என் மலர்tooltip icon

    விருதுநகர்

    • வருகிற டிசம்பர் மாதத்திற்குள் சீரான குடிநீர் வினியோகிக்க வேண்டும்.
    • சீவலப்பேரியி லிருந்து சுமார் 115 கிலோ மீட்டர் தூரம் குழாய்கள் பதிக்கப்பட்டு, தாமிரபரணி தண்ணீர் கொண்டு வரும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்த ஆய்வுக்கூட்டம் நடந்தது. கலெக்டர் ஜெயசீலன் தலைமை தாங்கினார். ரகுராமன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

    தமிழக மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்கிற வகையில் முதல்-அமைச்சர் தொடர்ச்சியாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

    விருதுநகர் மாவட்டம், சாத்தூர், விருதுநகர் மற்றும் அருப்புக்கோட்டை நகராட்சிகளுக்கு ரூ.444 கோடிசெலவில் சீவலப்பே ரியிலிருந்து புதிய குடிநீர் திட்டத்தை ஆரம்பித்து பணிகள் நடைபெற்று வருகிறது. சீவலப்பேரியி லிருந்து சுமார் 115 கிலோ மீட்டர் தூரம் குழாய்கள் பதிக்கப்பட்டு, தாமிரபரணி தண்ணீர் கொண்டு வரும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    இத்திட்டத்திற்காக குழாய்கள் பதிக்கப்படும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். குழாய்கள் பதிக்கும் பணிகளின் போது உள்ள நடைமுறை சிக்கல்களை நகராட்சித்துறை, நெடுஞ்சா லைத்துறை உள்ளிட்ட சம்மந்தப்பட்ட துறைகளின் ஒத்துழைப்போடு இணைந்து, பணியினை விரைவுபடுத்த வேண்டும், குழாய் பதிக்கும் இடங்களில் சீரானமின் விநியோகம் கிடைப்பதற்கு தேவையான மின்சாரகட்டமைப்புகளை உருவாக்க வேண்டும்.

    இந்த புதிய குடிநீர் திட்ட பணிகளை குடிநீர் வடிகால் வாரியம், நெடுஞ்சா லைத்துறை, மின்சாரத்துறை, நகராட்சி உள்ளிட்ட துறைகள் ஒருங்கிணைந்து செயல்பட்டு, வருகின்ற டிசம்பர் மாதத்திற்குள்ளாக அருப்புக்கோட்டை, சாத்தூர், விருதுநகர் நகராட்சிகளுக்கு சீரான தண்ணீர் வழங்குவதற்கு தேவையான நடவடிக்கை களை எடுக்கவேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • பட்டாசு விபத்தில் உயிரிழந்த 13 தொழிலாளர்களின் குடும்பத்துக்கு பா.ம.க. சார்பில் நிதியுதவி வழங்கப்பட்டது.
    • ஏதேனும் உதவி தேவைப்பட்டால் தன்னை வந்து சந்திக்கு மாறும் கூறினார்.

    சிவகாசி

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள ரெங்கபாளையம் பகுதியில் பட்டாசு கடையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 13 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர்.

    பலியான 13 பேரில் வீடுகளுக்கும் நேரில் சென்ற பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில பொருளாளர் திலகபாமா தனது சொந்த நிதியில் தலா ரூ. 10 ஆயிரம் வீதம் இறந்த 13 பேரின் குடும்பங்களுக்கும் நேரில் சென்று வழங்கி ஆறுதல் கூறினார். மேலும் ஏதேனும் உதவி தேவைப்பட்டால் தன்னை வந்து சந்திக்கு மாறும் கூறினார். அப்போது பா.ம.க. மத்திய மாவட்ட செயலாளர் டேனியலும் உடன் இருந்தார். பின்னர் பா.ம.க. மாநில பொருளாளர் திலகபாமா நிருபர்களிடம் கூறுகையில், பட்டாசு விபத்தில் உயரி ழந்தவர்களுக்கு குழந்தைகள் உள்ளனர். தமிழக அரசு வழங்கிய 3 லட்சம் ரூபாய் நிதி போதாது. ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 25 லட்ச ரூபாய் வைப்பு நிதி யாக தமிழக அரசு வழங்கி அவர்களின் வாழ் வாதாரத்தை பாது காக்க வேண்டும் என தெரிவித்தார்.

    • விருதுநகரை சேர்ந்த மாரீஸ்வரன் என்பவர் கடைவீதியில் அனுமதியின்றி பட்டாசுகள் தயாரித்தது தெரியவந்தது.
    • பட்டாசுகளை பறிமுதல் செய்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்:

    கடந்த வாரம் சிவகாசி பட்டாசு கடையில் ஏற்பட்ட விபத்தில் 13 பேர் உயிரிழந்தனர். விசாரணையில் அந்த பட்டாசு கடை உரிய அனுமதியின்றி செயல்பட்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து விருதுநகர் மாவட்டத்தில் உரிய அனுமதியில்லாமல் செயல்பட்டு வரும் பட்டாசு கடைகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்குமாறு கலெக்டர் ஜெயசீலன் உத்தரவிட்டார்.

    அதன்பேரில் விருதுநகர் மாவட்டத்தில் ரோந்து பணிகளை தீவிரப்படுத்தும்படி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாள் அறிவுறுத்தினார். இதையடுத்து மாவட்டம் முழுவதும் அனுமதியில்லாமல் செயல்படும் பட்டாசு கடைகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கும் பணிகளில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

    நேற்று விருதுநகர், சிவகாசி, ராஜபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இதில் அனுமதியின்றியும், பாதுகாப்பில்லாமலும், ஏராளமான அட்டை பெட்டிகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த ரூ.20 லட்சம் மதிப்பிலான பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டன. முதியவர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

    சாத்தூர் மேட்டமலையை சேர்ந்த நாராயணசாமி(69) வீட்டில் உரிய அனுமதியில்லாமல் பட்டாசுகள் விற்பனைக்காக வைத்திருந்தார். சாத்தூர் டவுன் போலீசார் பட்டாசுகளை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.

    விருதுநகரை சேர்ந்த மாரீஸ்வரன் என்பவர் கடைவீதியில் அனுமதியின்றி பட்டாசுகள் தயாரித்தது தெரியவந்தது. வச்சகாரப்பட்டி போலீசார் அவரை கைது செய்தனர். விருதுநகர் பகுதியில் நடந்த சோதனையில் சேடப்பட்டியை சேர்ந்த திருமுருகன், கண்ணன் ஆகியோரிடம் இருந்து 110 குரோஸ் கருந்திரிகளை வச்சகாரப்பட்டி போலீசார் பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.

    மேலும் திருத்தங்கல் பகுதிகளில் அனுமதியின்றி பட்டாசுகள் வைத்திருந்த கவுதம், கார்த்திகேயன், முத்துகுமார், மற்றொரு முத்துகுமார், சுந்தர், கான்ஸ்டைன், செல்வபாண்டி, தர்மர், காளியப்பன், செல்லதுரை, கணேஷ்பாபு, செல்வம் ஆகியோரிடம் இருந்து ஏராளமான அட்டை பெட்டிகளில் பட்டாசுகளை பறிமுதல் செய்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிவகாசி பகுதியை சேர்ந்த காளிராஜ், சேதுராஜ், கணேசன், ஜெயராஜ், செல்வம், கூமாபட்டி பரத் ஆகியோரிடம் இருந்தும் லட்சக்கணக்கில் மதிப்புள்ள பட்டாசுகளை பறிமுதல் செய்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 5 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
    • மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

    விருதுநகர்

    விருதுநகர் பஜார் பகுதியில் கடந்த ஜூலை 25-ந் தேதி தொழிலதிபர் குமரன் (எ) குமரவேல் அவரது அலுவலகத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பான வழக்கில் கைது செய்யப் பட்டவர்களில் 7 பேர் ஏற்கனவே குண்டர் சட்டத்தில் அடைக்கப் பட்டுள்ளனர்.

    இந்த நிலையில் பொது மக்களின் பாதுகாப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும், பொது அமைதிக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையிலும் இவர்களது நடவடிக்கை இருந்ததாக போலீசார் விசாரணையில் தெரிய வந்தது. இந்த நிலையில் பொது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவும், மேலும் குற்றச்சம்பவங்கள் நடக்காமல் தடுக்கும் வகையிலும் குமரவேல் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அரவிந்த் (27), விக்னேஷ் (26), நவ்பல் (22), ஞானசேகர் (58), விக்ரமன் (56) ஆகிய 5 பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாள் பரிந்துரை செய்தார்.

    அதன்பேரில் கலெக்டர் ஜெயசீலன் அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அதன்படி விருதுநகர் மேற்கு போலீசார் அவர்கள் 5 பேரையும் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

    • அங்கன்வாடி ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    • மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து கண்டன உரையாற்றினர்.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி, நரிக்குடி ஒன்றி யங்களில் உள்ள 40-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி மையங்களில் 150-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சுழி, நரிக்குடியில் உள்ள குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவி யாளர்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் பாண்டியம்மாள்,சி.ஐ.டி.யு. தலைவர் சாராள், ஒன்றிய கன்வீனர் சுரேஷ் குமார், அங்கன்வாடி ஊழியர்கள் சங்க நிர்வாகி இந்திராணி ஆகியோர் கலந்துகொண்டு மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து கண்டன உரையாற்றினர்.

    மேலும் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்கள் மற்றும் சி.ஐ.டி.யு. சங்கத்தினர் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் திரளாக கலந்து கொண்டு மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    • பட்டாசு தொழிற்சாலைகள் பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என காங்கிரஸ் மேற்கு மாவட்ட தலைவர் ரங்கசாமி கூறி உள்ளார்.
    • மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் வலியுறுத்துகிறோம்.

    விருதுநகர்

    விருதுநகர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலை வர் ரங்கசாமி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதா வது:-

    சிவகாசியை அருகே கிச்சனாயக்கம்பட்டி, எம்.புதுப்பட்டி அருகே ரெங்க பாளையம் பகுதிக ளில் நடந்த பட்டாசு ஆலை விபத் துகளில் பெண்கள் உட்பட 14 தொழிலாளர்கள் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந் துள்ளனர். உயிரிழந்த அனைத்து தொழிலாளர் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை விருதுநகர் மேற்கு மாவட்டம் காங்கிரஸ் கமிட்டி தெரிவித்துக் கொள்கிறது.

    மேலும் இந்த கொடூர விபத்தில் காயம் அடைந்த வர்கள் வெகு விரைவில் குண மடையவும், அவர்க ளுக்கு உரிய தகுந்த சிகிச்சை அளித்திடவும், உயிரிழந்த தொழிலாளர்கள் குடும்பத் திற்கு தமிழக அரசு ரூ.10 லட்சம் இழப்பீடு மற்றும் இலவச வீடு மற்றும் வழங்கி டவும் கேட்டுக்கொள்கி றேன்.

    தமிழக முதல்-அமைச்சர் இதில் கடுமையான நடவடிக் கைகள் எடுத்து இனி இப்படி ஒரு அசம்பாவிதம் நடைபெறாமல் தடுத்து நிறுத்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும், பட்டாசு வெடி விபத்தில் உயிரிழந்த வர்கள் குடும்பங்களில் ஒரு வருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் எனவும் தமிழக அரசை கேட்டுக் கொள்கிறோம்.

    மேலும் பட்டாசு நிறு வனம் ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கிடவும், விபத்துகள் ஏற்படாத வகையில் பட்டாசு உற்பத்தி நிறுவனங்கள் பாதுகாப்பு விதிமுறைகளை கடுமையாக கடைபிடித்திட அதிகாரிகள் தக்க வகையில் உறுதி செய்ய வேண்டும் எனவும் விருதுநகர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் வலியுறுத்துகிறோம்.

    இவ்வாறு அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    • மோட்டார் சைக்கிளில் வந்து பெண்களிடம் நகை பறிக்கும் மர்ம நபர்களை கைது செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளது.
    • ஆள்நடமாட்டம் அதிகம் உள்ள தெருக்களில் நடந்த இந்த சம்பவங்கள் அந்த பகுதியினரை அதிர்ச்சி யடைய வைத்துள்ளது.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் தெருக்க ளில் நடந்து செல்லும் பெண்களை மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்து நகை பறித்து செல்லும் சம்பவங்கள் அதிகரித்து உள்ளது. நேற்று அருகருகே உள்ள பகுதிகளில் 2 பெண்க ளிடம் மர்ம நபர்கள் நகையை பறித்து சென்றனர்.

    ராஜபாளையம் சின்ன சுரைக்காய்பட்டி தெருவை சேர்ந்தவர் முத்துமாரி (வயது 43). இவரது கணவர் கோவில்பூசாரி. நேற்று இரவு அக்ரகார தெருவில் உறவினர் ரெங்கநாயகி மற்றும் மகள் கார்த்தீஸ்வரி யுடன் முத்துமாரி நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது ஒரு மோட்டார் சைக்கிள் பின்தொடர்ந்து வந்தது.அதற்கு வழி விடுவதற்காக முத்துமாரி ஒதுங்கி நின்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் இருந்த 2 மர்ம நபர்கள் அவ ரது கழுத்தில் கிடந்த செயினை கண்ணிமைக்கும் நேரத்தில் பறித்து சென்ற னர்.

    இதுகுறித்து தெற்கு போலீஸ் நிலையத்தில் முத்துமாரி புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சார்லஸ் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்.

    அதேபோல் மாடசாமி கோவில் தெருவை சேர்ந்த வர் வேலம்மாள் (50). இவர் அந்த பகுதியில் உள்ள மெயின் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் பின்னால் வந்த 2 மர்ம நபர்கள்திடீரென வேலம்மாள் கழுத்தில் கிடந்த செயினை இழுத்த னர்.

    சுதாரித்து கொண்ட அவர் செயினை இறுக்கி பிடித்து கொண்டார். இத னால் பாதி செயினை மட்டும் பறித்துக் கொண்டு மர்ம நபர்கள் தப்பி சென்றனர்.

    இதுகுறித்து வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் ரமேஷ்கண்ணன் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்.

    ஆள்நடமாட்டம் அதிகம் உள்ள தெருக்களில் நடந்த இந்த சம்பவங்கள் அந்த பகுதியினரை அதிர்ச்சி யடைய வைத்துள்ளது.

    இதுகுறித்து அந்த பகுதி பொதுமக்கள் கூறுகையில், நகை பறிப்பு சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் முழுமை யாக கைது செய்யப்படாமல் உள்ளனர். இதனால் நகை பறிப்பு சம்பவங்கள் அடிக்கடி சர்வ சாதாரண மாக நடைபெறுகின்றன. போலீசார் உரிய நட வடிக்கை எடுத்து குற்ற வாளிகளை கைது செய்து மேலும் நகை பறிப்பு சம்ப வங்கள் நடைபெறாமல் தடுக்க வேண்டும் என்றனர்.

    • பாம்பு கடித்து பெண் இறந்தார்.
    • இருக்கன்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    விருதுநகர்

    சாத்தூர் அருகே உள்ள எம்.மேட்டுப்பட்டி நடுத்தெருவை சேர்ந்தவர் வசந்தா (64). இவர் அங்குள்ள வயக்காட்டில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அவரை பாம்பு கடித்தது. அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து இருக்கன்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • பட்டாசுகள் பறிமுதல்; 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • பாண்டியராஜ் (33) என்பவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    விருதுநகர்

    சிவகாசி அருகே மேட்டமலை வாடியூர் ரோட்டில் உள்ள பட்டாசு கடை ஒன்றின் பின்புறம் உள்ள கட்டிடத்தில் அனுமதியின்றி தடை செய்யப்பட்ட பட்டாசுகள் வைக்கப்பட்டிருந்தது. போலீசார் அவற்றை பறிமுதல் செய்து அந்த பட்டாசுகளை பதுக்கி வைத்திருந்த பெண் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து சிவகாசி வி.கே.எஸ்.தெருவை சேர்ந்த விஜயன் (38), ஜெனார்தனன் (42) ஆகியோரை கைது செய்தனர். வெம்பக்கோட்டை பகுதியில் வங்கி அருகே தகர செட்டு ஒன்றில் 3 அட்டை பெட்டிகளில் பட்டாசுகள் வைத்திருந்தது போலீசாரின் சோதனையில் தெரியவந்தது. இதுகுறித்து பாண்டியராஜ் (33) என்பவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    • விபத்துகளில் வாலிபர்-பெண் பரிதாபமாக இறந்தனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    விருதுநகர்

    காரியாபட்டி அருகே உள்ள சாலை இலுப்பை குளம் பகுதியை சேர்ந்தவர் பாண்டிமுருகன் (24). இவர் திருச்சுழி-காரியாபட்டி மெயின் ரோட்டில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த டிராக்டர் இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த பாண்டிமுருகன் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து திருச்சுழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    விருதுநகர் இந்திராநகர் பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன். இவரது மனைவி முத்துலட்சுமி (38). இவர்கள் காசுகடை பஜார் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது பின்னால் அமர்ந்திருந்த முத்துலட்சுமி திடீரென தவறி விழுந்தார். இதில் படுகாயமடைந்த அவரை மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து விருதுநகர் மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • விருதுநகர் அருகே வெவ்வேறு சம்பவங்களில் டிரைவர், மாணவி தற்கொலை செய்து கொண்டனர்.
    • இதுகுறித்து சிவகாசி டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் அருகே உள்ள எச்சநாயக்கன் பட்டியை சேர்ந்தவர் சண்முகத்தாய். இவரது மகன் கதிரேசன் (24), டிரைவர். இவருக்கு மதுப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இதனை அவரது தாய் கண்டித்துள்ளார். தனக்கு வாழ விருப்பமில்லை என்றும், தான் சாகப்போவதாகவும் அடிக்கடி தாயிடம் கூறிவந்தார். சம்பவத்தன்று வெளியே செல்வதற்காக தாயிடம் பணம் கேட்டுள்ளார். ஆனால் அவர் பணம் கொடுக்கவில்லை. இந்த நிலையில் சண்முகத்தாய் வெளியே சென்று விட்டு திரும்பி வந்த போது கதிரேசன் தூக்கில் தொங்கியபடி பிணமாக கிடந்தார். இதுகுறித்து சூலக்கரை போலீசில் கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் விசாரணை நடந்து வருகிறது.

    சிவகாசி அரசிகொல்லன் தெருவை சேர்ந்தவர் விமலாதேவி.இவரது மகள் கவுசிகா. அங்குள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். சம்பவத்தன்று தோழிக்கு பரிசு பொருள் வாங்குவதற்காக கடைக்கு செல்ல வேண்டும் என கவுசிகா தாயிடம் கூறியுள்ளார். அப்போது அருகில் உள்ள கடையில் மளிகை பொருள் வாங்கி வருமாறு கவுசிகாவிடம் அவர் கூறியுள்ளார். ஆனால் கவுசிகா கோபித்துக் கொண்டு மறுத்துவிட்டார். இதனால் விமலாதேவி கடைக்கு சென்றார். திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் உள்அறையில் கவுசிகா தூக்கில் தொங்கியபடி இருந்தார். உறவினர்கள் அவரை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இதுகுறித்து சிவகாசி டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கிப்ட் பேக் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் வெளியில் தப்பிக்க வழியின்றி அந்த அறைக்குள்ளேயே உடல் கருகினர்.
    • ரெங்கபாளையம் பட்டாசு ஆலை விபத்து தொடர்பாக எம்.புதுப்பட்டி போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்

    சிவகாசி:

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள கங்காகுளத்தை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி (வயது 43). இவர் ஸ்ரீவில்லிபுத்தூரை அடுத்த எம்.புதுப்பட்டி அருகே ரெங்கபாளையம் கிராமத்தில் கம்மாபட்டி பகுதியில் கனிஷ்கர் பயர் ஒர்க்ஸ் என்ற பெயரில் பட்டாசு ஆலை நடத்தி வருகிறார். அதன் அருகிலேயே கனிஷ்கர் டிரேடர்ஸ் என்ற பெயரில் பட்டாசு விற்பனை கடையும் வைத்திருந்தார்.

    தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், இந்த கடையின் பின்புறம் அனுமதி பெறாமல் விதிகளை மீறி தகர செட் அமைத்து உரிய பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி கிப்ட் பாக்ஸ் பேக்கிங் செய்து வந்தார். நேற்று மதியம் 1.30 மணி அளவில் அங்கு பட்டாசு வாங்க வந்த வெளியூரை சேர்ந்த நபர்கள் சரவெடி ஒன்றை பரிசோதனை முறையில் கடையின் முன்பாக வெடித்து பார்த்துள்ளனர்.

    அப்போது எதிர்பாராத விதமாக அதிலிருந்து தீப்பொறி பறந்து விபத்து ஏற்பட்டது. அடுத்த வினாடி அங்கிருந்த அனைத்து வெடிகளும் வெடித்து சிதறின. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த கிப்ட் பேக் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் வெளியில் தப்பிக்க வழியின்றி அந்த அறைக்குள்ளேயே உடல் கருகினர்.

    விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் சிவகாசி, விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு ஆகிய ஊர்களில் இருந்து 50-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் வந்து சுமார் 5 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீ முழுமையாக அணைப்பட்ட பிறகே பலியானவர்களின் உடலை மீட்கும் பணி நடந்தது.

    இதில் அங்கு பணியாற்றிய வடக்கு அழகாபுரியைச் சேர்ந்த மகாதேவி (50), பஞ்சவர்ணம் (35), பாலமுருகன் (30), தமிழ்ச்செல்வி (55), எஸ்.அம்மாபட்டியை சேர்ந்த முனீஸ்வரி (32), அழகாபுரியைச் சேர்ந்த தங்கமலை (33), அனிதா (45), லட்சுமியாபுரத்தைச் சேர்ந்த பாக்கியம் (35), குருவம்மாள் (55), இந்திரா (45), லட்சுமி (28), செல்லம்மாள் (40), முத்துலட்சுமி (36) ஆகிய 13 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

    மேலும் படுகாயம் அடைந்த சின்னத்தாய் (35), பொன்னுத்தாய் (55) ஆகிய இருவரும் விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதற்கிடையே கரிக்கட்டையாக மீட்கப்பட்ட பலியான 13 பேரின் உடல்களும் அதே மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு பின்னர் உறவினர்களும் ஒப்படைக்கப்பட்டது.

    அதேபோல் சிவகாசி அருகே மாரனேரி கிச்சநாயக்கன்பட்டியில் உள்ள முத்து விஜயன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் பேன்சி ரக பட்டாசு உற்பத்திக்காக மருந்து கலவை செய்தபோது ஏற்பட்ட வெடி விபத்தில் நதிக்குடியை சேர்ந்த வேம்பு (60) என்பவர் உடல் கருகி உயிரிழந்தார். ஒரே நாளில் பட்டாசு ஆலை விபத்துகளில் 14 பேர் பலியாகினர்.

    12 பெண்கள் உள்பட 13 பேரை உயிரை பலி வாங்கிய ரெங்கபாளையம் பட்டாசு ஆலை விபத்து தொடர்பாக எம்.புதுப்பட்டி போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். முடிவில் ஆலை உரிமையாளர் சுந்தரமூர்த்தி, போர்மேன் கனகு என்ற கனகராஜ் (41), மேலாளர் ராம்குமார் (27) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். அவர்கள் மீது பட்டாசு தயாரிக்கும் வெடி மருந்துகளை முறையாக கையாளாதது, பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யாதது, பட்டாசுகளை பாதுகாப்பின்றி விதிகளை மீறி வைத்திருந்தது என்பது உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    முன்னதாக விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பட்டாசு விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினர்களை தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.

    பட்டாசு ஆலை விபத்தில் 14 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் தொழிற் பாதுகாப்புத் துறை இணை இயக்குனர் அடங்கிய குழுவினர் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய கலெக்டர் ஜெயசீலன் உத்தரவிட்டுள்ளார்.

    ×