search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பஸ் டிரைவரை தாக்கிய 2 பேர் கைது
    X
    பஸ் டிரைவரை தாக்கிய 2 பேர் கைது

    பஸ் டிரைவரை தாக்கிய 2 பேர் கைது

    விருதுநகர் அருகே பஸ் டிரைவரை தாக்கிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    விருதுநகர்

    விருதுநகர் அருகே உள்ள சூலக்கரையை சேர்ந்தவர் ராஜா(42). அரசு பஸ் டிரைவர். இவர் நேற்றிரவு அருப்புக்கோட்டையில் இருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு விருதுநகருக்கு புறப்பட்டார். 

    அப்போது பயணிகளை ஒரு தனியார் பஸ் போட்டிக்போட்டு கொண்டு ஏற்றியது.

    இதனால் அரசு பஸ் மற்றும் தனியார் பஸ் டிரைவருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரி கிறது. 

    இந்த நிலையில் அருப்புக்கோட்டை சிவன்கோவில் அருகே அரசு பஸ் சென்றபோது தாமோதரன் பட்டியை சேர்ந்த ராமராஜ், ராமநாதபுரம் மாவட்டம் பெருநாழியை சேர்ந்த நாகராஜன் ஆகியோர் மறித்து ராஜாவை சரமாரியாக தாக்கினர். 

    இதில் அரசு பஸ் டிரைவர் ராஜா காயமடைந்தார். அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். 

    இதுகுறித்த புகாரின் பேரில் அருப்புகோட்டை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து தாக்குதலில் ஈடுபட்ட 2 பேரை கைது செய்தனர்.

    Next Story
    ×