என் மலர்
விருதுநகர்
இந்த நிலையில் அழகுதேவர் அதே பகுதியில் உள்ள பாழடைந்த கிணற்றில் பிணமாக கிடப்பதாக பரளச்சி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவரது உடலை மீட்டனர்.
அப்போது அவரது உடலில் ரத்த காயங்கள் இருந்தனர். தொடர்ந்து போலீசார் பிரேத பரிசோதனைக்காக அழகுதேவர் உடலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் அழகுதேவர் கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என விசாரித்து வருகின்றனர்.
விருதுநகர்:
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ளது வத்திராயிருப்பு. இங்குள்ள வ.புதுப்பட்டியில் இருந்து கான்சாபுரம் செல்லும் சாலையில் வனத்துறையினர் ரோந்து சென்றனர்.
அவர்கள் அங்குள்ள அர்ச்சனாபுரம் பெரியஓடை அருகே சென்றபோது எதிரே 3 பேர் வந்தனர். அவர்கள் வனத்துறையினரை கண்டதும் அங்கிருந்து தப்பி ஓடினர். இதனால் சந்தேகம் அடைந்த வனத் துறையினர், போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
வத்திராயிருப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலாஜி தலைமையிலான போலீசார் மற்றும் நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் விரைந்து வந்து சம்பவ இடத்தை சோதனை செய்தனர். அங்கு முட்புதரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2 பைகளை சந்தேகத்தின் அடிப்படையில் கைப்பற்றி பார்த்தனர். அந்த பையில் கலர் கல ராக 9 நாட்டு வெடிகுண்டுகள் இருந்தன. இதனை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுதொடர்பாக உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீஸ் துணை சூப்பிரண்டு சபரிநாதன் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் சம்பவ இடம் வந்து வெடிகுண்டுகளை பார்வையிட்டனர். விசாரணையில் கைப்பற்றப்பட்டவை நாட்டு வெடிகுண்டுகள் என தெரியவந்தது. பாதுகாப்பு கருதி அந்த வெடிகுண்டுகள் ஓடைப் பகுதியில் பள்ளம் தோண்டி புதைக்கப்பட்டது.
அதனை பதுக்கியவர்கள் யார்? தப்பி ஓடியவர்கள் யார்? என போலீசார் விசாரணையில் இறங்கினர். இதில் தப்பி ஓடிய 3 பேரும் வ.புதுப்பட்டி கிறிஸ்டியான் பேட்டையை சேர்ந்த புஷ்பராஜ் (வயது 23), சின்னமணி (20), சரத்குமார் (20) என தெரிய வந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கிறிஸ்டியான பேட்டை பகுதியைச் சேர்ந்த சுபாஷ் என்பவர் ஓரு தரப்பினரால் கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலைக்கு பழி வாங்குவதற்காக எதிர்தரப்பினரை தாக்க வெடிகுண்டுகள் தயாரிக்கப்பட்டு இருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.
கைதான 3 பேரும் சுபாஷ் தரப்பைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. இதனால் அவர்களிடம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகர் வத்திராயிருப்பில் முகாமிட்டு நேரடியாக விசாரணை நடத்தி வருகிறார்.
ஸ்ரீவில்லிபுத்தூர்:
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மம்சாபுரத்தை சேர்ந்தவர் பவுன்ராஜ். இவரது கரும்பு ஆலையில் திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை கல்லாபுரம் பகுதியை சேர்ந்த ராஜா (வயது 36) வேலை பார்த்து வந்தார். இதற்காக அவரது குடும்பத்தினரும் அங்கேயே தங்கி உள்ளனர்.
கடந்த 14-ந்தேதி ராஜா, மனைவியிடம் பணம் பெற்றுக் கொண்டு வெளியில் சென்று வருவதாக கூறி சென்றார். அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை.
பல்வேறு இடங்களில் தேடியும் ராஜா கிடைக்கவில்லை. இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகில் உள்ள மொட்டை பத்தான் கண்மாயில் 25 வயது மதிக்கத்தக்க ஆண் உடல் கிடப்பதாக கிராம அலுவலருக்கு தகவல் வந்தது.
அதன்பேரில் தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதில் அவர் மாயமான ராஜா என தெரியவந்தது.
இதுகுறித்து அவரது மனைவி ராஜேஸ்வரி கொடுத்த புகாரின் அடிப்படையில் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜா எப்படி இறந்தார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






