search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மரணம்
    X
    மரணம்

    அருப்புக்கோட்டை அருகே விவசாய வேலைக்கு சென்ற முதியவர் மர்ம மரணம்

    அருப்புக்கோட்டை அருகே விவசாய வேலைக்கு சென்ற முதியவர் கிணற்றில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

    அருப்புக்கோட்டை அருகே உள்ள நல்லான்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் அழகுதேவர் (வயது 80). விவசாய கூலி தொழிலாளியான இவர், சம்பவத்தன்று நெல் அறுவடை பணிக்கு சென்றார். ஆனால் அதன் பின் அவர் வீடு திரும்ப வில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் முதியவரை பல இடங்களில் தேடினர். பலனில்லை.

    இந்த நிலையில் அழகுதேவர் அதே பகுதியில் உள்ள பாழடைந்த கிணற்றில் பிணமாக கிடப்பதாக பரளச்சி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவரது உடலை மீட்டனர்.

    அப்போது அவரது உடலில் ரத்த காயங்கள் இருந்தனர். தொடர்ந்து போலீசார் பிரேத பரிசோதனைக்காக அழகுதேவர் உடலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் அழகுதேவர் கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×