கும், தொடர் நாயகன் விருது சுரங்கா லக்மலுக்கும் வழங்கப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X