என் மலர்
விருதுநகர்
ஒவ்வொரு ஆண்டும் ஆண்டாள் திருக்கல்யாணம் தினத்தன்று காலை செப்பு தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். இதற்காக மேளதாளம் முழங்க ஆண்டாள்- ரங்கமன்னார் கோவிலில் இருந்து இன்று காலை கோவிலின் அருகே உள்ள செப்பு தேர் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டனர். பின்னர் தேரில் வைத்து சிறப்பு பூஜைகளும் தீபாராதனையும் நடைபெற்றது.
இதை தொடர்ந்து 7 மணி அளவில் கோவிந்தா கோபாலா என்ற கோஷம் எழுப்பியபடியே ஏராளமான ஆண் பெண் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
நிலையத்திலிருந்து கிளம்பிய தேர் கீழரத வீதி, மேல ரத வீதி, தெற்கு ரத வீதி, வடக்கு ரத வீதி என 4 தடவைகள் சுற்றி வந்து மீண்டும் நிலைய அடைந்தது.
செப்பு தேரோட்டத்தை முன்னிட்டு நகரில் சிறிதுநேரம் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டிருந்தது. திரளான பக்தர்கள் ஆர்வத்துடன் வந்து தேர் வடம் பிடித்து இழுத்தனர். அதிக அளவு பெண் பக்தர்கள் வடம்படித்து இழுத்தனர். செப்பு தேர் ரோட்டத்திற்கான ஏற்பாடுகளை தக்கார் ரவிச்சந்திரன், நிர்வாக அதிகாரி முத்து ராஜா ஆகியோர் செய்திருந்தனர்.
விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாத ரெட்டி குடும்பத்துடன் வந்து ஆண்டாள்- ரங்கமன்னாரை தரிசனம் செய்தார். செப்பு தேரோட்டத்தை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் டி.எஸ்.பி. சபரிநாதன் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் கீதா தலைமையில் நகர் போக்குவரத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்களைந்த மலர் மாலை, பட்டு வஸ்திரம், கைக்கிளி ஆகிய மங்கலப்பொருட்கள் ஆண்டுதோறும் ஆந்திர மாநிலம் திருப்பதி திருமலையில் புரட்டாசி மாதம் நடைபெறும் பிரம்மோற்சவ விழாவில் 5-ம் நாளான கருட சேவையின் போது வெங்கடேசப்பெருமாள் அணிந்து கொள்வதற்காக இங்கிருந்து கொண்டு செல்லப்படும். அதற்கு பதில் மரியாதையாக திருப்பதி திருமலை தேவஸ்தானம் பங்குனி மாதம் ஆண்டாள் திருக்கல்யாணத்தின்போது அணிவதற்காக பட்டு வஸ்திரம் கொடுத்தனுப்புவது வழக்கம்.
இந்த நடைமுறை பல வருடங்களாக நடைபெற்று வருகிறது திருப்பதி திருமலை தேவஸ்தானம் ஆண்டாளுக்கு வழங்கிய பட்டு வஸ்திரம் மரியாதையை கோவில் துணை நிர்வாக அதிகாரி ரமேஷ்பாபு, ஸ்ரீவில்லிபுத்தூர் கொண்டுவந்து மாட வீதியின் வழியாக மேளதாளம் முழங்க ஊர்வலமாக எடுத்து வந்து ஆண்டாள் கோவில் செயல் அலுவலர் முத்துராஜாவிடம் நேற்று வழங்கினார். அப்போது ரங்கராஜன் என்ற ரமேஷ், வேதபிரான் சுதர்சன் பட்டர், மணியம் கோபி, மற்றும் பட்டாச்சாரியார்கள் பக்தர்களும் கலந்து கொண்டனர்.
விருதுநகர்:
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள அப்பையநாயக்கன் பட்டியை சேர்ந்தவர் சுந்தரலிங்கம். இவரது மனைவி கோமதி.
இவர்களுக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகின்றன. ஆனால் குழந்தை இல்லை. இதே ஊரை சேர்ந்தவர் மகேஸ்வரி. இவருக்கு திருமணமாகி சேலம் மாவட்டம் ஏற்காடு தாலுகாவில் உள்ள புளியங்காடை பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் மகேஸ்வரி சொந்த ஊருக்கு வந்தார். அப்போது கோமதியை சந்தித்தார். அவரிடம் தனக்கு குழந்தை இல்லாதது பற்றி கோமதி வேதனைபட்டார்.
இதனை கேள்விபட்ட மகேஸ்வரி தனது கணவரின் சகோதரர் அண்ணா மலைக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ள நிலையில் 3-வதாகவும் ஆண் குழந்தை பிறந்து இருப்பதாகவும், அதனை வளர்க்க கஷ்டப்படுவதாகவும் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து அந்த குழந்தையை சுந்தரலிங்கம் -கோமதி தம்பதிக்கு விற்பது தொடர்பாக மகேஸ்வரி தனது குடும்பத்தினரிடம் பேசினார். குழந்தையின் பெற்றோர் அண்ணாமலை -அம்பிகா இதற்கு ஒப்பு கொண்டனர்.
இதுபற்றி சுந்தரலிங்கம் தம்பதிக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் ஏற்காடு தாலுகா புளியங்காடை சென்று அண்ணாமலை தம்பதியரிடம் பேசினார்.
அதன் பிறகு கடந்த 9.12.2019 அன்று 2 நபர்கள் மூலம் ரூ.45 ஆயிரத்துக்கு அண்ணாமலை-அம்பிகா தம்பதியினர் குழந்தையை விற்றுள்ளனர். சுந்தர லிங்கம்-கோமதி குழந்தையை பெற்று கொண்டு ஊர் திரும்பினர்.
இந்த சம்பவம் தொடர்பாக விருதுநகர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் மீனாட்சிக்கு தகவல் கிடைத்தது. அவர் இதுகுறித்து அப்பயநாயக்கன்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில்தான் குழந்தை விற்பனை குறித்த தகவல்கள் கிடைத்தன.
இதனை தொடர்ந்து சுந்தரலிங்கம்-கோமதி, அண்ணாமலை உள்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் மேல் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பட்டாசு உற்பத்திக்கு பிரசித்தி பெற்ற சிவகாசி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெரிய, சிறிய அளவிலான பட்டாசு ஆலைகள் உள்ளன. இதன் மூலம் நேரடியாகவும், மறை முகமாகவும் 5 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் வேலைவாய்ப்பை பெற்று வருகின்றனர்.
பட்டாசு வெடிப்பதால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து அதிக நச்சு புகை, சத்தத்தை வெளியிடும் பட்டாசுகள் உற்பத்திக்கு கடும் கட்டுபாடுகள் விதிக்கப்பட்டன.
அண்மையில் சரவெடி, பேன்சி ரக பட்டாசுகளுக்கும் வெடிமருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் தடை விதித்தனர். இதனால் 50 சதவீத பட்டாசு ஆலைகள் முழுமையாக இயங்க முடியவில்லை.
இந்த சூழலில் விருதுநகர் மாவட்டத்தில் வெடிபொருட்கள், தடை செய்யப்பட்ட பட்டாசுகளை வைத்திருப்பவர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர். மேலும் சோதனை என்ற பெயரில் அதிகாரிகள் தொடர்ந்து கெடுபிடி செய்வதாக பட்டாசு ஆலை தரப்பில் புகார்கள் எழுந்துள்ளன.
சில நாட்களுக்கு முன்பு ஒரு பட்டாசு ஆலையில் சோதனை செய்த அதிகாரிகள் ரூ.5 லட்சம் மதிப்பிலான பட்டாசுகளை பறிமுதல் செய்து ஆலைக்கும் சீல் வைத்தனர். அதிகாரிகள் மற்றும் போலீசாரின் இந்த நடவடிக்கைகள் காரணமாக பட்டாசு தொழில் பாதிக்கப்பட்டது.
இதை கண்டித்தும், சுற்றுச்சூழல் விதியில் இருந்து பட்டாசு தொழிலுக்கு விலக்கு அளித்திட வேண்டியும், சரவெடி, பேரியம் நைட்ரேட் மீதான தடையை நீக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழன் பட்டாசு மற்றும் கேப் வெடி உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் வருகிற 21-ந்தேதி (திங்கட்கிழமை) முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் சிவகாசி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 250-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் பங்கேற்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலைநிறுத்தத்தால் சுமார் 2 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் பங்குனி மாத பவுர்ணமியை முன்னிட்டு சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய அதிகாலை முதலே தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வருகை புரிந்த ஏராளமான பக்தர்கள் தாணிப்பாறை வனத்துறை கேட்டிருக்கு முன்பு குவிந்தனர்.
காலை 7 மணிக்கு வனத்துறை கேட் திறக்கப்பட்டு பக்தர்களுக்கு மலையேறி சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது. பங்குனி மாத பவுர்ணமியை முன்னிட்டு சுந்தர மகாலிங்கத்துக்கு பால், பழம், இளநீர், விபூதி, சந்தனம் உள்ளிட்ட 18 வகையான அபிஷேக பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகங்களும், சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது.
இந்த நிலையில் சதுரகிரி கோவில் வனத்துறை கட்டுப்பாட்டில் மலைப் பகுதியில் அமைந்துள்ள நிலையில் வனத்துறையினர் பக்தர்களை எந்தவித சோதனையும் செய்யாமல் அனுப்பி வருவதால் அவர்கள் என்ன கொண்டு செல்கிறார்கள் என்பது தெரியாத நிலை உள்ளது.
பாலிதீன் பைகளுக்கு தடை, எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்களை கொண்டு செல்ல தடை என்ற தடைகள் அறிவிப்பளவில் இருந்தாலும் வழக்கமாக சோதனை செய்யும் நடைமுறை என்பது தற்போது இல்லை.
வனத்துறை அலட்சியத்தால் சோதனை ஏதும் செய்யப்படாமல் பக்தர்கள் சென்று வருகின்றனர். இனிவரும் காலங்களிலாவது வனத்துறையினர் பக்தர்களை சோதனை செய்து வனப்பகுதிக்குள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்குமாறு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த நிலையில் ராமநாதபுரத்தை சேர்ந்த என்ஜினீயரிங் கல்லூரி முன்னாள் முதல்வர் சுப்பிரமணியன் (வயது 74) சதுரகிரி மலையேறி சாமி தரிசனம் செய்து விட்டு இறங்கினார். பச்சரிசி மேடு பகுதியில் வந்தபோது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. வலியால் துடித்த சுப்பிரமணியன் அங்கேயே பரிதாபமாக இறந்தார்.
தகவல் அறிந்த வனத்துறையினர் அவரது உடலை மீட்டு மலை அடிவாரத்திற்கு கொண்டு வந்தனர். இது குறித்து சாப்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






