search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மோசடி
    X
    மோசடி

    அரசு வேலை வாங்கித்தருவதாக 13 லட்சம் மோசடி

    அருப்புக்கோட்டையில் அரசு வேலை வாங்கித்தருவதாக 13 லட்ச ரூபாய் மோசடி செய்ததாக 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே உள்ள பாலையம்பட்டியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது52). இவர் அருப்புக்கோட்டை டவுன் போலீசில் புகார் கொடுத்துள்ளார். 

    அதில் எனக்கும், எனது தம்பி மோகன்ராஜ், நண்பர் குணசீலன் ஆகிய 3 பேருக்கும் டி.என்.பி.எஸ்.சி. மூலம் அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி தென்காசி மாவட்டம், புளியங்குடியை சேர்ந்த ராமமூர்த்தி, தூத்துக்குடியை சேர்ந்த பாலகுரு, சென்னையைச் சேர்ந்த சரவணன் ஆகிய 3 பேர் ஆசை வார்த்தை கூறினர்.

    அரசு வேலைக்காக இவர்களிடம் பல்வேறு தவணைகளில் ரூ.16 லட்சத்து 35 ஆயிரத்தை செலுத்தினோம். பணம் பெற்றுக்கொண்டபின் வேலை வாங்கித்தரவில்லை. பணத்தை திருப்பி கேட்டபோது ரூ.2Ñ லட்சத்தை மட்டும் கொடுத்தனர். மீதமுள்ள ரூ.13© லட்சத்தை தர மறுத்து மோசடி செய்துள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத்தர வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். 

    இதன் அடிப்படையில் போலீசார் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×