என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
விருதுநகரில் பட்டதாரி பெண் தற்கொலை
Byமாலை மலர்18 Jan 2022 10:34 AM GMT (Updated: 18 Jan 2022 10:34 AM GMT)
விருதுநகரில் போலீஸ் வேலைக்கு தேர்வு ஆகாததால் பட்டதாரி பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
விருதுநகர்
விருதுநகர் பாண்டியன் நகரை சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவரது மகள் பூஜா(வயது 21), பி.எஸ்சி. பட்டதாரி.
கல்லூரி படிப்பை முடித்து விட்டு வீட்டில் இருந்த பூஜா பல்வேறு வேலைகளுக்கு முயற்சி செய்துள்ளார். அரசு தேர்வுகளையும் எழுதினார்.
அதன்படி காவலர் தகுதி தேர்வையும் பூஜா எழுதினார். இதன் முடிவுகள் வெளியானது. இதில் கட் ஆப் மார்க் குறைந்து விட்டதாக பூஜா கவலையில் இருந்தார். இந்த நிலையில் அவருடன் தேர்வு எழுதிய பலரும் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றனர்.
இதனை கேட்ட பூஜா மேலும் வேதனை அடைந்தார். இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்தார்.
இதுகுறித்து பண்டியன் நகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். தற்கொலை செய்த பூஜா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பட்டதாரி பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்தது விருதுநகரில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X