search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சேரன்மகாதேவி அருகே மது குடித்துவிட்டு படுத்த தொழிலாளி மர்மமரணம்
    X

    சேரன்மகாதேவி அருகே மது குடித்துவிட்டு படுத்த தொழிலாளி மர்மமரணம்

    சேரன்மகாதேவி அருகே நள்ளிரவில் மது குடித்துவிட்டு படுத்த தொழிலாளி மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சேரன்மகாதேவி:

    சேரன்மகாதேவி அருகேயுள்ள ஓடைக்கரை மேல தெருவை சேர்ந்தவர் ரெமில்டன் (வயது 46). கூலி தொழிலாளி. இவரது மனைவி இந்திரா. இவருக்கு திருமணமாகி 23 ஆண்டுகள் ஆகிறது. குழந்தை இல்லை. ரெமில்டனுக்கு குடிப்பழக்கம் இருந்தது. அடிக்கடி குடித்துவிட்டு வீட்டுக்கு வருவாராம். சம்பவத்தன்று அவர் அளவுக்கு அதிகமாக மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்தார். பின்னர் வீட்டில் படுத்து தூங்கினார். காலையில் அவர் படுத்த இடத்திலேயே பிணமாக கிடந்தார்.

    காலையில் கணவனை எழுப்பிய இந்திரா அவர் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி சேரன்மகாதேவி போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

    இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து ரெமில்டன் எப்படி இறந்தார்? அளவுக்கு அதிகமாக மதுகுடித்ததால் இறந்தாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×