என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » தொழிலாளி மர்மமரணம்
நீங்கள் தேடியது "தொழிலாளி மர்மமரணம்"
விருதுநகர் அருகே தொழிலாளி வீட்டு வாசலில் ரத்த காயங்களுடன் மர்மமான முறையில் உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்:
நெல்லை டவுன் ஜவகர்லால் தெருவைச் சேர்ந்தவர் முத்து கிருஷ்ணன் (வயது 42). ஜே.சி.பி. டிரைவரான இவர் விருதுநகர் மாவட்டத்தில் தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்ட பணியில் வேலை பார்த்து வந்தார்.
இதற்காக முத்துகிருஷ்ணன் கடந்த சில நாட்களுக்கு முன்பு விருதுநகர் அருகே உள்ள மெட்டுக்குண்டுவில் கனக ராஜ் என்பவரது வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கினார்.
சம்பவத்தன்று முத்து கிருஷ்ணன் தனது வீட்டு வாசலில் ரத்தக் காயங்களுடன் பிணமாக கிடந்தார். அவரது வீட்டின் கதவுகளும் திறந்திருந்தது. இதைப்பார்த்து வீட்டு உரிமையாளர் கனகராஜ் அதிர்ச்சியடைந்தார்.
இது குறித்து கிராம நிர்வாக அதிகாரி மதன் குமார் சூலக்கரை போலீசுக்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் முத்துகிருஷ்ணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
முத்துகிருஷ்ணன் எப்படி இறந்தார்? கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை டவுன் ஜவகர்லால் தெருவைச் சேர்ந்தவர் முத்து கிருஷ்ணன் (வயது 42). ஜே.சி.பி. டிரைவரான இவர் விருதுநகர் மாவட்டத்தில் தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்ட பணியில் வேலை பார்த்து வந்தார்.
இதற்காக முத்துகிருஷ்ணன் கடந்த சில நாட்களுக்கு முன்பு விருதுநகர் அருகே உள்ள மெட்டுக்குண்டுவில் கனக ராஜ் என்பவரது வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கினார்.
சம்பவத்தன்று முத்து கிருஷ்ணன் தனது வீட்டு வாசலில் ரத்தக் காயங்களுடன் பிணமாக கிடந்தார். அவரது வீட்டின் கதவுகளும் திறந்திருந்தது. இதைப்பார்த்து வீட்டு உரிமையாளர் கனகராஜ் அதிர்ச்சியடைந்தார்.
இது குறித்து கிராம நிர்வாக அதிகாரி மதன் குமார் சூலக்கரை போலீசுக்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் முத்துகிருஷ்ணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
முத்துகிருஷ்ணன் எப்படி இறந்தார்? கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேரன்மகாதேவி அருகே நள்ளிரவில் மது குடித்துவிட்டு படுத்த தொழிலாளி மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேரன்மகாதேவி:
சேரன்மகாதேவி அருகேயுள்ள ஓடைக்கரை மேல தெருவை சேர்ந்தவர் ரெமில்டன் (வயது 46). கூலி தொழிலாளி. இவரது மனைவி இந்திரா. இவருக்கு திருமணமாகி 23 ஆண்டுகள் ஆகிறது. குழந்தை இல்லை. ரெமில்டனுக்கு குடிப்பழக்கம் இருந்தது. அடிக்கடி குடித்துவிட்டு வீட்டுக்கு வருவாராம். சம்பவத்தன்று அவர் அளவுக்கு அதிகமாக மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்தார். பின்னர் வீட்டில் படுத்து தூங்கினார். காலையில் அவர் படுத்த இடத்திலேயே பிணமாக கிடந்தார்.
காலையில் கணவனை எழுப்பிய இந்திரா அவர் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி சேரன்மகாதேவி போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து ரெமில்டன் எப்படி இறந்தார்? அளவுக்கு அதிகமாக மதுகுடித்ததால் இறந்தாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சேரன்மகாதேவி அருகேயுள்ள ஓடைக்கரை மேல தெருவை சேர்ந்தவர் ரெமில்டன் (வயது 46). கூலி தொழிலாளி. இவரது மனைவி இந்திரா. இவருக்கு திருமணமாகி 23 ஆண்டுகள் ஆகிறது. குழந்தை இல்லை. ரெமில்டனுக்கு குடிப்பழக்கம் இருந்தது. அடிக்கடி குடித்துவிட்டு வீட்டுக்கு வருவாராம். சம்பவத்தன்று அவர் அளவுக்கு அதிகமாக மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்தார். பின்னர் வீட்டில் படுத்து தூங்கினார். காலையில் அவர் படுத்த இடத்திலேயே பிணமாக கிடந்தார்.
காலையில் கணவனை எழுப்பிய இந்திரா அவர் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி சேரன்மகாதேவி போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து ரெமில்டன் எப்படி இறந்தார்? அளவுக்கு அதிகமாக மதுகுடித்ததால் இறந்தாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X