என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா தடுப்பூசி
    X
    கொரோனா தடுப்பூசி

    சிறப்பு முகாமில் 44,299 பேருக்கு கொரோனா தடுப்பூசி

    விருதுநகர் மாவட்டத்தில் இதுவரை 11 லட்சத்து 2 ஆயிரத்து 321 பேருக்கு முதல் தவணைத் தடுப்பூசியும், 5 லட்சத்து 16 ஆயிரத்து 22 பேருக்கு 2-வது தவணை தடுப்பூசியும் போடப்பட்டுள்ளது.
    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டத்தில் நேற்று 978 இடங்களில் நடந்த 7-வது கொரோனா தடுப்பூசி முகாமில் 14,583 பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 29,716 பேருக்கு 2-வது தவணை தடுப்பூசியும் போடப்பட்டுள்ளது. ஆக மொத்தம் 44, 299 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

    இதுவரை 11 லட்சத்து 2 ஆயிரத்து 321 பேருக்கு முதல் தவணைத் தடுப்பூசியும், 5 லட்சத்து 16 ஆயிரத்து 22 பேருக்கு 2-வது தவணை தடுப்பூசியும் ஆக மொத்தம் 16 லட்சத்து 18 ஆயிரத்து 343 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
    Next Story
    ×