என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கரும்பு ஆலை தொழிலாளி மர்மமரணம்
ஸ்ரீவில்லிபுத்தூர்:
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மம்சாபுரத்தை சேர்ந்தவர் பவுன்ராஜ். இவரது கரும்பு ஆலையில் திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை கல்லாபுரம் பகுதியை சேர்ந்த ராஜா (வயது 36) வேலை பார்த்து வந்தார். இதற்காக அவரது குடும்பத்தினரும் அங்கேயே தங்கி உள்ளனர்.
கடந்த 14-ந்தேதி ராஜா, மனைவியிடம் பணம் பெற்றுக் கொண்டு வெளியில் சென்று வருவதாக கூறி சென்றார். அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை.
பல்வேறு இடங்களில் தேடியும் ராஜா கிடைக்கவில்லை. இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகில் உள்ள மொட்டை பத்தான் கண்மாயில் 25 வயது மதிக்கத்தக்க ஆண் உடல் கிடப்பதாக கிராம அலுவலருக்கு தகவல் வந்தது.
அதன்பேரில் தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதில் அவர் மாயமான ராஜா என தெரியவந்தது.
இதுகுறித்து அவரது மனைவி ராஜேஸ்வரி கொடுத்த புகாரின் அடிப்படையில் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜா எப்படி இறந்தார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்