என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
![புலி புலி](https://img.maalaimalar.com/Articles/2021/Oct/202110301544364978_Tamil_News_Tamil-News-Tiger-survey-begins-in-Rajapalayam-Western-Ghats_SECVPF.gif)
X
புலி
ராஜபாளையம் மேற்குதொடர்ச்சி மலையில் புலிகள் கணக்கெடுப்பு தொடக்கம்
By
மாலை மலர்30 Oct 2021 10:14 AM GMT (Updated: 30 Oct 2021 10:14 AM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
மேற்கு தொடர்ச்சி மலையில் பொருத்தப்பட்டுள்ள கேமராக்கள் 40 நாட்களுக்கு பின் எடுக்கப்பட்டு, அதன் பதிவுகள் டேராடூன் தேசிய புலிகள் ஆய்வு மையத்திற்கு அனுப்பப்படும்.
ராஜபாளையம்:
இந்தியா முழுவதும் புலிகளின் எண்ணிக்கையை கண்டறிய தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் சார்பில் கணக்கெடுக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகத்தில் இந்தப்பணிகள் முதன் முறையாக தொடங்கப்பட்டுள்ளது. ராஜபாளையம், சேத்தூர் போன்ற பகுதிகளில் கணக்கெடுக்கும் பணிகள் தொடங்கப்பட்டது.
தேவதானம் வனவர் கார்த்திக் ராஜா, வன உயிரின ஆராய்ச்சியாளர் பார்த்திபன் தலைமையிலான குழுவினர் தேவதானம் சாஸ்தா கோவில் மலைப்பகுதிக்குள் சென்றனர்.
அடர்ந்த வனப்பகுதிக்குள் புலிகள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள கேமராக்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது பின்னர் புலிகளின் கால் தடங்கள், எச்சங்கள் சேகரிக்கப்பட்டன.
பொள்ளாச்சியில் உள்ள மேகமலை புலிகள் சரணாலய ஆராய்ச்சியாளர் பீட்டர் சக்கரவர்த்தி தலைமையில் பயிற்சி அளிக்கப்பட்டது. புதிதாக தேர்வு செய்யப்பட்ட வனவர்கள், பங்கேற்பாளர்களுக்கு புலிகள் குறித்து விளக்கம் கூறப்பட்டது.
மேற்கு தொடர்ச்சி மலையில் பொருத்தப்பட்டுள்ள கேமராக்கள் 40 நாட்களுக்கு பின் எடுக்கப்பட்டு, அதன் பதிவுகள் டேராடூன் தேசிய புலிகள் ஆய்வு மையத்திற்கு அனுப்பப்படும். அதன் பின்னர் ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகத்தில் புலிகளின் எண்ணிக்கை எவ்வளவு என்பது குறித்து தெரியவரும்.
இந்தியா முழுவதும் புலிகளின் எண்ணிக்கையை கண்டறிய தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் சார்பில் கணக்கெடுக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகத்தில் இந்தப்பணிகள் முதன் முறையாக தொடங்கப்பட்டுள்ளது. ராஜபாளையம், சேத்தூர் போன்ற பகுதிகளில் கணக்கெடுக்கும் பணிகள் தொடங்கப்பட்டது.
தேவதானம் வனவர் கார்த்திக் ராஜா, வன உயிரின ஆராய்ச்சியாளர் பார்த்திபன் தலைமையிலான குழுவினர் தேவதானம் சாஸ்தா கோவில் மலைப்பகுதிக்குள் சென்றனர்.
அடர்ந்த வனப்பகுதிக்குள் புலிகள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள கேமராக்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது பின்னர் புலிகளின் கால் தடங்கள், எச்சங்கள் சேகரிக்கப்பட்டன.
பொள்ளாச்சியில் உள்ள மேகமலை புலிகள் சரணாலய ஆராய்ச்சியாளர் பீட்டர் சக்கரவர்த்தி தலைமையில் பயிற்சி அளிக்கப்பட்டது. புதிதாக தேர்வு செய்யப்பட்ட வனவர்கள், பங்கேற்பாளர்களுக்கு புலிகள் குறித்து விளக்கம் கூறப்பட்டது.
மேற்கு தொடர்ச்சி மலையில் பொருத்தப்பட்டுள்ள கேமராக்கள் 40 நாட்களுக்கு பின் எடுக்கப்பட்டு, அதன் பதிவுகள் டேராடூன் தேசிய புலிகள் ஆய்வு மையத்திற்கு அனுப்பப்படும். அதன் பின்னர் ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகத்தில் புலிகளின் எண்ணிக்கை எவ்வளவு என்பது குறித்து தெரியவரும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)