என் மலர்
விருதுநகர்
ஈரோடு சூளை சி.எஸ். நகரைச் சேர்ந்தவர் பாபு (56). சோப்பு தயாரிப்பு நிறுவனம் உள்பட பல்வேறு நிறுவனங்களை நடத்தி வந்தார்.
இவர் அசோகபுரம் பிரதான சாலையில் அலுவலகம் அமைத்து ஏலச்சீட்டு நடத்தினார். இதில் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.10 லட்சம் வரை நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சீட்டு பணம் செலுத்தினர். இவர் ஏலச்சீட்டில் பணம் எடுத்தவர்களுக்கு பணம் கொடுக்காமல் இழுத்தடித்து வந்தார்.
இந்நிலையில் கடந்த 28-ந்தேதி ஏலச்சீட்டு நடத்தி வந்த பாபு திடீரென தலைமறைவானார். இதனால் பணம் கட்டிய பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து பாதிக்கப்பட்ட பொதுமக்கள் கடந்த 28-ந்தேதி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் செய்தனர். மேலும் ஏலச்சீட்டு நடத்தி மோசடி செய்த பாபுவை கைது செய்ய வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
அதைத் தொடர்ந்து மீண்டும் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பணம் செலுத்தி ஏமாந்த பொதுமக்கள் புகார் செய்தனர். இதையடுத்து இந்த வழக்கு மாவட்ட குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது. மேலும் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் இதுகுறித்து புகார் செய்யலாம் என்றும் போலீசார் அறிவித்தனர்.
இதைத் தொடர்ந்து பணம் செலுத்தி ஏமாந்தவர்கள் குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்து வருகின்றனர்.
இதுகுறித்து டவுன் டி.எஸ்.பி ஆனந்தகுமார் கூறியதாவது:-
ஏலச்சீட்டு மோசடி குறித்து இதுவரை 360 பேர் புகார் செய்துள்ளனர். புகார்கள் குறித்து சட்ட வல்லுனர்களுடன் ஆலோசித்து இன்னும் ஓரிரு நாட்களில் சம்பந்தப்பட்டவர் மீது வழக்கு பதிவு செய்யப்படும். வேறு யாராவது இதுபோல் ஏலச்சீட்டில் பணம் செலுத்தி ஏமாந்து இருந்தால் அவர்களும் முன் வந்து புகார் அளிக்கலாம். தலைமறைவாக இருக்கும் தொழில் அதிபரை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஏலச்சீட்டு நடத்திய பாபு ரூ.10 கோடி வரை மோசடி செய்திருந்த நிலையில் தற்போது அவர் மீது புகார்கள் குவிந்து வருவதால் மேலும் பல கோடி ரூபாய் அவர் மோசடி செய்திருக்கலாம் என்று தெரிய வருகிறது.
புதுடெல்லி:
உத்தரபிரதேச மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா அங்கு தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
அவர் நாள்தோறும் அதிரடியான தேர்தல் வாக்குறுதியை அளித்து அசத்தி வருகிறார். அவரது தேர்தல் வாக்குறுதிக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.
இந்த நிலையில் பிரியங்கா தனது டுவிட்டர் பக்கத்தில் தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-
பள்ளி மாணவிகளுக்கு ஸ்கூட்டி மற்றும் ஸ்மார்ட் போன் இலவசமாக வழங்கப்படும். பெண்களுக்கு வருடந்தோறும் 3 கியாஸ் சிலிண்டர் இலவசமாக வழங்கப்படும்.

காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் பஸ்களில் பெண்களுக்கு கட்டண சலுகை அளிக்கப்படும். விதவைகளுக்கு ரூ.1000 நிதியுதவி வழங்கப்படும். காங்கிரஸ் கட்சி தேர்தலில் போட்டியிட 40 சதவீத பெண்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும்.
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும்.
இவ்வாறு பிரியங்கா அதில் தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்...ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி வீட்டுக் காவலில் அடைப்பு
விருதுநகர் மேற்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்கம் போக்குவரத்து பிரிவிற்கு ராஜபாளையத்தில் 2 பணிமனை மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, விருதுநகர் ஆகிய 5 பணிமனைகளை சேர்ந்த புதிய நிர்வாகிகளுக்கு நியமனம் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி விருதுநகரில் நடந்தது.
சிறப்பு அழைப்பாளர்களாக விருதுநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர்-முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, அண்ணா தொழிற்சங்க பேரவையின் மாநில செயலாளர் கமலக்கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளுக்கு நியமன சான்றிதழ்களை வழங்கினர்.
கூட்டத்தில் கே.டி. ராஜேந்திரபாலாஜி பேசியதாவது:-
அ.தி.மு.க.வுக்கு எப்போதெல்லாம் சோதனைகள் வருகின்றதோ அப்போதெல்லாம் இருந்தவர்கள் தான் இப்போதும் இருக்கிறார்கள். திடீரென்று வந்தவர்கள் திடீரென்று போய் விட்டார்கள்.
அ.தி.மு.க. என்றும் சாகா வரம்பெற்ற இயக்கம். அ.தி.மு.க.வுக்கு 96-ல் ஏற்படாத சோதனையா தற்போது ஏற்பட்டுள்ளது. அந்த நேரத்தில்கூட திருத்தங்கல் நகராட்சியில் நான் வைஸ் சேர்மனாக வெற்றி பெற்றேன்.
சோதனை என்பது அ.தி.மு.க.வுக்கு புதிதல்ல. சோதனைகள் வரும்போது தான் எறிகின்ற பந்து எப்படி துள்ளி எழுந்து வருமோ அதே போன்று அ.தி.மு.க. மீண்டும் எழும். இங்கிருந்த பலபேர் வேறு இடத்திற்கு சென்றிருப்பார்கள்.
பழத்தோட்டத்தை நாடி அவர்கள் பறந்து சென்றிருக்கின்றனர். ஆனால் நாம் தோட்டக்காரர்கள். நாம் நல்ல விதைகளை விதைத்து, விளைவித்து தோட்டத்தை பாதுகாக்க முடியும். பழங்களை உற்பத்தி செய்ய முடியும். ஆகையால் பழத்தோட்டக்காரர்களாக நாம் இருப்போம்.
இவ்வாறு அவர் பேசினார்.

விருதுநகர் மாவட்டத்தில் நேற்று 978 இடங்களில் நடந்த 7-வது கொரோனா தடுப்பூசி முகாமில் 14,583 பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 29,716 பேருக்கு 2-வது தவணை தடுப்பூசியும் போடப்பட்டுள்ளது. ஆக மொத்தம் 44, 299 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இதுவரை 11 லட்சத்து 2 ஆயிரத்து 321 பேருக்கு முதல் தவணைத் தடுப்பூசியும், 5 லட்சத்து 16 ஆயிரத்து 22 பேருக்கு 2-வது தவணை தடுப்பூசியும் ஆக மொத்தம் 16 லட்சத்து 18 ஆயிரத்து 343 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்தியா முழுவதும் புலிகளின் எண்ணிக்கையை கண்டறிய தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் சார்பில் கணக்கெடுக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகத்தில் இந்தப்பணிகள் முதன் முறையாக தொடங்கப்பட்டுள்ளது. ராஜபாளையம், சேத்தூர் போன்ற பகுதிகளில் கணக்கெடுக்கும் பணிகள் தொடங்கப்பட்டது.
தேவதானம் வனவர் கார்த்திக் ராஜா, வன உயிரின ஆராய்ச்சியாளர் பார்த்திபன் தலைமையிலான குழுவினர் தேவதானம் சாஸ்தா கோவில் மலைப்பகுதிக்குள் சென்றனர்.
அடர்ந்த வனப்பகுதிக்குள் புலிகள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள கேமராக்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது பின்னர் புலிகளின் கால் தடங்கள், எச்சங்கள் சேகரிக்கப்பட்டன.
பொள்ளாச்சியில் உள்ள மேகமலை புலிகள் சரணாலய ஆராய்ச்சியாளர் பீட்டர் சக்கரவர்த்தி தலைமையில் பயிற்சி அளிக்கப்பட்டது. புதிதாக தேர்வு செய்யப்பட்ட வனவர்கள், பங்கேற்பாளர்களுக்கு புலிகள் குறித்து விளக்கம் கூறப்பட்டது.
மேற்கு தொடர்ச்சி மலையில் பொருத்தப்பட்டுள்ள கேமராக்கள் 40 நாட்களுக்கு பின் எடுக்கப்பட்டு, அதன் பதிவுகள் டேராடூன் தேசிய புலிகள் ஆய்வு மையத்திற்கு அனுப்பப்படும். அதன் பின்னர் ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகத்தில் புலிகளின் எண்ணிக்கை எவ்வளவு என்பது குறித்து தெரியவரும்.
தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தவும், தொற்றில் இருந்து பொதுமக்களை பாதுகாக்கவும் தடுப்பூசி போடும் பணிகளை அரசு தீவிரப்படுத்தி உள்ளது.

தமிழகம் முழுவதும் இதுவரை நடந்த 6 கட்ட மெகா தடுப்பூசி முகாம்களில் இதுவரை 1 கோடியே 33 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் 7-வது கட்ட மெகா கொரோனா தடுப்பூசி முகாம் இன்று நடந்தது. விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை யூனியனுக்கு உட்பட்ட கஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சியில் உள்ள ராஜ்கோ மகாலிலும் தடுப்பூசி முகாம் நடந்தது.
முத்துராமலிங்கத்தேவர் ஜெயந்தியையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அதன் பிறகு மதுரை திரும்பும் வழியில் விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை யூனியனுக்கு உட்பட்ட கஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சியில் நடந்த கொரோனா தடுப்பூசி முகாமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். தடுப்பூசி போட வந்திருந்த பொதுமக்களிடம் பேசிய முதல்வர், மருத்துவ பணியாளர்களிடம் விவரங்களையும் கேட்டறிந்தார்.
அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாத ரெட்டி ஆகியோர் உடனிருந்தனர்.
அதன்பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கார் மூலம் மதுரை விமான நிலையம் வந்தடைந்தார்.






