என் மலர்tooltip icon

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டத்தில் பட்டா பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டத் திலுள்ள 10வட்டங்களுக்கு உள்பட்ட வருவாய் கிராமங்களிலும் விவசாயிகள் மற்றும் வீட்டு உரிமையாளர்களின் பட்டா தொடர்பான பிரச்சி னைகளுக்கு தீர்வு காணும்வகையில் புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் கிராம அளவில் சிறப்பு முகாம்கள் நடத்துவது தொடர்பாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சரால் சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது,

    அதனடிப்படையில் அரசின் சேவைகளை பொது மக்களின் இருப்பிடங்களுக்கே கொண்டு செல்லும் அரசின் கொள்கையின் அங்கமாக ஒவ்வொரு வருவாய் கிராமத்திலும், விவசாயிகள் மற்றும் வீட்டு உரிமையாளர்களின் பட்டா தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் துனை ஆட்சியர் நிலையில் கண்காணிப்பு மற்றும் தீர்வு அலுவலர்கள் தலைமையில் சிறப்பு முகாம்கள் நடத்த உத்தரவிடப்பட்டது.

    இதன்படி வருகிற 23.3.2022 மற்றும் 25.3.2022 அன்று கீழ்கண்டவாறு சிறப்பு முகாம் நடைபெறுகிறது. அருப்புக்கோட்டை வட்டம்,  வதுவார்பட்டி கிராமத்தில் 23ந்தேதியும், குருணைக்குளம்  கிராமத்தில் 25ந்தேதியும், விருதுநகர் வட்டம்,  பி.குமாரலிங்கபுரம்  கிராமத்தில் 23ந்தேதியும், கோவில்வீரார்பட்டி கிராமத்தில் 25ந்தேதியும் முகாம்கள் நடக்கிறது. 

    காரியாபட்டி வட்டம், எஸ்.கல்லுப்பட்டி கிராமத் தில் 23ந்தேதியும், சொக்க னேந்தல், சின்னஆலங்குளம், பெரிய ஆலங்குளம், கீழ் புதுப்பட்டி கிராமத்தில் 25ந்தேதியும், திருச்சுழி வட்டம்,  உடையனாம்பட்டி  கிராமத்தில்  23ந்தேதியும், வீரக்குடி கிராமத்தில் 25ந்தேதியும் முகாம்கள் நடக்கிறது. 

    சாத்தூர் வட்டம்,  உப்பத்தூர், அய்யம் பட்டி கிராமத்தில் 23ந்தேதியும், சின்னகாமன்பட்டி  கிராமத்தில் 25ந்தேதியும், வெம்பக்கோட்டை வட்டம்,  அச்சங்குளம் கிராமத் தில் 23ந்தேதியும் ஊத்துப் பட்டியில் 25ந்தேதி முகாம்கள் நடக்கின்றன. 

    இந்த சிறப்பு முகாமினை பொதுமக்கள் பயன்படுத்திகொள்ளுமாறு விருதுநகர்மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி தெரிவித்துள்ளார். 


    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே காரில் கடத்திய ரூ.2 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
    ஸ்ரீவில்லிபுத்தூர் 

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள நத்தம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் நமச்சிவாயம் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுடன் மதுரை&-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மூவரைவென்றான் என்ற இடத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டார்.

    அப்போது அந்த வழியாக வந்தகாரை மறித்து விசாரித்தனர். காரில் இருந்த வர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் காரை சோதனையிட்டனர்.

    அப்போது காரில் தடை செய்யப்பட்ட  புகையிலை பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ 2 லட்சத்து 14ஆயிரத்து 650ஆகும்.

    இதையடுத்து காரில் இருந்த ராஜபாளையம் சிங்கராஜாகோட்டை பெரிய தெருவை சேர்ந்த முத்து மணி (வயது45), ராஜபாளையம் முகில் வண்ணன்பிள்ளை தெருவை சேர்ந்த கருப்பசாமி (40) ஆகிய 2பேரை போலீசார் கைது செய்தனர்.

    தொடர்ந்து போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தியதில் புகையிலை பொருட்களை அடையாளம் தெரியாத நபர்களிடம் இருந்து வாங்கி வந்ததாகவும், அதனை வியாபாரிகள் அம்மா பட்டியை சேர்ந்த சம்பத், சுந்தரபாண்டியம் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த மகாலிங்கம், புதுப்பாளையம் தெருவைச் சேர்ந்த சிங்கம் என்ற கருப்பையா ஆகிய மூன்றுபேரிடம் விற்பனை செய்துவந்ததாக கூறினர்.

    இதைத்தொடர்ந்து போலீசார் வியாபாரி சம்பத்தையும் கைதுசெய்தனர். மற்ற 2பேரை தேடி வருகின்றனர்.
    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில் குளத்தில் ஆகாய தாமரை செடிகள் அகற்றப்பட்டது.
    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் உள்ள மக்களுக்கு நீராதாரமாக இருக்கக்கூடியது ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்குச் சொந்தமான திருமுக்குளம் ஆகும். 

     இந்த குளத்தில் நீர் இருந்தால் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் முழுவதும் உள்ள அனைத்து போர்களிலும் தண்ணீர் குறைவின்றி இருக்கும். நீர்இல்லை என்றால் அனைத்து போர்களிலும் தண்ணீர் இல்லாமல் சிரமமான சூழ்நிலை பொதுமக்களுக்கு ஏற்படும். 

    திருமுக்குளத்தில் இருக்கும் நீரை பாதுகாக்க நகராட்சியில் இருந்து  ஆண்டாள் கோவில் நிர்வாகத்திடம் திருமுக்குளத்தில் ஆகாயத்தாமரையை அகற்ற கோரிக்கை விடுக்கப்பட்டது. அதனடிப்படையில் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர்மன்றதலைவர் தங்கம் ரவி கண்ணன் ஆகாயத்தாமரை இலைகளை அகற்றும் பணியை தொடங்கி வைத்தார். 

    ஆணையாளர் மல்லிகா, ஆண்டாள் கோவில் கண்காணிப்பாளர் வசந்தா,  நகர்நல அலுவலர் கவிப்பிரியா மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் உடனிருந்தனர்.
    விவசாயிகள் வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    விருதுநகர்

    பிரதமரின் விவசாயிகளுக்கான ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் நிலமுள்ள விவசாயிகளுக்கு நான்கு மாதங்களுக்கு ஒருமுறை ரூ 2 ஆயிரம் வீதம் ஆண்டிற்கு ரூ 6 ஆயிரம் ஊக்கத் தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. 

    இத்திட்டத்தின் கீழ்     விருதுநகர் மாவட்டத்தில் 80150 விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர்.  ஏப்ரல் 2022 முதல்  பிரதம மந்திரி கிஷான் திட்டத்தில் ஆதார் எண் அடிப்படையில் ஊக்கத்தொகை  வழங் கப்பட உள்ளது. 

    எனவே இத்திட்டத்தில் பயனடைந்து வரும் விருதுநகர் மாவட்ட விவசாயிகள் அனைவரும் தங்களது வங்கி கணக்கு எண் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளதா என சரிபார்க்க வேண்டும். 

    ஆதார் எண்ணை வங்கி கணக்கு எண்ணுடன் இணைக்காத 16908 விவசாயிகள் உடனடியாக தங்களது ஆதார் எண்ணை தங்களது வங்கிக்கணக்குடன் இணைக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி தெரிவித்தார்.
    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் போலீசார் ரோந்து சென்றபோது புகையிலை பொருட்கள் வைத்து இருந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் டவுன் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் வைத்து இருந்த மம்சாபுரம் ஜெயச்சந்திரன் (37), செக்கடி தெரு மாரியப்பன் (27)ஆகிய 2பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடமிருந்து ரூ.21ஆயிரம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    இதேபோல் ஸ்ரீவில்லிபுத்தூர் கம்மாபட்டியை சேர்ந்த வெற்றிசெல்வம் என்பவர் 16புகையிலை பாக்கெட்டுகள் வைத்து இருந்ததாக கைது செய்யப்பட்டார்.


    விருதுநகர் அருகே இளம்பெண் மாயமானார்.
    விருதுநகர்

    காரியாபட்டி அருகே உள்ள அச்சம்பட்டியை சேர்ந்தவர் ஜெயகுமார். இவரது மனைவி ரேவதி. 

    இவர் அதே பகுதியில் பியூட்டி பார்லர் நடத்தி வருகிறார். இவர்களது மகள் கவிநயாஸ்ரீ (வயது19).

    சம்பவத்தன்று வீட்டில் இருந்த கவிநயாஸ்ரீ தீடீரென மாயமானார். பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.

     இதுகுறித்த புகாரின் பேரில் காரியாபட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.



    ராஜபாளையத்தில் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    ராஜபாளையம், 

    ராஜபாளையம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த  12வயது மாணவி தளவாய்புரம் பகுதியில் உள்ள பள்ளியில் 7ம்வகுப்பு படித்து வந்தார். இவரது தந்தை மதுபழக்கத்துக்கு அடிமையானதால் சரியாக வேலைக்கு செல்லாமல் மதுகுடித்து வந்தார்.

    கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு  முழு ஊரடங்கு பிறப்பிக் கப்பட்டு இருந்தது. அப் போது குடும்ப சூழ்நிலை காரணமாக மாணவி தையல்வேலை பார்த்தார். 

    இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்ட குடிகார தந்தை பெற்ற மகள் என்றும் பாராமல் பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.

    இதுகுறித்து மகள் தனது தாயாரிடம் தெரிவித் துள்ளார். அதிர்ச்சி அடைந்த அவர் தனது கணவரை கண்டித்துள்ளார். ஆனாலும் அவர் திருந்தவில்லை. இதையடுத்து  பெரியவர்கள் முன்னிலையில் பேசி அவர் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

    மாணவி மீதான பாலியல் தொல்லை குறித்த தகவல் விருதுநகர் மாவட்ட குழந்தைகள் நல அலுவலகத்துக்கு கிடைத்தது. அதிகாரிகள் அங்கு சென்று விசாரித்ததில் உண்மை என தெரியவரவே அவர்கள் ராஜபாளையம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். இன்ஸ்பெக்டர் மரியபாக்கியம் வழக்குப்பதிவு செய்து மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தையை தேடி வருகின்றனர்.
    ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் இன்று இரவு 7 மணிக்கு திருக்கல்யாணம் நடைபெறுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆண்டாள் திருக்கல்யாணம் தினத்தன்று காலை செப்பு தேரோட்டம் நடைபெறுவது வழக்கம்.
    ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஆண்டாள் திருக்கல்யாண பங்குனி உற்சவம் கடந்த 10-ந்தேதி தொடங்கியது. அன்று முதல் தினசரி வீதிஉலா சிறப்பு பூஜை வழிபாடுகள் நடைபெற்று வருகிறது. இன்று இரவு 7 மணிக்கு திருக்கல்யாணம் நடைபெறுகிறது. இன்று காலை செப்பு தேரோட்டம் நடந்தது. கோவிந்தா... கோபாலா.... கோ‌ஷங்களை எழுப்பியபடி பத்தர்கள் செப்பு தேரை இழுத்தனர்.

    ஒவ்வொரு ஆண்டும் ஆண்டாள் திருக்கல்யாணம் தினத்தன்று காலை செப்பு தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். இதற்காக மேளதாளம் முழங்க ஆண்டாள்- ரங்கமன்னார் கோவிலில் இருந்து இன்று காலை கோவிலின் அருகே உள்ள செப்பு தேர் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டனர். பின்னர் தேரில் வைத்து சிறப்பு பூஜைகளும் தீபாராதனையும் நடைபெற்றது.

    இதை தொடர்ந்து 7 மணி அளவில் கோவிந்தா கோபாலா என்ற கோ‌ஷம் எழுப்பியபடியே ஏராளமான ஆண் பெண் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    நிலையத்திலிருந்து கிளம்பிய தேர் கீழரத வீதி, மேல ரத வீதி, தெற்கு ரத வீதி, வடக்கு ரத வீதி என 4 தடவைகள் சுற்றி வந்து மீண்டும் நிலைய அடைந்தது.

    செப்பு தேரோட்டத்தை முன்னிட்டு நகரில் சிறிதுநேரம் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டிருந்தது. திரளான பக்தர்கள் ஆர்வத்துடன் வந்து தேர் வடம் பிடித்து இழுத்தனர். அதிக அளவு பெண் பக்தர்கள் வடம்படித்து இழுத்தனர். செப்பு தேர் ரோட்டத்திற்கான ஏற்பாடுகளை தக்கார் ரவிச்சந்திரன், நிர்வாக அதிகாரி முத்து ராஜா ஆகியோர் செய்திருந்தனர்.

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாத ரெட்டி குடும்பத்துடன் வந்து ஆண்டாள்- ரங்கமன்னாரை தரிசனம் செய்தார். செப்பு தேரோட்டத்தை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் டி.எஸ்.பி. சபரிநாதன் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் கீதா தலைமையில் நகர் போக்குவரத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்களைந்த மலர் மாலை, பட்டு வஸ்திரம், கைக்கிளி ஆகிய மங்கலப்பொருட்கள் ஆண்டுதோறும் ஆந்திர மாநிலம் திருப்பதி திருமலையில் புரட்டாசி மாதம் நடைபெறும் பிரம்மோற்சவ விழாவில் 5-ம் நாளான கருட சேவையின் போது வெங்கடேசப்பெருமாள் அணிந்து கொள்வதற்காக இங்கிருந்து கொண்டு செல்லப்படும். அதற்கு பதில் மரியாதையாக திருப்பதி திருமலை தேவஸ்தானம் பங்குனி மாதம் ஆண்டாள் திருக்கல்யாணத்தின்போது அணிவதற்காக பட்டு வஸ்திரம் கொடுத்தனுப்புவது வழக்கம்.

    இந்த நடைமுறை பல வருடங்களாக நடைபெற்று வருகிறது திருப்பதி திருமலை தேவஸ்தானம் ஆண்டாளுக்கு வழங்கிய பட்டு வஸ்திரம் மரியாதையை கோவில் துணை நிர்வாக அதிகாரி ரமேஷ்பாபு, ஸ்ரீவில்லிபுத்தூர் கொண்டுவந்து மாட வீதியின் வழியாக மேளதாளம் முழங்க ஊர்வலமாக எடுத்து வந்து ஆண்டாள் கோவில் செயல் அலுவலர் முத்துராஜாவிடம் நேற்று வழங்கினார். அப்போது ரங்கராஜன் என்ற ரமேஷ், வேதபிரான் சுதர்சன் பட்டர், மணியம் கோபி, மற்றும் பட்டாச்சாரியார்கள் பக்தர்களும் கலந்து கொண்டனர்.
    ரூ.45 ஆயிரத்துக்கு ஆண் குழந்தை விற்பனை செய்த தம்பதி உள்பட 6 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள அப்பையநாயக்கன் பட்டியை சேர்ந்தவர் சுந்தரலிங்கம். இவரது மனைவி கோமதி.

    இவர்களுக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகின்றன. ஆனால் குழந்தை இல்லை. இதே ஊரை சேர்ந்தவர் மகேஸ்வரி. இவருக்கு திருமணமாகி சேலம் மாவட்டம் ஏற்காடு தாலுகாவில் உள்ள புளியங்காடை பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

    இந்த நிலையில் மகேஸ்வரி சொந்த ஊருக்கு வந்தார். அப்போது கோமதியை சந்தித்தார். அவரிடம் தனக்கு குழந்தை இல்லாதது பற்றி கோமதி வேதனைபட்டார்.

    இதனை கேள்விபட்ட மகேஸ்வரி தனது கணவரின் சகோதரர் அண்ணா மலைக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ள நிலையில் 3-வதாகவும் ஆண் குழந்தை பிறந்து இருப்பதாகவும், அதனை வளர்க்க கஷ்டப்படுவதாகவும் தெரிவித்தார்.

    இதனை தொடர்ந்து அந்த குழந்தையை சுந்தரலிங்கம் -கோமதி தம்பதிக்கு விற்பது தொடர்பாக மகேஸ்வரி தனது குடும்பத்தினரிடம் பேசினார். குழந்தையின் பெற்றோர் அண்ணாமலை -அம்பிகா இதற்கு ஒப்பு கொண்டனர்.

    இதுபற்றி சுந்தரலிங்கம் தம்பதிக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் ஏற்காடு தாலுகா புளியங்காடை சென்று அண்ணாமலை தம்பதியரிடம் பேசினார்.

    அதன் பிறகு கடந்த 9.12.2019 அன்று 2 நபர்கள் மூலம் ரூ.45 ஆயிரத்துக்கு அண்ணாமலை-அம்பிகா தம்பதியினர் குழந்தையை விற்றுள்ளனர். சுந்தர லிங்கம்-கோமதி குழந்தையை பெற்று கொண்டு ஊர் திரும்பினர்.

    இந்த சம்பவம் தொடர்பாக விருதுநகர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் மீனாட்சிக்கு தகவல் கிடைத்தது. அவர் இதுகுறித்து அப்பயநாயக்கன்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில்தான் குழந்தை விற்பனை குறித்த தகவல்கள் கிடைத்தன.

    இதனை தொடர்ந்து சுந்தரலிங்கம்-கோமதி, அண்ணாமலை உள்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் மேல் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிவகாசியில் பட்டாசு தொழிற்சாலைகள் 21-ந்தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவித்துள்ளது. சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 250-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்கின்றன.
    சிவகாசி:

    பட்டாசு உற்பத்திக்கு பிரசித்தி பெற்ற சிவகாசி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெரிய, சிறிய அளவிலான பட்டாசு ஆலைகள் உள்ளன. இதன் மூலம் நேரடியாகவும், மறை முகமாகவும் 5 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் வேலைவாய்ப்பை பெற்று வருகின்றனர்.

    பட்டாசு வெடிப்பதால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து அதிக நச்சு புகை, சத்தத்தை வெளியிடும் பட்டாசுகள் உற்பத்திக்கு கடும் கட்டுபாடுகள் விதிக்கப்பட்டன.

    அண்மையில் சரவெடி, பேன்சி ரக பட்டாசுகளுக்கும் வெடிமருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் தடை விதித்தனர். இதனால் 50 சதவீத பட்டாசு ஆலைகள் முழுமையாக இயங்க முடியவில்லை.

    இந்த சூழலில் விருதுநகர் மாவட்டத்தில் வெடிபொருட்கள், தடை செய்யப்பட்ட பட்டாசுகளை வைத்திருப்பவர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர். மேலும் சோதனை என்ற பெயரில் அதிகாரிகள் தொடர்ந்து கெடுபிடி செய்வதாக பட்டாசு ஆலை தரப்பில் புகார்கள் எழுந்துள்ளன.

    சில நாட்களுக்கு முன்பு ஒரு பட்டாசு ஆலையில் சோதனை செய்த அதிகாரிகள் ரூ.5 லட்சம் மதிப்பிலான பட்டாசுகளை பறிமுதல் செய்து ஆலைக்கும் சீல் வைத்தனர். அதிகாரிகள் மற்றும் போலீசாரின் இந்த நடவடிக்கைகள் காரணமாக பட்டாசு தொழில் பாதிக்கப்பட்டது.

    இதை கண்டித்தும், சுற்றுச்சூழல் விதியில் இருந்து பட்டாசு தொழிலுக்கு விலக்கு அளித்திட வேண்டியும், சரவெடி, பேரியம் நைட்ரேட் மீதான தடையை நீக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழன் பட்டாசு மற்றும் கேப் வெடி உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் வருகிற 21-ந்தேதி (திங்கட்கிழமை) முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதில் சிவகாசி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 250-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் பங்கேற்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    வேலைநிறுத்தத்தால் சுமார் 2 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
    பங்குனி மாத பவுர்ணமியை முன்னிட்டு சுந்தர மகாலிங்கத்துக்கு பால், பழம், இளநீர், விபூதி, சந்தனம் உள்ளிட்ட 18 வகையான அபிஷேக பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகங்களும், சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது.
    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில். இந்த கோவிலுக்கு ஒவ்வொரு மாதமும் பிரதோ‌ஷம், அமாவாசை, பவுர்ணமி நாட்களில் மட்டுமே பக்தர்களுக்கு சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் பங்குனி மாத பவுர்ணமியை முன்னிட்டு சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய அதிகாலை முதலே தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வருகை புரிந்த ஏராளமான பக்தர்கள் தாணிப்பாறை வனத்துறை கேட்டிருக்கு முன்பு குவிந்தனர்.

    காலை 7 மணிக்கு வனத்துறை கேட் திறக்கப்பட்டு பக்தர்களுக்கு மலையேறி சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது. பங்குனி மாத பவுர்ணமியை முன்னிட்டு சுந்தர மகாலிங்கத்துக்கு பால், பழம், இளநீர், விபூதி, சந்தனம் உள்ளிட்ட 18 வகையான அபிஷேக பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகங்களும், சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது.

    இந்த நிலையில் சதுரகிரி கோவில் வனத்துறை கட்டுப்பாட்டில் மலைப் பகுதியில் அமைந்துள்ள நிலையில் வனத்துறையினர் பக்தர்களை எந்தவித சோதனையும் செய்யாமல் அனுப்பி வருவதால் அவர்கள் என்ன கொண்டு செல்கிறார்கள் என்பது தெரியாத நிலை உள்ளது.

    பாலிதீன் பைகளுக்கு தடை, எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்களை கொண்டு செல்ல தடை என்ற தடைகள் அறிவிப்பளவில் இருந்தாலும் வழக்கமாக சோதனை செய்யும் நடைமுறை என்பது தற்போது இல்லை.

    வனத்துறை அலட்சியத்தால் சோதனை ஏதும் செய்யப்படாமல் பக்தர்கள் சென்று வருகின்றனர். இனிவரும் காலங்களிலாவது வனத்துறையினர் பக்தர்களை சோதனை செய்து வனப்பகுதிக்குள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்குமாறு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இந்த நிலையில் ராமநாதபுரத்தை சேர்ந்த என்ஜினீயரிங் கல்லூரி முன்னாள் முதல்வர் சுப்பிரமணியன் (வயது 74) சதுரகிரி மலையேறி சாமி தரிசனம் செய்து விட்டு இறங்கினார். பச்சரிசி மேடு பகுதியில் வந்தபோது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. வலியால் துடித்த சுப்பிரமணியன் அங்கேயே பரிதாபமாக இறந்தார்.

    தகவல் அறிந்த வனத்துறையினர் அவரது உடலை மீட்டு மலை அடிவாரத்திற்கு கொண்டு வந்தனர். இது குறித்து சாப்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு யூனியன் கூட்டம் தலைவர் சிந்துமுருகன் தலைமையில் நடந்தது
    வத்திராயிருப்பு

    வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் ஒன்றிய  தலைவர் சிந்துமுருகன் தலைமையில் நடைபெற்றது.
    கூட்டத்தில் 18 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. 

    பின்னர் ஒன்றியக்குழு தலைவர்சிந்துமுருகன் கூறுகையில், வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றி யத்திற்குட்பட்ட 27ஊராட்சிகளிலும் பொதுமக்களுக்கு தேவையான குடிநீர், சாலைவசதி, பொது சுகாதாரம், தெருவிளக்குகள், வாறுகல்கள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து உடனடியாக செய்து கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    அந்தந்த வார்டுகளில் உள்ள ஒன்றியகுழு உறுப்பினர்களிடம் பொதுமக்கள் நேரடியாக அடிப்படை வசதிகள் குறித்து கோரிக்கைவைக்கலாம் என்றார். 

    துணைத்தலைவர் ரேகா,  உறுப்பினர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சத்தியவதி, ராமமூர்த்தி துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பாண்டீஸ்வரன், உதவி பொறியாளர்கள் தீபக்ராஜ், ஜெயா மற்றும் அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
    ×