search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராஜேந்திர பாலாஜி
    X
    ராஜேந்திர பாலாஜி

    அ.தி.மு.க. சாகாவரம் பெற்ற இயக்கம்- முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பேச்சு

    அ.தி.மு.க.வுக்கு எப்போதெல்லாம் சோதனைகள் வருகின்றதோ அப்போதெல்லாம் இருந்தவர்கள் தான் இப்போதும் இருக்கிறார்கள் என முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.
    விருதுநகர்:

    விருதுநகர் மேற்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்கம் போக்குவரத்து பிரிவிற்கு ராஜபாளையத்தில் 2 பணிமனை மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, விருதுநகர் ஆகிய 5 பணிமனைகளை சேர்ந்த புதிய நிர்வாகிகளுக்கு நியமனம் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி விருதுநகரில் நடந்தது.

    சிறப்பு அழைப்பாளர்களாக விருதுநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர்-முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, அண்ணா தொழிற்சங்க பேரவையின் மாநில செயலாளர் கமலக்கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளுக்கு நியமன சான்றிதழ்களை வழங்கினர்.

    கூட்டத்தில் கே.டி. ராஜேந்திரபாலாஜி பேசியதாவது:-

    அ.தி.மு.க.வுக்கு எப்போதெல்லாம் சோதனைகள் வருகின்றதோ அப்போதெல்லாம் இருந்தவர்கள் தான் இப்போதும் இருக்கிறார்கள். திடீரென்று வந்தவர்கள் திடீரென்று போய் விட்டார்கள்.

    அ.தி.மு.க. என்றும் சாகா வரம்பெற்ற இயக்கம். அ.தி.மு.க.வுக்கு 96-ல் ஏற்படாத சோதனையா தற்போது ஏற்பட்டுள்ளது. அந்த நேரத்தில்கூட திருத்தங்கல் நகராட்சியில் நான் வைஸ் சேர்மனாக வெற்றி பெற்றேன்.

    சோதனை என்பது அ.தி.மு.க.வுக்கு புதிதல்ல. சோதனைகள் வரும்போது தான் எறிகின்ற பந்து எப்படி துள்ளி எழுந்து வருமோ அதே போன்று அ.தி.மு.க. மீண்டும் எழும். இங்கிருந்த பலபேர் வேறு இடத்திற்கு சென்றிருப்பார்கள்.

    பழத்தோட்டத்தை நாடி அவர்கள் பறந்து சென்றிருக்கின்றனர். ஆனால் நாம் தோட்டக்காரர்கள். நாம் நல்ல விதைகளை விதைத்து, விளைவித்து தோட்டத்தை பாதுகாக்க முடியும். பழங்களை உற்பத்தி செய்ய முடியும். ஆகையால் பழத்தோட்டக்காரர்களாக நாம் இருப்போம்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    Next Story
    ×