என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    • சாதாரண மனிதர்கள் முதல் சாதனையாளர்கள் வரை அனைவருக்கும் அதிர்ஷ்டம் என்ற ஒன்று தேவைப்படுகிறது.
    • எண் கணிதம் வேறு ஜோதிடம் வேறு கிடையாது.

    எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்" என்பது அவ்வையாரின் வாக்கு.

    ஒரு உடலுக்குக் கண்கள் எவ்வளவு முக்கியமோ, அதேபோல மனித வாழ்க்கைக்கு எண்களும் எழுத்துகளும் மிக முக்கியம். நமது அன்றாட தேவை மற்றும் பயன்பாட்டில் பணம், நேரம், தூரம், வயது, மற்றும் அளவீடுகள் என அனைத்திலும் எண்களின் பங்களிப்பு இன்றியமையாதது. ஒருவரின் வாழ்க்கையை முறைப்படுத்தவும், அன்றாடச் செயல்பாடுகளில் சரியான முடிவுகளை எடுக்கவும் எண்கள் வழிகாட்டுகின்றன. எண் கணிதம் பற்றிய முழுமையான விழிப்புணர்வு உள்ளவர்களே வாழ்க்கையில் வெற்றி அடைகிறார்கள். சிறப்பான வாழ்க்கையை வாழ்கிறார்கள்.

    சாதாரண மனிதர்கள் முதல் சாதனையாளர்கள் வரை அனைவருக்கும் அதிர்ஷ்டம் என்ற ஒன்று தேவைப்படுகிறது. உலகில் பல்வேறு விதமான அதிர்ஷ்ட வாய்ப்புகள் மனிதருக்கு பல வரப்பிரசாதமாக உள்ளது. அதில் ஒன்றுதான் என் கணிதம். இதை சில பேர் நக்கல் நையாண்டித்தனமாக இரண்டு எழுத்தை மாற்றி வைத்தால் தலைவிதி மாறிவிடுமா என்று கேட்பார்கள். நம்பிக்கை இல்லாதவர்களைப் பற்றி நாம் கவலைபடக் கூடாது. உலகில் சாதனையாளர் பட்டியலில் இடம் பிடித்த பலர் தங்களது பெயரை எண் கணித முறையில் மாற்றி அமைத்த பிறகு வாழ்வாதாரம் உயர்ந்து உள்ளது நிரூபிக்கப்பட்டுள்ளது.

    அதேபோல் எண் கணிதம் வேறு ஜோதிடம் வேறு கிடையாது. ஜோதிடத்தின் பல்வேறு உட்பிரிவுகளில் எண்கணிதமும் ஒன்றாகும். சுய ஜாதகத்தில் உள்ள கிரக அமைப்புகளுக்கு ஏற்ப பெயரை அமைத்துக் கொள்வது அனைவரின் சுவாசக் காற்றான மொபைல் போன் எண்கள் மற்றும் வாகன எண்களை அதிர்ஷ்டத்திற்கு தகுந்தார் போல் மாற்றிக் கொள்வது உயர்வான நிலைக்கு அழைத்துச் செல்லும் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மையாகும். அதிர்ஷ்டம் என்பது புதையல் யோகம் அல்ல. ஒரு மனிதனுக்கு அதிர்ஷ்டம் எப்படி வேண்டுமானாலும் தேடி வரலாம். பூமியை பிளந்து தான் அதிர்ஷ்டத்தை பெற வேண்டும் என்ற கணக்கு இல்லை.

    தொழில், உத்தியோக ரீதியான அதிர்ஷ்ட லாபமும் புதையல் யோகமே. உண்மையான உழைப்பின் மூலம் வருவது தான் நிலையான நிரந்தரமான அதிர்ஷ்டமாகும். எனக்கு அதிர்ஷ்டம் இல்லை ஜாதகம் சரியில்லை என்று புலம்பிக் கொண்டு ஒரே இடத்தில் நின்றால் அதற்குப் பெயர்சோம்பேறித்தனமாகும். அதிர்ஷ்ட எண்களை வங்கி கணக்கு எண், வாகன எண், வீட்டு எண், மொபைல் எண், பெயர் எண் அல்லது முக்கியமான வேலைகளைத் தொடங்கும் தேதிகளாகவும் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்தலாம்.

    பிறந்த தேதி மற்றும் பெயர் எண்ணுக்கு ஏற்றவாறு தொழில், திருமணம், மற்றும் பெயர் திருத்தம் போன்றவற்றைச் செய்வதன் மூலம் வாழ்க்கையில் மாற்றங்களை ஏற்படுத்த முடியும். இதன் மூலம் ஒருவர் தன் ஆளுமை, பலம் மற்றும் பலவீனங்களைப் புரிந்துகொண்டு சிறந்த முடிவுகளை எடுக்க முடியும்.

    நல்ல வாய்ப்புகளை அடைய தேவையான அதிர்ஷ்டத்தை அதிகரித்துக் கொண்டு வெற்றியை நோக்கி ஓட வேண்டும். அதேபோல் உழைக்காமல் அதிர்ஷ்டம் வராது. அதிர்ஷ்ட போன் நம்பர் அதிர்ஷ்ட பெயர் வைத்துக் கொண்டால் மட்டும் அதிர்ஷ்டத்தை அடைய முடியாது முறையான உழைப்பாளிகளுக்கு சரியான திட்டமிடுதல் உள்ளவர்களுக்கு அதிர்ஷ்டம் துணை நிற்கும். நிற்கும் குதிரைக்கு மதிப்பு இல்லை. ஓடும் குதிரைக்கு மட்டுமே மதிப்பு. வெற்றியை நோக்கி ஓடுபவர்களுக்கு தோல்வி இல்லை வெற்றி புதையலாக மாறும். புதையலை நோக்கி ஓடி காலத்தை நகர்த்துவதை விட உழைப்பை நோக்கி ஓடினால் ஏராளமான தனவரவும் வாய்ப்புகளும் உண்டாகுவது உறுதி. கற்பனையில் அதிர்ஷ்டத்தை நம்பினால் வாழ்க்கை கெட்டுவிடும் என்பது முன்னோர்களின் அனுபவ உண்மை.

    பல வெளிநாடுகளில் எண்ணியதை பிரதான சக்தியாக பயன்படுத்தி வெற்றி கண்டுள்ளனர். பல புதிய உண்மைகளை உலகிற்கு வழங்கியுள்ளார்கள். தற்போது மிக அதிகமாக பயன்படுத்தப்பட்டு வரும் இந்த எண்ணியல் கலை சிலருக்கு அசுர வளர்ச்சியையும் பலருக்கு வீழ்ச்சியையும் தருகிறது.

    பொதுவாக ஜோதிடம் அறியாத நியுமராலஜி நிபுணர்கள் பிறந்த தேதியை அடிப்படையாக வைத்து ஒரு தனி மனிதன் அல்லது நிறுவனத்தின் பெயரை தேர்வு செய்து தருகிறார்கள். இது காக்கா உட்கார பனம் பழம் விழுந்த கதையாக சிலருக்கு நல்ல ஒரு மாற்றத்தை கொடுத்து விடுகிறது. தவறான அதிர்ஷ்ட எண்ணில் பெயர் மாற்றி வைத்துக் கொண்டால் நிலையான, நிரந்தமான புகழ், பணம், உயர்வு கிடைக்காது. பலர் தவறு எங்கே என்ற புரிதல் இன்றி தொடர் தோல்வியை சந்திக்கிறார்கள். சிலருக்கு பெரிய பெயர் மாற்றத்தைத்தரும் நீயுமராலஜி பலருக்கு ஏன் வெற்றி தருவதில்லை என்ற காரணத்தையும் எல்லோருக்கும் நியூமராலஜி பயன்தர அதை எப்படி பயன் தருவது போன்ற அறிய தகவல்களை இந்த கட்டுரையில் காணலாம்.

    'பிரசன்ன ஜோதிடர்' ஐ.ஆனந்தி

     

    ஒருவருடைய ஜாதகத்தில் எத்தனை யோகங்கள் அமைந்தாலும் அதை சிறப்பாக பெற வேண்டுமானால் உடல் எண் உயிர் எண்ணிற்கு ஏற்றவாறு பெயர் வைப்பது அவசியம். ஒருவருடைய ஜாதகத்தில் மோசமான யோகம் இருந்தாலும் உடல், உயிர் எண்ணுக்கு ஏற்ற பெயர் வைப்பதால் கெடுதலை ஓரளவு குறைக்கலாம். ஆனால் முழுவதும் நீக்க முடியாது.

    ஆகவே வாழ்க்கையில் வெற்றி பெற பிறந்த ஜாதகம் நன்றாக இருக்க வேண்டும். அல்லது பிறந்த தேதியின் உடல், உயிர் எண்ணிற்கு ஏற்ற படி பெயர் வைத்துக் கொள்வது உத்தமம். இயலாதவர்கள் உடல், உயிர் எண்களை ஆதிக்கம் செய்யும் கிரகங்களை வழிபாடு செய்வதன் மூலமும் நல்ல பலன்களை பெற முடியும். சிலர் அதிர்ஷ்ட பெயரை பிறந்த ஜென்ம நட்சத்திரப்படியும், சிலர் பிறவி எண் படியும், சிலர் விதி எண் படியும், சிலர் விதி எண்ணிற்கு பொருத்தமான நட்பு எண்ணிலும், பொதுவாக அதிர்ஷ்டம் தரக்கூடிய 1,5,9 ஆகிய எண்ணிலும் பெயரை அமைக்கிறார்கள். இந்த முறைகள் வெகு சிலருக்கு பலன் தருகிறது. பலருக்கு நேர்மறையான பலன்களை மட்டுமே தருகிறது.

    ஜாதகப்படி பெயர் அமைத்தல் பலர் ஜோதிடத்தையும், எண்ணியலையும் பிரித்துப் பார்க்கிறார்கள். அது தவறு. ஒருவருக்கு சுய ஜாதகத்தை மீறிய நற்பலன்கள் கிடைக்கும் வாய்ப்புகள் குறைவு. பிறவி எண், விதி எண் இவற்றோடு ஒருவருடைய ஜாதக ரீதியாக யோகத்தை தரக்கூடிய கிரகத்தின் எண்ணில் பெயரை அமைத்துக் கொண்டால் பலன் நூறு சதவிகிதம் உறுதி. பிறவி எண், விதி எண் இவற்றோடு ஜாதகத்தையும் ஒப்பிட்டு, அந்த ஜாதகப்படி எந்த கிரகம் நன்மை தரும் என்பதை ஆய்வு செய்து அந்த கிரகத்திற்குரிய எண், பிறந்த தேதி எண்ணிற்கு பொருத்தமாக இருக்கிறதா என ஆராய்ந்து அதற்கு பொருத்தமான எண்ணில் பெயரை அமைப்பதே மிக உன்னத முறையாகும். ஜாதகத்தில் வலிமை பெற்ற கிரகத்தின் எண்ணை அல்லது அதன் நட்பு எண்ணின் அடிப்படையில் பெயர் வைக்கும் போது நல்ல பலன் கிடைக்கும்.

    இவ்வாறு தேர்வு செய்யும் எண் ஜாதகரின் சுய ஜாதக லக்ன ரீதியான அசுபர்களாக உள்ள கிரகத்தின் எண்ணின் பெயராக இருக்க கூடாது. ஒருவரின் ஜாதகத்தில் பலமாக உள்ள கிரகம் வாழ்நாள் முழுவதும் ஜாதகத்தை இயக்கும். அதே கிரகம் லக்ன ரீதியான சுபர் எனில் ஜாதகருக்கு சுபபலன்கள் மிகுந்து கொண்டே இருக்கும்.

    ஜோதிடமும் நியூமராலஜியும்

    ஒரு குழந்தை பிறக்கும் பொழுதுவான மண்டலத்திலுள்ள கிரகங்களில் சில கிரகங்கள் வலிமையாக இருக்கலாம். சில கிரகங்கள் வலிமை இழந்து நிற்கும். லக்ன ரீதியான அசுப கிரகம் வலிமை இழந்தால் அதைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை. அதே நேரத்தில் லக்ன ரீதியான சுபர் எனில் அதன் தசா புக்தி காலங்களில் நற்பலன்களை அனுபவிக்க முடியாமல் போய்விடும். வலிமையற்ற கிரகத்தை பலப்படுத்த பல்வேறு பூஜை பரிகாரமுறைகள் ஜோதிட சாஸ்திரத்தில் பரிந்துரைக்கப்பட்டு இருந்தாலும் பரிகாரம் குறுகிய காலத்திற்கு மட்டுமே பலன்கள் தரும். ஆனால் நிரந்தரமான பலன்களைத் தருவதில் எண் கணித பெயர்கள் என்றால் அது மிகைப்படுத்தலாகது. வெறும் அதிர்ஷ்டப் பெயரை மட்டும் அமைத்துக் கொண்டால் 25 சதவீதம் மட்டுமே பலன் கிடைக்கும். அந்த நல்ல பெயரை ஜாதகம் பார்த்து பிறந்த எண், விதி எண் இவற்றோடு ஒப்பிட்டு ஒருவருடைய ஜாதகத்திற்கு யோகத்தை அளிக்கக்கூடிய எண்ணில் பெயரை வைத்துக் கொண்டால் வாழ்க்கை ஒளிமயமாகும்.

    உடல் எண்: ஒருவருடைய பிறந்த தேதியைக் கூட்டினால் வருவது உடல் எண் எனப்படும்.

    உயிர் எண்: ஒருவருடைய பிறந்த, தேதி, மாதம், வருடம் இவைகளை கூட்டினால் வருவது உயிர் எண் எனப்படும்.

    பெயரெண்: ஒருவருடைய பெயருக்கு உண்டான எழுத்துக்களுக்கான எண்களை கூட்ட வருவது பெயரெண் எனப்படும்.

    எண்ணும் எழுத்தும்

    ஆங்கில மொழியே உலக மக்கள் அனைவரும் பயன்படுத்தும் எண் என்பதால் ஆங்கில எழுத்துக்களே எண் கணித சாஸ்திரத்தில் பயன்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு மனிதனையும் நவ கிரகங்கள் ஆள்வது போல் சில எண்களும் ஆளும். அதன்படி ஒருவரின் வாழ்க்கை தரத்தை உயர்த்தக்கூடிய அதிர்ஷ்ட எண்களை கண்டறிந்து அதன்படி பெயரை திருத்தி அமைத்துக் கொண்டால் வாழ்க்கை வசந்தமாகும். உலகில் உள்ள அனைத்து மொழிகளிலும் 9 எண்களுக்கு மேல் எழுத்துக்கள் இல்லை. ஒவ்வொரு எழுத்தும் ஒரு கிரகத்தைச் சார்ந்துள்ளது.

    எழுத்துக்கள் எண்கள்

    A,I,J,Q,y 1

    B,K,R 2

    C,G,L,S 3

    D,M,T 4

    E,H,N,X 5

    U,V,W 6

    0, Z 7

    F, P 8

    9ம் எண்ணிற்கு எந்த எழுத்தும் கிடையாது. நவகிரகங்களும் 1 முதல் 9 வரையான எண்களின் ஆளுமைக்கு உட்பட்டது.

    எண்கள் கிரகங்கள்

    1. சூரியன்

    2. சந்திரன்

    3. குரு

    4. ராகு

    5. புதன்

    6. சுக்கிரன்

    7. கேது

    8. சனி

    9. செவ்வாய்

    பெயரில் சில எழுத்துக்களை மட்டும் மாற்றம் செய்வதால் வாழ்க்கை மாறாது. ஒவ்வொரு ஜாதகத்திற்கும் ஒரு ஆளும்கிரகம் உண்டு அந்த ஆளும் கிரகத்திற்கு ஏற்ற எண்களை சூட்சும முறையில் பெயரில் சேர்க்கும் பொழுது வலுவான வாழ்வியல் மாற்றம் நடக்கும். இன்று உலகத்தில் மொபைல் போன் இல்லாதவர்களே இல்லை என்று கூறும் அளவிற்கு ஒவ்வொரு வீட்டிற்கும் ஒவ்வொரு நபரிடம் இரண்டு முதல் மூன்று செல்போன்கள் உள்ளது. இவ்வளவு ஏன் பிறந்த குழந்தைக்கு கூட சாப்பாடு ஊட்ட செல்போன் தேவைப்படுகிறது. பிறந்த குழந்தையின் பெயரில் தனி யூடியூப் சேனல் ஆரம்பித்து அவர்கள் தகவல் தொடர்பு சாதனங்களுடன் தங்களது குழந்தைகளின் வாழ்வாதாரத்தை இணைத்து விடுகிறார்கள். மொபைல் எண் ஜோதிடம் என்பது பிறவி எண் அல்லது விதி எண்ணுடன் மொபைல் எண்களின் கூட்டுத்தொகையை பொருத்தி அதிர்ஷ்டத்தை அடையும் முறையாகும். பத்து இலக்க எண்களையும் கூட்டி ஒற்றை எண்ணாக மாற்ற வேண்டும்,

    உதாரணமாக கூட்டு எண் ஒன்று எனில் தலைமை பண்பு அரசியல் அரசாங்க வெற்றி உண்டு. ஐந்து எனில் நல்ல நண்பர்கள் தொழில் கூட்டாளிகள் வியாபார வளர்ச்சி தொழில் விருத்தி ஆகியவை உண்டாகும். இதுபோல் ஒவ்வொரு எண்ணிற்கும் ஒரு பலன் உண்டு.

    சரியான மொபைல் எண் அமைந்தவர்களின் வாழ்க்கையில் மன நிம்மதி நல்ல பொருளாதார வளர்ச்சி நிலையான நிரந்தரமான தொழில் உத்தியோக வாய்ப்புகள் ஆகியவற்றை ஏற்படுத்தி தரும். அவரவரின் பிறந்த தேதிக்கு ஏற்றவாறு எண்களைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் வளர்ச்சிப் பாதையை நோக்கிச் செல்ல முடியும்.

    இனி வரும் வாரங்களில் நவகிரகங்களின் எண்களில் பெயர்கள் அமைந்தவர்களின் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பது பற்றிய கட்டுரையை நீங்கள் படிக்க முடியும்.பிறந்த நேரம் சரியாக இல்லாவிட்டால் எண் கணிதப் படி பெயர் மொபைல் எண்களை மாற்றி அமைக்கும் போது நல்லது நடக்கும் நல்லது மட்டுமே நடக்கும்.

    செல்: 98652 20406

    • ஒரு ஆண்டில் 96 தர்ப்பணங்கள் கொடுக்க வேண்டும் என சாஸ்திரங்கள் சொல்கின்றன.
    • மாலையில் குல தெய்வத்தை வழிபட்டு விரதத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.

    மாதந்தோறும் வரும் அமாவாசை தினத்தில் முன்னோர்களை வழிபடுவது மிகச் சிறந்த ஒன்றாக கருதப்படுகிறது. அந்த வகையில் நாளை (செவ்வாய்க்கிழமை) வருவது மாசி மாத அமாவாசை. மாதந்தோறும் அமாவாசை திதி வந்தாலும் குறிப்பிட்ட சில மாதங்களில் வரும் அமாவாசை திதி கூடுதல் சிறப்பு பெறுகிறது.

    தை அமாவாசை, ஆடி அமாவாசை, புரட்டாசியில் வரும் மகாளய அமாவாசை ஆகியன மிக முக்கியமானதாக சொல்லப்படுகிறது. அதே போல் மாசி மாத அமாவாசையும் தனிச் சிறப்பு வாய்ந்தது. ஒரு வருடத்தில் 12 அமாவாசைகள் வருகிறது. மேலும், அமாவாசை திதியின் அதிபதி நம் முன்னோர்கள்தான். இதன் காரணமாக ஒவ்வொரு மாதமும் அமாவாசை தினத்தில் முன்னோர்களுக்கு சிறப்பு தூபம் காட்டி தியானம் மற்றும் அன்னதானம் செய்வது குடும்பத்திற்கு நல்லது.

    ஒரு ஆண்டில் 96 தர்ப்பணங்கள் கொடுக்க வேண்டும் என சாஸ்திரங்கள் சொல்கின்றன. அதன்படி மாதந்தோறும் வருகிற அமாவாசை, ஒவ்வொரு தமிழ் மாதப் பிறப்பு, கிரகண காலங்கள், திதி, புரட்டாசி மகாளய பட்சத்தின் 15 நாட்கள் என 96 தர்ப்பணங்கள் சாஸ்திரத்தில் சொல்லப்படுகிறது.

    அதில் மாசியில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது சிறப்பான பலன்களை தரும் என்றும் சொல்லப்படுகிறது.

    இந்த நாளில் அதிகாலையில் எழுந்து, நீராடி, முன்னோர் வழிபாடு மேற்கொள்ள வேண்டும். ஆறு, குளம், கடலில் புனித நீராடுவது மிகவும் புண்ணியமானதாகும். முன்னோருக்கு தர்ப்பணம் கொடுக்க வேண்டும். மாலையில் குல தெய்வத்தை வழிபட்டு விரதத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.

    மாலையில் வீட்டு வாசலில் மாவிலை தோரணம் கட்டி, குலதெய்வத்தை வழிபடுவதன் மூலம் நமது முன்னோர்களின் மனதை குளிர்வித்து அவர்களின் ஆசியை பெறுவதுடன் குலதெய்வத்தின் அருளையும் பரிபூரணமாக பெற முடியும்.

    அமாவாசை நாளில் முன்னோருக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபடுவதன் மூலம் நாம் செய்த பாவம் மட்டுமின்றி, பல தலைமுறைகளாக நமது முன்னோர்கள் செய்த பாவங்களும் தீர்ந்து, அவர்களின் ஆன்மா நற்கதி அடையும். முன்னோர் வழிபட்டை மேற்கொள்வதால் குடும்பத்தில் ஒற்றுமை சிறக்கும். பிரச்சினைகள், திருமண தடை போன்ற தடைகள், தோஷங்கள் நீங்கும். குலம் செழிக்கும். குழந்தை பேறு உண்டாகும். மாசி அமாவாசையில் நதிகளின் கரையில் தெய்வங்களும் வசிக்கின்றனர். 3 நதிகள் சங்கமிக்கும் இடத்தில் நீராடுவது அனைத்து பாவங்களையும் போக்கும் என்கின்றனர் ஆன்மீகபெரியவர்கள். மாசி அமாவாசைக்கு நம் முன்னோர்களை வழிபாடு செய்தால் மகிழ்ச்சி, செல்வம் மற்றும் நல்ல அதிர்ஷ்டத்தைத் தருவதாக நம்பப்படுகிறது.

    இந்த ஆண்டு மாசி மாத அமாவாசை அவிட்டம் நட்சத்திரத்துடன் இணைந்து வருவதால் அன்று தர்ப்பணம் கொடுப்பது பித்ருக்களுக்கு அளவற்ற மன மகிழ்ச்சியை தருவதோடு தானதர்மம், உணவு, தண்ணீர் ஆகியவற்றை தானம் செய்தால் பல ஆயிரம் ஆண்டுகள் பித்ருக்களுக்கு சிரார்த்தம் செய்த பலன் கிடைக்கும்.

    • மகா சிவராத்திரி தோன்றியதும், லிங்க வழிபாடு தோன்றியதும் திருவண்ணாமலை தலத்தில் தான்.
    • திருவண்ணாமலையில் உள்ள குகைகளில் சித்தர்கள், முனிவர்கள், மகான்கள் யோகிகள் தவம் செய்திருக்கிறார்கள்.

    சிவ பெருமான் பஞ்சபூதங்களின் வடிவில் காட்சி தரும் பஞ்சபூத தலங்களில் ஈசன் அக்னி வடிவமாக காட்சி தரும் தலம் திருவண்ணாமலை. நினைத்தாலே முக்தி தரும் தலம் என போற்றப்படுவதும், தமிழகத்தில் உள்ள முக்தி தலங்களில் முதன்மை தலமாக போற்றப்படுவதும் திருவண்ணாமலை தான்.

    திருவண்ணாமலை தலத்தில் தான், சிவ பெருமான், பிரம்மா மற்றும் விஷ்ணுவிற்கு ஜோதி வடிவமாக காட்சி தந்ததாக சொல்லப்படுகிறது. இதை போற்றும் விதமாகவே திருக்கார்த்திகை தீப திருநாளில், சிவமே மலையாக காட்சி தரும் திருவண்ணாமலை மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படுகிறது.

    ஜோதி வடிவமாக காட்சிதந்த சிவ பெருமான், லிங்கோத்பவராக காட்சி தந்ததும் இங்கு தான் என சொல்லப்படுகிறது. அதனால் மகா சிவராத்திரி தோன்றியதும், லிங்க வழிபாடு தோன்றியதும் திருவண்ணாமலை தலத்தில் தான்.

    அருணன் என்றால் சூரியன் - நெருப்பின் நிறமான சிவப்பைக் குறிக்கும். அசலம் என்றால் கிரி என்றும் மலை என்றும் பொருள். எனவே அருணாசலம் என்றால் சிவந்த நிறத்தையுடைய மலை என்று பொருள். மலையே சிவனாக காட்சி தரும் திருவண்ணாமலை, கிருதா யுகத்தில் அக்னி மலையாகவும், திரேதாயுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபர யுகத்தில் பொன் மலையாகவும், கலியுகத்தில் கல் மலையாகவும் மாறி மாறி வந்துள்ளது.

    "அருணாசலத்தை வலம்வர வேண்டும் என்ற நினைவோடு ஓரடி எடுத்து வைப்பவருக்கு யாகம் செய்த பலன் கிடைக்கும். இரண்டடியில் ராஜசூய யாகம் செய்த பலன் கிடைக்கும், சர்வதீர்த்தமாடிய பலனும் வந்து சேரும். மூன்றடியில் தான பலன், நான்கடியில் அஷ்டாங்க யோக பலன் உண்டாகும்." என்கின்றது அருணாசல புராணம். ஒரு சாதாரண நாளில் திருவண்ணாமலை கிரிவலம் சென்றாலே நமது முன்வினைகள் நீங்கிவிடும். பொருள் வேண்டுபவர்கள் பவுர்ணமியிலும், அருள் வேண்டுபவர்கள் அமாவாசையிலும் திருவண்ணாமலையை கிரிவலம் வரவேண்டும்.

    அதுபோல் சிவ பெருமானின் அருளை பெற விரும்புபவர்களும், பாவங்கள் நீங்கி வளமான வாழ்வு பெற விரும்புபவர்களும் மகா சிவராத்திரி நாளில் கிரிவலம் செல்வது சிறப்பாகும்.

    திருவண்ணாமலையில் உள்ள குகைகளில் சித்தர்கள், முனிவர்கள், மகான்கள் யோகிகள் தவம் செய்திருக்கிறார்கள். இவர்கள் எல்லோரும் அமாவாசை அன்று அண்ணாமலை யாரை கிரிவலம் வந்து சிவனின் அருள் பெற்று, பின் குகைகளிலேயே இறைவனுடன் கலந்து ஜீவசமாதி நிலை அடைந்துள்ளார்கள். இதனால், சக்தி அதிர்வலைகள் அதிகமான இந்த மலையைச் சுற்றி வருவதால் சித்தர்கள், முனிவர்கள், மகான்கள் யோகிகள் ஆசிகளை பக்தர்கள் பெறுகின்றனர் என்பது ஐதீகம். மற்றும் திருவண்ணாமலையை கிரிவலம் சுற்றி வரும்போது சக்தி மிக்க மூலிகைச் செடிகொடிகளின் காற்றை சுவாசிப்பதால் உடலும் உள்ளமும் நலம் பெறுகிறது.

    பொதுவாக ஞாயிறு கிரிவலம் சிறந்ததாகக் கூறப்படுகிறது. ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமைகளிலும் சூரிய பகவான் பூவுலகிற்கு ஏதேனும் ஒரு வடிவில் வந்து திருவண்ணாமலையைக் கிரிவலம் செய்வதாகக் ஐதீகம். நாளை (ஞாயிற்றுக்கிழமை) சிவராத்திரி என்பதால் கிரிவலம் செல்பவர்கள் சிவலோகமாம் திருக்கயிலாயத்தில் தேவர்களாய் வீற்றிருக்கும் சிறப்பைப் பெறுவார்களாம். குடும்பப் பிரச்சினை காரணமாக பிரிந்து வாழும் தம்பதியர் ஞாயிறு கிரிவலம் செய்தால் ஒற்றுமையுடன் சேர்ந்து வாழ வழி பிறக்கும் என்கின்றனர்.

    சிவராத்திரி இரவு கண் விழித்து சிவனைத் தொழுவார்கள். உறங்காமல் இருப்பது என்றால் ஆன்மா விழித்திருப்பது என்று பொருள். அன்றிரவு முழுவதும் மலையை வலம் வந்தால் கண் விழித்த பலனும் உண்டு. இறைவனை இடைவிடாது தொடர்ந்து தொழுத பலனும் உண்டு. சிவராத்திரி அன்று கிரிவலப் பாதையில் உள்ள அஷ்ட லிங்கக் கோவில்களிலும் அந்தந்த ஜாமங்களில் அபிஷேகம் நடப்பதை கிரிவலம் செய்யும்போதே தரிசிக்கலாம்.

    திருவண்ணாமலை கிரிவலத்தை முதலில் ஆலயத்தின் புறத்தே இருக்கும் மலையின் காவல் தெய்வமான பூத நாராயணரை வணங்கி, மலையைச் சுற்றுவதற்கு அனுமதி வாங்கி தொடங்க வேண்டும். அடுத்து இடையூறு இல்லாமல் கிரிவலம் முடிய வேண்டும் என்று வழியில் உள்ள இரட்டைப் பிள்ளையாரை வணங்கி வேண்டிக் கொள்ள வேண்டும். பின்னர் ராஜ கோபுரத்தை வணங்கி விட்டு கிரிவலத்தை ஆரம்பிக்க வேண்டும்.

    கிரிவலத்தை முடித்தப் பின்னர், கோவிலில் மூலவரின் உள்பிரகாரத்தில் இருக்கும் துர்வாசமகரிஷியை வணங்கவேண்டும். அவரிடம் முறைப்படி கிரிவலம் முடித்துவிட்டு வந்துள்ளதாக மானசீகமாகத் தெரிவிக்க வேண்டும். அதன் பிறகே அண்ணாமலையாரையும், உண்ணா முலையம்மாளையும் தரிசிக்க வேண்டும். இப்படிச் செய்தால் ஈசன் அருளுடன் துர்வாசரின் அருளும் நமக்குக் கிடைக்கும் என்பது ஐதீகம்.

    இந்த கிரிவலப்பயணம் முழுவதும் எவரிடமும் பேசாமலும், விடாமல் ஓம் சிவ சிவ ஓம் என ஜபித்தவாறும் சென்றால் நமது எண்ணிக்கை நிச்சயமாக ஒரு லட்சத்தைத் தொட்டுவிடுகிறது. இப்படி ஜபித்துவரும்போது நாம் இந்த மந்திரத்தை எண்ண வேண்டிய அவசியமில்லை.

    அசாத்தியமான மன வலிமை உள்ளவர்களால் மட்டுமே இப்படி 14 கி.மீ.தூரமும் மவுனமாக வர முடியும். அப்படி ஒரே ஒரு முறை கிரிவலம் மவுனமாக ஓம் சிவ சிவ ஓம் ஜபித்தவாறு வந்துவிட்டாலே மறுநாளே நமது கடுமையான பிரச்சினை ஒன்று தீரும் அல்லது அதற்கான சூழ்நிலை உருவாகிவிடும் என்கின்றனர் பக்தர்கள்.

    • அனைத்து ராசிக்காரர்களுக்கும் பாதிப்பு இருக்கும்.
    • பிரதோஷ நாளில் சிவாலயத்தை வலம் வந்து வணங்குவது மிக முக்கியமான வழிபாடாக கருதப்படுகிறது.

    சிவபெருமானுக்கு உகந்த விரதங்களில் முக்கியமானது பிரதோஷ விரதம். ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறை திரயோதசி திதியில் மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை உள்ள காலம் பிரதோஷ காலம் எனப்படுகிறது. சனிக்கிழமையுடன் திரயோதசி திதி இணைந்து வரும் நாள் சனி மகா பிரதோஷம் என்று அழைக்கப்படுகிறது. அந்த வகையில் நாளை (சனிக்கிழமை) சனி மகா பிரதோஷம் ஆகும்.

    தேவர்களும், அசுரர்களும் பாற்கடலை கடைந்த போது வெளிப்பட்ட ஆலகால விஷத்தை சிவபெருமான் உண்டது ஏகாதசி தினம் ஆகும். மறுநாளான துவாதசி முழுவதும் மயக்க நிலையில் இருக்கும் சிவ பெருமான், 3-ம் நாளான திரியோதசி திதியில் பகலும் இரவும் சந்திக்கும் சந்தியா கால வேளையில் மயக்க நிலையில் இருந்து விழித்து, சந்தியா நிருத்த தாண்டவம் ஆண்டினார்.

    பிரளய தாண்டவம் எனப்படும் இந்த நாட்டியம் சிவபெருமானின் 5 விதமான தொழில்களான படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகியவற்றை குறிப்பதாகும். சிவ பெருமான், பார்வதி தேவியுடன் ஆனந்த தாண்டம் ஆடி, உலக உயிர்கள் அனைத்திற்கும் அருள் புரிந்த காலமே பிரதோஷ காலமாகும்.

    பிரதோஷ வேளையான மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை மிகவும் சக்தி வாய்ந்தது என்கின்றன சாஸ்திர நூல்கள். சனிபிரதோஷ நாளில் செய்யும் வழிபாடு ஆயிரமாயிரம் மடங்கு புண்ணிய பலன்களைக் கொடுக்கும், நம் தீவினைகளை நீக்கும். பொதுவாகவே சனிக்கிழமைகள் சனிபகவானுக்கு உரியன. இந்த நாளில் ஆலயங்களுக்குச் சென்று சிவ வழிபாடு செய்து நவகிரகத்தில் சனிபகவானையும் வழிபட்டுவந்தால் சனியின் தொல்லைகள் தீரும்.

    சனிபகவான் நேர் பாதையில் சஞ்சாரம் செய்யும்போது, ஏழரைச் சனி, அஷ்டம சனி, கண்டக சனி, அர்த்தாஷ்டம சனி நடப்பவர்களையுமே அதிக அளவில் பாதிப்பார். ஆனால் வக்ர காலத்தில் இந்தப் பலன்கள் மாறுபடும். அனைத்து ராசிக்காரர்களுக்கும் பாதிப்பு இருக்கும்.

    எல்லா சனிக்கிழமைகளிலும் சிவாலயம் செல்ல முடியாதவர்கள் குறைந்த பட்சம் சனி பிரதோஷ நாளிலாவது சென்று வழிபட வேண்டும். அவ்வாறு வழிபட்டால் ஓர் ஆண்டில் அனைத்து சனிக்கிழமைகளிலும் வழிபட்ட பலன் கிடைக்கும்.

    காரியத்தடை, சுபகாரியங்கள் தள்ளிப்போவது, குழந்தைப்பேறு தாமதமாவது, வேலை கிடைப்பதில் சிக்கல் என வக்ர சனியால் துன்புறும் அன்பர்கள் நாளை (சனிக்கிழமை) சனி மகாபிரதோஷ நாளில் வழிபாடு செய்வது அவசியம். குறிப்பாகத் தொந்தரவுகளை அனுபவித்துவரும் ராசிக்காரர்கள் இந்த மகாபிரதோஷ வழிபாட்டைச் செய்வது நல்லது.

    பிரதோஷ நாளில் சிவாலயத்தை வலம் வந்து வணங்குவது மிக முக்கியமான வழிபாடாக கருதப்படுகிறது. சனிக்கிழமை மாலை 4.30 முதல் 6 வரையுள்ள காலம் சூரியன் மற்றும் சுக்கிர ஓரையில் அமையும். இந்த நேரம் வெற்றி தரும் முகூர்த்தத்தைக் குறிக்கின்ற ஒரு நேரமாக உள்ளது.

    சிவபெருமானைக் குறிப்பிடுகின்ற சூரிய ஓரையில் தொடங்கி, அம்பாளைக் குறிக்கின்ற சுக்கிர வேளையில் நிறைவுபெறும் பிரதோஷ பூஜையில் மகாலட்சுமியின் ஆசிகள் பரிபூரணமாகக் கிடைக்கும் என்பதால், சனி மகா பிரதோஷம் மிகவும் சிறந்ததாகப் போற்றப்படுகிறது.

    நித்தியப் பிரதோஷம், பட்சப் பிரதோஷம், பிரளயப் பிரதோஷம் என இருபது வகை பிரதோஷங்கள் உள்ளதாக புராணங்கள் கூறுகின்றன. பிரதோஷ காலத்தில் சிவ பெருமானை தேவியோடும், முருகனோடும் சோமாஸ்கந்த மூர்த்தியாகத் தரிசித்து கண்ணீர் மல்க உருகி வழிபட்டால் சகல விதமான நன்மைகளும் வந்து சேரும்.

    பிரதோஷ காலத்தில் சிவாய நம எனும் பஞ்சாட்சர மந்திரம் உச்சரிப்பது நாம் செய்த பாவங்கள் மட்டுமல்ல 7 தலைமுறையினர் செய்த பாவங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.

    • கடந்த பிறவியில் தொடர்பு பெற்ற மனிதர்களை இந்தப் பிறவியில் நிச்சயம் சந்திப்போம்.
    • சனி, செவ்வாய் தொடர்பு இருந்தால் இரண்டாம் திருமணம் நடக்கும்.

    ஒரு ஜோதிடரை சந்திப்பவர்கள் பூர்வீகம், குலதெய்வம், குழந்தை, அதிர்ஷ்டம், காதல் இந்த 5 விசயங்களை கேட்காமல் செல்வது இல்லை. பூர்வ ஜென்ம புண்ணிய பலப்படி ஒரு ஜாதகரின் வாழ்வில் நடைபெற வேண்டிய அனைத்து சம்பவங்களும் 5-ம் பாவகத்தில் தான் பதிவாகி இருக்கும். சென்ற ஜென்மத் தொடர்ச்சியே இந்த பிறவி என்பது நிதர்சனமான உண்மை. கடந்து வந்த ஜென்மத்தில் நிறைவேற்ற தவறிய நிறைவேற்ற முடியாமல் விட்டுப் போன கடமைகளை முடிக்கவே ஒரு ஜனனம் நிகழ்கிறது. இளம் பருவத்தினர் நான் காதல் திருமணம் செய்வேனா பெற்றோர்கள் பார்த்து வைக்கும் திருமணம் செய்வேனா என்று அறிந்து கொள்ள விருப்புகிறார்கள்.

    ஒரு ஜாதகத்தில் 5ம் அதிபதியே ஒருவருக்கு காதல் வருமா வராதா என்பதை தெரிவிக்கும் ஸ்தானமாகும். ஒருவரின் ஆழ்மன எண்ணங்களை குறிக்கும் ஸ்தானமான ஐந்தாம் இடத்தில் நின்ற கிரகமும் ஐந்தாம் இடத்தை பார்த்த கிரகமும் ஐந்தாம் அதிபதியின் நட்சத்திர சாரத்தில் நின்ற கிரகமும் ஐந்தாம் அதிபதியும் காதலை தீர்மானிக்கிறார்கள். ஒரு பாவக அதிபதி எந்த பாவத்தில் நிற்கிறாரோ எந்த நட்சத்திர சாரத்தில் இருக்கிறார்களோ அது தொடர்பான பலன்களே ஜாதகருக்கு நடக்கும்.

    மனித வாழ்வின் மிக முக்கிய அங்கமான திருமணத்தை பெற்றோர் நிச்சயிக்கும் திருமணம், சுய விருப்ப விவாகம் என இரண்டாக வகைப்படுத்ததலாம். ஜோதிட ரீதியாக ஒருவரின் ஜாதகத்தை வைத்து பெற்றோரினால் நிச்சயிக்கப்படும் திருமணமா? அல்லது ஜாதகரின் விருப்ப திருமணமா? என்பதை எளிதாக கூற முடியும். ஒருவருக்கு காதல் திருமணம் நடைபெற பூர்வ புண்ணிய ஸ்தானம் எனப்படும் ஐந்தாமிடம் லக்னம் அல்லது லக்னாதிபதியுடன் சம்பந்தம் பெற்று இருக்க வேண்டும். இதை சஞ்சித கர்மா என்று கூறலாம். சஞ்சித கர்மா என்பது ஒருவரின் கடந்த கால செயல்களின் மொத்த விளைவுகளை குறிக்கும்.

    ஒருவரின் நல்வினை மற்றும் தீவினை பதிவுகள் அனைத்தையும் உள்ளடக்கியது, இது அடுத்தடுத்த பிறவிகளில் அனுபவிக்கப்படும். ஒருவரின் ஜாதகத்தில் லக்னத்தில் இருந்து 5-ம்மிடம் மனம் புத்தியைக் குறிக்கும். ஒருவரின் விருப்பு வெறுப்புகளைத் தெரிவிக்குமிடம். சென்ற ஜென்ம தொடர்புகளை அறியுமிடம். கடந்த ஜென்மத்துடன் தொடர்பு பெற்ற மனிதர்களுடன் தீர்க்கப்பட வேண்டிய சம்பவங்கள் உள்ள மனிதர்களை இந்தப் பிறவியில் சந்திப்போம். அதாவது கடந்த பிறவியில் தொடர்பு பெற்ற மனிதர்களை இந்தப் பிறவியில் நிச்சயம் சந்திப்போம். எனவே காதலிப்பவர்களுக்கு முதலில் 5-ம்மிடம் வேலை செய்ய வேண்டும்.

    பெரும்பான்மையாக ஐந்தாமிடத்துடன் சம்பந்தம் பெறும் கிரகங்களின் தசை புத்தி காலங்களில் அல்லது சுக்ரன், ராகு தசை புத்தி காலங்களில் ஒருவருக்கு காதல் ஏற்படும். அதே போல் ஒருவரின் ஜாதகத்தில் காதலுக்கான காரக கிரகம் புதன் மற்றும் 5,7-ம் பாவகத்தை வைத்தே ஒருவரின் திருமண வாழ்வைப் பற்றி கூற முடியும். 2,5,7, 11-ம் பாவக தொடர்பு மற்றும் புதன், கேதுவின் சம்பந்தம் வைத்தும் ஒருவரின் திருமணம் எத்தகையது என்பதை எளிதாக கூற முடியும். காதல் கிரகங்கள் 4-ம் அதிபதியோடு தொடர்பு ஏற்பட்டால் பள்ளி, கல்லூரி காலங்களிலும் ஒன்பதாம் பத்தாம் அதிபதிகளுடன் தொடர்பு ஏற்பட்டால் வேலை செய்யும் இடத்தில் அல்லது மத்திம வயதில் காதல் வரும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

     

    சந்திரனும் காதலும்

    ஜோதிட சாஸ்திரத்தில் காதலுக்கு காரக கிரகம் புதனாக இருந்தாலும் மனதிற்கு காரக கிரகமான சந்திரனே ஒருவரின் காதலை நிர்ணயிக்கிறது. சந்திரன் பலம் வாய்ந்தவர்களுக்கு காதல் வராது. சந்திரன் பலவீனமாக உள்ளவர்களுக்கு மட்டுமே காதல் வரும். ஒருவரின் மனதில் நிறைவேறாத வெளியில் சொல்ல முடியாத ஒரு உணர்வுகளை பகிர்ந்து கொள்ளக்கூடிய நட்பு கிடைக்கும்போது காதல் மலருகிறது. அந்த நட்பை அவர்கள் தமக்கு கிடைத்த பொக்கிஷமாக கருதுகிறார்கள். இந்த நட்பு இல்லை என்றால் தனக்கு வாழ்க்கை இல்லை என்ற மனநிலைக்கு வந்து விடுகிறார்கள். ஒரு ஜாதகத்தில் சந்திரன் பலமாக இருந்தால் அவர்களால் தனது பிரச்சினைகளை தாமே தீர்த்துக் கொள்ள முடியும்.

    சந்திரன் பலம் குறைவாக இருந்தால் அவர்களுக்கு பிறரின் உதவி தேவைப்படும். தனது மன உணர்வுகளை புரிந்த ஒரு நட்பை சந்திக்கும்போது அவர்கள் மேல் காதல் வந்து விடுகிறது. நல்லது எது கெட்டது எது என்பதை பகுத்தாய்வும் திறன் இல்லாமல் போய்விடுகிறது. மனதிற்கு தேவைப்படும் ஆறுதலை கூறும் நபர்கள் மட்டுமே உலகத்தில் உண்மையானவர்கள் மற்றவர்கள் தீயவர்கள் என்ற மனநிலைக்கு வந்து விடுகிறார்கள். அதுமட்டு மல்லாமல் சிரித்துப் பேசுபவர்கள் மட்டுமே நல்லவர்கள் கோபப்படுபவர்கள் கெட்டவர்கள் என்ற எண்ணம் அவர்களிடம் அதிகமாக இருக்கும்.

    இந்த அமைப்பு உள்ளவர்கள் காதலில் தோல்வி அடைந்தால் மனநோயாளியாக மாறிவிடுகிறார்கள். சந்திரன் பலவீனமாக உள்ளவர்களுக்கு காதல் தோல்வியை எளிதில் தாங்க முடியாமல் தற்கொலை வரை செல்கிறார்கள். காதல் கலப்பு திருமண கிரக அமைப்புகள் வெளிநாட்டவர். வெளி மாநிலத்தினர், வேற்று இனம், மதத்தைச் சேர்ந்தவர்களை திருமணம் செய்துகொள்ளுதல் கலப்பு திருமணமாகும். திருமணம் தொடர்பான பாவகங்கள் 1,2,7, 8 ஆகியனவாகும். காதல் பற்றி கூறும் பாவம் 5. இதில் 1, 2,7-ம் பாவங்களுடன் 5-ம் பாவகம் சம்பந்தம் பெற்றால் காதல் திருமணம் நடக்கும். 9-ம் பாவகம் ஒருவரின் ஜாதி, மதம், குலம், கோத்திரம் ஆகியவற்றை கூறுமிடம். 1, 2, 5, 7-ம் பாவகத்துடன் 9-ம் அதிபதி சம்பந்தப்பட்டால் காதல் கலப்பு திருமணம் நடைபெறும்.

    மேலும் ஏழாமிடம் அல்லது ஏழாம் அதிபதிக்கு சுக்ரன், சனி அல்லது சனி, செவ்வாய் தொடர்பு இருந்தால் ஜாதகர் கலப்பு திருமணம் செய்ததற்கான அமைப்பு உண்டாகும். 5, 7, 9-ம் அதிபதிகள் பலம் பெறுவதும் நீச்சம் அடையாமல் இருப்பதும் முக்கியம். மேலும் ஒன்பதாம் அதிபதி அல்லது ஒன்பதில் நின்ற கிரகம் நீச்சம் பெற்று அத்துடன் 1, 2, 5, 7-ம் பாவகம் சம்பந்தம் பெற்றால் தகுதி தரம் இல்லாத தனது குலத்தவரால் வெறுக்ககூடிய கலப்பு திருமணமாக அமைகிறது. 9-ம் பாவம் அதன் அதிபதி, குரு பலம் பெற்று 1,2,5, 7-ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்றோர் சம்மதத்துடன் காதல் திருமணம் நடைபெறும் அல்லது பெற்றோரே வேறு குலத்தில் வரன் பார்த்து திருமணம் நடத்துவார்கள்.

    ஏழாம் இடத்துடன் தனித்து சனி ராகு கேதுக்கள் இருந்தாலும் காதல் கலப்பு திருமணம் நடைபெறலாம். ராகு, கேது கிரகங்கள் பிற மதத்தினரை குறிக்கும். களத்திர காரக கிரகங்களான சுக்கிரன் மற்றும் செவ்வாய்க்கு ராகு கேது சம்பந்தம் இருப்பது வேற்று மதம், இனம் மொழி பேசுபவருடன் கலப்புத் திருமணத்தை ஏற்படுத்தும். ஏழாம் அதிபதியுடன் சனி, ராகு கேது சம்பந்தம் பெறுவதும் கலப்பு திருமணத்தை நடத்தும். 7-ம் இடத்தில் சனி, ராகு, கேது நட்சத்திரம் இருந்தாலும் கலப்பு திருமணம் நடக்க வாய்ப்புள்ளது. 7, 8, 9-ம் பாவகம் அசுபத்தன்மையுடன் இணைந்து நடக்கும் காதல் கலப்புத் திருமணங்கள் தோல்வியை தழுவும். மேலே கூறிய இந்த பாகங்கள் தசா புத்தியுடன் சம்பந்தப்படும்போது வெளியூர் வெளிநாடு வெளி மாநிலம் செல்பவர்கள் காதல் கலப்பு திருமணம் செய்து அங்கேயே தங்கி விடுகிறார்கள்.

    ஐந்தாம் அதிபதியும் லக்னமும் ஒருவரின் எண்ணங்கள் மற்றும் விருப்பங்களை கூறுவது ஐந்தாம் இடமாகும். இந்த ஐந்தாம் இடத்தில் பூர்வ ஜென்ம புண்ணிய படி அனுபவிக்க வேண்டிய பல்வேறு நல்ல தீய விளைவுகள் இருக்கும். பல்வேறு வினைகளில் இந்த ஜென்மத்தில் ஜாதகர் எதை அனுபவிக்க போகிறார் என்பது லக்னத்தை லக்னாதிபதியை தொடர்பு கொள்ளும் கிரகத்தை வைத்து நாம் முடிவு செய்ய வேண்டும். லக்னம் லக்னாதிபதியுடன் தொடர்பு கொள்ளக் கூடிய சம்பவங்கள் இந்த வாழ்க்கையில் ஜாதகரின் விருப்பப்படி எளிதாக சுலபமாக நிறைவேறிவிடும். லக்னாதிபதியுடன் தொடர்பு பெறாத பாவகங்களின் கிரகங்களின் பலன்கள் ஜாதகர் போராடிய வெற்றி பெற வேண்டும்.

    வெற்றி பெற்றாலும் அது நீடித்த காலத்திற்கு நிலைத்திருக்கும் என்பதற்கு எந்த உறுதியும் கூற முடியாது. லக்னாதிபதிக்கு தொடர்பு பெற்று நடக்கக்கூடிய சம்பவங்கள் ஜாதகருக்கு எளிதில் வெற்றியையும் நிலைத்த தன்மையையும் கொடுக்கும். லக்னாதிபதி ஐந்தாம் அதிபதியின் தொடர்பு பெற்றால் ஜாதகருக்கு காதல் உணர்வு அதிகமாக இருக்கும். ஜாதகரை தேடி காதல் வரும். பூர்வ ஜென்ம தொடர்பு உண்டு. கடந்த ஜென்மத்தில் அனுபவித்த அனைத்து நற்பலன்களையும் இந்த ஜென்மத்தில் அனுபவிப்பார்கள். புகழ்ச்சிக்கு மயங்குவார்கள். செல்வாக்கு புகழ் அந்தஸ்து கவுரவம் உண்டு. தற்பெருமை பேசுவார்கள். கடந்து வந்த ஜென்மத்தின் வாசனை அவர்கள் ஆழ் மனதில் இருந்து கொண்டே இருக்கும்.

    உள்ளுணர்வு நிரம்பியர்கள். தனது உள்ளுணர்வால் நடக்கப் போகும் அனைத்து நிகழ்வுகளையும் முன்னரே அறியும் சக்தி படைத்தவர்கள். கடந்து வந்த ஜென்மத்தில் சந்தித்த நபர்களை பார்க்கும்போது அவர்கள் மேல் இவர்களுக்கு உள் உணர்வு மிகுதியால் காதல் வரும். தங்கள் வாழ்க்கைக்கு மட்டுமல்ல பிறரின் வாழ்க்கைக்கும் நடப்பதை நடக்கப் போவதை முன்கூட்டியே அறிந்து சொல்வார்கள். அதிர்ஷ்டம் இவர்களை தேடி வரும். இவர்கள் காதலில் கவுரவம் நிரம்பி இருக்கும். அதிகப்படியாக உறவுகளிலேயே திருமணம் நடக்கும். பாரம்பரியத்தை கட்டிக்காப்பதில் வல்லவர்கள். தங்கள் குல கவுரவத்திற்கு ஒத்துவராத காதலில் ஈடுபடுவது இல்லை. குடும்ப சொத்து வெளியில் சென்று விடக்கூடாது என்று குடும்பத்திற்குள்ளேயே திருமணம் நடத்துபவர்களுக்கும் லக்னாதிபதி 5-ம் அதிபதி சம்பந்தம் உண்டு. லக்னாதிபதி ஐந்தில் இருந்தால் ஜாதகர் காதலை தேடிச் செல்வார். ஐந்தாம் அதிபத்தில் லக்னத்தில் இருந்தால் காதல் ஜாதகரை தேடி வரும்.

    காதல் வெற்றி தரும் கிரக சம்பந்தம்

    ஐந்தாம் அதிபதி ஏழில் இருந்தால் வெற்றி, செல்வம் இரண்டிற்கும் இவர்களே அதிபதிகள். குறைந்தது 2 முறை காதல் வரும். நம்பிக்கையானவர்கள் மேல் மட்டுமே காதல் வரும். காதல் நினைவுகள் பல வருடங்களுக்கு ஆறாத வடுவாக மனதில் இருக்கும். காதல் திருமணம் நடக்கும் அல்லது நெருங்கிய ரத்த பந்த உறவில் திருமணம் நடக்கும். தம்பதிகளுக்குள் மகிழ்ச்சி அதிகமாக இருக்கும். ஈருடலும் ஓர் உயிருமாக வாழ்வார்கள். வாழ்நாள் முழுவதும் தம்பதிகள் காதலர்களாகவே வாழ்வார்கள். தம்பதிகள் விட்டுக் கொடுத்து வாழ்வதில் ஆர்வம் அதிகம். இரண்டாவது குழந்தை பிறந்த பிறகு வாழ்க்கையில் மிகப்பெரிய வளர்ச்சி உண்டாகும்.

    மனைவி வந்த பிறகு அதிர்ஷ்டம் கூடும். 5, 7ம் அதிபதிக்கு அசுப கிரக சம்பந்தம் இல்லாத வரை எந்த தொந்தரவும் இருக்காது. பால்ய வயது முதல் முதிய காலம் வரை நண்பர்களுக்குள் பரஸ்பர அன்பு நீடிக்கும். நல்ல வசதியான சமுதாய அந்தஸ்து நிறைந்த சம்பந்தம் கிடைக்கும். இதற்கு அசுப கிரக சம்பந்தம் இருந்தால் எளிதாக பிரிவினை உண்டாகும். சனி, செவ்வாய் தொடர்பு இருந்தால் இரண்டாம் திருமணம் நடக்கும். நண்பர்கள், கூட்டாளிகள் குறுகிய காலத்தில் பயனற்று போவார்கள். சமுதாய அந்தஸ்து நிறைந்த சம்பந்தியாக வெளித்தோற்றம் மட்டுமே இருக்கும். சம்பந்தம் என்ற பெயரில் ஏமாற்றி பணம் பறிப்பார்கள்.

    காதல் திருமணம் நல்லதா?

    காதல் திருமணங்களுக்கு ஒருவரின் ஜாதகத்தில் உள்ள கிரக நிலைகளே முக்கிய காரணமாகும். இந்தக் கிரக நிலைகள் அமைவதற்கு அவரவர் பூர்வ ஜென்ம கர்மவினையே காரணமாகும். சுக்கிரன். புதன், சனி, ராகு, கேது ஏழாம், ஒன்பதாம் அதிபதி ஆகியோரின் சேர்க்கை, பார்வை காதல் கலப்பு திருமணங்கள் நடக்கத் தூண்டுகின்றன. ஏழரை சனி, கண்டச்சனி, அஷ்டம சனி, அர்த்தாஷ்டமச் சனி காலங்களில் வீட்டைவிட்டு வெளியேறி ரகசிய திருமணம் நடத்துகிறார்கள். பெரியோர்கள் சம்மதம் ஆசிர்வாதம் இன்றி செய்யப்படும் ரகசிய திருமணங்கள் ஜாதகரின் வாழ்க்கையை நிர்மூலப்படுத்துகிறது. ஒரு திருமணம் நிச்சயமாக பெற்றோர்கள் பெரியோர்கள் முன்னோர்கள் குலதெய்வத்தின் ஆசியுடனே நடக்க வேண்டும்.

    செல்: 98652 20406

    • உணவில் தயிர் கடைசியாக இருக்கட்டும்.
    • சியா விதைகள் மத்திய அமெரிக்காவில் தோன்றிய ஒரு சிறிய விதை.

    இன்றைய உணவு பழக்கங்களில் ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு ஆளிவிதை எனப்படும் பிளாக்ஸ் விதைகளை மனிதனுக்கு கிடைத்த அதிர்ஷ்டங்களில் ஒன்று எனலாம். இது ஆரோக்கியத்தின் புதையல்.

    * இருதய ஆரோக்கியத்திற்கு மிகச் சிறந்தது. இதிலுள்ள ஒமேகா 3 கெட்ட கொலஸ்டிராலை குறைக்கும். இருதய நோய்கள் பாதிப்பு வெகுவாய் குறையும். சைவ உணவு எடுத்துக் கொள்பவர்களுக்கு ஒமேகா 3 ஆளி விதை மூலம் எளிதில் கிடைக்கும்.

    * நார் சத்து மிகுந்தது. எனவே மலச்சிக்கல் இருக்காது. குடல் ஆரோக்கியமாய் சுத்தமாக இருக்கும்.

    * பிராஸ்டேட், மார்பக புற்றுநோய் அபாயத்தினைக் குறைக்கும்.

    * வயிறு நார்சத்து மூலம் நிறைவு கொள்வதால் எடை குறைப்புக்கு உதவும்.

    * தொடர்ந்து உட்கொள்ளும் பொழுது முடிகொட்டுவது நிற்கும். சரும பொலிவு கூடும்.

    ஆளிவிதை எடுத்துக் கொள்ளும் முறை:

    * இதனை அப்படியே உட்கொண்டால் செரிமானம் இன்றி அப்படியே வெளியேறி விடும்.

    * இதனை லேசாக வறுத்து பொடி செய்து வைத்துக் கொள்ள வேண்டும். தினமும் ஒரு டேபிள் ஸ்பூன் அளவு பயன்படுத்தலாம். மோர், சூப், பருப்பு இப்படி எதிலும் கலந்து எடுத்துக் கொள்ளலாம்.

    சில முக்கிய குறிப்புகள்:

    * அதிக நார்சத்து கொண்டது என்பதால் தண்ணீர் நன்கு குடிக்க வேண்டும். நாள்முழுவதும் நன்கு நீர் குடிக்க வேண்டும். இல்லையெனில் வயிற்று வலி ஏற்படும்.

    * கர்ப்ப காலத்தில் மருத்துவர் அறிவுரை பெற்றே இதனை எடுத்துக் கொள்ள வேண்டும். நிறைந்த பலன் கொண்ட ஆளி விதையினை உணவில் சேர்த்து ஆரோக்கியத்தினை மேம்படுத்துவோம்.

    * வயிறு உப்பிசம் நீங்க- சர்க்கரை சீஸ், சோடா, க்ளூெடன் தவிர்க்க வேண்டும்.

    * 2 லிட்டர் நீர் அன்றாடம் அவசியம், இஞ்சி, சியா விதை, அன்னாசி, சோம்பு, வெள்ளரி இவைகளை உணவில் சேர்க்க வேண்டும்.

    கலோரி சத்தில் மாற்றம்: (100 கிராம் அளவு)

    * வேக வைத்த சோளம் 96, கார்ன்பிளாக்ஸ் 285, வெண்ணெய் சேர்த்த பாப்கார்ன் 494.

    * வேக வைத்த உருளை 91, பிரெஞ்ச் பிரை 214 உருளை சிப்ஸ் 510

    * வாழைக்காய் 97, வாழைப்பழம் 116, வாழைக்காய் நேந்திரம் சிப்ஸ் சுமார் 450

    கமலி ஸ்ரீபால்

     

    * வாழைப்பழத்தினை வெறும் வயிற்றில் காலையில் சாப்பிட வேண்டாம். மக்னீசியம், கால்சியம் இவற்றில் பாதிப்பு ஏற்படலாம்.

    * காலையில் வெறும் வயிற்றில் பால் குடிப்பது மந்தமாக உணரக் கூடும்.

    * இரவில் கொட்டை வகை உணவு தூக்கத்தினை தொந்தரவு செய்யலாம்.

    * காலையில் வெறும் வயிற்றில் காபி, டீ குடிப்பது படபடப்பினை ஏற்படுத்தும்.

    * இரவில் அரிசி உணவு கொழுப்பு சத்தினைக் கூட்டும்.

    * வெறும் வயிற்றில் ஆரஞ்சு பழம் ஜுஸ் நெஞ்சு எரிச்சலை ஏற்படுத்தும்.

    * உணவில் தயிர் கடைசியாக இருக்கட்டும்.

    * கிரீன் டீ: சில ஆய்வுகள் கூறும் கருத்துக்கள் கிரீன் டீ எடையை குறைக்கும்.

    கல்லீரல் பாதிப்பு குறைய, சர்க்கரை நோய் பிரிவு 2 குறைய, மறதி நோய் பாதிப்பு குறைய கூட உதவுகின்றன என்பதுதான். மேலும் கூடுதல் ஆய்வுகள் கிரீன் டீ பற்றி தேவைப்பட்டாலும் சில நீண்ட கால உறுதியான பலன்களும் கூறப்படுகிறது.

    * புற்றுநோய் அபாயத்தினைக் குறைக்கும். இருதய ஆரோக்கியத்திற்கு நல்லது. கவனிக்கும் கூர்மை திறன் கூடும். மறதிநோய் பாதிப்பு அபாயம் குறையும். கெட்ட கொழுப்பு குறையும். எடை குறையும்.

    * வீக்கங்களை குறைக்கும். ஆகவே தினமும் இருவேளை கிரீன் டீ குடிக்கலாமே.

    * மனித உறுப்புகளுக்கு பிடித்த உணவு

    மூளைக்கு ஒமேகா 3 மிகவும் பிடிக்கும். ஞாபக சக்தி, கற்கும் திறன் இவையெல்லாம் ஒமேகா 3விடம் இருந்து நன்கு கிடைக்கும். கண் பாதுகாப்பிற்கு மிக அவசியமானது. மனநிலை நன்கு இருக்கும்.

    * இரவில் சிலர் 10 மணிக்கு மேல்தான் சாப்பிடுவார்கள். இவர்களுக்கு எடை எளிதில் கூடும். இருதய பாதிப்பு ஏற்படும். தூக்கம் இருக்காது. சர்க்கரை நோய் பாதிப்பு ஏற்படும் அபாயம் கூடும்.

    * போதுமான அளவு (சுமார் 2 லி) அன்றாடம் நீர் குடிக்காதவர்களுக்கு அடர்ந்த சிறுநீர், வறண்ட உதடுகள், தலைவலி, சதை பிடிப்பு, வறண்ட சருமம், தலைசுற்றல், மலச்சிக்கல், சோர்வு, சோர்ந்து உள்வாங்கிய கண் ஆகிய பாதிப்புகள் இருக்கும்.

    * சியா விதைகள்: சியா விதைகள் மத்திய அமெரிக்காவில் தோன்றிய ஒரு சிறிய விதை. அளவில் சிறியதாக இருந்தாலும் ஊட்டச்சத்து அடர்த்தி மிக அதிகம் கொண்டதால் இதனை உயர்ந்த உணவு என்று அழைக்கின்றனர். நம் நாட்டு உணவு முறைகளில் இதனை எளிதாக சேர்த்துக் கொள்ள முடியும்.

    சியா விதைகளின் நன்மைகள்:

    * நார்சத்து அதிகம். சியா விதைகளில் கரையக்கூடிய, கரையாத நார்சத்து அதிகமாக உள்ளது. இதனால் மலச்சிக்கல் குறைய உதவும். குடல் இயக்கத்தை சீராக்கும். நீண்ட நேரம் பசியை கட்டுப்படுத்த உதவும். இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும். சியா விதைகள் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்தவை. இதனால் கெட்ட கொழுப்பு குறைய உதவும். ரத்த அழுத்தம் சீராக பராமரிக்க உதவும். இதய நோய்களின் அபாய்த்தினைக் குறைக்கும். சர்க்கரை நோயாளிகளுக்கு பயனுள்ளது. உணவுக்குப் பிறகு ரத்த சர்க்கரை திடீரென உயர்வதை தடுக்க உதவும். எலும்பு மற்றும் பல் ஆரோக்கியம் கூடும். சியா விதைகளில் கால்சியம், பாஸ்பரஸ், மக்னீசியம் அதிகமாக உள்ளதால் எலும்பு உறுதி மற்றும் பல் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. உடல் எடை கட்டுப்பாட்டிற்கு உதவும்.

    * சியா விதைகள் தண்ணீரில் ஊறும் பொழுது ஜெல் போல் உறைகின்றன. விரிவடைகின்றன. இதனால் வயிற்றை நிறைவாக உணரச் செய்யும். அதிகமாக உண்பதை குறைக்கும். எடை குறைப்பு முயற்சிகளில் உதவியாக இருக்கும்.

    * சியா விதைகள் ஆன்டி ஆக்சிடென்ட் பண்புகள் கொண்டவை. இதனால் செல்கள் சேதமடைவதை தடுக்க முதிர்வை தாமதப்படுத்த உதவுகின்றன.

    தினசரி சியா விதைகளை பயன்படுத்தும் முறைகள்:-

    * ஒரு டீஸ்பூன் சியா விதைகளை மெலிதான வடிகட்டி மூலம் நன்கு கழுவி ஒரு கப் தண்ணீரில் இரவு முழுவதும் ஊற வைக்கவும். காலை வெறும் வயிற்றில் அப்படியே பருகலாம்.

    * பால் (அ) தயிரில் கலந்து ஊற வைத்து காலை அல்லது இரவு உணவாக எடுத்துக் கொள்ளலாம்.

    * பழச்சாறு: ஆப்பிள், பப்பாயா, வாழைப்பழம் போன்ற பழசாறுகளில் ஊறிய சியா விதையினை கலந்து பருகலாம்.

    * ஓட்ஸ், கஞ்சி, இட்லி மாவு தயாரிக்கும் போது ஊற வைத்த விதைகளை கலந்து எடுத்துக் கொள்ளலாம்.

    * சாலட், சூப் இவற்றில் சேர்க்கலாம்.

    * ஒரு நாளைக்கு 1 அல்லது 2 ஸ்பூன் விதைகள் போதுமானது. உலர்ந்த விதைகளை நேரடியாக சாப்பிடக் கூடாது. ஊற வைத்து எடுத்துக் கொள்வதே சிறந்தது.

    * குடல் பிரச்சினை உள்ளவர்கள் மருத்துவர் ஆலோசனையுடன் சிறிய அளவில் ஆரம்பிக்க வேண்டும்.

    * தைராய்டு, ரத்த அழுத்தம் பிரச்சினை இருந்தால் மருத்துவர் ஆலோசனை பெற்று எடுத்துக் கொள்ள வேண்டும்.

    மூத்த வயதில் தசை இழப்பை தவிர்ப்பது எப்படி?

    மனித வாழ்வில் இயல்பான ஒரு பகுதிதான் முதுமை. இக்காலத்தில் உடலில் பல மாறுதல்கள் ஏற்படும். தசை அளவு குறையும். நடப்பதில் சிரமம், விழுந்து காயம் ஏற்படும் சுய நம்பிக்கை குறையும். இப்படி பல பிரச்சினைகள் ஏற்படும் இதனை தவிர்க்க (அ) குறைக்க போதுமான புரதச்சத்து அவசியம். உடல் எடைக்கு ஏற்ற புரதம் தேவை.

    * பால், தயிர், மோர், பருப்பு வகைகள், கொட்டை வகைகள், அசைவ வகைகள் உண்பவர்கள் முட்டை, மீன் எடுத்துக் கொள்ளலாம்.

    * சோயா மற்றும் அதன் தயாரிப்புகளை எடுத்துக் கொள்ளலாம்.

    * தசை வலுப்படுத்தும் பயிற்சிகளை பயிற்சியாளர் வயது, உடல் நலத்திற்கேற்ப சொல்லித் தருவார். அவைகளை செய்ய வேண்டும். மெதுவான உடற்பயிற்சி, லேசான எடைப்பயிற்சி செய்யலாம்.

    * வைட்டமின் டி, கால்சியம் மாத்திரைகளை மருத்துவர் ஆலோசனை பெற்று எடுத்துக் கொள்ளலாம். உடல் இயக்கமற்று இருப்பதை தவிர்க்க வேண்டும். நீண்ட நேரம் படுத்திருப்பது, உட்கார்ந்திருப்பது போன்றவை தசை இழப்பினை ஏற்படுத்தும். வீட்டு வேலைகள், தோட்டப்பணி போன்றவை தசைகளை செயல்பட வைக்கும்.

    * சர்க்கரை நோய், தைராய்டு, சிறுநீரக நோய் இவை தசை இழப்பை அதிகரிக்கும் என்பதால் சரியான கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும். மன அழுத்தம், தூக்கமின்மை போன்றவை ஹார்மோன் மாற்றங்களை ஏற்படுத்தி தசை இழப்பைத் தூண்டும். மன அமைதி, முறையான தூக்கம் இவை இரண்டுமே ஆரோக்கியத்தின் அடிப்படை ஆகும்.

    உணர வேண்டிய சில உண்மைகள்:

    * காலம் பணத்தை விடவும் கூட முக்கியமானது. (அனைவரும் அறிந்ததுதான்). ஆரோக்கியமே அனைத்து வெற்றிகளுக்கும் ஆதாரம். அதனால்தான் இத்தனை மருத்துவ கட்டுரைகள், மருத்துவர் பேட்டிகள் தொடர்ந்து வெளியாகின்றன. கவலைப்படும் அனைத்தும் அநேகமாக நடப்பதேயில்லை. உறவுகள் அதிக முக்கியத்துவம் பெறுகின்றன. கருணை, அன்பு மிக அவசியம். பிறருக்காக வாழ வேண்டாம். எளிமையான வாழ்க்கையே அமைதி.

    • மேஷ லக்னத்திற்கு 10,11-ம் அதிபதியான சனி பகவான் ராசிக்கு ஏழாம் இடமான களத்திர ஸ்தானத்தில் உச்சம் பெறுவார்.
    • விருச்சிக லக்னத்திற்கு 3,4ம் அதிபதியான சனிபகவான் 12ம்மிடமான விரய ஸ்தானத்தில் உச்சம் பெறுவார்.

    சாதாரண மனிதனை சாதனை மனிதனாக மாற்றும் சக்தி படைத்தவர் சனிபகவான். ஆணவம் அகம்பாவம் கொண்டவர்களை வீழ்த்துவதும் சனிபகவான். அதனால் தான் நமது முன்னோர்கள் சனியை போல் கொடுப்பவருமில்லை கெடுப்பவரும் இல்லை என்று சொல்லி வைத்தார்கள். எப்பொழுதும் எளிமையாக நிதானமாக நடந்து கொள்பவர்களை சனி பகவான் உயர்த்திக்கொண்டே செல்வார். அவர்களுக்கு சமுதாயத்தில் நல்ல மதிப்பு மரியாதை இருக்கும். ஒருவருக்கு நிலையான நிரந்தரமான தொழில் உத்தியோகம் உள்ளது என்றால் அவர் ஜாதகத்தில் சனி பகவான் நல்ல வளமான நிலையில் உள்ளார் என்று பொருள். அடிப்படை தேவைக்கு கூட கஷ்டப்படுபவர்கள் அடிமட்ட தொழில் செய்பவர்களுக்கு சனி பகவான் பலவீனமாக உள்ளார் என்று பொருள். ஒரு ஜாதகத்தில் சனி பகவான் ஏற்படக்கூடிய தாக்கம் நல்லதாகவோ கெட்டதாகவோ இருக்கும். அது அவரவர்களின் பூர்வ புண்ணிய ஸ்தானத்தை பொருத்து அமையும்.

    இந்த ஜென்மத்தில் ஜாதகர் என்ன அனுபவிக்க பிறந்திருக்கிறாரோ அதை விதிப்படி நடத்துபவர் சனி பகவான். ஒருவர் எந்த மனத்தாங்களும் இன்றி நன்றாக இருக்கிறார் என்றால் அவருடைய சுய ஜாதகத்திலும் சனி கிரகத்தின் பங்களிப்பு சாதகமாக உள்ளது என்று பொருள். யாராக இருந்தாலும் ஏதாவது ஒரு காலகட்டத்தில் சிறு சிறு மனவேதனை படக்கூடிய சம்பவங்கள் நடந்து தீரும். இத்தகைய சிறப்பு பெற்ற சனிபகவான் துலாம் ராசியில் 20 டிகிரியில் சுவாதி நட்சத்திரத்தில் உச்சம் அடைகிறார். ஏழையாக இருந்த ஒருவன் பணக்காரனாக மாறும்போது தனது பழைய நிலையை மறந்து விடுவான் அதை மறக்காமல் நினைவில் நிறுத்தி வாழ்க்கையை வாழ வேண்டும் என்ற தத்துவத்தை உணர்த்தவே சனி பகவான் துலாம் ராசியில் ராகுவின் சுவாதி நட்சத்திரத்தில் உச்சம் ஆகிறார்.

    சனிபகவான் உச்சம் அடையும் சுவாதி நட்சத்திரத்தில் புதிய தொழில் தொடங்கலாம் வேலைக்கு விண்ணப்பிக்கலாம் தொழில் உத்தியோகம் சம்பந்தமான அனைத்து முடிவுகளையும் எடுக்கலாம். இன்றைய நட்சத்திர நாளில் அரசு அரசாங்கம் சம்பந்தப்பட்ட எந்த செயல்களிலும் ஈடுபடக் கூடாது யாருக்கும் ஜாமீன் போடக்கூடாது. குழந்தை பாக்கியத்தில் குறை இருப்பவர்கள் திருமணமாகி பல வருடமாக குழந்தை இல்லாத தம்பதிகள் சுவாதி நட்சத்திர நாளில் பழகினால் கரு உண்டாகும்.

    திருமணம், புத்திர பாக்கிய தடை இருப்பவர்கள் இந்த நட்சத்திரநாளில் சிவபெருமானை வழிபட்டால் களத்திர தோஷம், புத்திர தோஷம் நீங்கும். கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டை மறந்து யார் செயல்படுகிறார்களோ அவர்களை சனிபகவான் தண்டிக்க தவற மாட்டார். இத்தகைய சிறப்புமிக்க சனி பகவான் 12 லக்னத்திற்கும் உச்சம் பெறுவதால் உண்டாகும் பலன்களை பார்க்கலாம்.

    மேஷ லக்னத்திற்கு 10,11-ம் அதிபதியான சனி பகவான் ராசிக்கு ஏழாம் இடமான களத்திர ஸ்தானத்தில் உச்சம் பெறுவார். அவரே பாதகாதிபதி என்பதால் சிலருக்கு நண்பர்கள் தொழில் கூட்டாளிகளால் ஆதாயமும் இருக்கும் பாதகமும் இருக்கும். யாரை முழுமையாக நம்புகிறார்களோ அவர்களே இவர்களின் வீழ்ச்சிக்கு காரணமாக இருப்பார்கள். இந்த அமைப்பு உள்ளவர்கள் பெரும்பான்மையாக இரண்டு திருமணத்தை சந்திக்கிறார்கள். இரண்டாவது திருமணம் நடந்த பிறகு தொழில் உத்தியோகத்தில் நிலையான நிரந்தரமான முன்னேற்றம் ஏற்படுகிறது. ஒன்றுக்கு மேற்பட்ட தொழில் மூலமாக வருமானம் மற்றும் சொத்துக்கள் சேர்க்கை உண்டு.

    ரிஷப லக்னத்திற்கு 9,10-ம் அதிபதியான சனி பகவான் ஆறாம் இடமான ருண ரோக சத்ரு ஸ்தானத்தில் சனி பகவான் உச்சம் பெறுவார். பாக்யாதிபதி ஆறில் உச்சம் பெறுவதால் எளிதில் பிள்ளைகளுக்கு திருமணம் முடித்து பேரப்பிள்ளைகளை பார்க்க முடியாது அல்லது தந்தை நோயாளியாக கடனாளியாக இருப்பார். தந்தையின் பாரத்தை ஜாதகர் சுமப்பார். அல்லது தந்தைக்கு வைத்தியம் செய்து ஜாதகர் கடனாளியாக மாறுவார். இவரே பாதகாதிபதியாக ஆறாம் இடத்தில் உச்சம் பெறுவதால் கடன் நோய் சார்ந்த பாதிப்புகள் ஜாதகருக்கு அதிகமாக இருக்கும்.

    'பிரசன்ன ஜோதிடர்' ஐ.ஆனந்தி

     

    அல்லது அதிகமாக கடன் பெற்று சொந்த தொழில் செய்து அதில் நஷ்டத்தை சந்திப்பார்கள். பொதுவாக ஆறில் உச்ச கிரகம் இருப்பது நல்லதல்ல. சனிபகவானுக்கு வீடு கொடுத்த சுக்கிரன் உச்சம் என்றால் ஜாதகருக்கு நிச்சயமாக மீள முடியாத வழக்கும் உண்டாகும்.

    மிதுன லக்னத்திற்கு 8,9-ம் அதிபதியான சனி பகவான் ஐந்தில் உச்சம் பெறுவதால் பூர்வீகம், குலதெய்வம், அதிர்ஷ்டம், காதல் சார்ந்த விஷயங்களால் ஜாதகருக்கு வழக்கு வரலாம். குழந்தையின்மை, அபார்ஷன். அவப்பெயர், அவமானம். மன நிம்மதி இன்மை. முடிவெடுக்கும் திறன் இன்மை, உயில் சொத்து, பாலிசி பணம் ஏற்படும். பெரும் நஷ்டம், தற்கொலை எண்ணங்கள், வறுமை ஏற்படும். எவ்வளவு பாக்கிய பலன்கள் இருந்தாலும் அவை ஒரு மன சங்கடமும் இல்லாமல் அனுபவிக்க முடியாது. ஜாதகரின் தந்தைக்கு அறுவை சிகிச்சை உண்டு. தந்தை வழியில் துர்மரணம் நடந்திருக்கும். எவ்வளவு பிரச்சினை இருந்தாலும் அதிலிருந்து எளிமையாக மீண்டு வருவார்கள். சிலருக்கு மத நம்பிக்கை குறைவுபடும் அல்லது வேற்று மத வழிபாட்டில் ஆர்வம் செலுத்துவார்கள்.

    கடக லக்னத்திற்கு 7, 8-ம் அதிபதியான சனிபகவான் 4-ம்மிடமான சுகஸ்தானத்தில் உச்சம் பெறும்போது திருமணத்திற்கு பிறகு நல்ல பொருளாதாரம் கிடைக்கும். வாழ்க்கை துணை வசதியானவராக இருப்பார். இரண்டாவது குழந்தை பிறந்த பிறகு பொருளாதார மேன்மை மிகுதியாக இருக்கும். தாயாரால் சொத்து வழக்கு வரலாம். தொழில் கூட்டாளி பிரச்சினை, நண்பர்களால் வம்பு, வழக்கு, திருமண வாழ்வில் பிரிவு, தீயவருடன் இணைந்திருக்கும் நிலை ஏற்படலாம். விபத்து நடக்கலாம். விவசாயிகள் கால்நடை வளர்ப்பவர்கள். பண்ணையாளர்கள் சுய ஜாதகம் அறிந்து தொழிலில் ஈடுபட வேண்டும். சில மாணவர்களுக்கு கல்வியில் தடை தாமதங்கள் வரலாம்.

    சிம்ம லக்னத்திற்கு 6,7-ம் அதிபதியான சனி பகவான் மூன்றாம் இடமான வெற்றி ஸ்தானத்தில் உச்சம் பெறுவார். வாழ்க்கைத் துணை கடனாளியாக அல்லது நோயாளியாக இருப்பார். ஜாமீன் சார்ந்த பிரச்சினைகளால் அவதி உண்டு. இளைய உடன்பிறந்த சகோதரன் தனது கடனை ஜாதகரின் மேல் திருப்பி விடுவார். முக்கிய ஆவணங்களை கவனமாக கையாள வேண்டும். தனிமையில் தவிப்பர். ஆறுதலாய் இருக்க முன் வருபவரையும் நோகடித்து விலக்குவர். அடிக்கடி வீடு மாற்றம், வேலை மாற்றம், ஊர் மாற்றம் செய்ய வேண்டிய நிலை இருக்கும். சொத்துக்களுக்கு முறையான ஆவணம் இருக்காது. முதல் திருமண பிரிவினையை தரக்கூடிய வாய்ப்புகள் உண்டு.

    கன்னியா லக்னத்திற்கு 5,6-ம் அதிபதியான சனிபகவான் தனம் வாக்கு குடும்பஸ்தானத்தில் உச்சம் பெறுவார். பிள்ளை பிறந்த பிறகு ஜாதகர் பூர்வீகத்தை விட்டு வெளியேறுவார். சரியாக உண்ண முடியாத, தூங்க முடியாத நோய் பாதிப்பு ஏற்படலாம். பெற்ற பிள்ளைகளுக்காக கடன்படுவார். பூர்விக சொத்தால் வம்பு, வழக்கு, கடன் நோய் சார்ந்த பாதிப்புகள் ஏற்படும். ஜாதகர் மருத்துவ குணம் நிறைந்தவர். இவர்களின் கை ராசி மருந்து சாப்பிட்டவர்களுக்கு நோய் எளிதில் குணமாகும் கைராசி மருத்துவர் என்று பெயரும் கிடைக்கும். முன்னோர்களின் பரம்பரை வியாதிகள் ஜாதகரே ஆட்டுவிக்கும்.

    துலாம் லக்னத்திற்கு 4,5-ம் அதிபதியான சனிபகவான் லக்னத்தில் உச்சம் பெறுவார். 12 லக்னங்களில் அதிக நன்மையை பெறுபவர்கள் துலாம் லக்னத்தினர் என்றால் அது மிகைப்படுத்தல் ஆகாது. பூர்வ புண்ணியம் மிகுந்தவர். வாழ்நாள் முழுவதும் புகழ் அந்தஸ்து உடன் வரும். குல தெய்வமே குழந்தையாக பிறக்கும். பிள்ளைகள் குல கவுரவத்தை காப்பாற்றுவார்கள். அறிவாளியாக புத்திக் கூர்மையுடன் இருப்பார்கள்.

    குல தெய்வ அருள் உண்டு. குல தெய்வ கோவில் நிர்வாகிகள் அல்லது கவுரவ பதவியில் இருப்பார்கள். அரசாங்க பதவி, அரச உத்தியோகம் உண்டு. சிறப்பான வீடு, வாகன யோகம் உள்ளவர்கள். பூர்வீகச் சொத்தை பல தலைமுறையினர் பயன்படுத்துவார்கள். சிலர் அதிர்ஷ்ட வசத்தால் தீடீர் பணக்காரர்களாக மாறுவார்கள்.

    விருச்சிக லக்னத்திற்கு 3,4ம் அதிபதியான சனிபகவான் 12ம்மிடமான விரய ஸ்தானத்தில் உச்சம் பெறுவார். கல்வியில் மேன்மை இருக்காது. வெளியூர் வெளிநாட்டில் கல்வி கற்பார்கள். சொத்துக்களை உடன் பிறப்புக்காக விரயம் செய்வார்கள். முயற்சியில் தோல்வி, சகோதர இழப்பு, சகோதர சச்சரவு, தூக்கமின்மை ஏற்படும். செல்வ நிலையும் சீராக இருக்காது. சோம்பேறித்தனம், பயந்த குணம் போன்ற பலன்கள் ஏற்பட்டு ஜாதகர் எந்த முயற்சியும் செய்யாமல் மனோபலமும் குறைந்தவராக இருப்பார்கள். தகுந்த நிரந்தர, தொழில் உத்தியோகம் அமையாது. சிலர் உடன் பிறப்பிற்காக, குடும்பத்திற்காக மாடாக உழைத்தும் கெட்ட பெயர் எடுப்பார்கள். பிழைக்க தெரியாத ஏமாளிகள்.

    தனுசு லக்னத்திற்கு 2,3-ம் அதிபதியான சனி பகவான் லாப ஸ்தானத்தில் உச்சம் அடைவார் துலாம் லக்னத்திற்கு அடுத்த படியாக உச்ச சனியால் அதிக சுப பலன்களை அடைபவர்கள் தனுசு ராசியினர் என்றால் அது மிகைப்படுத்தல் ஆகாது. நினைத்ததை சாதிக்கும் எண்ணம் உண்டாகும். வட்டித் தொழில், வாக்குத் தொழில், கமிஷன் தொழிலில் லாபம் பெறுவார்கள். மூத்த சகோதர ஆதாயமும் உண்டு. பாக்கியவான். நல்ல குணம் உள்ளவர். மக்கள் மத்தியில் செல்வாக்கு உள்ளவர். ஆத்ம சக்தி உள்ளவர். லாபம் இல்லாத செயல்களில் ஈடுபடமாட்டார்கள்.

    அமைச்சர் பதவிக்கு நிகரான பதவி வகிப்பவர். வீடு, வாகனம் என சகல ஐஸ்வர்யங்களும் உண்டு. இரண்டு குடும்பம் உண்டு. இரண்டாவது திருமணத்திற்குப் பிறகு உயர்வு உண்டு.

    மகர லக்னத்திற்கு ராசி அதிபதி மட்டும் தன லாப அதிபதியான சனி பகவான் பத்தாம் இடமான தொழில் ஸ்தானத்தில் உச்சம் பெறுவார். ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு தொழில் வாய்ப்பு வழங்குபவர்கள். தனது வாக்கு திறமையால் குடும்பத்தை காப்பாற்றுவதில் வல்லவன். பதவி, புகழ் அந்தஸ்து எளிதாக தேடி வரும். நிர்வாகத் திறமை உண்டு. அரசியல், அரசு சார்ந்த செயல்களில் தனித் திறமையுடன் பிரகாசிப்பார்கள்.

    பேச்சை மூலதனமாக கொண்ட தொழிலில் வல்லவர்கள். உற்றார் உறவினர் என பந்துக்களோடு வாழ்பவர்கள். தனது புத்தி சாதுர்யத்தால் பிறரை நல்வலிப்படுத்துவார்கள். பரம்பரையாக அரசு வேலை அல்லது அரசு பதவியில் இருப்பார்கள்.

    கும்ப லக்னத்திற்கு ராசி அதிபதி மற்றும் விரயாதிபதியான சனி பகவான் 9-ம்மிடமான பாக்கிய ஸ்தானத்தில் உச்சம் அடைவார். தந்தையின் தொழிலை செய்து பூர்வீகத்தில் பிழைப்பு நடத்துவார்கள். ஊரில் பெயர் சொன்னால் தெரியக்கூடிய வம்சத்தினராக இருப்பார்கள். நன்மக்கட்பேறு உண்டாகும். அதிர்ஷ்ட தேவதை இவர்களுக்கு வசப்படுவாள். தொட்டது துலங்கும். குல தெய்வ கோவில் நிர்வாகிகள். வம்சா வழியாக பூர்வீகச் சொத்தை அனுபவிக்கும் பாக்கியம் பெற்றவர்கள். சுகமான இல்வாழ்க்கை உண்டு. அரசாங்க பணி உண்டு.

    அரசியலில் புகழ், பெயர், கவுரவம் உண்டு. முன்னோர்கள் கல்வி நிறுவனம் நடத்தியவர்கள் அல்லது ஜாதகர் கல்வி நிறுவனங்கள் நடத்துவார்.

    மீன லக்னத்திற்கு லாப அதிபதி மற்றும் விரயாதிபதியான சனி பகவான் அஷ்டம ஸ்தானத்தில் உச்சம் பெறுவார். சொந்த மண்ணை விட்டு சென்று வெளியூர், வெளிநாட்டில் பிழைப்பு நடத்தி புகழ் பெறுவார்கள். அஷ்டமாதிபதி சுக்ரன் பலம் பெற்றால் விபரீத ராஜயோகம் உண்டாகும்.

    மூத்த சகோதரத்துக்கு கண்டம். மூத்த சகோதரத்துகளால் பொருள் இழப்பு ஏற்படும். லக்னாதிபதி குரு பலம் குறைந்தால் ஆயுள் பங்கம் ஏற்படும். வாழ்வு நாள் முழுவதும் ஏதாவது பிரச்சினையில் சிக்கி தவிப்பார். நோய்கள், எதிரிகள் தொல்லை, கடன் தொல்லை தாங்க முடியாத அளவில் இருக்கும். வம்பு, வழக்கு, விபத்து ஏற்படும். மறைமுக வருமானம் உண்டு. பொதுவாக சனிபகவான் வினைப்பதிவை மிகைப்படுத்தும் கிரகம் என்பதால் மிதமான பலத்துடன் இருப்பது நல்லது.

    செல்: 98652 20406

    • கல்லீரல் பாதிப்பினால் மஞ்சள் காமாலை-தோல், நகம், கண்கள் மஞ்சளாக இருக்கும்.
    • மது அருந்துவதை தவிர்ப்பது சிரோசிஸ் பாதிப்பினை வெகுவாய் குறைக்கும்.

    இன்று கல்லீரலுக்கென்றே சிறப்பு சிகிச்சை பிரிவுகள் நிறைய ஏற்படுத்தப்பட்டுள்ளன. காரணம் அந்த அளவிற்கு கல்லீரல் பாதிப்பு பரவலாகக் காணப்படுகின்றது.

    கல்லீரல் மனித உடலின் சக்தி மையம் என்று குறிப்பிட்டால் அது மிகையாகாது. உணவை செரிக்கும் முக்கியமான உறுப்புகளில் கல்லீரலும் ஒன்று. நச்சுகளை வெளியேற்றுகின்றது. ஹார்மோன்களை சமநிலைப்படுத்துகின்றது என 500-க்கும் மேற்பட்ட கல்லீரல் பணியினைச் சொல்லலாம்.

    கல்லீரல் சத்தமில்லாது உடல் பணியினைச் செய்கிறது.

    கல்லீரல் வயிற்றின் வலது பக்கத்தில் விலா எலும்புக்களுக்கு அடியில் அமைந்துள்ளது பெரிய உறுப்பு. இதனை பெரிய தொழிற்சாலை என்றே சொல்லலாம்.

    * பித்த நீரினை உற்பத்தி செய்கின்றது. ரத்தத்தில் நச்சுகளை நீக்குகின்றது. ரத்தம் உறைவதற்கான புரதங்களை உருவாக்குகின்றது. ஹார்மோன் அளவினை சீர்படுத்துகின்றது. ஊட்டசத்துகள், வைட்டமின்கள், தாதுக்கள், குளுகோசினை சேமிக்கின்றது.

     

    கமலி ஸ்ரீபால்

    இத்தகு கல்லீரல் பாதிக்கப்பட்டால் உடல் என்னாவது? பொதுவில் மது, வைரஸ் தொற்று ஏ. பி. சி, கொழுப்பு கல்லீரல் நோய், மருந்துகளின் பக்க விளைவுகள், மரபணு கோளாறுகள், தவறான உணவு பழக்கங்கள் இவை பாதிப்பிற்கு முக்கிய காரணம் ஆகின்றன.

    கல்லீரல் பாதிப்பினால் மஞ்சள் காமாலை-தோல், நகம், கண்கள் மஞ்சளாக இருக்கும். பிலிரூபின் ரத்தத்தில் அதிகமாக இருக்கும்.

    * வயிறு வலி, வீக்கம், வலது பக்க மேல் வயிற்றில் வலி, வீக்கம், கல்லீரல் வீக்கம் அல்லது திரவம் சேருவதால் ஏற்படும் பாதிப்பு.

    * அதிக சோர்வு, எப்போதும் பலவீனமாய் உணர்வது. எப்போதும் பலவீனமாக இருத்தல், கல்லீரல் ஆற்றல் உற்பத்தியை பாதிக்கின்றது.

    * அரிப்பு- விடாமல் உடலில் அரிப்பு, பித்த அமிலம் தோலில் சேருவதால் அரிப்பு ஏற்படுகின்றது.

    * அயர்ந்த சிறுநீர்- சிறுநீர் பழுப்பு நிறமாக இருக்கும். பிரிரூபின் சிறுநீரில் கலக்கின்ற காரணத்தினால் ஏற்படுகின்றது.

    * மன குழப்பம்- கவனக்குறைவு, மறதி இருக்கும், நச்சுகளின் பாதிப்பால் ஏற்படுகிறது.

    * பசியின்மை, எடை குறைதல்- ஊட்டச்சத்தினை உறிஞ்சுவதில் குறைபாடு.

    * எளிதில் சிராய்ப்பு ஏற்படும். ரத்தக்கசிவு, ரத்த போக்கு ஏற்படலாம், ரத்த உறைதல் குறைபாட்டால் ஏற்படுகின்றது.

    கல்லீரல் பிரச்சினை பிரிவுகள்

    * வைரஸ் தொற்றில் ஏ, பி, சி பிரிவுகள் உள்ளன. ஏ பிரிவு அசுத்தமான உணவு. நீரால் பரவுகின்றது. மஞ்சள் காமாலை, வயிற்றுப் பிரட்டல் ஆகியவை இருக்கும்.

    * வைரஸ் பி, சி பிரிவு ரத்தம், உடல் திரவங்கள் மூலம் பரவலாம். முதலில் அறிகுறிகள் கூட காட்டாமல் இருக்கலாம். ஆனால் இவை கல்லீரல் புற்றுநோய் பாதிப்பு வரைக் கூட ஏற்படுத்தலாம்.

    * கொழுப்பு கல்லீரல்- இது இரு பிரிவு படும். ஆல்கஹால் சார்ந்தது. அடுத்தது ஆல்கஹால் பழக்கம் இல்லாதவர்களுக்கு ஏற்படும் பாதிப்பு. இதற்கு நீரிழிவு நோய், உடல் பருமன், கொழுப்பு உணவு ஆகியவை காரணம் ஆகின்றன. வயிற்று வலி, சோர்வு ஆகிய வெளிப்பாடுகள் இருக்கும்.

    * சிரோசிஸ்- இது கல்லீரலில் வடுக்களை ஏற்படுத்துவது ஆகும். மது, வைரஸ், பிற நோய்கள் இதற்கு காரணமாக இருக்கலாம். வயிறு வீக்கம், கால் வீக்கம், குழம்பிய மனம் போன்றவை காணப்படும்.

    * கல்லீரல் புற்றுநோய்- இது கடுமையான ஆபத்தான நிலை. வைரஸ் பி, சி, சிரோசிஸ் இவை காரணமாக அமையலாம். எடை குறைந்து மெலிந்து இருப்பர், மஞ்சள் காமாலை, வயிற்று வலி பாதிப்பு இருக்கும்.

    * ஆட்டோ இம்யூன் கல்லீரல் நோய்கள்- உட லின் நோய் எதிர்ப்பு அமைப்பு கல்லீரலைத் தாக்குவதால் ஏற்படும் பாதிப்பாகும். எதனையும் ஆரம்ப காலத்தில் கண்ட றிந்து சிகிச்சை அளிப்பது நல்லது.

    * ரத்தப் பரிசோதனை, கல்லீரல் செயல்பாடு சோதனை, வைரஸ் சோதனை, பிலிரூபின் சோதனை ஆகியவை அவசியம்.

    * இமேஜிங்ஸ்கேன், அல்ட்ராசவுண்ட் பரிசோதனைகள் கல்லீரல் அளவு, வீக்கம், பாதிப்பு இவற்றினை அறிய உதவும்.

    * பயாபசி-புற்றுநோய் பாதிப்பினை உறுதி செய்யும் பரிசோதனை முறையாகும்.

    வரும்முன் தடுப்போம் மூலமாக கல்லீரலை எப்படி பாதுகாக்கலாம்?

    * மது அருந்துவதை தவிர்ப்பது சிரோசிஸ் பாதிப்பினை வெகுவாய் குறைக்கும்.

    * சத்தான உணவு- காய்கறிகள், பழங்கள், முழுதானியங்கள் போன்ற கொழுப்பு சத்து குறைந்த உணவுகள் ஆகியவைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். இது கல்லீரல் கொழுப்பு நோய் பாதிப்பினைத் தவிர்க்கும்.

    * சுத்தத்தினை கடை பிடித்தல். ரத்த பரிமாற்றம், தரமான ஊசிகள் போன்றவை அவசியம்.

    * உடற்பயிற்சி அவசியம். உடல் பருமன், சர்க்கரை கட்டுப்பாடு, இவற்றுக்கு உறுதுணையாய் இருக்கும்.

    * முறையான மருத்துவ பரிசோதனைகள் செய்து கொள்ள வேண்டும்.

    * வைரஸ் தடுப்பூசிகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

    * பச்சை காய்கறிகள், கீரை வகைகள், புரோகலி, காலி பிளவர் மற்றும் மீன், பருப்பு வகைகள், முட்டை வெள்ளைக்கரு மற்றும் 2 முதல் 3 லிட்டர் நீர் அன்றாடம் குடித்தல் மற்றும் அதிக சர்க்கரை, துரித உணவு, பதப்படுத்தப்பட்ட உணவு ஆகியவற்றினை தவிர்த்தல் போன்றவை கல்லீரலை பாதுகாக்க உதவும்.

    (செரிமானத்தில் கல்லீரல் பங்கு என்பது மிக முக்கியமானது. பித்த நீரை உருவாக்குகின்றது. கொழுப்பு செரிமானத்திற்கு இது முக்கியமானது.

    * ரத்தத்தில் நச்சுத் தன்மையினை நீக்குகின்றது.

    * வளர்சிதை மாற்றங்களுக்குப் பொறுப்பானது.

    * நஞ்சு, மருந்து, சுற்றுப்புற சூழலால் உடலில் சென்று தீங்கு விளைவிக்கும் பொருட்கள். இவைகளை ரத்தத்தில் இருந்து நீக்குகின்றது.

    * கல்லீரல் செல்கள் உடலுக்கு தேவையான பல புரதங்களை உற்பத்தி செய்கின்றன.

    * ரத்த அழுத்தத்தினை கட்டுப்படுத்த உதவும். ஆஞ்சியோ டென்சினோஜன் என்ற ஹார்மோனை வெளியிடுகின்றது. மேலும் பல செயல்கள் பற்றி முன்பே அறிந்தோம்.

    கல்லீரல் ஆரோக்கியம் வாழ்வின் ஆரோக்கியத்திற்கு அடிப்படை தேவை ஆகும்.

    ஆரோக்கியமான கல்லீரல் உடலை காக்கும் அமைதியான தேவதை.

    • கல்லீரல் கொழுப்பு நோய் பாதிப்பினைத் தவிர்க்கும்.
    • ஆரோக்கியமான கல்லீரல் உடலை காக்கும் அமைதியான தேவதை.

    இன்று கல்லீரலுக்கென்றே சிறப்பு சிகிச்சை பிரிவுகள் நிறைய ஏற்படுத்தப்பட்டுள்ளன. காரணம் அந்த அளவிற்கு கல்லீரல் பாதிப்பு பரவலாகக் காணப்படுகின்றது.

    கல்லீரல் மனித உடலின் சக்தி மையம் என்று குறிப்பிட்டால் அது மிகையாகாது. உணவை செரிக்கும் முக்கியமான உறுப்புகளில் கல்லீரலும் ஒன்று. நச்சுகளை வெளியேற்றுகின்றது. ஹார்மோன்களை சமநிலைப்படுத்துகின்றது என 500-க்கும் மேற்பட்ட கல்லீரல் பணியினைச் சொல்லலாம்.

    கல்லீரல் சத்தமில்லாது உடல் பணியினைச் செய்கிறது

    கல்லீரல் வயிற்றின் வலது பக்கத்தில் விலா எலும்புக்களுக்கு அடியில் அமைந்துள்ளது பெரிய உறுப்பு. இதனை பெரிய தொழிற்சாலை என்றே சொல்லலாம்.

    * பித்த நீரினை உற்பத்தி செய்கின்றது. ரத்தத்தில் நச்சுகளை நீக்குகின்றது. ரத்தம் உறைவதற்கான புரதங்களை உருவாக்குகின்றது. ஹார்மோன் அளவினை சீர்படுத்துகின்றது. ஊட்ட சத்துகள். வைட்டமின்கள், தாதுக்கள், குளுகோசினை சேமிக்கின்றது.

     

    இத்தகு கல்லீரல் பாதிக்கப்பட்டால் உடல் என்றாவது? பொதுவில் மது, வைரஸ் தொற்று ஏ.பி.சி, கொழுப்பு கல்லீரல் நோய், மருந்துகளின் பக்க விளைவுகள், மரபணு கோளாறுகள், தவறான உணவு பழக்கங்கள் இவை பாதிப்பிற்கு முக்கிய காரணம் ஆகின்றன.

    கல்லீரல் பாதிப்பினால் மஞ்சள் காமாலை-தோல், நகம், கண்கள் மஞ்சளாக இருக்கும். பிலிரூபின் ரத்தத்தில் அதிகமாக இருக்கும்.

    * வயிறு வலி, வீக்கம், வலது பக்க மேல் வயிற்றில் வலி, வீக்கம், கல்லீரல் வீக்கம் அல்லது திரவம் சேருவதால் ஏற்படும் பாதிப்பு.

    * அதிக சோர்வு, எப்போதும் பலவீனமாய் உணர்வது. எப்போதும் பலவீனமாக இருத்தல், கல்லீரல் ஆற்றல் உற்பத்தியை பாதிக்கின்றது.

    * அரிப்பு- விடாமல் உடலில் அரிப்பு, பித்த அமிலம் தோலில் சேருவதால் அரிப்பு ஏற்படுகின்றது.

    * அயர்ந்த சிறுநீர்- சிறுநீர் பழுப்பு நிறமாக இருக்கும். பிரிரூபின் சிறுநீரில் கலக்கின்ற காரணத்தினால் ஏற்படுகின்றது.

    * மன குழப்பம்- கவனக்குறைவு, மறதி இருக்கும், நச்சுகளின் பாதிப்பால் ஏற்படுகிறது.

    * பசியின்மை, எடை குறைதல்- ஊட்டச் சத்தினை உறிஞ்சுவதில் குறைபாடு.

    * எளிதில் சிராய்ப்பு ஏற்படும். ரத்த கசிவு, ரத்த போக்கு ஏற்படலாம், ரத்த உறைதல் குறைபாட்டால் ஏற்படுகின்றது.

    கல்லீரல் பிரச்சினை பிரிவுகள்

    * வைரஸ் தொற்றில் ஏ,பி,சி பிரிவுகள் உள்ளன. ஏ பிரிவு அசுத்தமான உணவு. நீரால் பரவுகின்றது. மஞ்சள் காமாலை, வயிற்றுப் பிரட்டல் ஆகியவை இருக்கும்.

    * வைரஸ் பி, சி பிரிவு ரத்தம், உடல் திரவங்கள் மூலம் பரவலாம். முதலில் அறிகுறிகள் கூட காட்டாமல் இருக்கலாம். ஆனால் இவை கல்லீரல் புற்று நோய் பாதிப்பு வரைக் கூட ஏற்படுத்தலாம்.

    * கொழுப்பு கல்லீரல்- இது இரு பிரிவு படும். ஆல்கஹால் சார்ந்தது. அடுத்தது ஆல்கஹால் பழக்கம் இல்லாதவர்களுக்கு ஏற்படும் பாதிப்பு. இதற்கு நீரிழிவு நோய், உடல் பருமன், கொழுப்பு உணவு ஆகியவை காரணம் ஆகின்றன. வயிற்று வலி, சோர்வு ஆகிய வெளிப்பாடுகள் இருக்கும்.

    கமலி ஸ்ரீபால்

     

    * சிரோசிஸ்- இது கல்லீரலில் வடுக்களை ஏற்படுத்துவது ஆகும். மது, வைரஸ், பிற நோய்கள் இதற்கு காரணமாக இருக்கலாம். வயிறு வீக்கம், கால் வீக்கம், குழம்பிய மனம் போன்றவை காணப்படும்.

    * கல்லீரல் புற்று நோய்- இது கடுமையான ஆபத்தான நிலை. வைரஸ் பி, சி, சிரோசிஸ் இவை காரணமாக அமையலாம். எடை குறைந்து மெலிந்து இருப்பர், மஞ்சள் காமாலை, வயிற்று வலி பாதிப்பு இருக்கும்.

    * ஆட்டோ இம்யூன் கல்லீரல் நோய்கள்- உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பு கல்லீரலைத் தாக்குவதால் ஏற்படும் பாதிப்பாகும். எதனையும் ஆரம்ப காலத்தில் கண்டறிந்து சிகிச்சை அளிப்பது நல்லது.

    * ரத்தப் பரிசோதனை, கல்லீரல் செயல்பாடு சோதனை, வைரஸ் சோதனை, பிலிரூபின் சோதனை ஆகியவை அவசியம்.

    * இமேஜிங்ஸ்கேன், அல்ட்ராசவுண்ட் பரிசோதனைகள் கல்லீரல் அளவு, வீக்கம், பாதிப்பு இவற்றினை அறிய உதவும்.

    * பயாபசி-புற்று நோய் பாதிப்பினை உறுதி செய்யும் பரிசோதனை முறையாகும்.

    வரும்முன் தடுப்போம் மூலமாக கல்லீரலை எப்படி பாதுகாக்கலாம்?

    * மது அருந்துவதை தவிர்ப்பது சிரோசிஸ் பாதிப்பினை வெகுவாய் குறைக்கும்.

    * சத்தான உணவு- காய்கறிகள், பழங்கள், முழுதானியங்கள் போன்ற கொழுப்பு சத்து குறைந்த உணவுகள் ஆகியவைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். இது கல்லீரல் கொழுப்பு நோய் பாதிப்பினைத் தவிர்க்கும்.

    * சுத்தத்தினை கடை பிடித்தல். ரத்த பரிமாற்றம், தரமான ஊசிகள் போன்றவை அவசியம்.

    * உடற்பயிற்சி அவசியம். உடல் பருமன், சர்க்கரை கட்டுப்பாடு, இவற்றுக்கு உறுதுணையாய் இருக்கும்.

    * முறையான மருத்துவ பரிசோதனைகள் செய்து கொள்ள வேண்டும்.

    * வைரஸ் தடுப்பூசிகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

    * பச்சை காய்கறிகள், கீரை வகைகள், புரோகலி, காலி பிளவர் மற்றும் மீன், பருப்பு வகைகள், முட்டை வெள்ளைக்கரு மற்றும் 2 முதல் 3 லிட்டர் நீர் அன்றாடம் குடித்தல் மற்றும் அதிக சர்க்கரை, துரித உணவு, பதப்படுத்தப்பட்ட உணவு ஆகியவற்றினை தவிர்த்தல் போன்றவை கல்லீரலை பாதுகாக்க உதவும்.

    (செரிமானத்தில் கல்லீரல் பங்கு என்பது மிக முக்கியமானது. பித்த நீரை உருவாக்குகின்றது. கொழுப்பு செரிமானத்திற்கு இது முக்கியமானது.

    * ரத்தத்தில் நச்சுத் தன்மையினை நீக்குகின்றது.

    * வளர் சிதை மாற்றங்களுக்குப் பொறுப்பானது.

    * நஞ்சு, மருந்து, சுற்றுப்புற சூழலால் உடலில் சென்று தீங்கு விளைவிக்கும் பொருட்கள். இவைகளை ரத்தத்தில் இருந்து நீக்குகின்றது.

    * கல்லீரல் செல்கள் உடலுக்கு தேவையான பல புரதங்களை உற்பத்தி செய்கின்றன.

    * ரத்த அழுத்தத்தினை கட்டுப்படுத்த உதவும். ஆஞ்சியோ டென்சினோஜன் என்ற ஹார்மோனை வெளியிடுகின்றது. மேலும் பல செயல்கள் பற்றி முன்பே அறிந்தோம்.

    கல்லீரல் ஆரோக்கியம் வாழ்வின் ஆரோக்கியத்திற்கு அடிப்படை தேவை ஆகும்.

    ஆரோக்கியமான கல்லீரல் உடலை காக்கும் அமைதியான தேவதை.

    தயிர் குளிர் காலத்தில் எடுத்துக் கொள்ளலாமா?

    சிலருக்கு அலர்ஜி இருக்கலாம். மற்றபடி தயிர் குளிர் காலத்திலும் எடுத்துக் கொள்ளலாம். சில்லென்று இல்லாமல் எப்போதும் சாதாரண இயற்கை நிலையில் எடுத்துக் கொள்வது நல்லது.

    * தயிர்-கால்சியம், புரதம், பி12, பாஸ்பரஸ், பொட்டாசியம் சத்து நிறைந்தது.

    * கால்சியம் பாஸ்பரஸ் எலும்பு ஆரோக்கியத்திற்கு அவசியமானது.

    * நல்ல குடல் பாக்டீரியா கொண்டது. வைட்டமின் பி சத்து கொண்டது.

    கொலஸ்டிராலை குறைக்கும். உயர் ரத்த அழுத்தத்தினை கட்டுப்படுத்தும்.

    இருதய ஆரோக்கியதற்கு நல்லது.

    வயிற்று போக்கு உள்ளவர்களுக்கு தயிர் நல்லது.

    உடல் பருமன் குறையும்.

    குடல் புற்றுநோய் அபாயம் குறையும்.

    அதிகம் அடர்ந்த தயிராக இல்லாமல் கொழுப்பு சத்து குறைவான பாலில் தயாரிக்கும் தயிர் நல்லது.

     

    உப்பு-இது தாது உப்புகளில் ஒன்று. உப்பு சத்து உடலில் குறையும் போது தலைவலி, வயிற்று பிரட்டல், சோர்வு, தசை பிடிப்பு, குழப்பம், வலிப்பு, கோமா நிலை போன்றவை ஏற்படலாம்.

    உப்பு குறைபாடு செல்களை குறிப்பாக மூளை செல்களை பாதிப்படைய செய்யும்.

    பண்டை காலம் முதல் இன்றுவரை அநேகரும் நம்நாட்டில் உப்பளங்களில் இருந்து தயாரிக்கப்படும் கல் உப்பு, கடல் உப்பினை சமையலுக்கு பயன்படுத்துகின்றனர்.

    கடல் உப்பில் சோடியம் குளோரைடு உள்ளது. இது உடலில் நீர் சத்து, ரத்த அழுத்தம் இவற்றினை சீர்செய்ய உதவுகிறது. மேலும் இது அதிக சுத்தகரிப்பு முறை, பதப்படுத்துதல் இவை இல்லாததால் பொட்டாசியம், இரும்பு, கால்சியம் போன்ற தாதுக்களும் உடையது. இந்த காரணங்களினால் இதை உயர்ந்ததாக குறிப்பிடுபவரும் உண்டு. ஆனால் இந்த மற்ற தாதுக்களின் பலனை பெற நாம் அதிகளவில் உப்பினை எடுத்துக் கொள்ள முடியாது. ஆனால் இந்த தாதுக்களை மற்ற உணவு பொருட்களில் இருந்தும் பெற முடியும். சோடியம் உடலின் நீர் சத்து சம நிலைக்கு முக்கியமானது. இது குறையும் போது உடலில் நீர்சத்து குறைதல், ரத்த அழுத்தம் மாறுபடுதல் ஆகியவை ஏற்படலாம். உப்பு அதிகம் உட்கொள்வதும், குறைந்து உட்கொள்வதும் ரத்த அழுத்த பாதிப்பினை ஏற்படுத்தும்.

    குளோரைட் வயிற்றில் தேவையான அளவு ஆசிட் சுரக்க அவசியம் ஆகின்றது. சோடியம் குளோரைடில் உள்ள குளோரைட் சிறிது சத்துக்களை உறிஞ்சி உடலுக்கு அனுப்ப உதவுகின்றது. ஆக அளவான உப்பு செரிமானத்திற்கு உதவும். உப்பு கலந்த நீரில் குளிப்பது சரும வறட்சி, வீக்கத்தினை நீக்கும். கடல் உப்பில் மக்னீசியம் சத்து அதிகம் இருப்பதால் சரும பாதிப்புகளுக்கு நல்லது.

    அதிக உப்பு உயர் ரத்த அழுத்தத்தினை ஏற்படுத்தும். இதன் காரணமாகவே சிப்ஸ், ஊறுகாய், பதப்படுத்தப்பட்ட உணவுகள், நொறுக்கு தீனி போன்றவற்றினை தவிர்க்க அறிவுறுத்தப்படுகின்றது.

    * பொதுவில் உயர் ரத்த அழுத்தம், இருதய பாதிப்பு, சிறுநீரக நோய் உள்ளவர்களை அவருக்கேற்ற அன்றாட உப்பின் அளவினை டாக்டர் பரிந்துரைப்பார்.

    'அதிக உப்பு அமைதியாய் கொல்லும்' என்பர்.

    அயோடின் சேர்க்கப்பட்ட உப்பு இன்று பரவலாக பழக்கத்தில் உள்ளது.

    * தைராய்டு ஹார்மோன் நோய் இயங்க உதவும்.

    * அயோடின் குறைபாட்டினைத் தவிர்க்க உதவும்.

    * எலும்பு, மூளை வளர்ச்சிக்கு உதவும். குறைந்த அயோடின் உணவு அறிவுறுத்தப்படுபவர்கள் அயோடின் கலந்த உப்பினை தவிர்ப்பது அவசியம்.

    வளர்ந்தவர்கள் 2,300 மி.கி.க்கு குறைந்த அளவு சோடியம் உணவில் சேர்க்கலாம். 1500 மி.கி. என்பது மிகச் சிறந்தது. இது ஒரு டீஸ்பூன் (5 கி) உப்பு அளவு எனலாம். ஆனால் நாம் உண்ணும் உணவில் மிக அதிக அளவு உப்பு உள்ளது. ரெடிமேட் உணவுகள், பாக்கெட் உணவுகளில் அதிக அளவு உப்பு இருக்க வாய்ப்புகள் அதிகம். எனவே வீட்டில் சமைத்து அளவான உப்பு சேர்த்து உண்ண பழக வேண்டும்.

    • திருவண்ணாமலையில் முருகன் அருணகிரி நாதருக்கு உபதேசம் செய்தார்.
    • முருகனிடம் நேரடி உபதேசம் பெற்றவர்கள் அகத்தியர், அருணகிரிநாதர், பாம்பன் சுவாமிகள் ஆவர்.

    வாழ்க்கை என்பது இன்றைய கால கட்டத்தில் ஒரு பெரிய சவாலாகவே இருக்கின்றது. எல்லோர் மனதிலும் எனக்கு மகிழ்ச்சியும் வேண்டாம். துக்கமும் வேண்டாம். பிரச்சினை இல்லாமல் ஒவ்வொரு நாளையும் கடந்தால் போதும் என்றுதான் இருக்கின்றது. ஆனால் அதனை கடப்பதற்கே ஆரோக்கியம், படிப்பு, உத்தியோகம், வருமானம் இவை அடிப்படை தேவை ஆகின்றன. இதில் குடும்பம், உறவுகள் இவர்களின் மீதுள்ள பாசமே நம்மை துரத்தி இயக்குகின்றது எனலாம். நூறு பிரச்சினைகளும், போராட்டங்களும் 24 மணி நேரமும் நம் உடலினையும், மனதினையும் ஆட்டிப் படைக்கின்றன. முயற்சி செய்தும் இலக்கை-அடிப்படை தேவையை அடைய முடியாத பொழுது அநேகர் நடமாடும் ஜீவன் அற்றவர்களாக இருக்கின்றோம். அந்நேரங்களில் மனிதனுக்கு ஒரு வடிகால் தேவைப்படுகின்றது. அந்த வடிகால்தான் இறைவன்.

    அவரை நீங்கள் பிரம்மா, விஷ்ணு, சிவன் எனலாம்

    குல தெய்வம் எனலாம். இஷ்ட தெய்வம் எனலாம்

    பிள்ளையார், முருகன், அம்மன் எனலாம்

    அல்லா எனலாம் இயேசு எனலாம்

    இன்னும் எத்தனையோ தெய்வங்களின் பெயரைச் சொல்லி வழிபடலாம்.

    பலர் தன் மீது நம்பிக்கை, தன்னம்பிக்கை என்ற உறுதியுடனும் இருக்கலாம்.

    இது ஒவ்வொரு தனி மனிதனின் விருப்பம் சுதந்திரம். அநேகர் அவரவர் பரம்பரை வழியில் பார்த்து வருவதால் அதனை தொடர்ந்து பின்பற்றுகின்றனர்.

    ஆக மனிதனுக்கு அவன் வாழ்க்கையினைக் கடக்க ஒரு துடுப்பு தேவையாக இருக்கின்றது. பிடிப்பு தேவையாக இருக்கின்றது. பொதுவாக நம் தமிழ்நாட்டில் முருக வழிபாடு என்பது காலம் காலமாய் இருக்கின்றது. சஷ்டி விரதமும், காவடி வழிபாடும் கோலாகலமாக காணப்படும் ஒன்று.

    'எங்களுக்கு பாதுகாப்பு கொடு, ஞானம் கொடு... என்று அவரவர் தேவைக்கேற்ப வேண்டுதல்களை வைத்து விரதம், மவுன விரதம், பாதயாத்திரை செய்து ஊர் குலுங்கும் விழாவாக நடத்துகின்றனர்.

    * முருகன் என்றாலே அழகுதான். ஓம் என்ற பிரணவத்தின் வடிவம்.

     

    * ஆறு பகைவர்களை அழித்தவர். (ஆணவம், கம்மம், குரோதம், லோபம், மதம், மாச்சர்யம்)

    * சரவணப் பொய்கையில் முருகன் ஆறு குழந்தைகளாய் பிறந்தார்.

    * தமிழ் குறிஞ்சி நிலக் கடவுள். எத்தனை பெயர்கள் இவருக்கு கார்த்திகேயா, கந்தா, சுப்ரமணியா, குமரா, குகா, சண்முகா, ஆறுமுகா....

    * பரம சிவன், பார்வதியின் புதல்வர், பிள்ளையாரின் இளைய சகோதரர்.

    * சிவபிரான் நெற்றிக் கண்ணில் உதித்தவர்.

    * கார்த்திகை பெண்களால் வளர்க்கப்பட்டவர்.

    * ஆறு குழந்தைகளை பார்வதி தாயார் ஒரு சேர அணைக்க ஆறு முகங்கள் கொண்ட ஒருவரானார்.

    * என்றும் இளமையானவர்.

    * அவரது வேல் வெறும் ஆயுதம் மட்டுமல்ல. அறியாமை தடைகளை நீக்கும் சக்தி கொண்டவை. அன்னை சக்தியால் அதை பெற்றவர்.

    * மயில் வாகனம் கொண்டவர். மயில் காலில் பாம்பு. இவை ஆணவம், அழிவுப் பூர்வமான சிந்தனைகளை அழிக்கும் என குறிப்பிடுகின்றது.

    * குகர்- குகைகளிலும், குன்றுகளிலும் இருப்பவர்.

    * தந்தைக்கே உபதேசம் செய்த சாமிநாதன்.

    * போர் கடவுள். அசுரர்களை அழித்தவர்.

    * தமிழ் கடவுள்.

    * ஆறுபடை வீடுகளைக் கொண்டவர்.

    * தைப்பூச விழா மிகவும் சிறப்பு பெற்றது.

    * வட இந்தியாவில் கார்த்திகேயன் என்று பெயர் பெற்றவர்.

    * சிலோன், மலேசியா என ஏனைய நாடுகளிலும் இவர் கோவில்கள் உண்டு.

    * அறுபடை வீடுகள்

    * திருப்பரங்குன்றம்-தெய்வானை திருமணம் செய்த இடம்.

    * திருச்செந்தூர்-சூரபத்மனை அழித்து சூரசம்ஹாரம் செய்த இடம்.

    * பழநி-ஞானம் நிறைந்த இடம். சுவாமிமலை- ஓம் என்ற பிரணவத்தின் பொருளை தந்தைக்கு உபதேசித்த தலம்.

    திருத்தணி- அமைதி தரும் இடம்.

    * பழமுதிர் சோலை-அவ்வையார் ஆசி பெற்ற இடம்.

    கமலி ஸ்ரீபால்


     

    எத்தனை எததனையோ முருக பக்தர்கள் நம் நாட்டில் உள்ளனர். ஆனால் பழநியில் நவபாஷாண முருக சிலையினை உருவாக்கி ஸ்தாபித்த போகர் சித்தரை மறக்க முடியுமா? கி.மு. 200களில் வாழ்ந்தவர். இன்றும் பழநியில் ஜீவ சமாதியாக இருப்பவர். சீன நாட்டிற்க்கும் சென்றவர். பழநி நவபாஷாண சிலையின் அபிஷேக தீர்த்தம் மக்களின் நோய்களை போக்க வல்லது. இறைவன் மார்பில் இரவில் சந்தனம் சாற்றி மறுநாள் அதனையும் பிரசாதமாக வழங்குவர். இதே போன்று அவர் மற்றொரு நவ பாஷாண முருகர் சிலையினை உருவாக்கி உள்ளார் என்றும் கூறப்படுகின்றது. சிறந்த ஆன்மீக, தியான முறைகளை அருளியவர்.

    அருணகிரி நாதரை அறியாத ஆன்மீக வழி மக்கள் குறைவு எனலாம். தன் வாழ்வினை எண்ணி வருந்தி கோவில் உச்சியில் இருந்து விழுந்து தற்கொலை செய்ய முயன்ற பொழுது அவரை தடுத்தாட் கொண்டவர் முருகபிரான். பின்னர் தன் வாழ்நாள் முழுவதும் முருகனைப் பாடியே முக்தி அடைந்தார். திருப்புகழினை பாடியவர். 15-ம் நூற்றாண்டினைச் சார்ந்தவர். ஆறு எழுத்து மந்திரமான 'சரவண பவ' அருணகிரிநாதரின் நாக்கில் முருகன் வேல் கொண்டு எழுதினார் என்றும் "ஓம்" என எழுதினார் என்றும் கூறப்படுகின்றன.

    இவருக்கு பல இடங்களில் முருகர் காட்சி அளித்துள்ளார். திருவண்ணாமலையில் முருகன் அருணகிரி நாதருக்கு உபதேசம் செய்தார்.

    திருச்செந்தூரில் நடன தரிசனம் தந்தார்.

    வயலூரில் மயில் மீது அமர்ந்து காட்சி தந்தார். மேலும் சுவாமிமலை, திருவிடைக்கழி என பல இடங்களில் முருகனை கண்ணார கண்டுகளித்தவர் அருணகிரிநாதர். முருகனிடம் நேரடி உபதேசம் பெற்றவர்கள் அகத்தியர், அருணகிரிநாதர், பாம்பன் சுவாமிகள் ஆவர்.

    மன்னர் ஒருவருக்கு கண் பார்வை இழப்பு ஏற்பட்ட போது அருணகிரி நாதர் கிளியாக மாறி தேவலோகம் சென்று பாரிஜாத மலரை கொண்டு வந்து மன்னரின் கண் பார்வையினை மீட்டார் எனவும் கூறப்படுகின்றது.

    இவரது திருப்புகழ் பாடல்களை ஒரு முறையாவது பொருள் அறிந்து படித்துதான் பார்க்கலாமே.

    அது போலவே 'கந்தர் சஷ்டி கவசத்தினை' அன்றாடம் சொல்ல சிறு வயது முதலே குழந்தைகளை பழக்கலாமே.

    இது போலத்தான் போகர் சித்தரும், மாபெரும் சித்தர் என்பதனை அறிந்தோம். ரசவாத ரகசியங்கள், மருத்துவ நுட்பங்கள், போகர்-1000 போன்ற நூல்களை படித்தால் பல அரிய விஷயங்களைக் கற்கலாம். மேரு மலையே சுற்றி வந்தவர். செவ்வாய் ஆதிக்கம் பெற்ற பழனிக்கு செல்லும் பக்தர்கள் முருகனை தரிசித்து, செவ்வாய் ஆதிக்கம் கொண்ட போகர் சமாதியிலும் வணங்கி வருவர்.

    பாம்பன் சுவாமிகள்

    பாம்பன் ஸ்ரீ மத் குமரகுரு சுவாமிகள் 19-ம் நூற்றாண்டில் வாழ்ந்த மகான், ஞானி. 666 பாடல்களை சைவ சமயம், முருக வழிபாட்டில் பாடியுள்ளார். சென்னை திருவான்மியூரில் உள்ள இவரது ஜீவ சமாதி உலகப் பிரசித்தி பெற்றது.

    சண்முக கவசம், குமாரஸ்தவம், பரிபூஜன பஞ்சாமிர்த வண்ணம் என்ற பாடல்களை இயற்றியவர். 1929ல் ஜீவசமாதி அடைந்தவர். 'வேலும், மயிலும் துணை'. இது இவரது மந்திரச் சொல். அறுபடை வீடுகளில் முதல் வீடான திருப்பரங்குன்றத்தில் தங்க வேலினை வருடம் ஒருமுறை மலை சுனைக்கு எடுத்துச் சென்று அபிஷேகம் செய்து மேலே காசி விஸ்வநாதர் கோவிலில் பூஜை செய்து கொண்டு வருவர். மேள தாளங்களுடன் மிகச் சிறப்பாக நடைபெறும் இந்த வேல் பூஜை.

    பாம்பன் சுவாமிகளுக்கு 1920-ல் எலும்பு முறிவு ஏற்பட்டது. அவரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவர்கள் எதுவும் செய்ய இயலவில்லை என்று வருந்திய நிலையில் அவரது பக்தர் 'சண்முக கவசத்தினை' தினமும் 11 முறை படித்தார். 11-ம் நாள் அவரது கனவில் இரு மயில்கள் வந்து நடனமாட, வேல் சுவாமிகளின் கால்களை சீர் செய்ய, முருக பிரான் சுவாமிகளின் அருகில் அமர்ந்திருப்பதனைக் கண்டார். பாம்பன் சுவாமிகளின் கால்களும் முழுமையாய் குணமடைந்து இருப்பதனைப் பார்தார். என்ன ஆச்சர்யம்! மறுநாள் மருத்துவமனை சென்ற பொழுது அவர் கனவில் கண்ட அனைத்தும் உண்மையிலேயே நடந்து இருந்தது. இன்றும் இதற்கான சாட்சியங்கள் உள்ளன.

    பாம்பன் சுவாமிகள் கடுந்தவம் புரிந்த காலத்தில் முருகன், அருணகிரி நாதர், அகத்திய சுவாமிகள் ஆகிேயார் ஒரு சேர காட்சி அளித்தனர். அவர் தவம் செய்த காலத்தில் அவரை நெருங்கிய துஷ்ட சக்திகளை அவரது 'தண்டம்' துரத்தியது. இன்றும் திருப்பரங்குன்றம் பாம்பன் சுவாமிகளின் ஆலயத்தில் அத்திரு தண்டம் பூஜிக்கப்படுகின்றது.

    தைப்பூசம்

    இந்த விழா உலகெங்கிலும் உள்ள முருக பக்தர்களால் கொண்டாடப்படும் விழா. கோலா கலமான விழா. ஒவ்வொரு வருடமும் தை மாதத்தில் பூசம் நட்சத்திரம் என்று கொண்டாடப்படும் விழா. இம்முறை2026-ல் நாளை (1-ந்தேதி) அன்று வருகின்றது. ஆனால் அதற்கான ஆரம்ப வேலைகள் தை மாதத்திற்கு முன்பே ஆரம்பித்து விடும். பலர் 48 நாள் விரதம் எடுப்பர். கடும் விரதம் எடுப்பவர்களும் உண்டு. பலர் 21 நாள், 7 நாள் என்றும் விரதம் இருப்பர். விரத கோட்பாடுகளை பக்தியுடன் கடைபிடிப்பர். சிலர் பால், பழம் மட்டுமே அருந்துவார்கள். காவடி எடுப்பது, பால் குடம் ஏந்தி செல்வது என பல வேண்டுதல்கள் இருக்கும். அலகு குத்துவார்கள். பூசம் நட்சத்திரமும், பவுர்ணமியும் சேர்ந்த தைப்பூசத்தில்தான் அகிலமே தோன்றி யது என்பவரும் உண்டு. பழநியில் இந்த விழா கூடுதல் சிறப்புடன் நிகழும்.

    வறுமை நீங்க, வேண்டுதல்களின் காணிக்கையாக, பில்லி சூனியம் போன்ற தீய சக்திகள் நீங்க இந்நாளில் சிறப்பு பூஜைகளும், விழாக்களும் நடக்கின்றன. சிவ, பார்வதி ஆனந்த நடனம் நிகழ்வது இந்நாளில் என்ற கருத்து உண்டு. குரு பகவான் வழிபாடும் நடைபெறும். வணங்கி வளம் பெறுவோம்.

    • உலகில் உள்ள அனைத்து இன்பங்களையும் அனுபவிக்கும் பாக்கியம் பெற்றவராக ஜாதகர் வாழ்வார்.
    • ஜாதகரின் எண்ணங்கள் விருப்பங்கள் ஆசைகள் லட்சியங்கள் கனவுகள் எளிதில் நிறைவேறும்.

    ஒருவர் நல்ல வசதி வாய்ப்புகளுடன் உல்லாச வாழ்க்கை வாழ்ந்தால் அவருக்கு சுக்கிர கடாட்சம் உள்ளது என்று பொருள். ஒரு ஜாதகத்தில் சுக்கிரன் நல்ல நிலையில் இருந்தால் உலகில் உள்ள அனைத்து இன்பங்களையும் அனுபவிக்கும் பாக்கியம் பெற்றவராக ஜாதகர் வாழ்வார். காதல், காமம், அன்பு, எதிர்பாலின ஈர்ப்பு, நல்ல குடும்ப உறவுகள், உறவுகளால் ஏற்படும் மகிழ்ச்சி, புற அழகியல் சார்ந்த விஷயங்கள், உலகியல் இன்பங்கள், சொகுசான வாழ்விற்கு தேவையான விஷயங்கள், ஆடம்பரமான வீடு, வாகனங்கள், அணிகலன்கள், போன்றவற்றிற்கு காரக கிரகம் சுக்கிரன். சுக்கிரன் பலமாக இருந்தால் அன்பான மனைவி, அழகான வீடு, ஆடம்பரமான கார், சொகுசான இன்பமயமான வாழ்க்கை அனைத்தும் ஒருவருக்கு தேடிவரும்.

    கோடிக்கணக்கில் கொட்டி கொடுத்து பெரிய உயரமும் தொட வைக்கும். சுக்ரன் பலம் குறைந்தால் வறுமை, தரித்திரம் போன்ற பாதிப்புகள் உண்டாகும். சம்பாத்தியம், ஆடம்பரம் என்ற எண்ணமே வராமல் போகும்.

    சுக்ரனின் நட்சத்திரமான பரணி, பூரம், பூராடத்தில் பிறந்தவர்கள் ரிஷபம், துலாம் ராசி அல்லது லக்னத்தில் பிறந்தவர்கள், ராசி அல்லது லக்னம் அல்லது ஏழாம் இடத்தில் சுக்கிரன் இருப்பவர்களுக்கு ஏதாவது ஒரு விதத்தில் சுக்கிர கடாட்சம் நிச்சயமாக கிடைக்கும். சுக்கிரன் மீன ராசியில் 27-வது டிகிரியில் உச்சமடைவார். அதே போல் இரு ஆதிபத்தியம் கொண்ட கிரகங்கள் இரு பாவகத்திற்கும் உள்ள பலன்களை நடத்தியே தீரும். இனி பனிரென்டு லக்னத்திற்கும் உச்ச சுக்ரனால் ஏற்படும் நன்மை தீமைகளை பார்க்கலாம்.

    மேஷ லக்னத்திற்கு 2,7-ம் அதிபதியான சுக்ரன் 12-ம்மிடமான அயன சயன விரய ஸ்தானத்தில் உச்சம் பெறுவதால் பொருளாதார வெற்றி, வீடு மனை வாகனம் போன்றவை கிடைக்கும். வாழ்க்கை துணை அழகு, காதல் உணர்வு, நல்ல புரிந்துணர்வு உள்ளவராக இருப்பார். திருமணத்திற்கு பிறகு அதிர்ஷ்டம் திருப்புமுனை உண்டாகும். சிலருக்கு காலதாமத திருமணம் நடைபெறும். சிலருக்கு திருமண வாழ்க்கையில் பிரிவினை அல்லது மனக்கசப்பு அதிகமாக இருக்கும். அல்லது தம்பதிகள் தொழில் உத்தியோக நிமித்தமாக ஆளுக்கு ஒரு ஊரில் பிரிந்து வாழ்வார்கள். வரவுக்கு மீறிய செலவுகளால் அவதி இருக்கும். படுத்தவுடன் நிம்மதியான தூக்கம் வரும். வெளியூர் வெளிநாட்டு வாழ்க்கையில் ஆர்வம் மிகுதியாக இருக்கும்.

    ரிஷப லக்னத்திற்கு ராசி அதிபதி மற்றும் 6-ம் அதிபதியான சுக்கிரன் 11-ம்மிடமான லாப ஸ்தானத்தில் உச்சம் பெறுவது மிகச் சிறப்பான அமைப்பாகும். ஜாதகரின் எண்ணங்கள் விருப்பங்கள் ஆசைகள் லட்சியங்கள் கனவுகள் எளிதில் நிறைவேறும். எடுத்த காரியத்தில் வெற்றி உண்டு. தொட்டது துலங்கும். நிலையான நிரந்தரமான உத்தியோக அனுக்கிரகம் உண்டு. ஜாதகர் அதிர்ஷ்டப் பிறவி பொன்னும் பொருளும் ஆரோக்கியமும் ஐஸ்வர்யமும் நிறைந்தவராக இருப்பார். எவ்வளவு கடன் சுமை இருந்தாலும் எளிதில் தீர்க்கக் கூடிய வல்லமை படைத்தவராக இருப்பார். பிறருக்கு கடன் கொடுப்பது ஜாமீன் போடுவது ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். ஜாதகரின் சகிப்புத்தன்மையற்ற நடவடிக்கைகள் எதிரியை அதிகப்படுத்தும். தீய பழக்க வழக்கங்களால் நோய் ஏற்படும்.

    மிதுன லக்னத்திற்கு 5,12-ம் அதிபதியான சுக்ரன் பத்தாமிடமான தொழில் ஸ்தானத்தில் உச்சம் பெறுவதால் ஜாதகர் குல கவுரவம் நிரம்பியவர்கள். பூர்வீகத்திலேயே பிறந்து பூர்வீகத்தில் பெயரோடும் புகழோடும் வாழ்வார்கள். பதவி, புகழ் அந்தஸ்து எளிதாக தேடி வரும். நன்மக்கட்பேறு உண்டாகும். அதிர்ஷ்ட தேவதை இவர்களுக்கு வசப்படுவாள். அரசியல் அரசாங்கம் சார்ந்த விஷயங்களில் ஆதாயம் உண்டாகும். கவுரவ பதவிகள் தேடி வரும். முதல் தொழிலில் தோல்வியை சந்திப்பார்கள் இரண்டாவது தொழிலில் வெற்றியை எட்டிப் பிடிப்பார்கள். ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் தனி முத்திரை பதிப்பார்கள். பூர்வீகம் குலதெய்வம் குழந்தை அதிர்ஷ்டம் சார்ந்த விஷயங்களில் நன்மை நடக்கும். அதற்கு இணையான சில தீமைகளும் உண்டாகும்.

    கடக லக்னத்திற்கு 4,11-ம் அதிபதியான சுக்கிரன் ஒன்பதாம் இடமான பாக்கியஸ்தானத்தில் உச்சம் பெறுவது மிகச் சிறப்பு. தாயும் தந்தையும் உயர்ந்த குலத்தில் பிறந்தவர்களாக இருப்பார்கள். பரம்பரையாக குலத்தொழில் செய்வார்கள். விவசாயம் கால்நடை வளர்ப்பது போன்றவற்றில் ஆர்வம் மிகுதியாக உள்ளவர்கள். கற்றக்கல்வி பலன் தரும். சொத்துக்கள் மூலமாக வாடகை வருமானங்கள் ஜாதகருக்கு கிடைக்கும். பல தொழில் வல்லுநராக இருப்பார்கள். ஆசிரியர், ஜோதிடர், வங்கிப் பணிகளில் தனித்திறமையுடன் மிளிர்வார்கள். இவர்களின் ஆலோசனைக்கு, ஏவலுக்கு கட்டுப்பட்டு நடக்கக் பலர் விரும்புவார்கள். அரசியல் அரசாங்க ரீதியான நன்மைகள் ஜாதகரை தேடிவரும். நல்ல ஆரோக்கியமான தேக சுகம் உண்டு. நல்ல வாழ்க்கைத் துணை அமையும். வாழ்க்கை துணை மூலமாக பொருளாதார மேன்மை உண்டாகும். அதே நேரத்தில் பாதகாதிபதியாகிய சுக்கிரன் அதிகவலு உடன் இருப்பதால் சுக்கிர தசை புத்தி காலங்களில் சொத்துக்களால் சொந்தங்களால் மன உளைச்சல் மிகுதியாக இருக்கும்.

    'பிரசன்ன ஜோதிடர்' ஐ.ஆனந்தி


     

    சிம்ம லக்னத்திற்கு 3,10 அதிபதியான சுக்கிரன் அஷ்டம ஸ்தானத்தில் உச்சமடைவார். ஒப்பந்த அடிப்படையான தொழில் மூலமாக வருமானம் ஈட்டுவார். யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற தகவல் தொடர்பு சாதனங்கள் மூலமாகவும் ஜாதகருக்கு வருமானம் வரும். புதிய தொழில் முயற்சியால் சுய வருமானத்தில் செல்வம் சேரும். சுய தொழில் ஆர்வம்மிகும். கவர்ச்சியான விளம்பரத்தால் தொழிலில் உச்சத்தை அடைவார்கள். உடன் பிறந்தவர்களுடன் இணைந்து கூட்டுத் தொழில் செய்வார்கள். தொழில் உத்தியோகத்திற்காக அடிக்கடி இடப்பெயர்ச்சி செய்ய நேரிடும். அலைச்சல் மிகுந்த பயணங்கள் அதிகமாக இருக்கும். பாகப்பிரிவினை சார்ந்த பிரச்சினைகள் ஜாதகருக்கு மன உளைச்சலைத் தரும். அண்டை அயலாருடன் ஒத்துப்போக முடியாது. முக்கிய ஆவணங்களை கவனமாக கையாள வேண்டும்.

    கன்னியா லக்னத்திற்கு 2,9-ம் அதிபதியான சுக்கிரன் சம சப்தம ஸ்தானத்தில் உச்சம் பெறுவது மிகச் சிறப்பாகும். திருமணத்திற்குப் பிறகு வாழ்வாதாரம் பல மடங்கு உயரும் பேச்சை மூலதனமாகக் கொண்ட தொழில் மூலம் ஜாதகருக்கு வருமானம் கிடைக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் வெளிநாட்டு வாழ்க்கையை விரும்புவார்கள். குலத்தொழில் விருத்தியடையும். தனது புத்தி சாதுர்ய பேச்சால் பிறரை நல்வழிப்படுத்துவதில் வல்லவர்கள். உற்றார் உறவினர் என பந்துக்களோடு வாழ்பவர்கள். பலவிதமான யுக்திகளால் பொருளை ஈட்ட வல்லவர். இரண்டாவது குழந்தை பிறந்த பிறகு வாழ்வாதாரம் பல மடங்கு பெருகும். தந்தையால் ஆதாயம் உண்டு. தந்தையின் குலத்தொழில் ஜாதகரை வந்து சேரும். கல்வி நிறுவனங்கள் நடத்தும் பாக்கியம் பெற்றவர்கள். புண்ணிய பலன்களை அதிகரிக்க அடிக்கடி ஆன்மீக யாத்திரை செய்வார்கள்.

    துலாம் லக்னத்திற்கு ராசி அதிபதி மட்டும் அஷ்டமாதிபதியான சுக்கிரன் ஆறாம் இடமான ருண ரோக சத்ரு ஸ்தானத்தில் உச்சமடைவார்.

    லக்னாதிபதி ஆறாம் இடத்தில் உச்சமடைவதால் ஜாதகருக்கு கடன் நோய் எதிரி சார்ந்த பாதிப்புகள் உபரியாகி கொண்டே இருக்கும். அடிக்கடி நோய்க்கு வைத்தியம் செய்து மன உளைச்சல் கூடும். சிலருக்கு நோயின் தன்மையை எளிதில் அறிய முடியாது. நிலையான தொழில் அமையும். வருமானத்திற்கு மீறி கடன் வாங்க கூடாது. உயில் சொத்து காப்பீட்டு பணம் லாட்டரி போன்ற அதிர்ஷ்ட பணம் பொருள் வரவு உண்டு. ஒரு நல்லது நடந்தாலும் ஒரு கெட்டது நடந்தாலும் அதற்கு ஜாதகரே காரணமாக இருப்பார். தசை ஆரம்பத்தில் சில யோகத்தைச் செய்தால் தசை முடியும் போது அவயோகம் உண்டு. துலாம் ராசிக்கு சுக்ர தசை வராமல் இருப்பது நல்லது.

    விருச்சிக லக்னத்திற்கு 7, 12-ம் அதிபதியான சுக்கிரன் ஐந்தாம் இடத்தில் உச்சம் பெறுவதால் ஜாதகருக்கு காதல் திருமணம் நடக்க வாய்ப்பு உள்ளது.இதற்கு குரு பார்வை இருந்தால் பெற்றோர் சம்மதத்துடன் காதல் திருமணம் நடக்கும். குலதெய்வ அருள் கிடைக்கும். அழகு, ஆடம்பரத்திற்கு அதிகம் செலவு செய்வார்கள். பூர்வீகம் குலதெய்வம் அதிர்ஷ்டம் காதல் சார்ந்த விஷ யங்களில் ஜாதகருக்கு சாதகமான பலன்கள் நடக்கும். சிலருக்கு 2-வது குழந்தை பிறந்த பிறகு மண வாழ்க்கையில் மன கஷ்டம் வரும். நண்பர்கள் தொழில் கூட்டாளிகள் வாடிக்கையாளர்கள் வாழ்க்கை துணையால் விரயங்கள் அதிகரிக்கும். 2-வது குழந்தை பிறந்ததற்கு பிறகு அதிர்ஷ்டம் பல மடங்கு அதிகரிக்கும்.

    தனுசு லக்னத்திற்கு 6,11-ம் அதிபதியான சுக்கிரன் சுகஸ்தானத்தில் உச்சமடைவதால் நன்மை தீமை கலந்த பலன்கள் கிடைக்கும். ஆறாம் அதிபதி உச்சம் பெறுவது சிறப்பித்துச் சொல்லக் கூடிய பலன் அல்ல. சித்தப்பா மற்றும் மூத்த சகோதரத்தால் கடன்படுவார்கள். தாய்மாமன் வாழ்நாள் முழுவதும் மதி மந்திரியாக இருப்பார். அதே நேரத்தில் மற்றொரு ஆதிபத்திய ரீதியாக லாபமும் உண்டு. பலர் அடிக்கடி ஒரு சொத்தை விற்று புது சொத்து வாங்கிக் கொண்டே இருப்பார்கள். சிலருக்கு சொத்துக்களை விற்று கடன் அடைக்க கூடிய சூழ்நிலைகள் இருக்கும். எவ்வளவு கடன் சுமை இருந்தாலும் அதை அடைக்கும் திறமையும் உண்டு. சிலருக்கு அதிர்ஷ்ட வசமாக கடன் தொகை தள்ளுபடியாகும். நிலையான நிரந்தரமான தொழில் உத்தியோக அமைப்பு அமையும். நல்ல வேலையாட்கள் அமைவார்கள்.

    மகர லக்கினத்திற்கு 5,10-ம் அதிபதியான சுக்கிரன் மூன்றாம் இடமான சகாய வெற்றி ஸ்தானத்தில் உச்சமடைவது மிகச் சிறப்பான அமைப்பாகும். தொட்டது துலங்கும். முயற்சிகளில் வெற்றி உண்டாகும். நல்ல பண்பான, பணிவான புத்திரர்கள் பிறப்பார்கள். குலதெய்வ கோவிலில் அதிக தானம், தர்மம் செய்பவர்கள். பல தொழில் திறமை நிறைந்த வல்லுநர்களாக இருப்பார்கள். கமிஷன் அடிப்படையான தொழிலில் நல்ல வருமானம் ஈட்டுவார்கள். இனக்கவர்ச்சியாலும், போகத்திற்காகவும் ஒன்றுக்கு மேற்பட்ட காதல் வரும். கவுரவ பதவி உள்ளவர்களுக்கு அரசாங்க உத்தியோகம் கிடைக்கும். அரசியலில் தனக்கென்று ஒரு தனி முத்திரை பதிப்பார்கள். சொந்த முயற்சியில் தொழில் செய்வார்கள். தொழிலுக்கு கிளை நிறுவனங்கள் உண்டு. ஒன்றுக்கு மேற்பட்ட தொழில் அமையும். பேச்சை மூலதனமாக கொண்ட தொழிலில் வல்லவர்கள். பிற நாட்டு தொடர்பாலும் அரசு மூலமாகவும் செல்வம் சேரும். தர்ம காரியங்களின் மூலம் புகழ் பெறுவார்.

    அரச பதவி, அரசு உத்தியோகம் அந்தஸ்து உண்டு. கும்ப லக்னத்திற்கு 4, 9 அதிபதியான சுக்கிரன் தனம் வாக்கு குடும்ப ஸ்தானத்தில் உச்சம் பெறுவது சிறப்பித்து சொல்ல கூடிய சுப பலனாகும். நிறைவான சொத்து சுகத்தையும் நிறைந்த லாபத்தையும் உறவுகளின் அனுசரனையும், வழக்குகளில் வெற்றியையும் முன்னோர்களின் நல்லாசியையும் வழங்கும். நன்றாக படிப்பார்கள். கற்ற கல்வியால் பயன் உண்டு. பெயர் சொல்லக் கூடிய குடும்பம். அரசு உத்தியோகம், கவுரவ பதவி உண்டு. சிலர் குலத்தொழில் செய்பவர்கள். சமூதாய அங்கீகாரம் நிறைந்தவர்கள். குடும்பச் சொத்துக்கள் அதிகமாக இருக்கும். தான தர்மங்கள் செய்வதில் ஆர்வம் உள்ளவர்கள். கடமையே கண்ணாக உள்ளவர்கள். தெய்வ காரியங்களிலும் ஈடுபாடு கொண்டவர்கள்.தந்தை மற்றும் தந்தை வழி உறவுகள் மீது பற்றும் பாசமும் உண்டு.

    மீன லக்கினத்திற்கு 3,8-ம் அதிபதியான சுக்ரன் ராசியில் உச்சம் அடைவார். அஷ்டமாதிபதி ராசியில் உச்சம் அடைவதால் விபரீத ராஜ யோகமாக சில அதிர்ஷ்டம் சார்ந்த விஷயங்கள் ஜாதகருக்கு சாதகமாக இருக்கும் ஆனால் அந்த அதிர்ஷ்டம் சார்ந்த விஷயங்கள் ஜாதகருக்கு ஒரு விபரீதம் ஏற்பட்ட பிறகு கிடைக்கும். உடன் பிறந்தவர்களால் ஜாமீன் பிரச்சினை ஏற்படலாம். முறையற்ற பாகப்பிரிவினை சந்திக்க நேரிடும். சிலருக்கு வாழ்நாள் முழுவதும் அவமானம் வம்பு வழக்கு சர்ஜரி போன்ற பாதிப்புகள் இருக்கும். தொழிலில் உடன் பிறந்தவர்களால் ஏமாற்றம் உண்டு. முயற்சி குறைவுபடும். திட்டமிடுதல் இருக்காது எந்த ராசி லக்னமாக இருந்தாலும் சுக்கிரன் உச்சம் பெறுவதால் சொகுசு வாழ்க்கையை அடையக்கூடிய பாக்கியம் உண்டாகும்.

    செல்: 98652 20406

    • உடலில் கொழுப்பு குறைந்து, தசைகள் சீர்படும்.
    • சர்க்கரை அளவு ரத்தத்தில் கட்டுப்படும்.

    இன்று நாம் அதிகமாகக் காணும் பல உடல் நலப் பிரச்சினைகளில் நரம்பியல் பிரச்சினைகளும் ஒன்று. மூளை, தண்டுவடம், நரம்புகளை பாதிக்கும் கோளாறுகள் நரம்பியல் பிரச்சினைகள் எனப்படும். தலைவலி, உணர்வின்மை, தசை பலவீனம், நினைவாற்றல் சிக்கல்கள், பேச்சில் பிரச்சினை, நடையில் பிரச்சினை, பார்வை பிரச்சினை, வலிப்பு, மயக்கம், ஒருங்கிணைப்பு குறைபாடுகள் சமநிலை இழப்பு, வலி உணர்வின்மை போன்ற அறிகுறிகள் நரம்பியல் பாதிப்பின் அறிகுறிகளே. பக்கவாதம், நடுக்கம், மனச்சோர்வு, பி12 குறைபாடு, மூளை காய்ச்சல் போன்ற வெளிப்பாடுகளும் இருக்கும். இவற்றிற்கு உடனடியாக மருத்துவரை அணுகுவது மிக அவசியம்.

    பொதுவான நரம்பியல் பிரச்சினைகள்

    * தலைவலி-ஒற்றை தலைவலி, டென்ஷன் தலைவலி

    * வலிப்பு- நினைவாற்றல் குறைபாடு, தசை பலவீனம், நரம்பு பலவீனம், மனச் சோர்வு, பதட்டம், மனநல பிரச்சினைகள் ஆகும்.

    * பொதுவான காரணங்கள் என்பது வைட்டமின் பி12 குறைபாடு, தொற்று நோய்கள், தண்டுவட காயங்கள், மரபணு, வாழ்க்கை முறை காரணங்கள் ஆகும்.

    இதற்கான சிகிச்சை மற்றும் தடுப்பு முறைகள்

    சிகிச்சை- மருந்து, பிசியோதெரபி, அறுவை சிகிச்சை, வாழ்க்கை முறை மாற்றங்கள் ஆகியவை பழக்கத்தில் உள்ளன.

    * தடுப்பு முறைகள்- ஆரோக்கியமான உணவு, உடற்பயிற்சி, முறையான தூக்கம் ஆகியவை அறிவுறுத்தப்படுகின்றன.

    உடல் பலவீனத்தின் அறிகுறிகள்

    நடப்பது, பேசுவது, அன்றாட சாதாரண வேலைகளை செய்வதில் சிரமம் ஏற்படுவது.

    விழுங்குவதில் சிரமம், ஒருங்கிணைப்பில் சிரமம், சமநிலை தொந்தரவு, இரட்டை பார்வை, தசை இழுத்தல், தசை பிடிப்பு, தன்னிச்சையான நடுக்கம் ஆகியவை ஆகும்.

    தன்னிச்சையாக வலி நிவாரண மாத்திரைகளை எடுத்துக் கொள்வது பாதிப்புகளை ஏற்படுத்தலாம். ஆகவே மேற்கண்ட அறிகுறிகளுக்கு மருத்துவர் ஆலோசனை பெறவும்.

    இரண்டு வாரம் சர்க்கரையினை எதிலும் சேர்க்காமல் உண்ணாமல் இருந்து பாருங்களேன். இதில் வெல்லம், பனை சர்க்கரை, தேன் என எதனையும் சேர்த்துக் கொள்ளக் கூடாது.

    முதலில் உங்கள் முகத்தில் தெளிவு ஏற்படும். உப்பலாக, சதை தொங்கிய, கூடுதல் வயது காட்டும் முகம் மாறி ஆரோக்கியமான தெளிவாய், இளமையாய் இருக்கும்.

    * உடலில் கொழுப்பு குறைந்து, தசைகள் சீர்படும்.

    * கண் பார்வை தெளிவாகும்.

    * சிறுநீரக ஆரோக்கியம் கூடும்.

    * சிறுநீரில் சர்க்கரை, புரதம் குறையும்.

    *வீக்கம் ஏற்படுவது தடுக்கப்படும்.

    * சோர்வு இன்றி சக்தி இருக்கும்.

    * உயர் ரத்த அழுத்தம் கட்டுப்படும்.

    * வலி, வீக்கங்கள் குறையும்.

    * எடை குறையும்.

    * சர்க்கரை அளவு ரத்தத்தில் கட்டுப்படும்.

    எடையினை குறைக்க கூடுதலாக இம்முறைகளையும் கையாளலாம். இந்த எடைக்குறைப்பிற்காக ஒவ்வொருவரும் படும்பாடு கொஞ்ச நஞ்சமல்ல. அன்றாடம் சில குறிப்புகளை கடைபிடித்தாலே எளிதில் எடை குறையும்.

    * ஏற்கனவே சர்க்கரை உணவுகளை தவிர்ப்பதனை பார்த்தோம்.

    * காலை உணவு நல்ல புரதச் சத்து நிறைந்ததாக இருந்தால் மனம் நொறுக்கு தீனி தேடி அலையாது.

    கமலி ஸ்ரீபால்

     

    * முட்டை, காய்கறி, தயிர், புரத உணவு, மருத்துவரால் அங்கீகரிக்கப்பட்ட பவுடர் வகை உணவு. சீஸ், பன்னீர் எடுத்துக் கொள்ளுங்கள். உணவுக்கு முன்னால்- 15 நிடங்களுக்கு முன்பு நீர் அருந்துவது 13 சதவீதம் கலோரி சத்தினை தவிர்க்கும்.

    * மெதுவாய் மென்று உண்பது. டி.வி., போன் இல்லாமல் உண்பது நல்லது.

    * நன்கு நடப்பது. நார் சத்து கொண்ட காய்கறி, பீன்ஸ் உணவுகளை எடுத்துக் கொள்வது.

    * குளிர்பானங்களை தவிர்ப்பது.

    * நல்ல உறக்கம்.

    * முழு தானிய உணவு, கொலை பட்டினி இல்லாமல் இருப்பது.

    * பொறுமையாய் இவைகளை தொடர்ந்து கடைபிடிப்பது போன்றவை கை மேல் பலன் தரும்.

    கண்களையும் கவனிப்போம்

    இன்றைக்கு அநேக இளைஞர்கள் சோர்வடைந்த கண், பொங்கிய கண், சிவந்த கண், கண் சோர்வு என பலவித கண் பாதிப்புகளோடு தான் வாழ்கின்றனர். டிஜிட்டல் கண் சோர்வு என இதனை குறிப்பிடுகின்றனர். கைபேசி, கணினி, லேப்டாப், தொலைக்காட்சி போன்ற டிஜிட்டல் சாதனங்கள் இன்று வாழ்க்கையின் ஒரு பகுதி ஆகிவிட்டது. வேலை, கல்வி, தகவல் என அனைத்திற்கும் திரைகளை அதிகமாக பயன்படுத்துகின்றோம். டிஜிட்டல் கண் சோர்வில் தற்கால பாதிப்புகளாக எரிச்சல், உலர்வு, நீர் வருதல், கண் பார்வை மங்குதல், தலைவலி, கண்ணை சுற்றி வலி, கழுத்து மற்றும் தோள்பட்டை வலி என்ற அறிகுறிகள் ஏற்படுகின்றன. மாணவர்கள், அலுவலகப் பணியாளர்கள் மற்றும் மொபைல் போன் அதிகமாய் பயன்படுத்துபவர்கள் இதில் அதிகமாய் பாதிக்கப்படுகின்றனர். திரையினை பார்க்கும் போது நாம் கண் இமைப்பதனை இயல்பாகவே குறைத்து விடுகின்றோம். இதனால் கண்கள் வறண்டு விடுகின்றது. மேலும் திரையின் ஒளி, எழுத்தின் அளவு, தவறாக உட்காரும் நிலை ஆகியவை கண் சோர்வினை அதிகரிக்கின்றன.

    கண் சோர்வினைத் தவிர்க்க 20-20-20 விதியைப் பின் பற்றுங்கள். அதாவது 20 நிமிடங்களுக்கொரு முறை 20 அடி தூரத்தில் உள்ள ஒரு பொருளை 20 வினாடிகள் பார்க்கவும். திரையில் அதிக பிரகாசம் வேண்டாம். எழுத்தின் அளவு உங்களுக்கு ஏற்றவாறு இருக்க வேண்டும். இவைகளின் மூலம் கண் சோர்வினைத் தவிர்க்க முடியும். நாம் உலகத்தினை அறிந்து கொள்ளும் முக்கியமான வழிகளில் ஒன்று பார்வைத்திறனே. இன்றைய வாழ்க்கை முறை, அதிக திரை நேரம், தூக்கக் குறைவு போன்ற காரணங்களால் கண் பிரச்சினை அதிகரித்து வருகின்றது. பல சமயங்களில் சிறிய பிரச்சினைகளை நாம் அலட்சியப்படுத்துவதால் பின்னர் பெரிய பிரச்சினைகளாக மாறுகின்றன.

    * பார்வை குறைபாடு. அருகில் அல்லது தூரத்தில் உள்ள பொருட்கள் தெளிவாகத் தெரியாத நிலை போன்றவை சிறு வயதினர் முதல் பெரியவர்கள் வரை யாருக்கும் ஏற்படலாம்.

    * கண் தொற்றுகள் தூசு, அழுக்கு, கைகளை கண்ணில் அடிக்கடி வைப்பது போன்ற காரணங்களால் கண் சிவத்தல், நீர் வருதல், வலி போன்றவை ஏற்படும்.

    * வயதுடன் வரும் கண் மாற்றங்கள், கண்ணழிவு (கட்டராக்ட்) போன்றவை தோன்றலாம்.

    * கண் ஆரோக்கியத்திற்கு 7 முதல் 8 மணி நேர தூக்கம் மிக அவசியம்.

    * பச்சை காய்கறிகள், கீரை வகைகள், பழங்கள் போன்ற வைட்டமின் 'ஏ' சத்து நிறைந்த உணவு அவசியம்.

    * திரை நேரத்தினை கட்டுப்படுத்த வேண்டும்.

    * இடைவெளி எடுத்து கண்களுக்கு ஓய்வு தர வேண்டும்.

    * தூசு, வெய்யிலில் இருந்து கண்களை பாதுகாக்க தரமான கண் கண்ணாடிகளை பயன்படுத்தலாம்.

    * கண்களை கைகளால் தேய்க்கக் கூடாது.

    * சிறு அறிகுறியாயினும் மருத்துவர் ஆலோசனை பெறுவது பல பிரச்சினைகளை ஆரம்ப நிலையிலேயே தீர்க்கும்.

    * கண் அழுத்த நோய் (கிரைகோமா) என்பது கண்களில் அழுத்தம் அதிகரிப்பதால் நரம்புகள் பாதிக்கப்படுகின்றன. ஆரம்ப நிலையில் அறிகுறிகள் தெரியாமல் இருக்கலாம். ஆனால் கவனிக்காமல் இருந்தால் நிரந்தர பார்வை இழப்பு ஏற்படும் அபாயமும் உள்ளது.

    * மூப்பு சார்ந்த நடு பார்வை பாதிக்கப்படுவதால் நேராக பார்க்கும் திறன் குறையலாம். படிப்பதும், முகங்களை அடையாளம் காண்பதும் சிரமமாக இருக்கலாம்.

    * கண் வறண்டு விடுவதால் எரிச்சல், சிவத்தல் ஏற்படலாம். எனவே முதியோர் ஆண்டுக்கொரு முறையாவது கண் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். வைட்டமின் ஏ.சி.ஈ. மற்றும் ஓமேகா 3 இருக்கும். உணவுகளை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

    * கண்களில் வலி, பார்வை குறைவு, கருப்பு புள்ளி தோன்றுதல் போன்றவை இருந்தால் உடனடியாக கண் மருத்து வரை அணுக வேண்டும்.

    காலையில் ஒரு மணி நேரத்தினை எப்படி ஆரம் பிக்கலாம் தெரியுமா?

    * 5 நிமிடம் உங்கள் படுக்கையை உதறி, பெட்ஷீட் மாற்றி சரி செய்யுங்கள்.

    * 5 நிமிடம் உடலை நீட்டி, மடக்கி சில யோகா பயிற்சிகள் செய்யலாம்.

    * 5 நிமிடம் அன்றைய வேலைகளை எழுதலாம்.

    * 15 நிமிடம் ஷவர் குளியல், உடலை நன்கு துடைத்து மான்ட்ரையர் தடவி தயாராகுதல் வேண்டும்.

    * 25 நிமிடங்கள் சத்தான காலை உணவு எடுத்துக் கொள்ளுங்கள்.

    மேலும் நேரம் கிடைத்தால் 10 நிமிடம் துரித உடற்பயிற்சி.

    * 20 நிமிடம் நடைபயிற்சி.

    * 20 நிமிடம் நல்ல புத்தகம் படிக்கலாம். ஆக நேரம் பொன்னானது. முறையாய் பயன்படுத்துவோம்.

     

    மனதினை சமநிலைப்படுத்துங்கள்!

    உங்கள் மனதினை சமநிலை படுத்திக் கொள்ள:

    * அதிகம் பேச வேண்டாம். அப்படி பேசினால் பொய் சொல்ல வேண்டி இருக்கும்.

    * ரொம்பவும் யோசித்தால் மன அழுத்தம் ஏற்படும்.

    * ஒருவருக்கு அதிக வேலையினை விழுந்து விழுந்து கொடுத்தால் தலையில் மிளகாய் அரைப்பார்கள்.

    * ரொம்பவும் அளவுக்கு மீறி கடும் வேலை செய்தால் சோர்வு, மன உளைச்சல் ஏற்படும்.

    * அதிக அன்பு ஒருவர் மீது செலுத்தினால் காட்டாற்றில் வெள்ளம் போல் அடித்து செல்லப்படும்.

    * ரொம்பவும் 'ஜோக்' அடித்து விளையாட்டுத்தனமாக அடுத்தவரை மகிழ்விப்பதிலேயே இருந்தால் நம் பேச்சை யாரும் சீரியசாக கவனம் கொடுத்து எடுத்துக் கொள்ள மாட்டார்கள்.

    * அதிகம் தூங்கினால் வெட்டியாக காலம் கழியும்.

    * ஒருவரை மிகவும் நம்பினால் அவரால் துரோகம், கைவிடப்படும் வாய்ப்பு அதிகம்.

    * அதிக ஒப்பனை இயற்கை அழகினைக் கெடுக்கும்.

    * அதிக அழுத்தம் கொடுத்தால் எந்த செயலும் முறையாய் நிறைவேறாது.

    * அதிகம் செலவழித்தால் வருங்காலமே இல்லை. இதுதான் வாழ்க்கை.

    ×